Jump to content

பத்தாண்டுகளை நிறைவு செய்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்


Recommended Posts

பத்தாண்டுகளை நிறைவு செய்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்

 

இன்றைய தினம் (திங்கட்கிழமை) ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் பத்தாவது ஆண்டை கொண்டாடுகிறது.

பத்தாண்டுகளை நிறைவு செய்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்
 David Paul Morris

2007 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐஃபோனை அறிமுகப்படுத்தினார்.

பலருடைய வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, அதன் தோற்றத்தில் இருந்த போன்களையும் மீறி தனித்துவம் பெற்றது..

உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஐஃபோன்கள் விற்கப்பட்டுள்ளன.

இது ஆப்பிள் நிறுவனத்தை எப்போதுமில்லாத வகையில் பணக்கார நிறுவனமாக ஆக்கியுள்ளது.

நாம் வாழும் வழிகளில் ஒருபடி மாற்றத்தை ஐஃபோன்களின் வருகை செய்துள்ளதாக பிபிசியின் தொழில்நுட்ப செய்தியாளர் வர்ணித்துள்ளார்.

ஆனால், கடந்த ஆண்டு ஐஃபோன்களின் விற்பனை சரிந்துள்ளது.

இது அதன் தோற்றத்தில் வெளியான போன்களின் வெற்றியை பிரதிபலிப்பதாக உள்ளது.

http://www.bbc.com/tamil/global-38555273

Link to comment
Share on other sites

தடை பல கடந்து ஐஃபோன் பிறந்த கதை

  •  
    2007 ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் முதன்முறையாக ஐஃபோனை அறிமுகம் செய்தார்.
 
 2007 ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் முதன்முறையாக ஐஃபோனை அறிமுகம் செய்தார்.

''ஸ்டீவ் என்னிடம் இது ஒரு மிகவும் முக்கியமான ரகசிய விஷயம் என்று கூறியிருந்தார். இதைப்பற்றி வெளியில் சொன்னால் வேலையிலிருந்து நீக்கிவிடப்போவதாக கூறியிருந்தார்.''

''நான் மிகவும் பதற்றமானேன்.''

உலகின் மிகவும் வெற்றிகரமான தொழில்நுட்ப தயாரிப்பாகவிருக்கும் ஆப்பிள் ஐஃபோனின் முன் மாதிரி தொலைந்துவிட்டது என்பதை ஸ்டீவ் ஜாப்ஸிடம் எப்படி விளக்கிக்கூறுவது என்பதை டோனி ஃபெடெல் யோசித்து கொண்டிருந்தார்.

நேற்று திங்கட்கிழமையோடு ஐஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

விமானத்திலிருந்து இறங்கியபின் டோனி தனது பாக்கெட்களை சோதித்து பார்த்த போது அதில் எதுவுமில்லை.

''(ஸ்டீவ் ஜாப்ஸிடன் இதை சொன்னால்) என்ன நடக்கப்போகிறது என்பதற்கான ஒவ்வொரு காட்சியையும் நான் கற்பனை செய்து பார்த்துவிட்டேன் - அதில் ஒன்று கூட சுபமாக முடியவில்லை'' என்றார் டோனி.

டோனி ஃபெடெல் ஐபாடின் காட்ஃபாதராக பார்க்கப்படுகிறார்.  டோனி ஃபெடெல் ஐபாடின் காட்ஃபாதராக பார்க்கப்படுகிறார்.

எதை தேட முயற்சிக்கிறோம் என்று கூடத் தெரியாமல் இதைத் தேடும் வேலயில் ஈடுபட்ட குழு ஒன்றின் முயற்சியால், இரண்டு மணி நேரங்களுக்குப் பின் நிம்மதி கிடைத்தது.

''அது என்னுடைய பாக்கெட்டிலிருந்து விழுந்து இரு சீட்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்தது''

வெறும் சில மாதங்களில், இந்த சிறிய கருவியைப்பற்றி உலகம் முழக்க தெரிந்து கொள்வார்கள்.

ஆனால், இப்போது ஃபெடெல் மிகவும் கெட்டியாக தன்னுடைய கைகளில் அதைப் பிடித்து வைத்திருந்தார்.

60களின் எதிர்கால தொலைபேசி

சில நேரங்களில் டோனி ஃபெடெல் ஐபாடின் ’காட்ஃபாதராக’ (ஞானத் தந்தை) பார்க்கப்படுகிறார். 2010 ஆம் ஆண்டில் அவர் ஆப்பிள் நிறுவனத்தைவிட்டு வெளியேறி நெஸ்ட் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது, வீடுகளை நவீனமயமாக்கும் நெஸ்ட் நிறுவனத்தை கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சொந்தமாக்கி உள்ளது. கடந்த ஆண்டு இந்த நெஸ்ட் நிறுவனத்தைவிட்டு அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ஃபெடெல் கணக்குப்படி பார்த்தால், முதல் ஐஃபோன் கண்டுபிடிக்கப்பட்டு இன்றோடு 12.5 ஆண்டுகள் ஆகின்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலையெழுத்தை மாற்றி வந்த ஐபாட் மேலும் மேம்படுத்தப்படலாம் என்ற யோசனையை ஃபெடல், மேலும் கட்டியெழுப்பி திட்டங்களைத் தீட்டத் தொடங்கியது அந்த தருணத்தில்தான்.

அந்தக் காலகட்டத்தில், ஐபாடில் காணொளிகளை காணவும், விளையாட்டுகளை விளையாடவும் முடிவும்.

இப்படியான மாயஜால மூலப்பொருள்களைக் கொண்ட தொடக்கம்தான், ஐஃபோன்கள் தொழில் நுட்ப எல்லைகளைத் தகர்த்தெறிய காரணமாக இருந்தது என்றார் ஃபெடெல்.

சக போட்டியாளர்களான மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் கணினியை ஒரு தொலைபேசி வடிவில் சுருக்க முயற்சித்து கொண்டிருந்த போது, ஐபாடை இன்னும் மேலும் நுட்பமானதாக மாற்ற ஆப்பிள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தது.

ஐபாடின் தனித்துவமான கிளிக் வீல் பகுதி, ஐஃபோனின் ஆரம்ப கட்டத்தில் அதன் உள்ளீட்டு வடிவமைப்பாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், அந்த முயற்சி விரைவில் கைவிடப்பட்டது.

'(அந்த கிளிக் வீலை ஐஃபோனில் பயன்படுத்துவது) '60களில் பயன்படுத்தப்பட்ட எண்களை சுழற்றும் வகையிலான தொலைபேசிகள் போல இது நாங்கள் வடிவமைத்தோம்,'' என்று நினைவு கூர்கிறார் ஃபெடெல். ''இது வேலைக்கு ஆகாது, பயன்படுத்துவது கடினம், என்று முடிவுக்கு வந்தோம்`` என்கிறார் அவர்.

பல தடைகளை கடந்து ஐஃபோன் பிறந்த கதைSHAUN CURRY

இது நடைபெற்று கொண்டிருந்த அதே சமயம் ஆப்பிளின் மற்றொரு பிரிவானது, மேக்கிண்டோஷ் கணினிகளில் தொடுதிரை குறித்த பணிகளை தொடங்கியிருந்தது.

'' அவர்கள் மிகவும் ரகசியமாக இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்தத் திரை பிங் பாங் விளையாட்டு மேஜையின் அளவை கொண்டிருந்தது. அதை என்னிடம் காட்டிய ஸ்டீவ், 'இதை எடுத்து அப்படியே ஐபாடில் போட வேண்டும்' என்றார்.''

ஸ்டீவ் கனவு கண்டிருந்த ஒரு தொடுதிரை கருவியை உருவாக்க நேரம், பணம் மற்றும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட புதிய கட்டமைப்புகள் தேவைப்படும் என்று ஃபெடெல் ஸ்டீவ் ஜாப்ஸிடம் எச்சரித்திருந்தார்.

'' இந்த பணியை முடிக்க ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட எங்களுக்கு தேவைப்பட்டனர்.''

''அதன்பிறகு வெறும் ஆறு மாதங்களே அந்த தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப நேரம் இருந்தது. அதை செய்து முடித்தோம்தான் - ஆனால் அது சுலபமானதாக இருக்கவில்லை''

மல்மோ மர்மம்

நிறுவனத்தில் சிறந்த மூளைகளை ஆப்பிள் கொண்டிருந்தது, ஆனால் அந்த தருணம்வரை அது சொந்தமாக ஒரு போனை உருவாக்கியதில்லை.

அதனால், ஃபெடெல் உண்மை கண்டறியும் உலக சுற்றுலா ஒன்றுக்கு திட்டமிட்டு, தொலைத்தொடர்பு வல்லுநர்களின் ஆராய்ச்சி கூடங்களுக்கு சென்றார்.

சுவீடனில் மல்மோ என்ற ஒரு உற்பத்தியாளருடன் பிரச்சினை தொடங்கியது.

முதல் ஐஃபோன் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது பல செய்தியாளர்களின் கவனத்தை ஈர்த்தது. முதல் ஐஃபோன் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது பல செய்தியாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

அந்த பயணத்தின்போது, ஃபெடெல் குழுவினர் ஒரு உணவகத்திற்குள் இருந்த போது, அவர்களுடைய பைகள், குறிப்பு புத்தகங்கள் மற்றும் சாதனங்கள் அனைத்தும் கார்களிலிருந்து திருடப்பட்டன.

''நாங்கள் போன் ஒன்றை தயாரித்து கொண்டிருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியும்'' என்றார் ஃபெடெல்.

ஐஃபோன் தொடர்ந்து பிரபலமாக இருந்தாலும் அதன் வருடாந்திர விற்பனை என்பது முதல் முறையாக கடந்தாண்டு சரிந்துள்ளது.  ஐஃபோன் தொடர்ந்து பிரபலமாக இருந்தாலும் அதன் வருடாந்திர விற்பனை என்பது முதல் முறையாக கடந்தாண்டு சரிந்துள்ளது.

தங்களுடைய உடைமைகளை தொலைத்தாலும், நிறைய திட்டங்களுடன் அந்த குழு வீடு திரும்பியது.

இதற்கிடையே, ஒரு கடுமையான விவாதம் அப்போதுதான் தொடங்கியிருந்தது.

கீபோர்ட் எழுப்பிய சர்ச்சை

ஐஃபோன்னுக்கு கீபோர்ட் வேண்டுமா அல்லது வேண்டாமா ? என்பதுதான் அந்த சர்ச்சை .

''இந்த சண்டை சுமார் நான்கு மாதங்களுக்கு நடைபெற்றது,'' என்றார் ஃபெடெல். ``அது ஒரு மிகவும் மோசமான சூழ்நிலை.''

மனதளவில் தொடுதிரை மீதான ஜாப்ஸின் ஈர்ப்பு காரணமாக, தன்னுடைய யோசனைகளை ஏற்காதவர்கள் மீது கோபமடைந்தார். அதனால் அவர் ஒரு முரட்டுத்தனமான கொள்கையை அமல்படுத்தினார்.

அவருடைய தொடுதிரைக்கு எதிராக பேசியவர்களிடம் ஸ்டீவ் கூறிய வார்த்தைகளை ஃபெடெல் நினைவு கூர்கிறார். ''எங்களுடைய யோசனைக்கு ஒத்துப்போகும் வரை இந்த அறைக்கு வரவேண்டாம் என்றும், இந்த அணியில் இருக்க விரும்பவில்லை என்றால் தாரளமாக அணியிலிருந்து வெளியேறிவிடுங்கள்`` என்றாராம் ஜாப்ஸ்.

முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து ஐஃபோன் விற்பனைக்கு வந்தது.  முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து ஐஃபோன் விற்பனைக்கு வந்தது.

விரைவில் கருத்து வேறுபாடுகள் நின்றன.

''ஒருவர் அந்த அணியிலிருந்து விலக்கப்பட இந்த தகவல் அனைவருக்கும் சென்றதைத் தொடர்ந்து ஸ்டீவ் கருத்துடன் ஒன்றுபட்டனர்''

அந்த அறையிலிருந்து இந்த விவாதம் ஓய்ந்தாலும், ஐஃபோன் தயாரிப்பு குழுவினரின் மூளைகளிலிருந்து நீங்கவில்லை.

''தொடுதிரையை பயன்படுத்துவதில் உள்ள அனைத்து அபாயங்களையும் நாங்கள் வெளிப்படுத்தினோம்``.

ரகசிய பேனா யுக்தி

ஐஃபோனின் தொடுதிரையை இயக்க ஸ்டைலஸ் என்ற பேனா போன்ற எவ்விதமான கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம் என்பதில் ஜாப்ஸ் குறிப்பாக இருந்தார். வெறும் விரல்கள் மட்டுமே போதும் என்பதில் தெளிவாக இருந்தார்.

ஆனால், தயாரிப்பு குழுவிடம் ஃபெடெல் பல்-தொடுதிரை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவிடம் , ஐஃபோன் தொடுதிரையை இந்த ஸ்டைலஸ் என்ற பேனா மூலமும், விரல்கள் மூலமும் இயக்க வசதி செய்யுமாறு கூறியிருந்தார். இது ஐஃபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய கண்டுபிடிப்பாக அமைந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய மாடல் ஐஃபோன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய மாடல் ஐஃபோன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.

ஐஃபோன் தொடுதிரையை பென்சில் கொண்டு இயக்க முடியும் என்ற தொழில்நுட்பத்தை ஸ்டீவ் ஜாப்ஸுக்கு தெரியாமல் செய்ததாக நினைவு கூறுகிறார் ஃபெடெல், ''ஒருவேளை ஸ்டீவ்வுக்கு இதுபற்றி தெரிந்திருந்தால் என்னுடைய தலையை வெட்டியிருப்பார்'' என்கிறார் அவர்.

விண்டோஸில் ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்த ஜாப்ஸ் விட்டுக்கொடுத்திருக்கலாம் . ஆனால், கல்லறைக்கு செல்லும் வரை ஐஃபோன் தொடுதிரையை இயக்க ஸ்டைலஸ் கருவியை பயன்படுத்துவது பற்றி இறுதிவரை வெறுப்புடன் இருந்தார்.

அவரைத்தொடர்ந்து வந்த ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் 2015 ஆம் ஆண்டு ஆப்பிள் பென்சில் என்ற ஒன்றை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் பால்மரின் சிரிப்பு

2007 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் நாள், ஸ்டீவ் ஜாப்ஸ் என்னதான் அப்படி கொண்டு வந்தார் என்பதை கண்டறிய சான் ஃபிரான்சிஸ்கோவின் மாஸ்கோன் மையத்தில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் குவிந்திருந்தனர்.

அந்த ஆண்டின் மாக்வேர்ல்ட் நிகழ்வில் சிறப்பு உரையை நிகழ்த்திய ஜாப்ஸ் இறுதியாக, 'இன்னொரு விஷயம் இருக்கிறது' என்றார்.

ஐஃபோனின் வெற்றி ஸ்மார்ட் போன்கள் பிரபலமாகவதற்கு உதவியது.  ஐஃபோனின் வெற்றி ஸ்மார்ட் போன்கள் பிரபலமாகவதற்கு உதவியது.

மேடையிலிருந்த அந்த கருவி ''அரைகுறையாக இருந்தது'' என்று நினைவு கூர்கிறார் ஃபெடெல், ஆனால், உடனடியாக அதனை ``கடவுளின் தொலைபேசி`` என அது பெயர் பெற்றது.

ஏதோ புனிதப் பொருளை காட்டுவது போல , ஐஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டது பற்றி ஊடகங்கள் கேலி செய்தன.

அப்போது, மைக்ரோசாஃப்டின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவ் பால்மர் ஐஃபோனை பார்த்துவிட்டு பலமாக சிரித்தார். வர்த்தக பயன்பாட்டாளர்களுக்கு பயன்படுத்துவதற்கும், இமெயில் அனுப்புவதற்கும் சிறந்த கருவியல்ல இது என்றார்.

''நாங்கள் எல்லாம் அவரை பார்த்து சிரித்தோம்'' என்கிறார் ஃபெடெல்.

அன்றிலிருந்து இன்றுவரை உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஐஃபோன்கள் விற்கப்பட்டுள்ளன.

இது ஆப்பிள் நிறுவனத்தை உலகிலே பணக்கார நிறுவனமாக மாற்றியது.

http://www.bbc.com/tamil/science-38571427

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.