Jump to content

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?


கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?  

51 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

இலங்கையில்  தமிழர்கள் வாழும் பகுதியில் அரசாங்கம் அமைக்க திட்டமிட்டு இருக்கும் பொருத்து வீடுகள் தொடர்பாக பல விமர்சனங்கள் மக்கள் மத்தியிலும் அரசியல் மட்டத்திலும் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக உங்கள் கருத்துகளை தெரிவிப்பதுடன், கருத்துக்கணிப்பில் உங்கள் தெரிவினையும் (வாக்கினையும்) செலுத்தவும்.

உங்களது தெரிவை / எதற்கு வாக்களித்தீர்கள் என்பதை ஏனையவர்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு இக் கருத்து கணிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

நன்றி
யாழிணையம்

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருடங்கள் மாத்திரமே இருக்கக்கூடிய பொருத்துவீடுகளை விட உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு நல்ல சுவாத்தியமான வீடுகளை குறைந்த செலவில் அமைக்கலாம். அப்படி இருந்தும் உருக்கிலான பொருத்து வீடுகளை அமைப்பதால் லாபமீட்டுபவர்கள் இந்தத் திட்டத்தில் முன்னின்று செயற்படும் அரசியல்வாதிகளும் வியாபாரிகளும்தான். வீடுகள் முப்பது வருடம் நிலைக்குமா என்பதும் சந்தேகமே.

பொருத்துவீடுகள் பற்றி மாற்றம் இணையத்தில் வந்த கட்டுரை ஒன்றை பல மாதங்களுக்கு முன்னரே இணைத்திருந்தேன்.

 

http://maatram.org/?p=4315

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றிய தெளிவான ஒரு அறிக்கை தேவை.முழுமையாக தெரியாத ஒரு விடயம்  பற்றி  எவ்வாறு பதிலளிப்பது என்று தெரியவில்லை.

விளக்கம் தந்தால் வாக்களிக்கலாம்.

நன்றி.

Link to comment
Share on other sites

எனது கருத்து:

பொருத்து வீடுகள்,

  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும்
  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும்
  • கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும்
  • மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும்
  • இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும்
  • மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும்
  • பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும்
  • ஏழை மக்களின் இயலாமையை வைத்து அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாலும்   
  • அமைக்க செலவாகும் தொகையில் இரண்டு மிகவும் வசதியான, உறுதியான, நீண்ட ஆயுதக்காலம் உடைய, சுவாத்தியத்துக்கு உகந்த கல்வீடுகளை அமைக்க முடியும் என்பதாலும்
  • இதற்கான செலவு மதிப்பீடு பெரும் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது எனப் புலப்படுவதாலும்

இந்த பொருத்து வீடுகள் எமது சக உறவுகளான தமிழ் மக்களுக்கு குறுகிய கால சிறு நன்மைகளைவிட நீண்டகால பெரும் தீமைகளையே விளைவிக்கும்.

Link to comment
Share on other sites

11 minutes ago, விசுகு said:

இது பற்றிய தெளிவான ஒரு அறிக்கை தேவை.முழுமையாக தெரியாத ஒரு விடயம்  பற்றி  எவ்வாறு பதிலளிப்பது என்று தெரியவில்லை.

விளக்கம் தந்தால் வாக்களிக்கலாம்.

நன்றி.

தெளிவான அறிக்கையை எவரிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் விசுகு? இது தொடர்பாக நிறைய விடயங்கள் யாழிலும் தமிழ் செய்தி இணையங்களிலும் உள்ளனவே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்து வீட்டை விட குடிசை வீட்டைக் கட்டிக் கொடுக்கலாம்<_<

Quote

 

 

பி;கு:நிர்வாகம் இந்த தலைப்பை எடுத்ததன் நோக்கம் என்னவோ?...யாழில் பெரும்பான்மையினர் இந்த வீட்டுத் திட்டத்திற்கு ஆதரவாய் வோட் போட்டால் உடனே கூட்டமைப்பை சரிக்கட்டி சம்மதம் சொல்ல வைக்கப் போயினமோ:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கிருபன், போல் ஆகியோர் எனது மனதில் உள்ள விடயங்களை ஏற்கனவே எழுதியுள்ளார்கள் .

இந்த வீட்டில் சில வருடங்களில் பின்னர் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், உதாரணமாக மரங்கள் சரிந்து விழுந்து வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தால் எவ்வாறு       ( பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும்) திருத்துவது? உதிரிப்பாகங்களை என்ன விலையில் வாங்குவது?

 

என்ற காரணங்களால் பொருத்து வீட்டுத் திட்டத்தினை எதிர்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

அங்கே வாழ்விடம் தேவைப்படும் மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும் தமக்கு பொருத்துவீடு வேண்டுமா இல்லையா என்று. அவர்களுக்கு கிடைப்பது ஒரு பிடி மண் என்றாலும் ஒரு செங்கல் மாத்திரமே என்றாலும் அதை தட்டிப்பறிப்பதற்கான உரிமையை வேறு ஒருவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

பொருத்து வீடு கேட்பவர்களுக்கு பொருத்து வீடுகளை கொடுக்கலாம். கல்வீடுதான் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அதற்கான காலம் கனியும்போது கல்வீடு கொடுக்கலாம். பொருத்துவீடு தேவையில்லை என்று கூறுபவர்களுக்கு பொருத்துவீடுகளை கொடுக்கத்தேவையில்லை.

எங்களில் உள்ள குறைபாடு ஒன்று என்ன என்றால் இடைக்கால தற்காலிக தீர்வுகளை நாம் விரும்புவது இல்லை. தனித்தமிழீழத்தை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம் எனும் மனநிலையில் இருந்த எமக்கு கடைசியில் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வுத்திட்டத்தையே எட்டமுடியாமல்போனது.  நாங்கள் தரையில் இருந்து பத்தாம் மாடிக்கு தாவிக்குதிப்பதையே விரும்புகின்றோம். ஒவ்வொரு படிகளாக ஏறி மேலே செல்வது எமக்கு கசப்பாக இருக்கின்றது.

இலங்கையில் ஊழல் இல்லாமல் வியாபார நோக்கம் இல்லாமல் ஏதாவது ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டதை யாராவது கூறமுடியுமா? பொருத்துவீடுகளின் பின்னால் அரசியல்வாதிகளின் சுயநலன்கள், வியாபாரிகளின் இலாபநோக்கு இருக்கின்றது என்று கூறுகின்றீர்கள். இந்தவிசயங்கள் இல்லாமல் இலங்கையில் ஏதாவது ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றால் அவற்றை குறிப்பிடுங்கள்.

பொருத்துவீடு தீப்பிடிக்கும் என்று சிலர் கூறுகின்றீர்கள். ஆனால், ஓலைவீட்டுடன் ஒப்பிடும்போது எது விரைவில் தீப்பிடிக்கும்? குளிர், வெப்பம் பற்றிய முறைப்பாடு உண்டு. வெப்பத்திற்கு சுற்றிவர மரங்களை நடலாம். குளிருக்கு போர்வை பயன்படுத்தலாம், உடையை அதற்கு ஏற்றபடி போடலாம். வெளிநாடுகளில் நாங்கள் காணாத குளிரா? எப்படியான கொடுங்குளிருக்குள் எல்லாம் நாங்கள் மாட்டுப்பட்டு இருக்கின்றோம். -20, - 30 டிகிரி செல்சியஸ் உள்ள இடங்களில் வேலை செய்து இருக்கின்றோம். குளிருக்குள் வெளிச்சூழலில் எத்தனை அலுவல்கள் பார்க்கின்றோம். குறைபிடிப்பது என்றால்கல்வீட்டிலும் ஆயிரம் குறைகள் பிடிக்கலாம்.

பொருத்துவீடு இருபது வருடம் தாக்குப்பிடிக்கும் என்றால் அது ஒரு பெரிய விடயம். நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்கும் என்றால் இருபது வருடங்களில் வருடத்தில் ஒரு குடும்பத்தினால் எத்தனையோ விடயங்களை சாதிக்கமுடியும்.  அவர்கள் தம் வாழ்வில் முன்னேறி தாங்களாகவே ஒரு பெரிய கல்வீட்டைக் கட்டிக்கொள்ளக்கூடிய சூழ்நிலையே எதிர்காலத்தில் உருவாகலாம்.

பசித்தவன் எதைச்சாப்பிடவேண்டும் என்பதை பசித்தவனே தீர்மானிக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இது சரியாக்கப்படவில்லை.
பொருத்து வீடுகள் எங்கள் நாட்டின் கால நிலைக்குத் தகுந்தவை அல்ல.
இதில் வியாபார நோக்கமே முதல் நிலையில் உள்ளது.
இப்படியான வீடுகளால் மக்களுக்கு இன்னும் பல சிரமங்கள் எதிர்காலத்தில் ஏற்படும்
வரும் முன்னே யோசிப்பது மிகவும் நன்று
வந்த பின்னர் யோசிப்பதால்... வரும் இடங்களுக்கு யார் பதில் அளிப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
3 hours ago, கலைஞன் said:

 

எங்களில் உள்ள குறைபாடு ஒன்று என்ன என்றால் இடைக்கால தற்காலிக தீர்வுகளை நாம் விரும்புவது இல்லை. தனித்தமிழீழத்தை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம் எனும் மனநிலையில் இருந்த எமக்கு கடைசியில் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வுத்திட்டத்தையே எட்டமுடியாமல்போனது.  நாங்கள் தரையில் இருந்து பத்தாம் மாடிக்கு தாவிக்குதிப்பதையே விரும்புகின்றோம். ஒவ்வொரு படிகளாக ஏறி மேலே செல்வது எமக்கு கசப்பாக இருக்கின்றது.

 

பொருத்துவீடு இருபது வருடம் தாக்குப்பிடிக்கும் என்றால் அது ஒரு பெரிய விடயம். நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்கும் என்றால் இருபது வருடங்களில் வருடத்தில் ஒரு குடும்பத்தினால் எத்தனையோ விடயங்களை சாதிக்கமுடியும்.  அவர்கள் தம் வாழ்வில் முன்னேறி தாங்களாகவே ஒரு பெரிய கல்வீட்டைக் கட்டிக்கொள்ளக்கூடிய சூழ்நிலையே எதிர்காலத்தில் உருவாகலாம்.

 

வெல்டன் தம்பி

Link to comment
Share on other sites

உண்மையில் இது அங்குள்ள மக்களிடம் தனித்தனியாக கேட்டு செய்யவேண்டிய விசயம் இது. ஏன் என்றால் வாழப்போவது அவர்கள்தான். 

நான் சற்றுமுன் வீட்டிற்காக காத்திருக்கும் அங்குள்ள ஒருவரிடம் தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டேன். அவர் தனக்கு பொருத்துவீட்டை பற்றி அதிகம் தெரியாது என்று கூறினார். ஆனால், பொருத்துவீடு நீண்டகாலம் தாக்குப்பிடிக்கமாட்டாது என்று ஆட்கள் கதைப்பதாய் கூறினார். இதனால், அரசாங்கம் தனக்கு பொருத்துவீட்டை தந்தால் தான் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று கூறினார். தான் கல்வீடு தனக்கு தரப்பட்டாலே அதை ஏற்றுக்கொள்வேன் என்று கூறினார். தான் கல்வீட்டிற்காக காத்திருப்பதாய் கூறினார். 

அங்கேயுள்ள மக்களின் தேவைகளை அறிந்து திட்டத்தை செயற்படுத்தவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கலைஞன் said:

பசித்தவன் எதைச்சாப்பிடவேண்டும் என்பதை பசித்தவனே தீர்மானிக்கட்டும்.

நல்லது கெட்டதை சொல்லி அறிவுறுத்த வேண்டியது நலன் விரும்பிகளின் கடமை.

பொருளாதார விஞ்ஞான வளர்ச்சி அடைந்த நாடுகளில் வாழ்பவர்களுக்கே பொருத்து வீடுகளின் நல்லது கெட்டது தெரியாமல் இருக்கும் போது அங்கிருப்பவர்களுக்கு எப்படி எல்லாம் தெரியப்போகின்றது.

பசியின் அவதியை பயன்படுத்தி அரசியல் லாபம் அடைவதை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்கிறீர்களா?.

Link to comment
Share on other sites

35 minutes ago, கலைஞன் said:

அங்கேயுள்ள மக்களின் தேவைகளை அறிந்து திட்டத்தை செயற்படுத்தவேண்டும். 

பெரும்பாலான மக்களுக்கு இலங்கைக்கு முற்றிலும் புதிய பொருத்து வீடுகளின் தன்மை பற்றிய அறிவு இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே! துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துக்கள் அவசியமாகிறது.

புதிய பொருத்து வீடு வெளிப் பார்வைக்கு மிகவும் கவர்ச்சிகரமானவை! எனவே விபரமறியாத மக்கள் ஆபத்தை அறியாது அதை விரும்பலாம். எனவே! துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துக்கள் மக்களின் நலனுக்கு  அவசியமாகிறது.

சில மாதங்களின் முன்னர் யாழில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டை 3 தடவை நேரில் சென்று பார்த்தேன். என்னுடன் வந்தவர்கள்,
(1) முதல் தரம்: 1 கட்டடத்துறைப் பொறியிலாளர்
(2) இரண்டாம் தரம்: அனுபவ நிபுணத்துவம் வாய்ந்த (இயக்க நிர்மாணத்துறை சேர்ந்த) இருவர் (தாய் மண்ணில் வாழ்பவர்கள்)
(3) மூன்றாவது தரம் 1 கட்டிட பொறியியல் துறைப் பேராசிரியர் 1 கட்டிட நிர்மாணக் கலைஞர்

இவர்களின் கருத்துக்களின் அடிப்படையிலேயே மேலே எனது கருத்து மிகவும் சுருக்கமாக தரப்பட்டுள்ளது.

குறிப்பாக மூன்றாவது தரம் நாம் சென்ற போது சிங்கள இராணுவ பொறியியல் துறையைச் சேர்ந்த 6 பேர் அதைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் என்னுடன் வந்திருந்த பேராசிரியருடனும் கட்டிட நிர்மாணக் கலைஞருடனும் அளவளாவிய சந்தர்ப்பத்தில், தமக்கும் இதில் திருப்பதி இல்லை என தெரிவித்தனர். எனவே தங்களால் முன்னெடுக்கும் காங்கேசன்துறை வீட்டு திட்டத்துக்கு இந்த பொருத்து வீடுகளை அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்தனர்.    இவை நேரடியாக என்னால் அவதானிக்கப்பட்டவை.

Link to comment
Share on other sites

நிச்சயம் பொருத்துவீடுகளின் தன்மை, அவற்றின் நன்மைகள், தீமைகள் பற்றி அங்குள்ள மக்கள் அறிந்துகொள்ளவேண்டும். ஆனால், நாங்கள் அவர்கள்மீது எங்கள் கருத்துக்களை வலிந்து திணிக்கக்கூடாது. தகவல்கள் அவர்களிற்கு செல்லட்டும், முடிவை அவர்கள் எடுக்கட்டும். ஆனால், பொருத்துவீடு என்றாலும் பரவாயில்லை என்று விரும்பும் ஒருவருக்கு பொருத்துவீடு கிடைக்காதவகையில் மற்றவர்கள் திட்டங்களை காலதாமதப்படுத்துவது, இழுத்தடிப்பது, தங்கள் விறுப்பு, வெறுப்புக்களை அவர்கள் மீது திணிப்பது தவறானது.

பொருத்துவீடுகளை எதிர்ப்பதற்கு இதன்பின்னால் வியாபார நோக்கம், அரசியல் இலாபம் உள்ளன எனும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. இப்போது உலகில் பெரும்பாலும் அனைத்துமே வியாபார நோக்கம், அரசியல் இலாபங்களின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றது. புனித ஆட்சி நிருவாகம் உலகில் எங்கும் இல்லை. 

போல் நீங்கள் அங்கே சென்றபோது படங்கள், காணொலிகள் எடுத்திருந்தால் பகிர்ந்துகொள்ளலாமே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்து  வீட்டு  திட்டத்தினால், ஆதாயம் அடையும்  மக்களை விட... 
அரசியல் வாதிகளும், சில நிறுவனங்களுமே... அதிக  ஆதாயம்  அடையும்.  
அதுகும்.... இந்தியா,  செய்வதென்றால்... நிச்சயம்  அதில் தரம் இருக்காது.
ஏற்கெனவே.. இந்தியா  கொடுத்த வீட்டுக்  கூரையின் தரமற்ற  தகரங்களை பற்றிய, விமர்சனம் அதனைப் பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து வந்தது.

இந்தியாவுக்கு, உண்மையிலேயே..... எமக்கு உதவ விருப்பம் என்றால், 
பொருத்து  வீட்டு  திட்டத்திற்குரிய பணத்தை, வீ டு இல்லாதவர்களுக்கு கொடுத்து, 
அவர்களே... தமது உழைப்பையும், விருப்பமான படி... உள்ளூர் பொருட்களையும்  கொண்டு, 
குறிப்பிட் ட  காலத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்று, காலக்கெடு விதித்து....
அதனை... கண்காணிக்க வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கலைஞன் said:

.

? பொருத்துவீடு இருபது வருடம் தாக்குப்பிடிக்கும் என்றால் அது ஒரு பெரிய விடயம். நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்கும் என்றால் இருபது வருடங்களில் வருடத்தில் ஒரு குடும்பத்தினால் எத்தனையோ விடயங்களை சாதிக்கமுடியும்.  அவர்கள் தம் வாழ்வில் முன்னேறி தாங்களாகவே ஒரு பெரிய கல்வீட்டைக் கட்டிக்கொள்ளக்கூடிய சூழ்நிலையே எதிர்காலத்தில் உருவாகலாம்.

பசித்தவன் எதைச்சாப்பிடவேண்டும் என்பதை பசித்தவனே தீர்மானிக்கட்டும்.

கலைஞன் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களுக்கே இந்த பொருத்து வீடு. கடந்த இருபது ஆண்டுகளில் வீட்டை கட்டாதவர்களால் எப்படி அடுத்த இருபது ஆண்டுகளில் வீட்டைக் கட்டமுடியும் என்று நம்புகிறீர்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே பல வருடங்கள் போகட்டும்  பொருத்து வீடு சரிப்பட்டு வராது  போதுமா

 

குடிசையில்  வாழும் மக்களை கேட்டும் ஒருகருத்து கணீப்பு நடத்துங்கள் பொருத்து வீடு கேட் கிறவர்களுக்கு   கொடுக்கலாம் கேட் காதவர்களை விட்டு விடுங்கள் சுனாமியில் கட்டி கொடுக்கப்பட்ட பிளர்ஸ் என்ற தொடர் மாடிகளில் தான்  கிழக்கில் கனபேர் இருக்கிறார்கள்  மற்ற வீடு கேட்டவர்கள் இன்னும் கொட்டில் குடிசைகளில் வாழ்கிறார்கள் .

Link to comment
Share on other sites

நீண்ட நாளா இந்த பிரச்சினை பத்திரிகை செய்திகளில் அடிபடுது.

கிருபன், போல், MEERA, வாத்தியார், குமாரசாமி, தமிழ் சிறி போன்ற சிரேஷ்ட உறுப்பினர்களின் கருத்தே என் கருத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, முனிவர் ஜீ said:

இப்படியே பல வருடங்கள் போகட்டும்  பொருத்து வீடு சரிப்பட்டு வராது  போதுமா

 

குடிசையில்  வாழும் மக்களை கேட்டும் ஒருகருத்து கணீப்பு நடத்துங்கள் பொருத்து வீடு கேட் கிறவர்களுக்கு   கொடுக்கலாம் கேட் காதவர்களை விட்டு விடுங்கள் சுனாமியில் கட்டி கொடுக்கப்பட்ட பிளர்ஸ் என்ற தொடர் மாடிகளில் தான்  கிழக்கில் கனபேர் இருக்கிறார்கள்  மற்ற வீடு கேட்டவர்கள் இன்னும் கொட்டில் குடிசைகளில் வாழ்கிறார்கள் .

ஜீ பத்து இலட்சத்தில் கட்டக்கூடிய கல் வீட்டிற்கு பதிலாக ஏன் 21/25 இலட்சத்தில் பொருத்து வீடு?

இந்த பொருத்து வீடு திட்டம் ஒன்றரை வருடங்களாக இழுபடுகிறது. கல் வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் எத்தனை வீடுகள் கட்டி முடிந்திருக்கும் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கலைஞன் said:

அங்கே வாழ்விடம் தேவைப்படும் மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும் 

 

இலங்கையில் ஊழல் இல்லாமல் வியாபார நோக்கம் இல்லாமல் ஏதாவது ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டதை யாராவது கூறமுடியுமா? பொருத்துவீடுகளின் பின்னால் அரசியல்வாதிகளின் சுயநலன்கள், வியாபாரிகளின் இலாபநோக்கு இருக்கின்றது என்று கூறுகின்றீர்கள். இந்தவிசயங்கள் இல்லாமல் இலங்கையில் ஏதாவது ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றால் அவற்றை குறிப்பிடுங்கள்.

 

பசித்தவன் எதைச்சாப்பிடவேண்டும் என்பதை பசித்தவனே தீர்மானிக்கட்டும்.

சரி கலைஞன், வியாபார  நோக்கமே எல்லாம் அதை ஏற்றுள்ளோள்ளும் அதே வேளை, குறைந்த விலையில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களைக் கொண்டு உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டு இந்த வீட்டுத் திட்டத்தை  முன்னெடுக்காது   , (அதுவும் பொருத்து வீடுகளின் செலவைவிடக் குறைந்த செலவில் நிறைவேற்றும் சாத்தியம் இருக்கும் பொது) , எதற்காக அடுத்த நாட்டுக்கு கொம்பனிகளை இங்கே அழைக்கின்றார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவித்தால் ஆகாதா?
உள்ளூர் தொழிலாளர்கள் இதனால் லாபம் அடையக் கூடாதா?
உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் இத்திட்டத்தினால் உயரக் கூடாதா?

இது தான் சுவாமி நாதனின் அரசியலும் வியாபாரமும் இதையே பலரும் அங்கே சுட்டிக் காட்டுகின்றனர்.
குறைந்த செலவும்  நீண்ட கால பாவிப்பும் கால நிலைக்கு ஏற்றதாகவும் சுகாதார நோக்கும்  இருக்கும்போது இப்படியான இரும்புக்கு குப்பைகளை எங்கள் மக்களின் வாழ்வை அழிக்கப் பயன்படுத்துகின்றார்கள்.

எப்படியான வீடுகள் தமக்குத் தேவையென மக்கள் தீர்மானிக்கலாம். அனால் இந்த இரும்புக்கு  குப்பை வீடுகளை அமைக்கச் சுவாமி நாதன் அவர்களே விடாப்பிடியாக இருக்கின்றார். இதன் உள்நோக்கம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, போல் said:

எனது கருத்து:

பொருத்து வீடுகள்,

  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும்
  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும்
  • கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும்
  • மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும்
  • இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும்
  • மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும்
  • பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும்
  • ஏழை மக்களின் இயலாமையை வைத்து அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாலும்   
  • அமைக்க செலவாகும் தொகையில் இரண்டு மிகவும் வசதியான, உறுதியான, நீண்ட ஆயுதக்காலம் உடைய, சுவாத்தியத்துக்கு உகந்த கல்வீடுகளை அமைக்க முடியும் என்பதாலும்
  • இதற்கான செலவு மதிப்பீடு பெரும் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது எனப் புலப்படுவதாலும்

இந்த பொருத்து வீடுகள் எமது சக உறவுகளான தமிழ் மக்களுக்கு குறுகிய கால சிறு நன்மைகளைவிட நீண்டகால பெரும் தீமைகளையே விளைவிக்கும்.

 

இதில் உள்ள கருத்துக்களுடன் உடன்படுகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, MEERA said:

ஜீ பத்து இலட்சத்தில் கட்டக்கூடிய கல் வீட்டிற்கு பதிலாக ஏன் 21/25 இலட்சத்தில் பொருத்து வீடு?

இந்த பொருத்து வீடு திட்டம் ஒன்றரை வருடங்களாக இழுபடுகிறது. கல் வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் எத்தனை வீடுகள் கட்டி முடிந்திருக்கும் ?

 

ஆனால் அரசாங்க தரப்பில் பொருத்து வீடுகள்  மட்டுமே அமைத்து கொடுக்கப்படும் என அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது இதை எதிர்த்து  கொஞ்சம் வ்லுவான தீர்மானங்கள் தமிழர் சார்ப்பில்  ஒன்றும் எடுக்காமல் இருப்பதற்க்கான காரணம் என்ன   பொருத்து வீடு இல்லயென்றால் மற்ற வீடு கிடைக்கலாம் அல்லது அதுகூட கிடைக்காமல் போகலாம்  அல்லது இன்னும் வருடங்கள் கடந்து செல்லலாம்  அதனால் குடிசையில் இருப்பவர்களூக்குதான் இழப்பு  நான் கூட ஆரம்பத்தில் இதை ஆதரிக்க வில்லை    உதவிகள் கூட காலம் கடந்து செல்கிறது அவ்வளவுதான் 

இப்படியே சிலர் வாழ்கிறார்கள் அதற்க்காகதான் இது பழைய போட்டோ

FB_IMG_1441029481074.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

ஆனால் அரசாங்க தரப்பில் பொருத்து வீடுகள்  மட்டுமே அமைத்து கொடுக்கப்படும் என அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது இதை எதிர்த்து  கொஞ்சம் வ்லுவான தீர்மானங்கள் தமிழர் சார்ப்பில்  ஒன்றும் எடுக்காமல் இருப்பதற்க்கான காரணம் என்ன   பொருத்து வீடு இல்லயென்றால் மற்ற வீடு கிடைக்கலாம் அல்லது அதுகூட கிடைக்காமல் போகலாம்  அல்லது இன்னும் வருடங்கள் கடந்து செல்லலாம்  அதனால் குடிசையில் இருப்பவர்களூக்குதான் இழப்பு  நான் கூட ஆரம்பத்தில் இதை ஆதரிக்க வில்லை    உதவிகள் கூட காலம் கடந்து செல்கிறது அவ்வளவுதான் 

இப்படியே சிலர் வாழ்கிறார்கள் அதற்க்காகதான் இது பழைய போட்டோ

FB_IMG_1441029481074.jpg

இந்த வீடுகள் கிடைப்பதற்கு 

முதலாவது நிபந்தனை

சொந்தமாக காணி  உள்ளவராக இருக்கணும் என்பது அல்லவா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

ஆனால் அரசாங்க தரப்பில் பொருத்து வீடுகள்  மட்டுமே அமைத்து கொடுக்கப்படும் என அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது இதை எதிர்த்து  கொஞ்சம் வ்லுவான தீர்மானங்கள் தமிழர் சார்ப்பில்  ஒன்றும் எடுக்காமல் இருப்பதற்க்கான காரணம் என்ன  

வீடுகளை இழந்தவர்களுக்கு அரசாங்கம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் என்று தான் முதலாவது தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆனால் எப்படியான வீடுகளை அமைப்பது என்று இந்த இரும்பு வீட்டுத் திட்டத்தை   கொண்டு வந்தது சுவாமி நாதன்  தான்.

அப்போதிலிருந்தே பல அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும் ஐயா சுவாமி நாதன் தான்  இந்த மிட்டலின் பழைய இரும்புகளுக்கு விலை பேசியவர்.  மக்களுக்காக வீடுகளோ? அல்லது
துருப்பிடிக்கும் இரும்புகளை   விலை பேசி எம் மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றனரா? 

Link to comment
Share on other sites

1 hour ago, வாத்தியார் said:

வீடுகளை இழந்தவர்களுக்கு அரசாங்கம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் என்று தான் முதலாவது தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆனால் எப்படியான வீடுகளை அமைப்பது என்று இந்த இரும்பு வீட்டுத் திட்டத்தை   கொண்டு வந்தது சுவாமி நாதன்  தான்.

அப்போதிலிருந்தே பல அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும் ஐயா சுவாமி நாதன் தான்  இந்த மிட்டலின் பழைய இரும்புகளுக்கு விலை பேசியவர்.  மக்களுக்காக வீடுகளோ? அல்லது
துருப்பிடிக்கும் இரும்புகளை   விலை பேசி எம் மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றனரா? 

இந்தப் பொருத்து வீடுகள் லக்ஸ்மி மித்தாலின் நிறுவனம் மூலம் கொள்வனவு செய்யப்படுவதாக சில வருடங்களுக்கு முன்னர் கேள்விப் பட்டுள்ளேன். விபரம் தெரிந்தவர்கள் உறுதிப் படுத்துங்கள். 

இவை மித்தால் வீடுகளாக இருந்தால் வீடுகளில் வசிக்கப் போகும் ஏழை மக்களை விட லக்ஸ்மி மித்தால் மற்றும் வீட்டு உடம்படிக்கைகளில் தொடர்புடைய அரசியல் வாதிகள்தான் அதிக பயன் அடைவார்கள். ஏனென்றால் இந்தியா முதல் ஐரோப்பா வரை ஏழை உழைப்பாளிகளின் வையிற்றில் அடித்துக் கொழுத்த உலகின் முதல்தர பணக்காரர்களில் ஒருவர்தான் இந்த லக்ஸ்மி மித்தால்.

இவ் வீடுகளில் பாவிக்கப்படும் மூலப் பொருட்கள் asbestos போன்ற ஐரோப்பிய நாடுகளால் முற்றாகத் தடை செய்யப்பட்ட ஆபத்து நிறைந்த மூலக்கூறுகளைக் கொண்டிருக்கவில்லை என்ற அத்தாட்சியைப் பெற்றிருக்கின்றதா ? அல்லது வேறு ஆபத்தான பொருட்கள் கலந்திருக்கப்படவில்லை என்ற அத்தாட்சிகள் சர்வதேச விதிமுறைகளுக்கேற்றவாறு வழங்கப்பட்டுள்ளனவா ? 

இது தவிர மலையகத்தில் லயன் வீடுகள் தந்த அனுபவத்தையும் கவனிக்க வேண்டும். 

பசித்தவனைப் பட்டினி போடுவதை விட எதையாவது உண்ணக் கொடுக்கலாம் என்ற கோட்பாட்டில் பொருத்து வீடுகளை ஆதரிக்கலாம். ஏனென்றால் நாம் வெளிநாட்டில் இருந்து வீரம் பேசுவதை விட வேறெதையும் சாதிக்கப் போவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • தாமரைக்கும் அருணாச்சலம் ஐயாவுக்கும் என்ன தொடர்பு?! 🤣
    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.