Jump to content

மண் வீடு


Recommended Posts

இன்று இலங்கையில் பொருத்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவது பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மண் வீடு என்ற  இந்தத் திரியின் நோக்கம் பொருத்து வீடுகள் அமைப்பதை எதிர்ப்பதோ அல்லது குறைத்து மதிப்பிடுவதோ அல்ல. மண்ணாலும் போதுமான உறுதியான அழகான வீடுகளை அமைக்க முடியும் என்பதை விளக்கவே. 

உலகில் இன்னும் 40 விதமான வீடுகள் களிமண்ணால் அமைக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோவினால்  அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட வேண்டிய கட்டிடங்களில் (World Heritage) 17 வீதமானவை இயற்கை மண்ணினால் கட்டப்பட்டவை. இவை பல நூற்றாண்டுகளாக இன்னும் நிலைத்திருக்கின்றன. 

மண்வீட்டை விரும்பாததற்கு (குறிப்பாக எம்மவர்கள்) முக்கியமாக 3 காரணங்கள் கூறலாம்.
- ஆடம்பரம் கௌரவம்
- மண் வீடு பற்றிய புரிதல் இல்லாமை
- இயற்கை வளங்கள் இயற்கை மாசுபடுதல் பற்றிய போதிய அறிவூட்டல் இல்லாமை

களி மண்ணால் சீமெந்து போல் அடுக்கு மாடிகள் கட்ட முடியாவிடினும் மரப் பலகையையும் சேர்த்தால் விசாலமான மாடி வீட்டினை அமைக்கலாம்.

மண் வீடுகளின் அனுகூலங்கள் சில
- 100 வீதம் இயற்கையானது
- இலவசமானது
- வீடு கட்ட வேண்டிய இடத்திலேயே தாராளமாகப் பெற்றுக் கொள்ளலாம்
- சுகாதாரமானது
- சீமெந்தை விடச் சுலபமாகக் கையாளலாம்
- மண் சுவர் வீட்டினுள் காற்றின் ஈரப் பதனைச் சீராக்கும்
- தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவி இல்லாமல் நாமே கட்டிக் கொள்ளலாம்
- மண்சுவர் சிறந்த ஒலித் தடுப்பைக் கொண்டது
- 0 வீதமான CO2 வெளியேற்றப் படுவதால் சுற்றாடலையும் பாதுகாக்கிறது

இவை எல்லாவற்றையும் விட இயற்கையோடு இணைந்த வாழ்வு என்ற திருப்தியைத் தரும்.

பாதகங்கள் சில
- வெள்ளப்பெருக்கைத் தாக்குப் பிடிப்பது கடினம் 
- சுவர்கள் அகலமாக இருக்கும்
- கூரை சற்று அகலமானதாக இருக்க வேண்டும்
- சீமெந்து வீட்டை விடப் பராமரிப்பு அதிகமாக இருக்கும்

வாசித்து அறிந்து கொண்டவற்றையும் எனது மிகச் சிறிய அனுபவம் ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்றோ ஒரு நாள் 100 வீதம் இயற்கையான பொருட்களைக் கொண்டு நானே ஒரு வீடு கட்டிக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையையும் ஆவலையும் இந்த அனுபவம் தந்துள்ளது.

maison.jpg

- தொடரும் - 

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

பனையோலை அல்லது தென்னோலையால் வேயப்பட்ட மண் வீட்டில் இருக்கும் சுவாத்தியம் வேறு எந்த வீட்டிலையும் கிடையாது. அனுபவத்தில் கண்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இயற்கையின் கொடையை நூறுவீதம் அனுபவித்தவன்.

மண்வீட்டை ஒரு இழக்காரமாக பார்க்கும் சமூகத்தில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..

ஆனால் அதன் பக்கவிளைவுகள் இல்லாத பலாபலன்களை மக்கள் சிந்திக்க மறுக்கின்றார்கள். வியாபாரிகளினால் உருவாக்கப்பட்ட போலியான பகட்டு வாழ்க்கைக்கு அடிமைப்படுதப்படுகிறார்கள்.


ஜேர்மனியில் இன்றும் பல இடங்களில் இயற்கையான பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகள் கம்பீரமாகத்தான் இருக்கின்றது வெளிப்பூச்சு எதுவுமின்றி வீட்டின் உண்மையான தோற்றம்..

oekohaus-in-erbach-8367733a-1fb9-492a-96a1-266600472762.jpg?width=1000

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செங்கல் வீடுகளும் சிறந்ததே. கீழே அரை மீற்றர் உயரத்துக்கு  நல்ல பூச்சு பூசினால்  வெல்ல அரிப்பையும் கூட தாங்கும்....! ஆனால் உதையெல்லாம் யார் செய்யப் போகினம்....!

நான் இருக்கும் இடத்திலும் அதிகமான வீடுகள் கு.சா. படம் போட்டா மாதிரித்தான் இருக்கின்றன. ஓடுகள் கூட பீலி ஓடுகள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோலினால் மேயப்பட்ட வீடுகளும் களி மண் போட்டு தரையை சாணத்தினால் மெழுகப்பட்ட வீடுகளுக்கு எந்த ஏசி வீடுகளும் ஈடு கொடுக்க முடியாது 

ஆனால் புதிய சந்ததி இதை ஏற்றுக்கொள்ளாது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாததுக்கு ஆசை கொள்வது மனித மனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

6 hours ago, குமாரசாமி said:

நான் இயற்கையின் கொடையை நூறுவீதம் அனுபவித்தவன்.

மண்வீட்டை ஒரு இழக்காரமாக பார்க்கும் சமூகத்தில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..

ஆனால் அதன் பக்கவிளைவுகள் இல்லாத பலாபலன்களை மக்கள் சிந்திக்க மறுக்கின்றார்கள். வியாபாரிகளினால் உருவாக்கப்பட்ட போலியான பகட்டு வாழ்க்கைக்கு அடிமைப்படுதப்படுகிறார்கள்.


ஜேர்மனியில் இன்றும் பல இடங்களில் இயற்கையான பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகள் கம்பீரமாகத்தான் இருக்கின்றது வெளிப்பூச்சு எதுவுமின்றி வீட்டின் உண்மையான தோற்றம்..

oekohaus-in-erbach-8367733a-1fb9-492a-96a1-266600472762.jpg?width=1000

 

உண்மையாய் இப்படியான வீடுகள் ஜேர்மனியில் இருக்குதா? குளீருக்கு எப்படித் தாக்குப் பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முனிவர் ஜீ said:

வைக்கோலினால் மேயப்பட்ட வீடுகளும் களி மண் போட்டு தரையை சாணத்தினால் மெழுகப்பட்ட வீடுகளுக்கு எந்த ஏசி வீடுகளும் ஈடு கொடுக்க முடியாது 

ஆனால் புதிய சந்ததி இதை ஏற்றுக்கொள்ளாது  

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பகட்டு வாழ்க்கையை பாமரமக்களிடம் விதைத்து விட்டார்கள்....

விதைத்துக்கொண்டே வருகின்றார்கள்.


ஆனால் ஐரோப்பாவில் வாழும் இளயசமுதாயம் சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள்.


உதாரணத்திற்கு பிளாஸ்ரிக் பைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகின்றார்கள்.பதிலாக துணியிலான அல்லது கடுதாசி பைகளை பாவிக்க ஆரம்பித்து வருகின்றனர்.
தாம் கஸ்ரப்பட்டாலும் முக்கியமாக தங்களுக்கு பின் வரும் அடுத்த சந்ததியை பற்றி அதிகம் சிந்திக்கின்றனர்.செயல்படுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

உண்மையாய் இப்படியான வீடுகள் ஜேர்மனியில் இருக்குதா? குளீருக்கு எப்படித் தாக்குப் பிடிக்கும்

ஏன் தங்கச்சி! கல் வீடெண்டால் பாம்பு பூச்சி கரப்பான் நட்டுவக்காலி ஒண்டும் வராதோ? அல்லது வந்ததாய் சரித்திரமே இல்லையோ?

சுவருக்கு இடையிலை வைக்கல் கம்பு தும்புகளை வைச்சு கட்டுகிறார்கள்.... அதுவும் வைக்கோல் ஒரு இயற்கை தந்த கொடை......வெப்பத்தை தரவல்லது. நாங்கள் ஊரிலை மாம்பழம் பழுக்க வைக்க வைக்கோலை பயன்படுத்துவோமே.....

அது வீடு திருத்தும் போது எடுத்தபடம்......வெளிப்பூச்சு பூசியபின் அழகாக தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

உண்மையாய் இப்படியான வீடுகள் ஜேர்மனியில் இருக்குதா? குளீருக்கு எப்படித் தாக்குப் பிடிக்கும்

Bildergebnis für denkmal hause in deutschland

Bildergebnis für denkmal schutz hause in deutschland

ரதி... இப்படியான வீடுகள், ஜேர்மனில்  உள்ள எல்லா ஊர்களிலும் சில  காணப்படும்.
இரண்டு உலகப் போர்களில்.... தப்பிப் பிழைத்த வீடுகள் என்பதால்,
அதன் வெளித் தோற்றத்தை மாற்ற, அந்த வீட்டு  எவ்வளவு தலைகீழாக நின்றாலும்,    அனுமதி கிடைக்காது.

இருந்த மாதிரியே....  திருத்த வேலைகளை செய்ய வேண்டும்.
வீட்டிற்குள்... என்ன நவீன பொருட்களையும்  பொருத்துவதற்கு, அனுமதிப்பார்கள்.
வெளியில்.... கைவைக்க, நகர சபையின் ஒப்புதல் வேண்டும். :)

ஜேர்மனியில்.... பாம்பு, பூச்சி எல்லாம் மிருகக் காட் சி  சாலையில் தான் இருக்கும். 
வீ ட்டுக்குள்... நாய், பூனை  மட்டுமே வரும்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பகட்டு வாழ்க்கையை பாமரமக்களிடம் விதைத்து விட்டார்கள்....

விதைத்துக்கொண்டே வருகின்றார்கள்.


ஆனால் ஐரோப்பாவில் வாழும் இளயசமுதாயம் சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள்.


உதாரணத்திற்கு பிளாஸ்ரிக் பைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகின்றார்கள்.பதிலாக துணியிலான அல்லது கடுதாசி பைகளை பாவிக்க ஆரம்பித்து வருகின்றனர்.
தாம் கஸ்ரப்பட்டாலும் முக்கியமாக தங்களுக்கு பின் வரும் அடுத்த சந்ததியை பற்றி அதிகம் சிந்திக்கின்றனர்.செயல்படுகின்றனர்.

உன்மைதான் குமாரசாமி அண்ணை  அந்த நிலை தற்போது இலங்கையில் 3 மாடி வீடுகள் வசிக்க ஆள் இல்லை  எல்லாம்  அடுத்தவனை பார்த்து பார்த்து .........................

இந்த பிளாஸ்டிக் பைகளை பாவிப்பதை குறைத்து கொண்டுதான் வருகிறோம் ஒரு சின்ன அறீவூட்டலின் மூலமாக ஆனால் அது கொஞ்சம் சிரமாக இருக்கிறது   சீலை ப்பைகளையும் சாக்கு பைகளையும் , பனையோலையினால் செய்த பைகளையும் அறி முகப்ப்டுத்தியுள்ளார்கள் தற்போது மட்டக்கலப்பில் ஆனால்   செயற்பட வைப்பது என்பது முளங்காலால் மலையேறி போக வேண்டிய நிலமைபோக் இருக்கிறது  அப்படி பிளாஸ்ரிக்கு அடிமையாகிட்டோம்

13 hours ago, ரதி said:

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

உண்மையாய் இப்படியான வீடுகள் ஜேர்மனியில் இருக்குதா? குளீருக்கு எப்படித் தாக்குப் பிடிக்கும்

குடிசை வீட்டில பாம்பு  பல்லி ஓணான் தவளை மோக்கான் நட்டுவகாலி , அறணை எல்லாம் அழையா விருந்தாளிகள் அப்பப்போ வருவார்கள் போவார்கள் அதற்கும் குடிசை வீட்டில் மருந்து இருக்கிறது அதற்கு. மூலிகை செடி இருக்கிறது நட்டால் அந்த பக்கம் ஒருவர் கூட தலை வைத்து படுக்க மாட்டார்கள்

Link to comment
Share on other sites

21 hours ago, நந்தன் said:

ஆனா அடிக்கடி புழுதி கிளம்பும், சாணி போட்டு மெழுகணும்

மண் வீடு என்றவுடன் ஓலைக் குடிசைதான் எல்லோருக்கும் நினைவில் வரும். பழமைக்குள் புதுமையைப் புகுத்தி காலத்திற்கேற்றவாறு மெருகேற்ற வேண்டும். மாற்றம் இல்லாத எதுவும் காலப்போக்கில் காணாமல் போய்விடும். வீட்டின் பயன்பாடு 100 வருடங்களுக்கு முன்னர் இருந்ததுபோல் இன்று இல்லை.  

சாணி போட்டு மெழுகுதல் என்பது ஒரு தெரிவு மட்டுமே.

Link to comment
Share on other sites

21 hours ago, குமாரசாமி said:

நான் இயற்கையின் கொடையை நூறுவீதம் அனுபவித்தவன்.

மண்வீட்டை ஒரு இழக்காரமாக பார்க்கும் சமூகத்தில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..

ஆனால் அதன் பக்கவிளைவுகள் இல்லாத பலாபலன்களை மக்கள் சிந்திக்க மறுக்கின்றார்கள். வியாபாரிகளினால் உருவாக்கப்பட்ட போலியான பகட்டு வாழ்க்கைக்கு அடிமைப்படுதப்படுகிறார்கள்.


ஜேர்மனியில் இன்றும் பல இடங்களில் இயற்கையான பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகள் கம்பீரமாகத்தான் இருக்கின்றது வெளிப்பூச்சு எதுவுமின்றி வீட்டின் உண்மையான தோற்றம்..
 

 

உண்மை குமாரசாமி.

ஐரோப்பாவில் நவீன கட்டடங்களை அமைத்து பெரும்பாலானோர் வாழ்ந்தாலும் சிலர் இயகையை நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர். உணவு முதல் அனைத்துத் தேவைகளிலும் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டனர். 

பிரபஞ்சத்தில் சாதாரண துகள்களாக இருந்த மனிதன் இன்று தன்னைச் சுற்றி இருந்து ஆட்சி செய்யும் இயற்கையின் நுணுக்கங்களை அறிந்து கொள்ளும் அளவு முன்னேறி வெற்றிவாகை சூடினான். 

இயற்கையை மனிதன் ஆதிக்கம் செலுத்த முயன்றதன் பலனை உலகம் உணரத் தொடங்கியுள்ளது. இயற்கையோடு ஒன்றிய வாழ்வின் அவசியம் உணரப்படுகிறது. நாங்களும் எல்லாவற்றையும் கோட்டை விட்டு இறுதியில் ஏங்குவதை விட இப்போதே முயற்சி செய்ய வேண்டும்.

இயற்பியலாளர் Stephen Hawking எமக்கு 1000 வருட அவகாசம் தருகிறார் நாம் இந்தப் பூமியை விட்டு வெளியேறி வேறு எங்காவது குடியேறுவதற்கு. தற்போதுள்ள வேகத்தில் சுற்றாடல் அழிக்கப்படுமானால் 1000 வருடங்களுக்கு முன்னரே பூமி வாழ்வதற்கு ஏற்புரையதற்றதாகி விடும்.

21 hours ago, suvy said:

செங்கல் வீடுகளும் சிறந்ததே. கீழே அரை மீற்றர் உயரத்துக்கு  நல்ல பூச்சு பூசினால்  வெல்ல அரிப்பையும் கூட தாங்கும்....! ஆனால் உதையெல்லாம் யார் செய்யப் போகினம்....!

நான் இருக்கும் இடத்திலும் அதிகமான வீடுகள் கு.சா. படம் போட்டா மாதிரித்தான் இருக்கின்றன. ஓடுகள் கூட பீலி ஓடுகள்...!

செங்கல் நல்ல உறுதியானது. ஆனால் விலை அதிகம். அதனை ஒட்டுவதற்குச் சீமெந்து வேண்டும். அத்துடன் கற்களை எரிப்பதால் வெளியேற்றப்படும் காபனீர் ஒட்சைட்டினால் அது 100 வீதம் இயற்கையப் பாதுகாக்காது.

Link to comment
Share on other sites

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இல்லாததுக்கு ஆசை கொள்வது மனித மனம்.

வீடு கட்டப் பாவிக்கப்படும் மூலப் பொருட்கள் தான் வித்தியாசப்படுமே தவிர கட்டி முடித்தபின் தோற்றத்தில் பெரிய மாற்றம் இராது. உள் சிவர்களுக்கு வேண்டுமானால் பிளாஸ்ரிக் பெயின்ற் அடித்துக் கொள்ளலாம் :unsure:. ஆனால் 100 வீதம் இயற்கை ஆகாது. இயற்கையான வண்ணப் பூச்சுக்களும் உள்ளன. நாமே தயாரித்துக் கொள்ளலாம்.

brique2.jpg

15 hours ago, ரதி said:

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

உண்மையாய் இப்படியான வீடுகள் ஜேர்மனியில் இருக்குதா? குளீருக்கு எப்படித் தாக்குப் பிடிக்கும்

மண் வீடு என்றால் குடிசை வீடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சீமெந்து வீடு போலவே பூச்சி வராமல் கட்டலாம். குளிர் மட்டுமல்ல வெப்பத்தையும் தடுக்குமாறு கட்ட முடியும். களிமண்ணானது சீமெந்தை விட அதிக திணிவு கொண்டது. வெப்பத்தைப் பிடித்து வைத்துச் சிறிது சிறிதாகக் கதிர்வீச்சு மூலம் வெளியேற்றும் ஆற்றல் அதிகம் கொண்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

அவுஸ்ரேலியா , புளோரிடா பக்கமெல்லாம் முதலை வந்து  வீட்டுமணி அடிக்கிற விசயமெல்லாம் தங்கச்சிக்கு தெரியாது போலை கிடக்கு..:grin:

HT_Alligator_Door1_MEM_160503_16x9_992.jpg

 

croc-in-fam-home-asutralia__oPt.jpg

அவையள் என்ன குடில் , கொட்டில்லையே இருக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎01‎/‎2017 at 1:35 PM, இணையவன் said:

வீடு கட்டப் பாவிக்கப்படும் மூலப் பொருட்கள் தான் வித்தியாசப்படுமே தவிர கட்டி முடித்தபின் தோற்றத்தில் பெரிய மாற்றம் இராது. உள் சிவர்களுக்கு வேண்டுமானால் பிளாஸ்ரிக் பெயின்ற் அடித்துக் கொள்ளலாம் :unsure:. ஆனால் 100 வீதம் இயற்கை ஆகாது. இயற்கையான வண்ணப் பூச்சுக்களும் உள்ளன. நாமே தயாரித்துக் கொள்ளலாம்.

brique2.jpg

மண் வீடு என்றால் குடிசை வீடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சீமெந்து வீடு போலவே பூச்சி வராமல் கட்டலாம். குளிர் மட்டுமல்ல வெப்பத்தையும் தடுக்குமாறு கட்ட முடியும். களிமண்ணானது சீமெந்தை விட அதிக திணிவு கொண்டது. வெப்பத்தைப் பிடித்து வைத்துச் சிறிது சிறிதாகக் கதிர்வீச்சு மூலம் வெளியேற்றும் ஆற்றல் அதிகம் கொண்டது.

அதெப்படி இப்படியான வீடுகள் என்டால் குடிசை வீடுகளாத் தானே இருக்கும்.கூரைக்கு கல் வைத்துக் கட்டினால் அது கல் வீடு இல்லையா?...அடுத்தது இப்படியான் வீடுகள் குளிர்மையாய் இருக்கும் அல்லவா? வெயிலுக்கு ஓகே ஆனால் குளிருக்கு எப்படி தாக்குப் பிடிப்பது?

On ‎11‎/‎01‎/‎2017 at 2:16 PM, குமாரசாமி said:

அவுஸ்ரேலியா , புளோரிடா பக்கமெல்லாம் முதலை வந்து  வீட்டுமணி அடிக்கிற விசயமெல்லாம் தங்கச்சிக்கு தெரியாது போலை கிடக்கு..:grin:

HT_Alligator_Door1_MEM_160503_16x9_992.jpg

 

croc-in-fam-home-asutralia__oPt.jpg

அவையள் என்ன குடில் , கொட்டில்லையே இருக்கினம்

தெரியும் அண்ணா...அவுசில் போய் குடியேற வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை...ஒரு,சில காரணங்களுக்காய் போகவில்லை.1}பணம் இல்லை 2}படிப்பில்லை வேலை எடுக்கேலாது. 3} பாம்புப் பயம்tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் 13 வயது வரை மண் வீட்டிலேயே வாழ்ந்தேன்.பின்னர் கல் வீடு.நன்மை தீமை தெரியவில்லை.இப்போ மட்பாண்டங்களே பாவிக்காத போது மண் வீட்டைப் பற்றி யார் யோசிக்கிறார்கள்.

34 minutes ago, ரதி said:

அதெப்படி இப்படியான வீடுகள் என்டால் குடிசை வீடுகளாத் தானே இருக்கும்.கூரைக்கு கல் வைத்துக் கட்டினால் அது கல் வீடு இல்லையா?...அடுத்தது இப்படியான் வீடுகள் குளிர்மையாய் இருக்கும் அல்லவா? வெயிலுக்கு ஓகே ஆனால் குளிருக்கு எப்படி தாக்குப் பிடிப்பது?

தெரியும் அண்ணா...அவுசில் போய் குடியேற வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை...ஒரு,சில காரணங்களுக்காய் போகவில்லை.1}பணம் இல்லை 2}படிப்பில்லை வேலை எடுக்கேலாது. 3} பாம்புப் பயம்tw_cry:

காசு பணம் இல்லாட்டி என்ன அன்புக்கு பஞ்சம் இல்லை என்றால் நீங்க அவுசில் வாழலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் 13 வயது வரை மண் வீட்டிலேயே வாழ்ந்தேன்.பின்னர் கல் வீடு.நன்மை தீமை தெரியவில்லை.இப்போ மட்பாண்டங்களே பாவிக்காத போது மண் வீட்டைப் பற்றி யார் யோசிக்கிறார்கள்.

காசு பணம் இல்லாட்டி என்ன அன்புக்கு பஞ்சம் இல்லை என்றால் நீங்க அவுசில் வாழலாம்.

இந்தக் காலத்தில காசு இல்லாட்டில் வீட்டில வளர்க்கிற நாய் கூட சீண்டாது:cool:...நானும் சின்ன வயசில கொஞ்சக் காலம் மண் வீட்டில வாழ்ந்திருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

இந்தக் காலத்தில காசு இல்லாட்டில் வீட்டில வளர்க்கிற நாய் கூட சீண்டாது:cool:...நானும் சின்ன வயசில கொஞ்சக் காலம் மண் வீட்டில வாழ்ந்திருக்கிறேன்

நாங்களும் தான் ரதி பழையதை மறக்க முடியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/01/2017 at 0:21 PM, முனிவர் ஜீ said:

உன்மைதான் குமாரசாமி அண்ணை  அந்த நிலை தற்போது இலங்கையில் 3 மாடி வீடுகள் வசிக்க ஆள் இல்லை  எல்லாம்  அடுத்தவனை பார்த்து பார்த்து .........................

இந்த பிளாஸ்டிக் பைகளை பாவிப்பதை குறைத்து கொண்டுதான் வருகிறோம் ஒரு சின்ன அறீவூட்டலின் மூலமாக ஆனால் அது கொஞ்சம் சிரமாக இருக்கிறது   சீலை ப்பைகளையும் சாக்கு பைகளையும் , பனையோலையினால் செய்த பைகளையும் அறி முகப்ப்டுத்தியுள்ளார்கள் தற்போது மட்டக்கலப்பில் ஆனால்   செயற்பட வைப்பது என்பது முளங்காலால் மலையேறி போக வேண்டிய நிலமைபோக் இருக்கிறது  அப்படி பிளாஸ்ரிக்கு அடிமையாகிட்டோம்

குடிசை வீட்டில பாம்பு  பல்லி ஓணான் தவளை மோக்கான் நட்டுவகாலி , அறணை எல்லாம் அழையா விருந்தாளிகள் அப்பப்போ வருவார்கள் போவார்கள் அதற்கும் குடிசை வீட்டில் மருந்து இருக்கிறது அதற்கு. மூலிகை செடி இருக்கிறது நட்டால் அந்த பக்கம் ஒருவர் கூட தலை வைத்து படுக்க மாட்டார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, சுவைப்பிரியன் said:

 

சில முன்னோர்கள் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறேன்  சில மூலிகை செடிகளை நட்டால் சில ஊர்வன வராது என்று அதான் சொன்னது  தற்போது இன்சுலின் என்று அழைக்கப்படும் அதாவது உடம்பில் சீனி அதிகமாக இருந்தால் சப்பி சாப்பிடும் இலை மிக கசப்பானது வாயில் வைக்க முடியாது அந்த செடியை நட்டால்  பாம்பு வராது என்று சொல்வார்கள் ,

தென்னை வண்டுகளுக்கு தலைமுடியை  பெண்கள் தலையில் இருந்து உதிரும் முடிகளை தென்னை வட்டினுள்  வைத்து விடுவார்கள் ஏன் என்று கேட்ட்டால் தென்னம் வண்டு உள்ளே செல்ல முடியாது  என்ற்ய் சொலவ்வார்கள் உன்மையும் தான் அந்த வண்டு அதில் விழுந்து சிக்கி கொள்ளும் சில வேளைகளில்  அதே போல் இன்னும் வேற மூலிகை செடி இருக்கலாம் 

Link to comment
Share on other sites

ஏன் கனக்க ரெண்டு நல்ல வேட்டை நாய் வளர்த்தால் போச்சு மழைகாலங்களில்தினமும்  விடிகாலையில் பாம்பு பிஞ்சு முத்தத்தில் கிடக்கும் அடுத்து நாய் குரைப்புக்கு விஷ ஊர்வன வீட்டு பக்கம் கூடுதலா வராது வந்தால் பாக பிரிவினைதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/01/2017 at 1:35 PM, இணையவன் said:

வீடு கட்டப் பாவிக்கப்படும் மூலப் பொருட்கள் தான் வித்தியாசப்படுமே தவிர கட்டி முடித்தபின் தோற்றத்தில் பெரிய மாற்றம் இராது. உள் சிவர்களுக்கு வேண்டுமானால் பிளாஸ்ரிக் பெயின்ற் அடித்துக் கொள்ளலாம் :unsure:. ஆனால் 100 வீதம் இயற்கை ஆகாது. இயற்கையான வண்ணப் பூச்சுக்களும் உள்ளன. நாமே தயாரித்துக் கொள்ளலாம்.

brique2.jpg

மண் வீடு என்றால் குடிசை வீடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சீமெந்து வீடு போலவே பூச்சி வராமல் கட்டலாம். குளிர் மட்டுமல்ல வெப்பத்தையும் தடுக்குமாறு கட்ட முடியும். களிமண்ணானது சீமெந்தை விட அதிக திணிவு கொண்டது. வெப்பத்தைப் பிடித்து வைத்துச் சிறிது சிறிதாகக் கதிர்வீச்சு மூலம் வெளியேற்றும் ஆற்றல் அதிகம் கொண்டது.

சுடாத களிமண் கொண்ட கற்களா நீங்கள் கூறுவது?அவை நீண்ட காலம் நிலைத்திருக்குமா ?

Link to comment
Share on other sites

On 12 janvier 2017 at 6:35 PM, ரதி said:

அதெப்படி இப்படியான வீடுகள் என்டால் குடிசை வீடுகளாத் தானே இருக்கும்.கூரைக்கு கல் வைத்துக் கட்டினால் அது கல் வீடு இல்லையா?...அடுத்தது இப்படியான் வீடுகள் குளிர்மையாய் இருக்கும் அல்லவா? வெயிலுக்கு ஓகே ஆனால் குளிருக்கு எப்படி தாக்குப் பிடிப்பது?

சீமெந்து, பலகை, இரும்பு போன்று ஒரு மூலப் பொருளாகதான் களிமண் பாவிக்கப்படுகிறதே அன்றி குடிசை வீடுதான் கட்ட வேண்டும் என்பதல்ல. மண்சுவர் வெயிலை விடக் குளிருக்கே உகந்தது.

.

On 15 janvier 2017 at 0:52 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுடாத களிமண் கொண்ட கற்களா நீங்கள் கூறுவது?அவை நீண்ட காலம் நிலைத்திருக்குமா ?

சுட்ட மண் உறுதியாயினும் சுடாத மண்சுவர்களும் நூற்றாண்டுகள் நிலைத்துள்ளன. இது தவிர சீமெந்துச் சுவர்கள் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்பதைக் கட்டட வல்லுனர்கள் இருந்தால் கூறுங்கள்.<_<
மேலுள்ள படத்தில் காட்டப்படுவது சுடாத மண் கல் !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.