Jump to content

மண் வீடு


Recommended Posts

அமுக்கப்பட்ட மண்கற்கள் மழையில் இலகுவாகக் கரைந்து விடாது.  இவற்றின் மேற்பரப்பு இறுக்கமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதால் நீர் இலகுவாக உள்ளே நுளைய முடியாது. ஆபிரிக்காவில் இவற்றைக் கொண்டு வெளி மதில்கள் அமைக்கப்படுகின்றன. 

இவற்றின் திணிவு சீமெந்துக் கற்களை விட அதிகமாக இருப்பதுடன் கட்டப்படும் சுவர்கள் அதிகம் தடிப்பாகவும் இருப்பதால் சிறந்த ஒலித் தடுப்பாற்றலையும் வெப்பத் தடுப்பாற்றலையும் கொண்டுள்ளதுடன் உடைப்பதும் கடினமானதாக இருக்கும்.

சுவரை அமைக்கும்போது கீழுள்ள முறையில் கற்களை அடுக்கி தடிப்பான சுவரை அமைக்க வேண்டும். சிலர் இரண்டு கற்களாக அடுக்குவதற்குப் பதிலாக மூன்று கற்களாகவும் அடுக்குவார்கள். வெளிப்புறத்தில் வரும் மூன்றாவது அடுக்கினை இவ்வாறு அழகாக அடுக்கிக் கொள்ளலாம்.
mur5-boutisse.jpg

இக் கற்களை அரிந்து கொள்வதற்குக் கையால் இயக்கப்படும் இயந்திரத்தை ஐரோப்பிய நாடுகளில் சுமார் 800 முதல் 5000 யூரோக்களுக்கு வாங்க முடியும். விலைக்கேற்றவாறு இயந்திரங்களின் திறனும் மேறுபடும். கீழுள்ள இந்த இயந்திரத்தை 3 பேர் சேர்ந்து - ஒருவர் மண்ணை நிரப்பவும் இன்னொருவர் அமுக்கம் செய்யவும் மூன்றாமவர் கற்களை அடுக்கவும் ஒரு நாளில் 400 கற்களை உருவாக்கிக் கொள்ளலாம். 
https://www.youtube.com/watch?v=QtlFTwKnzdA
சிலர் மண்ணுடன் 5 வீதம் சீமெந்தையும் சேர்த்துக் கொள்கின்றனர்.

இந்தக் காணொலியில் மின்சார இயந்திரம் இலகுவாகவும் விரைவாகவும் கற்களை உருவாக்குவதைப் பார்க்கலாம். இவ்வகை இயந்திரம் ஒன்றின் விலை ஏறத்தாள 7000 முதல் 15000 யூரோக்கள் ஆகும்.
https://www.youtube.com/watch?v=mSWx21P6xZg

இக் கற்கள் வர்த்தக முறையில் தயாரிக்கப்பட்டு அதிக விலைக்கு ஐரோப்பாவில் விற்கப்படுகின்றன. 

எனது தெரிவு 100 வீதம் இயற்கையானதும் இலவசமானதுமான Adobe கற்களே. இன்று யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் மாடி அற்ற சாதாரணமான விசாலமான வீடொன்றைக் கட்டிக்கொள்ள Adobe கற்கள் பொருத்தமானவை. 

அடுத்ததாகச் சுவருக்கு அழகையும் பாதுகாப்பையும் தரும் பூச்சுக்களைப் பார்ப்போம்.

- தொடரும்

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
On 6 février 2017 at 6:21 PM, ஜீவன் சிவா said:

பதிலுக்கு நன்றி இணையவன் 

முயற்சியில் உள்ளேன் - தேவைப்படும்போது உங்களிடமும் தொழில்நுட்ப உதவி கோருவேன்.

வெற்றிபெற்றால் பகிருவேன்.

உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.
எனக்குத் தெரிந்த அளவு நிச்சயமாக உதவுகிறேன்.

வெற்றியோ இல்லையோ உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள், யாருக்காவது பயனுள்ளதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • 9 months later...

நீண்ட இடைவேளைக்குப் பின் எனது சிறு அனுபவத்துடன் மீண்டும் தொடர்கிறேன். :11_blush:

தொடர்வதற்கு முன் இது இன்னொரு உதாரணம். சீனாவில் அமைக்கப்பட்ட மண் வீடு. இதில் 5 வீதம் சீமெந்து பாவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
china-house.jpg

சில வருடங்களுக்கு முன்னர் மண் கட்டுமாண முறைகளைப் பற்றி அறிய முற்பட்டபோது நானும் அதனைச் செய்து பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. புதிதான வீடு கட்டும் அளவுக்கு வசதியும் நேரமும் இல்லை. ஆகவே ஒரு சுவர் மட்டும் கட்டிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.:11_blush:

அறை ஒன்றில் ஏற்கனவே உள்ள சீமெந்துச் சுவருக்கு உட் பக்கமாக இன்னொரு சுவரை மண்ணால் கட்டுவதற்குத் தீர்மானித்தேன். ஒன்றுக்கும் பயனில்லாமல் அறைக்குள் இருக்கும் சுவருக்கு மேல் இன்னொரு சுவர் கட்டுவது பைத்தியக்காரத் தனம் என்று நீங்கள் கருதலாம். இதோ விளக்கம்.

மண்ணானது வெப்பத்தை உறிஞ்சி மெதுமெதுவாக வெளிவிடும் ஆற்றல் உள்ளதாகப் பார்த்தோம். inertie thermique என்று பிரெஞ்சு மொழியில் சொல்வார்கள். குளிர்காலத்தில் இந்த உட்சுவரை மெதுவாகச் சூடாக்கினால் அதன் வெப்பம் இந்த அறையை வெப்பமாக வைத்திருக்கும். வீட்டைச் சூடாக்கும் ரேடியேற்றர்கள் பிரதானமாக இரண்டு விதமாக இயங்கும். 

1 - Convection - றேடியேற்றர் சூடாகி அதன் அருகிலுள்ள வளியைச் சூடாக்க, சூடான காற்று மேல் எழ, குளிரான காற்று றேடியேற்றரை நோக்கி நகரும். இது சுழற்சியாக நடக்கும்.

2 - Radiation - றேடியேற்றரின் வெப்பமான மேற்பகுதியிலிருந்து வெப்பக் கதிர்வீச்சு தெறித்து அக் கதிர் தொடும் பொருளைச் சூடாக்கும். 

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி இசைக்கலைஞன் 

 

Convection மூலம் சூடாக்குவதற்கு ரேடியேற்றரை அதிக வெப்பமாகச் சூடாக்க வேண்டும். வெப்பத்தைக் குறைக்க வேண்டுமானால் றேடியேற்றரின் அளவைப் பெரிதாக்க வேண்டும். இப்படியே றேடியேற்றரின் அளவைப் பெரிதாக்கியபடி வெப்பத்தைக் குறைத்துக் கொண்டு சென்றால் ஒரு கட்டத்தில் றேடியேற்றர் காற்றை வெப்பமாக்கும் திறனை இழந்துவிடும். கதிர்வீச்சு மூலம் மட்டும்தான் வெப்பமாக்கும். அறையின் ஒரு சுவர் அளவில் ஒரு றேடியேற்றர் உள்ளதாகக் கற்பனை செய்து பாருங்கள். அதனை சுமார் 25 - 28 °C ற்குச் சூடாக்கினால் போதுமானது.

Convection மூலம் அறை ஒன்றின் வெப்பநிலையை ஏறத்தாள 19°C யில் வைத்துக் கொள்வோம். கதிர்வீச்சு மூலம் அதே அறையை 15 °C யில் வைத்திருந்தால் போதுமானது. ஏனென்றால் அறைக்குள் இருப்பவர் மீது வெப்பக் கதிர் படும்போது வெப்பத்தை உணர்ந்து கொள்வார்.

அடுத்து, செய்முறையைப் பார்ப்போம்.

- தொடரும்

Link to comment
Share on other sites

இதுதான் திட்டம்.
ஏற்கனவே இருந்த வெப்பத் தடுப்பை மேலும் இன்னொரு வெப்பத் தடுப்பை அமைப்பதன் மூலம் வெப்பம் விரயமாதலைத் தடுத்தல். அதன்மேல் அலுமினியத் தாள்களால் ஆன தடுப்பொன்றை அமைத்தல். இந்தத் தாள்கள் பளபளப்பாக இருப்பதால் மண்சுவரிலிருந்து வெளியாகும் வெப்பக் கதிர்களைத் தெறிக்க வைத்து மீண்டும் அறைப் பக்கமே திருப்பிவிடும். அதன்மேல் நீர்க் குழாய் ஒன்றை வளைவுகளாகப் பதித்து மண்ணினால் மூடுவது.

 

mur-detail.png

அறை வீட்டின் கூரைப் பகுதியில் இருந்ததால் சுவரின் ஒரு பகுதி சரிவாக உள்ளது. அடுத்து சூடாக்கப்பட வேண்டிய சுவர், ஜன்னலைப் பார்க்கும் படி இருக்கக் கூடாது. ஜன்னல் கண்ணாடியூடாக வெப்பக் கதிர்வீச்சு வெளியேறும் என்பதால் ஜன்னல் இருக்கும் சுவரையே தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது. அத்துடன் மாடியில் அமைந்திருந்ததால் சுவரைத் தாங்கும் பலம் உள்ளதா என்றும் கவனிக்க வேண்டும். இந்த அறையின் தரைப்பகுதியானது இச் சுவருக்குக் குறுக்காக தீராந்திகள் அடுக்கப்பட்டு சீமெந்தினால் கட்டப்பட்டதால் பிரச்சனை இல்லை. சுவரின் நிறையான சுமார் 1400 kg இனைத் தாங்கும். தரையின் தீராந்திகள் சுவரின் நீளப்பாட்டுக்கு வத்துக் கட்டப்பட்டிருந்தான் தாங்குவது கடினம்.

chauffage_mur_01.jpg

இதோ துளைகள் போடப்பட்டிருக்கும் இந்தச் சுவர்தான், வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயனுள்ள விடங்கள் இதுவைக்கும் இந்த திரியை நான் கவனிக்கவில்லை ....... நன்றிகள் இணையவன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஊரில் உள்ள கணிமண் கால போக்கில் 
மழை நீரில் கரைவதுண்டு ...
எப்படி கரையாமல் தடுப்பது ? 

Link to comment
Share on other sites

On 16 décembre 2017 at 7:35 AM, Maruthankerny said:

எமது ஊரில் உள்ள கணிமண் கால போக்கில் 
மழை நீரில் கரைவதுண்டு ...
எப்படி கரையாமல் தடுப்பது ? 

சுவரில் நேரடியாக மழைநீர் படாமல் கூரையை வடிவமைக்க வேண்டும். அல்லது நீர் படும் இடங்களில் மட்டும் களிமண்ணுடன் நீமெந்தையும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். சிலர் இயற்கையில் கிடைக்கும் கற்களையும் சேர்த்துக் கட்டுவார்கள்.

சீனப் பெருஞ்சுவரின் பெரும் பகுதி ஆரம்பத்தில் களிமண்ணால் அமைக்கப்பட்டது. சில வருடங்களின் பின்னர்தான் செங்கல் பாவிக்க ஆரம்பித்தார்கள்.

Link to comment
Share on other sites

வெப்பத் தடுப்பைத் தாண்டி சீமெந்துச் சுவரில் துளையிட்டு புரியுள்ள நீளக் கம்பிகள் பொருத்தப்பட்டன. 

chauffage_mur_04.jpg

ஏற்கனவே என்னிடம் மேலதிகமான வெப்பத் தடுப்புகள் இருந்ததால் அவற்றைப் பாவித்துள்ளேன். 

chauffage_mur_06.jpg

அதன்மேல் அலுமினியத் தாள்களால் மூடப்பட்டது. மிகக் குறைந்த விலையுள்ள தாள்களைப் பயன்படுத்தலாம். 1 சதுர மீற்றர் 2.5 யூரோவிற்குக் கிடைக்கும். சுமார் 10 சதுர மீற்றர்கள் தேவைப்பட்டன.  

chauffage_mur_07.jpg

இதன்மேல் சுவரில் பொருத்திய கம்பிகளை இணைத்து உலோகப் பட்டைகள் பொருத்தப்பட்டன.  இது அவசியமற்றது. என்னிடம் இது இருந்ததால் பாவித்தேன். இல்லையேல் கட்டடங்களில் பாவிக்கப்படும் சாதாரண இரும்புக் கம்பி வலை அல்லது சிறிய பலகைகளைப் பொருத்தலாம். 

chauffage_mur_10.jpg

சுண்ணாம்புத் தகடுகளும் என்னிடம் இருந்தபடியால அவற்றை உலோகப் பட்டைகளில் வைத்துச் சிறிய ஆணிகளால் பொருத்தப்பட்டது. இதுவும் தேவையில்லாதது.

chauffage_mur_12.jpg

சுண்ணாம்புத் தகட்டின் மேல் சுடுநீர்க் குழாய் வளைவாகப் பொருத்தப்பட்டது. இக் குழாய்களின் உட்புறமும் வெளிப்புறமும் பிளாஸ்டிக்கால் ஆனது. இடையில் அனுமினியம் உள்ளது. ஆகவே குளாயை இலகுவாக வளைக்கலாம். வளைத்தபின் குழாய் நேராகாமல் அப்படியே வளைவுடன் இருக்கும். 16 மில்லிமீற்றர் விட்டமுள்ள 50 மீற்றர் நீளமான குழாய் 40 யூரோக்களுக்கு வாங்கலாம். இதனைச் சுவற்றுடன் இணைக்கும் சிறு தகடுகளும் ஆணியும் 4 யூரோக்கள். சுண்ணாம்புத் தகடு பதிக்காவிட்டால் நேரடியாகக் கம்பி வலையில் அல்லது பலகையில் வைத்துக் கம்பியால் அல்லது நூலினால் கட்டலாம்.

chauffage_mur_14.jpg

chauffage_mur_15.jpg

தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலுக்கு சுண்ணாம்பு பூச்சு பூசினால் நீண்ட காலத்துக்கு பாதிப்பு வராது....!

Image associée

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2017 at 2:13 PM, இணையவன் said:

எனது மிகச் சிறிய அனுபவம் ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்றோ ஒரு நாள் 100 வீதம் இயற்கையான பொருட்களைக் கொண்டு நானே ஒரு வீடு கட்டிக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையையும் ஆவலையும் இந்த அனுபவம் தந்துள்ளது.

சார் கட்டத்தொடங்கின வீடு கட்டி முடிஞ்சுதா?
பால் காய்ச்சியாச்சா? 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.