Jump to content

ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்த நோக்கியா 6


Recommended Posts

ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்த நோக்கியா 6

 

எச்எம்டி நிறுவனம் மிக எளிமையாக அறிமுகம் செய்த நோக்கியா 6, முதல் பிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 
ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்த நோக்கியா 6
 
பீஜிங்:
 
எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் முதல் பிளாஷ் விற்பனை இன்று நடைபெற்றது. சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் முன்பதிவிலேயே மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் இன்று துவங்கிய முதல் பிளாஷ் விற்பனையில் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் ஒரு நிமிடத்திலேயே விற்று தீர்ந்தது. முழுமையாக எத்தனை சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்த தகவல் வழங்கப்படவில்லை. எனினும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க 10 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். 
 
நோக்கியா 6 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2.5D கொரில்லா கிளாஸ்,  குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மூலம் இயங்குகிறது. 
 
6000 சீரிஸ் அலுமினியம் யுனிபாடி வடிவமைப்பு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டனுடன் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் பிளாஷ், மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/19214525/1063123/Nokia-6-sold-out-in-a-minute-on-launch-day.vpf

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

விற்பனையில் அசத்தும் நோக்கியா 6... நிறை குறைகள் என்னென்ன? #GadgetScan #Nokia6

நோக்கியா 6

ந்திரன் - 2, பாகுபலி - 2...இந்த ரெண்டுல, எதன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கு எனக் கேட்டால்,  நோக்கியா - 2 மேலதான் என்கிறார்கள் டெக்கீஸ். அப்படி ஒரு ரீ-என்ட்ரி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் நோக்கியா ரசிகர்கள். அவர்களை இந்த முறை ஏமாற்றவில்லை நோக்கியா. பிப்ரவரியில் நடைபெறவிருந்த MWC 2017- ல் மீண்டும் மொபைல் சந்தையில் நுழையும் என எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா அந்த எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி இப்பொழுதே ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது. நோக்கியா தனது, நோக்கியா 6 என்ற ஸ்மார்ட்போனை கடந்த 13- ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்தது.

முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 5 லட்சத்தை தொட்ட முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, அடுத்த சில நாட்களில் 1 மில்லியனை தாண்டியது.19- ம் தேதி முதல் விற்பனை தொடங்கிய ஒரு நிமிடத்தில், அனைத்து போன்களும் விற்றுத் தீர்ந்தன..ஒரு நிமிடத்தில் 1 லட்சம் போன்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது இந்த போன். 

நோக்கியா 6

இந்த வாரம் பிலிப்பைன்ஸில் விற்பனையைத் தொடங்கிய நோக்கியா விரைவில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும். நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், நீண்ட காலத்திற்கு பிறகு வெளியாகும் நோக்கியா மொபைல் என இதற்கு பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. இது தவிர வேறு வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன? நோக்கியா 6-ன் நிறை குறைகள் என்ன?

1. 5.5 இன்ஞ்  IPS FHD (1080 x 1920)  டிஸ்ப்ளே.

2. கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு.

3. 64 - பிட் ஸ்நாப்டிராகன் 430 MSM8937 ஆக்டாகோர் பிராஸசர்.

4. 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி இன்டர்னல் மெமரி.

5. மெமரி கார்டு மூலமாக மெமரியை 128 ஜி.பி வரை அதிகரித்து கொள்ளும் வசதி.

6. 16 மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் முன்புற கேமராவைக் கொண்டுள்ளது.

நோக்கியா

7. டூயல் சிம் மற்றும் 4G LTE வசதி இருக்கிறது.

8. ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம்.

9. 3,000 mAh திறன் கொண்ட பேட்டரி.

10. ஆனால் USB 3.0 TYPE C ,NFC, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் இதில் மிஸ்ஸிங்.

11. நோக்கியாவின் அடையாளமான "இணைந்த கைகளை" சிறிய மாற்றத்தோடு அப்படியே இதிலும் பயன்படுத்துகிறது.

12. பழைய நோக்கியா ரிங்டோன் மாற்றம் இல்லாமல் அப்படியே இருக்கிறது.

நோக்கியா

13. நோக்கியாவின் கட்டுமான தரம் இதிலும் அப்படியே இருக்கிறது. வால்நட்களை நோக்கியா 6 போன் மூலம் உடைத்து சாப்பிடும் வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரல்.

இதன் இந்திய விலையை இன்னும் நோக்கியா அறிவிக்கவில்லை. ரூ 15000-18000 இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது,

முதல் போன் என்றாலும், ரசிகர்களை ஏமாற்றவில்லை நோக்கியா. தனது மொபைல் சந்தையை மீண்டும் பிடிக்க, முழு உத்வேகத்துடனேயே களம் இறங்கியுள்ளது. அடுத்த மாதம் 26- ம் தேதி பல ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது நோக்கியா.. அதில் பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவான ஒரு மொபைலும் அடக்கம். அதிக நிறைகள் இருந்து, சில குறைகள் இருந்தாலும் இப்பொழுது அனைவரும் கூறுவது ஒன்றுதான் "வெல்கம் பேக் நோக்கியா".

 

http://www.vikatan.com/news/information-technology/79224-nokia-6-review.art

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நோக்கியா அதிரடி ஆரம்பம்: நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 அறிமுகம்

பதிவு: பிப்ரவரி 26, 2017 23:32

 
 

அனைவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக நோக்கியா நிறுவனம் பல்வேறு புதிய ஸ்மார்ட்ரோன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

 
 
 
 
நோக்கியா அதிரடி ஆரம்பம்: நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 அறிமுகம்
 
பார்சிலோனா:
 
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா நாளை முதல் துவங்க இருந்தாலும், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இன்றே அறிமுக விழாக்களை நடத்த துவங்கியுள்ளன. பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா அறிமுக விழா ஏற்கனவே அறிவித்ததை போன்று நடத்தப்பட்டது. 
 
நீண்ட இடைவெளிக்கு பின் தொழில்நுட்ப சந்தையில் கால் பதிக்கும் நோக்கியாவின் ஸ்மார்ட்போன்களை எச்எம்டி குளோபல் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. பின்லாந்தை சேர்ந்த எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 
 
நோக்கியா 3310:
 
909C9B39-BD01-4BD3-90CF-6B277933AF77_L_s
 
ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஏற்கனவே சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நோக்கியா 3310 பீச்சர்போனினையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய மேம்படுத்தல்களுடன் காட்சியளிக்கும் நோக்கியா 3310 நான்கு கவர்ச்சிகர நிறங்களில் கிடைக்கிறது. ஒரு மாத கால பேட்டரி ஸ்டான்ட்பை, பழைய கிளாசிக் ஸ்நேக் கேம்  உள்ளிட்டவை கொண்டுள்ள புதிய நோக்கியா 3310 EUR49 அதாவது இந்திய மதிப்பில் ரூ.3448.62 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
புதிய மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பில் 2.4 இன்ச் வளைந்த திரை, சூரிய வெளிச்சத்திலும் திரையை துல்லியமாக பார்த்து இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அழகிய புஷ் பட்டன்கள், 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 
 
இத்துடன் 2ஜி கனெக்டிவிட்டி, புதிய யூஸர் இன்டர்பேஸ், எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், 16 எம்பி இன்டெர்னல் மெமரிஸ மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 3310 சிங்கில் சிம் மற்றும் டூயல் சிம் என இரண்டு வித மெமரிக்களில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
நோக்கியா 3310 உடன் நோக்கியா ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள. அந்த வகையில் மூன்று நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுவரவான நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். 
 
நோக்கியா 3:
 
7245D9BF-F534-49E8-865F-3F52D55DECE2_L_s
 
5.0 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் டிரைவ் வசதியும் வழங்கப்படுகிறது. 
 
புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா டிஸ்ப்ளே பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 2560 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. நான்கு நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 
 
நோக்கியா 5:
 
3B01C8BC-D566-48FD-9DAB-D9536B78F294_L_s
 
5.2 இன்ச் 1280 x 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 2ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 
 
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 
 
நோக்கியா 6:
 
1FFEA1F9-E635-4665-90E3-F0A5048D0884_L_s
 
5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், மற்ற நிறங்கள் கொண்ட மாடல்களில் 3 ஜிபி ரேமும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், ஆர்ட் பிளாக் நிறம் கொண்ட மாடலில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து நிறம் கொண்ட மாடல்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 
 
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/26233211/1070612/Nokia-3310-Reboot-Nokia-3-Nokia-5-Nokia-6-Art-Black.vpf

Link to comment
Share on other sites

நோக்கியா 3310 ஸ்மார்ட்ஃபோன் விலை என்ன தெரியுமா? #Nokia3310

Nokia 3310

2017-ம் ஆண்டுக்கான மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் பார்சிலானோவில் தொடங்கியது. இந்த விழாவில் சாம்சங் நிறுவனம் எஸ் 8 மாடல் மொபைலை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நோக்கியா நிறுவனம் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3. நோக்கியா 3310  ஆகிய மாடல்களை அறிமுகம் செய்தது. இந்திய மதிப்பில்  நோக்கியா 6 விலை தோராயமாக ரூ 16,100,  நோக்கியா 5-ன் விலை ரூ 13,300 , நோக்கியா 3 மாடலின் விலை ரூ9,700, நோக்கியா 3310 மாடலின் விலை ரூ 3,400 என நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது.

http://www.vikatan.com/news/information-technology/82102-nokia-introduces-3310-smartphone-at-mobile-world-congress.html

Link to comment
Share on other sites

நோக்கியாவின் கிளாஸிக் 3310 இஸ் பேக்... ஸ்னேக் விளையாட தயாரா!? #Nokia3310

நோக்கியா

உலகம் முழுவதும் உள்ள மொபைல் போன் பிரியர்கள், குறிப்பாக நோக்கியாவின் பல்லாண்டுகால ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்டு மொபைல்கள், நோக்கியா 3, 5 மற்றும் 6 ஆகிய மூன்றும் 16 வருடங்களுக்கு முன்பு அறிமுகம்செய்யப்பட்டு, விற்பனையில் சாதனைபடைத்த நோக்கியா 3310-ன் மேம்படுத்தப்பட்ட மொபைல், நேற்று பார்சிலோனாவில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

பொதுவாக கிரிக்கெட் மேட்சுகளையும், சில சமயங்களில் டென்னிஸ், பாட்மின்டன் போன்ற மற்ற சில விளையாட்டுகளின் நேரலைகளையும்  மட்டுமே பார்க்கும் பலர், நேற்று பார்சிலோனாவில் நடைபெற்ற 'மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்' என்னும் வருடாந்திர தொழில்நுட்பக் கண்காட்சியின் நேரலையைப் பார்த்திருப்பார்கள். அதற்கு ஒரே காரணம், நோக்கியா! ஆம், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறி, தனது மொபைல் பிரிவை மைக்ரோசாஃப்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விற்ற அதே நோக்கியா, HMD Global என்னும் நிறுவனத்தின் மூலம் மீண்டும் மொபைல் போன் சந்தைக்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நாம் பெரிதும் எதிர்பார்த்துவந்த நோக்கியா 3310 மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் நோக்கியா 3, 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய 4 புதிய மொபைல்கள், நேற்று அறிமுகம்செய்யப்பட்டன. 

நோக்கியா 6

சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தி 23 நொடிகளில் விற்றுத்தீர்ந்த அதே நோக்கியா 6-ன் சர்வதேச மாடல், நேற்று வெளியிடப்பட்டது. 5.5 இன்ச் முழு HD திரையுடன்கூடிய கொரில்லா கிளாஸ், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசசர் உடன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரோமையும் இது கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 16 மெகாபிக்சல் பின்புற கேமராவையும், 8  மெகாபிக்சல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. இந்த மொபைலில், இரண்டு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதால், மிகச் சிறந்த ஒலியைக் கேட்க முடியும். மேலும், இதன் ஒலிபெருக்கிகள் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தில் இயங்குவதால், 3டி ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும்.  மேட் ப்ளாக், சில்வேர், டேம்பேர்ட் ப்ளூ மற்றும் காப்பர் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை, தோராயமாக 16,000 ரூபாய் இருக்கும் என்கிறார்கள்.

 

நோக்கியா 5

நோக்கியா 5, 5.2இன்ச் HD IPS திரையையும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசசர் உடன் 2ஜிபி ரேம், 16ஜிபி ரோம் மற்றும் முறையே 13 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் பின்புற மற்றும் முன்புற கேமெராக்களைக்கொண்டுள்ளது. கூகுளின் பிரத்யேக அசிஸ்டன்ட் இதில் இயங்கும் என்பது சிறப்பு. மேட் ப்ளாக், சில்வர், டேம்பேர்ட் ப்ளூ மற்றும் காப்பர் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை, தோராயமாக 13,000 ரூபாய் இருக்கும் என்று கருதப்படுகிறது.

 

 

 

நோக்கியா 3

நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல்களிலேயே குறைத்த திறன்கொண்ட மொபைல் இதுதான். பாலிகார்போனேட் மற்றும் அலுமினியத்திலான கட்டமைப்புடன்கூடிய  5இன்ச் திரையையும் மீடியாடேக் 6737 ப்ராசசர் உடன் 2ஜிபி ரேம், 16ஜிபி ரோம் மற்றும் 8 மெகாபிக்சல் முன்புற மற்றும் பின்புற  கேமராக்களைக் கொண்டுள்ளது. இதன் விலை, தோராயமாக 9,500 ரூபாய்  இருக்குமென்று கருதப்படுகிறது.

 

 

நோக்கியா 3310

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த, 16 வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி கோடிக்கணக்காக எண்ணிக்கையில் விற்பனையான, உலகின் பிரபலமான மொபைல் நோக்கியா 3310 மீண்டும் பல்வேறு புதிய வசதிகளுடன் 22 மணிநேர டாக்டைம் மற்றும் ஒரு மாதத்துக்கு ஸ்டாண்ட்-பையில் இருக்கும் பேட்டரி திறனையும் கொண்டுள்ளது. 2.4இன்ச் வண்ணத் திரையுடன் மேம்படுத்தப்பட்டுள்ள இது, 16 MB நினைவகத்தையும் மற்றும் 2MP கேமெராவையும் கொண்டுள்ளது. மேலும் பழைய நோக்கியா ரிங்டோனும், ஸ்னேக் கேமும் இதில் உள்ளன. வார்ம் ரெட், எல்லோ, டார்க் ப்ளூ மற்றும் கிரே ஆகிய நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை, தோராயமாக 3,500 ரூபாய்  இருக்குமென்று கருதப்படுகிறது.

 

 

நோக்கியா 6,5 மற்றும் 3 ஆகிய மூன்று மொபைல்களும் சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்பான 7.1.1 நௌகட்டில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. நோக்கியா 6 மற்றும் 5,  3000 mAh பாட்டரியையும், நோக்கியா 3,  2650 mAh பாட்டரியையும் கொண்டுள்ளது. மேலும் இந்த நான்கு மொபைல்களும் இரண்டாவது காலாண்டில் அதாவது ஏப்ரல்-ஜூன் மாதத்துக்குள் உலகம் முழுவதும் விற்பனைக்கு வருமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய நிகழ்ச்சியில்... நோக்கியா, தான் உருவாக்கிய உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தின் முன்னோட்டத்தையும் அதன் வருங்கால இலக்குகளையும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/information-technology/82122-nokia-is-back-with-classic-3310-model.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்

 

 
 

நோக்கியா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி இணையத்தில் வெளியாகியுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் தகவல்களும் கசிந்துள்ளது.

 
 
 
 
நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்
 
எல்சிங்கி:
 
அனைவரும் எதிர்பார்த்தை போன்று எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை உலக சந்தையில் அறிமுகம் செய்தது. சமீபத்தில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில் நோக்கியாவின் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பீச்சர் போனான 3310 மேம்படுத்தப்பட்ட புதிய வடிவமைப்பில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 
 
பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய நோக்கியா பீச்சர் மற்றும் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதே விழாவில் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்கள் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. 
 
EDEE00F6-A1DE-43CF-85C3-0DE68C4E58CE_L_s
 
இந்நிலையில் தற்சமயம் கிடைத்துள்ள புதிய தகவல்களில் இரண்டு வித அளவுகளில் நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.   
 
சீனாவில் இருந்து வெளியாகியுள்ள புதிய தகவல்களில் 4ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் என இரு வித மெமரி கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இவை ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் இவற்றில் யுனிபாடி மெட்டல் வடிவமைப்பு கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. எனினும் இதன் டிஸ்ப்ளே அளவு குறித்து எவ்வித தகவலும் இல்லை.
 
புகைப்படங்களை எடுக்க 23 எம்பி பிரைமரி கேமராவும், இரு மாடல்களில் ஒன்றில் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை சிறிய மாடல் CNY 4000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.38,600, பெரிய மாடல் CNY 4500 அதாவது இந்திய மதிப்பில் ரூ.43,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/08183443/1072591/Nokia-Flagship-Smartphone-With-Snapdragon-835-SoC.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.