Jump to content

தமிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? - விவாத களம்


Recommended Posts

வணக்கம்,

மிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? எனும் கருத்துக்கணிப்பிற்கான விவாதத்திரி

உங்கள் அபிப்பிராயங்களையும் இப் போராட்டம் தொடர்பான உங்கள் பார்வையையும் பகிருங்கள்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தன்னெழுச்சிற்கு தலை வணங்குகிறேன்.. 5.gif

இவ்வொற்றுமை, அனைத்து தமிழ் மற்றும் தமிழர் சம்பந்தப்பட்ட விடயங்களில் மிக கவனமாக விழித்திருந்து அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு, இனவழிப்பு செயல்களை இனம்கண்டு, தமிழ் இனம், மொழி, கலாச்சாரம் ஆகியன பாதுகாக்கபட வேண்டுமென விரும்புகிறேன்.

jallikkaddu.jpg

 யாழ் இணைய முகப்பில் தமிழக எழுச்சிற்கான தார்மீக ஆதரவிற்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம்,குஸ்தி எல்லாம் தமிழினக் கலாச்சாரக் கலைகள். அது அழிந்து போக விடக்கூடாது . ஆயிரமாயிரம் மேடைப் பேச்சுக்களாலும் விளம்பரங்களாலும் செய்ய முடியாததை  இவ் எழுச்சிப் போராட்டம் மிகச்சுலபமாக அடுத்த தலைமுறையிடம் கடத்தி விட்டிருக்கு. அதற்காக இந்த இளஞர்களின் போராட்டத்துக்கு தலை வணங்குகின்றேன்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் தலைமுறையின் இவ்வெழுச்சிக்கு தலை வணங்குகின்றேன்

இவ்வெழுச்சியை ஐல்லிக்கட்டு என்னும் தமிழர் பாரம்பரிய விளையாட்டின் ஒழிப்பு சார்ந்து மட்டும் பார்க்கவில்லை

 பலமுறை ஏமாற்றப்பட்ட தமிழினத்தின் குமுறலாகவும்

எல்லாவற்றின் மீட்சிக்குமான எழுச்சியாகவே பார்க்கின்றேன்

அதுவே உண்மையும்  கூட.

எழுச்சியில் பங்குபற்றியுள்ள இளைஞர்களின் பேட்டிகளில் 

அவர்கள் இதுவரை ஏமாற்றப்பட்டதும்

அவை எவை என்பதும் ஒவ்வொருமுறையும் உரக்க சொல்லப்பட்டு வருகிறது

அதில் ஈழத்தமிழரது இனப்:படுகொலையும் முக்கியமானது.


தமிழர்கள் ஒற்றுமைப்படாமல்
தமிழகம் தமிழரின் கையில் வராமல் ஈழத்தமிழருக்கு விடிவில்லை.
அதற்கான காலம் கனிந்து வருகிறது.
நன்றி மறப்பது நன்றன்று.
இதில் சீமானின் பங்கு மிக மிக அதிகம்.
நன்றி நாம் தமிழர் கட்சியினருக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பண்பாட்டு நிகழ்வைத் தடை செய்ய இவர்கள் யார்? மாணவர்கள் தொடர்ந்து கடைசிவரை போராட்டத்தைத் தொடர்வார்களா? என்ற கேள்வி உண்டு என்றாலும் தாங்களாகவே ஒன்றிணைந்தமைக்கு வாழ்த்துக்களும் ஆதரவும்.

Link to comment
Share on other sites

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்.

இளைஞர்கள் தலைவர்களாகி தமிழர்களுக்கான ஒரு நாட்டையும் உலகத்தில் உருவாக்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது இந்த ஏறுதழுவல் போராட்ட நிகழ்வு.

Link to comment
Share on other sites

இதெல்லாம் சென்ரல் பிஜேபி உள்ளே வருவதுக்கு போடும் அட்சரம் கடந்தகாலம்களில் மாணவர் போராட்டம்களை எப்படி அடக்கினார்கள் ? இப்போது முடியவில்லை காரணம் போராட்டகாரார்மீது கைவைத்தால் பன்னீர்ம் இல்லை மோடி pjb யும் இல்லை இதைவிட இரும்புக்கரம் கொண்டு அடக்க அம்மாவும் இல்லை குள்ளநரி கர்ணாநிதி கடைசி தேர்தலில் வேண்டிக்கட்டின தாக்கத்தில் இருந்து மீளவில்லை அப்படி மீண்டாலும் யார் தலிவர் எனும் பிரச்சினை தமிழ்நாட்டு சதுரங்கம் இப்படி எப்படித்தான் ராஜாவை வெட்டினாலும் வெட்டுபவனுக்கு அதிக பாதிப்பு அதை யோசிக்காமல் கை வைக்க தில் வேணும் ஜல்லிகட்டு தடை அவர்கள் இதுக்காக மாத்திரம் போடுகிறார்கள் என்று நினைத்தால் அது படுமுட்டாள்த்தனம் லட்சம் விவசாய நிலம்களுக்குள்ளால் அத்துமீறி கெயின் குழாய் திட்டம் ,காவிரி நீர் உச்சநீதிமன்றம் டகால்டி விளையாட்டு விவசாயிகளின் தற்கொலைகள்,குப்பை அணுமின்நிலையம் கூடம்குளம்.தமிழ் மீனவர்கள் சாவுகள் இப்படி பலகாரனம்கள். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை மோடி சொல்கிறார் அப்படிஎன்றால் உச்ச நீதிமன்றமே நாட்டை நிர்வகிக்கட்டுமே இவர் எண்ணத்துக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஏமாறுபவன் இருந்தால்,  ஏமாற்றிக்  கொண்டே..... இருப்பவனுக்கு  கொண்டாட்டம்." என்று சொல்வார்கள்.

கடந்த மூன்று வருடமாக... ஜல்லிக் கட்டுக்கு விதித்த தடையை நீக்க ஏதாவது  செய்வார்கள்  என்று, தமிழக மக்கள்.... மாநில அரசையும்,  மத்திய அரசையும், நீதி மன்றத்தையும் எதிர் பார்த்தார்கள். :unsure:

ஒவ்வொரு தைப்பொங்கலுக்கு மட்டுமே.... இதனை விவாதப் பொருளாக்கி.... கடைசியில், கைவிரித்துக் கொண்டு இருந்ததை, அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த தமிழக மக்கள், இனி.... இவங்களை நம்பி பிரயோசனம்  இல்லை என்ற முடிவுக்கு.... வந்து,  அந்தப் போராட்டத்தை  எந்த அரசியல் கட்சிகளும் உள் நுழைந்து, குழப்பியடிக்காமல் இருக்க, ஆரம்பத்திலேயே... அவர்களை அதில் தலையிட வேண்டாம் என்று சொல்லி, தொடங்கிய போராட்டம், நல்ல ஆரம்பம்.:)

நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று,  நம்பிய நீதிமன்றமே...   
"உனக்கு  காளையை... அடக்க விருப்பம் என்றால், முதலில்.... சிங்கத்தை அடக்கு"
என்ற.... கேனைத்தனமான  கேள்வி, அனைத்து.... தமிழக மக்களையும், உசுப்பி விட்டது. :shocked:

குறிப்பிபிட்ட  சில மாவட்டங்களில்... மட்டுமே நடந்து கொண்டு இருந்த,  ஏறு தழுவுதல் விளையாட்டை.... இனி.....தமிழகம் முழுவதும்  விளையாட வைக்க, அத்திவாரம் போட்ட....  பீட்டா அமைப்பிற்கும்,  அரசியல் வாதிகளுக்கும், நீதிமன்றத்துக்கும் நன்றி. :grin:

இனி... எந்த விடயத்திலும் தமிழனை, எவராலும்.... ஏமாற்ற முடியாது. என்பதனை.... இந்த, ஜல்லிக்கட்டு  போராட்டம், கட்டியம் கூறி நிற்கும் என்பது... நிதர்சனமான உண்மை.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாக்குப்பதிவு திரும்ப திரும்ப வாக்களிக்கும் வண்ணம் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது..

தயவுசெய்து திருத்தியமைக்கவும்!

Link to comment
Share on other sites

எனது பார்வை, வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில் நான் கூறக்கூடியது. உணர்ச்சிபூர்வமான காரியங்களை விட அறிவுபூர்வமான காரியங்களே பயன்மிக்கவை.

நாங்களும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் தமிழ் மக்கள் கனடா டொரோன்டோ மாநகரில் அமைதியான முறையில் மனிதச்சங்கிலி செய்தோம். எமக்கு இவை எல்லாம் புதினமான விடயங்கள் இல்லை. மாணவர் சக்தி மாபெரும் சக்தி... இந்த வாசகங்கள் இதனையும்விட உணர்ச்சிகரமான வாசகங்களை எல்லாம் கடந்து வந்தது எங்கள் பாதை.

கூட்டிக்கழித்துப்பார்த்தால் சந்தில் சிந்து பாடுபவர்கள்... போராட்டங்கள் மூலம் தமது சுயலாபங்களை சம்பாதிப்பவர்கள், அப்பாவி மக்களின் உணர்வுகளை ஏணியாக பயன்படுத்தி தாம் வானத்தின் உச்சியை தொட்டுவிடப்பார்ப்பவர்கள் வாழும் உலகம் இது.

பல்வேறு விடயங்களில் உலகில் தமிழ்நாடு மிகவும் சக்தி பொருந்திய பகுதி. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவது நிச்சயம் வரவேற்கத்தக்கது. அதேசமயம், யதார்த்தம் புரியவேண்டும், தமது எல்லைகள் எவை என்பது தெரியவேண்டும். ஆழமறியாமல் காலை விடக்கூடாது. நாங்கள் பட்ட அல்லல்களை தமிழ்நாட்டு மக்களும் அடையக்கூடாது. இந்தவகையில் நிதானம் அவசியம். போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கபடாதவண்ணம் கவனம் செலுத்தவேண்டும்.

வெளிமாநிலத்தவர், மத்திய அரசை குறைபிடிக்கமுன்னர் தமிழ்நாட்டிலேயே உள்ள திருட்டுக்கும்பல்களை இனம்கண்டு புறக்கணிக்கும் பக்குவம் மக்களிற்கு ஏற்படவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் முறையான தலமையை தெரிவுசெய்து, முறையான அரசை உருவாக்கி இருந்தால் இப்படியான பிரச்சனைகள் எல்லாம் ஏற்பட்டு இருக்காது. வந்தவன், வருபவன் எல்லாம் தானும் தன் கட்சியும் ஆட்சிக்கு வந்து, அதிகாரத்தை பிடித்து என்னத்தை புடுங்கிக்கொண்டு போகலாம் எனும் திருட்டு மனநிலையில் இருக்கும்போது மக்களின் நலன்களில் ஆட்சிபீடத்தில் அமர்ந்து இருப்பவர்களுக்கு எங்கே அக்கறை வரப்போகின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு அழிக்க்கிறேன்...இவ்வளவு காலம் தாழ்த்தியாவது நாங்கள் தமிழர்கள் அடக்கு முறைக்கு எதிராக போராட வேண்டும் என்ட உணர்வு இவர்களுக்கு வந்ததே வரவேற்க தக்கதொரு மாற்றம்

Link to comment
Share on other sites

உண்மையில் உயிரின சித்திரவதைகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் முதலில் தடை செய்யப்பட வேண்டியது ஈழத் தமிழ் மண்ணிலும், வைத்தியசாலைகளிலும்  எல்லைக்கிராமங்களிலும் பல சித்திரவதைகளை, படுகொலைகளை, பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிவரும் ஒழுக்கமற்ற இந்திய இராணுவக் கும்பலை தான்.

இரண்டாவது தமிழின அழிப்புக்கு பெரும் துணை போகும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலைகளுக்கு சில தசாப்தங்களாக பெரும் துணை போகும் இந்திய அரச நிர்வாகத்தை தடை செய்ய வேண்டும். 

இது போன்ற மனித உயிர்களை அழிக்கும் கும்பல்கள் ஒன்றிணைந்து மிருகவதை என்ற பெயரில் தமிழரின் பாரம்பரிய வீரவிளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை தடை செய்திருப்பதை வன்மையாக எதிர்க்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, போல் said:

உண்மையில் உயிரின சித்திரவதைகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் முதலில் தடை செய்யப்பட வேண்டியது ஈழத் தமிழ் மண்ணிலும், வைத்தியசாலைகளிலும்  எல்லைக்கிராமங்களிலும் பல சித்திரவதைகளை, படுகொலைகளை, பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிவரும் ஒழுக்கமற்ற இந்திய இராணுவக் கும்பலை தான்.

இரண்டாவது தமிழின அழிப்புக்கு பெரும் துணை போகும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலைகளுக்கு சில தசாப்தங்களாக பெரும் துணை போகும் இந்திய அரச நிர்வாகத்தை தடை செய்ய வேண்டும். 

இது போன்ற மனித உயிர்களை அழிக்கும் கும்பல்கள் ஒன்றிணைந்து மிருகவதை என்ற பெயரில் தமிழரின் பாரம்பரிய வீரவிளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை தடை செய்திருப்பதை வன்மையாக எதிர்க்கிறேன்!

போல், அண்ணே...... இது, நடக்கிற காரியமா?
"பொல்லை குடுத்து,  அடி  வாங்கிக் குடுக்குற..."  பெரிய,   
"மாஸ்ரர் பிளான்"  உங்களிடம் உள்ளது  போலுள்ளது.  
அதை... இப்ப.... கசிய, வைத்து விடாதீங்க.
பாவம்.... சம்பந்தன். :grin: :D: :119_busts_in_silhouette: tw_rage:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல குமுறல்களுக்கு ஒரு இடைவெளி கிடைத்துள்ளது. அதை கெட்டியாக பிடித்துள்ளார்கள் போலிருக்கின்றது. 
பலதை அல்லது சிலதை விவாதித்து போட்டுடைக்காமல் மாணவர்கள் வழியையே பின்பற்றுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

08-1452255575-murattu-kaalai----600.jpg

 

ஜல்லிக்கட்டு - ஏறு தழுவுதலை தடை செய்யும்போது செய்யாத போராட்டத்தை இப்போது செய்வது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதுபோலத்தான் இருக்கின்றது. ஆனால் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்து ஏறு தழுவுதலை அனுமதிக்கவேண்டும்.

நல்ல கொம்பு சீவின முரட்டுக்காளையை அடக்க இதே மாதிரி இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னுக்கு வருவார்களா??

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று நான் ஆதரவு அளிக்கின்றேன்.

பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது:


எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே,
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
 

 

உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். லட்சம் லட்சமாக நாங்கள் வீதியில் இறங்கி போராடின போது எங்களுக்கு நீதி வழங்க ஒருவரும் முன் வரவில்லை,  பதிலாக சில சுயநலவாதிகள் அதை தங்கள் லாபதிக்காக இதனை பயன்படுத்திக் கொண்டார்கள். வாக்குறுதிகளை நம்பாதீர்கள். தீர்வை கையில் எடுத்துக் கொண்டு போராட்ட களத்தை விட்டு விடை பெறுங்கள். அனுபவம் கற்றுத்  தந்த பாடங்கள் பல.

Image result for விருமாண்டி images

Link to comment
Share on other sites

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

Link to comment
Share on other sites

2 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

நீங்கள் கூறுவதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் உலகம்முழுவதிலும் இதை விட படு மோசமாக நடக்கும் விலங்கு வதைகளை தடை செய்யாமல் இதைத் தடை செய்ய கங்கணம் கட்டி நிற்பது ஏன்? தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட கோபம் நியாயமானது. 

Link to comment
Share on other sites

3 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

இதே கேள்வியை உங்களால் ஸ்பானிஸ் மாடு பிடி வீரர்களிடம் கேட்க்க முடியுமா ?

அதுவும் அங்கு கடைசியாக மாடு கொல்லப்படும் அதுதான் தங்கள் பாரம்பரியம் என்று திமிராகவே சொல்வார்கள் மாட்டுக்கு முதல் குதிரை போட்டிகள் அதில் காயமடையும் குதிரைகள் ஆண்டொன்றுக்கு அறுபது வீதம் மாட்டுக்கு முதல் குதிரை ரேஸ் அதை தடைபன்னிட்டு மாட்டுக்கு வாங்கோ முடியாது பீட்டாவின் கண்ணுக்குள் தமிழ்நாட்டின் முன்றாரை லட்சம் கோடி புழங்கும் பால் விற்பனை இந்த வருமானத்துக்கு அவர்கள் இடும் மூலதனம் வெறும் பத்து ஆயிரம்  கோடி மிகுதி லாபம் அவர்களின் கண்ணுக்குள் குத்துவது அதனாலேயே இந்த ஆட்டம் இன்னும் விளக்கம் ஆக என்றால் ஊரில் நாய் வளர்ப்புக்கும் இங்கு நாய் வளர்ப்புக்கும் உள்ள சிலவு அதாவது இங்கு நாய் வளர்க்க ஆசைபட்டால் இங்கு நாய் உணவு உற்பத்தி பண்ணும் முதலாளியுடன் நீங்கள் இணைந்து போகணும் இல்லை மிஞ்சிய சோத்தை போட்டு ஊர் போல் வளர்க்க வெளிகிட்டால் நாய்க்கு சுகமில்லாமல் வந்துவிடும் நாய் வளர்க்கும் காலம் மட்டும் நாய் உணவு முதலாளிக்கு நீங்கள் அடிமை அது போல் ஊர் மாட்டு இனத்தை அழிப்பதுக்கு ஜல்லிகட்டு தடை போட்டால் வெளிநாட்டு மாடு இலகுவாக பரவி விடும் பின்பு அதற்க்கு தேவையான உணவு உற்பத்தி செய்பவர்களிடம் மறைமுகமாக அடிமைபடவேண்டி வரும் அத்துடன் அந்த jc மாடுகள் பராமரிப்பு செலவு கூட.

3 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல

இந்த கருத்து சிரிக்க வைக்குது இப்படியெல்லாம் ஜோக் அடிக்க எப்படி உங்களால் சுய சிந்தனை உள்ளவர்கள் இப்படி அடிக்க மாட்டார்கள் .

Link to comment
Share on other sites

5 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

மாட்டுக்கும் மனிதர்போன்ற உணர்ச்சிகள்தான் உண்டு என்பது போன்ற புரிதலில் வெளிப்படுவதுதான் இத்தகைய கருத்துகள். அந்த மாடுகள் ஒரு நாள் இப்படி ஓடுகின்றன. மிகுதி 364 நாட்களும் இது போன்ற எதுவும் நடப்பதில்லை.

அப்படிப் பார்த்தால் மேலை நாடுகளில்கூட காவல்துறையினர் குதிரைகள் மீது ஏறி பயணிக்கிறார்கள் தினந்தோறும். அது சகிக்கமுடியாத வன்கொடுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பார்த்தால் பல  உயிரினங்கள் மனித விளையாட்டுகளில்  துன்புறுத்தப் படுகிறது. மனிதனை மனிதன் அடிப்பது- குத்துச் சண்டை, உடனும் இல்லாவிட்டாலும், இதன் விளைவுகள் பாரதூரமானவை. ஏன் தடை செய்ய வில்லை என கேள்வி கேட்க முடியுமா? பல பண முதலாளிகளின் மனிதக் கட்டு. 

தமிழர்கள் (இந்துக்கள்) மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. பசு தெய்வத்திற்கு ஈடானது. பண்டைய  நாகரிக வளர்ச்சியில் பசுவின் பங்கு அளப்பரியது. அதன் இனப் பெருக்கம் காளை மாடு இல்லாமல் நடக்காது. காளை உழவுக்கு, ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல இனப் பெருக்கத்துக்கும் முக்கியமானது. ஜல்லிக் கடடை நிறுத்தி விட்டால், காளைகளை வளர்ப்பது குறைந்து விடும். இதன் மூலம் உள்ளூர் பசுக்களின் உற்பத்தியும் குறைய வாய்ப்பு உள்ளது. ஊசி மூலம் உற்பத்தி  செய்யலாம், இது உழவர்களின் கையில் இல்லை. பசு இனப்பெருக்கம் பெரிய கொம்பனிகளின் கைகளில் போய் விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில சொல்லறதுக்கு என்ன இருக்குது.நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மாற்றான் தீர்மானிக்க முடியாது.எனது முழுமையான ஆதரவு எப்பவும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாவும் இல்லை.. மணியும் இல்லை ..

 

gingee_fort_16_08_14_127.jpg

எங்கட வீட்டில் 50 மாடுகள் இருந்தன  போக 20 எருமை மாடுகள் .. எப்படி அழிந்தது எல்லாம் ..? வனத்துறை பாதுகாப்பு சட்டம் .. விளையாட்டில் வெற்றி பெற்ற மாடுகளின் கழுத்தில் ஒரு மணியை கட்டி போடுவம் ... அவனுக்கு ராஜா என்று பெயர் வைத்து அழைப்போம் .. கும்பலாக காட்டிற்குள் விடியற்காலையில் அனுப்பிவிட்டால் அந்தி சாயும் நேரம் அந்த மணியின் ஒசை கேட்டு திரும்ப அழைத்து வருவம் ..அந்த முழு நாளுக்கும் மற்ற மாடுகளின் பாதுகாப்பிற்கு ராஜாதான் கேரண்டி .. இடையில் சிலது நரி அடித்தது . குள்ள நரி அடித்தது என்று விட்டு போட்டாலும் கூட .. இயற்கை சுழற்சி என்று விடுவம்.. ஒழுங்கா வீடு வந்து சேர்ந்தது .. இன்று என்ன நிலைமை ?

டிஸ்கி :

அட முட்டாள் பய மக்களா ! நீங்கதான் வனவிலங்கு பட்டியிலில் சேர்த்து போட்டீர்கள்  அல்லவா ..?அப்போ ஒரு வன விலங்கு தன்னுடய வனபகுதியில் மேய்ச்சலுக்கு செல்வதில் என்ன குறை கண்டு கொண்டீர்கள் ..? ஒரு மாட்டிற்கு வனபகுதியில் மேய்வதற்கு ஏன் தினம் ரூபாய் 50 லஞ்சம் கேட்கிறீர்கள் .. ? !@#$%^&*()

 

Link to comment
Share on other sites

16 hours ago, manimaran said:

நம்மிடையே பொதுவில் மிருகங்களுக்கான உரிமை தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு மனிதர்களுக்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏறுதழுவுதல் நிகழ்வின் போது ஒரு விலங்கை பல மனிதர்கள் பெரும் சத்தத்துடன் துரத்திச் சென்று அதனை வெருள மிரள  வைத்து அதனை பலர் இரசிப்பதை எனது பண்பாடு என்று சொல்லி பெருமைப்படுவது எந்தவகையில் என்பது புரியவில்லை. 

இதில் உண்மைகள் இல்லாமல் இல்லை. ஆனால் யதார்த்தம் வேறானது.

வலிமை பெற உருவான பயிற்சிகள் அனைத்தும் சில கடின செயற்பாடுகளைக் கொண்டவையே! அவற்றை கொடுமைப்படுத்தல் என்று சொல்லிவிட முடியாது.

மிருக கொடுமைகள் பற்றி விவாதிப்பவர்கள் சகல மாமிச உணவுகளையும், பால் முட்டை முதலான உணவுப் பொருட்களையும்  தவிர்த்துவிட்டு விவாதிக்க வேண்டும். தயாரா?

இந்த பீட்டா அமைப்பினர் KFC முன்னாலோ, இறைச்சிக்கடைகள் முன்னாலோ, மீன் சந்தைகளின் முன்னாலோ ஆர்ப்பாட்டம் செய்வதில்லை!

Link to comment
Share on other sites

ஒரு தவறு இன்னொரு தவறை நியாயப்படுத்தாது.

இங்கு இரண்டு விடயங்கள்

ஒன்று இந்து 'மதம்' பிடித்தவர்கள் தமது ஆதிக்கத்தை தமிழகம் மீது காலம் காலமாக திணிக்க முயல்வது தொடர்ச்சியான அத்தகைய திணிப்பின் எதிர்விளைவாக மெரீனா எழுச்சியைக் கருதலாம். 

இரண்டாவது களியாட்ட நிகழ்விற்காக இயற்கையின் இன்னொரு படைப்யை துன்புறுத்துவது. அதனை நியாயப்படுத்த பல்வேறு காரண காரியங்களை அடுக்கிக் கொண்டு செல்வது. 


ஆடு மாடுகளை உலக்கையால் அடித்து இறைச்சிக்காக கொல்வது விலங்கு உயிருடன் இருக்கும்போது அதன் கழுத்தில் துளைபோட்டு இரத்தம் எடுத்து இரத்தவறை செய்து சுவைப்பது உயிருடன் வைத்து பறவைகளின் செட்டைகளை உரித்து அவற்றை துடிக்க துடிக்க கொலைசெய்து அவற்றை உண்பது என்பவற்றுடன் ஒப்பிடும் போது ஏறுதழுவும் போது காளை மாடு படும் துன்பம் அற்பமானதே. அதனால் தான் என்னவோ நமக்கு அதன் துன்பம் தெரிவதில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.