Jump to content

இலங்கை அகதிகளுக்கு உதவியளிக்க தமிழக திரைப்படத்துறை முன்வருகை


Recommended Posts

இலங்கை அகதிகளுக்கு உதவியளிக்க தமிழக திரைப்படத்துறை முன்வருகை

-நிதி சேகரிக்க நட்சத்திர நிகழ்ச்சிக்கு திட்டம்

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடனும் அகதிகளின் புனர்வாழ்வுப் பணிகளுக்கு நிதி சேகரிக்கவும் சென்னையிலுள்ள திரைப்படத்துறையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிணைப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிவாஜிலிங்கம், எஸ். அரியநேத்திரன், எஸ். பத்மநாதன் ஆகியோர் தமிழ்நாட்டின் திரைப்படத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களுடன் சந்திப்புகளை நடத்தியிருக்கின்றனர். நடிகர் சங்கத்துடனான இந்தச் சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சிரேஷ்ட நடிகை மனோரமா, எஸ்.எஸ். சந்திரன், அப்பாஸ் ஆகியோருடனேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.

இவர்களில் சரத்குமாரும், எஸ்.எஸ். சந்திரனுடன் நடிப்புத் தொழிலுடன் அரசியலிலும் ஈடுபட்டிருப்பவர்களாகும்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் சிவாஜிலிங்கம், தமிழ்நாடு பூராகவும் நட்சத்திர நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்நிகழ்ச்சிகள் மூலம் கடந்த ஒரு வருடத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்திருக்கும் 2 இலட்சத்து 10 ஆயிரம் அகதிகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ் நட்சத்திரங்கள் வீதிக்கு இறங்கி இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் அட்டூழியங்களை கண்டித்து பேரணிகளை நடத்தும் போது 1983 இன் நிலைமைக்கு விரைவில் தமிழகம் வந்துவிடுமெனவும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

இதற்கு முன்பாகவே விடுதலைப் புலிகள் தமிழக திரைப்படத்துறையுடன் தொடர்புகளை உருவாக்கியுள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்றுத் தெரிவித்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வன்னியில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா ஆகியோரை சந்தித்திருக்கிறார்.

http://www.thinakkural.com/news%5C2007%5C2...s_page21120.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முன்பாகவே விடுதலைப் புலிகள் தமிழக திரைப்படத்துறையுடன் தொடர்புகளை உருவாக்கியுள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்றுத் தெரிவித்தது.

Pro-LTTE Lankan party ropes in TN film industry

The pro-LTTE Tamil National Alliance (TNA) has roped in the Chennai film industry to increase awareness of the Sri Lankan Tamil problem among the people of Tamil Nadu, and to collect money for the rehabilitation of Tamil refugees in Sri Lanka.

Three TNA MPs, MK Sivajilingam, S Ariyanethiran and S Pathmanathan, met leading figures of the Tamil Nadu film industry at the Nadigar Sangam (Actors' Guild) in Chennai on February 6.

Among the stars present were Sarath Kumar, President of the Nadigar Sangam; veteran actors Manorama and SS Chandran; and the latest heart throb, Abbas. Sarath Kumar and SS Chandran combine political activism with acting.

"The meeting decided to organise Star Nites all over Tamil Nadu to collect money for the 210, 000 Tamil refugees displaced by the war in the past one year," Sivajilingam told Hindustan Times on Friday.

"Soon, it might be like Tamil Nadu of 1983, when Tamil film stars got on to the streets and led processions condemning the atrocities committed by the Sri Lankan state against the Tamils," he said.

LTTE hosts top film directors

Even prior to this, the LTTE had created links with the Tamil Nadu film industry.

Prabhakaran, who would refuse to meet special envoys from the West and Japan, readily gave an audience to two leading Tamil film directors, Mahendran and Bharathiraja, in his hideout in the Wanni some time ago.

Prabhakaran is a film buff, but he prefers Western action films to romantic and soppy Tamil films and Clint Eastwood is his favourite.

However, he knows the importance of popular Tamil films as an instrument of propaganda.

Bharathiraja told Prabhakaran that he was like Netaji Subhas Chandra Bose, which would have immensely pleased the Tiger chieftain because Subhas Bose is his role model.

Director Mahendran followed up his visit by sending his son John Mahendran to direct a full-length colour feature film.

The film Aaniver (Tamil for 'main root' but used as an equivalent of 'sheet anchor') was shot entirely in the LTTE-controlled Wanni with the blessings and backing of the LTTE in 2006.

The stars, Nanda and Madhumita, were from Tamil Nadu, as were the technicians.

The film, about the experiences of a young Tamil Nadu lady journalist in the war-torn Sri Lankan North East, had brought out the tragedy of the rape and murder of the Jaffna school girl, Krishanthi Kumaraswamy, in 1996, and the exodus of people from Jaffna to the Wanni in 1995.

Aaniver was shown publicly in Canada and Europe to expatriate Sri Lanka Tamil audiences, but not in Tamil Nadu or Sri Lanka.

http://www.hindustantimes.com/news/7598_19...00500020002.htm

Link to comment
Share on other sites

துவேசம் மிக்க சில இந்திய பத்திரிகைகள் எதற்கெடுத்தாலும் புலிச்சாயம் பூசி அதை கெடுப்பதற்கு ஆயுத்தமாகி விடுவார்கள். இது வழமையான அவர்களது பாணி.

என்னவோ நடக்குது.........! நடக்கட்டுமே......... ஆனால் அது எதுவுமே புரியல்ல.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக நடிகர்கள் அக்கறை கூட்டணியினரை வரவேற்று பேச்சு நடத்தினர்

தமிழகத்துக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக சினிமாத் திரையுலகக் கலைஞர்களால் வரவேற்கப்பட்டிருக் கின்றனர். நீண்ட மௌனத்துக்குப் பின்னர் தமிழகத் திரையுலகம் ஈழத் தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டத் தொடங்கியிருப்பதை இது காட்டுவதாக ஈழத்தமிழ் அனுதாபிகள் கூறுகின்றனர்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். கே. சிவாஜி லிங்கம், எஸ். அரியநேத்திரன், எஸ். பத்மநாதன் ஆகியோரை தமிழகத் திரையுலகம் வரவேற்றுக் கலந்துரையாடியது.

இவ்வரவேற்பு விழாவும் சந்திப்பும் அண்மையில் நடிகர் சங்கப்பணிமனையில் இடம்பெற்றது.

இவ்விழா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

இவ்வரவேற்பு நிகழ்வில் நடிகர் சங்கத் தலைவர் நடிகர் சரத்குமார், பழம்பெரும் நடிகை மனோரமா, இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன், இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன், நடிகர் விஜயகுமார், நடிகரும் அ. தி. மு. கவைச் சேர்ந்த அரசியல்வாதியுமான எஸ். எஸ். சந்திரன் மற்றும் இளம் நடிகர் அப்பாஸ் உட்பட இன்னும் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ஈழத்தில் தமிழ் மக்கள் படும் துன்பங்களை தமிழ்த் திரைத்துறையினருக்கு எடுத் துச் சொல்லும் ஒரு வாய்ப்பாக இவ்விழா பயன்பட்டது.

மனோரமா சொன்னது

நீண்டநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் களோடு உரையாடிய திரையுலகத்தினர் அனைவரும் தங்களின் ஆதரவினை ஈழ மக்களுக்கு தெரிவித்துக் கொண்டனர்.

குறிப்பாக நடிகை மனோரமா, ""இவ்வளவு இன்னல்களையும், துயரங்களையும் அங்கு எமது தமிழ் மக்கள் அனுபவிப்பது பற்றி எங்களுக்கு எதுவுமே தெரிய வரவில்லை. நிச்சயமாக தமிழ் மக்களின் போராட்டம் வெற்றிபெற வேண்டும்'' என்று கவிஞர் காசி ஆனந்தனிடம் கூறினார்.

- சூரியன்

Link to comment
Share on other sites

குறிப்பாக நடிகை மனோரமாஇ ""இவ்வளவு இன்னல்களையும்இ துயரங்களையும் அங்கு எமது தமிழ் மக்கள் அனுபவிப்பது பற்றி எங்களுக்கு எதுவுமே தெரிய வரவில்லை

மனோரமா கூறியதை பாருங்கள்

தனக்குஇதுநாள்வரைதெரியாது என்கிறார் இதைதான் நான் சொல்லவருவது நம்மவர்களின் பரப்புரை போதாது மூலைமுடுக்கெல்லாம் நம்மவர்கள் பரப்பரை செய்யவேண்டும் அதுசிறியவிடயமாக இருப்பினும்

Link to comment
Share on other sites

இப்படியான முனேடுப்புக்களை குழ்ப்புவதுக்கு சதி ஒன்று நடக்கிறதாக தெரிகிறது.

அதுவும் இந்தியாவில் இருந்து ஆயுத கடத்தல் என்று தொடங்கிய செய்தி இன்று யாரோ பெரிய புள்ளி ஒன்றை போட்டு தள்ள புலிகள் திட்டம் என்ற மாதிரி செய்தி வர தொடங்கி விட்டது.....

Link to comment
Share on other sites

உவர் ரஜனியின் தமையனார் ஒரு தமிழினத்திற்கு எதிரான ஒரு ஆளாம். தெரியுமுங்களோ. நீங்க நம்புவீங்களோ இல்லையோ. படையப்பா பார்த்ததிற்கு அப்புறமா டிவியிலும் சரி தியேட்டரிலும் சரி ஒரு புது படம் பார்த்ததில்லை. ஆனா 1975 ஆம் ஆண்டு உலகம் சுற்றும் வாலிபன் நம்மட வாத்தியார் எம்.ஜி.ஆர் ஓட படம் பார்க்கத்தொடங்கி இன்று 2007 , 32 வருடங்கள் வேலையால் விசர் பிடிச்சு வந்தா இப்பவும் போட்டுப்பார்ப்பேன். ஏன் அந்த படம் நான் 1977 ல் முழு டய்லொக்கே ஒரு வரி விடாம 25 தடைவைக்கு மேல் அப்பவே பார்த்து கொப்பியிள எழுதிற .விசுவாசி.ஏன் எண்டா அந்தாள் எப்பவும் ஒண்டு எழைகளோடு தான் வாழ்ந்து அனியாயம் செய்பவனை தட்டி அடிக்கிறமாதிரி நியத்திலேயும் செய்து காட்டி விட்டு எமது தமிழர்க்கும் இருந்த காசுகளை அள்ளி எறிந்தாரு. இப்ப எல்லாம் தலை இப்ப எங்கட சனம் அள்ளி எறியுது. அவர்கள் 40 கோடி- 50 கோடி எண்டு வேண்டி தங்களுக்கு கொடி வாண்டி அரசியல் கட்சி ஆரம்பிச்ச்சுப்போட்டு அல்வா குடுப்பீனம். நாங்களும் இழிச்சவாயநாத்து அவர் படம் வர ஓடிப்போய் பார்ப்பொமுங்க. பாப்பம் இப்ப என்ன செய்யப்போகிரார்கள் எமது தமிழீழ ம்க்களுக்கு. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.