Jump to content

காதலர் தினம் கொண்டாடுவது சரியா ? தவறா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கத்தைத் தேடி நீங்கள் போக வேண்டும் என்றால் ஆன்மீகத்தை நாடுங்கள். சொர்க்கம் உங்களைத்தேடி வரவேண்டும் என்றால் காதலை நாடுங்கள் அந்தக் காதல் பூமியில் ஏற்றுக் கொள்ளப்படுகிற போது வானத்தில் ஒரு நட்சத்திரம் உதிக்கின்றது.

மனித உரிமையில் முதல் உரிமை காதலிக்கும் உரிமையாக; பாவத்தின் சம்பளம் மரணம் புண்ணியத்தின் சம்பளம் காதலாக மலர்கின்றது.

காதலை நேசிக்க மறந்தவர்களை, ஒரு போதும் நேசிப்பதும் இல்லை; காதலிப்பது வலிமையைக் கொடுக்கிறது. காதலிக்கப்படுவது தைரியம் தருகிறது ஒருவரை நேசிக்க ஆரம்பிக்கும் போதுதான் உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் ஆசைகள் வெளிவரத் தொடங்கும்.

அப்போதுதான் உலகத்தின் முதல் பரிசுப்பொருளாய் அமைந்ததும் பூக்கள்தான். பரிமாறிக்கொண்டவர்களும் காதலர்கள்தான்

காதலர் தினத்தில் மட்டுமில்லை ஒவ்வொருநாளும் காதலர் தினமாய் மனதில் காதல் தீபம் ஏற்றி கொண்டாடுவோம்.

அன்பே சிவம் காதலே சக்தி.

காதலர் தினம் கொண்டாடுவது சரி என்பதே என் அபிப்பிராயம்.

கருத்துக்கள் முன் வைத்த அனைவருக்கும் நன்றிகள்.

கறுப்பி அக்கா பிரித்தானியாவில் மட்டும் 21 மில்லியன் றோஸ்களும் இன்னும் பல மில்லியன் சொக்கிலேட் பார்களும் பல மில்லியன் பெறுமதியான நகைகளும் விற்றுத்தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக ஆண்கள் ரெம்பவே வழிஞ்சு வழிஞ்சு வாங்கிக் கொடுக்க பெண்கள் நல்லா வாங்கி அனுபவிக்கிறாங்க என்று பிபிசி கவலைப்பட்டிச்சு. இப்படி பிசினஸ் பெருக வேணும் என்றால் காதல் சொர்க்கத்தைக் காட்டும் என்று பரப்புரை செய்யத்தான் வேணும். நீங்கள் செய்யுங்கோ.

தனிமனித ஆளுமையைக் காதல் தட்டி வளர்க்கும் என்பதிலும் ஒரு பெண் மீது அல்லது ஆண் மீது ஏற்படும் ஈர்ப்பே அவனின் அல்லது அவளின் ஆளுமையில் செல்வாக்குச் செய்கிறது. அதற்காக காதல் சொர்க்கத்தைக் காட்டும் என்பதும் காதலர் தினம் கொண்டாடுவது சொர்க்கத்தின் வாசலைத் திறக்கும் என்பதும் சுத்த முட்டாள் தனமாகவே எமக்கு தென்படுகிறது. காதல் வாழ்வின் குறித்த ஒரு பருவத்தில் தொடங்கி முடிவுவரை ஒருவரோடு மட்டும் நிலைப்பின் மட்டுமே அது மகிழ்வானது. காதல் என்ற பெயரில் மாப்பிள்ளை தேர்வு அல்லது பெம்பிளை தேர்வு நடத்துவது காதலுக்கு அர்த்தம் புரியாத மனித எண்ணங்களின் வெளிப்பாடு. :P <_<

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

ஓ அப்படியா அது சரி உங்கள் காதலர் உங்களுக்கு என்ன வாங்கிதந்தவர் :P

இதுகள நம்பி எப்படி வாங்குறது? வழிய வழிய வாங்கி தந்து போட்டு, பிறகு அங்கால போய் சொல்ரது, என் பேஸை காலி செய்து விட்டார்கள் என்று...உந்த வேலையே எங்களுக்கு வேண்டாமப்பா...விருப்பமெண்டால

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அப்பாட பணத்தை மட்டும் எதிர்பார்க்கிறீனம். யாழில தட்ட ஏலுற கை ஏன் உழைக்க மாட்டுதோ..?! அல்லது அம்மாட்ட அவாட சொந்த உழைப்பில இருந்து வாங்கிக்கிறது. அப்பா என்ன அடிமாடா. உழைச்சுப் போட்டிட்டே இருக்க...! அம்மாவும் பிள்ளைகளும் இரை மீட்க. அப்புறம் இங்க வந்து ஆண்கள் மீது ஏறி விழ.

வேண்டிக் கொடுத்தா வாங்கிக்குவினம். வேண்டிக் கொடுக்க யாரும் இல்லைப் போல. 50 பவுணுக்கு வேண்டினா 5 பவுணை நீட்டிறதுதான் பெண்களின் புத்தி..! இதுக்குள்ள தலைக்கணம் வேற. காசுக்கு மட்டும் அப்பா வேணும் மற்றும் படி அவர் ஆண்..! :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

ஏன் அப்பாட பணத்தை மட்டும் எதிர்பார்க்கிறீனம். யாழில தட்ட ஏலுற கை ஏன் உழைக்க மாட்டுதோ..?! அல்லது அம்மாட்ட அவாட சொந்த உழைப்பில இருந்து வாங்கிக்கிறது. அப்பா என்ன அடிமாடா. உழைச்சுப் போட்டிட்டே இருக்க...! அம்மாவும் பிள்ளைகளும் இரை மீட்க. அப்புறம் இங்க வந்து ஆண்கள் மீது ஏறி விழ.

அப்பா வீட்டில் இருந்து எங்களுக்கு சமச்சு தந்தால் அம்மா வேலைக்கு போய் உழைத்து தருவா தானே..அப்பாக்கு சமைக்க தெரியாதபடியால், அவர் சம்பாதிக்க வேண்டி இருக்கு :P ...வீட்டில் யார் காசு சம்பாதிகிறார்களோ, அவர்களிடம் சுரண்டும் முழு உரிமையும் பிள்ளைகளுக்கு உண்டு :D ...

எனக்கு உழைக்க வேண்டிய நேரத்தில் உழைப்பேன்...இப்போ படிக்கும் நேரம், படிக்கிறேன்... :rolleyes:

வேண்டிக் கொடுத்தா வாங்கிக்குவினம். வேண்டிக் கொடுக்க யாரும் இல்லைப் போல. 50 பவுணுக்கு வேண்டினா 5 பவுணை நீட்டிறதுதான் பெண்களின் புத்தி..! இதுக்குள்ள தலைக்கணம் வேற. காசுக்கு மட்டும் அப்பா வேணும் மற்றும் படி அவர் ஆண்..! :D:lol:

இப்பவெல்லாம், ஈசியாவும் ஓசியாவும் கிடைக்கிற ஒரே ஒரு சாமான் இந்த போய்பிரண்ட், கேர்ள்பிரண்ட் தானே...இதெல்லாம் ஒரு பிரச்சனையா? ..எங்களுக்கு என்று சில கொள்கைகள், கோட்பாடுகள், திட்டங்கள் இருக்கு...அதன் படி தான் எங்களது ஒவ்வொரு அடியும் இருக்கும்.. :rolleyes: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களிடம் சுரண்டினால் அது பெரிய பிரச்சனையே அல்ல. ஆண்கள் எப்பவும் காசு விசயத்தில் டோன் கெயர் தான். அம்மாமார் வேலைக்குப் போகாத போதும் அப்பாட சம்பளத்தை கையில கண்ட உடன பண்ணுற அதிகாரம் இருக்கே அதுவே ஓவர். இதுக்குள்ள அவர்களா உழைக்கேக்க எத்தனை மடங்கு இருக்கும். பாங் காட்டை கண்ணிலும் காட்டார்கள். பல சுய திட்டங்களைத் தீட்டிட்டு மெளனமா இருப்பார்கள். கணவன் ஏதாச்சும் கேட்டால் போதும் உடன உங்கட உழைப்பையா தாறீங்க என்று பதில் கேள்வி சூடா வரும். ஆனால் அப்பா என்ற ஆண் பாவம். அது எப்படித்தான் உழைச்சாலும் தனக்கென்று வைச்சிருக்க முதல் மனிசிட கையிலதான் கொடுக்கும்.

ஏதோ ஊரையும் உங்களையும் ஏமாற்றாத கொள்கைகளை வகுத்துக் கொள்ளுங்க. பல பிள்ளைகள் வகுத்திருக்கிற கொள்கைகள் ஊரையும் ஏமாற்றி பெற்றோரையும் ஏமாற்றி தங்களைத் தாங்களே ஏமாற்றுவதாகத்தான் அதிகம் இருக்கிறது. :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

//இந்தப் பக்கத்தையே பாருங்கள். கறுப்பி அக்கா சக்திச் செலவின்றி நேரச் செலவின்றி ஒரு நாலு வரில கேள்வி போட பக்கம் பக்கமா நிரப்பிறது சக்தி விரையமாக்கிறது யார்..??! முட்டாள் ஆண்கள்.//

அப்படி சொல்லி சொல்லி, நீங்களே மறுபடி மறுபடி பதில் எழுதுவதை தான் என்னால் பார்த்து கொண்டிருக்க முடியவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//இந்தப் பக்கத்தையே பாருங்கள். கறுப்பி அக்கா சக்திச் செலவின்றி நேரச் செலவின்றி ஒரு நாலு வரில கேள்வி போட பக்கம் பக்கமா நிரப்பிறது சக்தி விரையமாக்கிறது யார்..??! முட்டாள் ஆண்கள்.//

அப்படி சொல்லி சொல்லி, நீங்களே மறுபடி மறுபடி பதில் எழுதுவதை தான் என்னால் பார்த்து கொண்டிருக்க முடியவில்லை..

வம்புக்கு நிக்கிற மூக்கிக்கு மூக்கறுக்காட்டா முழு ம்ட்டாள் ஆக்கிடுவாங்க மொத்த ஆண்களையும். :P :D

Link to comment
Share on other sites

உங்களுக்கு உடனடி தேவை ஒரு மருத்துவர்...ஐயோ பாவாம்..

Link to comment
Share on other sites

வம்புக்கு நிக்கிற மூக்கிக்கு மூக்கறுக்காட்டா முழு ம்ட்டாள் ஆக்கிடுவாங்க மொத்த ஆண்களையும். :P :D

அறுப்பிங்க, அறுப்பிங்க! அது மட்டும் எஙகட கை என்ன புழியங்காவா பறிக்கும்? :D சீவிடுவோம்..ஜாக்கிரதை! :P வேறென்ன பகல் கனவெல்லாம் வைச்சிருக்கீங்க? :o:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு உடனடி தேவை ஒரு மருத்துவர்...ஐயோ பாவாம்..

மருத்துவர் நமக்கல்ல உங்கள் தோழி மூக்கிக்குத்தான் அவசியம். :D:D

Link to comment
Share on other sites

உங்களுக்கு உடனடி தேவை ஒரு மருத்துவர்...ஐயோ பாவாம்..

இவர் ஏற்கனவே ஒரு மனநல மருத்தவரின் கண்காணிப்பின் கீழ் தான் உள்ளார்..இருந்தாலும், அந்த மருத்துவர், இவரை எனி கடவுள் தான் காப்பாத்தவேன்டும் என்டு சொல்லீற்றார்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஏற்கனவே ஒரு மனநல மருத்தவரின் கண்காணிப்பின் கீழ் தான் உள்ளார்..இருந்தாலும், அந்த மருத்துவர், இவரை எனி கடவுள் தான் காப்பாத்தவேன்டும் என்டு சொல்லீற்றார்! :lol:

ஏன் அதே டாக்டர் உங்களுக்கும் அதையேதான் சொல்லிட்டாரோ. இல்ல எங்களுக்கு சொன்னது எப்படி உங்களுக்கு....... :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோட எல்லாம் மனநல கேஸ்ஸா?

நான் தப்பிச்சன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிச்சதே அப்படி ஒன்றுதானே கதுப்பி அக்கா. எப்படி நீங்க தப்பிக்க முடியும்..??! ஒரு மனநோயாளி தப்பிக்க மற்றதுகள் விட்டுடுங்களா என்ன..??! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தொடர்கிறது இந்த வினா????????????????

Link to comment
Share on other sites

காதலர் தினம்: மாயையும் மிகைபுனைவும் / மகிழ்வும் மனக்கிளர்வும்

1.

'...ஆண்-பெண் என்ற அங்க அடையாளங்கள் மறந்து எனது / எனக்குத் தேவையற்ற ஆண்மையை நான் களையவேண்டும். உன்னிடத்தில் நானொரு ஆணாக இருப்பதைவிட துடிக்கின்ற மென்னிதயம் கொண்ட ஒரு சக மனிதனாய் இருக்கவே என்றும் விரும்புவேன்.

இது என் நேசம் என்னும் பெருங்கடலின் சிறுதுளிதான். முழுச் சமுத்திரத்தையும் காட்ட எனக்கு இப்பிறப்பின் பின்பான மரணமும் கூடப் போதாது. உன்னிலிருக்கும் நேசத்தை எத்தனையோ நாட்களாய் எழுதவிரும்பி இன்றாவது சாத்தியமாகியிருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே. அதற்காய் இந்த காதலர் தினத்துக்கு நன்றி. நமக்கான நேசமான நாட்கள் 365 நாட்களும் எமக்காய் இருக்கின்றன என்பதை உனக்கு நினைவுபடுத்தத் தேவையும் இல்லைதானே பிரிய தோழி?'

(தோழரொருவரின் மடலொன்றிலிருந்து..)

மாயையும் மிகைபுனைவும்

காதல் - இவ்வொற்றை வார்த்தையைப்பற்றி காலங்காலமாகக் கவிஞர்களும், இன்னும் பலரும் எவ்வளவோ எழுதிக் குவித்துவிட்ட பின்னர், நானும் சொல்வதற்கு இனியும் என்னிடம் எதுவுமிருப்பதாகத் தோன்றவில்லை. இரு மனங்களிடையேயான பிணைப்பை - அவ்வுறவு என்ன பெயரால் அடையாளப்படுத்தப்பட்டாலும் (தாய்-சேய், நட்பு, கணவன்-மனைவி.. இன்னபிற) - காதலென்று அழைக்கலாமென்றே நினைக்கிறேன்.

அன்னையர் தினம், தந்தையர் தினம், மாமன் தினம், மச்சான் தினம்... என்பவற்றின் வரிசையில் தவிர்க்க முடியாத இடம் வகிக்கும் இக்காதலர் தினத்தின் பின்னணியென எங்கேயோ கேள்விப்பட்டது:

ரோமாபுரிப் பேரரசில் அரசை விஸ்தரிப்பதற்கான மாபெரும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலமாம் அது. இளைஞர்கள் எவருக்கும் திருமணம் செய்துவைக்கக்கூடாதென அரசர் பாதிரிமார்களுக்கு உத்தரவு போட்டிருந்தாராம். அனைவரது கவனமும் யுத்தம்.. யுத்தம்.. யுத்தத்தின் மீது மட்டுமேயிருக்க வேண்டுமென்பது அவரது நோக்கமாயிருந்திருக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் 'வலண்டைன்' என்ற பாதிரியார் இளைஞர் பலருக்கு இரகசியமாகத் திருமணம் செய்துவந்தமை தெரியவர, அரசர் அவரைத் தூக்கிலிட்டு விட்டாராம். அப்பாதிரியார் தூக்கிலிடப்பட்ட தினமே இன்று காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறதாம்.

கதை ஒருபுறம் கிடக்கட்டும். இவ்வாறு 'தினங்கள்' கொண்டாடுவதன் பின்னணியை எடுத்து நோக்குவோமாயின், மேற்கத்தைய உலகின் - பல்தேசியக் கம்பனிகளின் - வியாபார உத்திகளில் ஒன்றே இதுவுமென்பதை சொல்லத் தேவையில்லை. இத்தினங்களின் பெயரால் அதிகம் பேறு பெறுவது - பரிசுப்பொருட்கள் போன்றவற்றின் உற்பத்தியால் - இவை மட்டுமே. வரவிருக்கும் 'பெண்கள் தினம்' குறித்தும் விமர்சனங்கள் பலவுண்டு. இதைக் கொண்டாடுவதன் சரி, பிழைகளை விடுத்துப் பார்த்தாலும்.. இன்றைய பொழுதில் இதன் தேவையென்ன என்ற கேள்வியெழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. பெண்ணிய அமைப்புகள் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதும், கோஷமிடுவதும்.. வருடத்தில் ஒரேயொருநாள் பெண்களை கடவுளராகத் தூக்கிப் பிடிப்பதும், பிறகு தூர வீசியெறிவதும்.. பெண்களுக்காவது ஒரு நாளிருக்கிறது, எமக்கென்று என்னதான் இருக்கு.. என சில ஆண் தோழர்கள் விஷமத்தனமாகக் கேட்கும்போது, மிச்சம் 364 நாளையும் கைப்பற்றிக் கொண்டிருப்பது யாராமென்று பதிலளிப்பதுபோல.. எல்லாக் கேள்விகளுக்கும் இலகுவில் மறுமொழிகளைக் கண்டடைந்துவிட முடிவதில்லை.

2.

ஆழ்கிணற்றின் அடியாழத்திலுள்ள ஒரு வெள்ளைக்கல் போல

என்னிடத்தில் ஒரேயொரு நினைவு மட்டும்.

அதை நான் போக்க முடியாது, போக்க விரும்புவதுமில்லை.

அது ஒரு உவகை, அது வேதனையும் கூட.

எனக்குத் தோன்றுகிறது, என் கண்களை உற்றுப் பார்ப்பவருக்கு

அது தெளிவாகத் தெரியுமென்று -

சோகம் ததும்பும் கதையொன்றைக் கேட்பவரைவிட

அவர் நெஞ்சம் மேலும் கனக்கும், துயருறும்.

எனக்குத் தெரியும், கடவுளர் மனிதரைக் கல்லாக மாற்றியுள்ளனர்,

மனங்களை மட்டும் அப்படியே விட்டுவைத்து.

அந்த அற்புதமான சோகங்கள் இன்னும் எஞ்சியிருக்க வேண்டுமென்று

என் நினைவாக மாற்றப்பட்டு விட்டாய் நீ.

- அன்னா அக்மதோவா

மகிழ்வும் மனக்கிளர்வும்

(இப்படித்தான் மலர்ந்தது ஒரு தினம்...)

கடந்திருந்த ஆண்டுகளில் எத்தனையோ காதலர் தினங்களைக் கடந்துவிட்டிருக்கிறேன்.., எந்தச் சிலிர்ப்புகளும் எதிர்பார்ப்புகளுமில்லாமல். பெப்ரவரி 14 என்றாலே பதட்டமடையச் செய்வது அன்றைய தினத்தில் அணியப் போகும் ஆடைதான். குறிப்பாக எதையும் உணர்த்தாத வர்ணங்களில் உடைகளைத் தேடிப்பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். வெள்ளை தூய்மையைக் குறிக்குமென்ற நினைப்பில் அணிந்துகொண்டு போனால், தெருவில் எவனாவது சொல்லிவிட்டுப் போவான்.. "அட, vacancy இருக்கிறது போல.." பச்சை, நீலம், சிவப்பு ஆகிய நிறங்களில் கைக்குட்டை கொண்டு போனால்கூட தொலைந்தோம். நகர வாழ்க்கை அப்படி.. தொல்லைகளின்றி வாழ்வதென்பது சற்றுச் சிரமம்தான்.

வாழ்வின் அதியுன்னதமான தருணமெதுவென்று உங்களைக் கேட்டால் என்னவென்று சொல்வீர்களாயிருக்கும்..? சில காலங்களுக்கு முன்னர் என்னைக் கேட்டிருந்தால்.. நட்ட நடுவிரவில் பௌர்ணமி நிலவொளியில் கடற்கரை மணலில் கால்புதைய மனதுக்குப் பிடித்த ஒருவருடன் நடப்பது, நிலவு ஒளிந்துகொண்ட கும்மிரவொன்றில் நட்சத்திரக் கூட்டங்களை எண்ணியபடி பசும்புற்றரையில் படுத்துக்கிடப்பது, 'பொன்னியின் செல்வன்' பூங்குழலியைப்போல புயல்வீசுமோர் நாளில் தனித்து படகோட்டிச் செல்வது, ரஷ்ய ஸ்தெப்பி வெளியிலும், கஸாக்கியக் கிராமங்களினூடும் பட்டாம்பூச்சியாய்ப் பறந்து திரிவது, நைல் நதியின் லயத்திற்கேற்ப விரல்களால் தாளமிட்டபடி ஆபிரிக்கக் கண்டத்தின் குறுக்குநெடுக்கே அலைவதென... இப்படியே நீண்டிருக்கும் என் பட்டியல். இன்றோ, கட்டிலில் மல்லாந்து படுத்தபடி.. திறந்திருக்கும் சாளரத்தினூடாகத் தவழ்ந்து வரும் தென்றலை ஆழ உள்ளிழுத்து, மாமரத்து இலைகளின் சலசலப்பையும், அவற்றின் கிளைகளினூடே துண்டுதுண்டாகத் தெரியும் இரவு வானத்தையும், கண்சிமிட்டும் நட்சத்திரங்களையும் இரசித்தபடியிருக்கும் நடுநிசிப் பொழுதொன்றில் மனதிற்குப் பிரியமான ஒருவர் எனக்காகத் தானெழுதிய கவிதையொன்றை வாசிக்கக் கேட்பதுதான் என்பேன். அந்தத் தினம் எவ்வளவு வனப்புமிக்கதாயிருந்திருக்க

Link to comment
Share on other sites

இயந்திரமயமாகும் உலகில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் என வர்த்தக மயமாக்கப்படும் காதல்.........வேறொன்றுமில்லை. வர்த்தகம், அதனூடான பணம்.இதனை முன்னிலைப்படுத்தும் அதைக் கொண்டாடவும் வேண்டுமோ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தகம் பெருகத்தானே வேணும் நல்லாக் கொண்டாடுங்கோ. ஆனால் ரோசாப் பூக்களை மட்டும் கொய்யாதேங்கோ. ஆக்களின்ர மனங்களை கொய்து கொய்து வீசிட்டே தினமொரு காதல் செய்யுங்கோ..! :wub::D

Link to comment
Share on other sites

ஓகே ஓகே இறுதியாக என்ன சொல்ல வாறீங்க காதலர்தினம் கொண்டாடுவது அவசியம் தானா? இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினம் ஒகே,ஆனால் அதை எப்படி கொண்டாடுறது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓகே ஓகே இறுதியாக என்ன சொல்ல வாறீங்க காதலர்தினம் கொண்டாடுவது அவசியம் தானா? இல்லையா?

என்னைப் பொறுத்தவரை நாளும் அன்பா நாலு வார்த்தையைப் பரிசளிக்கிற பணியைச் செய்தாலே போதும். சிலருக்கு ஆக்களோட கதைக்கப் பேசக் கூடத் தெரியாது.. இல்ல நேரம் கிடைக்காது. அப்படிப்பட்டதுகளுக்கு இந்த நாள் அவசியம் தான். அன்றாவது அன்பாக் கதைச்சு அன்பாப் பேசி.. அன்பாப் பரிமாறி.. அன்பை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்படலாம் எல்லோ. ஆனால் அது நடக்கிறதில்ல.. அவனவன் வைன் போத்தலும்.. ஒரு ரோசாப் பூச்செண்டும் கொண்டு ஓடிறான்.. ஏனென்றால்.. காதலர் தினமாம்.. காதலியோட கப்பியா இருக்கனுமாம் என்று..! இதுகள் எப்ப அன்பைப் புரிஞ்சு.. எப்ப.. உதுகளை உணர்ந்து கொண்டாடப் போகுதுகள். நடக்காத காரியம்..!

சிலது காதலிக்கிறது முதல் எரிஞ்சு விழுகிறதையே செய்யுதுகள். ஆணும் பெண்ணும். உதுகளுக்கெல்லாம் எதற்கு காதல்..! :lol:

Link to comment
Share on other sites

யப்பா இவ்வளத்தையும் வாசிக்க எனக்கு தலை சுத்துது

கொண்டாட விருப்பமான ஆக்கள் கொண்டாடுங்கோ விருப்பமில்லாத ஆக்கள் விடுங்கோ.

பரிசு என்பது காசு செலவழிச்சுத்தான் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று இல்லை.

உண்மையான அன்பை பாசத்தை வெளிப்படுத்துங்கோ அந்தப் பரிசுக்கு

நீங்கள் எவ்வளவு காசு கொடுத்தாலும் ஈடாகாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.