Jump to content

''அதுவரை எம்தேசம் உனக்காய் அழுதிடட்டும்''


Recommended Posts

''அதுவரை எம்தேசம் உனக்காய் அழுதிடட்டும்''

தேசத்தின் தாய் மகளே

தெரு நாய்கள் உன் உடலை

கடித்து குதறி உன் உயிரை

காவு எடுத்ததுவோ...?

சுதந்திரத்தின் வீரர்களாம்

சுடுகாட்டு நரிகள் - உன்னுடலை

கண்ட துண்டமாய் வெட்டி

காட்டுக்குள் எறிந்ததுவோ....

என்ன நீ நினைத்து

என் பாடு நீ பட்டாய்..

யாரறிவார் இன்றம்மா

யான் அழுகிறேன் உனக்காய்...

தொண்டுகள் செய்திடவே

தொண்டனாகி நீ வந்தாய்- இன்று

காம குண்டர்களால்- உன்னுயிர்

காவு போனதுவே....

நினைத்து பார்க்கையிலே

நெஞ்சு வெடிக்குதம்மா

கைகள் துப்பாக்கி

காவிடவே துடிக்குதம்மா...

உன்னை

வெட்டி கொன்றவரை

சுட்டு தள்ளிடவே

சுடு கலனை தேடுதம்மா...

சிரித்த மலருன்னை

சிதை;தானே சிந்துயனே

தானுண்டு களித்திட்டு

பங்கு வேறு போட்டானே....

கலங்காதே தாய் மகளே- உன்

கண்ணீர் யாம் துடைக்க

ஏந்துகிறோம் கைகளிலே

ஏ.கே. யை நாங்களின்று....

வானத்தில் அன்றிருந்து

வாய் விட்டு நீ சிரி- உன்னை

பங்கு போட்டவர்களை

பந்தாடி யாம் போவோம்...

அதுவரை எம் தேசம்

உனக்காய் அழுதிடட்டும்

- வன்னி மைந்தன் -

பிறேமினிக்கு எமது கண்ணீர் சமர்ப்பணம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.