Jump to content

10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்த கோழி வறுவல் வீடியோ..!


Recommended Posts

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமிய சமையல்கள் எல்லாம் நல்லதுதான்.....ஆனால் இது கொஞ்சம் ஓவர்....

Link to comment
Share on other sites

  • 6 months later...

வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி... 6 மாதங்களில் ரூ.6.5 லட்சம் சம்பாதித்த ஆறுமுகம்!

 
 

ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் நேரத்தை நாம் வீணாகச் செலவழித்துக்கொண்டிருக்க, டெக்னாலஜியை முறையாகப் பயன்படுத்திய 60 வயதுடைய ஆறுமுகம், பண மழையில் குளித்துக்கொண்டிருக்கிறார். அண்மைக்காலங்களில் ஃபேஸ்புக்கில் விதவிதமாக உணவு சமைக்கும் வீடியோக்கள் அடிக்கடி தென்படுவதைப் பார்த்திருப்போம். `வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி' என்ற பெயரில் யூடியூப் சேனலைத் தொடங்கிய ஆறுமுகம், ஆறே மாதங்களில் ஆறரை லட்சம் ரூபாய் சம்பாதித்திருக்கிறார்.

திருப்பூரைச் சேர்ந்த ஆறுமுகம், அசைவம் சமைப்பதில் கில்லாடி. கைப்பக்குவத்துடன் விதவிதமாக ருசியாகச் சமைப்பார். ஆறுமுகத்தின் மகன் கோபிநாத், சில தமிழ் சினிமாக்களில் பணியாற்றியிருக்கிறார். 

சமையல் கலைஞர் ஆறுமுகம்

தந்தையின் சமையல் திறமை, கோபிநாத்தை சற்று சிந்திக்கவைத்தது. தன் தந்தையின் சமையல் கலையை உலகம் முழுக்கக் கொண்டுசேர்க்க முடிவுசெய்தார். 26 வயதே நிரம்பிய கோபிநாத்தின் சிந்தையில் உருவானதுதான்  வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி. இதுவரை 42 வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. மூன்று கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. தற்போது 66 ஆயிரம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். அதில் 50 ஆயிரம் பேர் 20 நாள்களில் இணைந்தவர்கள். முழு ஆட்டை அப்படியே அவித்து சமைப்பதும் 300 முட்டைகளை வைத்து முட்டை கிரேவி சமையல் செய்த வீடியோவும் செம வைரல்.  

ஆறுமுகத்தின் சமையல் வீடியோக்கள் இந்த அளவுக்குப் பிரபலமடைய காரணமும் இருக்கிறது. தமிழக சமையல்களில் அரேபிய ஸ்டைலில் முழு கிடாவை அப்படியே அவிக்கும் பழக்கம் இல்லை. அப்படிச் சமைக்கவும் பலருக்குத் தெரியாது. ஆறுமுகம் முழு ஆட்டுக்கிடாவை அவித்து, சமையல் செய்வது வித்தியாசமாக இருப்பதுடன் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. கிராமத்துப் பின்னணியில் பச்சைப் பசேலென்ற இடத்தில் சமையல் செய்வதும்  அதே இடத்தில் வாழை இலையில் ஆறுமுகம் சாப்பிடுவதும்கூட ரசிக்கவைக்கிறது.  மாட்டிறைச்சி சுக்கா, இறால் ஃப்ரை, குடல் கறி, வாத்துக்கறி, நாட்டுக்கோழிக் கறி என இவர் சமைக்கும்விதமே நாக்கில் எச்சில் ஊறவைத்துவிடுகிறது. 

முழு கிடா சமையல் செய்யும் காட்சி

ஆபீஸில் மீட்டிங் போட்டு, `இன்றைக்கு என்ன செய்யலாம்?' என விவாதிப்பதுபோல, ஆறுமுகத்தின் குடும்பம் இன்றைக்கு என்ன உணவு சமைக்கலாம், எப்படிச் சமைக்கலாம் என விதவிதமாகச் சிந்திக்கிறது. வாரத்துக்கு ஒரு வீடியோவை யூடியூபில் அப்லோடு செய்கின்றனர். யூடியூப் சேனல் தொடங்கிய முதல் மாதத்தில் 8,000 ரூபாய்தான் வருவாயாகக் கிடைத்திருக்கிறது. அடுத்த மாதம் 45 ஆயிரம் ரூபாய். அதற்கு அடுத்த மாதத்தில் வருவாய் ஒரு லட்சம் ரூபாயாக உயர, ஆடிப்போனார் ஆறுமுகம். `நம்மளே சமைச்சு நம்மளே சாப்பிடுறதுக்கு எங்கிருந்தோ பணம் கொட்டுகிறதே' என வியந்தும்போனார். மகனின் அறிவை நினைத்து மெச்சினார். 

ஒரு மாதத்தில் 3.10 லட்சம் ரூபாய் வரை  வருவாய் கிடைத்திருக்கிறது. தற்போது, எட்டு நாள்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வருவாயாகக் கிடைக்கிறது. ஆறுமுகத்தின் சகோதரர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். இவர் மட்டுமே பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தார். கூகுள் அட்சென்ஸிலிருந்து  பணம் கொட்ட, இப்போது ஆறுமுகமும் அம்பானி ஆகிவிட்டார். தான் ஒரு யூடியூப் செலிபிரட்டி என்றெல்லாம் ஆறுமுகத்துக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் சமையல் மட்டும்தான். 

சமையல் முடித்து சாப்பிடும் ஆறுமுகம்

ஆறுமுகத்தின் மகன் கோபிநாத் கூறுகையில், ``சில சினிமாக்களில் பணியாற்றினேன். அந்தப் படங்கள் வெளியாகவில்லை. வாழ்க்கையே போராட்டமாகிப்போனது. திருப்பூரில் கேபிள் ஆபரேட்டராகப் பணிபுரிந்தபோது, வீடியோ எட்டிட்டிங் படித்தேன். சென்னையில் பணிபுரியும்போதுதான், யூடியூப்பில் வீடியோக்கள் அப்லோடு செய்வதும் அதன் வழியாகப் பணம் சம்பாதிப்பதும் தெரியவந்தது. தந்தைக்காக யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என முடிவெடுத்தேன்.  தந்தையின் சமையல் திறமையை உலகறிய வைக்க விரும்பினேன். எந்தப் பணியிலுமே கஷ்டப்பட்டால்தான் வெற்றிபெற முடியும். இதிலும் அப்படித்தான். விதவிதமாகச் சிந்திக்க வேண்டும். வீடியோ ஷூட்டிங் செய்யக்கூடிய இடங்கள் தேர்வுசெய்வது சவால் நிறைந்தது. பெரும்பாலும் அழகான தனியார் பண்ணைத் தோட்டங்களில் அனுமதி வாங்கி வீடியோ எடுப்போம். யூடியூப்பில் ஆயிரம் வீடியோக்கள் பதிவேற்றுவது எங்கள் லட்சியம்''  என்கிறார்.

முழு கிடா சமையல்

 

கிடாக்கறி, மாட்டுக்கறி, பொரித்த மீன்களை ஆறுமுகம் வெட்டுவதைப்  பார்த்துவிட்டு ``இந்த வயதிலும் இப்படிச் சாப்பிடுகிறாரே... உடலுக்கு எதுவும் செய்துவிடாதா... உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள்''  என அன்புமழைப் பொழிகிறார்கள் பார்வையாளர்கள். டெக்னாலஜியைப் பொழுதுபோக்காகப் பார்க்காமல் புத்திசாலித்தனமாகப் பார்த்தால் அதுவும் பணம் கொழிக்கும் பிசினஸ்தான்!

http://www.vikatan.com/news/tamilnadu/100824-the-story-of-arumugam-chief-chef-of-village-food-factory.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தாள் சமைக்கிறத பார்க பரவாயில்லை. அவரே சாப்பிடுறது தான்... தாங்க முடியவில்லை...:rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.