Jump to content

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் 1. 

இன்னும் இளையவனாக இருப்பதாலும்.. தனியப் போக வேண்டி இருந்ததாலும்.. எங்கும் இல்லாத அனுபவம் சொறீலங்கா மண்ணை தொட்டதுமே வரத்தொடங்கிவிட்டது.

சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்..  சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது.  இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள்.  இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

அனுபவம் 2.

சொறீலங்கா சர்வதேச விமான நிலையம்.. ஒரு மீன் சந்தை. ஆட்கள் வெளியேற பல மணி நேரமாகும். பொதிகள் வந்து சேர... காத்துக்கிடக்க வேண்டும். வெளிய போனால்.. ஓடு ஓடுன்னு அடித்து விரட்டாத குறையாக தற்போது அங்கு நிகழும் திருத்தவேலைகளால் எழுந்துள்ள நெருக்கடியை சரிவரக் கையாளத் தெரியாமல்.. பயணிகளை அவலப்படுத்துகிறார்கள்.

அரச ரக்சிகள் இயங்குகின்றன.. விமான நிலையத்தில் இருந்து தூர இடத்துக்கு. அவை ஓரளவு செலவு குறைவானவை. மேலும் வேக வீதியில் செல்ல 250 ரூபா சிறிய வாகனங்களுக்கும் 300 ரூபா வான் வகைகளுக்கும் மேலதிகமாக வாங்கிறார்கள். 

அனுபவம் 3.

வீதிகளில் பயணிக்கும் போது இராணுவ வாகனங்களில்... செல்வோர்.. கையடக்கத் தொலைபேசிகளால்.. ஆட்களை படமெடுக்கிறார்கள். என்ன மண்ணாங்கட்டிக்கு என்பது தெரியவில்லை. யாரை எடுக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

அனுபவம் 4.

வடக்கில்.. சிங்கள காவல்துறையின் செயற்பாடுகள்.. மக்கள் சிநேகிதத்தை விட பெரும்பான்மை.. அதிகாரத் திமிரில் இருப்பதை அப்பட்டமாகக் காண முடிகிறது.

அனுபவம் 5. இன்ரசிற்றி குளிரூட்டி தொடரூந்து வெள்ளவத்தை ஊடாகப் போகிறது. ஆளுக்கு 1500 ரூபா.. யாழ் போவதற்கு. அது வெள்ளவத்தை தொடரூந்து நிலையத்தில்.. அவதி அவதியாக நின்று அவதி அவதியாகவே போகும். சனங்களின் தொகைக்கு ஏற்ப ஒரு மரியாதை நேர ஒதுக்கம் இல்லை.. பயணிகள் செளகரியமாக ஏற. அத்தோடு அது ஒவ்வொரு தடவையும் நின்று இயங்கும் போது இடிமுழக்கச் சத்தத்தோடு தான் கிளம்பும். 

அனுபவம் 6. யாழ் நகரில்.. வாகனங்களின் நெருக்கடி அதிகம். மக்களிடம் வீதி ஒழுங்கை பின்பற்றும் பண்பு வெகு குறைவு.  வாகனங்கள்.. சிற்றூர்திகள் எதுக்கு கோர்ன் அடிக்கினம் என்றே தெரியாது. ஒரே கோர்ன் சத்தம்.

அனுபவம் 7. ஓட்டோக்கள் ஏராளம். பல முஸ்லீம்களின் தொழில் அதுவாகவும் உள்ளதை அவதானிக்க முடியுது. இவை தாம் அதிகம் போதைப்பொருள் சப்பிளையில் இருக்காம்.. என்று உள்ளூர் மக்கள் அங்கலாய்க்கினம்.

அனுபவம் 8. அத்தியாவசிய பொருட்களின் விலை அசுர வளர்ச்சி கண்டிருக்க.. ஆடம்பரப் பொருட்களின் விலை அவ்வளவாக மாறி இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு கொத்துரொட்டி.. 200 ரூபா. ஒரு லட்டு 60 ரூபா. 

அனுபவம் 9. நவீன அங்காடிகள் மேற்கத்தைய தரப் பொருட்களோடு சேவைகள் வழங்குகின்றன. யாழிலும் கொழும்பிலும். விலையும் பறுவாயில்லை.

அனுபவம் 10. கே எவ் சியில்.. சிக்கன் புரியாணி 350 ரூபா. காசுக்கு ஏற்ற உணவும் சுகாதாரத்தையும் காண முடிந்தது. சேவையும் நன்று.

அனுபவம் 11. நவீன மருத்துவ வசதிகள் யாழ் நகரில் கொழுப்பில் பெருக்கம் அடைந்துள்ளன.  நவீன கட்டடங்களுக்கும் வசதிகளுக்கும் குறைவில்லை.

அனுபவம் 12. யாழ் நகர் வீதிகளில் பெண்களும் ஸ்கூட்டியும் கூடப் பிறந்தவை ஆகி இருப்பது கண்கூடு.

அனுபவம் 13. ரியூசன் கொட்டில்களும்.. சைக்கிளில் சமாந்திரமாக வீதியில் போவதும்.. பழைய முறை போலவே நடக்குது. ஆனால் சில வீதிகளில் சைக்கிளில் பயணிக்க வீதி ஒழுங்கை அமைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக.. ஆரிய குளத்தை அண்டி.. பலாலிவீதியில்.. இதனைக் கவனிக்கலாம்.

அனுபவம் 14.

யாழ் தொடரூந்து நிலையத்தை அதிகம் மக்களை விட இராணுவம்.. சிங்களப் பயணிகளும்.. இதர படைத்தரப்பும் பாவிப்பது அப்படியே தெரிகிறது. இதனை கிளிநொச்சி.. வவுனியாவிலும் காண முடியுது.

அனுபவம் 15. இராணுவ நிரந்தர நிலைகள் எல்லாம் மாடமாளிகைகளாக எழுதுள்ளதுடன் அதனை அண்டி தடாகங்களும்.. பூங்காக்களும்.. வீதி அலங்கரிப்புகளும்.. சுத்தப்படுத்தல்களும்.. சொல்லி வேலை இல்ல. எங்கும் வெற்றிப் பிரதாபம்.. அடையாளப்படுத்தப்படுகுது.

அனுபவம் 16. வன்னிப் பெருநிலப் பரப்பினூடாக.. தொடரூந்தில் செல்லும்.. போது எப்படி இந்த நிலத்தை நாம் இழந்தோம் என்ற ஏக்கமே இருந்தது. அந்தளவுக்கு பச்சைப் பசேல் என்று காடுகள் அடங்கி இயற்கை செழிக்கக் கிடக்குது.

அனுபவம் 17. வன்னிப் பெரு நிலத்தில்.. வவுனியாவை தாண்டினால்.. நில மட்ட காவலரண்கள் எல்லாம் சீமெந்தால் அமைக்கப்பட்டு.. நிரந்தர இராணுவ இருப்புக்களை காண முடிகிறது. பெரு வீதிகளை அண்டிய மக்கள் நடமாட்டம் தவிர அங்கு மக்கள் நடமாட்டம் குறைவு.

அனுபவம் 18. வன்னி நிலப்பரப்பில் இராணுவம் சைக்கிள் சவாரியில் போகிறது. ஆனையிறவை அண்டி இதனை அவதானிக்க முடிந்தது.

அனுபவம் 19. வடக்கில்.. விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா வழமைக்குத் திரும்புது. 

அனுபவம் 20. யாழ் நகரப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் வெளிநாட்டுக் காசில்.. செழிப்புற நிற்கின்றன. யாழ் நகர்.. சாவகச்சேரி நகர்.. என்று எல்லா நகர்களும்.. புதுப்பொலிவை காட்டி நிற்கின்றன. ஆனால் வன்னி நிலப்பரப்பில் தப்பி உள்ள வீடுகளை எல்லாம் பார்த்தால்.. ஓடுகளில்.. செஞ்சிலுவை சங்க அடையாளம் இன்னும் இருப்பதை காணலாம். அவை தான் தப்பி இருக்கின்றன. சிலவற்றின் மீது செல்லும் விழுந்து பாதிப்படைந்த சாட்சியமும் கிடக்கு.

அனுபவம் 21. வன்னி நிலப்பரப்பில் காட்டுப்பகுதிகளை அண்டி.. பழுதடைந்த நிலையில் சில இடங்களில் பேரூந்துகள் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன.  எங்கிருந்து வந்தன என்று தெரியவில்லை. ஏன் அங்கு கிடக்கின்றன என்றும் புரியவில்லை. 

அனுபவம் 22. சிங்களப் பகுதி தொடரூந்து நிலையங்கள்.. எந்த அபிவிருத்தியும் இன்றி அப்படியே காலங்காலமாகக் கிடப்பது தெரிகிறது. ஆனால்.. வடக்கில் வவுனியாவை தாண்டினால்.. நவீன தொடரூந்து நிலையங்கள்.. போரின் பலனாகக் கிடைத்துள்ளன.

அனுபவம் 23. சில ரயில் சேவைகளை தவிர மிச்ச எல்லாம்.. கறள் கட்டிய நிலையில் ஓடுகின்றன. ஒரு சில நவீன ரயில்களை விட்டு.. அரசியல் நடத்தியது அப்பட்டமாகத் தெரிகிறது. சிங்களப் பகுதிகளில் அது கூட இல்லை. அங்கு இன்னும் கறள் கட்டின ரயில் தான். 

அனுபவம் 24. இப்ப எல்லாம் தமிழ் பாட்டு போட்டுக் கொண்டு மொரட்டுவ தமிழ் மாணவ சமூக.. ஆக்கள் வாரத்துக்கு ஒருக்கா ஊருக்கு போய் வர ரயிலை பாவிக்கினம். சோடி சோடியா லப்டப்பும் கையுமா திரியினம். 

அனுபவம் 25. வெள்ளையளும் உல்லாசப் பயணம் போகினம் யாழ்ப்பாணம். யாழ் பண்ணை வீதி நன்கு திருத்தப்பட்டு வீதி இரு மருங்கிலும் நடைபாதை அமைக்கப்பட்டு.. ஒரு உருப்படியான வேலை அதில் நடந்தது தெரியுது.

அனுபவம் 26. இப்ப எல்லாம் யாழ்ப்பாண நகரில் என்றில்லை.. எல்லா சிற்றூரிலும் ஓட்டோ தான். மக்கள் நடக்க சரியான பஞ்சி.

அனுபவம் 27. சிறீலங்கா முப்படை ஆட்களும் யாழ் நகரில் சர்வ சாதாரணமாக திரியினம்.. போகினம்.. வ்ருகினம்.. பொருள் கொள்வனவு செய்யினம்.. எம்மவர்களும் மதிப்பு மரியாதையோட தான் நடத்தினம்.

அனுபவம் 28. மக்கள் இப்ப எல்லாம்.. விடுதலைப் புலிகளைப் பற்றி வெளிப்படையா தமக்குள் கதைக்கினம். அவர்கள் இல்லாத ஏக்கம் பலரிடம். சிலரிடம் அதுவே அட்டகாசத்தின் உச்சத்துக்கு அவர்களை தள்ளி விட்டிருக்குது.

அனுபவம் 29. கோவில்கள் பல நிறைவடைந்து.. கம்பீரமாக எழுந்து நிற்பதோடு.. மின்விளக்குகளால் எரியூட்டி நிற்கின்றன.

அனுபவம் 30. இப்ப மின்சாரம் தடையின்றி வருகிறது. லக்ஸபான மின்சாரம் என்று சொல்லினம். மின்சாரச் செலவு பொருட் செலவோடு ஒப்பிடும் போது அதிகமாகத் தெரியவில்லை.

அனுபவம் 31. வீதி அகட்டிப்பு என்று.. மக்களின் காணிகள்.. மதில்கள்.. வேலிகள்.. எல்லாம் பறிபோய்க்கிட்டு இருக்குது. மக்கள்.. ஏதோ வீதி அகலுது என்று கதைக்கப் பேச ஆளின்றி.. மெளனித்துக் கிடக்கிறார்கள்.

அனுபவம் 32. யாழில்... பெண் பிள்ளைகள் எல்லாம்.. சில புலம்பெயர்.. உள்ளூர் ஊடகங்கள் சொல்லுற மாதிரி ஆடிக்கிட்டுத் திரிவதாகத் தெரியவில்லை. ஒரு சிலது திரியலாம். பொரும்பான்மை பிள்ளைகள் நல்லாத்தான் இருப்பதாகத் தெரியுது.

அனுபவம் 33. படி.. படின்னு.. இப்ப முன்னிலைப் பாடசாலைப் பிள்ளைகளையும் ரியூசனுக்கு விடுவது அவலம். 

அனுபவம் 34. யாழ் நகர.. கொழும்பு.. பள்ளிப் பிள்ளைகளிடம் நல்ல ஆங்கில மற்றும் கணணி அறிவும் நவீன தொழில்நுட்பக் கையாடல் அறிவும் வளர்ந்திருப்பது.. வளர்ந்து வருவது ஆரோக்கியம்.

அனுபவம் 35. யாழ் பல்கலைக்கழகம் அப்படியே கிடக்கு. வர்ணம் மட்டும் பூசி இருக்காங்க.

அனுபவம் 36. யாழ் நகர ஒழுங்கைகள் எல்லாம் புது வீடுகளால் நிரம்பி இருக்குது. ஆனால் சில இடங்கள் அதே தகர வேலிகளோடு தான். 

அனுபவம் 37. யாழ் நகர்.. மற்றும் அதனை அண்டி நவீன வியாபார நிலைகள் பெருகி வருகின்றன. முதலீட்டாளர்களுக்கு அங்கு நல்ல வாய்ப்புள்ளது. கொழும்பில்.. காலி வீதி நவீனமாகி இருக்குது.

அனுபவம் 38. கொழும்பில் இன்னும் வீதி போக்குவரத்து நெருசல் குறையவில்லை. காலையும் மாலையும்.. பல மணி நேரம் தாமதங்கள். ஓட்டோக்கள்.. கடற்கரை வீதியை இப்ப பாவிக்கினம். மற்றும்படி காலி வீதி பிசி.

அனுபவம் 39. கொழும்பு வாழ் எம்மவர்கள் வெளிநாட்டுத் தமிழர்களை கொப்பி பண்ணுவதில்.. அதாவது வீடுகளில் பாத்ரூம் அமைப்பதில் இருந்து.. பிள்ளைகளை பள்ளிக்கூடம் கொண்டு போய் விட்டு கூட்டிக் கொண்டு வருவது உள்ளிடங்க.. துடியா துடிச்சுச் செய்கிறார்கள். தப்பில்லை. நல்ல வழிக்கு போனால் நல்லது.

அனுபவம் 40. நம்ம வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அங்க வந்தால்.. அங்கலாய்க்கலாமே தவிர.. அங்க உள்ள மக்கள் இவர்களைப் பார்த்து அங்கலாய்த்த காலம் மலையேறிவிட்டது. இப்ப வெளிநாட்டுக்காரரை.. அங்குள்ள இளையவர்கள்.. கணக்கிலும் எடுப்பதில்லை. அதனால்.. அங்கு போனதும்.. லோக்கலா மிங்கிள் ஆகிடுவது நல்லது. tw_blush:

அனுபவம் 41. காலநிலை மழை. ஊரிலும் மழை கொழும்பிலும் பிற்பகலில் மழை. ஊரில் நுளம்புத் தொல்லை அதிகமாக இருந்தது. நுளம்பு வலை நல்ல தூக்கத்துக்கு உதவும். நுளம்பு வத்தி தலையிடிக்கும். ஆனால்.. நுளம்பு ஸ்பிரே பறுவாயில்லை.  மற்றும் பள்ளிக்கூடங்கள்.. 7:30 காலை தொடங்கி 1:30 முடியுது. பெற்றோரில் பெரும்பான்மையானோர் இதனை வரவேற்கினம்.

அனுபவம் 42. திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஒரு புடுங்குப்பாடும் இல்லை.  சுமூகமாக வந்து சேர்ந்தம். உள்ள போகும் போது தான் கறப்பது நிகழும் கவனம். குறிப்பாக தனிய போய் வரும் இளையவர்களுக்கு. tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 349
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் என்ன போராட்டம் வெற்றி தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் என்ன போராட்டம் வெற்றி தானே?

ஆயுதம் தூக்கினாலும் தூக்காட்டிலும் தமிழன் தமிழனாக தன்ர நிலத்தில் நிற்கப் பிரியப்படுகிறான். அது போராட்டத்தின் வெற்றி தான்... என்ன தான் ஆயுதங்களும் ஆயுத முனைகளும் ரகசிய அழுத்தங்களும் இருந்தாலும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகும் போது குடிவரவு குடியகல்வு பகுதிகளில் நடந்தவைகளை இன்னும் கொஞ்சம் விபரமாக எழுதலாமே?

தம்பி கடல்கரை பக்கம் குளிக்க போகலையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 6. யாழ் நகரில்.. வாகனங்களின் நெருக்கடி அதிகம். மக்களிடம் வீதி ஒழுங்கை பின்பற்றும் பண்பு வெகு குறைவு.  வாகனங்கள்.. சிற்றூர்திகள் எதுக்கு கோர்ன் அடிக்கினம் என்றே தெரியாது. ஒரே கோர்ன் சத்தம்.

Bildergebnis für please horn

Bildergebnis für please horn

Bildergebnis für please horn

உங்கள் அனுபவங்களை... எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... நெடுக்ஸ். :)
இலங்கையில் மட்டுமல்ல... ஆசிய நாடுகளில், கோர்ன் அடித்துக் கொண்டு ஓடுவது... ஒரு வித வருத்தம்.
ஆபிரிக்காவில் கூட... இவ்வளவு மோசமாக கோர்ன் அடிப்பதில்லை. 
இந்தியாவில்... சில வாகனங்களுக்கு பின்,  "கோர்ன் அடி"  என்றே எழுதி வைத்திருப்பார்கள். 
இது என்ன டிசைனோ.... ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 40. நம்ம வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அங்க வந்தால்.. அங்கலாய்க்கலாமே தவிர.. அங்க உள்ள மக்கள் இவர்களைப் பார்த்து அங்கலாய்த்த காலம் மலையேறிவிட்டது. இப்ப வெளிநாட்டுக்காரரை.. அங்குள்ள இளையவர்கள்.. கணக்கிலும் எடுப்பதில்லை. அதனால்.. அங்கு போனதும்.. லோக்கலா மிங்கிள் ஆகிடுவது நல்லது. tw_blush:

அனுபவத்தில் பிடித்த அனுபவம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ்....!

அகலம் குறைவான வீ திகளாய் இருந்தால் கோர்ன் அடிக்கத்தான் வேண்டும். சில சமயங்களில் வாகனத்தில் கோர்ன் இருக்கா , விழுந்து வீட்டதா, களவுபோய் விட்டதா என்பதை உறுதி செய்யவும் கோர்ன் அடித்துப் பார்க்கலாம்....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெரிசல் கூடிய நகரமாக யாழ்ப்பாணம் மாறுவது முன்னேற்றத்தைத்தானே காட்டுகின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னியும் கிழக்கும் முன்னேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அதிகாரத்தில் உள்ளவர்கள் குழப்பாவிட்டால் எல்லாம் தானாகவே நடக்கும்.

விமான நிலையத்தில் காசைப் பிடுங்கிவிட்டார்கள் என்பது உறுத்தலாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

14 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 1. 

இன்னும் இளையவனாக இருப்பதாலும்.. தனியப் போக வேண்டி இருந்ததாலும்.. எங்கும் இல்லாத அனுபவம் சொறீலங்கா மண்ணை தொட்டதுமே வரத்தொடங்கிவிட்டது.

சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்..  சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது.  இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள்.  இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

இங்குள்ள சில கள உறவுகள் எனக்கு தெரிந்து ஒவ்வொரு வருடமும் பலமுறைகள் வந்து போவார்கள் - அவர்கள் எழுதட்டும்.

எனது பாஸ்போர்ட்டிலேயே விசாவில் எழுதியுள்ளார்கள் நான் 2011 இற்கு பின்னர் 9 தடவை வந்ததாக - எனக்கு அப்படி ஒன்றுமே நடக்கவில்லையே

உண்மையாக நேர்மையாக இருப்பவனுக்கு பயமில்லை - மற்றவர்களுக்கு பிரச்சனைதான்.

14 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 2.

சொறீலங்கா சர்வதேச விமான நிலையம்.. ஒரு மீன் சந்தை. ஆட்கள் வெளியேற பல மணி நேரமாகும். பொதிகள் வந்து சேர... காத்துக்கிடக்க வேண்டும். வெளிய போனால்.. ஓடு ஓடுன்னு அடித்து விரட்டாத குறையாக தற்போது அங்கு நிகழும் திருத்தவேலைகளால் எழுந்துள்ள நெருக்கடியை சரிவரக் கையாளத் தெரியாமல்.. பயணிகளை அவலப்படுத்துகிறார்கள்.

முழுப்பொய் 

இதை இங்கு வந்து போன கள உறவுகளே தீர்மானிக்கட்டும்.

14 hours ago, nedukkalapoovan said:

அரச ரக்சிகள் இயங்குகின்றன.. விமான நிலையத்தில் இருந்து தூர இடத்துக்கு. அவை ஓரளவு செலவு குறைவானவை. மேலும் வேக வீதியில் செல்ல 250 ரூபா சிறிய வாகனங்களுக்கும் 300 ரூபா வான் வகைகளுக்கும் மேலதிகமாக வாங்கிறார்கள். 

ஐயோ ஐயோ - அது டோல் காசப்பா

லண்டனில் கார் ஓடினதே இல்லை போலத்தான் இருக்குது.

14 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 3.

வீதிகளில் பயணிக்கும் போது இராணுவ வாகனங்களில்... செல்வோர்.. கையடக்கத் தொலைபேசிகளால்.. ஆட்களை படமெடுக்கிறார்கள். என்ன மண்ணாங்கட்டிக்கு என்பது தெரியவில்லை. யாரை எடுக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

நான் இதுவரை கண்டதில்லை.
இலங்கை முழுவதுமே பல இடங்களை சுற்றி உள்ளேன் 
நீங்கள் மட்டும் கண்டிருந்தா - நோ கொமெண்ட்ஸ் 

 

14 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 4.

வடக்கில்.. சிங்கள காவல்துறையின் செயற்பாடுகள்.. மக்கள் சிநேகிதத்தை விட பெரும்பான்மை.. அதிகாரத் திமிரில் இருப்பதை அப்பட்டமாகக் காண முடிகிறது.

நிச்சயமாக இல்லை
இப்பவெல்லாம் கொச்சை தமிழில் "அடோ எங்கடா போகுது " என்றெல்லாம் அவர்கள் கதைப்பதே இல்லை.
வாகனத்தை விட்டு இறங்க சொல்வதும் இல்லை
ஆனாலும் ஓட்டுனர்கள் தானாக இறங்கி பொய் கதைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 5. இன்ரசிற்றி குளிரூட்டி தொடரூந்து வெள்ளவத்தை ஊடாகப் போகிறது. ஆளுக்கு 1500 ரூபா.. யாழ் போவதற்கு. அது வெள்ளவத்தை தொடரூந்து நிலையத்தில்.. அவதி அவதியாக நின்று அவதி அவதியாகவே போகும். சனங்களின் தொகைக்கு ஏற்ப ஒரு மரியாதை நேர ஒதுக்கம் இல்லை.. பயணிகள் செளகரியமாக ஏற. அத்தோடு அது ஒவ்வொரு தடவையும் நின்று இயங்கும் போது இடிமுழக்கச் சத்தத்தோடு தான் கிளம்பும். 

உண்மைதான்
ஆனாலும் இது ஐரோப்பா இல்லை சொறி இலங்கை என்பதை சொறிய மறந்து விட்டார் நண்பர்.

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 6. யாழ் நகரில்.. வாகனங்களின் நெருக்கடி அதிகம். மக்களிடம் வீதி ஒழுங்கை பின்பற்றும் பண்பு வெகு குறைவு.  வாகனங்கள்.. சிற்றூர்திகள் எதுக்கு கோர்ன் அடிக்கினம் என்றே தெரியாது. ஒரே கோர்ன் சத்தம்.

உண்மைதான்

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 7. ஓட்டோக்கள் ஏராளம். பல முஸ்லீம்களின் தொழில் அதுவாகவும் உள்ளதை அவதானிக்க முடியுது. இவை தாம் அதிகம் போதைப்பொருள் சப்பிளையில் இருக்காம்.. என்று உள்ளூர் மக்கள் அங்கலாய்க்கினம்.

ஓட்டோக்கள் ஏராளம் - உண்மைதான்
 பல முஸ்லீம்களின் தொழில் அதுவாகவும் உள்ளதை அவதானிக்க முடியுது - இல்லை

 

சென்ற வருடத்தில் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டவர்களின் லிஸ்டை ஒருக்கா பார்வை இடுங்கோ. 
உங்கள் பொய்களையும் புலுடாவையும் வேறு எங்காவது வைத்திருங்கோ

பத்து பிள்ளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கி காட்டினாளாம் என்ற பழமொழி ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.

தொடரும்........

 

Link to comment
Share on other sites

Sorry நெடுக்ஸ் 
உண்மை உண்மைதான் - பொய் சொல்வதால் உண்மை பொய்யாகி விடாது.

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 8. அத்தியாவசிய பொருட்களின் விலை அசுர வளர்ச்சி கண்டிருக்க.. ஆடம்பரப் பொருட்களின் விலை அவ்வளவாக மாறி இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு கொத்துரொட்டி.. 200 ரூபா. ஒரு லட்டு 60 ரூபா. 

அத்தியவசிய பொருட்களும் பணவீக்கத்துக்கேற்ற விலை உயர்வைத்தான் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆடம்பர பொருள்களின் விலைதான் அதிகம் - பணப்புழக்கம் அதிகம் + கேள்வி அதிகம் என்பது காரணமாம் 

சாதாரணமான கடைகளில் லட்டு 30 ரூபாய். வெள்ளவத்தை ஷண்முகாஸில் 70 ரூபாய். நீங்கள் எங்கு வாங்கினீர்கள் என்று எழுதலாமே.

கொத்து ரொட்டியை சில இடங்களில் 450 ரூபாய்க்கும் விற்கிறார்கள்.

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 9. நவீன அங்காடிகள் மேற்கத்தைய தரப் பொருட்களோடு சேவைகள் வழங்குகின்றன. யாழிலும் கொழும்பிலும். விலையும் பறுவாயில்லை.

No comments

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 10. கே எவ் சியில்.. சிக்கன் புரியாணி 350 ரூபா. காசுக்கு ஏற்ற உணவும் சுகாதாரத்தையும் காண முடிந்தது. சேவையும் நன்று.

அதை சிக்கன் புரியாணி என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன் - நீலாம்பரியில் வாங்கியிருந்தால் அருமை தெரியும்

அது சரி இங்கு வந்தும் கென்டக்கியிலதான் சாப்பிடுவேன் என்றால் பந்தா பவிசு நல்லா இருக்குது.
முன்பெல்லாம் நான் இங்கு வரும்போது எங்கட சாப்பாடு எங்க கிடைக்கும் என்றுதான் தேடுவேன்.

Sorry நெடுக்ஸ் - உங்கள் தேடல் புரிகிறது.

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 11. நவீன மருத்துவ வசதிகள் யாழ் நகரில் கொழுப்பில் பெருக்கம் அடைந்துள்ளன.  நவீன கட்டடங்களுக்கும் வசதிகளுக்கும் குறைவில்லை.

யாழ் வைத்தியசாலையின் சுற்றுப்புறமும் அங்குள்ள நாற்றமெடுக்கும் கால்வாய்களும் கண்ணுக்கு தெரியவில்லையாக்கும்.

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 12. யாழ் நகர் வீதிகளில் பெண்களும் ஸ்கூட்டியும் கூடப் பிறந்தவை ஆகி இருப்பது கண்கூடு.

உண்மை

15 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 13. ரியூசன் கொட்டில்களும்.. சைக்கிளில் சமாந்திரமாக வீதியில் போவதும்.. பழைய முறை போலவே நடக்குது.

உண்மை

15 hours ago, nedukkalapoovan said:

ஆனால் சில வீதிகளில் சைக்கிளில் பயணிக்க வீதி ஒழுங்கை அமைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக.. ஆரிய குளத்தை அண்டி.. பலாலிவீதியில்.. இதனைக் கவனிக்கலாம்.

நான் காணவேயில்லையே!!!!
இதுதானே அந்த வீதி
 

Sorry நெடுக்ஸ் - இதுவும் பொய்தானே - இதைத்தான் சொல்வார்களோ குருடர்கள்யானை பார்த்த கதை என்று.

IMG_8687_2.jpg

 

 

Link to comment
Share on other sites

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 14.

யாழ் தொடரூந்து நிலையத்தை அதிகம் மக்களை விட இராணுவம்.. சிங்களப் பயணிகளும்.. இதர படைத்தரப்பும் பாவிப்பது அப்படியே தெரிகிறது. இதனை கிளிநொச்சி.. வவுனியாவிலும் காண முடியுது.

இங்குள்ள மக்கள் தொகையுடன் இராணுவத்தின் தொகையை கணக்கிட்டால் - ஆச்சரியம் வராது
சிங்களவர்கள் அவரது சொந்த பணத்தில் வந்து போகிறார்கள் - இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை.

நீங்கள்கூடத்தான் கொழும்புக்கு போனீர்களே - அது என்ன தமிழ் இடமா 

,

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 15. இராணுவ நிரந்தர நிலைகள் எல்லாம் மாடமாளிகைகளாக எழுதுள்ளதுடன் அதனை அண்டி தடாகங்களும்.. பூங்காக்களும்.. வீதி அலங்கரிப்புகளும்.. சுத்தப்படுத்தல்களும்.. சொல்லி வேலை இல்ல. எங்கும் வெற்றிப் பிரதாபம்.. அடையாளப்படுத்தப்படுகுது.

உண்மை

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 16. வன்னிப் பெருநிலப் பரப்பினூடாக.. தொடரூந்தில் செல்லும்.. போது எப்படி இந்த நிலத்தை நாம் இழந்தோம் என்ற ஏக்கமே இருந்தது

உண்மை

16 hours ago, nedukkalapoovan said:

அந்தளவுக்கு பச்சைப் பசேல் என்று காடுகள் அடங்கி இயற்கை செழிக்கக் கிடக்குது.

ஜூலை ஆகஸ்டில் வந்து பாருங்கள் காய்ந்து கருவாடாக இருக்கும். 

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 17. வன்னிப் பெரு நிலத்தில்.. வவுனியாவை தாண்டினால்.. நில மட்ட காவலரண்கள் எல்லாம் சீமெந்தால் அமைக்கப்பட்டு.. நிரந்தர இராணுவ இருப்புக்களை காண முடிகிறது. பெரு வீதிகளை அண்டிய மக்கள் நடமாட்டம் தவிர அங்கு மக்கள் நடமாட்டம் குறைவு.

உண்மை

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 18. வன்னி நிலப்பரப்பில் இராணுவம் சைக்கிள் சவாரியில் போகிறது. ஆனையிறவை அண்டி இதனை அவதானிக்க முடிந்தது.

உண்மை

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 19. வடக்கில்.. விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா வழமைக்குத் திரும்புது. 

உண்மை

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 20. யாழ் நகரப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் வெளிநாட்டுக் காசில்.. செழிப்புற நிற்கின்றன. யாழ் நகர்.. சாவகச்சேரி நகர்.. என்று எல்லா நகர்களும்.. புதுப்பொலிவை காட்டி நிற்கின்றன.

உண்மை

16 hours ago, nedukkalapoovan said:

ஆனால் வன்னி நிலப்பரப்பில் தப்பி உள்ள வீடுகளை எல்லாம் பார்த்தால்.. ஓடுகளில்.. செஞ்சிலுவை சங்க அடையாளம் இன்னும் இருப்பதை காணலாம். அவை தான் தப்பி இருக்கின்றன. சிலவற்றின் மீது செல்லும் விழுந்து பாதிப்படைந்த சாட்சியமும் கிடக்கு.

பல வீடுகள் கட்டப்படத்தொடங்கியும் அரைகுறையா இருப்பதுதான் முதலில் தெரிந்திருக்கும் - கண்களுக்கு. 

கண்டிருந்தால் காரணத்தை நீங்களே தேடுங்கள் 

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 21. வன்னி நிலப்பரப்பில் காட்டுப்பகுதிகளை அண்டி.. பழுதடைந்த நிலையில் சில இடங்களில் பேரூந்துகள் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன.  எங்கிருந்து வந்தன என்று தெரியவில்லை. ஏன் அங்கு கிடக்கின்றன என்றும் புரியவில்லை. 

அவை போரின் அல்லது இராணுவத்தினரின் எச்சங்கள் 

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 22. சிங்களப் பகுதி தொடரூந்து நிலையங்கள்.. எந்த அபிவிருத்தியும் இன்றி அப்படியே காலங்காலமாகக் கிடப்பது தெரிகிறது. ஆனால்.. வடக்கில் வவுனியாவை தாண்டினால்.. நவீன தொடரூந்து நிலையங்கள்.. போரின் பலனாகக் கிடைத்துள்ளன.

வெளியில சொல்லிப் போடாதேங்கோ - சிங்களவர்களுக்கு பொறாமை வந்திடும்.:grin:

16 hours ago, nedukkalapoovan said:

அனுபவம் 23. சில ரயில் சேவைகளை தவிர மிச்ச எல்லாம்.. கறள் கட்டிய நிலையில் ஓடுகின்றன. ஒரு சில நவீன ரயில்களை விட்டு.. அரசியல் நடத்தியது அப்பட்டமாகத் தெரிகிறது. சிங்களப் பகுதிகளில் அது கூட இல்லை. அங்கு இன்னும் கறள் கட்டின ரயில் தான். 

Sorry நெடுக்ஸ் 
இதுதான் சிறிலங்கா என்று தெரியாமல் இங்கு கால் வைத்த உங்களில்தான் பிழை.

தொடரும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

அனுபவம் 40. நம்ம வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அங்க வந்தால்.. அங்கலாய்க்கலாமே தவிர.. அங்க உள்ள மக்கள் இவர்களைப் பார்த்து அங்கலாய்த்த காலம் மலையேறிவிட்டது. இப்ப வெளிநாட்டுக்காரரை.. அங்குள்ள இளையவர்கள்.. கணக்கிலும் எடுப்பதில்லை. அதனால்.. அங்கு போனதும்.. லோக்கலா மிங்கிள் ஆகிடுவது நல்லது

 

11 hours ago, அக்னியஷ்த்ரா said:

அனுபவத்தில் பிடித்த அனுபவம் 

உங்களை போல் யாரும் வந்தால் நாங்கள் ஏன் பார்க்க முழங்காலுக்கு மேலே டைட்டா காற்சட்டையும் மேலே ஒரு டி சேட்டுடன் வந்தால் நாங்கள் பார்ப்போம் ஆக்கும்   ஆனாலும் முதல் இருந்த மவுசு இப்ப இல்லை  உன்மையே


அது சரி நெடுக்கு ஊர் வந்து போனியள் என்ன செய்த்துட்டு போயிருக்கையள்  இங்கே எனக்கு தெரிந்தவ்வர்கள் சிலர்  வந்து ஊரில் தங்களுக்கு தெரிந்ட்கவ்ர்களுக்கு சில காணிகளை வாங்கி அதில் ப்யிர் செய்து வாழுமாறும்  தென்னை தோப்புக்களை பராமரிக்குமாறும்  சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் நீங்கள்  ஏதாவது உங்கள் சொந்த காரர்களுக்கு அல்லது வேற ஏதாவது உங்கள் ஊரில் செய்த நீங்களா?? சும்மா ஒரு கேள்விதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, முனிவர் ஜீ said:

அது சரி நெடுக்கு ஊர் வந்து போனியள் என்ன செய்த்துட்டு போயிருக்கையள்  இங்கே எனக்கு தெரிந்தவ்வர்கள் சிலர்  வந்து ஊரில் தங்களுக்கு தெரிந்ட்கவ்ர்களுக்கு சில காணிகளை வாங்கி அதில் ப்யிர் செய்து வாழுமாறும்  தென்னை தோப்புக்களை பராமரிக்குமாறும்  சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் நீங்கள்  ஏதாவது உங்கள் சொந்த காரர்களுக்கு அல்லது வேற ஏதாவது உங்கள் ஊரில் செய்த நீங்களா?? சும்மா ஒரு கேள்விதான் 

நாங்க எதையும் செய்ய வேண்டியதில்லை.. செய்யச் சொல்லவும் இல்லை அங்கு. அங்குள்ள மக்களுக்கு தெரிந்திருக்குது.. தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது பற்றி. மேலும் அவர்கள் வெளிநாட்டு காசுக்கு வேலை செய்யும் கூலிகளாக இப்ப இல்லை. அன்பளிப்பாக கொடுத்தால் வாங்குவார்கள்.. எதையாவது எதிர்பார்த்துக் கொடுத்தால்.. வாங்குவார்கள்.. எதிர்பார்ப்பை நிறைவு செய்ய உத்தரவாதம் அளிக்கமாட்டார்கள். அவ்வளவு பிசி. tw_blush:

IMG_8687_2.jpg

சைக்கிள் லேன் (சைக்கிள் வீதி ஒழுங்கை) தான் வீதியின் இரு மருங்கிலும்.. தடித்த வெள்ளைக் கோட்டுக்கு இப்பால்  அமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தமிழை விளங்கிக் கொள்வதில் பெரிய பிரச்சனை இருக்கிறது ஜீவன் அங்கிள்.

ஜீவன் அங்கிள்.. குடும்பஸ்தர்கள்..  தலைநரைத்தவர்கள் போனால்.. சொறீலங்கா... குடிவரவு எதுவும் கேட்காது. இளையவர்கள் போனால் குறிப்பாக நீண்ட காலத்தின் பின் தனியப் போகும் இளையவர்கள் அதுவும் நல்ல தொழில்துறையில் இருப்பவர்கள் என்று கண்டால்.. காசு பறிக்காமல் அனுப்பமாட்டார்கள் போலவே தெரிகிறது.

எங்களுக்கு மட்டுமல்ல.. எங்களுக்குத் தெரிய சிலருக்கும் எங்கள் அனுபவம் கிடைத்திருக்குது.

மேலும்..  தற்போதைய விமான நிலைய சீர்கேடுகளை ஒருக்காப் போய் பார்த்து அறியுங்கள். சனம்.. பயணிகள் படும் அவலம் அப்போது தான் தெரியும். குறுகிய நேர காலத்துக்குள் பல விமானங்களை தரையிறக்கி ஏற்றுவதால்.. நெருக்கடியை சமாளிக்க முடியாமல்.. மாடு ஆடுகள் போல பயணிகளை மக்களை நடத்துகிறார்கள். மீன் சந்தை போலவே இருக்குது. ஒரே சத்தமும்.. நில்லாத ஓடு ஓடு என்று விரட்டுவதும்.............. சொறீலங்கா அதிகாரிகளுக்கு மனிதப் பண்புகள் வளரனும். tw_blush:

மற்றும்படி.. எங்கள் அனுபவம் எங்களைப் பொறுத்த வரை 100% உண்மை. உங்களுக்கு அதில் பொய் இருப்பதாகத் தெரியலாம். அது நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்தது. சிலருக்கு.. விமான நிலையத்துக்குள் எந்தப் பாதுகாப்புக் கெடிபிடியும் இன்றி வர முடியுது. அப்படியான சிங்களவனுக்கு "வேண்டிய" ஆக்களும் இருக்கினம். அவைட அனுபவம் வேற. tw_blush:

Link to comment
Share on other sites

Quote

ஜீவன் அங்கிள்.. குடும்பஸ்தர்கள்..  தலைநரைத்தவர்கள் போனால்.. சொறீலங்கா... குடிவரவு எதுவும் கேட்காது. 

ஓ அது தான் ஜீவனுக்கு பிரச்சனை வரவில்லை போல Related image

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für white hair tamil man

ஊருக்குப் போகும் போது.... 
தலைக்கு, "வெள்ளை  டை"  அடித்து விட்டுப் போவது, பாதுகாப்பானது போலுள்ளது. :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

நாங்க எதையும் செய்ய வேண்டியதில்லை.. செய்யச் சொல்லவும் இல்லை அங்கு. அங்குள்ள மக்களுக்கு தெரிந்திருக்குது.. தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது பற்றி. மேலும் அவர்கள் வெளிநாட்டு காசுக்கு வேலை செய்யும் கூலிகளாக இப்ப இல்லை. அன்பளிப்பாக கொடுத்தால் வாங்குவார்கள்.. எதையாவது எதிர்பார்த்துக் கொடுத்தால்.. வாங்குவார்கள்.. எதிர்பார்ப்பை நிறைவு செய்ய உத்தரவாதம் அளிக்கமாட்டார்கள். அவ்வளவு பிசி. tw_blush:

நீங்கள் மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு போகவில்லை போல் யாழ்ப்பாணம் மட்டும் போன நீங்கள் போல  யாழ்ப்பாணம் பெரிதாக பாதிக்கப்படவில்லை அதனால் மக்கள் வாழ்க்கை தெரியாமல் போயிருக்கும் :unsure::unsure:

Link to comment
Share on other sites

18 hours ago, nedukkalapoovan said:

 

ஜீவன் அங்கிள்.. குடும்பஸ்தர்கள்..  தலைநரைத்தவர்கள் போனால்.. சொறீலங்கா... குடிவரவு எதுவும் கேட்காது. இளையவர்கள் போனால் குறிப்பாக நீண்ட காலத்தின் பின் தனியப் போகும் இளையவர்கள் அதுவும் நல்ல தொழில்துறையில் இருப்பவர்கள் என்று கண்டால்.. காசு பறிக்காமல் அனுப்பமாட்டார்கள் போலவே தெரிகிறது.

எங்களுக்கு மட்டுமல்ல.. எங்களுக்குத் தெரிய சிலருக்கும் எங்கள் அனுபவம் கிடைத்திருக்குது.

 

 

15 hours ago, nunavilan said:

ஓ அது தான் ஜீவனுக்கு பிரச்சனை வரவில்லை போல Related image

 

நெடுக்கு / நுணா,

என் வயது 42 என்பதால் இளைய வயது என்ற பிரிவுக்குள் வர முடியாது. எனக்கு தலை முடி கறுப்பாகத்தான் இருக்கு (உபயம்: டை), தொழில் / வசதி விடயங்களிலும் ஓரளவுக்கு நல்ல நிலையில் தான் உள்ளேன். 2007 இல் இருந்து 2009 வரைக்கும் புலம்பெயர் நாடுகளில் நடந்த பல  போராட்டங்களில் குடும்பத்துடன் பங்குபற்றி உள்ளேன். சொந்தப் பெயரில் இருக்கும் முகனூலில் தலைவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதில் இருந்து பல விடயங்களை நேரிடையாகவே எழுதியும் வருகின்றேன் (சில யாழ் கள உறவுகள் என் முகனூலில் இருப்பதால் அவர்களுக்கும் தெரியும்)

நான் கடந்த ஆறு மாதங்களுக்குள் இரண்டு தடவை இலங்கைக்கு சென்று இருக்கின்றேன். போன மாதமும் மாமாவின் மரண சடங்கில் கலந்து கொள்ள அம்மாவுடன் போயிருந்தேன். அதற்கு முதல் செப்ரம்பரில் தனியாகத்தான் இலங்கைக்கு சென்றனான்.

எனக்கு எந்த பிரச்சனையும் இலங்கை செல்லும் போது ஏற்படவில்லை. செப்ரம்பரில் கடவுசீட்டை பார்த்த குடிவரவு அதிகாரி திமிராக 'கப்பலிலா கனடா போனாய்" என்று கேட்க, "ஏன் உன்ர சிஸ்ரத்தில் நான் ஆரு என்று தெளிவாக தகவல் போட்டு இருக்கும்... அதில் அப்படியா இருக்கு?" என்று கேட்டதை தவிர வேறு எதுவும் நிகழவில்லை.

கொழும்பிலும் தனியாகத்தான் ஹோட்டலில் நின்றனான் (ஹோட்டல் பெயரில் இருந்து அறை எண் வரைக்கும் ETA எடுக்கும் போது குறிப்பிட்டு இருந்தனான்) .என்னை விட தீவிரமாக தமிழ் தேசிய விடயத்தில் இயங்குகின்ற / எழுதி வருகின்ற என் பல நண்பர்களும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் தான் பயணிக்கின்றனர் (மகிந்தவின் ஆட்சியின் பின்)

என் அனுபவத்தினை பொறுத்தவரைக்கும் ஹீத் துரு விமான நிலையம் (Heathrow airport), பிராங்க்பேட் விமான நிலையம் ஆகியவற்றை விட இலங்கை விமான நிலையம் வசதி குறைவாயினும் மனிதாபிமானத்துடன் மென்மையாகவே பயணிகளை அணுகுகின்றனர்.

நெடுக்கு, உங்களுக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சனையை கொஞ்சம் தெளிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் அது தொடர்பாக சர்வதேச அமைப்புகளிலும் முறையிடலாம்.


நுணா,
நீங்கள் 2009 இன் பின் இலங்கைக்கு போகவில்லையா? போயிருப்பின் தலைமுடிக்கு வெள்ளை டை அடித்துக் கொண்டா போனீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

நீங்கள் மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு போகவில்லை போல் யாழ்ப்பாணம் மட்டும் போன நீங்கள் போல  யாழ்ப்பாணம் பெரிதாக பாதிக்கப்படவில்லை அதனால் மக்கள் வாழ்க்கை தெரியாமல் போயிருக்கும் :unsure::unsure:

யாழ் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டிருக்கா விட்டாலும்.. யுத்தத்தால் சீரழித்த தேசம். இப்ப இப்ப தான் மக்கள் இயல்பு நிலைக்கு வருகிறார்கள். அந்த மக்களிடம் எங்களின் கடமைகளை பொறுப்புக்களை ஒப்படைப்பது அபந்தம்.  அதனை நாங்க தான் செய்யனும் சிறுகச் சிறுக. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஜீவன் சிவா,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
இந்த பதிவு உங்களின் பல பதிவுகளை வாசித்ததின் பின்னர் எனக்குள் ஏற்பட்ட மனஅங்கலாய்ப்பினால் எழுத வேண்டி வந்தது.

தவிர உங்களுடன் பிணக்குகளை வளர்ப்பதற்காக அல்ல.

பல கருத்துக்களங்களில் மற்றவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபத்தின்  அடிப்படையில் அல்லது ஆய்வின் /அனுபவ முதிர்ச்சியின் அடிப்படையில் வைக்கும் பல நல்ல கருத்துக்களை நீங்கள் அப்பட்டமாக நிராகரித்தும், தூற்றியும் எழுதுவது மிகவும் கவலைக்குரியதொன்று.

இது ஒரு வலைத்தளத்தில் பண்புள்ள ஒருவருடைய கருத்தாக பார்க்கவும் முடியாது.

இதை நான் "பொறுத்து வீடு" தொடர்பான கருத்தாடல்களிலும் , வேறு சில திரிகளிலும் கண்டுள்ளேன்.
இது நெடுக்கால போவான் என்ற தனி நபர் எதிர்கொண்ட அனுபவங்கள். அதை இது புளுகு, பொய், ரீல் என்று சொல்வது சிறுபிள்ளை தனமாக இருக்கிறது.

நெடுக்கரின் பதிவை வாசிக்கும் பொது இலங்கை அரசை ஒரு பிடி பிடித்து எல்லாக் குற்றங்குறைகளையும் பட்டியலிடப் போகும் ஒரு பதிவாகத் தெரிந்தாலும், அவரின் நிறைய அவதானிப்புகள் பிழை இல்லை என்று நானும் சொல்வேன்.

இலங்கை அரசை மேற்கத்திய வளர்ச்சி அடைந்த நாட்டின் செயல்பாடு, பண்புகளோடு ஒத்துப்பார்க்க முடியாது என்பதில் எள்ளளவுக்கும் கருத்து பேதம் இல்லை. இருந்தாலும் இன்று உலகம் சுருங்கி, மக்கள் முதல் மன்னர் வரை அனைத்தும் அறிந்து கொள்ளும் சாத்தியங்கள் இருக்கின்றன. 

சரளமாக சிங்கள கதைக்க, வாசிக்க தெரிந்த எனக்கும் கூட சில சம்பவங்கள் நடந்துள்ளன. 
அதானால் மட்டும், நம் நாட்டையும் , அரசியல் வாதிகளையும்   நான் திட்டவும் மாட்டேன். அதே போல் எதுவுமே நடக்கவில்லை என்று பூசி மெழுகவும் மாட்டேன்.

எது எப்படியோ, நான் எங்கே கூற வந்தது நெடுக்கரின் பதிவு உங்களின் அத்தாட்ச்சியையோ, சான்றிதல்களையோ நோக்கி எழுதப்பட்டதல்ல.

உங்கள் அனுபத்தை போல எல்லோரின் அனுபவங்களும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
அப்படி இன்னும் ஒருவரின் அனுபவம் உங்களுக்கு விசித்திரமாக படும் பொழுது அப்படியா செய்தி என்று விட்டு  
(நிழலி போன்று) உங்கள் அனுபவ பதிவை இடுங்கள்.

இப்படி எழுதியது அதிகப் பிரசங்கி தனமென்றால்  மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நிழலி said:

செப்ரம்பரில் கடவுசீட்டை பார்த்த குடிவரவு அதிகாரி திமிராக 'கப்பலிலா கனடா போனாய்" என்று கேட்க, "ஏன் உன்ர சிஸ்ரத்தில் நான் ஆரு என்று தெளிவாக தகவல் போட்டு இருக்கும்... அதில் அப்படியா இருக்கு?" என்று கேட்டதை தவிர வேறு எதுவும் நிகழவில்லை.

இதே வகையான ஒரு பிரச்சனை தான். சிஸ்டத்தில் இலங்கையை விட்டு போன திகதி காட்டுதில்லை.. உள்ள அனுமதிக்க முடியாது..என்று தான் தொடங்கினவர். இலங்கையை விட்டு வெளியேறி நீண்ட காலம் பாஸ்போட்டும் நாடும் மாறிவிட்டது என்று விளக்கியும் தன்ர நிலையில்.. விடாப்பிடியாக நின்றார். அந்நியச் செலவாணிப் பறிப்பில் நாட்டமுள்ள அதிகாரி போல. சி ஐ டி அதுஇதென்று வெருட்டினார். நாங்க அசறவில்லை. திருப்பி திருப்பி பதில் சொல்லிக்கிட்டே நிற்க வேறு வழியில்லாமல்.. தான்  உதவி செய்யுறன்.... பதிலுக்கு நீயும் உதவனும் என்றார். அவர் என்ன உதவி கேட்கிறார் என்று புரியவில்லை ஆரம்பத்தில். இறுதியில் சிறிய தொகையை கொடுத்திட்டு வெளியேறினது தான். சி ஐ டி  அதுஇதென்னு கூட்டிக் கொண்டு போய் எல்லாருமா சேர்ந்து கொள்ளை அடித்து பங்குபோட அனுமதிப்பதிலும்.  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டி நிறையக் காசு கொண்டு,நுனி நாக்கில ஆங்கிலம் கதைத்து பந்தா காட்டினால் காசு பறிப்பான் தானே!...பார்லிமென்ட்டுக்கு முன்னாலே போய் ஆர்ப்பாட்டம் செய்து போட்டு அந்த வருடமே ஊர் போய் வந்த கணக்கப் பேர் இருக்கினம். முக்கியமாக இள வயது மாணவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடவுச்சீட்டில் பயணம் செய்யும் போது எனக்கு ஒரு பிரச்சனையும் ஏற்பட்டதில்லை, முதன் முதலாக பிரித்தானிய கடவுச்சீட்டில் பயணிக்கும் போது இங்கு எம்பசியில் எடுத்த 3 மாத விசாவுடன் ( 30 நாட்களுக்கு அதிகமாக நின்றதால்) சென்றேன், 

குடிவரவு அதிகாரி சிஸ்டத்தில் இலங்கையைவிட்டு வெளியேறிய திகதி காட்டுதில்லை என்று இழுத்த உடனேயே " இத்தனையாம் திகதி இன்ன கிழமை, மாதம் வந்து இத்தனை நாள் நின்று இத்தனையாம் திகதி வெளிக்கிட்டன்" என்று கூறியவுடன் சட்டென குத்தித்தந்தார் கடவுச்சீட்டை.

பெண் குடிவரவு அதிகாரி இருக்கும் பக்கம் செல்லுங்கள், இப்படியான சில்லறைத்தனமான விடயங்கள் செய்வது குறைவு.

(முன்னர் தனித்தனியான வரிசை இருந்தது இப்போது 3 அதிகாரிகளுக்கு ஓர் வரிசை என்று மாற்றிவிட்டார்கள்).

8 minutes ago, ரதி said:

பெட்டி நிறையக் காசு கொண்டு,நுனி நாக்கில ஆங்கிலம் கதைத்து பந்தா காட்டினால் காசு பறிப்பான் தானே!...பார்லிமென்ட்டுக்கு முன்னாலே போய் ஆர்ப்பாட்டம் செய்து போட்டு அந்த வருடமே ஊர் போய் வந்த கணக்கப் பேர் இருக்கினம். முக்கியமாக இள வயது மாணவர்கள்.

அப்படி சென்று வந்த இள வயது மாணவர்கள் இங்கு செய்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

இலங்கை கடவுச்சீட்டில் பயணம் செய்யும் போது எனக்கு ஒரு பிரச்சனையும் ஏற்பட்டதில்லை, முதன் முதலாக பிரித்தானிய கடவுச்சீட்டில் பயணிக்கும் போது இங்கு எம்பசியில் எடுத்த 3 மாத விசாவுடன் ( 30 நாட்களுக்கு அதிகமாக நின்றதால்) சென்றேன், 

குடிவரவு அதிகாரி சிஸ்டத்தில் இலங்கையைவிட்டு வெளியேறிய திகதி காட்டுதில்லை என்று இழுத்த உடனேயே " இத்தனையாம் திகதி இன்ன கிழமை, மாதம் வந்து இத்தனை நாள் நின்று இத்தனையாம் திகதி வெளிக்கிட்டன்" என்று கூறியவுடன் சட்டென குத்தித்தந்தார் கடவுச்சீட்டை.

பெண் குடிவரவு அதிகாரி இருக்கும் பக்கம் செல்லுங்கள், இப்படியான சில்லறைத்தனமான விடயங்கள் செய்வது குறைவு.

(முன்னர் தனித்தனியான வரிசை இருந்தது இப்போது 3 அதிகாரிகளுக்கு ஓர் வரிசை என்று மாற்றிவிட்டார்கள்).

அப்படி சென்று வந்த இள வயது மாணவர்கள் இங்கு செய்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

மீரா, ஊர் போய் வந்த பிற்கு அவர்கள் செய்ததைப் பற்றி நான் கதைக்க வரேல்ல...எப்படி அவர்கள் ஊருக்குப் போனார்கள் என்பதையே சொன்னேன்:mellow:.தவிர நெடுக்கு இப்படி நடக்கவில்லை என்றும் சொல்ல வரேல்ல.நடந்திருக்கு அதற்கான காரணத்தைத் தான் சொன்னேன்...அவர் பல வருடம் கழித்துப் போவதால் எல்லாம் மாறி இருக்கும்...வெருண்டு கொண்டு நின்டு இருக்கலாம்:rolleyes:, தவிர அந்த அதிகாரிக்கு நெடுக்கரின் முகத்தைப் பார்த்தவுடனேயே ஏமாத்தலாம் என்டு தெரிஞ்சிருக்குtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

தவிர அந்த அதிகாரிக்கு நெடுக்கரின் முகத்தைப் பார்த்தவுடனேயே ஏமாத்தலாம் என்டு தெரிஞ்சிருக்குtw_blush:

பச்சை இதற்குத்தான் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.