Jump to content

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விசுகு said:

 

நாம் ஏன் கனடிய அமெரிக்க பூர்வீகக்குடிமக்களை மறைத்து பேசுகின்றோம்??

சிறீலங்காவில்  தமிழர்களும் அதே நிலைக்குத்தான் வருவார்கள் என்ற முன் நோக்குதலாலா????

விசுகர்! மாற்றுக்கருத்துக்களை மூட்டை மூட்டையாய் கட்டிக்கொண்டு திரியிறவையள்... உதுக்கும் ஒரு காரணம்/கருத்து வைச்சிருப்பினம் கண்டியளோ..tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 349
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! மாற்றுக்கருத்துக்களை மூட்டை மூட்டையாய் கட்டிக்கொண்டு திரியிறவையள்.... உதுக்கும் ஒரு காரணம்/கருத்து வைச்சிருப்பினம் கண்டியளோ.tw_blush:

வாடகை  வீட்டுக்கும்

சொந்த வீட்டுக்கும்  வித்தியாசம் தெரியாதவர்களாக இருக்கமுடியுமா  அண்ணா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

1990 இறுதியிலேயே முற்றான முடிவு ஒன்றை எடுத்துவிட்டேன் 
இந்த இனத்துக்கு உயிரை கொடுப்பதெல்லாம் ஒரு மொக்கு வேலை என்று.
போராளிகளை பார்த்தால் எனக்கு பாவமாக இருந்தது 

 

பலர் இந்த தரிசனத்தை அடைந்திருக்கின்றார்கள் (என்னையும் சேர்த்துத்தான்). ஆனால் உண்மையிலேயே விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மண்ணுக்காகத் தம்முயிர்களைத் தியாகம் செய்தவர்களை முழுவதுமாக மறந்துகொண்டுபோகும் நிலை கூட முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னால் உள்ள தமிழர்களின் பிளவுண்ட அரசியலால்தான் ஏற்பட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

..... எதிரியின் நோக்கமே அடித்து பிழிந்து போட்டால் சோறு தந்தாலே போதும் என்று சொல்வார்கள் அப்படியே விட்டு விடலாம் என்பதுதான்...

கசப்பான உண்மை நிலை இதுதான்..

முன்னர் ஈழத்திற்கு ஆதரவாயிருந்த குரல்கள் பம்மி, இப்பொழுது சுருதி மாறி, 'நம் மணித் திருநாட்டில் ஏன் ஒன்றாக வாழ முடியாது..?' என நியதிகள் பேசுவதை கேட்க முடிகிறது.. இந்த மக்கள் 'பெரும்பான்மை இனத்தோடு' எழுபதுகள் வரை நகமும், சதையுமாக வளமுடன் வாழ்ந்தவர்கள்தானே..? இடையில் ஏன் தடுமாற்றம், போராட்டம், உயிரழப்புகள்..? இப்பொழுது மீண்டும் சுயமாற்றம்..?

இது வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக்கொண்டு, 'விதியே' என்று வந்த மாற்றம்தான்..!

ஆழ்ந்த வருத்தங்கள்.. vil-triste.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

1990களில் மீண்டும் யுத்தம் தொடங்கியபோது கொழும்பில் இருந்து 
மீண்டும் யாழ் சென்றுவிடேன் 
போராடத்தில் இணையும் எண்ணம்தான் முக்கிய காரணியாக இருந்தது 
நான் இணைந்தாலும் ... என் மீது ஒரு சந்தேக பார்வை அவர்களுக்கு இருக்கும் 
என்ற எண்ணமும் எனக்குள் இருந்தது.
ஊரில் போய் நிக்க பவுன் கேட்டு வந்தார்கள் ...
கொடுக்க உண்மையிலே எம்மிடம் பவுன் இல்லை .. பார்க்க அவர்களுக்கும் அது 
புரிந்தது ஓகே என்று விட்டு போனார்கள் ...
கூட கொஞ்ச வாலுகள் திரியும் ... அதுகள் போட்டு கொடுத்து இருந்தார்கள் 
இவர்கள் முன்பு வேறு இயக்கம் நீங்கள் இப்படி கேட்டால் தாரமாட்ட்டார்கள் என்று.
அப்போ பாரதிதான் எமது ஊரில் பவுன் சேர்த்தார் ... ஒருநாள் ரோட்டில் கண்டு முகாமுக்கு வர சொன்னார் 
சென்றேன் இப்போதே பவுன் வேண்டும் இல்லை என்றால் பிடித்து பங்கர் வெட்ட அனுப்புவேன் என்றார். 
தருவதற்கு உண்மையிலேயே பவுன் இல்லை என்றேன் ....அப்படியே கொண்டு சென்று 
பருத்தித்துறையில் ஒரு முகாமில் ஒரு ரூமில் பூட்டிவிட்டார்கள் ..பின்பு இரண்டு நாள் கழித்து 
ஒரு எல்ப் வாகனத்தில் ஏற்றி சென்று காங்கேசன்துறை சீமெந்து பக்டரியில் இறக்கி விடார்கள்  ....
பின்பு என்ன பங்கர் வெட்டுத்தான் .. அங்கே சென்றியில் நிக்கும் பெடியள் எல்லாம் சின்ன 
பெடியள் 15- 17 வயதுக்கு உள்ளேதான் அதிகம் .... எனக்கு அவர்களை பார்க்க பாவமாக இருக்கும்.
இரவு 10-11 மணிக்கு எல்லாம் ஆமியின் சென்றி அருகுகளுக்கு சென்றுவிடுவார்கள் சென்று மிதிவெடி வைப்பது .... நான் இருக்கும்போது இவர்களுக்கும் ஆமிக்கு இடையில் இருந்த இரண்டு வீடுகளை 
சக்கை வைத்து இறக்கினார்கள் அந்த இரண்டு வீடும் ஆமிக்கு அருகில்தான் இருந்தது.
அவன் செல்லடியில் இருந்து துப்பாக்கி எல்லாவற்றாலும் போட்டு சுடு சுடு என்று சுட்டான் 
இவர்களுக்கு ...அதை பற்றி எண்ணம் இல்லை வீடு மட்டமாக இறங்கியதா என்று பார்க்க மீண்டும் 
நான்கு பேர் திரும்பி போனார்கள். 1990 ஆண்டு தீவாளி அன்று பலாலியில்  இருந்து ஆமி கட்டுவன் வரை வந்துவிட்டான் அப்போ மாறி மாறி இங்கு பலரும் வந்தார்கள்.
அப்போ ஈழநாதம் பத்திரிகை பொறுப்பாக இருந்த அழகனும் வந்தார் எனக்கு அவரை தெரியும் 
அவரை இந்திய இராணுவம் கைது செய்து கே கே எஸ்சில் வைத்திருந்தார்கள் அப்போது அவர்களுக்கு சில 
உதவிகளை நான் செய்து இருந்தேன் .. என்ன இங்கே என்று கேட்டார் 
நான் நடந்ததை சொல்ல ...அவர்தான் என்னை போகும்படி கலைத்துவிடடார். 

அப்படியே யாழ் சென்று கொஞ்சம் உதவலாம் என்று யோசித்தேன் 
அப்போதான் யாழ்நகரம் வெளி நகரம் என்று எல்லா இடமும் திரிய நேர்ந்தது 
மக்களின் போக்கும் ....
எமது இனத்தின் சுயநல சிந்தனையும் அப்போதான் கொஞ்சம் கொஞ்சம் 
புரிய தொடங்கியது 
இந்த இனத்துக்கு போராடி நான் இறந்து போனாலும் பின்னாளில் 
போராட்டம் எமக்கு இடைஞ்சலாக இருந்தது என்று இந்த இனம் தூற்றினாலும் 
தூற்றும் ... என்று அப்போது எண்ணினேன்.
இறுதியில் அதுதான் நடந்து.
1990 இறுதியிலேயே முற்றான முடிவு ஒன்றை எடுத்துவிட்டேன் 
இந்த இனத்துக்கு உயிரை கொடுப்பதெல்லாம் ஒரு மொக்கு வேலை என்று.
போராளிகளை பார்த்தால் எனக்கு பாவமாக இருந்தது 
போயும் போயும் இந்த இனத்துக்கு இவர்கள் உயிரை கொடுக்க போகிறார்களே என்று.
பின்பு ஊர் திரும்பி ... மீண்டும் கொழும்பு செல்வது என்று முடிவு செய்துவிட்ட்டேன்.

அப்போ பாஸ் நடைமுறை வந்துவிட்டது .. ஊருக்கு போனால் 
வாலுகள் கொஞ்சம் இருக்கிறது எனக்கு கண்ணிலும் காட்ட முடியாது 
நான் பாஸுக்கு போனால் தரவே மாட்டார்கள் என்று தெரியும்.
நேராக வல்வெட்டித்துறை போனேன் ... அப்போ சூசையுடன் ஒரு 
கசப்பான அனுபவம் நேர்ந்துவிட்ட்து 
காற்றுக்கு என்ன வேலி ? என்றுவிட்டு பாஸ் இல்லாமலேயே வந்தேன் 
பாஸ் செக் பண்ணும் இடத்தில் எல்லோரும் வரிசையில் நிக்கும்போது 
நான் ரோட்டிலே நடந்து போனானேன் யாரும் ஒன்றும் கேட்கவில்லை.
அதன் பின்பு 2005இல் தான் சென்றேன். 

பின்பு அங்கு திரிந்து இங்கு திரிந்து 
நன்பர்கள் ஒரு சித்தப்பா உதவியுடன் ஒரு ஐரோப்பிய நாட்டை எட்டினேன்.
அங்கு இருக்கும்போதுதான் உணர்ந்தேன் எனக்கு என்று ஒரு நாடு மொழி தனித்துவம் 
இல்லாதவன் யாவரும் பரதேசிகள்தான் என்று.
அப்படியே அடுத்த கட்டமாக அமெரிக்கா வந்தேன்.
இங்கு பிரஜாவுரிமை பெற்று ஒரு அமெரிக்கன் போலவே வாழ்கிறேன் 
நான் அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியாது இங்கு பிறக்காத காரணத்தால் 
எனது பிள்ளை வேண்டுமானால் ஜனாதிபதியும் ஆகலாம்.
அந்நிய நாட்டில் எனக்கு கிடைத்த உரிமை கூட ..
சொந்த நாட்டில் என் சொந்தகளுக்கு இல்லை எனும்போது 
ஆயுதம் ஏந்திதான் போராடவேண்டும் என்று இல்லை ...
அடிமையாக எவ்வளவு காலம் கிடப்பது என்ற கேள்விதான் இருக்கிறது.
இதற்கு விடை காணுவது என்பது 
வெறும் தூண்டுதல் அல்ல ...... எதிரியின் நோக்கமே அடித்து பிழிந்து போட்டால் 
சோறுதந்தாலே போதும் என்று சொல்வார்கள் அப்படியே விட்டு விடலாம் என்பதுதான்.
எனக்கான உரிமைக்கு ... நான்தான் குரல் கொடுக்க முடியும். 
 

வணக்கம்  மருதர்

எனக்கு உங்கள்  கருத்துடன்  உடன்பாடில்லை

உங்கள்  இந்த கருத்தும் ஒரு ஆதங்கமும் கோபமுமாக இருக்க முடியுமே தவிர

உண்மையாக இருக்கமுடியாது

ஒரு தோல்வி கருத்தையும் தீர்மானிக்குமா?

இதே வெற்றியிடைந்திருந்தால்.....???

விடுதலைப்போர் சார்ந்து சரியாகத்தான் செயற்பட்டோம் என்ற  நம்பிக்கை  என்றுமே எனக்குண்டு.

அது உங்களுக்குமுண்டு என்பது தெரியும்.

30  வருடங்களை  வீணாக்கிவிட்டதாக

தற்பொழுதும் வீணாக்கிவருவதாக நான்  ஒரு போதும் நினைக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

கசப்பான உண்மை நிலை இதுதான்..

முன்னர் ஈழத்திற்கு ஆதரவாயிருந்த குரல்கள் பம்மி, இப்பொழுது சுருதி மாறி, 'நம் மணித் திருநாட்டில் ஏன் ஒன்றாக வாழ முடியாது..?' என நியதிகள் பேசுவதை கேட்க முடிகிறது.. இந்த மக்கள் 'பெரும்பான்மை இனத்தோடு' எழுபதுகள் வரை நகமும், சதையுமாக வளமுடன் வாழ்ந்தவர்கள்தானே..? இடையில் ஏன் தடுமாற்றம், போராட்டம், உயிரழப்புகள்..? இப்பொழுது மீண்டும் சுயமாற்றம்..?

இது வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக்கொண்டு, 'விதியே' என்று வந்த மாற்றம்தான்..!

ஆழ்ந்த வருத்தங்கள்.. vil-triste.gif

எல்லாப் பொறுப்பும் தமிழ்-சிங்கள அரசியல் வாதிகளுக்கே சேரும்.tw_angry:

ன்னுடன் ஒரு கோசவா நாட்டுக்காறன் வேலை செய்கிறான்.அவனின் பக்கத்து வீட்டல் முன்பு 2 மாவீரரன் எம்மின தகப்பன் ஒருவர் வசித்திருந்ததால் அவனுக்கு எமது பிரச்சனைகள் அத்துப்படி.இப்ப எப்ப பாத்தாலும்.எங்கள் போராட்டம் வீணாக போய்விட்டது இப்படி இடையில் விட்டிருக்க குடாது அத இது என்று எப்பவும் ரோதனை.ஒரு நாள் கேட்டேன் இப்ப உங்களுக்கு நீங்கள் விரும்பிய சுகந்திரம் கிடைத்து விட்டது தானே ஏன் நி இன்னும் இங்கு இருக்கிறாய் என்று.அதற்க்கு தனது எல்லாப்பிள்ளைகளும் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள்.நான் மட்டும் அங்கு போய் எப்படி வாழ்வது என்று.இது தான் எமக்கு விடிவு கிடைத்திருந்தாலும் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

கசப்பான உண்மை நிலை இதுதான்..

முன்னர் ஈழத்திற்கு ஆதரவாயிருந்த குரல்கள் பம்மி, இப்பொழுது சுருதி மாறி, 'நம் மணித் திருநாட்டில் ஏன் ஒன்றாக வாழ முடியாது..?' என நியதிகள் பேசுவதை கேட்க முடிகிறது.. இந்த மக்கள் 'பெரும்பான்மை இனத்தோடு' எழுபதுகள் வரை நகமும், சதையுமாக வளமுடன் வாழ்ந்தவர்கள்தானே..? இடையில் ஏன் தடுமாற்றம், போராட்டம், உயிரழப்புகள்..? இப்பொழுது மீண்டும் சுயமாற்றம்..?

இது வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக்கொண்டு, 'விதியே' என்று வந்த மாற்றம்தான்..!

ஆழ்ந்த வருத்தங்கள்.. vil-triste.gif

உண்மை  சுடும் ஐயா

அது தான்  நாம் உண்மையை  தரிசிக்காது 

பொய்களை  மூட்டை மூட்டையாக இறக்கி

உண்மையை  சுற்றி அடுக்கி அதை மறைக்க முயல்கின்றோம்

தமிழர்கள் யாரால் சுயாட்சி கேட்டார்கள்?

யாரால் சத்தியாக்கிரகத்துக்கு தள்ளப்பட்டார்கள்?

யாரால் கத்தி  எடுத்தார்கள்?

யாரால் சயனற் எடுத்தார்கள்?

யாரால் தற்கொடையாளிகளானார்கள்?

ஆயுதங்களை தருவித்தார்கள்??

அவர்களை  விட்டு விட்டு 

நாம  தான்  பிழை  விட்டுட்டமோ??

சரி

நல்லாட்சி  நடக்கும் நாட்டில்

தமிழர்களின் வாக்கில்  வந்த ஆட்சியில் பயங்கரவாத தடுப்பு சட்டம் எதற்கு???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

உண்மை  சுடும் ஐயா

அது தான்  நாம் உண்மையை  தரிசிக்காது 

பொய்களை  மூட்டை மூட்டையாக இறக்கி

உண்மையை  சுற்றி அடுக்கி அதை மறைக்க முயல்கின்றோம்

தமிழர்கள் யாரால் சுயாட்சி கேட்டார்கள்?

யாரால் சத்தியாக்கிரகத்துக்கு தள்ளப்பட்டார்கள்?

யாரால் கத்தி  எடுத்தார்கள்?

யாரால் சயனற் எடுத்தார்கள்?

யாரால் தற்கொடையாளிகளானார்கள்?

ஆயுதங்களை தருவித்தார்கள்??

அவர்களை  விட்டு விட்டு 

நாம  தான்  பிழை  விட்டுட்டமோ??

சரி

நல்லாட்சி  நடக்கும் நாட்டில்

தமிழர்களின் வாக்கில்  வந்த ஆட்சியில் பயங்கரவாத தடுப்பு சட்டம் எதற்கு???

இல்லை, நான் போராடத்தை, தியாகத்தை எங்குமே தரக்குறைவாகவோ, இகழ்வாகவோ குறை சொன்னது இல்லை. ஒற்றுமையின்றி, நிலையில்லா மன மாற்றத்தை மட்டுமே சுட்டுகிறேன்.. இப்படி சடுதியில் மாறும் மனங்களுக்கா இவ்வளவு துயரங்களும், உயிரழப்புகளும்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

 1- இல்லை, நான் போராடத்தை, தியாகத்தை எங்குமே தரக்குறைவாகவோ, இகழ்வாகவோ குறை சொன்னது இல்லை.

 

 

2- ஒற்றுமையின்றி, நிலையில்லா மன மாற்றத்தை மட்டுமே சுட்டுகிறேன்.. இப்படி சடுதியில் மாறும் மனங்களுக்கா இவ்வளவு துயரங்களும், உயிரழப்புகளும்..?

1 - தெரியும் சகோதரா..

நானும் எய்தவன் இருக்க அம்பை (புலிகளை) நோகும் நிலையையே எழுதினேன்

 

2- இது சடுதியான மனமாற்றம்  இல்லை சகோதரா

எமது தகுதிக்கும் எமது கொள்ளளவுக்கும் அப்பால்  சென்றும்

எல்லாம் செய்து பார்த்தாச்சு

அதனால் தான் புலிகள் 2009 இல் நாம் வென்றிருப்போம் அல்லது நாம்இல்லாதிருப்போம்

என்றமுடிவுக்கு வந்தனர்.  இல்லையென்றால்  காட்டுப்பகுதிகளை நோக்கி  நகர்ந்து

 இப்பொழுதும் கெரில்லாப்போர்  தொடர்ந்தபடி இருந்திருக்கும்.

ஆயுதங்களை மௌனிப்பது என்பதன் பொருள் 

எமக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கவில்லை

ஆயுதங்களை மௌனித்து வேறு வழிகளில்பெறுவோம் என்பது தான்.

அந்த வழியை  தீர்மானிப்பதில் தான் 8 வருடங்களாக.........??????

ஆனாலும் சிங்களம் எள்ளளவும் மாறவில்லை

எதையும் தரமுயலவுமில்லை..

முயலப்போவதுமில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வணக்கம்  மருதர்

எனக்கு உங்கள்  கருத்துடன்  உடன்பாடில்லை

உங்கள்  இந்த கருத்தும் ஒரு ஆதங்கமும் கோபமுமாக இருக்க முடியுமே தவிர

உண்மையாக இருக்கமுடியாது

ஒரு தோல்வி கருத்தையும் தீர்மானிக்குமா?

இதே வெற்றியிடைந்திருந்தால்.....???

விடுதலைப்போர் சார்ந்து சரியாகத்தான் செயற்பட்டோம் என்ற  நம்பிக்கை  என்றுமே எனக்குண்டு.

அது உங்களுக்குமுண்டு என்பது தெரியும்.

30  வருடங்களை  வீணாக்கிவிட்டதாக

தற்பொழுதும் வீணாக்கிவருவதாக நான்  ஒரு போதும் நினைக்கவில்லை.

 

மருதர் 90 வரை இருந்து தன்னால் முடிந்தளவு எல்லாவற்றையும் முயன்று பார்த்துவிட்டு வெளியே வந்தார்.

ஆனால் 83  வெடிச்சத்தத்தை நேரடியாகக் காணமல் வெளிநாடு வந்தவர்களுக்கு உண்மைநிலை தெரிந்திருக்காதுதான்.

 இரு தலைமுறை தாண்டும்போது போராட்டம் நடந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும் என்பதுதான் இப்போதைய அரசியல் நடப்புகளை வைத்துச் சொல்லக்கூடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

மருதர் 90 வரை இருந்து தன்னால் முடிந்தளவு எல்லாவற்றையும் முயன்று பார்த்துவிட்டு வெளியே வந்தார்.

ஆனால் 83  வெடிச்சத்தத்தை நேரடியாகக் காணமல் வெளிநாடு வந்தவர்களுக்கு உண்மைநிலை தெரிந்திருக்காதுதான்.

 இரு தலைமுறை தாண்டும்போது போராட்டம் நடந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும் என்பதுதான் இப்போதைய அரசியல் நடப்புகளை வைத்துச் சொல்லக்கூடியது.

சரி

நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம்

அப்படியென்றால் வெளியில் வந்த பின்

எதற்காக அந்த போராட்டத்தை ஆதரித்தீர்கள்??

முண்டு கொடுத்தீர்கள்??

இது அதைவிட  முட்டாள்தனம்   இல்லையா???

Link to comment
Share on other sites

36 minutes ago, விசுகு said:

சரி

நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம்

அப்படியென்றால் வெளியில் வந்த பின்

எதற்காக அந்த போராட்டத்தை ஆதரித்தீர்கள்??

முண்டு கொடுத்தீர்கள்??

இது அதைவிட  முட்டாள்தனம்   இல்லையா???

தமது குற்ற மனசாட்ச்சியை மறைக்கவும், சமூகத்திலே தாமும் இருக்கிறோம் எனக்காட்டவும் பதவி ஆசைகளுக்காகவும் அண்ணா. புலம்பெயர்ந்தவர்களது பிள்ளைகள் எல்லாரும் நல்ல யூனிகளில் படிப்பு, சிறந்த நிறுவனங்களில் வேலை, ஆனால் ஊரிலிருப்பவர்களின் பிள்ளைகள் இவர்களின் கனவுகளுக்காக போராட வேண்டும். எப்படி ஐயா இது நியாயமாக இருக்க முடியும்? அதனை விடப் போராடித் தோற்ற பலர் வாழக்கையை கொண்டு நடாத்த, பிள்ளைகளைப் படிப்பிக்க படும் பாட்டை நேரடியாகக் கண்டால் மக்களின் சிந்தனை ஏன் மாறிவிட்டது எனப் புரியும். புலத்திலிருந்து போராட்டத்திற்கு கொடுத்த காசிற்கும் அவர்கள் நேரடியாக அனுபவித்த கஷ்டங்களுக்கும் இடைவெளி மிக அதிகம். போரினால் அவர்கள் இழந்ததும் அதிகம். சில முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் சந்தர்ப்பம் 2011 போயிருந்தபோது ஏற்றப்பட்டது. அவர்களுடன் பேசி அவர்களின் மனா நிலையை அறிந்திருக்கிறேன். நான் இதை யாழில் முன்பு குறிப்பிட்டதும் இல்லை இப்போதும் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் உண்மைமுகம் பலருக்கு தெரியாது என்பதால் குறிப்பிடவேண்டி வந்துவிட்டது. அவர்கள் தங்கள் காலில் நிற்கிறார்கள், கவுரவமாக வாழ்கிறார்கள் என்ற மன நிறைவு இருக்கிறது. இதைவிட மேலதிகமாகக் குறிப்பிடவும் விரும்பவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Thumpalayan said:

தமது குற்ற மனசாட்ச்சியை மறைக்கவும், சமூகத்திலே தாமும் இருக்கிறோம் எனக்காட்டவும் பதவி ஆசைகளுக்காகவும் அண்ணா. 

இதற்கு  நான் பதில் எழுதுவதைவிட

மருதரும் கிருபனும் எழுதட்டும்.

அதுவே சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

சரி

நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம்

அப்படியென்றால் வெளியில் வந்த பின்

எதற்காக அந்த போராட்டத்தை ஆதரித்தீர்கள்??

முண்டு கொடுத்தீர்கள்??

இது அதைவிட  முட்டாள்தனம்   இல்லையா???

போராட்டம் தொடர்ந்து நடந்தால்தானே அதைவைத்து புலம்பெயர் நாடுகளில் சொந்த பந்தங்களோடு கால் ஊன்றலாம், பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கலாம், வியாபாரம் பெருக்கலாம், சுய தம்பட்டம் அடிக்கலாம் என்று பல காரணங்கள் இருந்தது :) கால் ஊன்றிய பின்னர் போராட்டம் நின்றால்தான் ஊருக்குப் போகலாம், இன்னும் படம் காட்டலாம் என்ற நினைப்பும் வந்தது! சமாதான காலம் அதுக்கும் உதவி செய்ததுதானே!

புலம்பெயர்ந்தவர்கள் கையில் போராட்டத்தை ஒப்படைத்த புலிகளின் தலைமையை விட இதில் என்ன முட்டாள்தனம் இருக்கு!

நிற்க,

தமிழர்கள் உரிமைகளோடு வாழ, அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள 90களிலும், 2000 களிலும் புலிகள் பலம் வாய்ந்திருந்தபோது ஒரு நம்பிக்கை இருந்தது. அந்தப் பலத்தை ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் செல்லப் பயன்படுத்தாமல் அழிந்தபோது தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை சுத்தமாகப் போய்விட்டது.

இப்போது தமிழர்கள் சிங்களவர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு வெட்டியோடவும், சுழித்தோடவும் பழகிவிட்டார்கள் என்பதால் அரசியல் உரிமைகள் இரண்டாம்பட்சமாகிவிட்டது.  இந்த யதார்த்தையும் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

 1- போராட்டம் தொடர்ந்து நடந்தால்தானே அதைவைத்து புலம்பெயர் நாடுகளில் சொந்த பந்தங்களோடு கால் ஊன்றலாம், பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கலாம், வியாபாரம் பெருக்கலாம், சுய தம்பட்டம் அடிக்கலாம் என்று பல காரணங்கள் இருந்தது :) கால் ஊன்றிய பின்னர் போராட்டம் நின்றால்தான் ஊருக்குப் போகலாம், இன்னும் படம் காட்டலாம் என்ற நினைப்பும் வந்தது! சமாதான காலம் அதுக்கும் உதவி செய்ததுதானே!

புலம்பெயர்ந்தவர்கள் கையில் போராட்டத்தை ஒப்படைத்த புலிகளின் தலைமையை விட இதில் என்ன முட்டாள்தனம் இருக்கு!

நிற்க,

2 - தமிழர்கள் உரிமைகளோடு வாழ, அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள 90களிலும், 2000 களிலும் புலிகள் பலம் வாய்ந்திருந்தபோது ஒரு நம்பிக்கை இருந்தது. அந்தப் பலத்தை ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் செல்லப் பயன்படுத்தாமல் அழிந்தபோது தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை சுத்தமாகப் போய்விட்டது.

 3- இப்போது தமிழர்கள் சிங்களவர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு வெட்டியோடவும், சுழித்தோடவும் பழகிவிட்டார்கள் என்பதால் அரசியல் உரிமைகள் இரண்டாம்பட்சமாகிவிட்டது.  இந்த யதார்த்தையும் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்.

உங்கள்  கருத்துக்கள் வேண்டுமேன்றே எழுது போல் தான் தெரிகிறது

யதார்த்தத்தோடு இல்லை

1- என்னைப்பொறுத்தவரை 77 கலவரத்துக்கு   முற்பட்ட  காலப்பகுதியில்  புலம் பெயர வேண்டிய தேவையோ 

வெளியில் சென்று உழைக்க வேண்டியோ தமிழருக்கு இருந்ததில்லை..

புலத்தில் இன்று இருப்பதைவிட  விட வசதியாகவும் கல்வியில் உயர்ந்தும்   இருந்தவர்கள் தான் நாம்.

 

2- அந்த பலத்தை தந்தவர்கள் ஒரு 10 வீதம் மட்டுமே.  மற்றவர் இதே போல் வேடிக்கையும் மதில் மேல் பூனையாகவும் இருந்தவர்களே.  அவர்களே தோல்விக்கும் பலமிழப்புக்கும்  பதில் சொல்லணும்.  இப்பொழுது அழுது புலம்புவதில் என்ன பயன்??

 

3- அப்படியானால் எதற்காக வடக்கு கிழக்கு  மக்கள் சுயாட்சிக்காகவும் 

தேசியக்கட்சிகளைத்தவிர்த்து

கூட்டமைப்புக்கும் வாக்களிக்கிறார்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா,

நீங்கள் குறிப்பிட்ட கேள்விகள் எல்லாம் அலசித் துவைத்து எல்லாம் நைந்து நூலாகி யாழில் பல இடங்களில் உள்ளது.

முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்து 8 வருடம் முடிந்த பின்னர் தாயகத்தில் உள்ள மக்களின் அரசியல் நிலைப்பாடும், புலம்பெயர் நாடுகளில் இன்னமும் அரசியல் பேசுபவர்களின் நிலைப்பாடும் வேறு வேறு கோடுகளில் பயணிப்பதாகத்தான் தெரிகின்றது.

எனவே, தாயக மக்களின் வாழ்வு வளம்பெற இலங்கை அரசியல் இடைஞ்சலாக உள்ளது என்று அங்கு வசிப்பவர்கள் நினைக்குமட்டும் எதிர்ப்பரசியல் காரணமாக கூட்டமைப்புக்கு வாக்கு விழும். ஆனால் மக்கள் தம்பாட்டுக்கு தம்மை முன்னேற்ற எல்லா வழிகளையும் தொடர்ந்தும் முயன்றுகொண்டுதான் இருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூரூப்பில் கண்டதை இங்கே இணைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

வணக்கம்  மருதர்

எனக்கு உங்கள்  கருத்துடன்  உடன்பாடில்லை

உங்கள்  இந்த கருத்தும் ஒரு ஆதங்கமும் கோபமுமாக இருக்க முடியுமே தவிர

உண்மையாக இருக்கமுடியாது

ஒரு தோல்வி கருத்தையும் தீர்மானிக்குமா?

இதே வெற்றியிடைந்திருந்தால்.....???

விடுதலைப்போர் சார்ந்து சரியாகத்தான் செயற்பட்டோம் என்ற  நம்பிக்கை  என்றுமே எனக்குண்டு.

அது உங்களுக்குமுண்டு என்பது தெரியும்.

30  வருடங்களை  வீணாக்கிவிட்டதாக

தற்பொழுதும் வீணாக்கிவருவதாக நான்  ஒரு போதும் நினைக்கவில்லை.

 

சமூகத்தின் மீது ... இனத்தின் மீது வந்த ஒரு வெறுப்பாக கூட 
இது இருக்கலாம் ...
நான் அறிவாளி நான் இந்த பள்ளியில் படித்தேன் 
அந்த பாரில் குடித்தேன் என்ற தலைக்கணம் மட்டும் 
எங்கும் அளவு குறையாது இருக்கிறது ... எதாவது படித்து இருந்தால் 
அதை வைத்து என்ன கிழித்தேன் என்ற எண்ணமோ 
எதையாவது கிழிக்க வேண்டும் என்ற எண்ணமோ யாருக்கும் இருக்கவில்லை.
அப்படி இருந்தவர்கள் ஒரு சிலர் தங்களை இயக்கங்களில் சேர்த்து 
இறந்து போனார்கள். 

எப்படி நகர்ந்தாலும் இந்த போராட்டம் 
ஏழைகளின் தலையில்தான் போய் விழும் என்பதை 
அப்போதே என்னால் உணர முடிந்தது.
சின்ன வயதில் கொமினிஷியம் ... பொதுவுடைமை சிர்த்தார்த்தங்கள் 
என்னை கொஞ்சம் ஈர்த்து கொண்டதால் ..பணக்காரவர்க்கம் 
பாட்டாளி வர்க்கத்தை சுரண்டபோகிறது அதற்குத்தான் இந்த போர் 
இறுதியில் உதவப்போகிறது என்ற ஒரு தப்பான எண்ணம் என்னிடம் 
வந்துவிட்ட்து.

இயக்கங்களுக்குள் சண்டை வந்தபோதும் மேல் தட்டு வர்க்கம் 
தப்பி கொண்டது ... மிகுந்த ஏழைக்குடும்ப இளைஞர்கள்தான் மாட்டி கொண்டார்கள் 
இது எல்லாம் எனக்கு கொஞ்சம் வெறுப்பை உண்டுபண்ணியே இருந்தது.

இப்போதும் நெதர்லாந்தில் காசு சேர்த்த 5 பேரை 20 வருடம் உள்ளே போட 
போகிறார்களாம் 2 நாள் முன்பு இங்கு செய்தி இருந்துச்சு ...
இங்கு வேலை செய்தவர்கள் பற்றி இந்த திரியிலேயே என்ன மாதிரி கருத்துக்கள் வருகிறது ?
தாம்தான் அறிவாளிகள் என்பதை நிறுவுவதாக நினைத்து 
ஒரு போதை மகிழ்ச்சியில் வாழ வேண்டும் என்ற எண்ணம் இங்கே கண் முன்னேயே 
இருக்கிறது ......... இங்கு அமெரிக்காவில் 6 பேர் இப்போதும் உள்ளே இருக்கிறார்கள்.
எப்படியோ வாழ கூடிய கல்வி வசதி உள்ளவர்கள்.
வெளியில் இருந்து இருந்தால் ? இந்த சமூகம் தூற்ற பின் நிற்க போவதில்லை 
அதன் மூலம்தான் ......... ஒன்றும் செய்யாதவர்கள் தங்கள் அறிவாளிகள் என்று நிறுவ முடியும். 

போராளிகள் மேல் எனக்கு பரிதாப எண்ணம் இருந்ததே தவிர 
இந்த இனம் உருப்படும் என்ற எண்ணம் எனக்கு இருக்கவில்லை 
அதை இங்கு பல இடங்களில் எழுதியும் இருக்கிறேன். 

போராட முடியும் என்றால் அதட்கு உதவ முடியும் என்றால் 
அதை முடிந்த அளவில் செய்துகொண்டுதான் இருப்பேன் 
அடுத்தவன் தூண்டுறாய் ... நோண்டுறாய் என்று சொல்ல நின்று கேட்பதில்லை.
அதில் உண்மை இல்லை என்பதும் தெரியும் 
போராடியவன்தான் வாழ்வான் ....... சோம்பேறி மிருகங்கள் கூட 
இறுதியில் மனிதனை அண்டி மனிதனின் சுரண்டலுக்கு ஆளாகினது  தவிர 
தமது வாழ்வு என்று வாழ்வதில்லை.
கன்றை கட்டி வைத்து பால் கறந்து கல்லுக்கு ஊத்திவிட்டு 
பசு பால்தரும் ....... என்று சுகமாக எழுதுவதில் வாழ்வதில் இஸ்ட்டம் இல்லை. 

ஆர்கே நகர் தொகுதி தேர்தலை உறுப்பார்த்தாலே 
தமிழனின் எதிரி யார் என்பது ஓரளவு புரியும் 
இன்னமும் தந்து எதிரி யார் என்றே தெரியாத ஒரு இனம் 
எம்மினம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

சமூகத்தின் மீது ... இனத்தின் மீது வந்த ஒரு வெறுப்பாக கூட 
இது இருக்கலாம் ...
நான் அறிவாளி நான் இந்த பள்ளியில் படித்தேன் 
அந்த பாரில் குடித்தேன் என்ற தலைக்கணம் மட்டும் 
எங்கும் அளவு குறையாது இருக்கிறது ... எதாவது படித்து இருந்தால் 
அதை வைத்து என்ன கிழித்தேன் என்ற எண்ணமோ 
எதையாவது கிழிக்க வேண்டும் என்ற எண்ணமோ யாருக்கும் இருக்கவில்லை.
அப்படி இருந்தவர்கள் ஒரு சிலர் தங்களை இயக்கங்களில் சேர்த்து 
இறந்து போனார்கள். 

எப்படி நகர்ந்தாலும் இந்த போராட்டம் 
ஏழைகளின் தலையில்தான் போய் விழும் என்பதை 
அப்போதே என்னால் உணர முடிந்தது.
சின்ன வயதில் கொமினிஷியம் ... பொதுவுடைமை சிர்த்தார்த்தங்கள் 
என்னை கொஞ்சம் ஈர்த்து கொண்டதால் ..பணக்காரவர்க்கம் 
பாட்டாளி வர்க்கத்தை சுரண்டபோகிறது அதற்குத்தான் இந்த போர் 
இறுதியில் உதவப்போகிறது என்ற ஒரு தப்பான எண்ணம் என்னிடம் 
வந்துவிட்ட்து.

இயக்கங்களுக்குள் சண்டை வந்தபோதும் மேல் தட்டு வர்க்கம் 
தப்பி கொண்டது ... மிகுந்த ஏழைக்குடும்ப இளைஞர்கள்தான் மாட்டி கொண்டார்கள் 
இது எல்லாம் எனக்கு கொஞ்சம் வெறுப்பை உண்டுபண்ணியே இருந்தது.

இப்போதும் நெதர்லாந்தில் காசு சேர்த்த 5 பேரை 20 வருடம் உள்ளே போட 
போகிறார்களாம் 2 நாள் முன்பு இங்கு செய்தி இருந்துச்சு ...
இங்கு வேலை செய்தவர்கள் பற்றி இந்த திரியிலேயே என்ன மாதிரி கருத்துக்கள் வருகிறது ?
தாம்தான் அறிவாளிகள் என்பதை நிறுவுவதாக நினைத்து 
ஒரு போதை மகிழ்ச்சியில் வாழ வேண்டும் என்ற எண்ணம் இங்கே கண் முன்னேயே 
இருக்கிறது ......... இங்கு அமெரிக்காவில் 6 பேர் இப்போதும் உள்ளே இருக்கிறார்கள்.
எப்படியோ வாழ கூடிய கல்வி வசதி உள்ளவர்கள்.
வெளியில் இருந்து இருந்தால் ? இந்த சமூகம் தூற்ற பின் நிற்க போவதில்லை 
அதன் மூலம்தான் ......... ஒன்றும் செய்யாதவர்கள் தங்கள் அறிவாளிகள் என்று நிறுவ முடியும். 

போராளிகள் மேல் எனக்கு பரிதாப எண்ணம் இருந்ததே தவிர 
இந்த இனம் உருப்படும் என்ற எண்ணம் எனக்கு இருக்கவில்லை 
அதை இங்கு பல இடங்களில் எழுதியும் இருக்கிறேன். 

போராட முடியும் என்றால் அதட்கு உதவ முடியும் என்றால் 
அதை முடிந்த அளவில் செய்துகொண்டுதான் இருப்பேன் 
அடுத்தவன் தூண்டுறாய் ... நோண்டுறாய் என்று சொல்ல நின்று கேட்பதில்லை.
அதில் உண்மை இல்லை என்பதும் தெரியும் 
போராடியவன்தான் வாழ்வான் ....... சோம்பேறி மிருகங்கள் கூட 
இறுதியில் மனிதனை அண்டி மனிதனின் சுரண்டலுக்கு ஆளாகினது  தவிர 
தமது வாழ்வு என்று வாழ்வதில்லை.
கன்றை கட்டி வைத்து பால் கறந்து கல்லுக்கு ஊத்திவிட்டு 
பசு பால்தரும் ....... என்று சுகமாக எழுதுவதில் வாழ்வதில் இஸ்ட்டம் இல்லை. 

ஆர்கே நகர் தொகுதி தேர்தலை உறுப்பார்த்தாலே 
தமிழனின் எதிரி யார் என்பது ஓரளவு புரியும் 
இன்னமும் தந்து எதிரி யார் என்றே தெரியாத ஒரு இனம் 
எம்மினம்!

நன்றி  ஐயா

எந்த ஒரு முயற்ச்சியும்

அல்லது போட்டிகளும்

எனக்கு களைத்துவிட்டது

அல்லது எனக்கு நோய் வந்துவிட்டது என்பதற்காக நின்று போவதில்லை

நேற்று ஒரு வசனம் பார்த்தேன்

ஒரு விமானத்தின் ஓடுபாதை முடியும் போது தான்

அது பறக்கவே தொடங்குகிறது என்று.

எதையும் தோற்றதாகவோ

முடிந்துவிட்டதாகவோ நான் நினைக்கவில்லை

என்னால் முடிந்ததை

என்னிடம்  கேட்பதை  செய்து கொண்டே தான் 

கொடுத்துக்கொண்டே  தான் இருப்பேன்.

35  வருடங்களாக பிரான்சில் வாழும் எனக்கு இதனால் லாபம்  

அல்லது பெயர் வருகிறது என்று எவராவது வரைவிலக்கணம் செய்வார்களாயின்

அவர்களுக்காக பரிதாபப்படமட்டுமே முடியும்

நன்றி.

 

Link to comment
Share on other sites

என்னப்பா இது.  குமாரசாமி அண்ணர் ஏதோ சொல்லி ஆதங்கப்படுறார் என்று கொஞ்சம் விபரமாய் எழுதினால் உது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய‌ கணக்காய் லோடு லோடாய் புதிர்களும், வியாக்கியானங்களுமாய் வந்துகொண்டு இருக்கிது. இனி உதுக்குள்ளை இன்னும் மினக்கெட்டால் நான் அடுத்த தடவை கட்டுநாயக்காவில இறங்கேக்க நேர புனர்வாழ்வுக்குத்தான் பிடிச்சு அனுப்புவாங்கள். 123 ஆயத்தம் ஆரம்பம் ஓட்டம்

:100_pray::100_pray::100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கலைஞன் said:

என்னப்பா இது.  குமாரசாமி அண்ணர் ஏதோ சொல்லி ஆதங்கப்படுறார் என்று கொஞ்சம் விபரமாய் எழுதினால் உது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய‌ கணக்காய் லோடு லோடாய் புதிர்களும், வியாக்கியானங்களுமாய் வந்துகொண்டு இருக்கிது. இனி உதுக்குள்ளை இன்னும் மினக்கெட்டால் நான் அடுத்த தடவை கட்டுநாயக்காவில இறங்கேக்க நேர புனர்வாழ்வுக்குத்தான் பிடிச்சு அனுப்புவாங்கள். 123 ஆயத்தம் ஆரம்பம் ஓட்டம்

:100_pray::100_pray::100_pray:

1

2

:100_pray::100_pray::100_pray:

:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தமது குற்ற மனசாட்ச்சியை மறைக்கவும், சமூகத்திலே தாமும் இருக்கிறோம் எனக்காட்டவும் பதவி ஆசைகளுக்காகவும் அண்ணா."

 

இதை பார்த்து ஆச்சரியப்படாதீர்கள் ....
இவர்கள்தான் பயங்கரவாதத்தை உருவாக்கினார்கள் என்று 
போலீசில் வழக்கு போடாமல் விட்டார்கள் ... என்று சந்தோசப்பட வேண்டும்.
தமிழேண்டா ! 

எனக்கு முன்கூட்டிய கொஞ்சம் தெளிவு இருந்தால் 
அடக்கி வாசித்துக்கொண்டு இருந்தேன்.
அங்கு பாலூட்டினேன் ..... இங்கு தேன் ஊற்றினேன் என்ற 
சுயவிளம்பரமும் .....நான் அறிவாளி என்ற தலைக்கனமும் 
தவிர்த்தால் வேறு ஒன்றும் மிஞ்சாது. எல்லா பழியையும் சுமக்க 
இனத்தை சுமந்தவனே இறுதியில் வரவேண்டும். 

முள்ளிவாய்க்கால் முடிவுதான் இதற்கு காரணம் என்று எண்ணாதீர்கள் 
தமிழ் ஈழம் வந்திருந்தாலும் ........
உழைத்தவன் இருப்பு  பந்தலுக்கு வெளியில்தான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

"தமது குற்ற மனசாட்ச்சியை மறைக்கவும், சமூகத்திலே தாமும் இருக்கிறோம் எனக்காட்டவும் பதவி ஆசைகளுக்காகவும் அண்ணா."

 

இதை பார்த்து ஆச்சரியப்படாதீர்கள் ....
இவர்கள்தான் பயங்கரவாதத்தை உருவாக்கினார்கள் என்று 
போலீசில் வழக்கு போடாமல் விட்டார்கள் ... என்று சந்தோசப்பட வேண்டும்.
தமிழேண்டா ! 

எனக்கு முன்கூட்டிய கொஞ்சம் தெளிவு இருந்தால் 
அடக்கி வாசித்துக்கொண்டு இருந்தேன்.
அங்கு பாலூட்டினேன் ..... இங்கு தேன் ஊற்றினேன் என்ற 
சுயவிளம்பரமும் .....நான் அறிவாளி என்ற தலைக்கனமும் 
தவிர்த்தால் வேறு ஒன்றும் மிஞ்சாது. எல்லா பழியையும் சுமக்க 
இனத்தை சுமந்தவனே இறுதியில் வரவேண்டும். 

முள்ளிவாய்க்கால் முடிவுதான் இதற்கு காரணம் என்று எண்ணாதீர்கள் 
தமிழ் ஈழம் வந்திருந்தாலும் ........
உழைத்தவன் இருப்பு  பந்தலுக்கு வெளியில்தான்! 

நாங்கள் கடந்த பாதைகள்  கனதியானவை சகோதரா.

இதுவும் கடந்து போகும்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8.4.2017 at 7:41 PM, Maruthankerny said:

"தமது குற்ற மனசாட்ச்சியை மறைக்கவும், சமூகத்திலே தாமும் இருக்கிறோம் எனக்காட்டவும் பதவி ஆசைகளுக்காகவும் அண்ணா."

 

இதை பார்த்து ஆச்சரியப்படாதீர்கள் ....
இவர்கள்தான் பயங்கரவாதத்தை உருவாக்கினார்கள் என்று 
போலீசில் வழக்கு போடாமல் விட்டார்கள் ... என்று சந்தோசப்பட வேண்டும்.
தமிழேண்டா ! 

எனக்கு முன்கூட்டிய கொஞ்சம் தெளிவு இருந்தால் 
அடக்கி வாசித்துக்கொண்டு இருந்தேன்.
அங்கு பாலூட்டினேன் ..... இங்கு தேன் ஊற்றினேன் என்ற 
சுயவிளம்பரமும் .....நான் அறிவாளி என்ற தலைக்கனமும் 
தவிர்த்தால் வேறு ஒன்றும் மிஞ்சாது. எல்லா பழியையும் சுமக்க 
இனத்தை சுமந்தவனே இறுதியில் வரவேண்டும். 

முள்ளிவாய்க்கால் முடிவுதான் இதற்கு காரணம் என்று எண்ணாதீர்கள் 
தமிழ் ஈழம் வந்திருந்தாலும் ........
உழைத்தவன் இருப்பு  பந்தலுக்கு வெளியில்தான்! 

சரியான உணமை மருதர். காலவோட்டத்தில் எல்லாம் கரைந்தழிந்து தமிழினம் மறந்து மக்கிப்போய்விடும் என்பதே சிங்கள மற்றும் உலகவல்லாதிக்க சகக்திகளின் அவா. அதனைத் தமிழினம் நிறைவேற்றிவிடும்போலவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2017 at 11:07 PM, கலைஞன் said:

என்னப்பா இது.  குமாரசாமி அண்ணர் ஏதோ சொல்லி ஆதங்கப்படுறார் என்று கொஞ்சம் விபரமாய் எழுதினால் உது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய‌ கணக்காய் லோடு லோடாய் புதிர்களும், வியாக்கியானங்களுமாய் வந்துகொண்டு இருக்கிது. இனி உதுக்குள்ளை இன்னும் மினக்கெட்டால் நான் அடுத்த தடவை கட்டுநாயக்காவில இறங்கேக்க நேர புனர்வாழ்வுக்குத்தான் பிடிச்சு அனுப்புவாங்கள். 123 ஆயத்தம் ஆரம்பம் ஓட்டம்

:100_pray::100_pray::100_pray:

மீதியையையும் எழுதினால் நாங்க வாசிக்க  இருக்கிறம்  கெதியா எழுதுங்கப்பாtw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.