Jump to content

நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன் (ஆதியாகம் 3/10 )


Recommended Posts

கரிய முகில்களுக்கிடையில் தீச்சுவாலை பரப்பியபடி, எரியுண்ட கோளமாய் சூரியன் கிடந்த  காட்சி, அவனை எரித்துவிட்டுத் திரும்பும் போது எழுந்த கரும்புகையையும், புகையின் அடியில் ஒரு புள்ளியாய்  குமுறி எழுந்த தீயையும் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து இழுத்து எடுத்துவிட்டிருந்தது.

 
இன்றைக்கு மூன்று நாள்களுக்கு முன் நிகழ்ந்துகொண்டிருந்த அந்த சூரிய அஸ்தமனம், நினைவினில் மீண்டும் மீண்டும் உருவாகி அலைக்கழிக்கலாயிற்று. கடந்துபோன அன்றையை, அந்த நாள் மீண்டும் மனதில் கிளர்ந்திற்று ஒவ்வொருவரும் தயங்கித் தயங்கி அவ்விடத்திலிருந்து விலகிப்போன அந்த வேளையை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பூதாகரமாக உருவாக்கிற்று. பின்னர் வந்த இந்த நாட்களில் சூனியவெளியில் அலைவுறும் எழுதப்பட்ட பழுப்புநிறக்காகிதம்போல, மனம் அலைவுறத் தொடங்கியிருந்தது.

 

அவன் கொல்லப்பட்டவன்! ஆம் ஒரு மாலையின் முடிவுக்கும் இரவின் ஆரம்பத்துக்கும் இடையில்,முகத்தில் முடியேதுமில்லாதவர்களால் கொல்லப்பட்டவன். எதற்காக கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலேயே கொல்லப்பட்ட ஆயிரம் ஆயிரம் பேரில் ஒருவனாக கொல்லப்பட்டவன். காற்றின் கனதிகளாய் சாவின் செய்திகள் நிறைந்துபோய் நின்ற நாட்களில், எங்காவது சென்று வாழ்ந்துவிடவேண்டும் என்று ஆசைகொண்டலைந்த நாளொன்றில் கொல்லப்பட்டவன்.

 
நான்

 
பரிசின் புறநகரொன்றில், ஓரளவு நெருக்கம் குறைந்த அடுக்குமாடிகள் கொண்ட இடத்தில் வசிக்கிறேன். இங்கேயே இந்த ஒதுக்கமான இடத்திலேயே யாருமறியாமல் இறந்துபோகவும் விரும்புகிறேன். எப்போதும் பூட்டப்பட்ட கதவுகளின் பின் ஒரு பூனையைப் போல சத்தமின்றி நடந்து பழகிய கால்கள் எனதாயின. படிகளிலோ க்கத்து வீடுகளிலோ சப்தம் ஏதும் கேட்டால் அதே இடத்தில் அசையாமல் நின்றுகொள்ளவும்,அமைதியாக கதவின் துவாரத்தின் ஊடாக  அவதானிக்கவும் என்னைப் பழக்கப்படுத்திக்கொண்டேன்.

 
இந்த ஆண்டின் வரும் மாதத்தின் முதல் கிழமையோடு நான் பிரான்ஸில் அகதியாகி சரியாக இரண்டு வருடங்களாகின்றன. நான் குடியிருக்கும் இந்தவீடு ஒரு தமிழருடையது. ஆசிய, ஆபிரிக்க நாட்டவர்களால் இந்த அடுக்குமாடித்தொடர் நிறைந்தபோது தன்னால்,  தனது பிள்ளைகளை இனியும் இந்த இடத்தில் வைத்திருந்து வளர்க்க முடியாது  எனவும், அதனால் தான் வாடகைக்கு கொடுக்க முன் வந்ததாகவும் கூறினார். தமிழரைத்தவிர வேற்றினத்தவருக்கு வாடகைக்கு கொடுக்க விருப்பம் இல்லை என்றும் அதைஎங்கட ஆக்களுக்கு செய்யும் உதவியாகத் தான் நினைப்பதாகவும் பேச்சின் இடையில் குறிப்பிட்டதாக நினைவு.

 
இருக்கும் இடத்தை வீடென்பவர்களுக்கு மத்தியில், குடிக்கவும் படுக்கவும் நினைத்தபோது சமைக்கவும் எனக்குக் கிடைத்திருப்பது வீடென்றபோதில் பேறுதான்.

 
 வீட்டுக்குக் குடிவந்த மூன்றாவதுநாளில் மெத்தைக்கும் கட்டில் விளிம்புக்கும் இடையில் கிடந்த ஒரு கொப்பியை எடுத்து விரித்தபோது முதற்பக்கத்தில் இப்படி எழுதியிருந்தது; ”முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம்.

 
நான் குடியிருக்கும் வீட்டுக்கு நேரே கீழ் வீட்டில் ஒரு ஆணும் பெண்ணுமாக இருவர் மட்டுமே இருக்கிறார்கள். காதலர்களோ அல்லது திருமணம் முடித்து இருப்பவர்களோ தெரியவில்லை. களையான அந்த இளம்பெண்ணின் முகத்தில் ஒருமென்மையான சிரிப்பு இருக்கும். அனேகமாக அவர்கள் இருவரும் சம வயதுடையவர்களாக இருக்கலாம். சில நாட்களில் அந்தப் பெண் என்னைக் கடக்கும்போது மட்டும்தான் மெல்லியதாகப் புன்னகைப்பதைக் கண்டுகொண்டேன்.

 
எனக்கும் அந்தப் பெண்ணைக் பார்க்கையில் பெரியம்மாவின் மகள் அமுதா அக்காவின் நினைவுகள் தான் வரும் . அவளைப் போலவே  ஒற்றைநாடி உடல். மெல்லிய கழுத்து. நடக்கும்போதும், திரும்பும்போதும் எந்த ஒரு அதிர்வுமில்லாமல் இலகுவாக திரும்புவது என இந்தப் பெண், எனக்கு என் ஒன்றுவிட்ட அக்காவை நினைவூட்டிக் கொண்டிருந்ததால் நானும் பதிலுக்கு சிரிப்பதுண்டு. என்றாவது ஒருநாள் அமுதா அக்காவின் போட்டோவினை அவளுக்குக் காட்டவேண்டும் என்றும் நினைத்ததுண்டு.

 
 ஒருநாள் மதியம், மெதுவாக  வீட்டுக்கதவினைத் தட்டும் ஓசைகேட்டது.  பூனைமாதிரி சப்தமில்லாமல் நடந்துசென்று கதவின் துளையூடாகப் பார்த்தேன். தலையை துணியினால் சுற்றி மொட்டாக்கு போட்டபடி கீழ்வீட்டில் வசிக்கும் பெண் பதற்றத்துடன் நின்றாள். கணநேர சிந்தனையின்பின் கதவினைத்திறந்தேன். சடாரென உள்ளே நுழைந்த அவள், கதவை மெல்லியதாக சாத்தி விட்டு கையில் இருந்த ஒரு பெரிய பையை இங்கே வைக்கமுடியுமா என்று கேட்டாள். நாளை காலை தான் வந்து எடுத்துக்கொள்ளுவதாகவும் அதுவரை கவனமாக வைத்திருக்கமுடியுமா என்றும் கேட்டாள். என்னை மீறி தலையை ஆட்டினேன்.

 
வீட்டின் வரவேற்பறையில் ஓட்டப்படிருந்த காலம் தந்த தலைவன் என எழுதியிருந்த பிரபாகரனின் படத்தையும், அருகிலேயே இருந்த  கேர்ணல் பருதியின் மாலைபோட்ட படத்தையும்பார்த்தவள், தன் மார்பில் கைவைத்துவிட்டு, எனது இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு "நீ செய்யும் இந்த உதவிக்காக நன்றி நன்றி" என்று பல தடவைகள் கூறினாள். சட்டென்று அவள் சப்தமில்லாமல் சென்றுவிட, கனம் மிகுந்த அந்தப் பையை இழுத்துச்சென்று கட்டிலின் கீழ் தள்ளி வைத்தேன். கீழ்வீட்டில் இரண்டு நாள்களும் புதிய புதிய மனிதர்கள் வந்து சென்று கொண்டிருந்தார்கள்.

 
சில நாள்கள் கழிந்த நிலையில், இணையத்தளமொன்றின் தமிழ் செய்தியில், கீழ்வீட்டில் வசித்த பெண்ணின் படத்துடன், பாரிஸின் புளோமினில் என்ற புறநகர்ப் பகுதியில்  யுவதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும்,உள் முரண்பாடுகளே கொலைக்கான காரணம் என்றும் கொலையாளிகளை தேடிவருவதாகவும் காவல்துறை அறிவித்திருப்பதாக இருந்தது.  திகைப்புடன் படத்தினைப் பார்த்தேன்.  எழுந்துசென்று அவள் கொண்டுவந்துதந்திருந்த பையை இழுத்தெடுத்துத் திறந்தேன். அதற்குள் அப்துல்லா ஒச்சலானின் புகைப்படங்களும்,  பல குறிப்புப் புத்தகங்களும் அந்தப்பெண்ணின் அல்பம் ஒன்றும் பாஸ்போட்,  வங்கி அட்டை மற்றும்  இன்னும் பல ஆவணங்களும்கிடந்தன. அல்பத்தினை புரட்டியபோது இராணுவ உடையில் மிக அழகான புன்னகையுடன் அந்தப் பெண் நின்றிருந்தாள்.

 
என்னையறியாமல் எனது விரல்கள் அந்தப் புகைப்படத்தை வருடின. எழுந்து எனது நாட்குறிப்புப்புத்தகத்திலிருந்து அமுதா அக்காவின் படத்தினை எடுத்தேன். அமுதா அக்காவும் அதேபோன்றதான ஒரு சீருடையில் அதேபோன்றதானதொரு புன்னகையுடன்  நின்றிருந்தாள்.

 
அவர்கள் 

 
அவர்கள் யாருமல்ல, எனது மொழி பேசுபவர்கள்தான். எனது இறைவனை வணங்கியவர்கள்தான். எனக்கும் - அவனுக்கும் -  அவர்களுக்கும் இடையில் இடைவெளியேதும் இருந்ததில்லை. மொழியில் நிறத்தில் மாறுபட்டிருந்ததுமில்லை.  ஆனால் அவர்கள் கொல்லத் தூண்டினார்கள்.  ஏனென்றால் அவர்களிடம் ஆயுதம் இருந்தது. ஆயுததாரிகளின் சிநேகத்தால் ஊட்டப்பட்ட தைரியம்  இருந்தது. கொலை ஒன்றை சிநேகிப்பதற்கான மனதும் இருந்தது.

 
முதல் முறை வாசிகசாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றார்கள். இரண்டாம் முறை கூட்டத்தினை நடாத்த  உதவிசெய்தார்கள். மூன்றாம் முறை கூட்டத்தினை நடாத்தினார்கள். முதல்முறை மக்களுடன் இருந்தார்கள். இரண்டாம்முறை ஒரு குழுவாக இருந்தார்கள். மூன்றாம்முறை எல்லாவற்றிலிருந்தும் விலகி அப்படியாகிய எல்லாவற்றிக்கும் மேலாக தங்களை உயர்த்திக்கொண்டார்கள்.

 
அவர்கள் முதலில் மக்களிடம் உணவு கேட்டார்கள். இரண்டாம்முறை ஆடுமாடுகளை பிடித்துச் சென்றார்கள். மூன்றாம்முறை நகை, பணம், கார், சைக்கிள் என கிடைப்பதை எடுத்துச்சென்றார்கள்.

 
முதல் தடவை மக்கள்  பேசினார்கள். பின்  முனுமுனுத்தார்கள்,  இறுதியாக மௌனித்தார்கள். ஆனாலும் தமக்குள் பேசிக்கொண்டார்கள் "இது ஒன்றும் மேலிடத்திற்கு தெரியாது. இவங்கள் இங்கை இருக்கிற சில்லறயள பிடிச்சுக்கொண்டு துள்ளுகினம். ஒருக்கால் அறிவிச்சால் காணும்". மக்கள் நம்பினார்கள். நம்பிக்கையோடிருந்தார்கள். பின்னொரு நாளில் துணைப்படை அணிவகுப்பில் அவர்களைப் பார்த்தபோது அவர்களே  பெருமூச்சுடன் தலைகுனிந்தனர்.

 
எங்கும் யுத்தத்தின் வேர்கள் மீண்டும் உயிர்த்தன.  பின் அது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வலைபோல இறுக்கத்தொடங்கியது. நாட்டின் எந்த ஒரு மூலையிலும் எந்த நேரத்திலும் என்னவும் நடந்துவிடக்கூடும் என்ற அச்சம் மிகுந்திருந்தது. எல்லவழிகளும் துண்டாடப்பட்ட நிலையில் இராணுவத்தினர் யாழ்குடா நாட்டில் குறிகாட்டிகளை  வைத்துக் கொலைசெய்யத்தொடங்கினர்.

 
அவர்களில் சிலர் இராணுவத்துடன் நட்பாகினர். சிலர் மக்களிடம் போர்க்கால நிதி என்று மிரட்டிப்பெற்ற பணத்துடன் தலைமறைவாகினர். பணத்திற்காக, அனைத்தையும் துறந்து சிலுவை சுமந்தவர்களையும் காட்டிக் கொடுத்தார்கள்.  மிஞ்சியோரில் சிலர் கொல்லப்பட்டனர்.

 
அவன் 

 
இராணுவத்தால்  நீ கொல்லபடக்கூடும், எதற்கும் நீ  போறது நல்லம் மச்சான் அவங்கள் வேற உவங்களோட திரியுறாங்கள் - இதுதான் அவன் இறுதியாக எனக்குச் சொன்ன வார்த்தை. அன்று மாலை கிரவுண்டில் இருந்து திரும்பும் போதும் இப்படித்தான் கூறினான். எனக்கும் காரணம் தெரியும்.  அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தே செய்கிறார்கள். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் நிச்சயம் இதனைச் செய்வார்கள் என்பதை அவன்  ஊகித்தே இருந்தான்.

 
எனக்கும் அவனுக்கும் இடையே எந்த ஒளிவு மறைவுகளும் இருந்ததில்லை. அவனின் காதல் கடித்ததைக் கூட அவன் சொல்லச்சொல்ல எழுதி இருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் அவனுடன் துணைக்குச் சென்றும் இருக்கிறேன். நான் செல்லும் திசை குறித்த கேள்விகள் நிறைய அவனிடம் இருந்தது. சிலவற்றை கேட்டும் இருக்கிறான்.

 
ஆரம்பம் முதலே அவர்களின்  நடடிக்கைகள் குறித்த அச்சத்தை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தவன், இப்போது அதிகம் என்னைத் திட்டவும் தொடங்கி இருந்தான். அப்போதெல்லாம் எல்லாம் சரி வரும், வடிவா பழகுவினம் என்று சிரித்த நான் இப்போது மௌனமாகவே இருக்கத் தொடங்கியிருந்தேன்.

 
எனது மௌனிப்பு கையறுநிலை தான் என்று தெளிவாக புரிந்துகொண்டு பேசாமல் இருப்பதும்,  எனக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று அந்தரப்படுவதுமாகவே அவனது பொழுதுகள் இருந்ததன.

 
அவனுடன்  பிறந்தவர்கள் எல்லோரும் வெளிநாடு சென்றுவிட, தாய் தந்தையர் தனித்துப் போவார்கள் என்று அவர்களுடனேயே இருந்தவன். கல்லூரி முடித்து வெளிவாரிப் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தான்,கிடைக்கும் முதல் வேலைக்கே செல்வது என்றும், பிற்காலத்தில் ஒரு சிறுவர் இல்லம் மற்றும் பெரியதொரு பண்ணை அமைக்கவேண்டும் என்றும் தன் கனவுகளை எப்போதாவது தன்னை மீறிச் சொல்லுவான்.

 
அந்த இரவின் ஆரம்பப் பொழுதில்,  அவனைப் பேர் சொல்லி அழைத்தவர்களுடன் அவர்களும் வந்திருந்தார்களாம். அவனை அழைத்து எனது வீட்டுக்கு போகவேண்டும் தங்களுடன் கூட வரும்படி அழைத்தார்களாம். விளக்குடன் வந்த தன்னை  "ஒன்றுமில்லை, நீங்கள் போங்கோ அம்மா இவன் இப்ப வந்திடுவான்" என்று அவர்களில் ஒருவன்தான் சொன்னானாம். அப்படிச் சொன்னவன் சிலகாலத்திற்குமுன் தினமும் வீட்டுக்கு வந்திருந்தவன் என்பதால் தான் உள்ளே சென்றுவிட்டதாக அம்மா பின்னொருநாளில் சொன்னாள். அப்படிச் சொன்னவனுக்கு, முன்பொருநாள்  தான் கடும்புப்பால் காய்ச்சி காவலிருந்து கொடுத்ததைச் சொன்னபோது ஓங்கி அழுதிருந்தாள்.

 
 அவன்  மறுத்திருக்கிறான். அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். அவனுக்கும் அவர்களுக்கும் இடையில் உரையாடல் நீண்டுவலுத்த அந்தவேளையில் எழுந்த வெடியோசை எனது வீட்டின் சுவர்களில் எதிரொலித்தபோது நான் எனது வீட்டில் அறைக்குள் வைத்து அடைக்கப்பட்டேன்.

 
************************************************************

 
 
மேல் வீட்டில் ஒரு மனிதன் தனித்து  இருப்பதாகவும், அவன் சிலசமயங்களில் கூச்சலிடுவதாகவும், "கொண்டுட்டாங்கள், கொண்டுட்டாங்கள் என்று அழுவதாகவும், ஆனால் அநேகமான வேளைகளில் தலைகுனிந்தபடி எல்லோரையும் கடந்துபோவதாகவும் அந்த மனிதரால் இதுவரை ஒருவருக்கும் பிரச்சனை வந்தது இல்லை என்றும் கீழ் வீட்டில் புதிதாக குடிவந்தவர்கள் என்னைக் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்டதையும் ஒருநாள் கதவருகில் நின்று கேட்டுக்கொண்டேன்.

 
இன்னொருநாள் தபால்பெட்டிக்குள் இருந்து கடிதங்களை எடுத்தபோது எப்போதோ தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு  இயக்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டத்திற்கான துண்டுப்பிரசுர அழைப்பிதழ் கிடந்தது.

 
இன்னொரு நாள், தமிழர் இனப்படுகொலைக்கு  நீதிகேட்கும்பேரணி, ஐநாவே பதில் கூறு என்ற இரு தலைப்புக்களில் தமிழிழுலும் பிரெஞ்சிலும் வெளியிடப்பட்ட ஒரு பிரசுரம் இருந்தது.

 
அன்றைய தினமே, குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா மறைமுகமாக  உதவிசெய்வதாகவும் அதனாலேயே அவர்களின் தாக்குதல் பலம் அதிகரித்திருப்பதாகவும் இணையச்செய்தி ஒன்றில் வாசித்தேன்.

 
உலகளாவிய  பெருந்தமிழ்தேசியத்தை அமைக்க முன்வாருங்கள் நாங்கள் உங்கள் பிள்ளைகள் வந்திருக்கிறோம் என்ற கோரிக்கையோடு நாம் தமிழர் பிரான்ஸ் என்ற அமைப்பினரால்  உரிமை கோரப்பட்ட தனியான கடிதமொன்று கதவின் கீழ்இடுக்கினூடாக இன்னொருநாளில் தள்ளப்பட்டிருந்தது.

 

 

இன்று, கடந்த மூன்றுநாள்களாக அலைவுறும் அவாந்திர மனநிலையோடு மாடியில்இருந்து சூரியன் மறையும் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மேற்குவானம் அமைதியாக இருளடையலாயிற்று. வரவேற்பறை சுவரில் இருந்த  படங்களைப் பார்த்தேன். என்றாவது ஒருநாள் மீண்டும் கதவு தட்டப்படும் என்ற அச்சம் எழலாயிற்று. விரைந்து சென்று அறையின் மூலையில் குவித்து வைத்திருந்த உடுப்புக் குவியலுக்குள் ஒளிந்துகொள்ளத் தொடங்கினேன்..



நன்றி;  புதியசொல் சஞ்சிகை 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எழுதுவது எனத் தெரியவில்லை:unsure:...உங்கள் எழுத்து நன்றாக மெருகேறி உள்ளது:mellow:...வேற எங்கேயாவது எழுதிப் போட்டு அதை யாழில் மறக்காமல் கொண்டு வந்து போட்டதிற்கு நன்றிகள்:rolleyes:

Link to comment
Share on other sites

On 2/23/2017 at 0:15 AM, ரதி said:

வேற எங்கேயாவது எழுதிப் போட்டு அதை யாழில் மறக்காமல் கொண்டு வந்து போட்டதிற்கு நன்றிகள்:rolleyes:

அக்கா ஒரு அச்சு ஊடகத்திற்கு அனுப்புவம் என்ற நினைப்பில் அப்படி செய்தது.... மன்னிக்கணும் 

யாழ் இணையம் என்னை அடையாளப்படுத்திய ஒரு தளம் இதனை எப்பவும் மறப்பதில்லை. 

நன்றியும் அன்பும் அக்கா 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது கதை. இன்றுதான் பார்த்தேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.