Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்!! 

எனக்கு ஒரு சந்தேகம்.  

க் + அ = க (ka) மெய்யும் உயிரும் இணையும் போது பிறக்கும் புதிய ஒலி.  மிகச் சரியாக ஒலிக்கிறது.

ஆனால்  ச்  + அ = ச (sa) என்ற சத்தம் எப்படி வரும்?  சேர்த்து  சொல்லும் போது cha என்ற சத்தம் வருகிறது. பழைய திரையிசை பாடல்களில் ச (cha) என்ற சத்தம் வரும் உச்சரிப்புக்கள் காணப்படுகின்றன. எ.கா. சின்னம் சிறு கிளியே.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சிவயோகி விஸ்வா வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், விஸ்வா!

கேள்விகளை நாங்கள் கேட்கிறோம்...விடைகளை நீங்கள் கூறுங்கள்!

Link to comment
Share on other sites

நல்வரவு விஸ்வயோகி விஸ்வா..!

ச் என்கிற ஒலி முன்னின்ற மெய்யில் வராது என்பதுதான் என் எண்ணம். ஆனால் பெருவாரியாக தமிழகத்தில் இப்படி ஒலிக்கச் செய்கிறார்கள். :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விஸ்வா... வாருங்கள் உங்களது சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும். தங்களது கோப்பு வாத்தியாரின் மேசைக்கு நகர்த்தப் படுகிறது....! tw_blush:

தமிழில் ஒரு "ச"  தான் இருப்பது நாம் செய்த புண்ணியம். அப்படியே அந்த "ல"வும் ஒன்றே இருந்திருக்கலாம். சமஸ்கிருதம் , சிங்களத்தில் 3 ...4 சா கிடந்து மனுஷனை சாவடிக்குது....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.2.2017 at 7:11 AM, சிவயோகி விஸ்வா said:

வணக்கம்!! 

எனக்கு ஒரு சந்தேகம்.  

க் + அ = க (ka) மெய்யும் உயிரும் இணையும் போது பிறக்கும் புதிய ஒலி.  மிகச் சரியாக ஒலிக்கிறது.

ஆனால்  ச்  + அ = ச (sa) என்ற சத்தம் எப்படி வரும்?  சேர்த்து  சொல்லும் போது cha என்ற சத்தம் வருகிறது. பழைய திரையிசை பாடல்களில் ச (cha) என்ற சத்தம் வரும் உச்சரிப்புக்கள் காணப்படுகின்றன. எ.கா. சின்னம் சிறு கிளியே.. 

 

 


நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யால்வரல் பிறப்பே.

இது எழுத்துக்களின் பிறப்பிற்கான பொது விதி.

 

 
நிறை உயிர் முயற்சியின் -
ஒலி எழுத்தாகிய காரியத்திற்கு வேண்டும் காரணங்களில் குறைவின்றி நிறைந்த உயிரினது முயற்சியால்  

உள் வளி துரப்ப எழும் அணுத்திரள் -
உள்ளே நின்ற ' உதானன் ' என்னும் காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாம் அணுக்கூட்டம்
 உரம் , கண்டம் உச்சி மூக்கு உற்று -
மார்பும் கழுத்தும் தலையும் நாசியுமாகிய நான்கு இடத்தையும் பொருந்தி:
இதழ் , நாப்பல் அணத்தொழிலின் -
உதடும் நாக்கும் பல்லும் மேல் வாயும் ஆகிய நான்கனுடைய முயற்சிகளால் ,
வெவ்வேறு எழுத்து ஒலி ஆய்வரல் -
வேறு வேறு எழுத்தாகிய ஓசைகளாய்த் தோன்றுதல் ,
பிறப்பு -
அவற்றின் பிறப்பாம்


    க, ங - முதல்நா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.
    ச, ஞ - இடைநா அண்ணத்தைத் தொடப் பிளக்கும்.
    ட, ண - நுனிநா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.

இவை ஆறும் ஒருவகைப் பிறப்பு.

    த, ந - நாநுனி அண்ணமும் பல்லும் பொருந்துமிடத்தில் விரிந்து ஒற்றப் பிறக்கும்.
    ற, ன - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
    ர, ழ - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும்.
    ல - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
    ள - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை வருடப் பிறக்கும்.
    ப, ம - இதழோடு இதழ் பொருந்தப் பிறக்கும்.
    வ - பல்லும் இதழும் இயையப் பிறக்கும்.
    ய - மிடற்றில் எழுந்த ஒலி அண்ணத்தில் அடைபடும்போது பிறக்கும்.

மெல்லின எழுத்து ஆறும் மூக்கில் இசைக்கும்.

அந்த அந்த எழுத்துக்களை அந்த வகையில் உச்சரித்தால் பிழையின்றி ஒலியை உணரலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

 


நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யால்வரல் பிறப்பே.

இது எழுத்துக்களின் பிறப்பிற்கான பொது விதி.

 

 
நிறை உயிர் முயற்சியின் -
ஒலி எழுத்தாகிய காரியத்திற்கு வேண்டும் காரணங்களில் குறைவின்றி நிறைந்த உயிரினது முயற்சியால்  

உள் வளி துரப்ப எழும் அணுத்திரள் -
உள்ளே நின்ற ' உதானன் ' என்னும் காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாம் அணுக்கூட்டம்
 உரம் , கண்டம் உச்சி மூக்கு உற்று -
மார்பும் கழுத்தும் தலையும் நாசியுமாகிய நான்கு இடத்தையும் பொருந்தி:
இதழ் , நாப்பல் அணத்தொழிலின் -
உதடும் நாக்கும் பல்லும் மேல் வாயும் ஆகிய நான்கனுடைய முயற்சிகளால் ,
வெவ்வேறு எழுத்து ஒலி ஆய்வரல் -
வேறு வேறு எழுத்தாகிய ஓசைகளாய்த் தோன்றுதல் ,
பிறப்பு -
அவற்றின் பிறப்பாம்


    க, ங - முதல்நா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.
    ச, ஞ - இடைநா அண்ணத்தைத் தொடப் பிளக்கும்.
    ட, ண - நுனிநா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.

இவை ஆறும் ஒருவகைப் பிறப்பு.

    த, ந - நாநுனி அண்ணமும் பல்லும் பொருந்துமிடத்தில் விரிந்து ஒற்றப் பிறக்கும்.
    ற, ன - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
    ர, ழ - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும்.
    ல - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
    ள - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை வருடப் பிறக்கும்.
    ப, ம - இதழோடு இதழ் பொருந்தப் பிறக்கும்.
    வ - பல்லும் இதழும் இயையப் பிறக்கும்.
    ய - மிடற்றில் எழுந்த ஒலி அண்ணத்தில் அடைபடும்போது பிறக்கும்.

மெல்லின எழுத்து ஆறும் மூக்கில் இசைக்கும்.

அந்த அந்த எழுத்துக்களை அந்த வகையில் உச்சரித்தால் பிழையின்றி ஒலியை உணரலாம்.

 

வாத்தியார் அழகான விளக்கங்கள். 
நீங்கள் உண்மையில் தமிழ் பண்டிதர் தானா?

எனக்கு முழுவதுமாக விளங்கவில்லை (காரணம் நான் படித்த ஆரம்ப பள்ளி ஓரு முஸ்லீம் "பள்ளி")
அங்கு நிலைமை இப்படித்தான் இருக்கும்:
செல் என்ற செல்லுக்கு செல்ர  செல் செல்...
நான்  படித்தது  "திமில்"..
ஆனால் பிடித்தது  என்னவோ "தமிழ்" தான். :14_relaxed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27.2.2017 at 10:14 PM, Sasi_varnam said:

வாத்தியார் அழகான விளக்கங்கள். 
நீங்கள் உண்மையில் தமிழ் பண்டிதர் தானா?

எனக்கு முழுவதுமாக விளங்கவில்லை (காரணம் நான் படித்த ஆரம்ப பள்ளி ஓரு முஸ்லீம் "பள்ளி")
அங்கு நிலைமை இப்படித்தான் இருக்கும்:
செல் என்ற செல்லுக்கு செல்ர  செல் செல்...
நான்  படித்தது  "திமில்"..
ஆனால் பிடித்தது  என்னவோ "தமிழ்" தான். :14_relaxed:

இல்லை சசி
ஆனால் தமிழில் எனக்கு ஆர்வம் அதிகம்
தெரியாததையும் தேடி அறிந்து கொள்வேன்.

பண்டிதர் சான்றிதழ் என்னிடம் இல்லை
பத்தாம் வகுப்புச் சான்றிதழ் மட்டுமே என்னிடம் உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.