Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்!! 

எனக்கு ஒரு சந்தேகம்.  

க் + அ = க (ka) மெய்யும் உயிரும் இணையும் போது பிறக்கும் புதிய ஒலி.  மிகச் சரியாக ஒலிக்கிறது.

ஆனால்  ச்  + அ = ச (sa) என்ற சத்தம் எப்படி வரும்?  சேர்த்து  சொல்லும் போது cha என்ற சத்தம் வருகிறது. பழைய திரையிசை பாடல்களில் ச (cha) என்ற சத்தம் வரும் உச்சரிப்புக்கள் காணப்படுகின்றன. எ.கா. சின்னம் சிறு கிளியே.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சிவயோகி விஸ்வா வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், விஸ்வா!

கேள்விகளை நாங்கள் கேட்கிறோம்...விடைகளை நீங்கள் கூறுங்கள்!

Link to comment
Share on other sites

நல்வரவு விஸ்வயோகி விஸ்வா..!

ச் என்கிற ஒலி முன்னின்ற மெய்யில் வராது என்பதுதான் என் எண்ணம். ஆனால் பெருவாரியாக தமிழகத்தில் இப்படி ஒலிக்கச் செய்கிறார்கள். :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விஸ்வா... வாருங்கள் உங்களது சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும். தங்களது கோப்பு வாத்தியாரின் மேசைக்கு நகர்த்தப் படுகிறது....! tw_blush:

தமிழில் ஒரு "ச"  தான் இருப்பது நாம் செய்த புண்ணியம். அப்படியே அந்த "ல"வும் ஒன்றே இருந்திருக்கலாம். சமஸ்கிருதம் , சிங்களத்தில் 3 ...4 சா கிடந்து மனுஷனை சாவடிக்குது....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.2.2017 at 7:11 AM, சிவயோகி விஸ்வா said:

வணக்கம்!! 

எனக்கு ஒரு சந்தேகம்.  

க் + அ = க (ka) மெய்யும் உயிரும் இணையும் போது பிறக்கும் புதிய ஒலி.  மிகச் சரியாக ஒலிக்கிறது.

ஆனால்  ச்  + அ = ச (sa) என்ற சத்தம் எப்படி வரும்?  சேர்த்து  சொல்லும் போது cha என்ற சத்தம் வருகிறது. பழைய திரையிசை பாடல்களில் ச (cha) என்ற சத்தம் வரும் உச்சரிப்புக்கள் காணப்படுகின்றன. எ.கா. சின்னம் சிறு கிளியே.. 

 

 


நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யால்வரல் பிறப்பே.

இது எழுத்துக்களின் பிறப்பிற்கான பொது விதி.

 

 
நிறை உயிர் முயற்சியின் -
ஒலி எழுத்தாகிய காரியத்திற்கு வேண்டும் காரணங்களில் குறைவின்றி நிறைந்த உயிரினது முயற்சியால்  

உள் வளி துரப்ப எழும் அணுத்திரள் -
உள்ளே நின்ற ' உதானன் ' என்னும் காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாம் அணுக்கூட்டம்
 உரம் , கண்டம் உச்சி மூக்கு உற்று -
மார்பும் கழுத்தும் தலையும் நாசியுமாகிய நான்கு இடத்தையும் பொருந்தி:
இதழ் , நாப்பல் அணத்தொழிலின் -
உதடும் நாக்கும் பல்லும் மேல் வாயும் ஆகிய நான்கனுடைய முயற்சிகளால் ,
வெவ்வேறு எழுத்து ஒலி ஆய்வரல் -
வேறு வேறு எழுத்தாகிய ஓசைகளாய்த் தோன்றுதல் ,
பிறப்பு -
அவற்றின் பிறப்பாம்


    க, ங - முதல்நா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.
    ச, ஞ - இடைநா அண்ணத்தைத் தொடப் பிளக்கும்.
    ட, ண - நுனிநா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.

இவை ஆறும் ஒருவகைப் பிறப்பு.

    த, ந - நாநுனி அண்ணமும் பல்லும் பொருந்துமிடத்தில் விரிந்து ஒற்றப் பிறக்கும்.
    ற, ன - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
    ர, ழ - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும்.
    ல - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
    ள - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை வருடப் பிறக்கும்.
    ப, ம - இதழோடு இதழ் பொருந்தப் பிறக்கும்.
    வ - பல்லும் இதழும் இயையப் பிறக்கும்.
    ய - மிடற்றில் எழுந்த ஒலி அண்ணத்தில் அடைபடும்போது பிறக்கும்.

மெல்லின எழுத்து ஆறும் மூக்கில் இசைக்கும்.

அந்த அந்த எழுத்துக்களை அந்த வகையில் உச்சரித்தால் பிழையின்றி ஒலியை உணரலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

 


நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யால்வரல் பிறப்பே.

இது எழுத்துக்களின் பிறப்பிற்கான பொது விதி.

 

 
நிறை உயிர் முயற்சியின் -
ஒலி எழுத்தாகிய காரியத்திற்கு வேண்டும் காரணங்களில் குறைவின்றி நிறைந்த உயிரினது முயற்சியால்  

உள் வளி துரப்ப எழும் அணுத்திரள் -
உள்ளே நின்ற ' உதானன் ' என்னும் காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாம் அணுக்கூட்டம்
 உரம் , கண்டம் உச்சி மூக்கு உற்று -
மார்பும் கழுத்தும் தலையும் நாசியுமாகிய நான்கு இடத்தையும் பொருந்தி:
இதழ் , நாப்பல் அணத்தொழிலின் -
உதடும் நாக்கும் பல்லும் மேல் வாயும் ஆகிய நான்கனுடைய முயற்சிகளால் ,
வெவ்வேறு எழுத்து ஒலி ஆய்வரல் -
வேறு வேறு எழுத்தாகிய ஓசைகளாய்த் தோன்றுதல் ,
பிறப்பு -
அவற்றின் பிறப்பாம்


    க, ங - முதல்நா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.
    ச, ஞ - இடைநா அண்ணத்தைத் தொடப் பிளக்கும்.
    ட, ண - நுனிநா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.

இவை ஆறும் ஒருவகைப் பிறப்பு.

    த, ந - நாநுனி அண்ணமும் பல்லும் பொருந்துமிடத்தில் விரிந்து ஒற்றப் பிறக்கும்.
    ற, ன - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
    ர, ழ - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும்.
    ல - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
    ள - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை வருடப் பிறக்கும்.
    ப, ம - இதழோடு இதழ் பொருந்தப் பிறக்கும்.
    வ - பல்லும் இதழும் இயையப் பிறக்கும்.
    ய - மிடற்றில் எழுந்த ஒலி அண்ணத்தில் அடைபடும்போது பிறக்கும்.

மெல்லின எழுத்து ஆறும் மூக்கில் இசைக்கும்.

அந்த அந்த எழுத்துக்களை அந்த வகையில் உச்சரித்தால் பிழையின்றி ஒலியை உணரலாம்.

 

வாத்தியார் அழகான விளக்கங்கள். 
நீங்கள் உண்மையில் தமிழ் பண்டிதர் தானா?

எனக்கு முழுவதுமாக விளங்கவில்லை (காரணம் நான் படித்த ஆரம்ப பள்ளி ஓரு முஸ்லீம் "பள்ளி")
அங்கு நிலைமை இப்படித்தான் இருக்கும்:
செல் என்ற செல்லுக்கு செல்ர  செல் செல்...
நான்  படித்தது  "திமில்"..
ஆனால் பிடித்தது  என்னவோ "தமிழ்" தான். :14_relaxed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27.2.2017 at 10:14 PM, Sasi_varnam said:

வாத்தியார் அழகான விளக்கங்கள். 
நீங்கள் உண்மையில் தமிழ் பண்டிதர் தானா?

எனக்கு முழுவதுமாக விளங்கவில்லை (காரணம் நான் படித்த ஆரம்ப பள்ளி ஓரு முஸ்லீம் "பள்ளி")
அங்கு நிலைமை இப்படித்தான் இருக்கும்:
செல் என்ற செல்லுக்கு செல்ர  செல் செல்...
நான்  படித்தது  "திமில்"..
ஆனால் பிடித்தது  என்னவோ "தமிழ்" தான். :14_relaxed:

இல்லை சசி
ஆனால் தமிழில் எனக்கு ஆர்வம் அதிகம்
தெரியாததையும் தேடி அறிந்து கொள்வேன்.

பண்டிதர் சான்றிதழ் என்னிடம் இல்லை
பத்தாம் வகுப்புச் சான்றிதழ் மட்டுமே என்னிடம் உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.