Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்!! 

எனக்கு ஒரு சந்தேகம்.  

க் + அ = க (ka) மெய்யும் உயிரும் இணையும் போது பிறக்கும் புதிய ஒலி.  மிகச் சரியாக ஒலிக்கிறது.

ஆனால்  ச்  + அ = ச (sa) என்ற சத்தம் எப்படி வரும்?  சேர்த்து  சொல்லும் போது cha என்ற சத்தம் வருகிறது. பழைய திரையிசை பாடல்களில் ச (cha) என்ற சத்தம் வரும் உச்சரிப்புக்கள் காணப்படுகின்றன. எ.கா. சின்னம் சிறு கிளியே.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சிவயோகி விஸ்வா வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், விஸ்வா!

கேள்விகளை நாங்கள் கேட்கிறோம்...விடைகளை நீங்கள் கூறுங்கள்!

Link to comment
Share on other sites

நல்வரவு விஸ்வயோகி விஸ்வா..!

ச் என்கிற ஒலி முன்னின்ற மெய்யில் வராது என்பதுதான் என் எண்ணம். ஆனால் பெருவாரியாக தமிழகத்தில் இப்படி ஒலிக்கச் செய்கிறார்கள். :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விஸ்வா... வாருங்கள் உங்களது சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும். தங்களது கோப்பு வாத்தியாரின் மேசைக்கு நகர்த்தப் படுகிறது....! tw_blush:

தமிழில் ஒரு "ச"  தான் இருப்பது நாம் செய்த புண்ணியம். அப்படியே அந்த "ல"வும் ஒன்றே இருந்திருக்கலாம். சமஸ்கிருதம் , சிங்களத்தில் 3 ...4 சா கிடந்து மனுஷனை சாவடிக்குது....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.2.2017 at 7:11 AM, சிவயோகி விஸ்வா said:

வணக்கம்!! 

எனக்கு ஒரு சந்தேகம்.  

க் + அ = க (ka) மெய்யும் உயிரும் இணையும் போது பிறக்கும் புதிய ஒலி.  மிகச் சரியாக ஒலிக்கிறது.

ஆனால்  ச்  + அ = ச (sa) என்ற சத்தம் எப்படி வரும்?  சேர்த்து  சொல்லும் போது cha என்ற சத்தம் வருகிறது. பழைய திரையிசை பாடல்களில் ச (cha) என்ற சத்தம் வரும் உச்சரிப்புக்கள் காணப்படுகின்றன. எ.கா. சின்னம் சிறு கிளியே.. 

 

 


நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யால்வரல் பிறப்பே.

இது எழுத்துக்களின் பிறப்பிற்கான பொது விதி.

 

 
நிறை உயிர் முயற்சியின் -
ஒலி எழுத்தாகிய காரியத்திற்கு வேண்டும் காரணங்களில் குறைவின்றி நிறைந்த உயிரினது முயற்சியால்  

உள் வளி துரப்ப எழும் அணுத்திரள் -
உள்ளே நின்ற ' உதானன் ' என்னும் காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாம் அணுக்கூட்டம்
 உரம் , கண்டம் உச்சி மூக்கு உற்று -
மார்பும் கழுத்தும் தலையும் நாசியுமாகிய நான்கு இடத்தையும் பொருந்தி:
இதழ் , நாப்பல் அணத்தொழிலின் -
உதடும் நாக்கும் பல்லும் மேல் வாயும் ஆகிய நான்கனுடைய முயற்சிகளால் ,
வெவ்வேறு எழுத்து ஒலி ஆய்வரல் -
வேறு வேறு எழுத்தாகிய ஓசைகளாய்த் தோன்றுதல் ,
பிறப்பு -
அவற்றின் பிறப்பாம்


    க, ங - முதல்நா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.
    ச, ஞ - இடைநா அண்ணத்தைத் தொடப் பிளக்கும்.
    ட, ண - நுனிநா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.

இவை ஆறும் ஒருவகைப் பிறப்பு.

    த, ந - நாநுனி அண்ணமும் பல்லும் பொருந்துமிடத்தில் விரிந்து ஒற்றப் பிறக்கும்.
    ற, ன - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
    ர, ழ - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும்.
    ல - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
    ள - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை வருடப் பிறக்கும்.
    ப, ம - இதழோடு இதழ் பொருந்தப் பிறக்கும்.
    வ - பல்லும் இதழும் இயையப் பிறக்கும்.
    ய - மிடற்றில் எழுந்த ஒலி அண்ணத்தில் அடைபடும்போது பிறக்கும்.

மெல்லின எழுத்து ஆறும் மூக்கில் இசைக்கும்.

அந்த அந்த எழுத்துக்களை அந்த வகையில் உச்சரித்தால் பிழையின்றி ஒலியை உணரலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

 


நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யால்வரல் பிறப்பே.

இது எழுத்துக்களின் பிறப்பிற்கான பொது விதி.

 

 
நிறை உயிர் முயற்சியின் -
ஒலி எழுத்தாகிய காரியத்திற்கு வேண்டும் காரணங்களில் குறைவின்றி நிறைந்த உயிரினது முயற்சியால்  

உள் வளி துரப்ப எழும் அணுத்திரள் -
உள்ளே நின்ற ' உதானன் ' என்னும் காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாம் அணுக்கூட்டம்
 உரம் , கண்டம் உச்சி மூக்கு உற்று -
மார்பும் கழுத்தும் தலையும் நாசியுமாகிய நான்கு இடத்தையும் பொருந்தி:
இதழ் , நாப்பல் அணத்தொழிலின் -
உதடும் நாக்கும் பல்லும் மேல் வாயும் ஆகிய நான்கனுடைய முயற்சிகளால் ,
வெவ்வேறு எழுத்து ஒலி ஆய்வரல் -
வேறு வேறு எழுத்தாகிய ஓசைகளாய்த் தோன்றுதல் ,
பிறப்பு -
அவற்றின் பிறப்பாம்


    க, ங - முதல்நா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.
    ச, ஞ - இடைநா அண்ணத்தைத் தொடப் பிளக்கும்.
    ட, ண - நுனிநா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.

இவை ஆறும் ஒருவகைப் பிறப்பு.

    த, ந - நாநுனி அண்ணமும் பல்லும் பொருந்துமிடத்தில் விரிந்து ஒற்றப் பிறக்கும்.
    ற, ன - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
    ர, ழ - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும்.
    ல - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
    ள - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை வருடப் பிறக்கும்.
    ப, ம - இதழோடு இதழ் பொருந்தப் பிறக்கும்.
    வ - பல்லும் இதழும் இயையப் பிறக்கும்.
    ய - மிடற்றில் எழுந்த ஒலி அண்ணத்தில் அடைபடும்போது பிறக்கும்.

மெல்லின எழுத்து ஆறும் மூக்கில் இசைக்கும்.

அந்த அந்த எழுத்துக்களை அந்த வகையில் உச்சரித்தால் பிழையின்றி ஒலியை உணரலாம்.

 

வாத்தியார் அழகான விளக்கங்கள். 
நீங்கள் உண்மையில் தமிழ் பண்டிதர் தானா?

எனக்கு முழுவதுமாக விளங்கவில்லை (காரணம் நான் படித்த ஆரம்ப பள்ளி ஓரு முஸ்லீம் "பள்ளி")
அங்கு நிலைமை இப்படித்தான் இருக்கும்:
செல் என்ற செல்லுக்கு செல்ர  செல் செல்...
நான்  படித்தது  "திமில்"..
ஆனால் பிடித்தது  என்னவோ "தமிழ்" தான். :14_relaxed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27.2.2017 at 10:14 PM, Sasi_varnam said:

வாத்தியார் அழகான விளக்கங்கள். 
நீங்கள் உண்மையில் தமிழ் பண்டிதர் தானா?

எனக்கு முழுவதுமாக விளங்கவில்லை (காரணம் நான் படித்த ஆரம்ப பள்ளி ஓரு முஸ்லீம் "பள்ளி")
அங்கு நிலைமை இப்படித்தான் இருக்கும்:
செல் என்ற செல்லுக்கு செல்ர  செல் செல்...
நான்  படித்தது  "திமில்"..
ஆனால் பிடித்தது  என்னவோ "தமிழ்" தான். :14_relaxed:

இல்லை சசி
ஆனால் தமிழில் எனக்கு ஆர்வம் அதிகம்
தெரியாததையும் தேடி அறிந்து கொள்வேன்.

பண்டிதர் சான்றிதழ் என்னிடம் இல்லை
பத்தாம் வகுப்புச் சான்றிதழ் மட்டுமே என்னிடம் உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.