Jump to content

ஆண்மகனின் பேறுகாலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மகனின் பேறுகாலம்

காலை அலுவலகம் செல்கையில்:
எனக்கு தேதி தள்ளி போகுது. Pregnancy Kit வாங்கிட்டு வாங்க. 

இரவு 2 மணி:
அவர்: ஒரு வேளை உண்டாயிருந்தா என்ன பண்றது?
அவள்: பெத்துகிற நானே கவலை படல.உங்களுக்கு என்ன? தூங்குங்க. 

விடியற்காலை 5 மணி:
அவர்: போய் பாத்துட்டு வாயேன். பயமா இருக்கு. 

5:10 மணி:
அவள்: இந்தாங்க நீங்களே பாத்துக்கோங்க.
அவர்: (கண்களில் கண்ணீருடன்) கவலைப்படாத, நான் உன்ன பத்திரமா பாத்துக்கிறேன். 
அவள்: பாத்துக்காம இருந்து தான் பாரேன். 1f603.png:D

2 ஆம் மாதம்:
அவள்: Doctor checkup க்கு appointment போட்டியா?
எனக்கு பயங்கரமா தலை சுத்துது.
எந்திரிக்கவே முடிய மாட்டேங்குது.
இடுப்பெல்லாம் வலிக்குது.
அவர்: நீ rest எடு. நான் பாத்துக்கிறேன். 

3 ஆம் மாதம்:
அவள்: மருத்துவமனைக்கு கூட வருவ தானே?
அந்த கோழியை தின்னுட்டு என் பக்கத்துல வராத. நாத்தம் தாங்கல.
அந்த folic acid மாத்திரை எல்லாம் என் பக்கம் நீட்டாதே. வாந்தி வருது.
நீ முன்ன பின்ன வாந்தி எடுத்திருக்கியா?
அவர்: இல்ல. நான் வாந்தி எடுக்காமலேயே 28 வயசு வரைக்கும் வளந்துட்டேன். எப்படி இருக்கும் சொல்லு?
அவள்: கர்ப்பம் ஆகி வாந்தி எடுத்திருக்கியா ? அப்டியே அடிவயிறுல இருந்து வலிக்குது. 1f641.png:(
அவர்: சரி. படுத்துக்கோ. ஒன்னும் சாப்பிட வேண்டாம். 
அவள்: அப்போ நா பட்டினியா இருந்தா பரவால்ல. நீ மட்டும் கோழி சாப்பிடுவ. 

4 ஆம் மாதம்:
இரவு 3 மணி:
அவள்: எனக்கு பசிக்குது. பிரட் எடுத்துட்டு வரியா?
அவர்: (தூக்க கலக்கத்தில்) போறேன். 
வருகையில்: Bread, Jam, Nutella, பழங்கள் , தண்ணீர் , பழச்சாறு .
அவள்: 1f62e.png:O

5 ஆம் மாதம்:
அவள்: கால் எல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா? கைல, கால்ல எல்லாம் நீர் போடுது. மோதிரம் கூட போட முடில.
அவர்: பாப்பா வளருது. அந்த எடைய தூக்க முடியாம தான் கால் வலிக்குது. நான் அமுத்தி விடறேன்.
அவள்: என்ன இப்படி அமுக்கற? நீ அமுக்கவே வேண்டாம். வலிக்குது. எங்க நல்லா அமுக்குனா, இவ சும்மா சும்மா நம்மள அமுக்க சொல்லிடுவாளோனு தானே, வேணும்னு இப்படி வலிக்கிற மாதிரி அமுக்குற? 

6 ஆம் மாதம்:
அவள்: முக்கி முனகி எந்திரிக்க முனைகையில் 
அவர்: என்னாச்சு? வலிக்குதா? விடிஞ்சிருச்சா? ambulance கூப்பிடவா? தண்ணி வேணுமா? கொஞ்சம் பொறுத்துக்கோ.
அவள்: யோவ், எதுக்கு இவ்ளோ சத்தம்? chu chu போகணும், எந்திரிக்க முடில. 
அவர்: இப்போ தானே போன? அதுக்குள்ளயா? நான் வேணும்னா Adult Diaper வாங்கி தரவா? இப்படி 10 தடவை எந்திரிக்க வேண்டாம்.
அவள்: (முறைத்தபடி) மூடிட்டு தூங்கிடு. இல்ல சாவடிச்சுடுவேன். 

7 ஆம் மாதம்:
அவர்: பக்கத்தில் அமர்ந்து பார்க்கிறார்.
அவள்: எதுக்கு என்ன பாக்குற? எதுக்கு சும்மா பாக்குற? வேற எங்கயாவது பாரு. நான் தான் கிடைச்சேனா பாக்க? 
அவர்: பாத்தது ஒரு குத்தமா? அதுக்கு ஏன் அழற?
அவள்: நான் அப்படி தான் அழுவேன். நீ ஏன் என்ன பாக்குற? நா அழுதா உனக்கு என்ன? இந்த வீட்ல அழ கூட உரிமை இல்லையா? நான் எங்க வீட்டுக்கு போறேன். எனக்கு எங்க அம்மா வேணும். 
அவர்: சரி. நான் போறேன். உன்ன பாக்கல.
அவள்: ஆமா. நான் தான் இப்போ குண்டாயிட்டேன். அசிங்கமா இருக்கேன். எப்படி என்ன எல்லாம் பாக்க தோணும். நீ மட்டும் நல்லா ஒல்லியா இருக்க . போ போ. என்ன பாக்காத. 

8 ஆம் மாதம்:
நடுஇரவில்:
அவள்: ஏன் தூங்குற?
அவர்: இப்போ நான் தூங்கிறது பிடிக்கலையா? இல்ல உனக்கு தூக்கம் வரலையா?
அவள்: ரெண்டுமே இல்ல. நீ ஏன் குப்புற படுத்து தூங்குற? நான் மட்டும் அப்படி தூங்க முடில. நீயும் தூங்காத. என் புள்ள மட்டும் இல்ல.உன் புள்ள கூட தான். 
அவர்: சரி. நான் திரும்பியே படுத்துகிறேன். 

9 ஆம் மாதம்:
அவள்: ரொம்ப வலிக்கும் தானே? எப்படி தாங்கிப்பேனோ? ரொம்ப பயமா இருக்கு.
அவர்: பயப்படாத. நான் பக்கத்துலயே இருப்பேன். நான் பாத்துக்கிறேன்.
அவள்: நீ பக்கத்துலயே இருப்ப. ஆனா உனக்கு வலிக்குமா? எனக்கு தான வலிக்கும். என் வலிய நீ வாங்கிப்பியா? இல்லேல. அப்போ பேசாத. வலில இருக்கும் போது, "push, push" னு கூவுனா, கொரவளைய கடிச்சு வெச்சுடுவேன். 
அவர்: சரி மா, நான் எதும் சொல்ல மாட்டேன்.
அவள்: ஒரு பாப்பா நான் பெத்துக்கிறேன். அடுத்தது, நீ தான் பெத்துக்கணும். என்னால முடியாது.
அவர்: கண்டிப்பா நானே பெத்துக்கிறேன். இந்த பாப்பா மட்டும் நீ பெத்துக்கோ. 

10 ஆம் மாதம்:
அவள்: என்னங்க, வலிக்குது. தாங்க முடில. ஏதாவது ஊசி போட்டு என்ன கொன்னுடு. இதுக்கு மேல முடியாது. 
அவர்: கவலைப்படாத மா. நான் பக்கத்துலயே இருக்கேன். எங்கயும் போகல. கொஞ்சம் நேரம் தான். 

கூடவே இருந்து, முதல் மாதத்திலுருந்து , பத்தாம் மாதம் வரை, நாம் செய்யும் அலப்பறைகளை பொறுத்து, நமக்கு வேண்டியவற்றினை செய்து , நம்மிடம் திட்டும் வாங்கி, ஏன் திட்டுகிறாள், அழுகிறாள் என தெரியாமல் பேந்த பேந்த முழித்து , அதற்கும் நம்மிடம் வாங்கி கட்டிக்கொண்டு , எந்த நேரத்தில் வலி வருமோ என நாம் எண்ணுவதைக் காட்டிலும், எப்போதும் பாதி தூக்கத்தில் இருந்து, இயற்க்கை அழைப்புக்கு அழைத்துச் செல்வதிலிருந்து சகலமும் செய்து, " கொசு கடித்தாலே கூவுவாள், பேறுகாலத்தை எப்படி தாங்கி கொள்வாளோ " என பயந்து, வலி வந்தவுடன் , தாயும் சேயும் பத்திரமாக இருக்க வேண்டுமே எனப் பிரார்த்தித்து, எங்கே பயத்தை முகத்தில் காண்பித்தால் அவளும் பயந்து விடுவாளோ என மனதிற்குள்ளே வைத்து, வெளியே சிறு புன்னகையுடன், அவளுக்கு தைரியம் சொல்லி, தாயுடன் சேர்ந்து , மனதளவில் இரண்டு மடங்காய் சோர்ந்து, கடைசியில் குழந்தை பிறந்தவுடன் , தன் இரு உயிர்களையும் முத்தமிட்டு, கண்களினோரம் கண்ணீருடன், வெளியே வந்து, உறவினர்களுக்கு நா தழுதழுக்க செய்தியை சொல்லுமிடத்தில் இருக்கிறது "ஆண்களின் பேறுகாலம்" . 

பெண்கள் தரும் இன்னல்களை முகஞ்சுளிக்காமல் பொறுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் ஒரு தாய் தான். 

பெண்கள் பேறுகாலம் என்னமோ பத்து மாதம் தான். ஆனால் ஆண்களுக்கு வாழ்நாளெல்லாம்.. 1f49d.png?1f49d.png?1f49d.png?

உபயம் - முகநூல்

மு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே நெஞ்சைத் தொட்டுட்டீங்கள்  மீரா....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீரா....  இணைத்த  கட்டுரை, கற்பனை  இல்லை. உண்மை என்பதற்கு.... 
உலகின் முதல் குழந்தை பெற்று எடுத்த... ஆண் இவர்தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பட்ட பாடு இருக்கெல்லே....

சொல்லி வேலையில்லை....பேசாமல் நானே பத்து பிள்ளையை பெத்துப்போட்டு சிம்பிளாய் இருக்கலாம் போலைகிடக்கு....:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இயற்கயின் நியதி என்று எண்ணுகிறேன் .....

எபோதுமேபார்த்திருக்காத இருவர் ....
ஒரு 25-30 வயதில் சந்தித்து ..... மீதி வாழ்க்கை முழுவதையும் 
இவர் அவருக்காகவும் ...... அவர் இவருக்கு ஆகவும் 
வாழுதல் என்பது ... அவ்வளவு எளிதில்லை.
அதற்கு ஒரு ஆழமான அன்பு வேண்டும் .......

அன்பு ஆழமாக போக வேண்டும் என்றால் புரிந்துணர்வு என்பது 
அதைவிட ஆழமாக முன்னதாக போக வேண்டும் 
இப்படி ஒரு அந்நிய உன்னியத்தை .... இப்படியான தருணங்கள்தான் தோற்றுவிக்கின்றன.

(எங்கோ படித்தது .... ஓரூ மனிதனால் ஒரு குறிப்பிட்ட அளவு வலியையே தங்க முடியும் 
அந்த எல்லை தாண்டும்போது மூளை போதிய அளவு ஓட்ஸிசனை பெற்றுக்கொள்ளாது   என்றும் மரணம் 
நிகழும் என்று. ஆனால் பிரவச வலி அதை விட பெரியதென்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆக உங்களுடைய மனைவி மார் என்னமோ செத்து பிழைக்கிறார்கள் என்பது உண்மையே. அந்த வலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யாலாம் என்றுதான் எண்ணுகிறேன்) 

இருவருக்கிடையில் அழமான அன்பு வந்துவிட்டால் ....
உலகில் ஒவொன்றும் அழகுதான் அதன் பின்பு. அவர்கள் இன்னொருவருக்கு 
எப்போதும் தீங்கு இழைப்பதை நான் பார்ப்பது அரிது. 
அவர்கள் அழகா வாழ்கிறார்கள் என்பதை விட பெரிய விடயம் ...
இந்த உலகையும் அழகாக பார்த்து கொள்கிறார்கள் என்பதுதான். 

கார்ல் மார்கஸின் கதைகள் படிக்கும்போது எல்லாம் ....
அவருடைய மனைவி எவ்வளவு தியாகம் செய்து இருக்கிறாள் என்பது 
மூளைக்கு வந்து வந்து போகும் ......... அந்த காதலை மட்டும் அவள் தியாகம் செய்திருப்பின் 
அவளது வாழ்க்கை ராணி போன்றது ..... அவள் ராணியாகத்தானே இருந்தாள். 
ஆனால் தோற்று போனாலும் ..... ஒரு மார்க்கத்தை உலகிற்கு கொடுத்த வரலாறில் வாழ்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் பட்ட பாடு இருக்கெல்லே....

சொல்லி வேலையில்லை....பேசாமல் நானே பத்து பிள்ளையை பெத்துப்போட்டு சிம்பிளாய் இருக்கலாம் போலைகிடக்கு....:(

குசா உட்பட யாழ்கள உறுப்பினர்கள் எல்லோரும் தமது அனுபவங்களை எழுதலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணென்ற திமிரில், செருக்கில் முதலிரவிலிருந்து, ஆணின் கட்டை சுடுகாட்டில் வேகும் வரை குடும்பத்தில் இத்தடியன்கள் செய்யும் வீட்டு வன்முறைகளை,இன்னல்களை கணக்கெடுத்தால் பெண் ஜென்மாய் ஏன் பூமில் பிறந்தோமென ஒவ்வொரு பெண்ணும் அவள் வாழ்க்கையில், இல்லற வாழ்வில் பல நேரங்களில் நிச்சயம் நினைத்திருப்பாள்..! (சில விதிவிலக்குகள் இருக்கலாம்)

ஆனால் உலகில் 99% ஆணாதிக்கம் தான்..!

எந்த ஆண், பத்துமாதம் வரை தன் மனைவியை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்கிறான்? மனைவி கருவை சுமக்க ஆரம்பித்தவுடன் அடுத்த பெண்ணை நோக்கி வலை வீசுவதும், ஆறு மாதத்தில் மனைவியை அவளின் பெற்றோரிடம் அனுப்பிவிட்டு கூத்தடிக்கும் பெரும்பான்மையான ஆணுலகம் பிரசவத்தின்போது மனைவியின் அருகிலா இருந்து கவனித்துக்கொள்கிறது?

8 hours ago, Maruthankerny said:

(எங்கோ படித்தது .... ஓரு மனிதனால் ஒரு குறிப்பிட்ட அளவு வலியையே தங்க முடியும் அந்த எல்லை தாண்டும்போது மூளை போதிய அளவு ஓட்ஸிசனை பெற்றுக்கொள்ளாது என்றும் மரணம் நிகழும் என்று. ஆனால் பிரவச வலி அதை விட பெரியதென்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆக உங்களுடைய மனைவிமார் என்னமோ செத்து பிழைக்கிறார்கள் என்பது உண்மையே. அந்த வலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யாலாம் என்றுதான் எண்ணுகிறேன்)

இதுதான் உண்மை! 

நன்றி மருது..:)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒவ்வொரு கணவனும் வாழ்வானா?

ரொம்பவும் வெகுளித்தனம் நிறைந்த குடும்பமாகவும் பல இடங்களில் சம்பாசணைகள் சிரிப்புமாக இருந்தது.

பிரசவம் என்றது ஏறத்தாள கண்ணி வெடியில் அகப்பட்ட ஜீப் மாதிரி தான்.ஒவ்வொரு பெண்ணும் புதிய பிறவி எடுக்கிறார்கள்.

பாராட்டுக்கள் மீரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் என்னை ஒரு பெண்ணிய வாதியாகவோ அல்லது ஒரு ஆணிய வாதியாகவோ கருதுவதில்லை!
எனினும், பிரசவம என்பது கடுமையானது என்றும்....அந்த வலி மிகவும் தாங்கவியலாதது என்றும் எனது சமூகத்தால் எனக்குக் கூறப்பட்டது!
நாற்பது நாட்கள் வரை....பாய்த் தடுக்குகளால் மூடப்பட்ட கூட்டுக்குள் ஒரு பெண் முடங்குவதும், ஊரிலுள்ள வேப்ப மரங்கள் அவ்வளவும் துகிலுரியப் பட்டு நிர்வாணமாக நிற்பதுவும், சீரகம் தான் ஒரு சர்வரோக நிவாரணியாகக் கருதப்பட்டு உபயோகிக்கப் படுவதும் சரியென்று என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!
ஒட்டகச் சிவிங்கி அல்லது காட்டு விலங்குகள் குட்டி போடும் போது.. சில மணி நேரங்களுக்குள் அவை நடக்க வேண்டும். இல்லாவிடின் அவை வேறு விலங்குகளின் உணவாகும் சந்தர்ப்பங்களே அதிகம்!
ஆபிரிக்க தேசமொன்றில்...சில மாணவிகள் படிக்கும் காலங்களில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது மிகவும் சாதாரணமானது! அத்துடன் அந்தக் குழந்தைகள்..அந்த மாணவியின் தந்தையாரின் குடும்பப் பெயரில்,, பதியப் படவும் அவர்களது சட்டத்தில் இடமுண்டு! ஒரு குழந்தை  பிறந்து மூன்றாவது நாளன்றே ..அந்த மாணவியால் வழக்கம் போல பாடசாலைக்கு வந்து தொடர்ந்து கல்வியைத் தடற முடிகின்றது!
பிரான்சில் ஒரு அரசியல் வாதியான பெண்மணியோருவர் ..குழந்தை பிறந்து மூன்றாவது நாளே பாராளுமன்றத்துக்குச் சமூகமளிக்க முடிந்தது!
ஒரு காரணத்துக்காகத் தான் பொருளாதார நிலையில் இரு துருவங்களான இரண்டு தேசங்களிலிருந்து உதாரணங்களை எடுத்தேன்!
சில சிக்கலான பிரசவங்களைத் தவிர்த்து.....நாம் எதற்காக...பெண்களின் பிரசவங்களை...அதி உன்னத தியாகங்களாகவும் ....மிகப் பெரிய சாதனைகளாகவும் கருதுகின்றோம்?
ஒரு ஆணும் பெண்ணும்...சரி பாதியாக இணைந்து சேர்வதே குடும்பம் என்பது! அது இயற்கையானது!
நாங்கள் எமது பெண்களுக்கு மற்றைய சமூகங்களை விடவும் அதிக சலுகைகள் கொடுப்பதால் தான்...அவர்கள் மேலும்...மேலும் தங்கள் கணவர்களிடம் எதிர்பார்க்கின்றார்கள் போல உள்ளது!
இந்தக் கருத்து ஒரு விவாதத்துக்காக மட்டுமே!
எல்லோரும் தடி தண்டுகளைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரக் கூடாது!
பி.கு: நானும் இந்த விசயத்தில நல்லா நொந்து நூலாகிப் போனவன்!

Link to comment
Share on other sites

3 hours ago, புங்கையூரன் said:

எல்லோரும் தடி தண்டுகளைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரக் கூடாது!
பி.கு: நானும் இந்த விசயத்தில நல்லா நொந்து நூலாகிப் போனவன்!

எனது முதற்பிள்ளைக்கும் ரொம்ப கஷ்ட்டப்பட்டு அடிவாங்கி + பேச்சு வாங்கி இரவு முழுவதும் முழித்திருந்து, பிறந்ததும் கதிரையில் அணைத்தபடியே பல மணி நேரம் தூக்கம். திடீரென முழிச்சு பாத்தால் கையில் மகன் - வந்த நேர்ஸிடம் கேட்டேன், பிள்ளை விழுந்திருந்தா என்னவாகியிருக்கும் என்று.  அவளும் சிரித்தபடியே  "FATHER'S INSTINCT " என்றாள்.

மகனை மனைவிக்கு அருகே படுக்க வைத்துவிட்டு ஒரு தம் அடிக்க வெளியே போக - அங்கு சில மணி நேரத்துக்கு முன்னர் பிள்ளை பிரசவித்த ஒரு பெண் வந்திருந்தார். கற்பத்தின்போது தம் அடிக்கவில்லை - 7 மாதத்தின் பின்னர் முதலாவது என்று அளவளாவினார்.

எது  சரி எது பிழை எனக்கு தெரியாது.

ஆனால் எனது மகளும் தான் பூப்பெய்தியதற்காக ஒரு நாளும் பாடசாலைக்கு போகாமல் விட்டதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொஞ்சம் புதுனம் பார்க்கிறன் சரியோ  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

என்னைப் பொறுத்தவரையில் என்னை ஒரு பெண்ணிய வாதியாகவோ அல்லது ஒரு ஆணிய வாதியாகவோ கருதுவதில்லை!
எனினும், பிரசவம என்பது கடுமையானது என்றும்....அந்த வலி மிகவும் தாங்கவியலாதது என்றும் எனது சமூகத்தால் எனக்குக் கூறப்பட்டது!
நாற்பது நாட்கள் வரை....பாய்த் தடுக்குகளால் மூடப்பட்ட கூட்டுக்குள் ஒரு பெண் முடங்குவதும், ஊரிலுள்ள வேப்ப மரங்கள் அவ்வளவும் துகிலுரியப் பட்டு நிர்வாணமாக நிற்பதுவும், சீரகம் தான் ஒரு சர்வரோக நிவாரணியாகக் கருதப்பட்டு உபயோகிக்கப் படுவதும் சரியென்று என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!
ஒட்டகச் சிவிங்கி அல்லது காட்டு விலங்குகள் குட்டி போடும் போது.. சில மணி நேரங்களுக்குள் அவை நடக்க வேண்டும். இல்லாவிடின் அவை வேறு விலங்குகளின் உணவாகும் சந்தர்ப்பங்களே அதிகம்!
ஆபிரிக்க தேசமொன்றில்...சில மாணவிகள் படிக்கும் காலங்களில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது மிகவும் சாதாரணமானது! அத்துடன் அந்தக் குழந்தைகள்..அந்த மாணவியின் தந்தையாரின் குடும்பப் பெயரில்,, பதியப் படவும் அவர்களது சட்டத்தில் இடமுண்டு! ஒரு குழந்தை  பிறந்து மூன்றாவது நாளன்றே ..அந்த மாணவியால் வழக்கம் போல பாடசாலைக்கு வந்து தொடர்ந்து கல்வியைத் தடற முடிகின்றது!
பிரான்சில் ஒரு அரசியல் வாதியான பெண்மணியோருவர் ..குழந்தை பிறந்து மூன்றாவது நாளே பாராளுமன்றத்துக்குச் சமூகமளிக்க முடிந்தது!
ஒரு காரணத்துக்காகத் தான் பொருளாதார நிலையில் இரு துருவங்களான இரண்டு தேசங்களிலிருந்து உதாரணங்களை எடுத்தேன்!
சில சிக்கலான பிரசவங்களைத் தவிர்த்து.....நாம் எதற்காக...பெண்களின் பிரசவங்களை...அதி உன்னத தியாகங்களாகவும் ....மிகப் பெரிய சாதனைகளாகவும் கருதுகின்றோம்?
ஒரு ஆணும் பெண்ணும்...சரி பாதியாக இணைந்து சேர்வதே குடும்பம் என்பது! அது இயற்கையானது!
நாங்கள் எமது பெண்களுக்கு மற்றைய சமூகங்களை விடவும் அதிக சலுகைகள் கொடுப்பதால் தான்...அவர்கள் மேலும்...மேலும் தங்கள் கணவர்களிடம் எதிர்பார்க்கின்றார்கள் போல உள்ளது!
இந்தக் கருத்து ஒரு விவாதத்துக்காக மட்டுமே!
எல்லோரும் தடி தண்டுகளைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரக் கூடாது!
பி.கு: நானும் இந்த விசயத்தில நல்லா நொந்து நூலாகிப் போனவன்!

ஒவ்வொருவருத்தருடைய உடம்பு வாசியும் வித்தியாசமானது...காப்பிலி பெண்கள் செக்ஸ் செய்வது மாதிரி தமிழ்ப் பெண்களால் செக்ஸ் செய்ய முடியுமா?...தவிர,நம் பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

என்னைப் பொறுத்தவரையில் என்னை ஒரு பெண்ணிய வாதியாகவோ அல்லது ஒரு ஆணிய வாதியாகவோ கருதுவதில்லை!
எனினும், பிரசவம என்பது கடுமையானது என்றும்....அந்த வலி மிகவும் தாங்கவியலாதது என்றும் எனது சமூகத்தால் எனக்குக் கூறப்பட்டது!
நாற்பது நாட்கள் வரை....பாய்த் தடுக்குகளால் மூடப்பட்ட கூட்டுக்குள் ஒரு பெண் முடங்குவதும், ஊரிலுள்ள வேப்ப மரங்கள் அவ்வளவும் துகிலுரியப் பட்டு நிர்வாணமாக நிற்பதுவும், சீரகம் தான் ஒரு சர்வரோக நிவாரணியாகக் கருதப்பட்டு உபயோகிக்கப் படுவதும் சரியென்று என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!
ஒட்டகச் சிவிங்கி அல்லது காட்டு விலங்குகள் குட்டி போடும் போது.. சில மணி நேரங்களுக்குள் அவை நடக்க வேண்டும். இல்லாவிடின் அவை வேறு விலங்குகளின் உணவாகும் சந்தர்ப்பங்களே அதிகம்!
ஆபிரிக்க தேசமொன்றில்...சில மாணவிகள் படிக்கும் காலங்களில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது மிகவும் சாதாரணமானது! அத்துடன் அந்தக் குழந்தைகள்..அந்த மாணவியின் தந்தையாரின் குடும்பப் பெயரில்,, பதியப் படவும் அவர்களது சட்டத்தில் இடமுண்டு! ஒரு குழந்தை  பிறந்து மூன்றாவது நாளன்றே ..அந்த மாணவியால் வழக்கம் போல பாடசாலைக்கு வந்து தொடர்ந்து கல்வியைத் தடற முடிகின்றது!
பிரான்சில் ஒரு அரசியல் வாதியான பெண்மணியோருவர் ..குழந்தை பிறந்து மூன்றாவது நாளே பாராளுமன்றத்துக்குச் சமூகமளிக்க முடிந்தது!
ஒரு காரணத்துக்காகத் தான் பொருளாதார நிலையில் இரு துருவங்களான இரண்டு தேசங்களிலிருந்து உதாரணங்களை எடுத்தேன்!
சில சிக்கலான பிரசவங்களைத் தவிர்த்து.....நாம் எதற்காக...பெண்களின் பிரசவங்களை...அதி உன்னத தியாகங்களாகவும் ....மிகப் பெரிய சாதனைகளாகவும் கருதுகின்றோம்?
ஒரு ஆணும் பெண்ணும்...சரி பாதியாக இணைந்து சேர்வதே குடும்பம் என்பது! அது இயற்கையானது!
நாங்கள் எமது பெண்களுக்கு மற்றைய சமூகங்களை விடவும் அதிக சலுகைகள் கொடுப்பதால் தான்...அவர்கள் மேலும்...மேலும் தங்கள் கணவர்களிடம் எதிர்பார்க்கின்றார்கள் போல உள்ளது!
இந்தக் கருத்து ஒரு விவாதத்துக்காக மட்டுமே!
எல்லோரும் தடி தண்டுகளைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரக் கூடாது!
பி.கு: நானும் இந்த விசயத்தில நல்லா நொந்து நூலாகிப் போனவன்!

ரோமியோ நாமே நமக்கானவற்றை வரையறுக்கிறோம் இயற்கை எவருக்கும் விதிவிலக்கல்ல. உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ஒவ்வொருவருத்தருடைய உடம்பு வாசியும் வித்தியாசமானது...காப்பிலி பெண்கள் செக்ஸ் செய்வது மாதிரி தமிழ்ப் பெண்களால் செக்ஸ் செய்ய முடியுமா?...தவிர,நம் பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்:mellow:

ரதி....காப்பிலிப் பெண்கள் படை நடத்தியதாக..இதுவரை வரலாறு இல்லை!

ஆனால்....தமிழ்ப்பெண்கள்..படை நடத்தியவர்கள்...!

மறம் கொண்டு....எதிரிகளைப் புறங்காட்டி ஓட...ஓடத் துரத்தியவர்கள்!

முதுகில் புண்பட்டு இறந்த மகனைப் போர்க்களத்தில் கண்டு...அவனுக்காகப் பாலூட்டிய முலையை அறுத்தெறிந்தவர்கள்!

 

அந்த வம்சத்தில் உதித்த செருக்கு...எனக்கு நிறையவே உண்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த டாக்குத்தர் மருத்துவச்சிமார் என்ன கோதாரிக்கு புருசன்மாரையும் பிள்ளைப்பெறு வாட்டுக்கு வந்து நிக்கச்சொல்லி அடம் பிடிக்கிறாங்கள் எண்டு எனக்கு விளங்கேல்லை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

உந்த டாக்குத்தர் மருத்துவச்சிமார் என்ன கோதாரிக்கு புருசன்மாரையும் பிள்ளைப்பெறு வாட்டுக்கு வந்து நிக்கச்சொல்லி அடம் பிடிக்கிறாங்கள் எண்டு எனக்கு விளங்கேல்லை.....

அடுத்ததைப் பற்றி...முடிவெடுக்கும் முன்பு....கொஞ்சம் யோசியுங்கள்...என்று சொல்லாமல் சொலவதற்காகத் தான்!:cool:

அந்த நாளையில ஐரிஷ் காரனுக்கும், வெள்ளைக்காரனுக்கும்... இந்திய பாகிஸ்தானியர்களுக்கும்... இப்படிச் செய்திருந்தால்...உலகம் இண்டைக்கு,...இருக்கிறதை விடவும்...நியாயமான இனப் பரம்பலுடன் இருந்திருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

அடுத்ததைப் பற்றி...முடிவெடுக்கும் முன்பு....கொஞ்சம் யோசியுங்கள்...என்று சொல்லாமல் சொலவதற்காகத் தான்!:cool:

அந்த நாளையில ஐரிஷ் காரனுக்கும், வெள்ளைக்காரனுக்கும்... இந்திய பாகிஸ்தானியர்களுக்கும்... இப்படிச் செய்திருந்தால்...உலகம் இண்டைக்கு,...இருக்கிறதை விடவும்...நியாயமான இனப் பரம்பலுடன் இருந்திருக்கும்!

கூடுதலாய் ஐரோப்பிய நாடுகளிலை மனுசி பிள்ளை பெறேக்கை புருசனும் பக்கத்திலை நிக்க வேணும்....அவுசிலை இல்லையோ? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

கூடுதலாய் ஐரோப்பிய நாடுகளிலை மனுசி பிள்ளை பெறேக்கை புருசனும் பக்கத்திலை நிக்க வேணும்....அவுசிலை இல்லையோ? :unsure:

ஐரோப்பாவில உள்ள நல்லது கெட்டது  ..... எல்லாம் இஞ்சையும் இருக்குது!

ஆனாலும் எனது மகள் பிறந்த போது..நான் ஐரோப்பாவில்...!

எதுக்கும் வடிவாய் ஒருக்கால் ....ஆரிட்டையும் விசாரிச்சுப் போட்டுச் சொல்லுறன்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, புங்கையூரன் said:

என்னைப் பொறுத்தவரையில் என்னை ஒரு பெண்ணிய வாதியாகவோ அல்லது ஒரு ஆணிய வாதியாகவோ கருதுவதில்லை!
எனினும், பிரசவம என்பது கடுமையானது என்றும்....அந்த வலி மிகவும் தாங்கவியலாதது என்றும் எனது சமூகத்தால் எனக்குக் கூறப்பட்டது!
நாற்பது நாட்கள் வரை....பாய்த் தடுக்குகளால் மூடப்பட்ட கூட்டுக்குள் ஒரு பெண் முடங்குவதும், ஊரிலுள்ள வேப்ப மரங்கள் அவ்வளவும் துகிலுரியப் பட்டு நிர்வாணமாக நிற்பதுவும், சீரகம் தான் ஒரு சர்வரோக நிவாரணியாகக் கருதப்பட்டு உபயோகிக்கப் படுவதும் சரியென்று என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!
ஒட்டகச் சிவிங்கி அல்லது காட்டு விலங்குகள் குட்டி போடும் போது.. சில மணி நேரங்களுக்குள் அவை நடக்க வேண்டும். இல்லாவிடின் அவை வேறு விலங்குகளின் உணவாகும் சந்தர்ப்பங்களே அதிகம்!
ஆபிரிக்க தேசமொன்றில்...சில மாணவிகள் படிக்கும் காலங்களில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது மிகவும் சாதாரணமானது! அத்துடன் அந்தக் குழந்தைகள்..அந்த மாணவியின் தந்தையாரின் குடும்பப் பெயரில்,, பதியப் படவும் அவர்களது சட்டத்தில் இடமுண்டு! ஒரு குழந்தை  பிறந்து மூன்றாவது நாளன்றே ..அந்த மாணவியால் வழக்கம் போல பாடசாலைக்கு வந்து தொடர்ந்து கல்வியைத் தடற முடிகின்றது!
பிரான்சில் ஒரு அரசியல் வாதியான பெண்மணியோருவர் ..குழந்தை பிறந்து மூன்றாவது நாளே பாராளுமன்றத்துக்குச் சமூகமளிக்க முடிந்தது!
ஒரு காரணத்துக்காகத் தான் பொருளாதார நிலையில் இரு துருவங்களான இரண்டு தேசங்களிலிருந்து உதாரணங்களை எடுத்தேன்!
சில சிக்கலான பிரசவங்களைத் தவிர்த்து.....நாம் எதற்காக...பெண்களின் பிரசவங்களை...அதி உன்னத தியாகங்களாகவும் ....மிகப் பெரிய சாதனைகளாகவும் கருதுகின்றோம்?
ஒரு ஆணும் பெண்ணும்...சரி பாதியாக இணைந்து சேர்வதே குடும்பம் என்பது! அது இயற்கையானது!
நாங்கள் எமது பெண்களுக்கு மற்றைய சமூகங்களை விடவும் அதிக சலுகைகள் கொடுப்பதால் தான்...அவர்கள் மேலும்...மேலும் தங்கள் கணவர்களிடம் எதிர்பார்க்கின்றார்கள் போல உள்ளது!
இந்தக் கருத்து ஒரு விவாதத்துக்காக மட்டுமே!
எல்லோரும் தடி தண்டுகளைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரக் கூடாது!
பி.கு: நானும் இந்த விசயத்தில நல்லா நொந்து நூலாகிப் போனவன்!

இதில் இரண்டு விதமான வாதம் உண்டு .....

நாம் எல்லோரும் தலையணை வைத்தே படுக்கிறோம் 
நமது பூட்டியின் பூட்டிக்கு தலையணை இருந்து இருக்குமா ?

பூட்டியின் பூட்டி தலையணை வைக்கவில்லை எனபதை காரணம் காட்டி 
இப்போ தலையனையை பறிப்பதில் என்ன அர்த்தம் இருக்க போகிறது ?

பிரவசம் என்பது ஒரு மகிமை 
அது இயற்கையாக இருக்குமிடத்து இலகு 
ஆடு குட்டி போடுகிறது ... குட்டி ஆடாகிறது 
பின்பு குட்டி .... ஒரு குட்டி போடும் ஆடாக வளர்கிறது 

நம் குழந்தைகள் அப்படி அல்ல .......
படிப்பு வேலை என்று எங்கோ எங்கோ நகர்கிறார்கள் 
மாதமாக இருக்கும்போது .... பல துயர்களுடனும் வேலைக்கு போகிறார்கள் 
இப்போ இங்கே ஒரு உதவி ஆறுதல் வார்த்தை இருக்கும்போது 
அந்த சுமை கொஞ்சம் சுகமாகிறது.

ஆப்ரிக்காவில் குழந்தை பிரவசத்தில் இறக்கும் பெண்கள் 
குழந்தைகள் எண்ணிக்கை உலகிலேயே அதிகமாக இருக்கிறது 
தப்பியதை பற்றி நாம் பேசுகிறோம் மாண்டதும் இருக்கிறது.

இறக்கும் எண்ணிக்கை குறைவான இடத்தில் ....
பராமரிப்பு கூடுதலாக இருக்கிறது .... இரண்டுக்கும் தொடர்பு இருக்கும்போது 
அங்கு சும்மா பெறுகிறார்கள் ...... இவர்களுக்குத்தான் பராமரிப்பா ?
என்பது கொஞ்சம் சிக்கலான கேள்வி. 

தன்னம்பிக்கை என்பது எல்லா இடத்திலும்தான் இருக்கிறது ..
ஒருவன் தலை மயிரில் கட்டி லொறியை இழுக்கிறான் .... அவனும்தானே 
இழுக்கிறான் என்றுவிட்டு உங்கள் வீட்டு காரி உங்கள் தலை மயிரில் ஒரு லொறியை கட்டலாமா ? 

கூடுதலான அன்பு ....
கூடுதலான பராமரிப்பு ..
அந்த சுமையை கொஞசம் குறைக்கிறது 
அவள் என்ன ரோட்டில் போகும் ஒருத்தியா ? உங்களின் எங்களின் மனைவிதானே.
அப்பன் வைத்த வேம்பை துகில் உரிந்த கையோடு ... இன்னொரு வேம்பை வைத்துவிட்டால் 
என் மகன் ... தனது மனைவியின் பிரவசத்திற்கு துகிலிரிய உதவும். 

நீருக்குள் சுவாசித்துக்கொண்டு இருந்த குழந்தை 
இப்போ சட்டெனே காற்றை சுவாசிக்க தொடங்குகிறது 
இந்த நொடி ஒரு அதிசயம் !
அதை கொஞ்சம் கவனமாக பார்ப்பதுதான் நன்று ! 
 

Maternal_mortality_ratio%2C_2000.jpg

Prevention[edit]

The death rate for women giving birth plummeted in the twentieth century. The historical level of maternal deaths is probably around 1 in 100 births.[24] Mortality rates reached very high levels in maternity institutions in the 1800s, sometimes climbing to 40 percent of birthgiving women (see Historical mortality rates of puerperal fever). At the beginning of the 1900s, maternal death rates were around 1 in 100 for live births. Currently, there are an estimated 275,000 maternal deaths each year.[25] Public health, technological and policy approaches are steps that can be taken to drastically reduce the global maternal death burden.

Four elements are essential to maternal death prevention, according to UNFPA.[3] First, prenatal care. It is recommended that expectant mothers receive at least four antenatal visits to check and monitor the health of mother and fetus. Second, skilled birth attendance with emergency backup such as doctors, nurses and midwives who have the skills to manage normal deliveries and recognize the onset of complications. Third, emergency obstetric care to address the major causes of maternal death which are hemorrhage, sepsis, unsafe abortion, hypertensive disorders and obstructed labour. Lastly, postnatal care which is the six weeks following delivery. During this time bleeding, sepsis and hypertensive disorders can occur and newborns are extremely vulnerable in the immediate aftermath of birth. Therefore, follow-up visits by a health worker to assess the health of both mother and child in the postnatal period is strongly recommended.

https://en.wikipedia.org/wiki/Maternal_death

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.