Jump to content

நெஞ்சின் ஆசை நனவாக...


Recommended Posts

நெஞ்சின் ஆசை நனவாக...

செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் தாயகம் சென்று சேவை செய்ய இருக்கும் தன் முடிவை உறுதி செய்திருந்தாள் மோகனா. மூன்று பெண்களும், நான்கு ஆண்களுமாக ஒருவருட உடன்படிக்கையின் பேரில், அதில் இந்த நாட்டைச்சேர்ந்தவர்களும் அடங்களாக அவளின் பயணம் வெற்றிகரமாக பதியப்பட்டிருந்தது.

முதன் முதலாக அவளின் தாயக பயணம் இது. மனதுக்குள் சோடாக் குமிழ் போல் நுரையாய்ப் பொங்கும் சந்தோஷம். கூடவே மனதிற்குள் ஒரு சின்னப்பயம். அதையும் மீறிக்கொண்டு அவள் உள்ளத்தில் இருந்த மனஉறுதி தன்னால் முடிந்த சேவையை தன் தாய்நாட்டிற்காக செய்ய வேண்டும் என்ற திடமான உணர்வு அவளின் நாடி நரம்பெங்கும் வியாபித்து, அந்த பயத்தினை முறியடித்து இருந்தது.

வீட்டுக்கு வந்து தன் பயணம் பற்றிக் கூறியபோது அவளின் அம்மா பதைபதைத்து போனாள். "ஊரில்ல பயந்து,பயந்து வாழ்ந்து போட்டு, கடைசியில அகதியா இங்கு வந்து நிம்மதியாக வாழ்வம் என்டு இங்க வந்தா நீயும் திருப்பி அங்கேயே போகனும் எண்டா... எப்படி?" தன் கோபத்தை அனலாய் கக்கிக் கொண்டிருந்தவள் மீண்டும் "எப்ப சிட்டிசன் எடுத்து இந்த நாட்டுடன் இருப்போம் எண்டு அங்கையிருக்கிறைவயள் இங்க வாறதுக்கு பறந்து கொண்டிருக்கேக்க உனக்கென்ன விசரே திருப்பி அங்கே போறன் எண்டு வந்து நிக்கிற. உனக்கு தெரியமே ஊரில்ல என்ன நடக்குதெண்டு..." அம்மா பொறிந்து தள்ளிக் கொண்டிருந்தாள்.

புலம்பெயர் மண்ணில் தாயகம் பற்றிய எத்தனை நிகழ்வுளில் கலந்து அவற்றை சிறப்பித்திருக்கிறாள் மோகனா. அப்போதெல்லாம் கட்டியணைத்து, தட்டிக்கொடுத்து, வாழ்த்துக்கள் சொல்லி, ஆதரவாய் ஆசுவாசப்படுத்தி கரம்கோர்த்த அம்மாவா இப்படி?

சொன்னதைக்கேட்டும் அவள் மௌனமாக இருந்தாள். மோகனாவுக்கு தாயகம் செல்லப் பிடித்திருந்தது.

அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்வது தேன் கூட்டில் கல் எறிவது போல, ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் அத்தோடு ஓயாது சரம் சரமாய்க் கேள்விக்கணைகள் மேலும் கிளம்பும். மோகனா மௌனமாய் இருந்தாள்.

அப்பா தொடர்ந்தார்

"நீ யாரைக் கேட்டு உன்னுடைய முடிவைச் சொன்னனி. நான் இங்க தகப்பன் எண்டு ஒருத்தன் இருக்கிறன் எண்டா நினைப்பாவது இருக்கா"தன் ஆற்றாமையை வார்த்தையால் கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தார் குடும்பத்தலைவனின் ஆக்ரோக்ஷத்துடன் குரல் சற்றே உயர்ந்திருந்தது.

"எனக்கு அங்கு போய் சேவை செய்யப் பிடித்திருந்தது. அதனால நான் ஓம் என்டு சொல்லிப்போட்டன். கையெழுத்தும் போட்டுட்டேன்." அமைதியாகச் சொன்னாள் மோகனா.

"18 வயசு வந்தால் போதும் முழுசுதந்திரமும் கிடைச்சாப்போல தங்கட பாட்டுக்கு முடிவு எடுக்கிறது கையெழுத்து போடுறது ஐரோப்பாவின் சட்டதிட்டங்களால் வாயைத்திறந்து என்னால் கதைக்கமுடியுது இல்லை..." இறுதியில் தன் இயலாமையை வார்த்தையால் கொட்டி,தீர்த்துக் கொண்டிருந்தார்.

மோகனாவின் உடம்பின் செல்களில் மெலிதான மின்சாரம் பாய்வது போன்ற ஓர் உணர்வு. அமைதியாக தன் நிலையை விளக்கம் கூற எத்தனிக்கின்றாள். "அப்பா, உங்கள் மனத்துன்பம் எனக்கு விளங்குது. நான் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடனும், என்னுடன் சிலரும் வருகினம். இது என்னுடைய பல நாள் கனவு. எனது தாயகத்தையும் பார்த்து,அந்த வாழ்வியலில் வாழ்ந்து, அதில் என்னுடைய சேவை நிறைவு பெறவேண்டும் திரும்ப ஒரு வருசத்தால நான் கட்டாயம் திரும்பி வருவன்..." என்று தன் நெஞ்சினிலில் வாசம் செய்கின்ற ஆசைகளைக் கூறி, பெற்றோரை சமாதானம் செய்தவள் தன் பயண ஒழுங்குகளை கவனிப்பதில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.

உறவினர்களுக்காக எடுத்து செல்வதற்காக அவள் பெற்றோர் வாங்கிக் கொடுத்த பொருட்களை "இவற்றை கட்டாயம் எடுத்துச்செல்லத்தான் வேண்டுமா? அம்மா உதையெல்லாம் என்னால் கொண்டுபோக முடியாதம்மா..." என்று தீர்மானமாகவே கூறி மறுத்த மோகனா தன் பயணத்துக்கு தேவையானவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமானாள். உறவினர் என்ற வட்டத்துக்குள் இருந்து விடுபட்டு, அவள் சிந்தனைகள் எல்லாம் பொதுப்படையான நோக்கங்கள் கொண்டவையாக இருந்தது.

பெற்றோருடன் விமானநிலையத்தை நோக்கி புறப்பட்டுக்கொண்டிருக்கும் போது அந்த பூக்கடைகளை நோட்டமிட அவள் கண்கள் தவறவில்லை.

ஓ... இன்று பெப்ரிவரி 14 ந்திகதி காதலர் தினம்.

அதுதான் பூக்கடைகள் எங்கும் ஓரே சனக்கூட்டம். மலர்ந்தும், மலராமலும் இதயத்தைக் கொள்ளைகொள்ளும் வகையில் பூங்கொத்துகளாக... இருந்த பலவண்ணங்களில் இருந்த மலர்கள் மோகனா வின் மனதையும் கவர்ந்ததில் ஆச்சரிமில்லை.

அந்த அழகான ரோஜாமலர்களை பார்த்தபோது அவளையறியாமலே அவளுக்குள் அவளின் ஆழ்மனதிலிருந்து கிளர்ந்தெழுந்த அந்த உணர்வுகள்.. மண்ணின் மலர்வுக்காக மடிந்த அந்த மாவீரர்களின் சமாதிகளுக்கு முன்னால் அத்தனை மலர்களையும் வைத்து மானசீகமாக அர்ச்சிக்க வேண்டும் போல் தமிழிச்சியான அவளின் நாடி நரம்புகளில் வியாபித்து நின்றது.

மாவீரர்களின் நிகழ்வுகளை எல்லாம் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கின்றாள். இந்த காதலர் தினத்துக்காக மலர்ந்திருக்கும் மலர்களைப் பார்த்தபோது அவள் உள்ளத்தில் பட்டுத்தெறித்த நினைவுகள் நெஞ்சினில் வாசம் செய்கின்ற ஆசைகள்... மணம்பரப்பி, அவள் மனதில் படர, அவள் பயணமும் வெற்றியை நோக்கியை தொடர்ந்து கொண்டிருந்தது.

(யாவும் கற்பனை)

Link to comment
Share on other sites

சண்முகியக்கோய் கன காலத்தக்கு பிறகு யாழிலை வந்து கதை போட்டிருக்கிறீங்கள் பாராட்டுகள் இப்பிடி இடைக்கிடை வந்திட்டு போனால் தானே எங்களுக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும் :D

Link to comment
Share on other sites

நிச்சயம் இனி இடைக்கிடை யாழுக்கு வருவன்.

உங்கள் கதையும் பார்த்தேன். நன்றாக இருக்கின்றது.

மேலும் தொடருங்கள். வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களின்பின் சண்முகிஅக்காவை களத்துல கதையோட கண்டது சந்தோசம்.

கதை வழமை போல் அருமை பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.