Jump to content

என் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி


Recommended Posts

முதல் பயணம் பற்றி எழுத முன்பாக ஒரு சத்தியம்:

இந்த சிறு பதிவையாவது முழுமையாக எழுதுவேன் என புங்கையூரன் மேல் சத்தியம் செய்து விட்டு ஆரம்பிக்கின்றேன் (என் அம்மா மேல கனக்க தரம் பொய் சத்தியம் செய்து இருக்கின்றேன். இப்ப அம்மாவுக்கு 73 வயதாகின்றது)

முதல் பயணம்.

2007 ஏப்ரலில் இலங்கையை விட்டு டுபாயிற்கு நான் புறப்படும் போது என் பாஸ்போர்ட்டில் கனடாவுக்கான தற்காலிக வதிவிட வீசாவும் குத்தப்பட்டு இருந்தது. அப்படி புறப்படும் காலத்தில் தான் இலங்கையில் கொழும்பிலும் நாடு எங்கிலும் தமிழர்கள் வீதி வீதியாக சுட்டுக் கொல்லப்பட்டும், காணாமல் போக்கடிக்கப்பட்டும் கொண்டு இருந்தார்கள். ஊடகவியலாளார்களும் முஸ்லிம் வியாபாரிகளும் கடத்தப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் எதிராக சுச்சாவிட நினைப்பவர்கள் கூட களையெடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.

மாவிலாற்றில் பெருக்கெடுக்கத் தொடங்கிய போர் தமிழர்களின் இரத்தத்தினால் இலங்கையை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தது.

விமானத்தில் வைத்தே மனதுக்குள் சத்தியம் செய்து கொண்டேன், இனி இலங்கை பக்கம் 10 வருடமாவது தலை வைத்தும் படுக்க கூடாது என.

இந்த உறுதி 2009 மே மாதத்தின் பின் வாழ்க்கையில் இனி எப்போதுமே இலங்கைக்கு செல்லக் கூடாது என்ற சத்தியமாக மாறி விட்டுருந்தது. எப்படியாவது அம்மாவையும், அக்கா குடும்பத்தினையும் கனடாவுக்கு கொண்டு வந்து விட்டால் போதும் இனி அந்தப் பக்கம் போகக் கூடாது என்று மனசுக்குள் உறுதி எடுத்திருந்தேன். ஒரு வேளை இடையில் அம்மாவுக்கு ஏதும் நடப்பினும் கூட அங்கு போகப் போவதில்லை என முடிவு செய்து இருந்தேன். இதை அம்மாவிடமும் சொல்லி இருந்தேன்.அப்படி போனால் ஒரு போதும் உயிருடன் திரும்ப முடியாது என நான் நினைத்து இருந்ததற்கான காரணங்களும் வலுவானைவையாக இருந்தன.

ஆனால் காலம் எல்லாவற்றையும் அடிச்சு நொறுக்கிக் கொண்டு தான் நினைத்ததையே சாதித்துச் செல்லும் என்பதற்கு இணங்க இடையில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.

ஊருக்கு போக வேண்டும் என்ற நினைப்பும், இலங்கையில் மகிந்தவின் ஆட்சி இல்லாமல் போனதன் பின்னான சூழ்நிலைகளும் என் உறுதிமொழியை இருந்த இடம் இல்லாமல் ஆக்கிவிட்டது. முன்னர் சாத்தியமாகும் என்று நினைத்த பல விடயங்கள் நிர்மூலமாகிப் போன அதே நேரத்தில் முன்னர் சாத்தியப்படாது என நினைச்ச பல விடயங்கள் நடக்கவும் தொடங்கியிருந்தன.

என்னுடன் உடன் பிறந்த ஒரே உறவான அக்காவை 9 வருடங்களாக நான் சந்திக்கவில்லை என்ற ஏக்கமும் ஒரு புறம் வளர்ந்து இனி பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு என்னக் கொண்டு வந்து விட்டது. அவர் இருப்பது சென்னையில் என்பதால் அங்கு சென்று விட்டு, இடையில் ஒரு வாரம் இலங்கைக்கு செல்வது என முடிவு செய்து இருந்தேன். மொத்தமாக இரண்டு வார லீவில் (17 நாட்கள்) தான் செல்லக் கூடியதாக அலுவலக வேலைகள் நெரித்துக் கொண்டு இருந்தன. ஆக இரண்டு வாரத்தில் ஒரு வாரம் சென்னையில், ஒரு வாரம் இலங்கையில், பயணத்துக்கு மூன்று நாட்கள் என்ற கணக்கில், மகனையும் இணைத்துக் கொண்டு என் பிரயாணத்தினை திட்டமிட்டேன்.

அம்மாவுடன் என் மனைவி கவிதாவும் மகள் இயலினியும் துணையாக கனடாவில் நிற்க நானும் மகனும் செப்ரம்பர் 16 அன்று சென்னையை நோக்கி எங்கள் பயணத்தினை ஆரம்பித்தோம்.

(மிகுதி பிறகு)

------------

தொடர்ச்சிகள்:

சென்னை உங்களை வரவேற்கின்றது

 

 

Link to comment
Share on other sites

  • Replies 139
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ம்... புங்கையூரான் உங்களுக்கும் இப்ப 73 உறுதியாகி விட்டது. பார்க்கலாம் மிச்சம் 27....!  tw_blush:

தொடருங்கள் நிழலி ....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், நிழலி!

மிகவும் நீண்ட நாட்களின் பின்பு யாழ் களம் தனது இயல்பு நிலைக்குத் திரும்புவது போல ...ஒரு உணர்வு ஏற்படுகின்றது!

வாழ்க்கை என்பது ஒரு புத்தகம் என்று கூறுவார்கள்!

எல்லாப் புத்தகங்களையும் போல....சிலரது வாழ்க்கை மர்ம நாவல்களைப் போலவும், சிலரது வாழ்க்கை... கையிலெடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாகவும்...சிலரது வாழ்க்கை...முன்னுரையை மட்டுமே வாசித்து விட்டு மேலே தொடர்ந்து வாசிக்க இயலாதவாறும், சிலரது வாழ்க்கை ஒரு சத்திய சோதனையாகவும் அமைந்து விடுவது உண்டு!

பயணங்களும்...வாழ்க்கையைப் போன்றவை தான்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டுக்கிளி இருந்தாலும் நம்ம ரோமியோவில் இப்படியெல்லாம் சத்தியம் செய்யக்கூடாது. ரோமியோ வெங்காயம் வெட்டும் நேர்த்தியை கண்கொண்டு பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன் அதற்குள் நீங்கள் அவர்மீது பொய் சத்தியங்கள் செய்து ஏனப்பா வெட்டுக்கிளி இங்கின திரிகிற கு.சா மேல சத்தியம் செய்ய வேண்டியதுதானே...<_<

 

சரி  பயணத்தொடரை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம்,  நீண்ட நாட்களின் பின்னர் சுய ஆக்கத்தைப் பார்ப்பது மகிழ்ச்சி. ஆரம்பம் அசத்தலாக இருக்கிறது. புங்ஸ் மேலே வேறு சத்தியம் செய்து விட்டீர்கள், தவண்டாவது எழுதி முடியுங்கோ, அந்தாள் பாவமப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, வல்வை சகாறா said:

வெட்டுக்கிளி இருந்தாலும் நம்ம ரோமியோவில் இப்படியெல்லாம் சத்தியம் செய்யக்கூடாது. ரோமியோ வெங்காயம் வெட்டும் நேர்த்தியை கண்கொண்டு பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன் அதற்குள் நீங்கள் அவர்மீது பொய் சத்தியங்கள் செய்து ஏனப்பா வெட்டுக்கிளி இங்கின திரிகிற கு.சா மேல சத்தியம் செய்ய வேண்டியதுதானே...<_<

 

சரி  பயணத்தொடரை எழுதுங்கள்.

கிழிஞ்சுது போ.....இண்டைக்கு நானே கிடைச்சன்....சரி நடக்கட்டும்...நடக்கட்டும். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, வல்வை சகாறா said:

வெட்டுக்கிளி இருந்தாலும் நம்ம ரோமியோவில் இப்படியெல்லாம் சத்தியம் செய்யக்கூடாது. ரோமியோ வெங்காயம் வெட்டும் நேர்த்தியை கண்கொண்டு பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன் அதற்குள் நீங்கள் அவர்மீது பொய் சத்தியங்கள் செய்து ஏனப்பா வெட்டுக்கிளி இங்கின திரிகிற கு.சா மேல சத்தியம் செய்ய வேண்டியதுதானே...<_<

 

சரி  பயணத்தொடரை எழுதுங்கள்.

சகாறா... உங்களுக்கெப்படி...?:cool:

அரைச்சாக்கு வெங்காயத்தை...அரை மணித்தியாலத்தில் வெட்டிய காலம் ஒன்று உண்டு...!

அது ஒரு நல்ல ..சமூக நோக்கத்துக்காக...செய்யப்பட்டது!

சரி...சரி....இருந்தாலும் ஒரு  ஆம்பிளைப் பிள்ளையை...அடுப்படிக்குக் கிட்ட வைச்சு இப்படி அசிங்கப் படுத்தக் கூடாது!:11_blush:

Link to comment
Share on other sites

4 hours ago, suvy said:

ம்... புங்கையூரான் உங்களுக்கும் இப்ப 73 உறுதியாகி விட்டது. பார்க்கலாம் மிச்சம் 27....!  tw_blush:

தொடருங்கள் நிழலி ....!

நன்றி சுவி அண்ணா

4 hours ago, யாயினி said:

ஆ...ஆ கள்ளச் சத்தியம் பண்றாரு .....??

ஹிஹி....

4 hours ago, புங்கையூரன் said:

தொடருங்கள், நிழலி!

மிகவும் நீண்ட நாட்களின் பின்பு யாழ் களம் தனது இயல்பு நிலைக்குத் திரும்புவது போல ...ஒரு உணர்வு ஏற்படுகின்றது!

வாழ்க்கை என்பது ஒரு புத்தகம் என்று கூறுவார்கள்!

எல்லாப் புத்தகங்களையும் போல....சிலரது வாழ்க்கை மர்ம நாவல்களைப் போலவும், சிலரது வாழ்க்கை... கையிலெடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாகவும்...சிலரது வாழ்க்கை...முன்னுரையை மட்டுமே வாசித்து விட்டு மேலே தொடர்ந்து வாசிக்க இயலாதவாறும், சிலரது வாழ்க்கை ஒரு சத்திய சோதனையாகவும் அமைந்து விடுவது உண்டு!

பயணங்களும்...வாழ்க்கையைப் போன்றவை தான்!

 

இந்த திரியை திறந்து இதை எழுத தூண்டியது நெடுக்கரின் பதிவு தான். நெடுக்கர், தான் ஊருக்கு போனதை எழுதினால் நிறையப் பேரின் விமர்சனத்தினை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிந்தும் எழுத துணிந்து எழுதியிருந்தார். சரி பிழைகளுக்கு அப்பால் அவது ஆக்கம் யாழில் தூங்கு நிலையில் இருந்த பலரை எழுப்பியிருக்கு. நெடுக்கருக்கு நன்றி!


பொதுவாக எனக்கு பயணங்கள் செல்லுவதும் வாகனம் செலுத்துவதும் மிகவும் பிடிச்சமான விடயங்கள். கனடாவிற்கு வந்த பின்பு வெளிநாடு செல்லவில்லையாயினும் ஒன்ராரியோ மானிலத்தில் இண்டு இடுக்கு எல்லாம் தேடி தேடி பயணித்துக் கொண்டு இருக்கின்றேன். இனி வெளிநாடுப் பயணங்களும் அதிகம் செய்வேன் என நினைக்கின்றேன்.

 

3 hours ago, வல்வை சகாறா said:

வெட்டுக்கிளி இருந்தாலும் நம்ம ரோமியோவில் இப்படியெல்லாம் சத்தியம் செய்யக்கூடாது. ரோமியோ வெங்காயம் வெட்டும் நேர்த்தியை கண்கொண்டு பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன் அதற்குள் நீங்கள் அவர்மீது பொய் சத்தியங்கள் செய்து ஏனப்பா வெட்டுக்கிளி இங்கின திரிகிற கு.சா மேல சத்தியம் செய்ய வேண்டியதுதானே...<_<

 

சரி  பயணத்தொடரை எழுதுங்கள்.

இரண்டாம் பயணத்தினை எழுதும் போது கு.சா அண்ணர் மீது ஒரு சத்தியம் செய்து விடுகின்றேன்.

 

3 hours ago, Thumpalayan said:

வணக்கம்,  நீண்ட நாட்களின் பின்னர் சுய ஆக்கத்தைப் பார்ப்பது மகிழ்ச்சி. ஆரம்பம் அசத்தலாக இருக்கிறது. புங்ஸ் மேலே வேறு சத்தியம் செய்து விட்டீர்கள், தவண்டாவது எழுதி முடியுங்கோ, அந்தாள் பாவமப்பா.

ஊருக்கு போய் வந்த பின் பதிவு எழுதவில்லையா என தனிமடலில் கேட்டு இருந்தீர்கள். அதன் பிறகு இன்னொரு பயணத்தினையும் செய்து விட்டு வந்தாச்சு....

 

2 hours ago, குமாரசாமி said:

கிழிஞ்சுது போ.....இண்டைக்கு நானே கிடைச்சன்....சரி நடக்கட்டும்...நடக்கட்டும். :cool:

அடுத்த சத்தியம் உங்கள் மீதுதான்

Link to comment
Share on other sites

சென்னை உங்களை மிக அன்புடன் வரவேற்கின்றது

ரொரன்டோவில் இருந்து Frankfurt பின் அங்கு இருந்து சென்னை செல்லும் விதமாக பயண ஏற்பாடுகள்.  ரொரன்டோவின் விமானத்தில் ஏறியாச்சு. மகன் மித்தா (மிதுனன்)  இரண்டு வயதில் தான் இறுதியாக விமானத்தில் பயணம் செய்து இருந்தமையால் கடும் குஷியில் இருந்தான். மூவர் இருக்கும் வரிசையில் நான் நடுவில், மகன் யன்னலோரம், எனக்கருகில் ஒரு சேர்பிய (Serbian) பெண்மணி. அவ் சேர்பிய பெண்ணுக்கு ஒரு 65 வயது இருக்கும். அவருக்கு அருகில் இருக்க வேண்டி வந்ததையிட்டு மனசில் 'பக்கத்து சீட்டில பாட்டி உக்காந்தா ...டேக் இட் ஈசி ஊர்வசி" என்ற பாட்டு ஓடிக் கொண்டு இருந்தது.

பொதுவாக விமானத்தில் ஏறினால் சாப்பாடு வரும் போதே வைன் அல்லது விஸ்கி கேட்டு அடித்து விட்டு 3 மணி நேரமாவது தூங்கி எழுந்து பின் சினிமா படம் பார்க்கும் பழக்கம் எனக்கு. ஆனால் மகனுடன் போவதால் ஒன்றும் குடிக்க விரும்பவில்லை. பக்கத்தில் இருக்கும் பெண்மணி இரண்டு தரம் ரெட் வைன் அடிக்கும் போது என் வயிற்றில் புகை எழுந்ததை மகன் காணவில்லை. சரி நித்திரை வரவில்லை என்று ஒரு ஆங்கிலப் படத்தை போட்டால் 20 நிமிடங்களில் அதில் வந்த பெண்மணி ஆடை களைய தொடங்க, இதை எப்படி மகனை பக்கத்தில் வைச்சுக் கொண்டு பார்ப்பது என்று channel மாற்றி laugh for gags பார்த்தேன்.

போனது Air Canada.. ஓரளவுக்கு வசதி எனிலும் கிட்டத்தட்ட பென்சன் வயது உள்ள பணியாளர்களும் அவர்களின் சலிப்பான சேவையும் பழைய விமானமும் என்று சலிப்பை கொடுத்தன

Frankfurt விமான நிலையம் வந்து இறங்கியாச்சு. 5 மணித்தியாலம் காத்திருக்க வேண்டும். மகனுக்கு தாகம் என்றான். மருந்துக்கும் தண்ணீர் குடிக்கும் fountain கள் இல்லை.  அங்கு இருக்கும் automated beverage system முழுதும் ஜேர்மன் மொழியில், சரி என்று credit card போட்டாலும் கோதாரி என்ன பதில் சொல்கின்றது என்றே தெரியவில்லை...ஆனால் தர மறுத்து விட்டது. அங்கு வந்த ஒரு பணியாளரிடம் தண்ணீர் எங்கு குடிக்கலாம் எனக் கேட்க அவர் ஆங்கிலத்தில் அடுத்த terminal இற்கு train இல் போக வேண்டும் என்றார். சரி duty free shop எங்கு என்று கேட்க, 3 ஆம் மாடி என்றார்

மூன்றாம் மாடிக்கு அலைந்து திரிந்து போய் தண்ணீர் வாங்கி கொடுத்து விட்டு கொஞ்சம் காத்திருந்து அடுத்த விமானம் பிடிக்க சென்றால், அவ் விமான நிலைய ஜேர்மன் அதிகாரிகளின் திமிரான நடவடிக்கை வெறுப்பை கொடுத்தது.

Frankfurt விமான நிலையம் சர்வதேச விமான போக்குவரத்தின் முக்கிய நிலையம் என்பதால் போட்டி போட வேண்டி இல்லை, நாம் வெறுத்தாலும் விரும்பினாலும் தவிர்க்க முடியாத ஒரு விமான நிலையம். இந்த நிலை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் அலட்சிய மனப்பான்மை என்னை கடுமையாக வெறுப்பேத்தியது.

ஒரு வழியாக எல்லாம் முடிந்து விமானம் ஏறி, சென்னை விமான நிலையத்தினை வந்தடைகின்றோம்.

சென்னை விமான நிலையம், அதன் கூரை விழும் விபத்துகள், அதிகாரிகளின் அலட்சியம் என பல நூறு செய்திகளை அடிக்கடி கேட்டு இருப்பதால் மிக மோசமான ஒரு அனுபவத்தினை எதிர்பார்த்து விமானத்தில் இருந்து இறங்குகின்றேன். மகனுக்கும் இது பற்றி சொல்லி அவனை தயார் படுத்தி இருந்தேன்

ஆனால் என் அவ்வளவு எதிர்மறையான எதிர்பார்ப்பும் பொய்த்து போகும் வண்ணம் சென்னை விமான நிலையமும் அதன் அதிகாரிகளும் இருந்தனர்

சென்னை எம்மை அன்புடன் வரவேற்கின்றது

 

Link to comment
Share on other sites

37 minutes ago, நிழலி said:

 அதில் வந்த பெண்மணி ஆடை களைய தொடங்க, இதை எப்படி மகனை பக்கத்தில் வைச்சுக் கொண்டு பார்ப்பது என்று channel மாற்றி laugh for gags பார்த்தேன்.

சரி சரி நம்பீட்டம். பச்சைத் தண்ணி  படாமல் போய்ச் சேர்ந்ததை நம்பினாலும் உதை நம்பிறது கஷ்டமாச்சே!

37 minutes ago, நிழலி said:

 

Frankfurt விமான நிலையம் வந்து இறங்கியாச்சு. 5 மணித்தியாலம் காத்திருக்க வேண்டும். மகனுக்கு தாகம் என்றான். மருந்துக்கும் தண்ணீர் குடிக்கும் fountain கள் இல்லை.  அங்கு இருக்கும் automated beverage system முழுதும் ஜேர்மன் மொழியில், சரி என்று credit card போட்டாலும் கோதாரி என்ன பதில் சொல்கின்றது என்றே தெரியவில்லை...ஆனால் தர மறுத்து விட்டது. அங்கு வந்த ஒரு பணியாளரிடம் தண்ணீர் எங்கு குடிக்கலாம் எனக் கேட்க அவர் ஆங்கிலத்தில் அடுத்த terminal இற்கு train இல் போக வேண்டும் என்றார். சரி duty free shop எங்கு என்று கேட்க, 3 ஆம் மாடி என்றார்

 

என்னப்பா ஜெர்மன்காரர் தான் வந்து விளங்கப்படுத்தனும். சிட்னி/மெல்பேர்ன்/பிரிஸ்பேனில் fountain நானறிந்தவரை இல்லை ஆனால் கடைகளும் vending மெஷின்களும் தாராளமாக உள்ளன.

37 minutes ago, நிழலி said:

 

சென்னை விமான நிலையம், அதன் கூரை விழும் விபத்துகள், அதிகாரிகளின் அலட்சியம் என பல நூறு செய்திகளை அடிக்கடி கேட்டு இருப்பதால் மிக மோசமான ஒரு அனுபவத்தினை எதிர்பார்த்து விமானத்தில் இருந்து இறங்குகின்றேன். மகனுக்கும் இது பற்றி சொல்லி அவனை தயார் படுத்தி இருந்தேன்

ஆனால் என் அவ்வளவு எதிர்மறையான எதிர்பார்ப்பும் பொய்த்து போகும் வண்ணம் சென்னை விமான நிலையமும் அதன் அதிகாரிகளும் இருந்தனர்

சென்னை எம்மை அன்புடன் வரவேற்கின்றது

 

ஆகா நல்ல விஷயம், விமான நிலையத்தில மலசல கூடம் போகவேண்டிய தேவை வந்ததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

சென்னை உங்களை மிக அன்புடன் வரவேற்கின்றது

ரொரன்டோவில் இருந்து Frankfurt பின் அங்கு இருந்து சென்னை செல்லும் விதமாக பயண ஏற்பாடுகள்.  ரொரன்டோவின் விமானத்தில் ஏறியாச்சு. மகன் மித்தா (மிதுனன்)  இரண்டு வயதில் தான் இறுதியாக விமானத்தில் பயணம் செய்து இருந்தமையால் கடும் குஷியில் இருந்தான். மூவர் இருக்கும் வரிசையில் நான் நடுவில், மகன் யன்னலோரம், எனக்கருகில் ஒரு சேர்பிய (Serbian) பெண்மணி. அவ் சேர்பிய பெண்ணுக்கு ஒரு 65 வயது இருக்கும். அவருக்கு அருகில் இருக்க வேண்டி வந்ததையிட்டு மனசில் 'பக்கத்து சீட்டில பாட்டி உக்காந்தா ...டேக் இட் ஈசி ஊர்வசி" என்ற பாட்டு ஓடிக் கொண்டு இருந்தது.

பொதுவாக விமானத்தில் ஏறினால் சாப்பாடு வரும் போதே வைன் அல்லது விஸ்கி கேட்டு அடித்து விட்டு 3 மணி நேரமாவது தூங்கி எழுந்து பின் சினிமா படம் பார்க்கும் பழக்கம் எனக்கு. ஆனால் மகனுடன் போவதால் ஒன்றும் குடிக்க விரும்பவில்லை. பக்கத்தில் இருக்கும் பெண்மணி இரண்டு தரம் ரெட் வைன் அடிக்கும் போது என் வயிற்றில் புகை எழுந்ததை மகன் காணவில்லை. சரி நித்திரை வரவில்லை என்று ஒரு ஆங்கிலப் படத்தை போட்டால் 20 நிமிடங்களில் அதில் வந்த பெண்மணி ஆடை களைய தொடங்க, இதை எப்படி மகனை பக்கத்தில் வைச்சுக் கொண்டு பார்ப்பது என்று channel மாற்றி laugh for gags பார்த்தேன்.

போனது Air Canada.. ஓரளவுக்கு வசதி எனிலும் கிட்டத்தட்ட பென்சன் வயது உள்ள பணியாளர்களும் அவர்களின் சலிப்பான சேவையும் பழைய விமானமும் என்று சலிப்பை கொடுத்தன

Frankfurt விமான நிலையம் வந்து இறங்கியாச்சு. 5 மணித்தியாலம் காத்திருக்க வேண்டும். மகனுக்கு தாகம் என்றான். மருந்துக்கும் தண்ணீர் குடிக்கும் fountain கள் இல்லை.  அங்கு இருக்கும் automated beverage system முழுதும் ஜேர்மன் மொழியில், சரி என்று credit card போட்டாலும் கோதாரி என்ன பதில் சொல்கின்றது என்றே தெரியவில்லை...ஆனால் தர மறுத்து விட்டது. அங்கு வந்த ஒரு பணியாளரிடம் தண்ணீர் எங்கு குடிக்கலாம் எனக் கேட்க அவர் ஆங்கிலத்தில் அடுத்த terminal இற்கு train இல் போக வேண்டும் என்றார். சரி duty free shop எங்கு என்று கேட்க, 3 ஆம் மாடி என்றார்

மூன்றாம் மாடிக்கு அலைந்து திரிந்து போய் தண்ணீர் வாங்கி கொடுத்து விட்டு கொஞ்சம் காத்திருந்து அடுத்த விமானம் பிடிக்க சென்றால், அவ் விமான நிலைய ஜேர்மன் அதிகாரிகளின் திமிரான நடவடிக்கை வெறுப்பை கொடுத்தது.

Frankfurt விமான நிலையம் சர்வதேச விமான போக்குவரத்தின் முக்கிய நிலையம் என்பதால் போட்டி போட வேண்டி இல்லை, நாம் வெறுத்தாலும் விரும்பினாலும் தவிர்க்க முடியாத ஒரு விமான நிலையம். இந்த நிலை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் அலட்சிய மனப்பான்மை என்னை கடுமையாக வெறுப்பேத்தியது.

ஒரு வழியாக எல்லாம் முடிந்து விமானம் ஏறி, சென்னை விமான நிலையத்தினை வந்தடைகின்றோம்.

சென்னை விமான நிலையம், அதன் கூரை விழும் விபத்துகள், அதிகாரிகளின் அலட்சியம் என பல நூறு செய்திகளை அடிக்கடி கேட்டு இருப்பதால் மிக மோசமான ஒரு அனுபவத்தினை எதிர்பார்த்து விமானத்தில் இருந்து இறங்குகின்றேன். மகனுக்கும் இது பற்றி சொல்லி அவனை தயார் படுத்தி இருந்தேன்

ஆனால் என் அவ்வளவு எதிர்மறையான எதிர்பார்ப்பும் பொய்த்து போகும் வண்ணம் சென்னை விமான நிலையமும் அதன் அதிகாரிகளும் இருந்தனர்

சென்னை எம்மை அன்புடன் வரவேற்கின்றது

 

எயர் கனடா என்றால் ...... நீங்கள் லூப்தான்சா ஆட்கள் உடனேயே பிரச்சனைகளை 
முடித்து கொள்ளலாம் .... அவர்களது சேவை பரவாயில்லை. 
எனக்கு மிகவும் பிடித்து இருந்தது .... எனக்கு தெரியாது என்ற வார்த்தைகள் குறைவு 
எப்படியாவது கண்டு பிடித்து சொல்லுவார்கள்.

எனது பொதி  ஒன்று தொலைந்துவிட்டது .... நான் இத்தாலி மிலன் போக இருந்தேன் 
பிளைட்  கான்செல் .... நான் வேறு ஒரு பிளைட் எடுத்து சுவிஸ் சூரிச் சென்றுவிடடேன்.
சூரிச்சில் லுப்தான்சா கவுண்டரில் சென்று கேட்டேன் ..இப்போதும் அங்கு இருப்பதாக சொன்னார்.
வேண்டுமென்றால் நாளை இங்கு எடுத்து தருவதாக சொன்னார்.நான் இங்கு இருக்க மாட்டேன் என்று சொல்ல அப்போ யூ ஸ் அனுப்புவதாக சொன்னார் ....... நான் நம்பவில்லை 2 கிழமையில் நான் வேலையால் வரும்போது 
பாக் வீட்டு வாசலில் இருக்கிறது. 

ஏர்போர்ட் உண்மையான போலீஸ் காரர்களும்  ஓகே (இமிகிரேஷன் + கஸ்டம்)
செகுருட்டி ஒரு பிரைவேட் கொம்பனி என்று எண்ணுகிறேன் ... அவர்கள் கொஞ்சம் 
நெருடலாகத்தான் இருக்கிறார்கள் காரணம் புரியவில்லை. அதில் சிலர் வெளிநாட்டவர் 
துருக்கி போல இருக்கிறது ... அவர்கள் எடுப்பு பேச்சு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. 
ஒருவரின் கேள்விகள் கொஞ்சம் தேவை இல்லாதவையாக இருந்தது .... போடா மூதேவி என்று 
மனத்திட்குள் திட்டி கொண்டு வந்துவிடடேன்.

மிக கேவலமான ஏர்போர்ட் என்றால் எனக்கு துபாய்தான் (கஸ்ட்மர் சர்விஸ் ஸிரோ) 

Harold Kierstead (Botswana) 28th December 2016

I flew into Frankfurt airport with a 5 month old baby. The baby change rooms were well organized and clean. The only issue I have is there was no place to clean baby bottles and to get clean hot water to make baby milk. I asked the cleaners, no help. I asked in the shops, no help. I asked the VIP lounges, no help. Absolutely horrible. No one even wanted to help. Only at the police station did a kind officer give me a cup of hot water. On our trip to Canada I flew through 3 other airports, at every place people were kind and went out of their way to help a little baby with just hot water to wash the bottles and make fresh milk.

Umesh Gupta (India) 2nd January 2017

At gate C14-C16 Frankfurt airport there was no water on tap. Security wants you to dump the bottle which you are carrying. In such cases, airport should provide water on tap. I had to purchase a half litre bottle, for $5 USD, which translates to INR 700 for one litre of water. The shops was happily collecting $5 USD against an item of Euro 3.67. - There was no other option except this single café/bar. We also found that temperature was low in the waiting halls outside the gates. Some more heating (for sub-zero temperature outside), would have helped. We have decided to avoid Frankfurt Airport

J Sch (Denmark) 7th October 2016

I have been to quite a few airports in my life and I have to say that Frankfurt was by far the worst one. The staff working there ordered everyone around like they where in the military. Not a single smile or nice tone of voice - I mean every single person there had that attitude. I understand that they are very busy and have to deal with a huge amount of people every day, but how come other airports manage to be friendly? It is definitely possible to give instructions - especially at the security points - without being rude. Also the food selection was very limited in parts of the airport.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணக் கட்டுரை என்றால் எனக்கும் படிக்கப் பிடிக்கும்  தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

Frankfurt விமான நிலையம் வந்து இறங்கியாச்சு. 5 மணித்தியாலம் காத்திருக்க வேண்டும். மகனுக்கு தாகம் என்றான். மருந்துக்கும் தண்ணீர் குடிக்கும் fountain கள் இல்லை.  அங்கு இருக்கும் automated beverage system முழுதும் ஜேர்மன் மொழியில், சரி என்று credit card போட்டாலும் கோதாரி என்ன பதில் சொல்கின்றது என்றே தெரியவில்லை...ஆனால் தர மறுத்து விட்டது. அங்கு வந்த ஒரு பணியாளரிடம் தண்ணீர் எங்கு குடிக்கலாம் எனக் கேட்க அவர் ஆங்கிலத்தில் அடுத்த terminal இற்கு train இல் போக வேண்டும் என்றார். சரி duty free shop எங்கு என்று கேட்க, 3 ஆம் மாடி என்றார்

மூன்றாம் மாடிக்கு அலைந்து திரிந்து போய் தண்ணீர் வாங்கி கொடுத்து விட்டு கொஞ்சம் காத்திருந்து அடுத்த விமானம் பிடிக்க சென்றால், அவ் விமான நிலைய ஜேர்மன் அதிகாரிகளின் திமிரான நடவடிக்கை வெறுப்பை கொடுத்தது.

Frankfurt விமான நிலையம் சர்வதேச விமான போக்குவரத்தின் முக்கிய நிலையம் என்பதால் போட்டி போட வேண்டி இல்லை, நாம் வெறுத்தாலும் விரும்பினாலும் தவிர்க்க முடியாத ஒரு விமான நிலையம். இந்த நிலை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் அலட்சிய மனப்பான்மை என்னை கடுமையாக வெறுப்பேத்தியது.

"பயணக் கட்டுரைகள்"  இனிமையானவை நிழலி. அதிலும்... நம்மவர்கள் எழுதும் போது, 
நாம்.. எதிர் பார்ப்பதை எழுதுவார்கள் என்பதால், வாசிக்கும்.... எமக்கும், சுவராசியமாக  இருக்கும்.  :)

Bildergebnis für drink water fountain  gif

கனடாவில்  உள்ளது போல்.... இங்கு விமான நிலையத்தில் மட்டுமல்ல உள்ளூரில்  கூட,  குடிதண்ணீர்  ஊற்றுக்கள்  இல்லை.  உங்களுக்கு... நயாகரா நீர் வீழ்ச்சி இருக்கு, என்ற படியால்... தண்ணீரை இலவசமாக கொடுக்கின்றார்கள். (இங்கு.... பியரும், தண்ணீரும்  கிட்டத்தட்ட   ஒரே விலை.)  

சிறு பிள்ளைகளுடனான  விமானப்  பயணத்தில், தங்கி நிற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பது முன்பே தெரிந்திருந்தால்...  சிறுவர்களுக்கு, முன்பு பறந்து கொண்டிருந்த விமானத்தில் வைத்தே..... அதனை சொல்லி, அதற்கு ஆயத்தப் படுத்துவது நல்லது.   

ஜேர்மன் நாட்டில், ஃபிராங்போட்  சர்வதேச விமான நிலையம் என்றாலும், முக்கிய வழிகாட்டுதல்கள்... ஜேர்மன்/ ஆங்கில வழிகாட்டுதல்களில் நிச்சயம் இருக்கின்றது. அதனை கவனிக்காதது உங்கள் தவறு..  நீங்கள் கேட்ட  பணியாளர்,  ஜேர்மன்காரன் என்று,  எப்படி.. உறுதியான முடிவுக்கு, வந்தீர்கள்?  விமான நிலையத்தில் உலாவும்,  வெள்ளைக்காரன் எல்லாம்... ஜேர்மன்காரன் அல்ல.  

அகன்ற... ஐரோப்பிய நாட்டில்,   பல ஆங்கிலம் தெரிந்த வெள்ளைகளை, மலிவான சம்பளத்தில் வேலைக்கு எடுக்கும் வசதி இருக்கும் போது,  (குடி வரவு, குடி அகல்வு தவிர)    ஒரிஜினல் ஜேர்மன்  இந்த வேலைக்கு, வர மாட்டான். பாகிஸ்தான் காரனையே.....  வெள்ளைக்காரன் என்று, நம்பிய இனம், எம் இனம்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

------

ஏர்போர்ட் உண்மையான போலீஸ் காரர்களும்  ஓகே (இமிகிரேஷன் + கஸ்டம்)
செகுருட்டி ஒரு பிரைவேட் கொம்பனி என்று எண்ணுகிறேன் ... அவர்கள் கொஞ்சம் 
நெருடலாகத்தான் இருக்கிறார்கள் காரணம் புரியவில்லை. அதில் சிலர் வெளிநாட்டவர் 
துருக்கி போல இருக்கிறது ... அவர்கள் எடுப்பு பேச்சு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. 
ஒருவரின் கேள்விகள் கொஞ்சம் தேவை இல்லாதவையாக இருந்தது .... போடா மூதேவி என்று 
மனத்திட்குள் திட்டி கொண்டு வந்துவிடடேன்.

துருக்கிக்  காரனை கண்டு பிடிப்பது, சுலபம். மருது.
கமக் கட்டுக்குள்.... புதிய  "வில்கின்சன்" பிளேடை வைத்துக் கொண்டு நடப்பது மாதிரி, நடந்து  நாடகம்  போடுவார்கள்.  
நாம்...  சற்று அவதானமாக இருந்து, குரலை உயர்த்தி கதைத்தால்... பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார்கள். (ஆனால்... இதனை, விமான நிலையத்தில், செய்வது சரியாக இருக்காது. ) :)
.......
துருக்கிக்காரனை...  சமாளிப்பது, எப்படி? என்ற தலைப்பில்... ஒரு சொந்த ஆக்கம் போடலாம் என்ற அளவுக்கு, கனக்க விடயங்கள் உள்ளது. நேர காலம் கிடைத்தால்... அதனை பகிர எண்ணியுள்ளேன்.  :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யெர்மனி 'மன்கெய்ம்' வந்தபொழுது தங்கியிருந்த ஓட்டலிலிருந்து குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு செல்ல டாக்ஸியை பிடித்து ஏறி உட்கார்ந்ததும், உரையாடலில் அந்த ஓட்டுனர் தான் துருக்கியை சார்த்தவர் எனக் கூறினார். ஓட்டலிலிருந்து வழக்கமாக அந்த தொழிற்சாலைக்கு செல்லும் வழியில் செல்லாமல் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தார்.. கட்டணமும் வழக்கத்தைவிட அதிகமாக ஏறத் துவங்கியது..

'ஆகா.. சென்னை ஆட்டோக்காரர்களின் வித்தையை இங்கேயும் காட்டத் தொடங்கிவிட்டார்களா..?' என சந்தேகப்பட்டு, "ஏன் மாற்று வழியில் செல்கிறீர்கள்..?" என வினவினேன்..

அதற்கு அவர், "நீங்கள் கூறும் வழியில் போக்குவரத்து நெரிசல் உள்ளதால் இவ்வழியே வந்தேன், பயபடாதீர்கள்..!" எனக் கூறினார்.. கட்டணம் சற்றே அதிகமாகவே இருந்தது.. வேறு வழியின்றி 'அப்பாடா ஒரு வழியாக தொழிற்சாலைக்கு பத்திரமாக வந்து சேர்ந்தோமே!' என நிம்மதியடைந்தேன்..ஏமாற்றப்பட்டோமா என தெரியவில்லை!

ஆனால் மறுநாள் முதற்கொண்டு அங்கே இருந்த நாட்கள் வரை நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில்தான் சென்றேன்..

புது இடத்தில் அவதானமாக இருப்பது நன்றே..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

சென்னை உங்களை மிக அன்புடன் வரவேற்கின்றது

ரொரன்டோவில் இருந்து Frankfurt பின் அங்கு இருந்து சென்னை செல்லும் விதமாக பயண ஏற்பாடுகள்.  ரொரன்டோவின் விமானத்தில் ஏறியாச்சு. மகன் மித்தா (மிதுனன்)  இரண்டு வயதில் தான் இறுதியாக விமானத்தில் பயணம் செய்து இருந்தமையால் கடும் குஷியில் இருந்தான். மூவர் இருக்கும் வரிசையில் நான் நடுவில், மகன் யன்னலோரம், எனக்கருகில் ஒரு சேர்பிய (Serbian) பெண்மணி. அவ் சேர்பிய பெண்ணுக்கு ஒரு 65 வயது இருக்கும். அவருக்கு அருகில் இருக்க வேண்டி வந்ததையிட்டு மனசில் 'பக்கத்து சீட்டில பாட்டி உக்காந்தா ...டேக் இட் ஈசி ஊர்வசி" என்ற பாட்டு ஓடிக் கொண்டு இருந்தது.

பொதுவாக விமானத்தில் ஏறினால் சாப்பாடு வரும் போதே வைன் அல்லது விஸ்கி கேட்டு அடித்து விட்டு 3 மணி நேரமாவது தூங்கி எழுந்து பின் சினிமா படம் பார்க்கும் பழக்கம் எனக்கு. ஆனால் மகனுடன் போவதால் ஒன்றும் குடிக்க விரும்பவில்லை. பக்கத்தில் இருக்கும் பெண்மணி இரண்டு தரம் ரெட் வைன் அடிக்கும் போது என் வயிற்றில் புகை எழுந்ததை மகன் காணவில்லை. சரி நித்திரை வரவில்லை என்று ஒரு ஆங்கிலப் படத்தை போட்டால் 20 நிமிடங்களில் அதில் வந்த பெண்மணி ஆடை களைய தொடங்க, இதை எப்படி மகனை பக்கத்தில் வைச்சுக் கொண்டு பார்ப்பது என்று channel மாற்றி laugh for gags பார்த்தேன்.

போனது Air Canada.. ஓரளவுக்கு வசதி எனிலும் கிட்டத்தட்ட பென்சன் வயது உள்ள பணியாளர்களும் அவர்களின் சலிப்பான சேவையும் பழைய விமானமும் என்று சலிப்பை கொடுத்தன

Frankfurt விமான நிலையம் வந்து இறங்கியாச்சு. 5 மணித்தியாலம் காத்திருக்க வேண்டும். மகனுக்கு தாகம் என்றான். மருந்துக்கும் தண்ணீர் குடிக்கும் fountain கள் இல்லை.  அங்கு இருக்கும் automated beverage system முழுதும் ஜேர்மன் மொழியில், சரி என்று credit card போட்டாலும் கோதாரி என்ன பதில் சொல்கின்றது என்றே தெரியவில்லை...ஆனால் தர மறுத்து விட்டது. அங்கு வந்த ஒரு பணியாளரிடம் தண்ணீர் எங்கு குடிக்கலாம் எனக் கேட்க அவர் ஆங்கிலத்தில் அடுத்த terminal இற்கு train இல் போக வேண்டும் என்றார். சரி duty free shop எங்கு என்று கேட்க, 3 ஆம் மாடி என்றார்

மூன்றாம் மாடிக்கு அலைந்து திரிந்து போய் தண்ணீர் வாங்கி கொடுத்து விட்டு கொஞ்சம் காத்திருந்து அடுத்த விமானம் பிடிக்க சென்றால், அவ் விமான நிலைய ஜேர்மன் அதிகாரிகளின் திமிரான நடவடிக்கை வெறுப்பை கொடுத்தது.

Frankfurt விமான நிலையம் சர்வதேச விமான போக்குவரத்தின் முக்கிய நிலையம் என்பதால் போட்டி போட வேண்டி இல்லை, நாம் வெறுத்தாலும் விரும்பினாலும் தவிர்க்க முடியாத ஒரு விமான நிலையம். இந்த நிலை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் அலட்சிய மனப்பான்மை என்னை கடுமையாக வெறுப்பேத்தியது.

ஒரு வழியாக எல்லாம் முடிந்து விமானம் ஏறி, சென்னை விமான நிலையத்தினை வந்தடைகின்றோம்.

சென்னை விமான நிலையம், அதன் கூரை விழும் விபத்துகள், அதிகாரிகளின் அலட்சியம் என பல நூறு செய்திகளை அடிக்கடி கேட்டு இருப்பதால் மிக மோசமான ஒரு அனுபவத்தினை எதிர்பார்த்து விமானத்தில் இருந்து இறங்குகின்றேன். மகனுக்கும் இது பற்றி சொல்லி அவனை தயார் படுத்தி இருந்தேன்

ஆனால் என் அவ்வளவு எதிர்மறையான எதிர்பார்ப்பும் பொய்த்து போகும் வண்ணம் சென்னை விமான நிலையமும் அதன் அதிகாரிகளும் இருந்தனர்

சென்னை எம்மை அன்புடன் வரவேற்கின்றது

 

இவர் ஒரு புகைச்சல்/ எரிச்சல்காரன் எண்டு நான் முதலே மட்டுப்புடிச்சிட்டன்.:grin:
முதலாவது எல்லா விசயத்துக்கும் இவர் சின்ன பாலகனோடை வெளிக்கிட்டது  பெரிய இடைஞ்சலாய் போச்சுது.:(
வைன் விஸ்கி அடிக்கேலாமல் போச்சுது.:(
ரிவியிலை வெள்ளைக்காரி சட்டை களட்டினதை ஒழுங்காய் கண்குளிர காணேலாமல் போச்சுது.:(
அந்த ரென்சனிலை ஒட்டுமொத்த பிராங்பெட் எயாப்போர்ட்/ஜேர்மன் சனம் எல்லாம் தலைகீழாய் தெரியுதாக்கும்.tw_blush:
மூலைக்கு மூலை சின்னச்சின்ன கடையள் எல்லாம் இருக்கே! ஏதோ பாலைவனத்திலை நிண்ட மாதிரியெல்லே கதை போகுது...
அதோடை automated beverage system   எல்லாத்திலையும் பாசை மாத்தி வாசிக்கக்கூடிய வசதியெல்லாம் இருக்கே ராசா...

தண்ணீர் வசதியும் மொழிவசதியும் புன்னைகையும்   இல்லாத ஒரு விமானநிலையம் எப்படி சர்வதேச விமானநிலைய தரத்திற்கு உயரும்/உயர்ந்தது.?:cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இவர் ஒரு புகைச்சல்/ எரிச்சல்காரன் எண்டு நான் முதலே மட்டுப்புடிச்சிட்டன்.:grin:
முதலாவது எல்லா விசயத்துக்கும் இவர் சின்ன பாலகனோடை வெளிக்கிட்டது  பெரிய இடைஞ்சலாய் போச்சுது.:(
வைன் விஸ்கி அடிக்கேலாமல் போச்சுது.:(
ரிவியிலை வெள்ளைக்காரி சட்டை களட்டினதை ஒழுங்காய் கண்குளிர காணேலாமல் போச்சுது.:(
அந்த ரென்சனிலை ஒட்டுமொத்த பிராங்பெட் எயாப்போர்ட்/ஜேர்மன் சனம் எல்லாம் தலைகீழாய் தெரியுதாக்கும்.tw_blush:
மூலைக்கு மூலை சின்னச்சின்ன கடையள் எல்லாம் இருக்கே! ஏதோ பாலைவனத்திலை நிண்ட மாதிரியெல்லே கதை போகுது...
அதோடை automated beverage system   எல்லாத்திலையும் பாசை மாத்தி வாசிக்கக்கூடிய வசதியெல்லாம் இருக்கே ராசா...

தண்ணீர் வசதியும் மொழிவசதியும் புன்னைகையும்   இல்லாத ஒரு விமானநிலையம் எப்படி சர்வதேச விமானநிலைய தரத்திற்கு உயரும்/உயர்ந்தது.?:cool:

 

நிழலி மட்டும் இல்லை பலரும் குறை சொல்கிறார்கள் 
நான் மூன்று ரெவியூ இணைத்திருக்கிறேன் வாசியுங்கள் 

டெர்மினல் .... கேட் இலக்கம் போன்றவை கொஞ்சம் குழப்பமாகத்தான் 
எனக்கும் முதலில் இருந்தது .... பின்பு ஒரு ரவுண்ட் அடித்தவுடன் விளங்கி விட்டது.
நடக்கும் தூரம் ரொம்ப பெரிது ..... கார் வாடகைக்கு எடுத்தால் 1 கி மீ நடக்கவேண்டும் 
காரை சென்று அடைய..... எனக்கு ஓகே இதுவே இரண்டு மூன்று பொதிகளுடன் 
பெண்கள் வந்தால் ? எப்படி இருக்கும். 

பாரிஸ் ஏர்போர்ட்டும் கேட் முறைமைமை எனக்கு முதலில் விளங்கவில்லை 
இப்போ பார்த்தால் ..... அதுதான் மிகவும் எளிதான வழிமுறை. 

லூவ்தான்சா சேவை ரொம்ப அருமை ...
பிள்ளைகள் எல்லாம் அழகான புன்னகையுடன் 
கேட்க்கும் உதவிகளை செய்து தருவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக யேர்மன் ஊடாக பயணிப்பவர்கள் வெயிற்றிங் ரைம் குறைவு என்று சொல்வார்கள்..எதனால் 5 மணி நேர தாமதம்..? 
ஏன் எனில் சிறுவர்களோடு பயணிக்கும் போது நீண்ட நேர காத்திருப்புக்கள் வேணுமா....

Link to comment
Share on other sites

On 2017-03-03 at 2:30 PM, தமிழ் சிறி said:

 

கனடாவில்  உள்ளது போல்.... இங்கு விமான நிலையத்தில் மட்டுமல்ல உள்ளூரில்  கூட,  குடிதண்ணீர்  ஊற்றுக்கள்  இல்லை.  உங்களுக்கு... நயாகரா நீர் வீழ்ச்சி இருக்கு, என்ற படியால்... தண்ணீரை இலவசமாக கொடுக்கின்றார்கள். (இங்கு.... பியரும், தண்ணீரும்  கிட்டத்தட்ட   ஒரே விலை.)  

சிறு பிள்ளைகளுடனான  விமானப்  பயணத்தில், தங்கி நிற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பது முன்பே தெரிந்திருந்தால்...  சிறுவர்களுக்கு, முன்பு பறந்து கொண்டிருந்த விமானத்தில் வைத்தே..... அதனை சொல்லி, அதற்கு ஆயத்தப் படுத்துவது நல்லது.   

ஜேர்மன் நாட்டில், ஃபிராங்போட்  சர்வதேச விமான நிலையம் என்றாலும், முக்கிய வழிகாட்டுதல்கள்... ஜேர்மன்/ ஆங்கில வழிகாட்டுதல்களில் நிச்சயம் இருக்கின்றது. அதனை கவனிக்காதது உங்கள் தவறு..  நீங்கள் கேட்ட  பணியாளர்,  ஜேர்மன்காரன் என்று,  எப்படி.. உறுதியான முடிவுக்கு, வந்தீர்கள்?  விமான நிலையத்தில் உலாவும்,  வெள்ளைக்காரன் எல்லாம்... ஜேர்மன்காரன் அல்ல.  

அகன்ற... ஐரோப்பிய நாட்டில்,   பல ஆங்கிலம் தெரிந்த வெள்ளைகளை, மலிவான சம்பளத்தில் வேலைக்கு எடுக்கும் வசதி இருக்கும் போது,  (குடி வரவு, குடி அகல்வு தவிர)    ஒரிஜினல் ஜேர்மன்  இந்த வேலைக்கு, வர மாட்டான். பாகிஸ்தான் காரனையே.....  வெள்ளைக்காரன் என்று, நம்பிய இனம், எம் இனம்.  :)

Frankfurt இல் நான் விசாரித்த பணியாளர் தென்னாசியாவை சேர்ந்தவர்; அநேகமாக பாகிஸ்தானியராக இருக்க வேண்டும். நான் காத்திருந்தது எந்த terminal என்பது மறந்து போயிட்டுது. ஆனால் அது புது டெர்மினல் என்றும் இன்னும் கடைகள் அதிகமாக வரவில்லை என்றும் அந்த பணியாளர் சொன்னார். McDonalds இற்கு போவது என்றால் அங்குள்ள train எடுத்து அடுத்த Terminal செல்ல வேண்டும் என்றார். இடையில் Boarding gate அருகில் ஒரு சில duty free shops சும் ஒரு Coffee shop பும் இருந்தது. Boarding gate இற்கும் நான் வந்து இறங்கிய gate இற்கும் இடையில் கிட்டத்தட்ட இருபது நிமிட நேர நடை. இடையில் தான் தண்ணீர் குடிக்க முயன்றது. பின் Duty Free போய் வாங்கி குடிச்சம்.

விமான நிலைய அறிவித்தல்களில் இருந்து வழிமுறைகள் அனைத்தும் ஆங்கிலத்திலும் இருந்தன. ஆனால் Vending machine முற்று முழுதும் ஜேர்மன் மொழியில் தான்.

எனக்கு தண்ணீர் கிடைக்காத விடயத்தினை விட அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் அலட்சியமும் கெடுபிடிகளும் மற்றும் விமான நிலைய பணியாளர்களின் திமிர்தனமும் தான் வெறுப்பை கொடுத்தன. அதிக பயணிகளை ஒவ்வொரு வினாடியும் சமாளிக்கும் பணியில் கிடைத்த சலிப்பாகவும் அது இருக்கலாம். அல்லது இயலபாக இருக்கும் நிறவெறியாகவும் இருக்கலாம். அல்லது German என்பதால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற எனது எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி இனி எந்த விமானநிலையம் போனாலும் நான்தான் யாழ் கள பொறுப்பாளர் என்று சொல்லுங்கள்.விஐபி மரியாதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Maruthankerny said:

நிழலி மட்டும் இல்லை பலரும் குறை சொல்கிறார்கள் 
நான் மூன்று ரெவியூ இணைத்திருக்கிறேன் வாசியுங்கள் 

டெர்மினல் .... கேட் இலக்கம் போன்றவை கொஞ்சம் குழப்பமாகத்தான் 
எனக்கும் முதலில் இருந்தது .... பின்பு ஒரு ரவுண்ட் அடித்தவுடன் விளங்கி விட்டது.
நடக்கும் தூரம் ரொம்ப பெரிது ..... கார் வாடகைக்கு எடுத்தால் 1 கி மீ நடக்கவேண்டும் 
காரை சென்று அடைய..... எனக்கு ஓகே இதுவே இரண்டு மூன்று பொதிகளுடன் 
பெண்கள் வந்தால் ? எப்படி இருக்கும். 

பாரிஸ் ஏர்போர்ட்டும் கேட் முறைமைமை எனக்கு முதலில் விளங்கவில்லை 
இப்போ பார்த்தால் ..... அதுதான் மிகவும் எளிதான வழிமுறை. 

லூவ்தான்சா சேவை ரொம்ப அருமை ...
பிள்ளைகள் எல்லாம் அழகான புன்னகையுடன் 
கேட்க்கும் உதவிகளை செய்து தருவார்கள் 

இப்பவும் றாத்தல் அவுன்சு எண்டு மினைக்கெடுற அமெரிக்க கண்டத்துக்கு டிக்கி...டிக்கிற்ரால் வலு கஸ்டம்தான்...... 


அது சரி ஏன் நீங்கள் எல்லாரும் றோயல் ஹீத்திரோ எயாப்போட்டிலை டச் பண்ணி அங்காலை ஏசியன் கன்றிக்கு ஃபிளை பண்ணக்கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இப்பவும் றாத்தல் அவுன்சு எண்டு மினைக்கெடுற அமெரிக்க கண்டத்துக்கு டிக்கி...டிக்கிற்ரால் வலு கஸ்டம்தான்...... 


அது சரி ஏன் நீங்கள் எல்லாரும் றோயல் ஹீத்திரோ எயாப்போட்டிலை டச் பண்ணி அங்காலை ஏசியன் கன்றிக்கு ஃபிளை பண்ணக்கூடாது?

எனக்கு எல்லாம் ஓகே ஆகத்தான் போனது 
நடை தூரம் கொஞ்சம் அதிகம் அதோடு அந்த முன் 
கேட் (வாசல்) செக்கிங்கில் நிற்கும் ஆட்களின் முகம் சுளிப்புகளும் 
எடுப்புகளும்தான் பிடிக்காதது.

என்னை போன்ற ஏர் லைன்ஸ் பயணிகளுக்கு தூரம் கூடினால் 
சிரமம் ..... நாம் டிக்கெட் வாங்கி வருவதில்லை 
எதில்  சீட் இருக்கிறதோ அதில் புக் பண்ணி சென்றுவிடுவோம்.
ஒரே ஏர்லைன்ஸ் என்றால் பரவாயில்லை ....
ஏர்லைன்ஸ் மாறினால் .... வெளியில் வந்து டிக்கெட் கவுண்டரில்தான் 
எம்மை கொன்பெர்ம் பண்ண வேண்டும் 
அப்போ ஒன்று இரண்டு தடவை வெளியில் வந்து போக நேரும் 
அதோடு ஏர்லைன்ஸ் மாறும்போது டெர்மினலும் மாறும் 
கொஞ்சம் கிட்ட கிட்ட இருந்தால் நல்லம்.

கீத்திரோ அது இதை விட கொடுமை .....
ரெயின் சுத்தி சுத்தி ஓடும் ..... ரயிலில் ஏறி இறங்கி 
கேட்டுக்கு போக ஒரு மணித்தியாலம் வேண்டும். 

அதைவிட ஏர்போர்ட் டாக்ஸ் (வரி) அதிகம் $180. 

(Frankfurt $49)  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.