Jump to content

என் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நகரட்டும் உங்கள் நாட்டுக்கான பயணங்கள் 

அது சரி இந்த  ஜேர்மன் காரர்கள் கொஞ்சம் அப்படித்தான் போல கேட்டிக்கம்பால முதுகில ரெண்டு போடவேணும் நிழலி ( கு.சா, தமிழ் சிறி ) நான் உங்களை சொல்ல வில்லையப்பாtw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 139
  • Created
  • Last Reply

ஒன்பது வருடங்களின் பின்னான சந்திப்பு

சென்னையில் விமானம் தரையிறங்கிய உடனே விமானத்தில் இருந்த பயணிகள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு இறங்க அவசரப்படத் தொடங்கினர். எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாகவும் அமைதியாகவும் பயணித்த அதே பயணிகள் தான் சென்னையை அடைந்தவுடம் முற்று முழுதாக மாறி ஒருவரையொருவர் தள்ளி முண்டியடித்துக் கொண்டு இறங்கத் தொடங்குகின்றனர். இந்தவகையான முரண்பாடுகளை அடிக்கடி கவனித்துள்ளேன். ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்களை தென்னிந்தியவர்கள் மேற்கொள்கின்றனர்.

நானும் மகனும் நிதானமாக இறங்கி விமான நிலைய குடிவரவு பகுதிக்கு செல்லும் போது மிக நீண்ட வரிசை உருவாகியிருந்தது. நேரம் அதிகாலை 1 மணி இருக்கும். வேறு இரு  விமானங்கள் தாமதமாக வந்தமையால் ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் தரையிறங்கியதாகவும் அதனால் தான் பெரிய வரிசை என்றும் ஒரு சில பணியாளர்கள் தமக்குள் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது. சென்னை விமான நிலையம் பற்றிய செய்திகள் கேள்விப்பட்டு இருந்தமையாலும் அதிகாரிகள் மிகவும் அசமந்தமாக நடப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருந்தமையாலும் வரிசை மிக மெதுவாக நகரும் என நினைத்து சலிப்படைய ஆரம்பித்தேன். ஆனால் என் எதிர்பார்ப்பிற்கு மாறாக வரிசை வேகமாக நகரத் தொடங்கி என் முறை வந்தது.

நான் மகனையும் அழைத்துக் கொண்டு இமிகிரேசன் அதிகாரிக்கு என் கனடிய பாஸ்போர்ட்டினை கொடுக்கும் போது அந்த சாமத்திலும் புன்னகையுடன் வாங்கி வீசா பக்கத்தினை காட்டச் சொன்னார். நான் காட்டியவுடன் அதை சரிபார்த்த பின் நான் multiple entries எடுத்து இருந்தமையால் இங்கிருந்து வேறு எங்கு செல்லப் போகின்றீர்கள் எனக் கேட்க நான் இலங்கைக்கு சென்று விட்டு மீண்டும் வருவேன் என்று கூறினதை ஏற்றுக் கொண்டு கமராவுக்கு முன் என்னை நிற்கச் சொல்லி ஒரு படமும் எடுத்து விட்டு மகனது பாஸ்போர்ட்டினை சரி பார்த்து அவனையும் ஒரு படம் எடுத்து விட்டு புன்னகையுடன் அனுப்பி வைத்தார்.

சென்னை விமான நிலையம் புதிய கட்டிடம் என்று செய்திகளில் சொன்னாலும் அதை ஒரு தரமான விமான நிலையமாக பார்க்க முடியவில்லை. ஒரு சில இடங்களில் அழகான பிள்ளையார் சிலைகளும் வேறு சிலைகளும் வைத்து இருந்தனர். சென்னையின் / தமிழ்நாட்டின் தொன்மையை அதன் கலாச்சாரத்தினை பறைசாட்டும் அடையாளங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. குப்பையாக இல்லாவிடினும் சுத்தமாகவும் இல்லை. நிறைய இடங்கள் வெறுமையாக இருக்கின்றன.

ஆனால் என்ன.................. திரும்பும் இடமெல்லாம் தமிழ் தமிழ் தமிழ். கருப்பு நிற தமிழர்கள், தமிழச்சிகள் (அதிலும் சிலர் சூப்பர் பிகருகள்), தமிழ் பெயர் பலகைகள், தமிழ் உரையாடல்கள், தமிழ் அறிவிப்புகள்...என எல்லாமே தமிழாக இருந்தது மனசுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தந்தது. நீண்ட காலத்தின் பின் தமிழ் மண் ஒன்றில் காலை வைக்கின்றேன் என்ற உணர்வே ஒரு வகையான உற்சாகத்தினை தந்தது. அந்த உற்சாகத்தில் duty free shop இற்கு சென்று இரண்டு Glenfiddich Whisky வாங்கிக் கொண்டு (அதற்கு மேல் வாங்க முடியாதாம்) பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு (அவையும் விரைவாக வந்து விட்டன) வெளியே வர என் அக்காவின் குடும்பம் எமக்காக காத்திருந்தனர்.

அக்கா விமானம் தரையிறங்க முதல் ஒரு மணி நேத்துக்கு முன்பாகவே அத்தானுடனும் மகனுடனும் வந்து காத்திருந்தார். ஒன்பது வருடங்களின் பின் முதல் முறையாக அக்காவை சந்திக்கின்றேன். அம்மாவின் இடத்தை சமப்படுத்த மனைவியும் மகளும் எனக்கு வாய்த்திருந்தாலும் அக்காவின் இடம் இன்னும் அக்காவால் மட்டுமே நிரப்பட்டுக் கொண்டு இருந்தது. ஒரே ஒரு சகோதரம், அதுவும் ஒன்பது வருட பிரிவுக்கு பின் சந்திக்கின்றேன். 7 வயதில் பார்த்த அக்காவின குட்டி மகன்16 வயது நெடு நெடுவென 6 அடிக்கு வளர்ந்து இருக்கும் பெரிய பெடியனாக காணுகின்றேன். அத்தான் இந்த 9 வருடத்தில் இலங்கையை சேர்ந்த கப்பல் போக்குவரத்து கம்பெனியில் regional manager ஆக தன் தொழில் துறையில் வளர்ர்சி அடைந்து நிற்கின்றார் (சென்னையில் தான் அதன் அலுவலகம்).

ஒன்றரை வயதுக்கு பின Skype இன் மூலமாக மட்டுமே பரிச்சயமாக இருந்த அக்காவின் குடும்பத்தினை என் மகன் காணுகின்றான். எப்படியான உணர்ச்சியை வெளிக்காட்டுவது என்று தெரியாமல் என் கைகளை இறுக்கிப் பிடிச்சு கொண்டு ஆள் நிற்கின்றான். முற்றிலும் மாறான ஒரு தேசத்தில் தனக்கு பழக்கமில்லாத ஒரு குடும்பத்துடன் எந்தளவுக்கு ஒன்றிப் போவான் என்பது எனக்குள் ஒரு கேள்வியாக எழுந்தது. என் பயணத்திட்டத்தின் படி மூன்றாம் நாள் நான் அவனை சென்னையில் விட்டுவிட்டு இலங்கைக்கு செல்ல வேண்டும். இலங்கையில் எனக்கு எப்படியான வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இருந்தமையால் அவனை கூட்டிக் கொண்டு செல்வது பாதுகாப்பாக இருக்காது என்பதால் இலங்கைக்கு கூட்டிச் செல்ல நினைக்கவில்லை.

சாமம் மூன்று மணிக்கு அக்காவின் apartment வந்த பின் 4 மணிக்கு படுக்க போய் நல்லா அயர்ந்து நித்திரை கொள்ளும் போது சரியாக 6: 30 இற்கு பெரும் சத்தத்துடன் ஏதோ தொம் என்று விழுகின்றது. என்னவென பார்த்தால் அந்த கட்டிடத்தின் தண்ணீர் தாங்கியில் இருந்து தண்ணீரை கொண்டு வரும் குழாய் உடைந்து தண்ணீர் கொட்டத் தொடங்கியிருந்தது.....அதாவது அபார்ட்மென்டுக்கான தண்ணீர் அதை திருத்தும் வரை கிடைக்காது.

நான் வந்த அதிஷ்டத்தினை தண்ணீரை நிறுத்தி அபார்ட்மென் கொண்டாடத் தொடங்கியது

(சென்னையை பற்றி அடுத்து எழுதுகின்றேன்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

ஒன்பது வருடங்களின் பின்னான சந்திப்பு

சென்னையில் விமானம் தரையிறங்கிய உடனே விமானத்தில் இருந்த பயணிகள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு இறங்க அவசரப்படத் தொடங்கினர். எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாகவும் அமைதியாகவும் பயணித்த அதே பயணிகள் தான் சென்னையை அடைந்தவுடம் முற்று முழுதாக மாறி ஒருவரையொருவர் தள்ளி முண்டியடித்துக் கொண்டு இறங்கத் தொடங்குகின்றனர். இந்தவகையான முரண்பாடுகளை அடிக்கடி கவனித்துள்ளேன். ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்களை தென்னிந்தியவர்கள் மேற்கொள்கின்றனர்.

...

 

சென்னை அனுபவ குறிப்புகளுக்கு நன்றி நிழலி..!

  • மத்தியக் கிழக்கு நாடுகளின் விமான நிலையத்தில் ஆசிய நாட்டவர் யாராயினும், வாயையும், வாலையும் சுருட்டிக்கொண்டு ஐம்புலன்களையும் அடக்கிகொண்டு விமானமேறும் இவர்கள், தங்கள் நாட்டின் தரையை தொட்டதும் தங்கள் புத்தியை காட்டத்தொடங்கிவிடுவர்..
  • தரையிறங்கும்போது விமான பணிப்பெண் வந்து சொல்லும்போதுதான் இருக்கையின் சாய்வை சரிசெய்வார்கள், விமானத்தின் அறிவிப்புகளை துளியும் சட்டை செய்வதில்லை..
  • ஓடுதளத்தில் தரையிறங்கியதுமே கைப்பேசியை இயக்கத் தொடங்கிவிடுவர்..
  • விமானம் தரிப்பிடத்திற்கு வந்து சேர்ந்த அடுத்த நொடியே முண்டியடித்து அனைவரும் எழுந்து தலைக்குமேல் இருக்கும் பொதிகளை அடுத்தவர்களின் தலையை பதம் பார்க்கும்வண்ணம் இறக்கி பொதிகளோடு வெளியேறும் கதவுகள் திறக்கும்வரை  கால்கடுக்க நிற்பார்கள்..
  • அதுமட்டுமா, வெளியேறும் வரிசை நகருகையில் ஓரமாக நின்று பேசி முடிக்காமல் உப்புச்சப்பற்ற விசயத்தை கைத்தொலைப்பேசியில் சத்தம்போட்டு பேசிகொண்டே வழியடைத்துக்கொண்டு செல்வதை பார்க்கலாம்..
  • குடியகல்வு சோதனைக்கு முண்டியடித்து நிற்பதும், குடும்பம், பெண்கள் செல்லும் வரிசையில் ஆண்கள் மட்டும் போய் நிற்பதும் இங்கே வழக்கம்..
  • எங்கும் வரிசையை மதிப்பதில்லை..

இன்னும் சின்னச் சின்ன எரிச்சல்கள் இருக்கின்றன.. ஆனால் இவைகளெல்லாம் வெளியே நமக்காக ஆவலோடு காத்திருக்கும் சொந்தங்களை கண்டவுடன் நொடியில் கரைந்துவிடும்..!

 

4 hours ago, நிழலி said:

.. நான் மகனையும் அழைத்துக் கொண்டு இமிகிரேசன் அதிகாரிக்கு என் கனடிய பாஸ்போர்ட்டினை கொடுக்கும் போது அந்த சாமத்திலும் புன்னகையுடன் வாங்கி வீசா பக்கத்தினை காட்டச் சொன்னார்..

மெய்யாலுமா? நம்ப முடியவில்லை..! ஒருவேளை நீங்கள் யாழ்களத்தின் 'மட்டு' என அவருக்கும் தெரிந்துவிட்டதோ..? :grin:

நான் சென்று பார்த்த சில நாடுகளில் சிங்கப்பூரைத் தவிர வேறு எங்குமே குடியகல்வு சோதனை அதிகாரிகள், சிரித்த முகத்தோடு பயணிகளை வரவேற்பதை பார்த்ததே இல்லை! :unsure:

துபாய், தோகா, பஹ்ரெய்ன் போன்ற இடங்களில் சுத்தம், உள்ளூர்(Local Arabs) அதிகாரிகள் பேசுவதற்கே நாம் காசு கொடுக்க வேணும்.. அவ்வளவு முக இறுக்கம்..! (பகட்டாய் இருந்தால் போதாது, கனிவும், பணிவும் வேண்டுமென யாரும் இவர்களுக்கு சொல்லவில்லையோ..?)

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடையில் கேள்வி கேட்பது பிடிக்கிறதோ இல்லயோ தெரியல்லை..தொடர் இனிதே முடியட்டும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை தண்ணீர் தெளித்து வரவேற்று விட்டது....!

இன்றைய நாளில் பிள்ளைகள் எமது உறவுகள் தெரியாமல் இருந்தாலும் இலகுவாக சேர்ந்து கொள்கின்றார்கள் . அதுக்கு இந்த நவீன தொழில் நுட்பங்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்......! 

நல்லகாலம் மனைவியுடன் வந்திருந்தால் அவளது புன்னகையை கவனிக்க உங்களுக்கு வாய்ப்பு இருந்திருக்காது. காட் இஸ் கிரேட்...!

தொடருங்கள் நிழலி ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் .புங்கை பாவம் பிள்ளை குட்டிக்காறர்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5.3.2017 at 5:01 AM, Maruthankerny said:

எனக்கு எல்லாம் ஓகே ஆகத்தான் போனது 
நடை தூரம் கொஞ்சம் அதிகம் அதோடு அந்த முன் 
கேட் (வாசல்) செக்கிங்கில் நிற்கும் ஆட்களின் முகம் சுளிப்புகளும் 
எடுப்புகளும்தான் பிடிக்காதது.

என்னை போன்ற ஏர் லைன்ஸ் பயணிகளுக்கு தூரம் கூடினால் 
சிரமம் ..... நாம் டிக்கெட் வாங்கி வருவதில்லை 
எதில்  சீட் இருக்கிறதோ அதில் புக் பண்ணி சென்றுவிடுவோம்.
ஒரே ஏர்லைன்ஸ் என்றால் பரவாயில்லை ....
ஏர்லைன்ஸ் மாறினால் .... வெளியில் வந்து டிக்கெட் கவுண்டரில்தான் 
எம்மை கொன்பெர்ம் பண்ண வேண்டும் 
அப்போ ஒன்று இரண்டு தடவை வெளியில் வந்து போக நேரும் 
அதோடு ஏர்லைன்ஸ் மாறும்போது டெர்மினலும் மாறும் 
கொஞ்சம் கிட்ட கிட்ட இருந்தால் நல்லம்.

கீத்திரோ அது இதை விட கொடுமை .....
ரெயின் சுத்தி சுத்தி ஓடும் ..... ரயிலில் ஏறி இறங்கி 
கேட்டுக்கு போக ஒரு மணித்தியாலம் வேண்டும். 

அதைவிட ஏர்போர்ட் டாக்ஸ் (வரி) அதிகம் $180. 

(Frankfurt $49)  

மலிஞ்ச விலையிலை எல்லாம் வேணும்....அதுக்குள்ளை எல்லா வசதியும் இருக்கோணுமெண்டால்.......:grin:

Link to comment
Share on other sites

On 2017-03-03 at 1:31 AM, Maruthankerny said:

மிக கேவலமான ஏர்போர்ட் என்றால் எனக்கு துபாய்தான் (கஸ்ட்மர் சர்விஸ் ஸிரோ) 

 

அப்படித்தான் பல தென்னாசியர்கள் சொல்கின்றனர், ஆனால் என்னால் அப்படிச் சொல்ல மனம் இடம்கொடுக்குது இல்லை. எனக்கு 5 வருடங்கள் சோறும் வாழ்வும் வளமும் தந்த விமான சேவையை தன்னகத்தே கொண்ட விமான சேவை என்பதால் ஒரு நன்றிக் கடன்.

On 2017-03-03 at 2:38 AM, சுவைப்பிரியன் said:

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

கண்டிப்பாக தொடருவேன்

On 2017-03-04 at 6:27 AM, யாயினி said:

அனேகமாக யேர்மன் ஊடாக பயணிப்பவர்கள் வெயிற்றிங் ரைம் குறைவு என்று சொல்வார்கள்..எதனால் 5 மணி நேர தாமதம்..? 
ஏன் எனில் சிறுவர்களோடு பயணிக்கும் போது நீண்ட நேர காத்திருப்புக்கள் வேணுமா....

நான் பயண திட்டம் போடும் போது ஆகக் குறைந்தது 3 மணி நேர காத்திருப்புமிக்க transit இனைத்தான் நாடுவது அதிகம். காரணம், விமானம்  ஒரு சில மணித்தியாலம் தாமதித்தாலும் transit இல் விமானத்தினை தவற விட சந்தர்ப்பம் குறைவு. அவசர அவசரமாக இறங்கி விழுந்தடித்துக் கொண்டு பரபரக்கத் தேவை இல்லை. அப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்பதை என் இரண்டாம் பயணமே சான்று

 

On 2017-03-04 at 4:28 PM, ஈழப்பிரியன் said:

நிழலி இனி எந்த விமானநிலையம் போனாலும் நான்தான் யாழ் கள பொறுப்பாளர் என்று சொல்லுங்கள்.விஐபி மரியாதை.

பின்னூட்டத்துக்கும் நக்கலுக்கும் நன்றி

On 2017-03-05 at 0:44 AM, முனிவர் ஜீ said:

நகரட்டும் உங்கள் நாட்டுக்கான பயணங்கள் 

அது சரி இந்த  ஜேர்மன் காரர்கள் கொஞ்சம் அப்படித்தான் போல கேட்டிக்கம்பால முதுகில ரெண்டு போடவேணும் நிழலி ( கு.சா, தமிழ் சிறி ) நான் உங்களை சொல்ல வில்லையப்பாtw_blush:tw_blush:

பின்னூட்டத்துக்கு நன்றி

 

On 2017-03-05 at 11:02 PM, ராசவன்னியன் said:

 

மெய்யாலுமா? நம்ப முடியவில்லை..! ஒருவேளை நீங்கள் யாழ்களத்தின் 'மட்டு' என அவருக்கும் தெரிந்துவிட்டதோ..? :grin:

நான் சென்று பார்த்த சில நாடுகளில் சிங்கப்பூரைத் தவிர வேறு எங்குமே குடியகல்வு சோதனை அதிகாரிகள், சிரித்த முகத்தோடு பயணிகளை வரவேற்பதை பார்த்ததே இல்லை! :unsure:

துபாய், தோகா, பஹ்ரெய்ன் போன்ற இடங்களில் சுத்தம், உள்ளூர்(Local Arabs) அதிகாரிகள் பேசுவதற்கே நாம் காசு கொடுக்க வேணும்.. அவ்வளவு முக இறுக்கம்..! (பகட்டாய் இருந்தால் போதாது, கனிவும், பணிவும் வேண்டுமென யாரும் இவர்களுக்கு சொல்லவில்லையோ..?)

.

ஆச்சரியமும் அங்கலாய்ப்பும் எதிர்பார்ப்பின் அடிப்படையில் தான் அமைகின்றன. Frankfurt வளர்ந்த நாட்டு விமான நிலையம் என்பதால் எல்லாம் நல்லா இருக்கும் என்று நினைக்க, நிகழ்ந்த அனைத்து சிரமங்களும் கடும் சலிப்பையும் கோபத்தினையும் தந்தன; சென்னை விமான நிலையம் மோசம் என்ற எதிர்பார்ப்பில் இருக்க நிகழ்ந்த சின்ன சின்ன சந்தோசங்களும் பல மடங்கு மகிழ்வை தந்தன.

மகனுடன் தனியாக பயணித்தமையால் அந்த குடிவரவு அதிகாரிக்கு ஒரு வித ஒட்டுதல் ஏற்பட்டு இருக்கும் என நினைத்து இருந்தேன். ஆனால் சென்னையை விட்டு கனடாவுக்கு பயணித்த போது இருந்த குடிவரவு அதிகாரி காட்டிய அக்கறையும் உரையாடலும் மனசை மகிழ்விக்க செய்தன. அதை பற்றி பின்னர் எழுதுகின்றேன்

Link to comment
Share on other sites

On 2017-03-06 at 3:14 PM, ரதி said:

தொடருங்கள்...

நன்றி ரதி. ஒரு பதிவை பதிந்தபின் ஒரு சிலரது பின்னூட்டங்களையும் விமர்சனத்தினையும் எதிர்பார்ப்பேன். அதில் உங்களது பின்னூட்டமும் ஒன்று

On 2017-03-07 at 0:25 AM, யாயினி said:

இடையில் கேள்வி கேட்பது பிடிக்கிறதோ இல்லயோ தெரியல்லை..தொடர் இனிதே முடியட்டும்..

 

கடந்த பதிவை போடும் போது பின்னூட்டங்களுக்கு பதில் எழுத நேரம் கிடைக்கவில்லை. முன்னர் அலுவலகத்தில் இருந்து எழுத முடிந்தது; ஆனால் இப்ப முடியாது என்பதால் எழுதக் கிடைக்கும் நேரம் மிகவும் குறைவு. அதனால் தான் கேள்விகளுக்கு பதில் எழுத தாமதம் ஆனது

On 2017-03-07 at 1:57 AM, suvy said:
On 2017-03-07 at 2:09 PM, சுவைப்பிரியன் said:

தொடருங்கள் .புங்கை பாவம் பிள்ளை குட்டிக்காறர்tw_blush:

 

தொடருங்கள் நிழலி ....!  tw_blush:

கண்டிப்பாக தொடருவேன். வெள்ளி அல்லது வார இறுதியில் அதிகமாக படங்களுடன் எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

சென்னை மாநகரில் எம் முதல் 'உலா'

சினிமா படங்களினூடாகவும் தமிழக எழுத்தாளர்களின் எழுத்துகளினூடாகவும் மட்டுமே எனக்கு பரிச்சயமாகி இருந்த சென்னை நகரில் என் முதல் நாள் விடிந்தது. 

தண்ணீர் தாங்கி குழாயில் ஏற்பட்ட உடைப்பால் முதல் அரை நாள் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருந்தது. வீட்டிற்கு இரு முனை தண்ணீர் சப்ளை என்பதால் ஒரே ஒரு குழாயில் தண்ணீர் வர, அதை வாளிக்குள் சேகரித்து மிச்ச வேலைகளை பார்க்க வேண்டி இருந்தது. அன்று ஞாயிறு என்பதால்  plumping வேலைக்கு உடனே ஆளைப் பிடிப்பது கஷடம் என அப்பார்மென்ட் ஆள் சொன்னாலும் மதியத்துக்குள் ஒருவரை பிடித்து திருத்தி விட்டார்கள்.

காலை 10:30 அளவில் நரேஸ் அண்ணாவுடன் (அக்காவின் கணவரை  நரேஸ் அண்ணா எனத்தான் அழைப்பது) நானும் மகனும் அக்காவின் மகனும் மத்தியானச் சாப்பாட்டுக்கு கறி வாங்க வெளிக்கிட்டோம்.

சென்னை மாநகரில் எம் முதல் 'உலா' தொடங்கியது.

சென்னை வாகன நெரிசலும், மக்களின் அவசரமும் பார்க்க நம்பமுடியாதளவுக்கு இருக்கின்றது. எந்தவிதமான வீதி ஒழுங்குகளும் எவரும் கடைப்பிடிப்பதாக இல்லை. ஒரு சில Scooter கள் (ஸ்கூட்டிகள்) பாதசாரிகளுக்கான நடைபாதையில் (Side walk) செலுத்திக் கொண்டு இருந்தார்கள். தண்ணீர் லொறிகள் எக்கச்சக்கம்.

Horn அடிக்காத வாகனங்கள் இல்லை.

கொழும்பில்  Pettah வில் மிகவும் குறுகலான முதலாம் / மூன்றாம் குறுக்குத் தெருக்களில் இருக்கும் வாகன நெரிசல்களை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு சென்னை நகர வீதிகளின் வாகன நெரிசல்கள் இருக்கின்றன. இவற்றுக்கு நடுவில் ஒய்யாரமாக நடந்து செல்லும் பெரிய பெரிய மாடுகள், வீதியின் ஓரத்தில் எதைப் பற்றியும் அக்கறை இல்லாமல் படுத்துக் கிடக்கும் நாய்கள், அதை விலத்தி சாதுரியமாக ஓடும் வாகன சாரதிகள், இரைச்சல் மிக்க தெருக்கள்...

ஆனாலும் இவ்வளவு வாகன நெரிசல்களிலும், விதி மீறல்களிலும் நான் அங்கு இருக்கும் வரைக்கும் ஒரு விபத்தினையும் காணவில்லை. வாகனங்களின் வேகம் மிகவும் குறைவு என்பதால் சின்ன சின்ன உரசல்கள் தவிர வேறு பெரிய விபத்துகள் இல்லை. நரேஸ் அணாவின் காரிலும் சில உரசல்கள் தந்த வடுக்களை மட்டும்தான் காணக் கூடியதாக இருந்தது.

மக்கள் ஒழுங்கு மீறல்களினூடாக ஒரு ஒழுங்கை கடைப்பிடித்துக் கொண்டு வாகனங்களை செலுத்தி வருகின்றனர்..

என் மகனுக்கு வீதியின் நடுவில் ஒய்யாரமாக மெதுவாக நடந்து செல்லும் மாடுகளை கண்டது பெரிய சந்தோசம். ஆள் பொதுவாக மிருகங்கள், பறவைகள் மற்றும் புழு பூச்சிகள் என்பனவற்றில் ஆர்வமுள்ளவர் என்பதால் மாடுகளையும் வீதி ஓரத்தில் நாய்களையும் கண்டது பெரிய சந்தோசமாக போய்விட்டது. இது ஒன்றே போதும் அவனுக்கு சென்னையை பிடித்துப் போக.

சென்னை லைட் ஹவுசிற்கு அருகில் இருக்கும் மீன் விற்கும் இடத்துக்கு வந்தாச்சு.

எனக்கு நண்டு சாப்பிட ஆசையாக இருந்தது. சரி என்று நரேஸ் அண்ணா, அங்கு பெருங்கால் நண்டு விற்கும் சுலோச்சனா எனு பெண்மணியின் இடத்துக்கு கூட்டிச் செல்கின்றார்.

அடேயப்பா....நல்ல கொழுத்த கால்களை கொண்ட நண்டுகள். எனக்கு அப்பவே வாயூறத் தொடங்கியது

awbzi8.jpg

258m3o0.jpg

இந்த நண்டு விற்கும் பெண்மணி மிகவும் அன்பானவராக இருக்கின்றார். நான் பார்த்த அனைத்து சென்னைவாசிகளும் மிகவும் அன்பானவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவர்கள் ஒருமையில் கதைப்பினும் அந்த ஒருமையினூடாக அன்பும் ஒரு ஒட்டுணர்வும் தெரிகின்றது..

நண்டை உடைத்து தானே சுத்தப்படுத்தி தந்தார். மூவாயிரம் இந்திய ரூபாய்கள் வந்தது என நினைக்கின்றேன்.

சரி, கறிக்கு நண்டு வாங்கியாச்சு.... தண்ணி அடிக்க பைட்ஸ் இற்கு என்ன வாங்குவது?

அப்படியே அருகில் இருக்கும் மாட்டு இறைச்சி விற்கும் இடத்துக்கும் போனோம். நல்ல கொழுத்த மாட்டு இறைச்சி விற்க வைத்து இருந்தார்கள். கனடாவில் இருக்கும் மாட்டிறைச்சியின் சுவை எனக்கு பிடிப்பதில்லை. மிகவும் மென்மையான இறைச்சி தான் கனடாவில் இருப்பது. ஆனால் இலங்கையில் அதற்கு நேர்மாறு. சென்னையிலும் அப்படித்தான் என்று அத்தான் சொன்னதால் அதில் ஒரு 4 கிலோ வாங்கினோம்.

இடையில் ஒரு இடத்தில் இலங்கை Keels brand Sausages விற்கின்றது என சொல்லி அதிலும் சில பக்கற்றுகள் வாங்கியாச்சு. இடையில் Fresh கோழி கால்களும் வாங்கினோம்.

வீடு வந்து சேர 12 மணியாகிவிட்டது.

ஒன்ரை மணியளவில், அடுப்பில் இருந்த நண்டுக் கறியின் வாசனை மூக்கைத் துளைக்க, மாட்டு இறைச்சி டெவிலும், கோழிக் கால் பொரியலும், Sausages  அக்கா சமைச்சுத் தர எங்கள் முதல் பார்ட்டி கோலாகலமாக ஆரம்பமானது.

(மிச்சம் பிறகு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6.3.2017 at 0:47 AM, நிழலி said:

ஒன்பது வருடங்களின் பின்னான சந்திப்பு------

நான் மகனையும் அழைத்துக் கொண்டு இமிகிரேசன் அதிகாரிக்கு என் கனடிய பாஸ்போர்ட்டினை கொடுக்கும் போது அந்த சாமத்திலும் புன்னகையுடன் வாங்கி வீசா பக்கத்தினை காட்டச் சொன்னார். நான் காட்டியவுடன் அதை சரிபார்த்த பின் நான் multiple entries எடுத்து இருந்தமையால் இங்கிருந்து வேறு எங்கு செல்லப் போகின்றீர்கள் எனக் கேட்க நான் இலங்கைக்கு சென்று விட்டு மீண்டும் வருவேன் என்று கூறினதை ஏற்றுக் கொண்டு கமராவுக்கு முன் என்னை நிற்கச் சொல்லி ஒரு படமும் எடுத்து விட்டு மகனது பாஸ்போர்ட்டினை சரி பார்த்து அவனையும் ஒரு படம் எடுத்து விட்டு புன்னகையுடன் அனுப்பி வைத்தார்.

சென்னை விமான நிலையம் புதிய கட்டிடம் என்று செய்திகளில் சொன்னாலும் அதை ஒரு தரமான விமான நிலையமாக பார்க்க முடியவில்லை. ஒரு சில இடங்களில் அழகான பிள்ளையார் சிலைகளும் வேறு சிலைகளும் வைத்து இருந்தனர். சென்னையின் / தமிழ்நாட்டின் தொன்மையை அதன் கலாச்சாரத்தினை பறைசாட்டும் அடையாளங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. குப்பையாக இல்லாவிடினும் சுத்தமாகவும் இல்லை. நிறைய இடங்கள் வெறுமையாக இருக்கின்றன.

ஆனால் என்ன.................. திரும்பும் இடமெல்லாம் தமிழ் தமிழ் தமிழ். கருப்பு நிற தமிழர்கள், தமிழச்சிகள் (அதிலும் சிலர் சூப்பர் பிகருகள்), தமிழ் பெயர் பலகைகள், தமிழ் உரையாடல்கள், தமிழ் அறிவிப்புகள்...என எல்லாமே தமிழாக இருந்தது மனசுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தந்தது. நீண்ட காலத்தின் பின் தமிழ் மண் ஒன்றில் காலை வைக்கின்றேன் என்ற உணர்வே ஒரு வகையான உற்சாகத்தினை தந்தது.

(சென்னையை பற்றி அடுத்து எழுதுகின்றேன்)

அழகான எழுத்து நடை.  நிழலி.
பல முறை இந்தத் திரிக்குள் வந்து, போனாலும்.... 
ஆற அமர்ந்து....  கருத்து சொல்லாமைக்கு நேரப்பற்றாக்  குறையே காரணம். 

நீல நிறத்தில் மேற்கோள் காட் டப்  பட் ட வரிகளை, உங்கள் எழுத்தில்... வாசித்த போது, பெருமையாக இருந்தது.
ஈழத் தமிழர் இழந்தவற்றை... தமிழகமும் இழக்க மாட் டாது என, நம்பிக்கை இருக்கின்றது.
அதுகும்....  ஜல்லிக்கட்டு மாணவர் எழுச்சியின் பின்.... 
இனி வரும், தமிழக அரசியல் வாதிகள் விழிப்பாக இருப்பார்கள் என நம்புகின்றேன்.

இந்த விடயத்தில்..... நெடுமாறன் ஐயாவின் ஆரம்பமும்,
அதனைத் தொடர்ந்த....   சீமான், வைகோ...  போன்றவர்களுக்கு ..... 
நன்றி.... சொல்லக் கடமைப் பட்டுள்ளோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

சென்னை மாநகரில் எம் முதல் 'உலா'

சென்னை லைட் ஹவுசிற்கு அருகில் இருக்கும் மீன் விற்கும் இடத்துக்கு வந்தாச்சு.

எனக்கு நண்டு சாப்பிட ஆசையாக இருந்தது. சரி என்று நரேஸ் அண்ணா, அங்கு பெருங்கால் நண்டு விற்கும் சுலோச்சனா எனு பெண்மணியின் இடத்துக்கு கூட்டிச் செல்கின்றார்.

awbzi8.jpg

 

இரண்டு கிழமை சுற்றுலா செல்லும் ஒருவர்.... (அதிலும்... ஒரு கிழமை சிலோன் பக்கம்  போகிறவர்)
அரக்கப் பரக்க  திரியாமல், நண்டு வித்த... பெண்மணி   சுலோச்சனா என்று, பெயரையும் கேட்டுக் கொண்டு வந்ததைப்  பார்த்து, அப்படியே.... ஆடிப் போயிட்டேன். :D:

படத்தில்... பெரு விரலில் மருதாணி பூசிய கை.... சுலோச்சனாவின்,  கை  தானா ?
(கையை... விட, நண்டு பெரிசாயிருக்கு.... ) tw_tounge_xd:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

சென்னை மாநகரில் எம் முதல் 'உலா'

சினிமா படங்களினூடாகவும் தமிழக எழுத்தாளர்களின் எழுத்துகளினூடாகவும் மட்டுமே எனக்கு பரிச்சயமாகி இருந்த சென்னை நகரில் என் முதல் நாள் விடிந்தது. 

தண்ணீர் தாங்கி குழாயில் ஏற்பட்ட உடைப்பால் முதல் அரை நாள் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருந்தது. வீட்டிற்கு இரு முனை தண்ணீர் சப்ளை என்பதால் ஒரே ஒரு குழாயில் தண்ணீர் வர, அதை வாளிக்குள் சேகரித்து மிச்ச வேலைகளை பார்க்க வேண்டி இருந்தது. அன்று ஞாயிறு என்பதால்  plumping வேலைக்கு உடனே ஆளைப் பிடிப்பது கஷடம் என அப்பார்மென்ட் ஆள் சொன்னாலும் மதியத்துக்குள் ஒருவரை பிடித்து திருத்தி விட்டார்கள்.

காலை 10:30 அளவில் நரேஸ் அண்ணாவுடன் (அக்காவின் கணவரை  நரேஸ் அண்ணா எனத்தான் அழைப்பது) நானும் மகனும் அக்காவின் மகனும் மத்தியானச் சாப்பாட்டுக்கு கறி வாங்க வெளிக்கிட்டோம்.

சென்னை மாநகரில் எம் முதல் 'உலா' தொடங்கியது.

சென்னை வாகன நெரிசலும், மக்களின் அவசரமும் பார்க்க நம்பமுடியாதளவுக்கு இருக்கின்றது. எந்தவிதமான வீதி ஒழுங்குகளும் எவரும் கடைப்பிடிப்பதாக இல்லை. ஒரு சில Scooter கள் (ஸ்கூட்டிகள்) பாதசாரிகளுக்கான நடைபாதையில் (Side walk) செலுத்திக் கொண்டு இருந்தார்கள். தண்ணீர் லொறிகள் எக்கச்சக்கம்.

Horn அடிக்காத வாகனங்கள் இல்லை.

கொழும்பில்  Pettah வில் மிகவும் குறுகலான முதலாம் / மூன்றாம் குறுக்குத் தெருக்களில் இருக்கும் வாகன நெரிசல்களை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு சென்னை நகர வீதிகளின் வாகன நெரிசல்கள் இருக்கின்றன. இவற்றுக்கு நடுவில் ஒய்யாரமாக நடந்து செல்லும் பெரிய பெரிய மாடுகள், வீதியின் ஓரத்தில் எதைப் பற்றியும் அக்கறை இல்லாமல் படுத்துக் கிடக்கும் நாய்கள், அதை விலத்தி சாதுரியமாக ஓடும் வாகன சாரதிகள், இரைச்சல் மிக்க தெருக்கள்...

ஆனாலும் இவ்வளவு வாகன நெரிசல்களிலும், விதி மீறல்களிலும் நான் அங்கு இருக்கும் வரைக்கும் ஒரு விபத்தினையும் காணவில்லை. வாகனங்களின் வேகம் மிகவும் குறைவு என்பதால் சின்ன சின்ன உரசல்கள் தவிர வேறு பெரிய விபத்துகள் இல்லை. நரேஸ் அணாவின் காரிலும் சில உரசல்கள் தந்த வடுக்களை மட்டும்தான் காணக் கூடியதாக இருந்தது.

மக்கள் ஒழுங்கு மீறல்களினூடாக ஒரு ஒழுங்கை கடைப்பிடித்துக் கொண்டு வாகனங்களை செலுத்தி வருகின்றனர்..

என் மகனுக்கு வீதியின் நடுவில் ஒய்யாரமாக மெதுவாக நடந்து செல்லும் மாடுகளை கண்டது பெரிய சந்தோசம். ஆள் பொதுவாக மிருகங்கள், பறவைகள் மற்றும் புழு பூச்சிகள் என்பனவற்றில் ஆர்வமுள்ளவர் என்பதால் மாடுகளையும் வீதி ஓரத்தில் நாய்களையும் கண்டது பெரிய சந்தோசமாக போய்விட்டது. இது ஒன்றே போதும் அவனுக்கு சென்னையை பிடித்துப் போக.

சென்னை லைட் ஹவுசிற்கு அருகில் இருக்கும் மீன் விற்கும் இடத்துக்கு வந்தாச்சு.

எனக்கு நண்டு சாப்பிட ஆசையாக இருந்தது. சரி என்று நரேஸ் அண்ணா, அங்கு பெருங்கால் நண்டு விற்கும் சுலோச்சனா எனு பெண்மணியின் இடத்துக்கு கூட்டிச் செல்கின்றார்.

அடேயப்பா....நல்ல கொழுத்த கால்களை கொண்ட நண்டுகள். எனக்கு அப்பவே வாயூறத் தொடங்கியது

awbzi8.jpg

258m3o0.jpg

இந்த நண்டு விற்கும் பெண்மணி மிகவும் அன்பானவராக இருக்கின்றார். நான் பார்த்த அனைத்து சென்னைவாசிகளும் மிகவும் அன்பானவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவர்கள் ஒருமையில் கதைப்பினும் அந்த ஒருமையினூடாக அன்பும் ஒரு ஒட்டுணர்வும் தெரிகின்றது..

நண்டை உடைத்து தானே சுத்தப்படுத்தி தந்தார். மூவாயிரம் இந்திய ரூபாய்கள் வந்தது என நினைக்கின்றேன்.

சரி, கறிக்கு நண்டு வாங்கியாச்சு.... தண்ணி அடிக்க பைட்ஸ் இற்கு என்ன வாங்குவது?

அப்படியே அருகில் இருக்கும் மாட்டு இறைச்சி விற்கும் இடத்துக்கும் போனோம். நல்ல கொழுத்த மாட்டு இறைச்சி விற்க வைத்து இருந்தார்கள். கனடாவில் இருக்கும் மாட்டிறைச்சியின் சுவை எனக்கு பிடிப்பதில்லை. மிகவும் மென்மையான இறைச்சி தான் கனடாவில் இருப்பது. ஆனால் இலங்கையில் அதற்கு நேர்மாறு. சென்னையிலும் அப்படித்தான் என்று அத்தான் சொன்னதால் அதில் ஒரு 4 கிலோ வாங்கினோம்.

இடையில் ஒரு இடத்தில் இலங்கை Keels brand Sausages விற்கின்றது என சொல்லி அதிலும் சில பக்கற்றுகள் வாங்கியாச்சு. இடையில் Fresh கோழி கால்களும் வாங்கினோம்.

வீடு வந்து சேர 12 மணியாகிவிட்டது.

(மிச்சம் பிறகு)

நிழலி வாங்கிய சாமானைப் பார்த்தா ஏதோ அகதி முகாமிலிருந்து போன ஆள் மாதிரியெல்லோ இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

சரி, கறிக்கு நண்டு வாங்கியாச்சு.... தண்ணி அடிக்க பைட்ஸ் இற்கு என்ன வாங்குவது?

அப்படியே அருகில் இருக்கும் மாட்டு இறைச்சி விற்கும் இடத்துக்கும் போனோம். நல்ல கொழுத்த மாட்டு இறைச்சி விற்க வைத்து இருந்தார்கள். கனடாவில் இருக்கும் மாட்டிறைச்சியின் சுவை எனக்கு பிடிப்பதில்லை. மிகவும் மென்மையான இறைச்சி தான் கனடாவில் இருப்பது. ஆனால் இலங்கையில் அதற்கு நேர்மாறு. சென்னையிலும் அப்படித்தான் என்று அத்தான் சொன்னதால் அதில் ஒரு 4 கிலோ வாங்கினோம்.

இடையில் ஒரு இடத்தில் இலங்கை Keels brand Sausages விற்கின்றது என சொல்லி அதிலும் சில பக்கற்றுகள் வாங்கியாச்சு. இடையில் Fresh கோழி கால்களும் வாங்கினோம்.

தொடர் நல்லாயிருக்குது..!

இந்தியாவில நீங்கள் ரவுண்ட் எபவுட்டை சுத்திப் போகத் தேவையில்லை! நேரடியாகவே எக்சிட் எடுக்கலாம் என்று கூறுவார்கள்! போலீஸ்காரர் ஏதாவது கேட்டால் ஒரு பீடிக்கட்டோடு அலுவலை முடிக்கலாம் என்று சொல்லுவார்கள்!

அது சரி.....உங்களுக்கு உள்ளது..குடலா அல்லது கடலா?:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது எல்லாத்தையும் ஒன்றாய் சாப்பிட்டு வயித்தால அடிக்கேல்லையோ?...காசை எடுத்து விசுக்கினால் நண்டு விற்கிற அம்மாவில் இருந்து எல்லோரும் அன்பாத் தான் கதைப்பினம்<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6.3.2017 at 0:47 AM, நிழலி said:

ஒன்பது வருடங்களின் பின்னான சந்திப்பு

வெளியே வர என் அக்காவின் குடும்பம் எமக்காக காத்திருந்தனர்.அக்கா விமானம் தரையிறங்க முதல் ஒரு மணி நேத்துக்கு முன்பாகவே அத்தானுடனும் மகனுடனும் வந்து காத்திருந்தார். ஒன்பது வருடங்களின் பின் முதல் முறையாக அக்காவை சந்திக்கின்றேன். அம்மாவின் இடத்தை சமப்படுத்த மனைவியும் மகளும் எனக்கு வாய்த்திருந்தாலும் அக்காவின் இடம் இன்னும் அக்காவால் மட்டுமே நிரப்பட்டுக் கொண்டு இருந்தது. ஒரே ஒரு சகோதரம், அதுவும் ஒன்பது வருட பிரிவுக்கு பின் சந்திக்கின்றேன்.

கனத்த வரிகள் காலம் எல்லாவற்றையும் விழுங்கிச் செல்கிறது. தேசத்தை மட்டுமா(?) பிரிந்தோம்......

தொடருங்கள் ..............

முன்பு மணியனின்(?)பயணக்கட்டுரைகளை அப்பப்போ வாசிப்பதுண்டு.
 நிழலியவர்களின் அனுபவப்பதிவு எங்களையும் அதனுள்ளே அழைத்துச்செல்கிறார். கூடப்பயணிப்போம். 
நன்றி. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

 

ஆச்சரியமும் அங்கலாய்ப்பும் எதிர்பார்ப்பின் அடிப்படையில் தான் அமைகின்றன. Frankfurt வளர்ந்த நாட்டு விமான நிலையம் என்பதால் எல்லாம் நல்லா இருக்கும் என்று நினைக்க, நிகழ்ந்த அனைத்து சிரமங்களும் கடும் சலிப்பையும் கோபத்தினையும் தந்தன; சென்னை விமான நிலையம் மோசம் என்ற எதிர்பார்ப்பில் இருக்க நிகழ்ந்த சின்ன சின்ன சந்தோசங்களும் பல மடங்கு மகிழ்வை தந்தன.

மகனுடன் தனியாக பயணித்தமையால் அந்த குடிவரவு அதிகாரிக்கு ஒரு வித ஒட்டுதல் ஏற்பட்டு இருக்கும் என நினைத்து இருந்தேன். ஆனால் சென்னையை விட்டு கனடாவுக்கு பயணித்த போது இருந்த குடிவரவு அதிகாரி காட்டிய அக்கறையும் உரையாடலும் மனசை மகிழ்விக்க செய்தன. அதை பற்றி பின்னர் எழுதுகின்றேன்

 

வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து தன் கையை சுட்டுக்கொண்டிருக்கும் நாடு ஜேர்மனி.

பல பயங்கரவாதிகள் அகதி அல்லது மாணவர்கள் என இங்கே புகுந்து பல நாசகார சதிகளுக்கு ஜேர்மனியை ஒரு தங்குமிடமாக அமைத்து விட்டார்கள். 9/11 தாக்குதல் உட்பட.....

ஏன் அகதி என்ற பெயரில் ஜேர்மனிக்குள் புகுந்து பிரான்ஸ்...இங்கிலாந்து....கனடா மற்றும் இதர நாடுகளுக்கு மீண்டு மீண்டும் அகதியானவர்களுக்கு ரோசம் மானம் வருவதில்லையா?

அதை விட ஜேர்மனியில் அரசியல் தஞ்சம்கோரி தங்கிவிட்டு......கள்ளக்கப்பல் மூலம் கனடாவிற்கு சென்று மீண்டும் அசூல் அடிச்சதை தமிழினம் மறந்தாலும் ஜேர்மனி வரலாற்றில் மறக்கவே மாட்டாது.:grin:

இன்றைய காலங்களில் அரேபிய பயங்கரவாதிகள் சிறு பிள்ளைகள்/கற்பிணிகளை வைத்தே பல காரியங்களை சாதிக்கின்றார்கள்.

நேசமாக இருந்தவர்களிடம் நாசமாக இருந்தால் நேச முகத்தில் எப்படி புன்னகை வரும்?:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/03/2017 at 1:44 AM, குமாரசாமி said:

 

வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து தன் கையை சுட்டுக்கொண்டிருக்கும் நாடு ஜேர்மனி.

பல பயங்கரவாதிகள் அகதி அல்லது மாணவர்கள் என இங்கே புகுந்து பல நாசகார சதிகளுக்கு ஜேர்மனியை ஒரு தங்குமிடமாக அமைத்து விட்டார்கள். 9/11 தாக்குதல் உட்பட.....

ஏன் அகதி என்ற பெயரில் ஜேர்மனிக்குள் புகுந்து பிரான்ஸ்...இங்கிலாந்து....கனடா மற்றும் இதர நாடுகளுக்கு மீண்டு மீண்டும் அகதியானவர்களுக்கு ரோசம் மானம் வருவதில்லையா?

அதை விட ஜேர்மனியில் அரசியல் தஞ்சம்கோரி தங்கிவிட்டு......கள்ளக்கப்பல் மூலம் கனடாவிற்கு சென்று மீண்டும் அசூல் அடிச்சதை தமிழினம் மறந்தாலும் ஜேர்மனி வரலாற்றில் மறக்கவே மாட்டாது.:grin:

இன்றைய காலங்களில் அரேபிய பயங்கரவாதிகள் சிறு பிள்ளைகள்/கற்பிணிகளை வைத்தே பல காரியங்களை சாதிக்கின்றார்கள்.

நேசமாக இருந்தவர்களிடம் நாசமாக இருந்தால் நேச முகத்தில் எப்படி புன்னகை வரும்?:cool:

 

Link to comment
Share on other sites

On 2017-03-10 at 2:19 PM, தமிழ் சிறி said:

அழகான எழுத்து நடை.  நிழலி.
பல முறை இந்தத் திரிக்குள் வந்து, போனாலும்.... 
ஆற அமர்ந்து....  கருத்து சொல்லாமைக்கு நேரப்பற்றாக்  குறையே காரணம். 

நீல நிறத்தில் மேற்கோள் காட் டப்  பட் ட வரிகளை, உங்கள் எழுத்தில்... வாசித்த போது, பெருமையாக இருந்தது.
ஈழத் தமிழர் இழந்தவற்றை... தமிழகமும் இழக்க மாட் டாது என, நம்பிக்கை இருக்கின்றது.
அதுகும்....  ஜல்லிக்கட்டு மாணவர் எழுச்சியின் பின்.... 
இனி வரும், தமிழக அரசியல் வாதிகள் விழிப்பாக இருப்பார்கள் என நம்புகின்றேன்.

இந்த விடயத்தில்..... நெடுமாறன் ஐயாவின் ஆரம்பமும்,
அதனைத் தொடர்ந்த....   சீமான், வைகோ...  போன்றவர்களுக்கு ..... 
நன்றி.... சொல்லக் கடமைப் பட்டுள்ளோம்.

 

ஆற அமர்ந்து வாசிச்சு கருத்தெழுதியமைக்கு நன்றி தமிழ்சிறி. தமிழகத்தில் சில விடயங்கள் கண்டிப்பாக தமிழில் இருக்க வேண்டும் என விதி இருக்கு என நினைக்கின்றேன். உதாரணமாக கடைப் பெயர்கள் தமிழிலும் இருக்க வேண்டும் என்பது தமிழக அல்லது மாநகர சட்டம் என நினைக்கின்றேன். ராஜவன்னியன் அல்லது இது பற்றி தெரிந்தவர்கள் எழுதவும்.

நெடுமாறன், சீமான், வைகோ போன்றவர்கள் மீதான என் பார்வை வேறு

On 2017-03-10 at 2:39 PM, தமிழ் சிறி said:

இரண்டு கிழமை சுற்றுலா செல்லும் ஒருவர்.... (அதிலும்... ஒரு கிழமை சிலோன் பக்கம்  போகிறவர்)
அரக்கப் பரக்க  திரியாமல், நண்டு வித்த... பெண்மணி   சுலோச்சனா என்று, பெயரையும் கேட்டுக் கொண்டு வந்ததைப்  பார்த்து, அப்படியே.... ஆடிப் போயிட்டேன். :D:

படத்தில்... பெரு விரலில் மருதாணி பூசிய கை.... சுலோச்சனாவின்,  கை  தானா ?
(கையை... விட, நண்டு பெரிசாயிருக்கு.... ) tw_tounge_xd:

சுலோச்சனா என்ற பெயரை கேட்டவுடனேயே மனசில் அந்தப் பெயர் பச்சக் என்று ஒட்டிவிட்டது. அத்துடன் அவரிடம் என் அக்கா அடிக்கடி மீன் வாங்குவதால் மிகவும் ஈடுபாட்டுடன் உரையாடியதும் பிடிச்சு இருந்தது. அவருக்கு ஒரு 50 வயது இருக்கும் என நினைக்கின்றேன். முகம் முழுதும் மகிழ்வுடன் இருந்தார். சுலோச்சனாவின் படமும் என்னிடம் உள்ளது.அவரது அனுமதி இன்றி பிரசுரிப்பது தவறு என்பதால் அதை இங்கு இணைக்கவில்லை,

On 2017-03-10 at 3:17 PM, ஈழப்பிரியன் said:

நிழலி வாங்கிய சாமானைப் பார்த்தா ஏதோ அகதி முகாமிலிருந்து போன ஆள் மாதிரியெல்லோ இருக்கு.

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

 

On 2017-03-10 at 3:28 PM, புங்கையூரன் said:

 

அது சரி.....உங்களுக்கு உள்ளது..குடலா அல்லது கடலா?:mellow:

ஹிஹி இந்தக் குடல் இதுவரைக்கும் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு தான் இருக்கு. மற்றது, இவற்றில் சில ஒரு வாரத்துக்கு என்று வாங்கியவை (நண்டைத் தவிர)

Link to comment
Share on other sites

On 2017-03-10 at 3:38 PM, ரதி said:

உது எல்லாத்தையும் ஒன்றாய் சாப்பிட்டு வயித்தால அடிக்கேல்லையோ?...காசை எடுத்து விசுக்கினால் நண்டு விற்கிற அம்மாவில் இருந்து எல்லோரும் அன்பாத் தான் கதைப்பினம்<_<

பொதுவாக எனக்கு என்ன சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்ளும். அத்துடன் இதுகள் எல்லாம் போய் வயிற்றை ஒரு வழி பண்ணாமல் இருக்கத்தான் விஸ்கி அடிப்பது.

சென்னை மக்கள் அன்பானவர்கள் என்று சொல்லியமைக்கு இது மட்டும் காரணம் அல்ல. வேறு மூன்று சம்பவங்கள் இடம்பெற்றன. இறுதியாக நடந்தமைக்கு ஒரு வேளை வேறு காரணம் இருப்பினும் மிச்ச இரண்டும் அப்படி அல்ல. அவை மூன்றையும் தொடரில் எழுதுவேன்.

On 2017-03-10 at 4:23 PM, nochchi said:

கனத்த வரிகள் காலம் எல்லாவற்றையும் விழுங்கிச் செல்கிறது. தேசத்தை மட்டுமா(?) பிரிந்தோம்......

தொடருங்கள் ..............

முன்பு மணியனின்(?)பயணக்கட்டுரைகளை அப்பப்போ வாசிப்பதுண்டு.
 நிழலியவர்களின் அனுபவப்பதிவு எங்களையும் அதனுள்ளே அழைத்துச்செல்கிறார். கூடப்பயணிப்போம். 
நன்றி. 

 

நானும் சிறு வயதில் இதயம் பேசுகின்றது எனும் சஞ்சிகையில் வந்த மணியனின் ஒன்று இரண்டு பயணக் கட்டுரைகளை வாசித்து இருக்கின்றேன். அதில் ஒன்று சிறிமாவோ வை இலங்கை வந்து சந்தித்தது.

தொடர்ந்து வாசித்து கருத்துகளை எழுதுங்கள். பின்னூட்டங்கள் தான் எழுத உத்வேகத்தினை கொடுப்பவை

On 2017-03-10 at 7:44 PM, குமாரசாமி said:

 

வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து தன் கையை சுட்டுக்கொண்டிருக்கும் நாடு ஜேர்மனி.

பல பயங்கரவாதிகள் அகதி அல்லது மாணவர்கள் என இங்கே புகுந்து பல நாசகார சதிகளுக்கு ஜேர்மனியை ஒரு தங்குமிடமாக அமைத்து விட்டார்கள். 9/11 தாக்குதல் உட்பட.....

ஏன் அகதி என்ற பெயரில் ஜேர்மனிக்குள் புகுந்து பிரான்ஸ்...இங்கிலாந்து....கனடா மற்றும் இதர நாடுகளுக்கு மீண்டு மீண்டும் அகதியானவர்களுக்கு ரோசம் மானம் வருவதில்லையா?

அதை விட ஜேர்மனியில் அரசியல் தஞ்சம்கோரி தங்கிவிட்டு......கள்ளக்கப்பல் மூலம் கனடாவிற்கு சென்று மீண்டும் அசூல் அடிச்சதை தமிழினம் மறந்தாலும் ஜேர்மனி வரலாற்றில் மறக்கவே மாட்டாது.:grin:

இன்றைய காலங்களில் அரேபிய பயங்கரவாதிகள் சிறு பிள்ளைகள்/கற்பிணிகளை வைத்தே பல காரியங்களை சாதிக்கின்றார்கள்.

நேசமாக இருந்தவர்களிடம் நாசமாக இருந்தால் நேச முகத்தில் எப்படி புன்னகை வரும்?:cool:

என்னுடைய பதிலுக்கும் உங்கள் பதிலுக்கு இடையில் என்ன தொடர்பு இருக்கு என புரியவில்லை. பின்னூட்டத்துக்கு நன்றி

On 2017-03-13 at 3:00 PM, kkaran said:

தொடருங்கள் 

 

வருகைக்கு நன்றி. அடிக்கடி உங்களை இங்கு காண முடியுது இல்லை. தொடர்ந்து வாசித்து கருத்து எழுதுங்கள் கரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி அலட்டலை விட்டிட்டு  கதையை தொடருங்கோ 

 

12 minutes ago, நிழலி said:

பொதுவாக எனக்கு என்ன சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்ளும்.

என்ர மனுசியும் , இது என்ன சாரப்பாம்பின்ர  குடலோ எண்டு தான் கேக்கிறாரா (அது பிறப்பில வந்தது . நான் என்ன செய்ய  எத போட்டாலும் செமிக்குது )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நிழலி said:

 

என்னுடைய பதிலுக்கும் உங்கள் பதிலுக்கு இடையில் என்ன தொடர்பு இருக்கு என புரியவில்லை. பின்னூட்டத்துக்கு நன்றி

எதற்கும் நீங்கள் இந்த திரியில் எழுதியவற்றை திரும்ப வாசித்து பாருங்கள்.

எங்கோ ஒரு இடத்தில் நான் எழுதியதின் தொடர்பு இருக்கும்.tw_blush:

அது சரி தொடர்பில்லாத பின்னோட்டங்களுக்கு எதற்காக நன்றி:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

... தமிழகத்தில் சில விடயங்கள் கண்டிப்பாக தமிழில் இருக்க வேண்டும் என விதி இருக்கு என நினைக்கின்றேன். உதாரணமாக கடைப் பெயர்கள் தமிழிலும் இருக்க வேண்டும் என்பது தமிழக அல்லது மாநகர சட்டம் என நினைக்கின்றேன். ராஜவன்னியன் அல்லது இது பற்றி தெரிந்தவர்கள் எழுதவும்.

இது உண்மைதான்..

தமிழகத்திலுள்ள அனைத்து வணிக,கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியில் அறிவிப்புகள் இருக்கவேண்டுமென அரசு உத்தரவு பல வருடங்களாகவே நடைமுறையில் உள்ளது.. தமிழுக்கு முக்கியத்துவம் கட்டாயம், அடுத்து ஆங்கிலத்தில் இரண்டாவதாகவும்,விரும்பினால் பிற மொழிகளில் அடுத்ததாகவும் இருக்கவேண்டுமென விதி நடைமுறையில் இன்றும் உள்ளது.. சில பன்னாட்டு நிறுவனங்கள் இந்த விதியை கடைப்பிடிக்க தவறிய நிகழ்வுகளும் உண்டு..

இது பற்றிய செய்தி இங்கே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.