Jump to content

என் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

குருநகர் கழிய வந்த ஒரு பெரிய காணிகள் உள்ளடக்கிய பகுதியை இராணுவம் கையகப்படுத்தி இருந்தது. பொதுமக்களின் காணிகள் அவை. “இந்த --- மக்கள் என்னத்துக்கு இன்னும் இதை பிடிச்சு வைச்சிருக்கிறாங்கள்.. பாடையில போவார்” என மாமா தன் ஸ்ரைலில் திட்டிக் கொண்டு வந்தார்.

######ரவுனை சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து மீண்டும் வீட்டை வருகின்றோம். இடையில் எனக்கு செவ்விளனி குடிக்க ஆசை ஆசையாக வருகின்றது. கனடாவுக்கு வந்த பின் செவ்விளனி குடிக்கவே இல்லை. அங்கு ரின்னில் அடைச்சு வரும் இளநீரை குடிப்பதை விட கோமியத்தை குடிக்கலாம்.

மாமா பழைய பூங்கா வீதிக்கருகில் இருக்கும் ஒரு இளநீர் சிறு கடையின் அருகில் காரை நிறுத்த இறங்கிக் குடிக்கின்றோம். மாமாவுக்கு டயபடீஸ் உச்சத்தில் இருந்து பல்லிளிச்சுக் கொண்டு இருந்தாலும் நான் இளநீர் வாங்கி குடிக்கும் போது ஆளால் தன் ஆசையை மட்டுப்படுத்த முடியவில்லை. ஆசை diabetes அறியாது என முன்னோர் சும்மாவா சொன்னார்கள்.

#####அப்ப தெரியவில்லை அந்த கைகுலுக்கல் தான் மாமாவினுடனான என் இறுதி கைகுலுக்கல் என்று. அந்த பிரியாவிடை மாமா எனக்கு சொல்லிய தன் இறுதி பிரியாவிடை என்றும்

வாசிப்பதற்கு, சுவராசியமாக....  உங்கள் பயணத்தை  எழுதியுள்ளீர்கள் நிழலி.  :)

உங்கள் மாமா பேசியதை, நீங்கள்  கோடிட்ட இடம்  மூலம் மறைத்துள்ளதை.... நான் நிரப்பி வாசித்த போது,
எனக்கு தலை விறைத்துப் போய் விட்டது.
:shocked: மாமன்.... மருமகனுக்கு முன் இந்தச்  சொல்லை பாவிக்கக் கூடாது. :grin:

இடையே நடந்துள்ள நிகழ்வுகளை, வாசிக்கும் போது... சிரிப்பாக இருந்தது.

கடைசியில்... மாமாவிடம் இருந்து விடை பெறும் நேரம் கைகுலுக்கிய வசனங்களை வாசித்த போது,
எமக்கும் சோகம் தொற்றிக் கொண்டது. 
tw_cry:

Link to comment
Share on other sites

  • Replies 139
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

 

2r2n2bk.jpg

(இந்தப் பூவின் சரியான பெயர் என்ன? கோவிலின் வீதியில் இருந்தது. மிகவும் பரிச்சயமான பூ... ஆனால் பெயர் மறந்து விட்டது)

Bildergebnis für சிவலிங்கப் பூÄhnliches Foto

இதற்கு சிவலிங்கப் பூ  என்று பெயர். இந்தப் பூ, வித்தியாசமான நல்ல வாசம். 
ஆனைப் பந்தியடியில் உள்ள,  தனியார் மருத்துவ மனை ஒன்றில் இந்த மரம் இருந்தது. 
இப்போ உள்ளதோ... தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

 
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால்
உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான்.
பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய்
என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது
அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான்
சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா
வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா
என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான
உறவு என்றால் அது தாய்மாமா தான்.
எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே
வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை.

- முக நூலில்  வாசித்தது.  
நிழலியின் பதிவுக்கு, பொருத்தமாக இருந்ததால் இணைத்துள்ளேன். -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-4-28 at 1:01 PM, நிழலி said:

பெண் மயிலின் குரலில் ஆண் மயில் தோகை விரிச்சாட நினைக்கும் போது விமானம் மேலே எழும்பி பறக்கின்றது

இன்னும் வருமோ? தொடருக்கு நன்றிகள் ....உங்களுடையை தொடரை வாசிக்க மீண்டும் ஒரு முறை எனக்கு ஊருக்கு போய்விட்டு வந்த உணர்வு...ஏற்பட்டது...

Link to comment
Share on other sites

On ‎4‎/‎13‎/‎2017 at 2:20 PM, தமிழ் சிறி said:

நீங்கள் சந்தன மாதா கோவில் என்று, குறிப்பிடுவது,
கொழும்புத்துறை...  அந்தோனியார், கோவிலையா?
அல்பிரட்  துரையப்பா..... வீடு  எல்லாம், அந்தப்  பகுதிக்குள் தானே... வருகின்றது.
அங்கு... ஒருவர், இசைக்கு....  பிரபலமாக இருந்தவர்.... 
"றீகல் ----  என நினைக்கின்றேன் 

 

இல்லை தமிழ் சிறி. இது கொழும்புத்துறை வீதியில் இருக்கும் ஒரே ஒரு மாதா கோவில். பெயருக்கு ஏற்றவாறு சந்தன நிறத்தில் வர்ணம் பூசி இருப்பார்கள். இந்திய ஏவல் படைகள் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு படுகொலைகளை நிகழ்த்தும் போது இங்கு தான் தஞ்சம் அடைந்து இருந்தோம். 

இசைக்கு பிரபலமானவரை பற்றி அறிந்து இருக்கவில்லை .

உங்களுக்கு பாண்டியந்தாழ்வு எனும் இடம் பற்றித் தெரியுமா?

On ‎4‎/‎13‎/‎2017 at 2:28 PM, Maruthankerny said:

கொஞ்சம் நெருங்கி வாறீங்கள் ..........
பாண்டியன்தாழ்வு பேக்கரி 
அருகாக ... எனது செருப்பும் கொஞ்சம் தேய்ந்து இருக்கிறது.

 

மிகவும் நெருங்கி விட்டீர்கள்  மருது

 

On ‎4‎/‎13‎/‎2017 at 3:22 PM, ஈழப்பிரியன் said:

காதல் எனும் நோயினால் ரொம்பவும் நொந்திருக்கிறீர்கள் போல.

 

On ‎4‎/‎13‎/‎2017 at 5:17 PM, புங்கையூரன் said:

புல்லை மேய்ந்த ஒரு மாடு.....ஆறுதலாக இரை மீட்டுவது போல நகர்கின்றது உங்கள் வர்ணனை!

மீண்டும், மீண்டும் இரை மீட்டுவதைத் தவிர....பசுமைப் புல்வெளியை இழந்து....வெறும் கோதுமை வெளிகளில் மேய்ந்து கொண்டு திரிகிறோம் என்பதை நினைக்க வலி தான் மிஞ்சுகின்றது!

எனினும் பசுமைப் புல்வெளிகள் எமது கனவுகளாகவே எப்போதும் இருக்கப் போகின்றன!

மீண்டும் அங்கு சென்று வாழ்ந்தாலும்...அந்தப் புல்வெளிகளை நிரந்தரமாகத் தொலைத்த நினைவு தான் மிஞ்சப்போகின்றது!

அந்த நினைவுகள்...ஒரு காலப் பெட்டகத்தினுள் புதைக்கப் பட்டு விட்டன!

தொடருங்கள் நிழலி!

கனவுகளை பசுமை புல் வெளிகளாக ஆக்க ஊரில் உள்ள மக்களுடன் இணைந்து இன்னும் அதிகமாக உழைக்க வேண்டிய காலம் இது. இல்லாவிடின் வெறூம் பாலை நிலமாகவே எம் கனவுகளும் அதை சுமந்த மண்ணும் மேனியரும் ஆகிவிடுவர்.

பின்னூட்டத்துக்கு நன்றி புங்கை

On ‎4‎/‎15‎/‎2017 at 1:02 PM, nochchi said:

மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்.

நன்றி நொச்சி. அடிக்கடி எழுதுங்கள்

On ‎4‎/‎15‎/‎2017 at 5:50 PM, Sasi_varnam said:

 

அதே யாழ்ப்பாணத்தில் இருக்கும் சொந்தங்கள், அயலவர்கள் இப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதை போல இருப்பதை பார்க்க... எண்ணத்தை சொல்ல.

அங்கும் வெறுப்பும் சலிப்பும் இருக்கத்தான் செய்யுது.
எந்த இனமும் கொடுக்காத அளவுக்கு அவர்கள் விலை கொடுத்து இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் ஒரு விடயத்தில் உறுதியாக இருக்கின்றார்கள் மீண்டும் தம்மை பலிக்கடாக்கள் ஆக்கும், தம் வாழ்வை நாசமாக்க கூடிய எந்த போராட்டத்துக்கும் ஆதரவு கொடுப்பதில்லை என்று. இது பற்றி இறுதியிலும் எழுத நினைத்து இருக்கின்றேன்

Link to comment
Share on other sites

On ‎4‎/‎20‎/‎2017 at 4:01 PM, shanthy said:

இன்றுதான் நிழலி உங்கள் பதிவை முழுவதும் படித்து முடித்தேன். என்ன சொல்ல ? உங்கள் எழுத்தோடு சோ;ந்து பயணிக்கிறேன். பல இடங்களின் விபரிப்பு 90களில் உலவிய நினைவுகளை மீட்கிறது. காலம் எத்தனை கொடியது? நீண்ட நாளின் பின் வாசித்த அருமையான பதிவு.

நன்றி சாந்தி. அடிக்கடி யாழ் பக்கமும் வாருங்கோ

On ‎4‎/‎27‎/‎2017 at 11:42 PM, தமிழ் சிறி said:

வாசிப்பதற்கு, சுவராசியமாக....  உங்கள் பயணத்தை  எழுதியுள்ளீர்கள் நிழலி.  :)

உங்கள் மாமா பேசியதை, நீங்கள்  கோடிட்ட இடம்  மூலம் மறைத்துள்ளதை.... நான் நிரப்பி வாசித்த போது,
எனக்கு தலை விறைத்துப் போய் விட்டது.
:shocked: மாமன்.... மருமகனுக்கு முன் இந்தச்  சொல்லை பாவிக்கக் கூடாது. :grin:

 

ஹா ஹா ஹா ... ஆள் அப்படித்தான் ... ஒரு கட்டத்தின் பின் ஒரு நல்ல நண்பராக ஆகிவிட்டதால் சம்பிரதாயமான முறைகள் எல்லாம் மறைந்து விட்டது. மாமாவுடன் கதைத்ததில் இங்கு பகிர்வது 10 வீதம் கூட இல்லை :grin:

On ‎4‎/‎27‎/‎2017 at 11:50 PM, தமிழ் சிறி said:

Bildergebnis für சிவலிங்கப் பூÄhnliches Foto

இதற்கு சிவலிங்கப் பூ  என்று பெயர். இந்தப் பூ, வித்தியாசமான நல்ல வாசம். 
ஆனைப் பந்தியடியில் உள்ள,  தனியார் மருத்துவ மனை ஒன்றில் இந்த மரம் இருந்தது. 
இப்போ உள்ளதோ... தெரியவில்லை.

மிக்க நன்றி தமிழ் சிறி. எப்படி இந்தப் பெயரை மறந்து போனேன் என்று தெரியவில்லை

On ‎4‎/‎29‎/‎2017 at 0:58 AM, putthan said:

இன்னும் வருமோ? தொடருக்கு நன்றிகள் ....உங்களுடையை தொடரை வாசிக்க மீண்டும் ஒரு முறை எனக்கு ஊருக்கு போய்விட்டு வந்த உணர்வு...ஏற்பட்டது...

ஓம் வரும்... .அடுத்த வராத்தின் பின் அதிகம் நேரம் கிடைக்கும் என்பதால் வேகமாக எழுதி முடிக்கலாம் என நினைக்கின்றேன். கடனாவில் 10 வருஷம் என்ற ஒரு தொடரையும் எழுத நினைத்து இருப்பதால் இதை கெதியன எழுதி முடிக்க வேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பழகிய பரிச்சயமான இடங்கள், பக்கத்தில் கொழும்புத்துறை,  துண்டி எல்லாம் சொல்லி வேலையில்லை ....! பாசையூர் அந்தோனியார் அயலில் இருக்கும் சிலர் இங்கேயும் எனது அயலவர்களாக இருக்கின்றனர்..... நிறைய ஞ<பகங்கள் வந்து போகின்றன.அருமையாக எழுதிக் கொண்டு வருகின்றீர்கள் நிழலி ...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த கதையை வாசிச்சுக் கொண்டு போகேக்குள்ள தான் எதற்கு மோகன்,நிழலியை மட்டுவாக நியமித்தார் என்டு விளங்கிச்சு:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.5.2017 at 8:58 PM, நிழலி said:

இல்லை தமிழ் சிறி. இது கொழும்புத்துறை வீதியில் இருக்கும் ஒரே ஒரு மாதா கோவில். பெயருக்கு ஏற்றவாறு சந்தன நிறத்தில் வர்ணம் பூசி இருப்பார்கள். இந்திய ஏவல் படைகள் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு படுகொலைகளை நிகழ்த்தும் போது இங்கு தான் தஞ்சம் அடைந்து இருந்தோம். 

இசைக்கு பிரபலமானவரை பற்றி அறிந்து இருக்கவில்லை .

உங்களுக்கு பாண்டியந்தாழ்வு எனும் இடம் பற்றித் தெரியுமா?

நிழலி,  ஊரில்... "பாண்டியன் தாழ்வு" என்ற பெயரை கேள்விப்  பட்டுள்ளேன். 
அந்த இடம் எந்த ஊருக்கு அருகில் உள்ளது என்று சரியாக நினைவு வரவில்லை.
எனது கணிப்பின்படி.... ஈச்ச மோட் டைக்கு அருகில் இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்மையில்  மாமா உறவு  உறவையும் தாண்டிச்செல்லும் உறவுதான் அது அடுத்த நண்பன் போல  ஒரு உறவு தொடரட்டும் தொடர் நிழலி 

Link to comment
Share on other sites

மீண்டும் சென்னை

இருப்பது இன்னும் 5 தினங்கள் தான். ஐந்தாம் நாள் இரவு 10 மணிக்கு மீண்டும் ரொரன்டோ நோக்கி பயணம் செய்யவேண்டும் என்பதால் ஏலுமான அளவுக்கு அக்கா குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க நினைக்கின்றேன்

செவ்வாய் காலை 10 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வீட்டை வந்த பின் அன்று முழுதும் ஓரளவுக்கு ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டு இரவு சிறிது வெளியே சென்று வர நாள் முடிகின்றது.

அடுத்த நாள் செப். 23 அன்று முதலில் சென்னையில் உள்ள முதலைப் பண்ணைக்கு செல்கின்றோம். திரும்பிப் பார்க்கும் இடமெல்லாம் முதலைகள் முதலைகள் முதலைகள்.

வாயை பிளந்த படி சில முதலைகள், வாயை மூடிக் கொண்டு சிலது, சிவனே என்று தண்ணிக்குள் மூழ்கிக் கொண்டு இன்னும் சில, எதைப் பற்றியும் யோசிக்காமல் ஒரு மூலைக்குள் சுருண்டுக் கொண்டு சில…. சில இடங்களில் கப் என்று அடிக்கும் சேற்று நாற்றத்தினை விட குறை சொல்ல எதுவுமில்லை. இவ்வளவு முதலைகளுக்கும் எங்கிருந்து எப்படி சாப்பாடு போடுகினமோ தெரியாது.

 

fjfbj7.jpg

அங்கு இரண்டு மணித்தியாலங்கள் செலவழித்தபின் மாமல்லபுரம் செல்கின்றோம்.

இந்திய சஞ்சிகைகள் மற்றும் கட்டுரைகளில் மாமல்லபுரம் பற்றி வாசித்து வாசித்து அதை பார்ப்பது ஒரு பெருங்கனவாக இருந்தது எனக்கு. பல்லவ அரசர்களின் வழி வந்த நரசிம்மவர்மனால் 1300 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கடற்கரை கோவிலை ஒட்டி எழுப்பப்பட்ட சிலைகள் பற்றிய பிரம்மிப்பான கதைகளை கேட்டு இருக்கின்றேன். புலிக் குகை, அர்ச்சுனன் தபசு போன்றவற்றை வாசித்து வாசித்து அது பற்றி மனதில் எழுந்த பிம்பங்கள் ஏராளம்.

ஆனால் மாமல்லபுரம் போனபின் அங்கு அதை தமிழ்நாட்டு அரசு அதை பேணும் முறையை கண்டபின் என் கனவு உடையத் தொடங்குகின்றது.

குன்று ஒன்றில் ஏறி சற்று நடக்கும் போதே மனிதக் கழிவுகள் எம்மை வரவேற்கின்றன. பன்றிகள் ஒரு ஓரத்தில் இருந்து ஓடி ஓடி வருகின்றன. குப்பைகளும் அசுத்தங்களும் நிறைந்து கிடக்கின்றன.  இலங்கை அரசு சிகிரியா குகை ஓவியங்களை பாதுக்காக்க எடுக்கும் முயற்சிகளில் 10 வீதம் கூட இங்கில்லை. பென்னம் பெரும் வரலாற்று பொக்கிசம் பொறுப்பற்ற மனிதர்களின் நிர்வாகத்தால் பொலிவிழந்து செல்கின்றது. தமிழர்களின் நாகரீகம் தமிழர்களாலேயே அழிக்கப்படுகின்றன.

ஆனால் இவற்றையும் மீறி அங்குள்ள சில சிற்பங்கள் தாம் இருக்கும் சூழ்நிலையை மீறி தம் வரலாற்றை உரக்க மூச்சிறைத்து சொல்ல விளைகின்றன. சிற்பங்கள் செதுக்கிய சிற்பிகளின் பாதங்களில் ஒட்டிய மண் துகள்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அழுது புரள்வதாக எனக்கு தோன்றுகின்றது.

vdz90y.jpg

aymy5j.jpg

 

அங்கு சில மணித்தியாலம் செலவழித்த பின் மீண்டும் வீடு திரும்பும் போது மாலையாகி விட்டது.

அடுத்த நாள் செப் 24 மனைவியின் தங்கையின் வீட்டில்….மச்சினிச்சியின் வீட்டில் விருந்து. அவர் வீட்டை எதிர்த்து ஒரு தமிழ் நாட்டு பொடியனை கட்டியதால் உறவுகளால் ஓரளவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தார். தொப்புள் கொடி உறவு தன் வம்சத்திற்கு தொப்புள் கொடிக்குரிய குழந்தைகளை கொடுப்பதை எம் சமூகம் இன்னமும் மறுத்துக் கொண்டு தான் இருக்கின்றது.

தமிழ்நாட்டு மதிய விருந்தென்பது வித்தியாசமானது போலும். மச்சம் (அசைவம்) என்றால் முழுக்க முழுக்க மச்சம் தான். எனக்காக வஞ்சிர மீன் பொரியல், காடை பறவை முழுப் பொரியல், கோழிப் பொரியல், கோழி இறைச்சி, முட்டை, மட்டன் பிரியாணி, சிக்கன் புரியாணி என்று விருந்து களை கட்டியது. சாப்பாட்டு ராமனான என்னாலேயே முழுமையாக சாப்பிட முடியாதளாவுக்கு எக்கச்சக்க உணவு. திரும்பி பார்க்கும் போது என் மகன் எல்லாவற்றையும் ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு இருந்தான்.

அவர்களுடன் விடை பெற்று வீடு வந்த பின் வாய் நம நமக்குது.

தமிழ்நாட்டுக்கு வந்த பின் இன்னும் உள்ளூர் சரக்கை அடிக்கவில்லை என்று மனசு அழுதது. முக்கியமாக டாஸ்மாஸ் கடை ஒன்றுக்காகவது செல்ல வேண்டும் என்று நான் ஆசைப்பட நரேஸ் அண்ணார் இரவு கூட்டிக் கொண்டு சென்றார். அங்கு ஒரு உள்ளூர் பிரண்டி வாங்கிக் கொண்டு வந்து இரவு அடிச்சுப் பார்த்தோம். குறை சொல்ல ஒன்றும் இல்லை, நன்றாக இருந்தது.

2l8c08l.jpg

(டாஸ்மாஸ் இற்கு முன்பாக)

 

செப் 25.

சென்னைக்கு பயணம் திட்டமிடும் போதே நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தேன். ஆனால் சரியான புத்தகக் கடை எதுவென தெரியவில்லை.

காலச்சுவடு வெளியீடுகளை வாங்குவம் என்று அவர்கள் அலுவலகம் எங்கிருக்கு என்று அவர்களின் இணையத்தளம் சென்று முகவரி பார்த்து அங்கு போனால் அந்த அலுவலகத்தினை காலி பண்ணிப் போய் கன நாளாகுது என்று சொன்னார்கள்.  பிறகு ஓவ்வொருவரிடமும் கேட்டு கேட்டு அவர்களின் தற்போதைய விலாசம் கண்டு பிடிச்சு போக வெறுத்தே போய்விட்டது. புத்தகங்கள் பற்றிய எந்த அறிவும் இல்லாத ஒரு பெண் அங்கிருந்தார்.

பின் அங்கிருந்து குமரன் பதிப்பகம் செல்கின்றேன். சென்னை மக்கள் அன்பானவர்கள் என்று காட்டிய இன்னொரு நிகழ்வு அங்கு நடக்கின்றது. நான் கேட்ட புத்தகங்கள் இல்லை என்று அங்கிருந்தவர் சொல்கின்றார். சொன்னது மட்டுமன்று New book land இற்கு call பண்ணி கேட்கின்றார். ஆனால் எமக்கு அந்த புத்தகக் கடை எங்கிருக்கின்றது என்பது தெரியாது எங்கின்றோம். அவர் குமரன் பதிப்பகத்தை பூட்டி விட்டு எம்முடன்  வெளியே வந்து ஆட்டோ ஒன்றை தானே பிடித்து தந்து சாரதிக்கு விலாட்சத்தையும் சொல்லி அனுப்புகின்றார்

சென்னை மக்கள் அன்பானவர்கள்!

 

New book land இல் புத்தகங்கள் வாங்கிய பின் வீடு செல்கின்றோம். இரவு அக்கா குடும்பத்துடன் நேரம் போகின்றது,

 

289xvg0.jpg

(வாங்கிய புத்தகங்களின் ஒரு தொகுதி)

செப் 26:

காலையில் என் சித்தப்பா கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்திருக்கின்றார் என அறிய முடிகின்றது.

பகலில் மீண்டும் சுலோச்சனாவிடம் போய் பெருங்கால் நண்டு வாங்கி சமைத்து உண்டபின் சித்தப்பாவை கண்டு கன காலம் என்பதால் மாலை 5 மணிக்கு அவரை காண செல்கின்றோம். இரவு 10 மணிக்கு விமான நிலையத்தில் நிற்க வேண்டும்,

இடையில் அவர் இருக்கும் இடத்துக்கு செல்ல தாமதமாகின்றது. மிக மோசமான வாகன நெரிசல். நரேஸ் அண்ணா வழியில் ஒரு ஸ்கூட்டரில் போனவரிடம் விலாசம் சொல்லி எப்படி சீக்கிரமாக போவது என்று கேட்க அந்த மனுசர் “நான் காட்டுறன்” என்று சொல்லி எம் காருக்கு முன்னால் சென்று வழி காட்டுகின்றார். யார் என்றே தெரியாத எமக்காக நேரம் மினக்கெட்டு வழி காட்டும் இந்த அன்பான மனுசர் யார் என்றே தெரியாது

சித்தப்பாவை சந்தித்து வீட்டை வந்து மீண்டும் விமான நிலையம் செல்கின்றோம். நேரம் மிகக் குறைவாக இருக்கின்றது.

அக்காவின் கண்களை பார்க்கும் துணிச்சல் இல்லாமல் போய்ட்டு வருகின்றோம் என சொல்லி வரும் கண்ணீரை காட்டாமல் விடை பெறுகின்றோம்.

இந்த நாட்களில் என் மகன் அக்காவின் குடும்பத்துடன் இனி இல்லை அளவுக்கு கலந்து விட்டான். கனடா தாண்டி இங்கேயும் ஒரு கங்கை இருக்கும் என்பதை புரிந்து கொண்டான்

 

காலம் 6 மாதங்களுக்குள் மீண்டும் சந்திக்க வைக்கின்றது என்பதை அறியாமல் இன்னும் 2 வருடங்களில் சந்திப்பம் என்று சொல்லி விடை பெறுகின்றேன்.

 

பயணம் 1 நிறைவடைகின்றது

பயணம் 2 இனி தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

2l8c08l.jpg

அடப்  பாவி.... இந்த பயணத்தில் "டாஸ்மாக்கையும்" விட்டு வைக்கவில்லையா? :grin:
தள்ளு முள்ளு படாமல்.... சரக்கு, வாங்க  கூடியதாக இருந்ததா? :D:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎/‎05‎/‎2017 at 2:52 AM, நிழலி said:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2l8c08l.jpg

 

 

குடிக்கேக்கு முதலே குடிகாரன் மாதிரி தான் இருக்கு:rolleyes:...உங்கட கதையை தொடருங்ககோ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பயணம் 2 இனி தொடரும்

 

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நிழலி,தொடர் கட்டுரை மிகவும் நன்றாக போகின்றது.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 month later...

மாசம் இரண்டு முடியப்போகுது,  மனிசன் எழுதி முடிச்சிருக்கும் எண்டு வந்து பார்த்தா போட்டது போட்டபடியே கிடக்குது. இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.