Jump to content

பட்டினத்தார் பாடல்


Recommended Posts

பட்டினத்தார் பாடல்

பட்டினத்தார் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் மற்ற பக்கத்தில் வன்னிமைந்தனின் காம சாத்திரத்தை பாத்த பொழுது தான் வாழ்வின் உண்மையை பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய பட்டினத்தார் பாடலை எழுத யோசித்தேன். பட்டினத்தார் தன்னுடைய பாடல்களில் பெண்களை அதிகமாகவே போட்டு தாக்கியிருக்கிறார் சில நேரம் அவரது தனிப்பட்ட பாதிப்புகள் காரணமாக இருந்திருக்கலாம். அனாலும் அவரது பல பாடல்கள் என்னை கவர்ந்தவை அதில் முக்கியமானதொன்றை ஒரு மனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விபரிக்கும் ஒரு பாடலை படிக்க இலகுவாக்கி இங்கு தருகிறேன்.

1)தனதன தான தனதன தான

தந்ததனந்தன தந்ததனந்தன

தனதன தான தனதன தான

தந்ததனந்தன தந்ததனந்தன

ஒருமடமாது ஒருவனுமாகி இன்பசுகந்தரும்

அன்பு பொருந்தி உணர்வு கலங்க ஒழுகிய விந்து

ஊறு சுரோணிதம் மீது கலந்து..

பொருள்.....அறியாமை குணமுடைய ஒரு ஆணும் பெண்ணும் தன்னந்தனியாய் இன்னபசுகத்தில் இணைந்து அறிவு மயங்கி ஆண்வழியாக வெளிவந்த சுக்கிலம் பெண்வழியாக வந்த சுரோணிதத்தில் கலந்து

2)பனியிலோர் பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்து

பகுந்து திரண்டு பதுவமரும்பு கமடமிதென்று

பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்று

பொருள்.....இரவரிலும் இருந்து வெளியேறிய உயிரணுக்கள் பனித்துளியில் ஒரு பாதியளவேயான சிறு துளி பெண்ணின் கருவிற் பாய்ந்து திரண்ட தாமரை மொட்டை போலவும் ஆமையை போல கண் உடல் வாய் காது கால் கை என்று வடிவம் பெற்று

3)உருவமுமாகி உயிர் வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்

நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில் விழுந்து

யோகமும் வாரமும் நாளும் அறிந்து..

பொருள்....வடிவம் பெற்று குழந்தை வளர்வதற்கு பத்து மாதம் நிறைந்து அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து வெளிவந்து பூமியில் விழ அதன் உறவினர்கள் நாள் கிழைமை பார்த்து சோதிடம் பாத்துபெயர் வைத்து

4)மகளிர்கள் சேனை தரவணையாடை மண்பட உந்திய

கைந்தகவிழ்ந்து மட மயில் கொங்கை அமுதமருந்தி

ஓர் அறிவு ஈரறிவாகி வளர்ந்து

பொருள்...பெண்கள் கூட்டம் ஏணையில் கிடத்தி உறங்க செய்ய பூமியில்தன் உடல் படும்படி தவழ்ந்தும் கவிழ்ந்தும் தாயாரின் முலை பாலை குடித்து ஒரு அறிவு இரண்டறிவாகபெருகுகிறது

தொடரும்............ ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி சார் உங்கள் ஆன்மீகப்பணி தொடரட்டும் தொடரட்டும். ஏதும் வேண்டுதலா

பட்டினத்தார் தன்னுடைய பாடல்களில் பெண்களை அதிகமாகவே போட்டு தாக்கியிருக்கிறார்

அதனால் தான் நீங்களும் பட்டினத்தார் பாடல்களை களம் இறக்குவதில் மும்முரமா செயற்படுறிங்களா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோய் சாத்திரி பட்டை அடிக்கிற வயசில பட்டினத்தார் பாட்டு உமக்கு ஏன் ஓய்

:D:D :angry:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யோய் சாத்திரி பட்டை அடிக்கிற வயசில பட்டினத்தார் பாட்டு உமக்கு ஏன் ஓய்

:lol::lol: :angry:

ஓய் புத்தா ஒட்டுமொத்தமாய் காய்ஞ்சு போய் இருக்கிற உமக்கு இதைப் பத்தி ஏதும் தெரியுமே?பேசாமல் போத்து மூடிக்கொண்டு கிடவும். :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரே!தொடருங்கள்.வாழ்த்துக்களுடன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் புத்தா ஒட்டுமொத்தமாய் காய்ஞ்சு போய் இருக்கிற உமக்கு இதைப் பத்தி ஏதும் தெரியுமே?பேசாமல் போத்து மூடிக்கொண்டு கிடவும். :angry:

2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த புத்தன் காய்ந்து போனவன் 2000 ஆம் ஆண்டு வாழுற புத்தன் கசிப்பு காய்ச்சுற புத்தன்............பு.மு(புத்தனுக்கு முன்)

பு.பி(புத்தனுக்கு பின்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த புத்தன் காய்ந்து போனவன் 2000 ஆம் ஆண்டு வாழுற புத்தன் கசிப்பு காய்ச்சுற புத்தன்............பு.மு(புத்தனுக்கு முன்)

பு.பி(புத்தனுக்கு பின்)

இந்தக்கலிகாலத்திலை இதென்னடா புது நாசமறுப்பாய் கிடக்கு?இனி உங்கை எல்லாம் கிளிஞ்சமாதிரித்தான்.

Link to comment
Share on other sites

2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த புத்தன் காய்ந்து போனவன் 2000 ஆம் ஆண்டு வாழுற புத்தன் கசிப்பு காய்ச்சுற புத்தன்............பு.மு(புத்தனுக்கு முன்)

பு.பி(புத்தனுக்கு பின்)

இந்தக்கலிகாலத்திலை இதென்னடா புது நாசமறுப்பாய் கிடக்கு?இனி உங்கை எல்லாம் கிளிஞ்சமாதிரித்தான்.

:rolleyes::rolleyes::):):o:D:D:D:D:D:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கலிகாலத்திலை இதென்னடா புது நாசமறுப்பாய் கிடக்கு?இனி உங்கை எல்லாம் கிளிஞ்சமாதிரித்தான்.

ஏற்கனவே கிழிந்து கிடக்கு எனி என்ன கிழிய கிடக்குது அது சரி மாப்பு என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு............

:angry: :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.