Jump to content

தலைவரை அகற்ற நினைத்த ஜெனரலை, கொழும்பில் வைத்து அகற்றிய தலைவர்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1988ம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச ஆட்சியை கைப்பற்றியதும், அவருக்கு பக்கத்துணையாக இருந்த இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுருந்த லெப். ஜெனரல். ரஞ்சன் விஜையரட்னாவை பாதுகாப்பு அமைச்சராக நியமித்தார். அதற்கு முக்கிய காரணம் அந்த நேரத்தில் கொழும்பில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு JVP என்னும் கெரிலா அமைப்பு, சிங்கள இளைஞர்களைத் திரட்டி ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்தது. வடக்கில் தமிழர்களாலும், கிழக்கில் சிங்கள இளைஞர்களாலும், சிங்கள அரசு நெருக்கடியைச் சந்தித்திருந்தது.

அந்த நேரத்தில் இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தமையால், புலிகளின் கவனம் அதிலேயே இருந்தது. அதனால் பிரேமதாசவின் கவனம் JVP இன் பக்கம் திரும்பியது. ஆட்சி அமைத்ததும் ரஞ்சன் விஜையரட்னாவின் பனிப்பின் பெயரில் “கொலகொட்டி” (பச்சைப்புலிகள்) என்னும் கொலைப்படையொன்று உருவாக்கப் பட்டது.

அந்தப் படையணி JVP இன் உறுப்பினர்களை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தை கூட விட்டுவைக்க வில்லை. 1988,1989 காலப்பகுதிகளில் வெள்ளைவானில் வரும் இந்த படையணியினரால் பெண்கள்,குழந்தைகள் என்னும் பாகுபாடின்றி கொன்று குவித்து வீதியோரங்களில் எரியூட்டப் பட்டனர். பலநூறு பேர் சுட்டுக்கொன்றபின் களனியாற்றில் வீசப்பட்டனர்.

அன்றைய நேரத்தில் இவர்களால் சிங்கள மக்களின் இரத்தம் ஆறாக ஓடியது. இவர்களின் சொந்த மக்களுக்கான நரவேட்டையின் பின் JVP இன் கிளர்ச்சி துப்பாக்கி முனையால் அடக்கப் பட்டது. இந்த வெற்றி இவர்களுக்கு ஒரு வித உச்சாகத்தை கொடுத்திருந்தது. அதனால் 1990களில் புலிகளுடன் சண்டையை ஆரம்பிக்கும் நோக்கில் அத்துமீறல்களை செய்து சண்டையை ஆரம்பித்தனர்.

இந்த காலப்பகுதியில் யாழில் வைத்து இராணுவ உளவாளி ஒருவனை, புலிகளின் உளவுத்துறையை சேர்ந்தவர்களால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டபோது திடுக்கிடும் தகவல் ஒன்று அவனிடம் இருந்து பெறப்பட்டது. அதாவது அந்த காலகட்டத்தில் அண்ணை (தலைவர்) கொக்குவில் பகுதியில் இருந்தார். அப்போதெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் அண்ணி அவர்கள் (மதிவதனி) நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்றுவருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த தகவலைப் எப்படியோ பெற்றுவிட்ட சிங்கள உளவுத்துறையினர், ரஞ்சன் விஜையரட்னாவின் நேரடி ஆலோசனையின் பேரில் தமிழ் உளவாளி ஒருவனை தயார் படுத்தி அனுப்பியிருந்தனர்.

அவன் மூலமாக அண்ணியை பின் தொடர்ந்து, அண்ணி மூலமாக, அண்ணையின் இருப்பிடத்தை இனம் கண்டு பெரும் விமானத்தாக்குதல் மூலம் அவரை அகற்றும் முடிவை எடுத்து தமது உளவாளிகளை முடுக்கி விட்டிருந்தனர். அந்த உளவாளிகளில் ஒருவனே கைது செய்யப்பட்டு புலிகளால் தகவல் பெறப்பட்டது.

புலிகளின் உளவுத்துறையினர், களத்தில் இறக்கி விடப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக அந்த நடவடிக்கைக்காகயில் ஈடு பட்டிருந்த இராணுவ உளவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். தமிழரின் தலைமையை அழிக்கும் முடிவை, சிங்களம் எடுத்ததை புலிகளால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களால் இது போன்ற இன்னொரு முயற்சி எடுப்பதற்கு முன்னர், அவர்கள் தலைமையை அகற்றும் முடிவை புலிகள் எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து புலிகளின் உளவுச்செயற்ப்பாடும் வேகம் பெற்றது. சிங்கள தலைநகரில் இந்த சதியின் மூளையாக செயல்ப்பட்ட ரஞ்சன் விஜையரட்னாவை குறிவைத்து அலைந்து திரிந்தனர் புலிகள். ஒருவாறு இலக்கு இனம் காணப்பட்டதும், அவரது நடமாட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டது.

குறித்த நேரத்தில் காலை தனது அலுவலகத்திற்கு சென்றுவிட்டு, குழப்பமான நேரங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இதனால் காலை நேரத்தில் தாக்குதல் நடத்துவதென தாக்குதல் அணியினர் தெரிவு செய்தனர். கிழமை நாட்களின் சன நடமாட்டங்கள் அதிகம் என்பதால் சனிக்கிழமையை தெரிவு செய்த புலிகள் அதன்படி தாக்குதலுக்கான இடத்தையும் தெரிவு செய்தபின் காரொன்றில் குண்டைப் பொருத்தி வெடிக்க வைப்பதென தீர்மானித்தனர்.

புலிகள் வாகனத்தில் ஒரு பக்கத்தில் முழு வெடிமருந்தையும் நிரப்பி இருந்தனர். ஏனெனில் அந்தப் பக்கத்தை இலக்கு கடந்து செல்லும் போது மிகப் பெரும் சேதத்தை அது உண்டுபண்ணும் என்பதை புலிகள் கணித்திருந்தனர். திட்டத்தின் படி கட்சிதமாக எல்லாம் தயார்நிலையில் இருந்தது.

ஆம், அந்த நாளும் வந்தது 02/03/1991அன்று காலை 8மணிபோல் குண்டு பொருத்திய காரில் அந்த கரும்புலி வீரனும் அவனை வழியனுப்புவதற்கு, குறிப்பிட்ட தூரம் வரை வரதனும் (பிறிதொரு சம்பவத்தில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்து விட்டார் ) சென்றிருந்தார். குறிப்பிட்ட தூரத்தில் வரதன் இறங்கி சென்றுவிட அந்த கரும்புலி வீரன் தனது இலக்கிற்காக கொழும்பு 5, போலீஸ் பார்க் அருகே காத்திருந்தான்.

அவன் எதிர் பார்த்தது போல தனது குண்டு துளைக்காத பாதுகாப்பு கூடிய பென்ஸ் காரில், சிறப்பு பாதுக்கப்பு படைவீரர்கள் லான்றோவர் வாகனத்தில் பின் தொடர வந்து கொண்டிருந்தனர். வீதியோரத்தில் இவர்களுக்காக காத்திருந்த குண்டு பொருத்தப் பட்ட கார் காலை 8.30மணி போல் வெடித்துச் சிதறியது. சிங்களத்தலைநகரே அதிர்ந்து போனது.

துல்லியமான தாக்குதல். ரஞ்சன் விஜையரட்னாவும், அவரது பாதுகாப்பிற்கு வந்த ஐந்து அதிரடிப்படை வீரரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். அவரது இறப்பின் பின், பிரேமதாச அரசு “ஜெனரலாக. ” பதவி உயர்வு வழங்கி அவரை கெளரவித்திருந்தது.

தமிழர் மட்டுமல்லாது சிங்களவரும் இந்த வெற்றியை கொண்டாடி இருப்பார். தலைவர் அடிக்கடி சொல்லு ஒரு கருத்து “முத்துபவன் வெல்வான் ” அன்று அது உண்மையானது. துன்பத்தை தரமுயன்றவனுக்கே, தமிழரால் அந்த துன்பம் வழங்கப் பட்டது. அவர்கள் செய்ய நினைத்ததை புலிகள் கொழும்பில் செய்தனர். புலனாய்விலும் புலிகள் உச்சம் பெற்றனர்….
நினைவுகளுடன் துரோணர்..!!

http://www.tamilsvoice.com

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.