Jump to content

அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்?


Recommended Posts

1
அரை மனிதர்களாக இன்னும்
எத்தனை காலம் வாழப்போகின்றோம்?

அனைத்துலகப்பெண்கள்நாள்
ஆண்டுதோறும் சிறப்பாக,
உலகெங்கும் கொண்டாடப்பட,
அழுவதே நாளாந்த வாழ்வாகிப்போன
அவலம் சுமக்கும் பெண்கள் உலகம் 
ஒன்று உள்ளது என்பது
எத்தனை பேருக்கு தெரியும்? 

உறவுகள் தொலைத்தவர் துயரை
எத்தனைபேரால் புரிந்திட முடியும்?
இழப்புக்கள் தரும் வலிகளோடு
அனுதினமும் போராடி போராடி,
அழுவதைத்தவிர வழியே இல்லாமல்
அல்லாடி அல்லாடி அவலம் சுமக்கும்
எங்கள் தாயகப்பெண்கள் நிலை
எத்தனை பேருக்கு தெரியும்?

வாழ இடமின்றி தத்தளித்து தவித்து
உயிரே போனாலும் சரி 
எம் நிலம் மீட்க
எமக்காக நாமே போராடுவோம் என
தனித்து நின்று போராடும்
எங்கள் மண்ணின் பெண்கள்
அன்றாடம் படும் அவலங்கள்
எத்தனை பேரால் உணரப்படும்.
உயிர்ப்பயம் இருந்த போர்க்காலங்களில்
உரிமையுள்ளவர்களாக தலைநிமிர்ந்து
துணிவுடன் செயற்பட்ட எம் பெண்கள்
கூனிக்குறுகி வாழும் கொடுமைக்குள்
சிக்குண்டு தவிக்கும் அவலநிலை இன்று.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி
அனுதினமும் கண்ணீருடன் போராடும் 
எம் பெண்களுக்கு நீதி கிடைக்காமல் 
நீளும் பயணங்கள் தொடர்கின்றன
சொந்த நிலத்தில் வாழ முடியாமல்
தங்கள் நிலத்துக்காக தாமே போராடும்
முடிவுடன் அறப்போராட்டங்கள் தொடர்கின்றன

நாளும் நாளும் போராடும் நிலையில்
அன்றாட வாழ்வினை நடத்திட வழியில்லை
ஆனாலும் அயராது போராடும் அவலநிலை
யாருக்கு புரியும் இவர்கள் உள்ளக்குமுறல்?
இவர்கள் மனவலிகளை எவரால் உணரமுடியும்
 

அச்சமே வாழ்வாக ஆதரவில்லா சூழலில்
நித்தம் நடுநடுங்கி வாழும் அவலம் எம்மண்ணில்.
எத்திக்கிலிருந்து எவன் வந்து தங்கள் அன்பு
பிள்ளைகளை பிடித்து செல்வானோ என
தத்தளிக்கும் சோகம் நாளும் தொடரும் கொடுமை.

பள்ளிக்கு சென்று பாடம் படிக்க விரும்பும்
தங்கள் பிள்ளைகளின் எண்ணம் ஈடேற
வழியே இல்லையா என அன்னையர்கள்
ஏங்கி தவிக்கும் அவலம்.

உறவுகளை பறிகொடுத்துவிட்டு
உள்ளம் உடைந்து உருக்குலைந்து
நடைப்பிணமாக வாழும் கொடுமை.
இதுதான் எம் மண்ணில் இன்றைய
மக்களின்  அவல வாழ்நிலை.

புதினத்தாள்களிலும் இணையத்தளங்களிலும்
வெற்று சேதிகளாக இவற்றை படித்துவிட்டு
அடுத்த பக்கத்துக்கு நகரும் 
அரை மனிதர்களாக இன்னும்
எத்தனை காலம் வாழப்போகின்றோம்?

உலகே உனக்கு கண்ணில்லையா
என கேள்விகள் கேட்க எமக்கு தெரிகின்றது.
உணரவேண்டியவர்கள்,புரியவேண்டியவர்கள்
எமக்குள் எண்ணில்லாதோர் என்பதை
எண்ணிட ஏன் மறந்தோம் நாம்?

பட்டால்தான் வலிகள் புரியும் என்பது
மானிடநேயம் புரியாதவர் சொல்லும் வார்த்தை.
சின்னத்திரைகளிலும்,வெள்ளித்திரைகளிலும்
அழுது வடிக்கும் நடிகர்களை பார்த்து
கண்ணீர் சொரிய முடிகின்ற 
எம்மவர்கள் பலருக்கு
உண்மை மனிதர்களின் துயரம்
எப்படி புரியாமல் போனது? 

உறவுகளின் இழப்பின் வலிகளை 
உணர முயல்வோம்.
தவித்து துடிக்கும் அவர்களுக்கு
தோள்கொடுத்து துணைநின்று
வலிமை அளிக்க நாம் உள்ளோம் என
வாக்கு கொடுப்போம்.
அவர்கள் வாழ்வின் விடிவுக்காக
உறுதியுடன் உழைப்போம் என
உரத்து சொல்வோம்,செயற்படுவோம்

மந்தாகினி

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி.....மந்தாகினி!

வலிகள்...இரணங்கள், இரத்தங்கள், பிரிவுகள், ஏமாற்றங்கள். வன்புணர்வுகள்.....அவலங்கள் என எமது வாழ்க்கைக் காலம் முழுவதும்.கழிந்து விடுமோ  என்ற பயம் தான் இப்போது பெரிதாக உள்ளது!

எமது கிழக்கு வெளிக்கப் போகின்ற வேளைகளிலெல்லாம்...எங்கிருந்தோ வருகின்ற வால் வெள்ளியைப் போல...அனுமானின் வாலாக..எமக்கிடையே ஒரு தேசம் வந்து குறுக்கே படுத்துக் கொள்ளும்!

எல்லாவற்றையும் குழப்பியடித்து விட்டு...மீண்டும் எமது கிழக்கு வெளிக்கும் வரை....தனது வாலை மீண்டும் சுருட்டிக் கொள்ளும்!

குடி மக்களுக்கு...முறையான கழிப்பிட வசதிகள் கூட இல்லை..!

ஆனால் சந்திரனையும், செவ்வாயையும்...நாற வைக்க....இப்போதே ஆயத்தங்கள் நடக்கின்றது!

ஒரு நாள் விடியும் எனும் நம்பிக்கை சுமந்து...பயணிப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, manthahini said:

1
அரை மனிதர்களாக இன்னும்
எத்தனை காலம் வாழப்போகின்றோம்?

------

உறவுகளை பறிகொடுத்துவிட்டு
உள்ளம் உடைந்து உருக்குலைந்து
நடைப்பிணமாக வாழும் கொடுமை.
இதுதான் எம் மண்ணில் இன்றைய
மக்களின்  அவல வாழ்நிலை.

புதினத்தாள்களிலும் இணையத்தளங்களிலும்
வெற்று சேதிகளாக இவற்றை படித்துவிட்டு
அடுத்த பக்கத்துக்கு நகரும் 
அரை மனிதர்களாக இன்னும்
எத்தனை காலம் வாழப்போகின்றோம்?

உலகே உனக்கு கண்ணில்லையா
என கேள்விகள் கேட்க எமக்கு தெரிகின்றது.
உணரவேண்டியவர்கள்,புரியவேண்டியவர்கள்
எமக்குள் எண்ணில்லாதோர் என்பதை
எண்ணிட ஏன் மறந்தோம் நாம்?

பட்டால்தான் வலிகள் புரியும் என்பது
மானிடநேயம் புரியாதவர் சொல்லும் வார்த்தை.
சின்னத்திரைகளிலும்,வெள்ளித்திரைகளிலும்
அழுது வடிக்கும் நடிகர்களை பார்த்து
கண்ணீர் சொரிய முடிகின்ற 
எம்மவர்கள் பலருக்கு
உண்மை மனிதர்களின் துயரம்
எப்படி புரியாமல் போனது? 

உறவுகளின் இழப்பின் வலிகளை 
உணர முயல்வோம்.
தவித்து துடிக்கும் அவர்களுக்கு
தோள்கொடுத்து துணைநின்று
வலிமை அளிக்க நாம் உள்ளோம் என
வாக்கு கொடுப்போம்.
அவர்கள் வாழ்வின் விடிவுக்காக
உறுதியுடன் உழைப்போம் என
உரத்து சொல்வோம்,செயற்படுவோம்

மந்தாகினி.

நியாயமான ஆதங்கம்.... மந்தாகினி.

Link to comment
Share on other sites

5 hours ago, புங்கையூரன் said:

கவிதைக்கு நன்றி.....மந்தாகினி!

வலிகள்...இரணங்கள், இரத்தங்கள், பிரிவுகள், ஏமாற்றங்கள். வன்புணர்வுகள்.....அவலங்கள் என எமது வாழ்க்கைக் காலம் முழுவதும்.கழிந்து விடுமோ  என்ற பயம் தான் இப்போது பெரிதாக உள்ளது!

எமது கிழக்கு வெளிக்கப் போகின்ற வேளைகளிலெல்லாம்...எங்கிருந்தோ வருகின்ற வால் வெள்ளியைப் போல...அனுமானின் வாலாக..எமக்கிடையே ஒரு தேசம் வந்து குறுக்கே படுத்துக் கொள்ளும்!

எல்லாவற்றையும் குழப்பியடித்து விட்டு...மீண்டும் எமது கிழக்கு வெளிக்கும் வரை....தனது வாலை மீண்டும் சுருட்டிக் கொள்ளும்!

குடி மக்களுக்கு...முறையான கழிப்பிட வசதிகள் கூட இல்லை..!

ஆனால் சந்திரனையும், செவ்வாயையும்...நாற வைக்க....இப்போதே ஆயத்தங்கள் நடக்கின்றது!

ஒரு நாள் விடியும் எனும் நம்பிக்கை சுமந்து...பயணிப்போம்!

 

உண்மை. எங்கள் மக்கள் அனுபவிக்கும் துயரம் ஒன்றல்ல.இரண்டல்ல. ஓராயிரம். பொருளாதாரப்பிரச்சன.சமூகப்பரச்சனை.உடல்வலிகள்>உளவலிகள். இப்படி எத்தனையோ. இதற்கெல்லாம் தீர்வு ஒன்றுதான்.

 

5 hours ago, தமிழ் சிறி said:

நியாயமான ஆதங்கம்.... மந்தாகினி.

ஆம். எமது உறவுகளின் வலிகளை எல்லோரும் புரிந்து கொள்ளவில்லையே என்ற வேதனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளும் நாளும் போராடும் நிலையில்
அன்றாட வாழ்வினை நடத்திட வழியில்லை
ஆனாலும் அயராது போராடும் அவலநிலை
யாருக்கு புரியும் இவர்கள் உள்ளக்குமுறல்?
இவர்கள் மனவலிகளை எவரால் உணரமுடியும்

அன்னையர் தினத்தில் அழகான கவிதை ....! நன்றி சகோதரி .....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலி மிகுந்த வலிகள்  சூப்பர் 

Link to comment
Share on other sites

On 3/8/2017 at 3:43 AM, தமிழ் சிறி said:

நியாயமான ஆதங்கம்.... மந்தாகினி.

 

23 hours ago, suvy said:

நாளும் நாளும் போராடும் நிலையில்
அன்றாட வாழ்வினை நடத்திட வழியில்லை
ஆனாலும் அயராது போராடும் அவலநிலை
யாருக்கு புரியும் இவர்கள் உள்ளக்குமுறல்?
இவர்கள் மனவலிகளை எவரால் உணரமுடியும்

அன்னையர் தினத்தில் அழகான கவிதை ....! நன்றி சகோதரி .....!

வேதனைகள் இப்படி எழுத வைக்கின்றது. நன்றி

22 hours ago, முனிவர் ஜீ said:

வலி மிகுந்த வலிகள்  சூப்பர் 

வலிகளின் வரிகள். நன்றி

19 hours ago, Kavallur Kanmani said:

வலி சுமந்த கவிதை வாழ்த்துக்கள்

 

19 hours ago, Kavallur Kanmani said:

வலி சுமந்த கவிதை வாழ்த்துக்கள்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மந்தாகினி வாழ்வு என்பது வலியாகச் சபிக்கப்பட்டிருக்கிறது. நல்ல தீர்வுக்காக ஏங்கிறது மனம். மானுட நேசிப்பு என்பது பொய்மைகளால் சூழப்பட்டுள்ளது. அதனைத் தேடினால் விரக்திதான் மிஞ்சும். தொடர்ந்து எழுதுங்கள் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் நம்பிக்கைதானே எல்லாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

புதினத்தாள்களிலும் இணையத்தளங்களிலும்
வெற்று சேதிகளாக இவற்றை படித்துவிட்டு
அடுத்த பக்கத்துக்கு நகரும் 
அரை மனிதர்களாக இன்னும்
எத்தனை காலம் வாழப்போகின்றோம்?

எட்டு வருடங்களாக வெறும் சேதிகளாகப் படித்து அப்பால் நகர்ந்துகொண்டுதான் பலர் வாழ்கின்றார்கள்.

தற்போது தமிழ்நாட்டு அரசியலும், சினிமாக்காரர்களின் ருவிற்றர் திருகுதாளங்களும் சாதாரணர்களான எங்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது.

அத்தோடு தமிழ் அரசியல் தலைமைகளும் சுயநலத்துடனே செயற்படுகின்றார்கள் என்பதை கேப்பாபுலவு காணி விடுவிப்பில் நடந்துகொண்ட முறை காட்டுகின்றது.

விரைவில் கால் மனிதர்களாகிப் பின்னர் மனிதமற்ற இயந்திரங்களாக மாறவும் கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்.என்றோ ஒரு நாள் விடிவு வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு தலைவன் வரவுக்காக காத்திருப்போம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.