Jump to content

இது ஒரு பொன் மாலைப்பொழுது…..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பொன் மாலைப்பொழுது..

 

என் முன் ஆளுயர நிலைக்கண்ணாடி

உற்றுப் பாா்க்கிறேன்

இது நானா?

இதில் தொியும் விம்பம் என்னதா?

அடடா, காலம் என்னையும்

எனது இளமையையும்

எத்திப் பறித்து விட்டதா?

தினமும் பாா்க்கும் கண்ணாடிதான்

ஆனாலும் இன்றுபோல்

பாா்க்கத் தவறி விட்டேனா?

மீண்டும் கண்களை இடுக்கி

நிதானமாக உற்றுப் பாா்க்கிறேன்

சந்தேகமில்லை இது என் உருவம் தான்

முகத்தில் சுருக்கம் முடி அடியில்

வெண்மையின் நெருக்கம்

துடிப்பும் துள்ளலும் ஆடங்கிய

கை கால்களில் சிறிது நடுக்கம்

அத்தனை விடயங்களையும்

அட்டவணைப்படுத்தும் என்

ஞாபகச் சிறகுகளில்

சற்று தடுமாற்றம்

அடித்துப் பேசி அனைவரையும்

அடக்கும் திடமான சொற்களில்

கொஞ்சம் தயக்கம்

சிந்தையில் வந்து வந்து

சிதறிடும் நினைவுகளில் மாறாட்டம்

அரண்மனையில் சிம்மாசனம் இழந்த

என் சிங்காசனம் மட்டும் இன்னும்

இருப்பதாய் உள்ளுக்குள்

ஊஞ்சலாடும் மனவோட்டம்

இத்தனை விரைவில் கழியும்

இந்த வாழ்க்கைக்கா இத்தனை ஆா்ப்பாட்டம்

போட்டி, பொறாமை, எாிச்சல், கோவம்,

எத்தனை பேரைக் காயப்படுத்தும் கயமை

என் வீட்டு நிலைக்கண்ணாடி

எனக்கு வாழ்வைப் போதிக்கும் போதிமரம்

இப்போதெல்லாம் அடிக்கடி

கண்ணாடியைப் பாா்த்து என்னை

ஆசுவாசப் படுத்துவது வழக்கம்

ஒரு காலத்தில் இந்த நிலைக்கண்ணாடி முன்

என் விம்பம் எத்தனை அழகாய்

எனக்கே பிரமிப்பு ஊட்டுவதாய்

மனதில் கா்வம் ஏற்படுத்துவதாய்

அழகை மிகைப் படுத்துவதாய்…….

இன்று அதே கண்ணாடிதான்

காலத்தின் கோலத்தை அழித்து அழித்து

வரையும் ஓவியனாய் மாறி…………

வாழ்க்கை மேடையில்

எத்தனை கதாபாத்திரம்

எம் ஒவ்வொருவருக்கும்

அத்தனையும் கடந்து வந்த

அனுபவத்தின் முத்திரைதான் முதுமை

அது கூட அழகுதான்.

இளமை அழகு ரசிக்கத் தகுந்தது

முதுமை அழகு ஆராதிக்கத் தகுந்தது

எனவே எமக்கென்ன குறைச்சல்

வந்தால் வரட்டும் முதுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைக்கு ஒரு குட்டி

குமரிக்கு ஒரு குழந்தை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று நீங்கள் அழகாய் இருந்திருக்கிறீர்கள், அது எங்களுக்குத் தெரியாது . இந்தக் கவிதையைத் தந்த பின்தான் தெரிந்து கொண்டோம் உங்கள் மனத்தின் பேரழகையும் ......!  tw_blush:

பகிர்வுக்கு நன்றி சகோதரி.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்ட ஈழப்பிரியன் சுவி மற்றும் விருப்பிட்ட யாயினி சசிவர்ணம் தமிழ்சிறி ஆதவன் அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.....காவலூர் கண்மணி !

அழகு ....எங்குமே நிறைந்துள்ளது!

பார்ப்பவர்களின் மனப்பக்குவத்துக்கு ஏற்ப அது ...அளவில் மாறுபடும்!

நான் சொல்வதை நம்பாவிட்டால்...அடுத்தமுறை ஒரு கரப்பான் பூச்சியைச் சந்திக்கும் போது...ஐயோ என்று அலறிடிக்காமல்..ஒரு பத்து நிமிடம் அதன் நடவடிக்கைகளை அவதானியுங்கள்! அதன் சிறகின் அழகு உங்களுக்கு ..முதலில் தெரியும்! பின்னர் மெல்ல ...மெல்ல..அதன் அழகு தெரிய வரும்!

இயற்கையின் அழகு அதன் எல்லா நிலையிலும் உள்ளது!

பாலை நிலம் கூட அழகானது! 

அதே போல ...முதுமையும் அழகானது தான்!

indian-old-couple-walking-in-a-lawn-EFMA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான மனவோடட தைக்  காட்டும் கவிதை,  இப்பாடல் தங்களுக்கு சமர்ப்பணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

old%20woman%20mirror.png

ஓ.... என் அன்புத்தோழியே என்னைப்பற்றி இப்படிக் கவிதை எழுதியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கண்ணாடி என்னை எப்போதும் இப்படித்தான் காட்டும்.tw_blush:tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8.3.2017 at 4:37 PM, Kavallur Kanmani said:

---

அடித்துப் பேசி அனைவரையும்

அடக்கும் திடமான சொற்களில்

கொஞ்சம் தயக்கம்

சிந்தையில் வந்து வந்து

சிதறிடும் நினைவுகளில் மாறாட்டம்

அரண்மனையில் சிம்மாசனம் இழந்த

என் சிங்காசனம் மட்டும் இன்னும்

இருப்பதாய் உள்ளுக்குள்

ஊஞ்சலாடும் மனவோட்டம்

இத்தனை விரைவில் கழியும்

இந்த வாழ்க்கைக்கா இத்தனை ஆா்ப்பாட்டம்

-------

அனுபவத்தின் முத்திரைதான் முதுமை

அது கூட அழகுதான்.

இளமை அழகு ரசிக்கத் தகுந்தது

முதுமை அழகு ஆராதிக்கத் தகுந்தது

எனவே எமக்கென்ன குறைச்சல்

வந்தால் வரட்டும் முதுமை.

முதுமையை வெறுக்கும்.... அனைவருக்கும், 
அந்தக் கடைசி வரிகள்... நிச்சயம், புதிய தெம்பை தரும்.
கவிதை ஆக்கத்திற்கு, நன்றி கண்மணி அக்கா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வல்வை சகாறா said:

old%20woman%20mirror.png

ஓ.... என் அன்புத்தோழியே என்னைப்பற்றி இப்படிக் கவிதை எழுதியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கண்ணாடி என்னை எப்போதும் இப்படித்தான் காட்டும்.tw_blush:tw_blush:tw_blush:

சகோதரி....! உங்கள் வீட்டுக் கண்ணாடியும்  கூடவா பொய்  சொல்கின்றது....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதுமையை அழகாக சொல்லும் கவிதை.....தொடரட்டும் tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரப்பான் பூச்சியின் அழகை ரசிக்க ஆலோசனை கூறிய புங்கை பாடல் சமர்ப்பித்த நிலாமதி கண்ணாடியில் பொய் பார்த்து மெய்யென திருப்திப்படும் அன்புத்தோழி சகாரா கவிதையில் தெம்பை ரசித்த தமிழ்சிறி கவிதையை படித்து கருத்திட்ட குமாரசாமி அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் நான் கண்ணாடியைப் பார்க்கும்போது அப்பா முன்னுக்கு நின்று "ஆணவத்தையும் அகங்காரத்தையும் விட்டுவிடு" என்று சொல்வது மாதிரி இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயது ஏற ஏற அம்மா அப்பா ஒருவரும் சொல்லாமலே எல்லாம் அடங்கும். கவிதையை படித்தபின் கண்ணாடி பார்ப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டேனோ? ஒருவரும் பயப்பட வேணாம் வயது போனதுகள் இடைக்கிடை இப்படித்தான் அலட்டுங்கள். நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவத்தை கற்று  தருவது முதுமை   

அழகான வரிகள்  வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்ட முனிவர் ஜீ சுவைப்பிரியன்  மற்றும் விருப்பிட்ட நவீனன் வாத்தியார் சுவி அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் நீண்ட காலத்திற்கு பின் உங்கள் ஆக்கங்கள் பார்ப்பது மிக்க சந்தோசம்..முதுமையும் ஒரு விதத்தில் அழகிய காலம் தானே..முதுமை என்று நினைச்சால் தான் கவலை வரும்;இப்படி நினையுங்கள்:-இரண்டாம் தர நிலை குழந்தைப் பருவம் ஆரம்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் யாயினி. இரண்டாந்தர நிலை குழந்தைப் பருவம் ஆரம்பமே அசத்தலாக உள்ளது. போகப் போக பொறுத்திருந்து பார்ப்போம். கருத்திற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.