Jump to content

'வடமேல் மாகாண முதலமைச்சர் 8 வரையே படித்தார்'


Recommended Posts


'வடமேல் மாகாண முதலமைச்சர் 8 வரையே படித்தார்'
 
 

article_1489127842-ser.jpgஎஸ்.நிதர்ஸன்

இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளின் முதலமைச்சர்களிலும் கல்வித் தரம் கூடிய முதலமைச்சர் யார் என்பது உங்களுக்கு நன்குத் தெரியும். ஆனால் அவரது நிர்வாகத்தை விடவும் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த வடமேல் மாகாண முதலமைச்சரின் நிர்வாகம் சிறந்ததாக இருப்பதாக, வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

மாகாண சபையில், வியாழக்கிழமை (09) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் இருக்கின்றன. அந்ததந்த மாகாணங்களின் முதலமைச்சர்களுடன் ஒப்பிடுகின்றபோது கல்வித் தரம் அதிகமாக இருக்கின்ற முதலமைச்சர் யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், கல்லித் தரத்துடன் ஆளுமையும் இருக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறானதொரு நிலையில், வடமேல் மாகாண முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கிறேன். அவர் தரம் எட்டு வரையுமே கற்றிருக்கின்றார். ஆனால், அவர் தனது நிர்வாகத்தை சிறந்தமுறையில் நடத்தி வருகின்றார்.  அதற்கான ஆளுமை அவரிடம் இருக்கிறது. ஆகவே, நிர்வாகத்தை சிறந்த முறையில் நடத்துவதற்கு அறிவுடன் கூடிய ஆளுமை அவசியம்' என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/193001/-வடம-ல-ம-க-ண-ம-தலம-ச-சர-வர-ய-பட-த-த-ர-#sthash.eEHZ3F4e.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் மாறி கூவினீர்கள், கூவுவதே உங்கள் தொழில்,

Link to comment
Share on other sites

8ம் தரத்தை அதற்கு ஈடான தரம் சேரமுடிவதும், புகழ்வதும் ஒன்றும் புதுமையல்ல. :)

 

"கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார்" - குறள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவராசாவை திட்டுறதை விடுத்து அவர் சொல்றதில் உண்மையா? இல்லையா என்று ஆராயுங்க்ள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.