Jump to content

என்ன சொல்கின்றன வேலைகோரும் போராட்டங்கள்?


Recommended Posts


என்ன சொல்கின்றன வேலைகோரும் போராட்டங்கள்?
 

article_1489066526-unemp.jpg- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

வேலையற்ற பட்டதாரிகளால், வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள், அண்மைக்கால ஊடகப் பரப்பை ஆக்கிரமித்துள்ளன. பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தைத் தொடர்ச்சியாக மக்கள் பின்தொடர்ந்த நிலையில், அதே போராட்ட மனநிலையுடன் காணப்படும் நிலையில், இந்தப் போராட்டங்களும், முக்கியத்துவம் பெற்றுள்ளன.

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையென்பது, நாடு முழுவதும் காணப்படுகின்ற போதிலும், தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கிலும் கிழக்கிலும், இந்நிலைமை மோசமாகக் காணப்படுகிறது.

ஏராளமானோர், இவ்வாறு வேலைவாய்ப்புகளின்றிக் காணப்படுகின்றனர். அரசாங்கத்தாலும் அரசியல்வாதிகளாலும், பல்வேறு தடவைகளில் வேலைவாய்ப்புகள் பற்றிய வாக்குறுதிகள் வழங்கப்பட்ட இவர்கள், அவை நிறைவேற்றப்படாத நிலையில், போராட்டங்களில் குதித்துள்ளனர்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தால், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கடந்த 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், இப்போதும் தொடர்கிறது. இவர்களுக்கான தீர்வு கிடைக்காதா என்று, அவர்களைப் பற்றிய அக்கறையைக் கொண்டவர்கள் அங்கலாய்க்கின்றனர். இந்நிலையில், இப்பிரச்சினை பற்றி ஆழமாக ஆராய்வது பொருத்தமானது.

ஒரு நாட்டைப் பொறுத்தவரை, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய பொறுப்பு, அரசாங்கத்துக்கு உண்டு. நாட்டில் வேலைவாய்ப்புகளற்று ஏராளமானோர் இருக்கும் போது, நாட்டைச் சுமூகமாகக் கொண்டுநடத்த முடியாத நிலை ஏற்படும். குற்றங்களும் வன்முறைகளும் அதிகரிக்கும். இதனால் தான், வேலையற்றோர் சதவீதமென்பது, முக்கியமாகக் கருதப்படுகிறது.

நாட்டில் பணியாற்ற விரும்பும் ஊழியர்களில் 40 சதவீதமானோருக்கு வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலை காணப்படும் போது, அந்த நாடு, நிம்மதியான நாடாக இருக்க முடியாது. இலங்கையைப் பொறுத்தவரை, 5.1 சதவீதமே, வேலையின்மைப் பிரச்சினை காணப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவில் ஏறத்தாழ 5 சதவீதம், இது காணப்படுகிறது. இந்தியாவில் 8 சதவீதமாகவும் பாகிஸ்தானில் 6.5 சதவீதமாகவும் காணப்படுகிறது. இதனோடு ஒப்பிடும் போது. இலங்கையின் பிரச்சினை, ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையாகவே காணப்படுகிறது. ஆனால், இளைஞர்களிடத்தில் இந்தச் சதவீதம், சற்று அதிகமாக உள்ளமை, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டிய அரசாங்கத்தின் பொறுப்பை, எடுத்தியம்புகிறது.

ஆனால் இங்கு, வேலைவாய்ப்புகள் என்று கூறப்படும் போது, அரச வேலைகள் என்ற அர்த்தப்படுத்தல் எடுக்கப்படக்கூடாது. மாறாக, தனியார்துறை மூலமாகவும் இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட முடியும். அதற்கான சந்தையை அல்லது வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்தி, அதன்மூலம், படித்தவர்களை அதற்குள் உள்வாங்க முடியும்.

ஆனால் இலங்கையின் நிலைமை, எப்போதும் அரச உத்தியோகத்தை மையப்படுத்தியதாகவே இருந்துவந்திருக்கின்றது. ஏற்கெனவே வினைத்திறனற்றுக் காணப்படும் அரச துறையில், மேலும் பலரைச் சேர்ப்பதென்பது, நாட்டைப் பொறுத்தவரை, எந்த விதத்திலும் பயன்தராது.

மாறாக, மேலும் வினைத்திறனற்ற அரச பணித்துறையே ஏற்படும். இலங்கையின் காணப்படும் அரச பணிகளில் கணிசமானவை, காலை 10 மணிக்கு அலுவலகத்துக்குச் சென்று, தேநீர் அருந்திவிட்டு, 12 மணி தொடக்கம் 2 மணிவரை மதிய உணவு எடுப்பதற்காகச் செலவிட்டு, பின்னர் 5 மணிக்கு வீடு செல்லும் நிலைமையாக உள்ளது என்பது, வருந்தத்தக்கது. 

அண்மைக்காலத்தில் இந்நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், இந்நிலைமை, திருப்திகரமானதாக இல்லை என்பதே உண்மை.

இந்த நிலையில் தான், மேலும் அரச வேலைவாய்ப்புகளை வழங்குதலென்பது, ஆரோக்கியமற்றதாக மாறும். மாறாக, அரச துறையை மீள்கட்டமைப்புக்கு உட்படுத்தும் தேவை காணப்படுகிறது. அதன் பின்னர், மேலும் சிலரை, பணியில் சேர்ப்பதைப் பற்றிச் சிந்திக்க முடியும்.

எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரில் அனைவரையும், அரச பணியில் சேர்ப்பதென்பது, சாத்தியப்படாது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் சிலர், கையில் குழந்தைகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருந்தது.

படித்து முடித்துவிட்டு, அதற்கான வேலையைத் தேடாமல், திருமணம் முடித்துவிட்டு, குழந்தையையும் பெற்றுக் கொண்ட இவர்கள், நாட்டைப் பொறுத்தவரை, மிகப்பெரிய பாரமே. திருமணம் முடிப்பதென்பது தனிப்பட்ட முடிவு  என்ற போதிலும், திருமணம் முடித்தவர்களில் பெரும்பான்மையானோர், சமூக ரீதியான அழுத்தங்களாலேயே அந்தப் பாதையைத் தெரிவுசெய்திருப்பர் என்பது வெளிப்படை.

25, 26 வயதைத் தாண்டி, பெண்ணொருத்தியால் திருமணம் முடிக்காது தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்துவிட முடியாத நிலை இருக்கிறது. ஆணென்றால் அந்த வயது, 30 வயதுவரை செல்லலாம். ஆனால் அதைத் தாண்டி, வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ, இல்லையோ, குறித்த வயதுக்குள் திருமணம் முடித்துவிட வேண்டும்.

திருமணம் முடித்தால், அத்தோடு, அழுத்தங்கள் நின்றுவிடாது. திருமணமாகி 6 மாதங்களுக்குள் ஏதாவது “விசேட” செய்தி கிடைக்காவிட்டால், அதற்கான நச்சரிப்பு ஆரம்பித்துவிடும். இதனால், தாங்கள் விரும்பியதைப் போன்று வாழ்க்கையைத் திட்டமிடும் வாய்ப்பு, அநேகமானோருக்குக் கிடைப்பதில்லை.

எனவே, சமூகம் விரும்பும் அரச தொழிலைப் பெற்றுக்கொள்ள விரும்பும் இவர்கள், சமூகத்தின் அழுத்தங்களால் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டுவிட்டு, தங்களது நாளாந்த வாழ்க்கையைக் கொண்டுநடத்துவதற்குச் சிரமப்படுகிறார்கள் என்பதே உண்மையானது.

ஆனால், எல்லாத் தவறுகளையும் சமூகத்தின் முன்னால் போட்டுவிட முடியுமா என்றால், இல்லை என்பதே பதிலாக அமையும். தனிநபர்களுக்கான பொறுப்புகள் என்பனவும் காணப்படுகின்றன.

இவ்விடயம் தொடர்பாக, தனியார் நிறுவனமொன்றின் உயரதிகாரியொருவரை அணுகி, அவரது கருத்துகளைக் கேட்டபோது, அவர் தெரிவிக்கும் கருத்துகள், ஒருவகையான உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. “ஏராளமானோருக்கான வேலைவாய்ப்புகளை நானே வழங்கினேன்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் என்னிடம் கேட்கப்படும் கேள்வி, ‘நேர்முகத்தேர்வு இருக்கிறதா? அது இல்லாமல் இந்த வேலையை எடுக்க முடியாதா?’ என்பது தான். நேர்முகத்தேர்வுக்குச் சென்று, அதை எதிர்கொண்டு, அதன்மூலம் பணியைப் பெறும் எண்ணம், எம்மவரிடத்தில் இல்லை. மாறாக, வாழைப்பழத்தை உரித்து, வாயில் திணிக்க வேண்டிய நிலையே உள்ளது” என்கிறார் அவர்.

அவரது விமர்சனத்தில் காணப்படும் உண்மைத் தன்மையையும் மறுத்துவிட முடியாது. இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்போம், தனியார் துறையில் தமக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ள, எவ்வளவு தூரத்துக்கு முயன்றனர் என்ற கேள்வி எழுகிறது.

யுத்தத்துக்குப் பின்னரான வடக்கிலும் கிழக்கிலும், ஏராளமான தனியார் நிறுவனங்கள் முளைத்திருக்கின்றன. அவற்றில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் ஏன் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது, நியாயமான கேள்வியே.

நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணியின் திரைப்படமொன்றில், “பெற்றோமக்ஸ் லைட்டே தான் வேணுமா?” என்று கேட்பதைப் போல், “அரச வேலை தான் வேண்டுமா?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஏனென்றால், தனியார் துறையில் காணப்படும் வேலைவாய்ப்புகள், ஏராளம் ஏராளம்.

அரச துறை தருவதைப் போன்று, வேலைக்கான உச்சபட்ச உத்தரவாதத்தை, தனியார்துறை வழங்குவதில்லை என்பது உண்மையானது.

ஆனால் அது தான், தனியார்துறையின் சிறப்பம்சமாகவும் உள்ளதே? உங்களை முழுமையாக நிரூபித்து, குறித்த நிறுவனத்துக்கான உங்கள் பெறுமதியை வெளிப்படுத்தினால், முன்னேறிக் கொண்டு செல்ல முடியும். மாறாக, உங்களது திறமையை நீங்கள் வெளிப்படுத்தவில்லையென்றால், வேலையை இழக்க வேண்டியேற்படும். இந்தப் போட்டித்தன்மை தான், வினைத்திறனான பணியாற்றலை ஏற்படுத்துகிறது

இதற்காக, அரச பணியென்பது முக்கியத்துவமற்றதோ அல்லது வினைத்திறனற்றதோ என்று பொருள் கிடையாது. அதுவும் முக்கியமான ஒன்று தான். ஆனால், அரச பணியைப் பெரும்பாலானோர் விரும்புவதற்கு, “அது, எனக்குப் போட்டித்தன்மையான சூழலை வழங்கும்” என்ற காரணம் இருப்பதில்லை.

மாறாக, “நிரந்தரமான தொழிலாக எனக்கு அது இருக்கும்” என்பதே காணப்படும். இவ்வாறான மனநிலையுடன் அரச பணியை ஏற்கும் ஒருவர், தனது உச்சபட்ட திறமையை, ஒருபோதும் வெளிப்படுத்தப் போவதில்லை. இதனால் தான், கோப்புகள் தேங்கிக் கிடக்கும் நிலைமை, பெரும்பான்மையான அரச அலுவலகங்களில் ஏற்படுகிறது.

எமது கல்விக் கட்டமைப்பும், ஆளுமைமிக்க பிரஜைகளை உருவாக்குவதில்லை. மாறாக, புத்தகத்தில் காணப்படுவதை மனப்பாடம் செய்து, அதன்மூலமாகப் புத்தகப்பூச்சிகளாகச் சிறப்பாக உள்ளவர்களையே, எமது கல்விக் கட்டமைப்பு உருவாக்குகிறது.

இதன்மூலம், பணியொன்றைச் செய்துமுடிப்பதற்குத் தேவையான திறன்களைக் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதில், அது தவறிழைத்து வருகிறது. இதற்காக, இலங்கையின் கல்விக் கட்டமைப்பில் பாரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையும் உள்ளது.

அத்தோடு, பெரும்பான்மைச் சமூகத்தோடு ஒப்பிடும் போது, இந்த நிலைமையில், தமிழ்ச் சமூகம் பின்தங்கியுள்ளமையையும் காணக்கூடியதாக உள்ளது. பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், துடிப்பானவர்களாக, நேர்முகத் தேர்வுகளைத் தயக்கமின்றி எதிர்கொள்ளக்கூடியவர்களாக மாறியிருக்கிறார்கள். 

அரச துறையை மாத்திரம் தங்கியிருக்கும் நிலை, அவர்களிடம் குறைவாகக் காணப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, அரச பணியென்பதே, அவர்களது இலட்சியமாக இருக்கிறது.

“வைத்தியர் அல்லது பொறியியலாளர் ஆகு. அதன் பின்னர், அரச வேலையைப் பெறு” என்பதே, பெற்றோரது தாரக மந்திரமாக உள்ளது. எனவே தான், இவ்விடயத்தில் பெரும்பான்மைச் சமூகம், எமது சமூகத்தை முந்திக் கொண்டு செல்லும் நிலை உருவாகியிருக்கிறது.

மேலே குறிப்பிட்ட பிரச்சினைகள் அனைத்தும், வேலைகோரிப் போராட்டம் நடத்தும் பட்டதாரிகளின் விடயத்தில் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, எதிர்காலத்தில், இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு, அனைவரிடமும் உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக, குறுகிய காலத்தில், இவர்களுக்கான தீர்வும், ஏதோவொரு வழியில் வழங்கப்படுமென எதிர்பார்ப்போம்.

- See more at: http://www.tamilmirror.lk/192973/என-ன-ச-ல-க-ன-றன-வ-ல-க-ர-ம-ப-ர-ட-டங-கள-#sthash.be6jLGUA.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.