Jump to content

"அண்ணை றைற்"


Recommended Posts

தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றிய சிறு அறிமுகப்பதிவாக முன்னர் ஒரு பதிவைத் தந்திருந்தேன். அதில் குறிப்பிட்டது போன்று அவரின் ஒவ்வொரு நாடகத்தின் ஒலி வடிவத்தையும் தரவேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்தப் பதிவு பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றது.

http://kanapraba.blogspot.com/2007/02/blog-post_15.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகள் மீண்டும் மலர்கின்றன.என் நன்றிகளுடன் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் உங்கள் முயற்சி.....வாழ்த்துகளும் நன்றிகளூம்....மணியண்ணையின் பஸ் விட்ட புகையில அச்சு வேலிவாழைப்பழம் எல்லாம் அப்ப பழுத்திடும்........

Link to comment
Share on other sites

வணக்கம் ஈழவன்

உங்களைப் போன்ற இளைய தலைமுறையிடம் இவர் படைப்பு சேர்ந்தது குறித்து எனக்கும் மிக்க மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒருவர் அரட்டையடிக்கின்ற சமயத்தில் இடையிடையே, அண்ணை ரைட்" எண்டு சொல்லிக் கொள்வார். அப்போது அவர் சொல்கின்ற விதம் வேடிக்கையாக இருக்கும். இப்போது தான் புரிகின்றது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் எவ்வளவு தூரம் கவர்ந்திருந்தது என்று.

இணைப்புக்கு நன்றி பிரபா! இவ்வாற பதிவுகளை வரவேற்கின்றோம்.

( இந்த ஒலிப்பதிவை தரவிறக்கம் செய்யலாமா? அதற்கு உதவி செய்வீர்களா? :D )

Link to comment
Share on other sites

வணக்கம் தூயவன்

கருத்துக்கு நன்றிகள், இதுபோன்ற ஒலிப்பதிவுகளைத் தொடர்ந்தும் தரவிருக்கின்றேன். mp3 இல் தரமுடியாமைக்குக் காரணம், அவர்கள் இதை சீ.டீ வடிவில் வெளியிட உத்தேசித்திருப்பதால் தான்.

Link to comment
Share on other sites

கானாபிரபா.........

திறமைகள் எல்லாமே காலம் தாழ்த்திதான் உணரப்படுமாம்........

விதிவிலக்காய் -அவர்கள் - வாழும் காலத்திலேயே - கலைஞர்களை பாராட்டுகிறீர்கள்!

என்ன சொல்ல ? -நன்றியுடையோம்!

தளம்பலில்லாத கொள்கையோடு - உங்க பயணம் .... சுவை!

அதைவிட சுவை நீங்க எழுதும் விதம்!! :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம் வர்ணன்

உங்களைப்போன்ற நண்பர்களின் கருத்துக்களால், இதுபோன்ற முயற்சிகளில் நான் தொடர்ந்தும் ஈடுபட உற்சாகமூட்டுக்கின்றது, மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள் என்ற இருபெரும் முதலைகளின் வாயில் அகப்பட்டுக் கிடப்பதனால் நம்மில் பலருக்கும் மறந்து போன தரமான எம்மீழக் கலைஞர்களின் விபரங்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் கானா பிராபா அண்ணாவிற்கு நன்றிகள்.

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

மிக்க நன்றிகள் மணிவாசகன்

80 இல் வந்த நகைச்சுவையில்

கியர்ப் பெட்டியை மறைக்கிறது ஆச்சி வைத்திருக்கும் கடகம்

ட்றைவர்: ஆச்சி கடகத்தை அங்காலை எடணை , கியர் போடப்போறன்

ஆச்சி: அதை உந்தக் கடகத்துக்குள்ள போடு மேனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கியர்ப் பெட்டியை மறைக்கிறது ஆச்சி வைத்திருக்கும் கடகம்

ட்றைவர்: ஆச்சி கடகத்தை அங்காலை எடணை , கியர் போடப்போறன்

ஆச்சி: அதை உந்தக் கடகத்துக்குள்ள போடு மேனை

இப்போது வருகின்ற நகைச்சுவைகள், இவற்றை அடியேற்றியே வருகின்றது போலிருக்கின்றதே!

விரைவில் ஏனைய பதிப்புக்களையும் இணையுங்களேன். கேட்க ஆர்வமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

அன்புள்ள கானா பிரபா

அருமை அருமை...:D உங்களுடைய முயற்சியில் கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணன் அவர்களின்

அண்ணை சரி" தனிநடிப்பு ஒலிவடிவின் எழுத்துப் பதிவை வாசித்தேன்.

நான் பலமுறை தட்டிவானில் யாழ்ப்பாணம் போகும் போது நடந்த நிகழ்வுகள் கண் முன்விரிந்தன.

இந்த இடங்கள் இன்றும்கூட பசுமையாய் என் கண்முன் சிறகு விரித்துப் பறந்து கொண்டிருக்கிறது.

ஆனால் என்ன இப்போ அங்கே சிங்கள இராணவ ஆடுகள் எங்கள் ஊர்களை மேய்ந்துகொண்டிருப்பது கவலையளிக்கிறது.

"காலம் ஒருநாள் மாறாது போகுமா

நம் கண்ணீர் ஒர் நாள் ஆனந்தக்கடலாக மாறுமா.."

அதுவரையில் இப்படியான எங்கள் கலைஞர்களின் படைப்புக்களை தேடி எடுத்து உங்கள் பாணியிலே பதிவு செய்துகொண்டே இருங்கள். உங்கள் பணி தொடரட்டும். உங்களோடு சில பதிவுகள் தொடர்பாக கதைக்கவேண்டும்...உங்கள் மின்னஞ்சல் தரவும்..

அன்புடன்

தமிழ்வானம்

Link to comment
Share on other sites

தூயவன்

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. இன்னும் பல அன்றைய காலகட்டத்து நாடகங்கள் ஒலிவடிவில் என்னிடம் உள்ளன. ஆனால் வெறுமனே அவற்றை ஒலியாகப் போடாது அவற்றின் சிறப்பு, மற்றும் எழுத்து வடிவம் ஆக்குதல் போன்ற முயற்சிகளுக்கு அதிக நேரம் தேவைப்படுகின்றது. இன்னும் 2 வாரங்களுக்குள் அடுத்த பதிவு வரும்.

வணக்கம் தமிழ்வானம்

எங்களைப் போன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஈழத்தவருக்கு இவை தானே அருமருந்து இல்லையா? உங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள். நீங்கள் என்னுடைய யாழ் கள மின்னனஞ்சலுக்கும் மடல் போடலாம். உங்களுக்கு ஒரு மடல் போடுகின்றேன்.

Link to comment
Share on other sites

ஊர் ஞாபகம் வந்திச்சு கேட்க..அதுவும் நாங்க அடிக்கடி போய் வாற இடங்கள்...இன்னும் கேட்க ஆசையா இருந்திச்சு.

நன்றாக நடித்திருக்கிறார் நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன்.

நன்றி கானா பிரபா அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகள் மீண்டும் மலர்கின்றன.என் நன்றிகளுடன் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நான் இவரின் குரல் கேட்க எங்கயோ கேட்டது போல இருந்திச்சு. அம்மாவிட கேட்ட போது இவர் தாம் ரிரின் இல் வைத்திலிங்கம் ஷோ நிகழ்ச்சி நடத்துவர எண்டு அறிந்தேன். இடைக்கிட பார்த்திருக்கேன். ஆனால் பெயரை கவனித்ததில்லை. அவரோட நிகழ்ச்சு ரொம்ப நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

ப்ரியசகி மற்றும் கறுப்பி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலச்சந்திரன் மிக அவதானமாக சாதிய பிரச்சினைகளை பட்டும்படாமலே எப்போதும் கையாண்டுள்ளார் என்பதை இன்றும் அவரது நிகழ்சிகளை பார்க்கும் எவருக்கும் புரியக்கூடிய விசயம்.

சாதிக்கு பேர் போன கரவெட்டி அவரது பிறபிடம் என்பதும் குறிபிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் மிக அவதானமாக சாதிய பிரச்சினைகளை பட்டும்படாமலே எப்போதும் கையாண்டுள்ளார் என்பதை இன்றும் அவரது நிகழ்சிகளை பார்க்கும் எவருக்கும் புரியக்கூடிய விசயம்.

சாதிக்கு பேர் போன கரவெட்டி அவரது பிறபிடம் என்பதும் குறிபிடத்தக்கது.

அப்ப அந்த அருமை பெருமையளை எடுத்து கொஞ்சம் சொல்லுங்கோவன். :huh:

Link to comment
Share on other sites

வணக்கம் கானாபிரபா

ஒருமுறை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இதேபாணியில் ஒரு நாடகம் போட்டார்கள். பழைய மாணவர் சங்கம் அதனை நடாத்தியது. அப்போதுதான் டபிள்மீனீங் பேச்சு நாடகத்தை முதன்முதலாக பார்த்தேன். எப்படி இதனை பப்பிளிக்கில் போட அனுமதித்தார்கள் என யோசத்தேன்.

மற்றும் படி மிகவும் ரசிக்ககூடிய நாடகம். அதனை நினைவுபடுத்திவிட்டீர்கள். நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம் கானாபிரபா

ஒருமுறை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இதேபாணியில் ஒரு நாடகம் போட்டார்கள். பழைய மாணவர் சங்கம் அதனை நடாத்தியது. அப்போதுதான் டபிள்மீனீங் பேச்சு நாடகத்தை முதன்முதலாக பார்த்தேன். எப்படி இதனை பப்பிளிக்கில் போட அனுமதித்தார்கள் என யோசத்தேன்.

மற்றும் படி மிகவும் ரசிக்ககூடிய நாடகம். அதனை நினைவுபடுத்திவிட்டீர்கள். நன்றி.

அய்யா விசால் மானிப்பாய் இந்து கல்லூரியில் விழையாட்டு இல்லங்களிடையேயான நாடக போட்டிகள் நடை பெறுவது வழைமை அப்படி நான் வேறு பாடசாலைகளில் பார்த்தது கிடையாது ஆனால் நடந்திருக்கலாம் அன்றைய காலகட்டத்தில் எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் சொல்வது போல இரட்டை அர்த்த வசனம் ஆபாசமாக நாடகங்கள் அங்கு நடாத்த முடியாது அதற்காக பாடசாலை நிருவாகம் அனுமதிப்பதும் இல்லை காரணம் அங்கு மேடையேற போகும் நாடகங்களை முதலிலேயே ஒரு ஆசிரியர் குழு பார்வையிட்ட பின்னர்தான் அவை மேடையேறும். நானும் அந்த பாடசாலையின் பழைய மாணவன் என்கிற முறையிலும் சில நாகங்களை எழுதி நடித்தவன் என்கிற முறையிலும் சொல்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கானாபிரபா

ஒருமுறை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இதேபாணியில் ஒரு நாடகம் போட்டார்கள். பழைய மாணவர் சங்கம் அதனை நடாத்தியது. அப்போதுதான் டபிள்மீனீங் பேச்சு நாடகத்தை முதன்முதலாக பார்த்தேன். எப்படி இதனை பப்பிளிக்கில் போட அனுமதித்தார்கள் என யோசத்தேன்.

மற்றும் படி மிகவும் ரசிக்ககூடிய நாடகம். அதனை நினைவுபடுத்திவிட்டீர்கள். நன்றி.

பாலசந்திரனின் படைப்பில் டபிள்மீனீங்??????????? :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1378652
    • சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம்; சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! கூறுகின்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆதவன்) தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிங்களத் தரப்பைக் கோபப்படுத்தி, இனவாதத்தைத் தூண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அற்பத்தனமானது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் வரையறை விதிக்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எடுத்துக்காட்டாகக் கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை தற்போதைய பொதுவேட்பாளர் விடயம்  அவ்வாறானது அல்ல. நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. சகல அரச தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். பொதுவேட்பாளர் என்பது இனப்பாகுபாடான விடயமல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்துள்ள ஒரு வழிமுறையாகும் - என்றார். (ஏ)    https://newuthayan.com/article/சுமந்திரனின்_கருத்து_அற்பத்தனமானது!
    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.