Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 26/03/2017 at 5:37 PM, தமிழ் சிறி said:

அட... இந்த முறை,  பழனி....  கோவணம் கட்ட வில்லை. :unsure:
இந்த களேபரத்துக்குள்ளை.... கோவணப் பிரச்சினை, பெரிய  பிரச்சினையாய்  கிடக்குது. :grin: :D:

கதை, நன்றாக போகின்றது சுவியர். தொடர்ந்து அசத்துங்கள்.:)

சிறியர் ..., இந்தக் கதையில் துருச்சாமியுடன் அவருடைய தண்டம், கமண்டலம் , கோவணம், தூளிப்பை  எல்லாம் ஒவ்வொரு பாத்திரமாக உலவுகின்றது. அதனால் கோவணம் தவிர்க்க முடியாத ஒன்று....!  tw_blush:

On 26/03/2017 at 9:16 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஐயோ சுவி அண்ணா சிரிச்சு மாளேல்லை. நீங்களும் கசிப்பு கிசிப்பு அடிச்சிட்டுத்தான் கதையை எழுதுறியளோ >???

நன்றி சகோதரி....! நான் இன்றுவரை எந்த ஒரு மதுபானமோ அல்லது சிகரெட் போன்ற வஸ்துக்களோ,அன்றி பல வருடங்களாக மாமிசங்களும் பாவித்ததில்லை.ஆனால் எல்லோரோடும் கூட்டாளியாக இருந்துள்ளேன், இருக்கின்றேன்....! tw_blush:

On 27/03/2017 at 3:18 AM, புங்கையூரன் said:

துருச்சாமி......எனது எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும்....தவிடு பொடியாக்கிய படியே....தன் பாட்டில் போய்க்கொண்டிருக்கிறார்!

அவரது விழுப்புண்கள், ஏற்பட்ட விதங்களை வாசித்த பிரமிப்பு இன்னும் அடங்கவேயில்லை!

ஆனால் ஒரே ஒரு குறை.....!

நம்ம சிலுக்கைப் பற்றி...துருச்சாமி ..ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்!:cool:

எதோ ஒரு வேகத்தில எழுதிட்டன் . பின்பு வாசிக்கும் பொது எனக்கும் ரசிப்பாகத்தான் இருந்தது......! tw_blush:

On 27/03/2017 at 2:26 PM, ஜீவன் சிவா said:

சொந்த அனுபவம் போலவே இருக்குதே சுவியர் ... :grin:

அடபாவி, வாசிக்காமலா இத்தனை பச்சையும் போட்டீங்கள் / இனி வாசித்தப்புறம் என்ன பண்ணுவீங்கள்  :grin:

இதெல்லாம் சொந்த அனுபவம் கிடையாது. அனுபவஸ்தர்களுடன் மிக அருகில் இருந்து பெற்ற பேரனுபவம் .....! tw_blush:

On 27/03/2017 at 5:43 PM, ஈழப்பிரியன் said:

பொதுவாக பெண்களில் குற்றச் சாட்டு என்னவென்றால்

கட்டிப் பிடித்தால் விடுங்கோ விடுங்கோ என்று முணு முணுப்பார்களே தவிர பிடியில் இருந்து தப்ப முயற்சிக்கவே மாட்டார்கள் என்று.

யாழிலே ரொம்பவும் பிசியான ஆள். அதால தான்.

இதில் நான் ஒன்றும் சொந்தமாய் எழுதவில்லை ஈழப்பிரியன். அய்யன் வள்ளுவனின் 1121 வது குறளுக்கு  ஒரு உருவகம் கொடுத்திருந்தேன் அவ்வளவுதான்.2000 ஆண்டுக்கு முன்பே காதலை எவ்வளவு கொண்டாடி இருக்கிறார்கள்...! tw_blush:

On 27/03/2017 at 7:18 PM, வல்வை சகாறா said:

இந்தத் துருச்சாமியால யாழில உள்ள ஆண் உறுப்பினர்கள் எல்லோரும் ஏகாந்த உலகத்திற்குப் போய் இருக்கிறார்களாம். ஐயா சுவியரே நகைச்சுவை பதிவென்றாலும் அதற்கும் அப்பால் போதை... பேதை என்று சமூகவெளியில் கடாசிக் கிடக்கும் பலதையும் எழுத்தில் குவிக்கிறீர்கள். வாசிக்கும்போது குபீர் என்று சிரிக்கவைக்கும் கதையோட்டத்தின் பின்னால் ஆற அமர சிந்திக்கும்போது சந்தர்ப்பங்களும், சபலங்களும், நிலையற்ற தன்மையும் கொண்ட ஸ்திரமற்ற வாழ்வின் ஓட்டத்தையும் பார்க்கமுடிகிறது. ஒழுக்கம் என்பது மனிதர்களுக்கு மனிதர் வேறுபடும். வெகுளித்தனத்தில் உறவின் தன்மைகள் விரிசல்படுவதும், கள்ளத்தனங்கள் குடிகொள்வதும் என்று இந்தத் துருச்சாமியுடன் பயணிக்கும்போது அறியக்கூடியதாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் ஏமாற்றும்  உலகின் நியங்களின் தரிசனம்.

நன்றி சகோதரி..., இந்தக் கதை எழுத ஊக்கம் தந்தத்துக்கு நீங்களும் ஒரு காரணம். கதை எழுத எண்ணம் வந்ததும் சும்மா சகட்டுமேனிக்கு எழுதாமல் நகைச்சுவையாக எழுதலாம் என்று யோசித்தேன். அப்போது எனக்கு தோன்றியவர்கள் அரசியல்வாதி, வைத்தியர், சாமியார்.... இதில் சாமியார் வந்திட்டார்....!  tw_blush:

On 27/03/2017 at 10:45 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வரவர சுவி அண்ணாவின் பதிவை எட்டிப் பாக்கவே பயமாய் இருக்கு. குமர்ப் பிள்ளையளும் நடமாடிற இடம் அண்ணா. பாத்து எழுதுங்கோ.

இதெல்லாம் பல்வேறு எழுத்தாளர்களின் ( சுஜாதா, புஷ்பா, ஜெயகாந்தன், சாண்டில்யன்,சோபா) போன்ற ஏராளமான எழுத்தாளர்களை விட நான் ஒரு தூசு ......! அப்படியும் இரண்டாவது காண்டம் தடை (disclaimer)  வைத்துத்தான் எழுதியுள்ளேன். இப்ப நினைக்கின்றேன் இங்கு ஏனைய திரிகளை கருத்துக்களையும் பார்க்கும்போது அதுகூட அவசியமில்லையென்று.......!  tw_blush:

On 27/03/2017 at 11:12 PM, கிருபன் said:

அந்தக் குமர்ப்பிள்ளையளுக்காகத்தானே சுவியர் disclaimer போட்டிருக்கின்றார். கவனிக்கவில்லையா.

 

அடுத்து வாலிபர் காண்டம். இதில் இரண்டு படலங்கள் இருக்கின்றன. இதை வாசிக்க சில கட்டுப்பாடுகளை கம்பெனி விதித்துள்ளது

நன்றி கிருபன். என்னையும் ஏதோ ஒன்று எழுதவைத்ததற்கு மீண்டும் நன்றி.....!  tw_blush:

On 27/03/2017 at 11:56 PM, புங்கையூரன் said:

ஐயோ,,,ஐயோ.....ஐயோ..!

கடைசி வரியை வாசிக்கிற போதே....வயித்துக்குள்ளை வண்ணாத்திப் பூச்சி பறக்கிற மாதிரிக் கிடக்குது!

உடம்பெல்லாம் புல்லரிச்சு....ஓய்ஞ்சு போற மாதிரி...ஒரு பீலிங்!

சிலுக்கு பெயரை...எங்கையாவது பாத்தால்...எப்பவுமே...இப்படித்தான்!

நன்றி.....சுவியர்!

46788-647x450.jpg

 

ஆஹா.... சேம்பிளட்.... ஐ லைக் யு .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 28/03/2017 at 4:43 AM, Kavallur Kanmani said:

சுவியின்ர படத்தில சிலுக்கும் பிரசன்னமாகிற்றா  இனி  துருச்சாமி  வெற்றிப்படம்தான். கதை நகைச்சுவையுடன் நன்றாக நகர்கிறது. தொடருங்கள்

உண்மைதான் சகோதரி...... ஒருகாலத்தில் கமல் ரஜனி படங்களின் வெற்றியை தீர்மானித்ததே சிலுக்குதானே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி....!  tw_blush:

On 28/03/2017 at 8:45 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட இப்பிடி ஒண்டு போட்டிருக்கா என்ன. பாக்கவே இல்லையே.:cool:

எனக்குத் தெரியும் நீங்கள் கதையோடு ஒன்றிப் போய் விட்டிர்கள் என்று...., நன்றி சகோதரி....!  tw_blush:

On 28/03/2017 at 6:23 PM, தனி ஒருவன் said:

ஹாஹாஹாஹஹா   சுவி அண்ணை இனி பெடிச்சிகள் யாரும் உந்தப்பக்கம் வரமாடினும் tw_blush:

சிறந்த எழுத்துப்பதிவு  ஒரு மொழி பழகும் போது அதன் கெட்ட வார்த்தைகள்  முதலில் அறிவோம் அது போல்  வார்த்தைகளால் விளையாடியுள்ளீர்கள் மிகுதி மிகுதி :unsure:

தனி விளையாடுறீங்களா, குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இனி ஒரு கதை மாதிரி எழுதநேர்ந்தால் பெடிச்சியல் எல்லாம் துடிச்சுக் கொண்டு ஓடி வாற மாதிரித்தான் எழுதுவது. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி....!  tw_blush:

On 28/03/2017 at 7:41 PM, விசுகு said:

உதெல்லாம்  இப்பத்தைய பயலுகளுக்கு அண்ணா

நீங்க  எழுதும்போதே எமக்கு அது தேவையில்லை என்று  நினைத்திருப்பீர்கள்

தொடருங்கோ..

ஆஹா அத்தனையும் உண்மை விசுகு. நன்றி...!  tw_blush:

On 28/03/2017 at 8:13 PM, கிருபன் said:

சுவியர் படம் பார்க்கும்போது ஒவ்வொரு ஃபிரேமாகப் நிறுத்தி நிறுத்திப் பார்ப்பாரோ?

உண்மைதான் கிருபன்.... நான் தனியா இருந்து பார்த்தால் அதிகம் படத்தை ஓடவிட மாட்டன். நன்றி கிருபன் ....!  tw_blush: 

On 28/03/2017 at 8:58 PM, ஈழப்பிரியன் said:

சுவியர் இந்த கதை எங்காவது பார்த்து எழுதுகிறீர்களா இல்லை நீங்களாகவே எழுதுகிறீர்களா?
ஒரே தலையைச் சுற்றுது.பசு மாதிரி இருந்த சுவி இப்போ புலியாக பாய்கிறாரே?எங்கேயோ போயிட்டீங்க.

இதுக்கு பதில் கீழே கிருபன் கூறியதுதான்..... நன்றி பிரியன்....! tw_blush:

On 28/03/2017 at 9:05 PM, கிருபன் said:

காலம்காலமாக தலைக்குள்ள பெளத்திரமாக ஒளித்து வைத்ததை பார்த்துப் பார்த்து தட்டச்சு செய்கின்றார் என்றுதான் நினைக்கின்றேன். கடைசியாக வந்த பதிவை நான் கலாதியான "கலைப்படங்களில்"கூடப் பார்க்கவில்லை.?

நீங்களே ரசித்திருக்கின்றீர்கள் என்றால் ஏதோ சுமாராய் வந்திட்டுது என நினைக்கின்றேன்....!  tw_blush:

On 28/03/2017 at 9:42 PM, nochchi said:

உண்மையிலேயே சுவியவர்களே!

சிரிசிரிஎன்று சிரித்து வயிற்று நோவந்திட்டுது. தொடருங்கள். உண்மையிலே ஒரு சிறந்த நகைச்சுவையோடு நடைமுறை சார்ந்த ஏமாறும் மக்கள் என்று பல்வேறு விடயங்களைத் தொட்டுத் தடவித் தழுவிச்........................... செல்கிறீர்கள். வளர்க!
nTBMGXayc.gif

பின்ன... நான் நகைச்சுவை கதை என்று சொன்னதுக்கு பிறகும் யாரும் சிரிக்கவில்லை என்றால் மனம் எவ்வளவு வேதனைப் படும்.... நன்றி நொச்சி...!  tw_blush:

On 29/03/2017 at 0:03 AM, புங்கையூரன் said:

சுவியர்....உவமான, உவமேய விசயங்களில்.....கம்பன் கூட ...உங்களிடம் பிச்சை வாங்க வேண்டும்!

இப்போது ..கதையை மேலோட்டமாக் மேய்வதில்லை!

ஆற அமர அமர்ந்து ....ஒவ்வொரு வரியையும்..உள்வாங்கிய படியே.....வாசித்து அனுபவிக்கிறேன்!

தொடர்ந்தும்..வீணையை...மீட்டுங்கள்!

கண்களை மூடிய படியே...நாங்களும் அந்த நாதத்தின் சுகத்தில் திளைப்போம்!

சிறு திருத்தம்.... எல்லாம் கம்பன், சாண்டில்யன், பாகவதம் போன்றவற்றில் பொறுக்கியதுதான்....! நன்றி புங்கை....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/03/2017 at 7:37 PM, கிருபன் said:

வசனம் அந்தமாதிரி வந்திருக்கு.

" அத்தனை மதச்சின்னங்களும் மாட்டின் முதுகில ... ஆனால் மாட்டுக்கு ஏது மதம். மனிதனுக்கு பிடித்திருக்கு"

இது கவிஞர் வாலி ஐயாவின் பாதிப்புதான், ஆனால் நன்றாக வந்திருக்கு.....! tw_blush:

On 30/03/2017 at 10:51 AM, ஜீவன் சிவா said:

1md1ef.jpg

1md1hh.jpg

ஸ்....ஸ்...... அவர்கள் மஹாமேதைகள்.....! அவர்களின் முழங்கையால் ஒழுகிய கூழ்தான் இது....! tw_blush:

On 30/03/2017 at 10:58 AM, putthan said:

 ஐயா வாசிச்சு வயிறு நோகிறது.....முழுதும் வாசித்த பின்பு எழுதுவோம் என்றிருந்தேன்....ஆனால் முடியவில்லை ...

நன்றி புத்தன் வருகைக்கும் கருத்துக்கும்......! tw_blush:

On 30/03/2017 at 2:01 PM, ஜீவன் சிவா said:

நம்ம ஊரிலையும் இப்படி ஒருவர் + அவரின் மாடுகள் + வண்டில்.

மாட்டையும் வண்டிலையும் காணேல்ல எண்டு யாரும் தேடுவதில்லை. அது தானாக சிங்கனின் சிங்கி வீட்டிற்கு போய் கொல்லை பக்கத்தில பார்க் பண்ணீற்று நிக்குமாம். :grin: 

ஆமா இவர் இப்ப யாரை கேட்டு சுபம் போட்டார்.

 

ஜீவன் முன்பு மாநகரசபை குப்பை அள்ள மாட்டு வண்டில்கள் பாவித்தனர். அள்ளுவதற்கு கையில் இரண்டு தகரங்கள் வைத்திருப்பார்கள். இந்த மாடுகள் குப்பைகளுக்கு அருகில் சென்று நின்று விடும். அவர்கள் குப்பை அள்ளிப் போட்டதும் தகரத்தைத் தட்ட மாடுகள் நகரத் தொடங்கும். பின்பு சபை அந்த மாடுகளை ஏலத்தில் விட அவற்றை வாங்கியவர்களுக்கு தொல்லையாகி விட்டது. மாடுகள் குப்பையைக் கண்டதும் நின்றுவிட இவர்கள் தகரத்தைத் தட்டி ஓட்ட வேண்டி இருந்தது.....!tw_blush:

On 30/03/2017 at 3:19 PM, வல்வை சகாறா said:

சுவியண்ணா இந்தக்கதையை நீங்கள்தான் எழுதினீர்கள் என்று நம்பவே முடியவில்லை. இவ்வளவு நாளும் பயங்கர அவையடக்கமாக இருந்துவிட்டு இப்போது பயங்கர அட்டகாசமாக.... இனிமேல் அப்பாவிகளையெல்லாம் நம்பக்கூடாது. சாண்டில்யனும் தோத்துப்போனான். இந்தச் துருச்சாமியாலேயே உங்களால் வாசகர்களைக் களேபரப்படுத்தமுடிகிறதென்றால் நீங்கள் மட்டும் நாவல் எழுதினால்....... யாழ் தாங்காது.eTMkB58Ac.gif

நன்றி சகோதரி. வசிட்டர் வாயால் பாராட்டு கேட்டமாதிரி  இருக்கு. நாவல் என்ன பெரிய நாவல் எழுதிட்டால் போச்சு. ஒரு தலைப்பை போட்டு விடுங்கோ சீரியஸ்ஸாய் எழுதிறன் சிரிக்காமல் வாசிக்க வேண்டும்.....ஐ வில் ட்ரை....! tw_blush:

On 30/03/2017 at 6:03 PM, வாதவூரான் said:

தாத்தா என்ன இது ஒரு அருமையான நாவலை இப்பிடி சடாரென்று முடித்துவிட்டீர்களே.  சாண்டில்யனின் நாவலைப் போல இருந்தது. என்ன அருமையான வர்ணனை சொல்லி வேலையில்லை.

நன்றி வாதவூரான்....உங்களின் கருத்துக்கள் வருவது குறைவு ஆனால் துருச்சாமி கூட்டி வந்திட்டார்...சாண்டில்யனின் அதிகமான கதைகள் படித்துள்ளேன்.அதன் தாக்கம்தான்..! tw_blush: 

On 30/03/2017 at 5:48 PM, தனி ஒருவன் said:

அதுக்குள்ள சுபம் போட்டு விட்டியளே ச்ச இன்னும் எதிர்பார்த்தேன் சாமியின் லீலைகள் tw_blush:

ஒருநாளைக்கு ஒரு லீலை காணாதா தனி, பாடி வீக்காயிடாது....!  tw_blush:

On 30/03/2017 at 5:57 PM, விசுகு said:

அருமையண்ணா..

இதை  நீங்கள் விரைவாக முடிக்கணும் என எதிர்பார்த்தேன்

காரணம் இது போன்ற  தொடர்களை  எழுதும் நாட்களில் ஒருவித மன  நடுக்கம்தொற்றிக்கொள்ளும்

அதை நீடித்தல்  உங்கள்  உடலுக்கு நல்லதல்ல.

 

கதையைப்பற்றி  நான்  எழுதுவதை விடஇதோ  சகாரா..

நன்றி விசுகு வருகைக்கும் கருத்துக்கும்.உண்மைதான், எழுதி முடிக்கும்வரை கொஞ்சம் டென்ஷன்....!  tw_blush:

On 30/03/2017 at 6:58 PM, ஜீவன் சிவா said:

பின்ன மண்டபத்தில யாரோ எழுதினதை கொண்டு வந்தாரா:grin:

உங்களுக்கு இது புதுமையாக இருக்கலாம், ஆனால் சுவியருக்கு யாழ் களத்தின் அவைப்புலவர் என்ற பட்டத்தை கொடுத்து சில வருடமாக அவரை செல்லமாக சீண்டிக்கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம் இல்லை.

அவருக்குள் எதோ ஒண்டு இருக்கு எண்டு தெரியும் 

ஆனால் அது இதுதான் எண்டு இப்பதான் தெரிந்தது.:grin::grin:

நன்றி ஜீவன்....! tw_blush:

On 30/03/2017 at 8:47 PM, கிருபன் said:

சின்ராசு, மாறன், மோகனா, கருப்பு எல்லாரையும் வைத்து இன்னும் "கலாதியாக"?? கதையைக் கொண்டுபோவீர்கள் என்று பார்த்தால் சுபம் போட்டு முடித்துவிட்டீர்களே சுவியர்☹️

நன்றி கிருபன். எல்லோரையும் தப்பு செய்யப்பண்ண விரும்பவில்லை. செண்பகம் போன்ற காரக்ட்டர் சமூகங்களில் ஓரிருவர் இருப்பினம். சாமியும் சிறுவயதில் இருந்தே அந்தமாதிரியான சேர்க்கையில் வளர்ந்திட்டுது.....!tw_blush:

On 30/03/2017 at 10:05 PM, ஜீவன் சிவா said:

பாவம் அவைப்புலவர்

அருமையான கதையை எழுதிய பின்னர் ஆளாளுக்கு கேள்வி கேட்க ரியாக்சன் இப்படி இருக்குமோ :grin:

 

 

 

திரையரங்குகளில் கட்டவுட் வைத்தமாதிரி இந்தக் கதைக்கு எனர்ஜி உங்களின் படங்களே. நன்றி ஜீவன்...! tw_blush:

On 31/03/2017 at 1:29 PM, putthan said:

என்ன ஐயா கதையை படக்கென்று முடிச்சிட்டியள்....

ஒருநாளைக்கு என்று கணக்கு பண்ணிக் கொண்டு எழுதியதால், கதையின் சுவாரஸ்யத்தில் கெதியாய் முடிந்ததுபோல் இருக்கு என நினைக்கின்றேன்.....! tw_blush:

On 31/03/2017 at 3:15 PM, கலைஞன் said:

கதை சூப்பர் குருஜி! :96_ok_hand:

நன்றி குருஜி, வருகைக்கும் கருத்துக்கும்....! tw_blush:

On 31/03/2017 at 3:57 PM, நந்தன் said:

ஜீவனிடம் கதைத்த போது பத்து வார்த்தைக்கு ஒரு தடவை சுவி அண்ணையை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று சொன்னார்.அதன் காரணம் இப்போது புரிகின்றது. இவ்வளவு காலமும் எங்கே இருந்தாய் தலைவா

நன்றி நந்தன்.... ஜீவன் சும்மா டூப் அடிப்பார் நம்பாதையுங்கோ......!  tw_blush:

On 31/03/2017 at 4:00 PM, ஈழப்பிரியன் said:

கடந்த பல நாட்களாக புன் சிரிப்புடன் சுவியரின் கதையை வாசிக்க முடிந்தது.

பொலிவூட்டிலிருந்து ஒரு கோஸ்டி ஒன்று யார் இந்த சுவி என்று தேடி ஐரோப்பா முழுவதும் அலைவதாக ஒரு கேள்வி.

நன்றி ஈழப்பிரியன் வருகைக்கும் கருத்துக்கும்....மகிழ்ச்சி.....!  tw_blush:

On 01/04/2017 at 4:50 AM, ஜீவன் சிவா said:

யு மீன் கொழும்பு கோட்டைக்கு டிக்கெட் எடுத்துவிட்டு மருதானையில குதிச்ச பீலிங்.:grin:

 

tw_blush:

On 01/04/2017 at 5:10 AM, புங்கையூரன் said:

இல்லை..ஜீவன்!

படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது .. இடைவேளைக்குப் பதிலாய் 'சுபம்' வந்த மாதிரி....!  

:cool:

tw_blush:  tw_blush:

On 01/04/2017 at 0:47 AM, புங்கையூரன் said:

சுவியர் ...ஒரு நல்ல படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது...ஒரு சுவாரசியமான கட்டத்தில்...படம் டக்கெண்டு முடிஞ்சு போன மாதிரி...ஒரு பீலிங்க்!

கடைசி...அந்தச் சங்கிலிக் கருப்பனாவது...சாமிக்குச் சங்கிலியாலஇரண்டு தட்டாவது...தட்டியிருக்க வேண்டும்!

வில்லன் தண்டிக்கப்படாமல்..படம் முடிவது...எமது கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளப் பட முடியாத ஒன்று!

நம்பியாரும்...அசோகனும்...சிறைக்குப் போகாமல்...எம்.ஜி.ஆர்..படங்கள் எப்போதாவது முடிந்தது உண்டா?

என்றாலும்...முடிவு எனக்குப் பிடித்திருக்கின்றது!

ஏனெனில்....எங்கள் எல்லோருக்குள்ளும்....ஒரு துருச்சாமி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்!

சந்தர்ப்ப சூழ்நிலைகள்....சமூக வலை...என்பன எம்மைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன என்று நினைக்கிறேன்!

அடுத்த கதை....எப்போது தொடங்குகின்றது?

துருச்சாமி அவ்வளவு மோசமான சாமியல்ல நல்லசாமி புங்கை. யோசித்து பாருங்கள், அவர் முதல் சுட்டுக் கொண்டுவந்த காய்கறி கோழி எல்லாம் ஊரே அன்னதானம்போல் சாப்பிட்டு விட்டினம். தனது பிள்ளை என்று தெரியாமலே சங்கிலி போட்டு விடுகின்றார். ராசப்புவுக்கு மிசின் வாங்க காசும் குடுத்து மோதிரமும் குடுத்து விடுகுது. பின்பு மோகனாவுக்கும் நகையும் பணமும் குடுத்து விடுகுது. பெரிதாக தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. மொத்தத்தில் அன்றைய நாள் நல்லா முடிந்தது.....!

ஐடியா இதுவரை இல்லை. ஒரு தலைப்பு போடுங்கோ சும்மா இருக்கும்போது ட்ரை பண்ணலாம். நன்றி புங்கை....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

ஒருநாளைக்கு ஒரு லீலை காணாதா தனி, பாடி வீக்காயிடாது....!  tw_blush:

எனக்கு சின்ன வயது தானே தாங்கும் அண்ணை அடுத்த லீலை சீ சீ  கதை எப்ப வரும்tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

Image associée Image associée

மிகப்பிரமாண்டமான இரண்டாவது வெளியீடு.......இக் கார்த்திகைத் தீபத் திருநாளில் அன்பர்கள் யாவரும்  துருச்சாமி  படித்து வீடு பேறடையவும் ......!  ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.