Jump to content

ஆட்டுப்பால் அப்பாசின் அடுத்ததோர்


Recommended Posts

ஆட்டுப்பால் அப்பாசின் அடுத்ததோர் அரசியல் இராணுவ ஆய்வு

இந்திய கடற்பரப்பில் புலிகளின் கப்பல் இந்திய கடற்படையால் சுற்றிவழைப்பு தமி்ழ் நாடு சட்டசபையில் பரபரப்பு அதுபற்றிய விரிவான ஆய்வு

கடந்த வாரம் இந்திய பாகிஸ்தான் கடற்பரப்பில் இந்திய ரோந்து கடற்படை படகு ஒன்று நங்கூரமிட பட்டிருக்கின்றது அதன் உள்ளே சில கடற் படையினர் சீட்டாடி கொண்டும் சில படையினர் உறங்கி கொண்டும் இருந்தவேளை அந்த கப்பலின் கப்ரன் சோம்பல் முறித்படி கடலை பார்க்கிறார்.

தூரத்தில் ஒரு படகு கப்ரன் உடனே தனது பைனாகுலரை எடுத்து அந்த கப்பலை நோட்டம் விடுகிறார் அந்த கப்பல் மேல் தளத்தில் தாடி வளர்த்த இருவர் தலையில் துண்டு கட்டியபடி நிப்பதை கவனித்து விட்ட கப்ரனுக்கு இவர்கள் தீவிர வாதிகளாய் இருக்கலாம் எனறொரு சந்தேகம் வரவே உடனே கப்பலை இயக்கி தூரத்தில் தெரிந்த கப்பலை வழி மறிக்குமாறு கட்டளையிருகிறார்.இவர்கள் கப்பல் மற்றைய கப்பலை அண்மித்ததும் அந்த கப்பலின் இயந்திரத்தின் உறுமல் சத்தம் மிக தெளிவாக கப்ரன் காதுகளில் கேட்கிறது .

உடனே அவர் ஊகித்து விட்டார் உறுமல் சத்தம் வருவாதால் நிச்சயம் இது புலிகளின் கப்பலாகதான் இருக்கும் எனவே அந்:த கப்பலை சுற்றிவழைத்து பிடிக்க உத்தரவிடுகிறார். உடனே சந்தேகத்திற்கிடமான கப்பல் கடலில் அங்கும் இங்கும் கெட்டி ஒட தொடங்க சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின்னர்.அந்த கப்பலில் இருந்த 5 பேர் கைது செய்ய படுகின்றனர். அந்த கப்பலின் உள்ளே சென்று பார்த்த இந்திய கடற்படைக்கு அதிர்ச்சி அனால் ஆச்சரிய படவில்லை காரணம் அவர்கள் சந்தேகித்தது சரிதான் உள்ளே பயங்கர ஆயுதங்கள் வெடிகுண்டுகள் இருந்தன.

ஆனால் யாரும் இந்திய கடற்படைக்கு எதிரா அவற்றை பயன் படுத்தவில்லை காரணம் உள்ளே இருந்தவர்களிற்கு ஆயுதங்களை இயக்கவோ அல்லது வெடிகுண்டுகளை எறியவோ தெரியாதது தான் காரணம் அவர்கள் வேலை கடத்துவது மட்டும் தான். மற்றும் புலிகளிற்கு தேவையா இராணுவ சீருடைகளான சங்கு மார்க் சாரங்கள் ஏராளமான ஜட்டிகள் பனியன்கள் அது மட்டுமல்ல தற்கொலை குண்டு தாரிகள் உடுத்தும் காஞ்சி புரம் பட்டு மற்றும் தங்க வேட்டை சாறிகள் என்பனவும் ஏராளமாக கைப்பற்ற பட்டன.

இதையடுத்து தமிழ் நாடு சட்டசபையில் சூடான விவாதம் நடை பெற்றது.செல்வி ஜெயலலிதா பேசுகையில் கருணாநிதி இந்த கடத்தலை தடக்க தவறி விட்டார் என்றும் அதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை விட்டு ஒடிபோக வேண்டும் என்றும் சொன்னபொழுது அதற்கு பதிலளித்த கலைஞர் தனக்கு கப்பல் ஓட்ட தெரியாதென்றும் தெரிந்திருந்தால் நிச்சயம் தன்னால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கும் என்றும் கூறினார்.

அனால் யெயலலிதா விடுவதாக இல்லை இப்போ புலிகள் வெகுவாக மன்னேறி விட்டார்கள் கப்பலில் மட்டுமல்ல விமானங்களிலும் ஆயுதம் கடதுகிறார்கள் அதுவும் அன்னிய நாட்டு விமானங்களில். இன்று காலையும் எனது வீட்டிற்கு மேலால் இரண்டு விமானங்கள் பறந்தன. நான் பூத கண்ணாடி வைத்து பார்த்த போது அவற்றில் ஒன்று எயார் அமெரிக்கா என்றும் மற்றையது எயார் லங்கா என்றும் எழுதியிருந்தது. இப்படி அன்னிநாட்டு விமானங்கள் எங்கள் நாட்டின் மேலால் பறப்பது எங்கள் தேசத்தின் ஜன நாயகத்திற்கு பெரும் பாதிப்பு அதற்கு கருணா நிதியும் உடந்தை என்று குற்றம் சாட்டினார்.

இது பற்றி பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் கேட்ட போது அந்த அம்மையார் எதற்கு பூத கண்ணாடி வைத்து விமானத்தை பார்க்க வேண்டும் அவர் சாதாரண மூக்கு கண்ணாடி போட்டு பார்த்தாலே பூதம் கண்ணாடி போட்டது போல தானே இருக்கும்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றார். நன்றி எல்லாம் என்னுடைய கற்பனை தானுங்கோ அடுத்த அய்வில் சநதிப்போம் .. :rolleyes:

Link to comment
Share on other sites

உங்கள் கட்டுரையில் ஒரு சிறு தவறு நடந்துள்ளது. புரட்சித்தலைவி திட்டும் போது தி.மு.க மைனாரிட்டி அரசு என்று குத்திக் காட்டியே திட்டுவார். அடுத்த முறை எழுதும் போது தி.மு.க மைனாரிட்டி அரசு எனும் சொற்பதத்தை பாவிக்க மறந்து விடாதீர்கள்!

Link to comment
Share on other sites

நக்கல் கூடிப்போச்சுது

ஈழவன் இதை நக்கல் எண்டா அப்ப அந்த செய்தியையும் அம்முவின்ரை அறிக்கையளையும் என்னவெண்டு சொல்லறது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன்டும் ஒரு நல்லதொரு ஆய்வுக்கட்டுரை படித்த திருப்த்தி :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா வீட்டுக்கு மேல விமானம் பறந்தது பற்றி இனி சோவின் துக்ளக்கிலும், தினமலரிலும், ராமின் இந்துவிலும் தலைப்புச் செய்தியாக வரப் போகுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனே அவர் ஊகித்து விட்டார் உறுமல் சத்தம் வருவாதால் நிச்சயம் இது புலிகளின் கப்பலாகதான் இருக்கும் எனவே அந்:த கப்பலை சுற்றிவழைத்து பிடிக்க உத்தரவிடுகிறார்

நல்லாத் தான் கடிக்கின்றியள் சாத்து! :lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.