Jump to content

ஆட்டுப்பால் அப்பாசின் அடுத்ததோர்


Recommended Posts

ஆட்டுப்பால் அப்பாசின் அடுத்ததோர் அரசியல் இராணுவ ஆய்வு

இந்திய கடற்பரப்பில் புலிகளின் கப்பல் இந்திய கடற்படையால் சுற்றிவழைப்பு தமி்ழ் நாடு சட்டசபையில் பரபரப்பு அதுபற்றிய விரிவான ஆய்வு

கடந்த வாரம் இந்திய பாகிஸ்தான் கடற்பரப்பில் இந்திய ரோந்து கடற்படை படகு ஒன்று நங்கூரமிட பட்டிருக்கின்றது அதன் உள்ளே சில கடற் படையினர் சீட்டாடி கொண்டும் சில படையினர் உறங்கி கொண்டும் இருந்தவேளை அந்த கப்பலின் கப்ரன் சோம்பல் முறித்படி கடலை பார்க்கிறார்.

தூரத்தில் ஒரு படகு கப்ரன் உடனே தனது பைனாகுலரை எடுத்து அந்த கப்பலை நோட்டம் விடுகிறார் அந்த கப்பல் மேல் தளத்தில் தாடி வளர்த்த இருவர் தலையில் துண்டு கட்டியபடி நிப்பதை கவனித்து விட்ட கப்ரனுக்கு இவர்கள் தீவிர வாதிகளாய் இருக்கலாம் எனறொரு சந்தேகம் வரவே உடனே கப்பலை இயக்கி தூரத்தில் தெரிந்த கப்பலை வழி மறிக்குமாறு கட்டளையிருகிறார்.இவர்கள் கப்பல் மற்றைய கப்பலை அண்மித்ததும் அந்த கப்பலின் இயந்திரத்தின் உறுமல் சத்தம் மிக தெளிவாக கப்ரன் காதுகளில் கேட்கிறது .

உடனே அவர் ஊகித்து விட்டார் உறுமல் சத்தம் வருவாதால் நிச்சயம் இது புலிகளின் கப்பலாகதான் இருக்கும் எனவே அந்:த கப்பலை சுற்றிவழைத்து பிடிக்க உத்தரவிடுகிறார். உடனே சந்தேகத்திற்கிடமான கப்பல் கடலில் அங்கும் இங்கும் கெட்டி ஒட தொடங்க சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின்னர்.அந்த கப்பலில் இருந்த 5 பேர் கைது செய்ய படுகின்றனர். அந்த கப்பலின் உள்ளே சென்று பார்த்த இந்திய கடற்படைக்கு அதிர்ச்சி அனால் ஆச்சரிய படவில்லை காரணம் அவர்கள் சந்தேகித்தது சரிதான் உள்ளே பயங்கர ஆயுதங்கள் வெடிகுண்டுகள் இருந்தன.

ஆனால் யாரும் இந்திய கடற்படைக்கு எதிரா அவற்றை பயன் படுத்தவில்லை காரணம் உள்ளே இருந்தவர்களிற்கு ஆயுதங்களை இயக்கவோ அல்லது வெடிகுண்டுகளை எறியவோ தெரியாதது தான் காரணம் அவர்கள் வேலை கடத்துவது மட்டும் தான். மற்றும் புலிகளிற்கு தேவையா இராணுவ சீருடைகளான சங்கு மார்க் சாரங்கள் ஏராளமான ஜட்டிகள் பனியன்கள் அது மட்டுமல்ல தற்கொலை குண்டு தாரிகள் உடுத்தும் காஞ்சி புரம் பட்டு மற்றும் தங்க வேட்டை சாறிகள் என்பனவும் ஏராளமாக கைப்பற்ற பட்டன.

இதையடுத்து தமிழ் நாடு சட்டசபையில் சூடான விவாதம் நடை பெற்றது.செல்வி ஜெயலலிதா பேசுகையில் கருணாநிதி இந்த கடத்தலை தடக்க தவறி விட்டார் என்றும் அதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை விட்டு ஒடிபோக வேண்டும் என்றும் சொன்னபொழுது அதற்கு பதிலளித்த கலைஞர் தனக்கு கப்பல் ஓட்ட தெரியாதென்றும் தெரிந்திருந்தால் நிச்சயம் தன்னால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கும் என்றும் கூறினார்.

அனால் யெயலலிதா விடுவதாக இல்லை இப்போ புலிகள் வெகுவாக மன்னேறி விட்டார்கள் கப்பலில் மட்டுமல்ல விமானங்களிலும் ஆயுதம் கடதுகிறார்கள் அதுவும் அன்னிய நாட்டு விமானங்களில். இன்று காலையும் எனது வீட்டிற்கு மேலால் இரண்டு விமானங்கள் பறந்தன. நான் பூத கண்ணாடி வைத்து பார்த்த போது அவற்றில் ஒன்று எயார் அமெரிக்கா என்றும் மற்றையது எயார் லங்கா என்றும் எழுதியிருந்தது. இப்படி அன்னிநாட்டு விமானங்கள் எங்கள் நாட்டின் மேலால் பறப்பது எங்கள் தேசத்தின் ஜன நாயகத்திற்கு பெரும் பாதிப்பு அதற்கு கருணா நிதியும் உடந்தை என்று குற்றம் சாட்டினார்.

இது பற்றி பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் கேட்ட போது அந்த அம்மையார் எதற்கு பூத கண்ணாடி வைத்து விமானத்தை பார்க்க வேண்டும் அவர் சாதாரண மூக்கு கண்ணாடி போட்டு பார்த்தாலே பூதம் கண்ணாடி போட்டது போல தானே இருக்கும்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றார். நன்றி எல்லாம் என்னுடைய கற்பனை தானுங்கோ அடுத்த அய்வில் சநதிப்போம் .. :rolleyes:

Link to comment
Share on other sites

உங்கள் கட்டுரையில் ஒரு சிறு தவறு நடந்துள்ளது. புரட்சித்தலைவி திட்டும் போது தி.மு.க மைனாரிட்டி அரசு என்று குத்திக் காட்டியே திட்டுவார். அடுத்த முறை எழுதும் போது தி.மு.க மைனாரிட்டி அரசு எனும் சொற்பதத்தை பாவிக்க மறந்து விடாதீர்கள்!

Link to comment
Share on other sites

நக்கல் கூடிப்போச்சுது

ஈழவன் இதை நக்கல் எண்டா அப்ப அந்த செய்தியையும் அம்முவின்ரை அறிக்கையளையும் என்னவெண்டு சொல்லறது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன்டும் ஒரு நல்லதொரு ஆய்வுக்கட்டுரை படித்த திருப்த்தி :P

Link to comment
Share on other sites

ஜெயலலிதா வீட்டுக்கு மேல விமானம் பறந்தது பற்றி இனி சோவின் துக்ளக்கிலும், தினமலரிலும், ராமின் இந்துவிலும் தலைப்புச் செய்தியாக வரப் போகுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனே அவர் ஊகித்து விட்டார் உறுமல் சத்தம் வருவாதால் நிச்சயம் இது புலிகளின் கப்பலாகதான் இருக்கும் எனவே அந்:த கப்பலை சுற்றிவழைத்து பிடிக்க உத்தரவிடுகிறார்

நல்லாத் தான் கடிக்கின்றியள் சாத்து! :lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.