Jump to content

நானும் ஒரு அகதி தான்! (பகுதி ஒன்றும், பகுதி இரண்டும்!)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 22/03/2017 at 7:00 PM, nochchi said:


உண்மையிலேயே பலரது அனுபவங்களை கதையாகப் (....!) பதிவுசெய்து செல்கிறது. பாராட்டுகள். 
லண்டனில், எனது நண்பரொருவர் வாடகைக்கெடுத்த வீட்டிலே முன்பிருந்தவர் செய்தஏமாற்றுச் செயல்கரணியமாக அவர் ஒரு கடனைப்பெறமுடியாத நிலையிருந்ததாகக் கூறியிருந்தார். எத்தனை பேரது தரிசனமோ சோமண்ணை.........

வரவுக்கும்...கருத்துக்கும் நன்றி நொச்சி!

இப்படியான சிலருடன் கூட்டு வைத்ததால் ...வாழ்க்கையில் மிகவும் நொந்து போனவர்கள் அதிகம்! அவர்களில் அடியேனும் ...ஒருவன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  காலத்தில் இங்கு வருபவர்களுக்கு எல்லாம் என்னுடன் இருக்கிறார்கள் என எழுதி எழுதி கையொப்பமிட்டுக்கொடுப்பதுண்டு.

ஒரு நாள் எனது பகுதி  காவல்த்துறை என்னை  அழைத்திருந்தது

போன போது நீர்  என்ன இங்க அமைச்சரா?

எல்லோருக்கும்  வதிவிடம்  அள்ளி  அள்ளி வழங்குகின்றீர்

என ஒரு கொப்பியை  தூக்கி  எனக்கு முன்போட்டார்

கொப்பியில்  எழுதி அது முடிந்திருந்தது

எனக்கு முன்னுக்கே அதன் நடுவால்  சிவப்பு   பேனாவால் கீறி விட்டு

சொன்னார் இனி  எவருக்காவது கடிதம் எழுதினால் உமக்கு வதிவிடம் பிரான்சில்இருக்காது என்று.

அதன் பின் விட்டது தான் வதிவிடம் வழங்கலை.

 

நன்றியண்ணா

ஒரு காலத்தில் நாங்கள் அனுபவித்ததை கதையாக கொண்டு வந்து

பழையவற்றை  ஞாபகப்படுத்தி  விட்டீர்கள்

தொடருங்கள்

Link to comment
Share on other sites

 ஊர் வழக்கில் எழுத்து இயல்பாக உங்களுக்கு வருகின்றது.  கடனட்டை மற்றும் கசினோ விசயங்களில் அழிந்து போகின்றவர்கள் எமமவர்களில் அதிகரித்துவருகின்றது. பலவிதமான தொடர் துன்பங்களில் இந்த விசயங்களும் இணைந்துகொள்கின்றது.. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்ள் 

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கின்றது புங்கை. இங்கு இப்பவும் கடனட்டை மோசடியில் தமிழர்கள் அடிக்கடி அகப்பட்டுக் கொள்கின்றார்கள். கடந்த வாரம் 25 வயதே ஆன இளம் தமிழ் பெண் கடனட்டை மோசடியில் கைதாகி இருந்தார். அவர் படம் எல்லா பத்திரிகைகளிலும் வந்து இருந்தது. அதற்கு முதல் ஒரு தமிழ் தம்பதி.....

உங்கள் மொழி நடையைப் பார்க்க பொறாமையாக இருக்கு. ஊர் வழக்கில் புகுந்து விளையாடுகின்றீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

வணக்கம்...கொழும்பான்!

-----தமிழ் படிக்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு அதிகமாகக் கிடைக்கவில்லை! சாதாரண தரத்துடன்..தமிழுக்கு விடை கொடுக்க வேண்டி ஏற்பட்டது!

புங்கை....  சிவராமலிங்கம் மாஸ்ரர், தம்பையா மாஸ்ரர் ஆகியோரின் பெயரை குறிப்பிட  மறந்ததை.... 
மிக வன்மையாக ... கண்டிக்கின்றோம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் உதவக்கூடிய இளகிய மனம் படைத்தவர்களும், எவரையும் மொட்டையடித்து எதுவித குற்றவுணர்வும் இல்லாமல் சுத்துமாத்துச் செய்து பணம் சம்பாதிப்பவர்களையும் நாம் அதிகம் பார்க்கின்றோம்.

கதையில் சொல்லப்பட்டதைவிட படுமோசமான சுத்துமாத்துச் செய்தவர்களை நேரே கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் படிக்க முடிந்ததது  புங்கை அருமை அப்படியே ஒரு சிலரின் நடத்தையை குறிப்பிட்டூள்ளீர்கள் மத்திய கிழக்கில் ஒருவனுக்கு  என்னால் எப்படியெல்லாம் உதவி செய்ய முடியுமோ உதவி செய்து இருக்கிறேன் ஆனால் நான் சும்மா போண் பண்ணினால் கூட கட் பண்ணுகிறான் ஆனால் சில  காலம்  பழகிய வங்காளி அடிக்கடி போண் பண்ணி கதைக்கிறான் பாருங்கோவன்  நம்மட ஒரு சிலதுகளை நம்பினால் நடுத்தெருவில் நிப்பாட்டி விடுவார்கள்  செய்த உதவிகளை மறந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2017 at 5:43 AM, ரதி said:

எங்கே லண்டனில் நடக்கும் கதை மிச்சத்தை காணோம்:unsure:

மிச்சக் கதை வந்திட்டுது.....!

ரதியைத் தான் காணோம்!:unsure:

On 3/21/2017 at 10:21 PM, ஈழப்பிரியன் said:

புங்கை சோமண்ணை அவுஸ் வரும் போது மாட்டேன் என்று சொல்லாமல் உங்க வீட்டில ஒரு அறை கொடுக்க வேணும்.

நிஜங்களை மனதில் வைத்து அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

லண்டனில விடுகிற ....விளையாட்டுக்களை...அவுசில விடுகிறது கொஞ்சம் கஸ்டம் என்பது தான் எனது....அனுமானம்!

லண்டன் ஒரு கடல்..!

அவுஸ் ஒரு கேணி...!:rolleyes:

நன்றி...ஈழப்பிரியன்!

On 3/22/2017 at 2:03 AM, வல்வை சகாறா said:

ரோமியோ இப்படி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட விடயங்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றன. எப்படியும் வாழலாம் என்பதும் அச்சம் அற்றுப்போன தன்மையும் மனிதவாழ்க்கையை எங்கெங்கோ எல்லாம் இழுத்துச் செல்கிறது. அதர்மங்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை... தர்மத்தை மட்டுமே துன்பங்கள் சூழ்கின்றன. அநுபவப்பாடங்கள் அசராத துணிவை கொடுக்கின்றன. வல்லவன் வாழ்வான் என்பதே புதுமொழி.

வரவுக்கு நன்றி....சகாறா!

எம்மவர்களின் வருமானம்...ஒரு மணல் குன்றைப் போன்றது!

ஆனால் தேவைகளோ....மரியானா அகழியைப் போல...ஆழமானது!

எவ்வாறு நிரப்புவது.....?

பொய்யும்...களவும்...புனை சுருட்டும்எ...ந்த நேரமும் கபட சிந்தனையும் தான்....எம்மவரில் பலருடையது!

 

ஆள் கடத்தல்காரர்களும்..கஞ்சா கடத்துவனும்....கள்ளக் கார்ட் அடிக்கிறவனும்....திருவிழாக்களின் உபயக்காரர்களாகி...தங்களுக்கென ஒரு நிலையான சமூக அந்தஸ்த்தை ..உருவாக்கிக் கொள்ள எமது சமூகமே வழி வகுத்துக் கொடுக்கிறது!.

காயமே கோவிலாகி ...கடி மனம் அடிமையாகி ...வாய்மையே தூய்மையாகி....மனமணி லிங்கமாகும் வரை.......அனைத்துமே தொடரும்!

எமது மதம் ஒரு அழகிய மதம்!

ஆனால் இப்போது...எமது தெய்வங்கள் கூட.......பணத்திமிரில் மிதக்கின்றன!

 

நல்லூர்க் கந்தன்      - அலங்காரக் கந்தன்!

சந்நிதிக் கந்தன்.........அன்னக்கந்தன்!

கதிர்காமக் கந்தன் ----- அபிஷேகக் கந்தன்!

சிட்னி முருகன் ------????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/03/2017 at 10:21 PM, ஈழப்பிரியன் said:

புங்கை சோமண்ணை அவுஸ் வரும் போது மாட்டேன் என்று சொல்லாமல் உங்க வீட்டில ஒரு அறை கொடுக்க வேணும்.

நிஜங்களை மனதில் வைத்து அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

சோமண்ணை அடிப்படையில்...மிகவும் நல்ல மனுசன் தான்!

ஆனால் எமது தேவைகள்...எப்பவுமே அளவுக்கு மிஞ்சியவை! 

ஆனால் அவற்றை...நியாயமான முறையில் அடைவதற்கு...ஆயுட்காலம் போதாது!

அது தான்...குறுக்கு வழியைப் பலர் நாட வேண்டி ஏற்படுகின்றது..ஈழப்பிரியன்!

On 22/03/2017 at 2:03 AM, வல்வை சகாறா said:

ரோமியோ இப்படி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட விடயங்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றன. எப்படியும் வாழலாம் என்பதும் அச்சம் அற்றுப்போன தன்மையும் மனிதவாழ்க்கையை எங்கெங்கோ எல்லாம் இழுத்துச் செல்கிறது. அதர்மங்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை... தர்மத்தை மட்டுமே துன்பங்கள் சூழ்கின்றன. அநுபவப்பாடங்கள் அசராத துணிவை கொடுக்கின்றன. வல்லவன் வாழ்வான் என்பதே புதுமொழி.

எங்களது கடவுளர்களும்... இப்படியானவர்களைத் தானே ஊக்குவிக்கிறார்கள்!

எமது ஊரில்..(.அதுவும் கிட்டத் தட்ட வல்வெட்டித் துறையைப் போலத்தான்), சாமிக்கு மிகவும் அருகில் ..அண்மிக்கக் கூடிய வலிமை இவகளிடம் தான் இருந்திருக்கின்றது!

தீர்த்தத் திருவிழாவில், தேர்த் திருவிழாவில்...அர்ச்சகருக்கு அடுத்ததாக இவர்கள் தான் அமர்ந்திருப்பார்கள்! சூரிய ஒளியில், அல்லது டியூப் லைட் வெளிச்சத்தில்...இவர்களது புலிப்பல்லுப் போட்ட...தங்கச் சங்கிலி மின்னுவதைப் பார்க்கவே ஆயிரம் கண்கள் வேண்டும்!

அதர்மம் செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்பது சமூகத்தை ஒழுங்காக வழி நடத்துவதற்காகக் கூறப்படும் ஒரு கருத்தாகும்!

நீங்களுமா...அதை நம்பிறீங்கள்? 

On 22/03/2017 at 2:29 AM, suvy said:

எப்படித் துணிச்சலுடன் செய்தாலும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் மாட்டுப் பட்டு விடுவார்கள்....! இது கதையான போதிலும் அங்கங்கு நடப்பவையே.....!

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி...சுவியர்!

நாங்கள் தான்...எமது மன அமைதிக்காக..இவ்வாறு சொல்லி...எம்மைத் திருப்திப் படுத்திக் கொள்கிறோம் போல உள்ளது!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/03/2017 at 2:53 AM, Maruthankerny said:

இனி வரும் காலங்களில் கொஞ்சம் கடினம் ...........
இப்போதும் பிடிக்க வேண்டும் என்றால் பிடிக்க முடியும் 
அவர்களுக்கு அதில் இஸ்டம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் 

க்ரெடிட் கார்ட் கொம்பனிகள் ....
செலவு என்று ஒரு வருடத்திற்கு இத்தனை மில்லியன் என்று 
ஒவ்வரு வருட தொடக்கத்திலும் ஒரு பட்டியல் போடுவார்கள் 
அவர்கள் பட்ஜட்டுக்குள் சோமண்ணை ஆட்கள் நிற்பதால் .... அவர்களுக்கும் சோமண்ணை 
போன்றவர்களுக்கும்  பிரச்சனை இல்லை.

நீதி நேர்மையோடு இருக்கிற எங்களை போன்றவர்கள் ஒருநாள் பிந்தினாலும் 
ஒரு $35 வாங்கி அதை நிறுவி கொள்வார்கள். 
எங்களுக்கும் அவர்களுக்கும்தான் பிரச்சனை.
காரணம் 
லாபம் ஈட்டிக்கொடுக்கும் பட்ஜெட்டை நிரப்ப வேண்டிய ஒரு 
தார்மீக கடமை எமக்கு உண்டு . 

மிகவும் உண்மை...மருதர்!

ஒரு மனிதன்...நல்லவனாக இருப்பதற்கும்...கெட்டவனாக மாறுவதற்குமிடையில் ஒரு சிறு இடைவெளி தான் உள்ளது!

அதனைக் குளிர் விட்டுப் போகும் நிலை என்று கூடச் சொல்லலாம்!

சிலருக்கு அது இலகுவில் கை வந்து விடுகின்றது!

அங்கலாய்க்கும் மனதை சமாதானப் படுத்த ஒரு காரணத்தை அது தேடுகின்றது! கொம்பனிகள்  அறா வட்டி வாங்குகின்றன! அதனால் வரும் இழப்பு கொம்பனிகளுக்குத் தானே! தனிப்பட்ட மனிதர்கள் பாதிக்கப் பட மாட்டார்கள் தானே என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொள்ளுவார்கள்! அட...இலங்கையிலிருந்து எவ்வளவத்தை அள்ளிக்கொண்டு போனாங்கள்! அதோடு ஒப்பிடும் போது நாங்கள் எடுப்பது ஒரு கொஞ்சம் தானே! இப்படியும் சொல்லுகிறார்கள்!

எனினும் இறுதியில்...இவர்களது செயல்களால் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்வதும் எங்களைப் போன்றவர்களே! 

On 22/03/2017 at 3:20 PM, Thumpalayan said:

நன்றாக இருக்கு அண்ணா ஆனால் கடைசிப் பகுதியை அவசரத்தில் எழுதி முடிச்ச ஒரு பிரமை.

இப்ப சொல்லுங்கோ சோமண்ணையை நாங்கள் எப்பிடியுங்கோ உள்ளுக்க விடுறது. பிறகு மனிசன் அவுஸ் பாங்கயெல்லாம் நாஸ்த்தி பண்ணிப்போடுமே!

நன்றி...தும்ஸ்!

யாழில் எழுதும் போது ஒரு பிரச்சனை வருகின்றது!

எழுதிக்கொண்டிருக்கும் போது...விரல்கள் விசைப்பலகையைத் தட்டிய படியேயிருக்கும்! நிறுத்தி விட்டு வாசித்தால்..ஒரு மகா பாரதமே கணனித் திரையில் தெரியும்! 

அநேகமானவர்கள்...கதையின் நீளத்தைப் பார்த்ததுமே...நடையைக் கட்டி விடுவார்கள்!

அதற்காகக் கொஞ்சம் குறைக்க வேண்டியுள்ளது! இருந்து....மிகவும் முக்கியமானவற்றை...நீக்காது வைத்திருக்கத் தான் முயற்சிக்கிறேன்!

அவுஸில் ...லண்டனைப் போல வெட்டி..விளையாடுவது என்பது கொஞ்சம் கடினம் என்று நினைக்கிறேன்!

அவுஸின் சனத் தொகையே இருபத்தைந்து மில்லியன்! ஆனால் லண்டன் நகரின் சனத் தொகை இருபத்தைந்து மில்லியனிலும் அதிகம்!

அதனால் தான் அங்கு ...சோமண்ணை போன்றவர்களால் வெட்டிப் புடுங்க முடிகின்றது என நினைக்கிறேன்!

மற்றும்..இவர்களைப் போன்றவைகளைத் தேடித் திரிவதும்..அவர்களைச் சடத்தின் பிடிக்குள் கொண்டு வருவதற்குமான செரல்வுகள் மிகவும் அதிகம்!

எங்கள் பாஷையில் சொல்வதானால்....றைற் ஓவ் அண்ட் மூவ் ஒன் ...தான்!

Link to comment
Share on other sites

On 1.4.2017 at 4:42 AM, புங்கையூரன் said:

ஒரு மனிதன்...நல்லவனாக இருப்பதற்கும்...கெட்டவனாக மாறுவதற்குமிடையில் ஒரு சிறு இடைவெளி தான் உள்ளது!

அதனைக் குளிர் விட்டுப் போகும் நிலை என்று கூடச் சொல்லலாம்!

சிலருக்கு அது இலகுவில் கை வந்து விடுகின்றது!

 

On 1.4.2017 at 4:42 AM, புங்கையூரன் said:

எங்கள் பாஷையில் சொல்வதானால்....றைற் ஓவ் அண்ட் மூவ் ஒன் ...தான்!

புங்க்ஸ் பிடித்திருக்கு :91_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமண்ணையைப் போலப் பலர் இந்த உலகில் வாழ்கின்றனர்.

கதை சொன்ன விதம் அழகாக இருந்தது புங்கையூரான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.