Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

டிக் என்று வந்து விழுந்த மெசெஞ்சரின் சத்தம் அவளைத் திடுக்கிட்டு எழ வைத்தது. பதட்டத்துடன் கணவனை எட்டிப் பார்த்தவளுக்கு அவன் விழிக்கவில்லை என்று தெரிந்து நின்மதிப் பெருமூச்சு ஒன்று எழுந்தது. நல்ல காலம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார். இல்லை எனில் ஆரவன் உனக்கு இந்த நேரத்தில மெசேச் அனுப்புறான் என்று .......... எதேதோ கேட்டுப் பிரச்சனையாகியிருக்கும். போனை எடுத்து சத்தத்தை நிறுத்திவிட்டு மீண்டும் போர்வையைப் போர்த்தியவளுக்கு மனதில் சொல்லவொண்ணாத் துயரம் ஏற்பட்டது.

முன்னர் இவளின் முகநூலில் 1300 பேர் நட்பில் இணைந்திருந்தனர். அவர்களில் பலரை இவளுக்கு தெரியாதுதான். ஆனால் அவர்கள் போடும் பதிவுகளைப் பார்த்தது, பிரச்சனை இல்லாதவர்கள் என்று மனதில் பட்டதில் நட்பில் இணைத்திருந்தாள். ஆனாலும் நல்லவர்கள் போல் மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டு மெசெஞ்சரில் வந்து "அழகாய் இருக்கிறீகள், ஐ லவ் யூ மேடம். சாப்பிட்டீங்களா, உங்களை நினைத்தால் தூக்கமே வரமாட்டேங்குது" என்றெல்லாம் எழுதுபவர்களுக்குப் பதில் போடாது அவர்களை நீக்கியதில் ஒரு நானூறு பேர் குறைந்துவிட்டார்கள்.

ஆரம்பத்தில் தினமும் ஆறுபேர் காலை வணக்கம், இரவுவணக்கம் என்று போடுவது இவளுக்கு மகிழ்வாக இருந்தாலும் போகப்போகச் சலிப்புடன்  எரிச்சலும் சேர்ந்துகொள்ள இரண்டு வாரங்கள் யாருக்கும் எதுவும் போடாமலே இருந்தாள். அதன்பின் மூவர் தாமாக நிறுத்திவிட மற்ற மூவர் மட்டும் சளைக்காமல் வணக்கம் போட்டுக்கொண்டே நலமா சிஸ்டர்? எங்கே உங்களைக் காணவில்லை சகோ என்றெல்லாம் எழுத இவளும் தொடரவேண்டியதாகிவிட்டது.

சரி எனக்கு வணக்கம் போடுவதில் அவர்களுக்கு சிறு சந்தோசம் என்றால் அதை ஏன் கெடுப்பான். இதுவரை அவர்கள் எல்லை தாண்டவில்லையே எனத் தனக்குத்தானே சமாதானம் செய்தும் கொண்டாள்.

இவள் பத்து ஆண்டுகளாக முகநூலில் இணைந்திருந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான் அதில் பதிவுகள் போடத் தொடங்கி. காலை ஆறு மணிக்கு அலாரம் அடிக்க, எழும்பியதும் உடனே கை நாடுவது செல்போனைத்தான். முகநூல் சென்று வணக்கம் போட்டு, பதிவு ஒன்று போட்டு, மற்றவரின் பதிவுக்கு லைக் செய்து என ஒரு பத்து நிமிடங்கள் செலவுசெய்த பின்னர் தான் பல்தீட்டவே செல்வது. அவள் பல்தீட்டும்போது கூட டிக் என்று சத்தம் கேட்டால் ஓடிப்போய் பார்க்கவேண்டும் போல் எழும் என்னத்தை அடக்கியபடி தன அலுவல்களை முடிப்பாள்.

காலையில் பள்ளிக்குப் போகும் பிள்ளைகளுக்கும் வேலைக்குப் போகும் கணவனுக்கும் தேநீர் உணவு எல்லாம் செய்து கொடுத்து அனுப்பிய பின் சோபாவில் வந்து இருந்தால் முகநூலில் லைக் செய்வது, மற்றவர் எழுதும் கொமன்ற்சுக்கு பதில் எழுதுவது, மற்றவர்களின் பதிவுகளைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக நேரம் போய்விடும். மதியம் சமைத்துச் சாப்பிட்டு வேறு அலுவல்கள் இருந்தால் செய்துவிட்டு மீண்டும் முகநூலை எட்டிப்பார்த்துவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு எழுந்து ஒரு தேநீர் குடிக்க கடைக்குட்டி பள்ளியிலிருந்து வந்துவிடும். அதன்பின் கணவன் பிள்ளைகள், இரவுச் சமையல், தொலைகாட்சி என்று சந்தோசமாகத்தான் போய்க்கொண்டிருந்த வேளையில் தான் அவளுக்கு முடிந்துபோன ஏழரைச் சனி மீண்டும் தொற்றிக்கொண்டது.

கணவனுக்குப் பணிக்குறைப்பு ஏற்பட்டு வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து வீட்டில் இருக்க அவளுக்கு வந்தது ஆப்பு.

கணவனிடம் சிமாட் போன் இருந்தாலும் அந்தாள் தன் அவசர தேவைக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துவார். அதனால் முகநூல் பக்கம் எட்டிப் பார்த்ததோ முகநூல் கணக்கோ கூட இல்லை. இவளின் போனில் எல்லாம் இருந்து அடிக்கடி டிங் டிங் சத்தம் கேட்க இவள் போனைத் திறப்பதும் பார்ப்பதும், சிலருக்குப் பதில் எழுதுவதும், தனக்குத்தானே சிரிப்பதும் சந்தேகத்தை உண்டாக்கியதை இவள் அறியவில்லை.

ஆரோடை நெடுக சற் பண்ணுறாய்? ஆரவன் உனக்கு நெடுக மெசேச் அனுப்புறான்? நான் வீட்டில் நிக்கிறன். என்னோடை கதைச்சுச் சிரிக்காமல் உதுக்குள்ளேயே கிடக்கிறாய். பத்துமணிக்குப் பிறகு போனைத் தொடக்குடாது, ரொயிலற்றைக் கழுவு, வீட்டை மப்பண்ணு என்று வேலை ஏவியதில் இவளுக்குக் கடுப்பானது. "நான் என்ன வேலைக்காரியே? எதுக்கு என்னை நெடுக ஏவுறியள்? மனிசரை ஒரு நிமிடம் கூட இருக்க விடாமல் ........

சமைச்சு வைக்கிறன், பாத்திரம் கழுவுறன், உடுப்புகள் எல்லாம் தோய்க்கிறதும் நான்தான். வீடுவாசலை எந்த நேரமும் கூட்டு கூட்டு என்றால் .... இது என்ன ஹோட்டலே பளிச் பளிச் என்று இருக்க" என்று இவள் கத்த, "உனக்கு இப்ப என்னை விட உந்த முகநூல் காறங்கள் பெரிசாப் போட்டாங்களோ? எத்தினை பேர் உங்கை வேலைவெட்டி இல்லாமல் நிக்கிறாங்கள். ஒருத்தனும் வேலைக்குப் போகாமல் நிண்டு கடலை போடுறாங்களோ.".......... இப்பிடி ஒவ்வொருநாளும் கைபட்டால் குற்றம். கால்படால் குற்றம் என்பது போல் ஆனது வாழ்வு.

எனக்கு மாமியார் இல்லாத குறையை இந்தாள் தீர்த்துவைக்குது என்று மனதுள் மறுகியவள், இவருக்கு நான் அடிமையே இவர் சொன்ன உடன எல்லாத்தையும் நிப்பாட்ட என்று வீம்பு எழ, "நீங்கள் சொன்ன உடன எல்லாத்தையும் போட்டுட்டு இருக்க நான் சின்னப் பிள்ளை இல்லை. முதல்ல முகநூல் எண்டா என்ன என்று தெரிஞ்சு கொள்ளுங்கோ. அதுக்குப் பிறகு கதையுங்கோ" என்றதன் பின்னரும் மனுஷன் மூஞ்சியை நீட்டிக்கொண்டு சாப்பிடாது அடம்பிடிக்க, முதற்தடவையாக என்ன செய்வது என்று தெரியாது கோபம், ஏமாற்றம், பச்சாதாபம் எல்லாம் ஒருங்கே எழ, அடுத்துவந்த நாட்கள் கணவனின் வேலை நாள் ஆதலால் எந்தப் பிரச்சனையும் இன்றி நகர்ந்தாலும் அந்த இடைவெளியில் நாளும் பொழுதும் யோசித்ததில் புதிய வழி ஒன்று அவளுக்குக் கிடைத்தது.

அடுத்தநாள் கணவன் வீடில் நிற்க "வாங்கோ உங்களோடை கதைக்கவேணும்" என்று கூறியபடி கணவன்முன் அமர்ந்தாள்.

இந்தாங்கோ உங்களுக்கு ஒரு முகநூல் கணக்கு திறந்திருக்கிறன். கிட்டத்தட்ட ஒரு இருநூறு பேரையும் அதில இணைச்சிருக்கிறன்.   ஒருமாதம் நான் முகநூல் பக்கமே போகேல்லை. ஐப்பாட்டில என்ர  முகநூல் திறந்தபடியே இருக்கு. என்னட்டை எந்த ஒளிவுமறைவும் இல்லை. எனக்கு என்ர குடுப்பம் முக்கியம். அதேநேரம் என் சுதந்திரமும் எனக்கு முக்கியம்தான். என்னை அடிமை போல் நீங்கள் நடத்த முடியாது. ஒரு விடயத்தைப் பற்றிக் கதைக்கும்போது அதுபற்றித் தெரியாமல் கதைக்ககூடாது என்று இவள் முடிக்கும் முன்னரே எனக்கு உது தேவை இல்லை என்றபடி இவள் சொல்வதைக் கேட்காமல் முகத்தைத் திருப்பிய கணவனிடம் "ஒரு மாதம் போகட்டும் அதுக்குப் பிறகு நாங்கள் திரும்பவும் கதைப்பம்" என்று சொல்லிவிட்டுக் குசினிக்குள் செல்ல, அவள் பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டு போனை எடுத்து முகநூலைத் திறப்பதை இவள் சிரிப்புடன் பார்த்தாள்.

இப்ப மூன்று வாரங்களுக்குப் பிறகு, எனக்கு உந்த முகநூலும் கோதாரியும் வேண்டாம் என்று பிறியம்விட்ட மனிசன், காலமை பின்னேரம் என்று அதுக்குள்ளயே கிடப்பதும் வீடியோக்களைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக வீட்டில் உள்ளவர்களைக் கணக்கில் எடுக்காமல் இருக்க இன்னும் ஒருவாரம் போகட்டும் என்று இவள் கொடுப்புக்குள் சிரித்தபடி கடந்து செல்கிறாள்.

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுமே இன்றைய நாட்களில் பல குடும்பங்களுக்குள் நடந்து கொண்டிருக்கும் அங்கலாய்ப்பு இது. சிறு கதையாக வடித்துள்ளீர்கள். பலர் வீட்டில் இதனால் கைத்தொலைபேசிகள் பல உடைவதாகக் கேள்வி... பாராட்டுக்கள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முன்னர் இவளின் முகநூலில் 1300 பேர் நட்பில் இணைந்திருந்தனர். அவர்களில் பலரை இவளுக்கு தெரியாதுதான். ஆனால் அவர்கள் போடும் பதிவுகளைப் பார்த்தது, பிரச்சனை இல்லாதவர்கள் என்று மனதில் பட்டதில் நட்பில் இணைத்திருந்தாள். ஆனாலும் நல்லவர்கள் போல் மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டு மெசெஞ்சரில் வந்து "அழகாய் இருக்கிறீகள், ஐ லவ் யூ மேடம். சாப்பிட்டீங்களா, உங்களை நினைத்தால் தூக்கமே வரமாட்டேங்குது" என்றெல்லாம் எழுதுபவர்களுக்குப் பதில் போடாது அவர்களை நீக்கியதில் ஒரு நானூறு பேர் குறைந்துவிட்டார்கள்.

பதிவு நல்லாருக்கு!

இதுக்குத் தான் வடிவான படங்களை...முக நூலில் போடக்கூடாது எண்டு சொல்லுறது!

இது நான் ...யூறோ ரெயினிலை  போகேக்கை எடுத்தது....!

இது நான் பரிசுக்குள்ளை தொலைஞ்சு போன போது எடுத்தது...எண்டால் பாக்கிற சனம் கொஞ்சம் ஆர்வக் கோளாறில ..ஏதும் எழுதும் தானே!

அது சரி...உங்கட ஆள்.....அந்தக்காலத்து மனுஷன் போல கிடக்குது..!

 

எதுக்கும் மனுசனிலையும் ஒரு கண் வைச்சிருங்கோ!

உலகம் முன்னை மாதிரி இல்லை..!

முகநூலும் அதுவுமா....காலம் கெட்டுப்போய்க் கிடக்கு!:unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் பண்டியோடு சேர்ந்து பசுவும் மலம் தின்னுது. 

இப்போ எல்லோர் வீடுகளிலும் எத்தனை பேர் இருந்தாலும் ஆளுக்கொரு மூலையில் கைத்தொலைபேசியுடன் இருப்பதைக் காணலாம்.

பாராட்டுக்கள் சுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கள யதார்த்தத்தை அப்பட்டமாய் போட்டுடைத்துள்ளீர்கள்.... நல்லாய் இருக்கு....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தற்போதைய நடை முறையை கூறிய விதம் நன்று 

Link to comment
Share on other sites

விசுவாமித்திரர் மன்னிப்பாராக.

சில நாட்களின் முன்னர் நம்ம கள உறவுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். எந்த நேரமும் தொலைபேசியை நோண்டிக்கொண்டு இருந்தார். முதல் தடவையாக யாழ்ப்பாணம் வந்தவர் யாழில் பார்த்ததைவிட மொபைலில் பார்த்ததுதான் அதிகம்.

அட பாவி - உதை மூடிற்று வெளியில பாரப்பா என்றேன். 

அடுத்து ஒரு படம் எடுப்பார் + பகிருவார் + கொமெண்ட்ஸை எனக்கு காட்டுவார் + கடுப்பேத்துவார்.

இப்படியே போனபோது என்னிடமும் ஒரு கேள்வி கேட்டார்.
"உங்களுக்கு இப்படி செய்திகள் வருவதில்லையா உங்களின் மொபைலில்?"

இல்லை அப்பன் எனது மொபைலில் மூஞ்சி புத்தகம் + டுவீட்டர் + யாழ் + மெயில் இணைப்பதில்லை. அது வீட்டில் இருக்கும்போது மட்டுமே பார்ப்பன் வெளியே இயற்கையை ரசிப்பேன் என்றேன். என்ன நினைத்தாரோ, என் மீது ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டு மறுபடியும் மொபைலை நோண்டினார்.

இதற்கு நம்ம தலை மோகனும் விதிவிலக்கில்லை - யாழ் தனிமடலினூடாக ஒரு விடயத்தை சொல்லிவிட்டு பதில் வருமென்று காத்திருந்து...  பின்னர் நேரில் தொலைபேசினார்.:grin:

எதுவும் அளவுடன் இருந்தால் அமிர்தமே!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

விசுவாமித்திரர் மன்னிப்பாராக.

சில நாட்களின் முன்னர் நம்ம கள உறவுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். எந்த நேரமும் தொலைபேசியை நோண்டிக்கொண்டு இருந்தார். முதல் தடவையாக யாழ்ப்பாணம் வந்தவர் யாழில் பார்த்ததைவிட மொபைலில் பார்த்ததுதான் அதிகம்.

அட பாவி - உதை மூடிற்று வெளியில பாரப்பா என்றேன். 

அடுத்து ஒரு படம் எடுப்பார் + பகிருவார் + கொமெண்ட்ஸை எனக்கு காட்டுவார் + கடுப்பேத்துவார்.

இப்படியே போனபோது என்னிடமும் ஒரு கேள்வி கேட்டார்.
"உங்களுக்கு இப்படி செய்திகள் வருவதில்லையா உங்களின் மொபைலில்?"

இல்லை அப்பன் எனது மொபைலில் மூஞ்சி புத்தகம் + டுவீட்டர் + யாழ் + மெயில் இணைப்பதில்லை. அது வீட்டில் இருக்கும்போது மட்டுமே பார்ப்பன் வெளியே இயற்கையை ரசிப்பேன் என்றேன். என்ன நினைத்தாரோ, என் மீது ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டு மறுபடியும் மொபைலை நோண்டினார்.

இதற்கு நம்ம தலை மோகனும் விதிவிலக்கில்லை - யாழ் தனிமடலினூடாக ஒரு விடயத்தை சொல்லிவிட்டு பதில் வருமென்று காத்திருந்து...  பின்னர் நேரில் தொலைபேசினார்.:grin:

எதுவும் அளவுடன் இருந்தால் அமிர்தமே!
 

இதில தான் கேள் பிரண்டு இல்லையென்று போய் அதில இருக்கும் மொக்கை கவிதைகளூக்கும் கதைகளுகளும் லைக்கையும் கொமண்டையு ம் போட்டு பிகர உசார் பண்ணலாம் என்று பார்த்தால் போட்டுக்கொடுக்குறீர்களே ந்ல்லா வருவியள் 

இதுல எனக்கு வெளி நாடுகளில் இருந்து தமிழில் ரைப்பண்ணிகொடுக்க முடியுமா என்று நல்ல பெண் நண்பிகள் கிடைத்து விட்டார்கள்  பெண்கள் நம் கண்கள் எப்புடி  போற்றுவோம் போற்றுவோம் என்று கலைஞன் பாடுன பாடல் தான் ஞாபகம் வருது ஹாஹாஹாtw_blush:tw_blush:

22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆரம்பத்தில் தினமும் ஆறுபேர் காலை வணக்கம், இரவுவணக்கம் என்று போடுவது இவளுக்கு மகிழ்வாக இருந்தாலும் போகப்போகச் சலிப்புடன்  எரிச்சலும் சேர்ந்துகொள்ள இரண்டு வாரங்கள் யாருக்கும் எதுவும் போடாமலே இருந்தாள். அதன்பின் மூவர் தாமாக நிறுத்திவிட மற்ற மூவர் மட்டும் சளைக்காமல் வணக்கம் போட்டுக்கொண்டே நலமா சிஸ்டர்? எங்கே உங்களைக் காணவில்லை சகோ என்றெல்லாம் எழுத இவளும் தொடரவேண்டியதாகிவிட்டது.

சரி எனக்கு வணக்கம் போடுவதில் அவர்களுக்கு சிறு சந்தோசம் என்றால் அதை ஏன்

இந்த டீமை எங்கேயோ பார்த்தமா கிடக்கு அக்கா அவன்ங்களா இவங்க‌:rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

3 minutes ago, முனிவர் ஜீ said:

பிகர உசார் பண்ணலாம் என்று பார்த்தால் போட்டுக்கொடுக்குறீர்களே

வேறு ஒரு திரியில் விசுவாமித்திரரும் சிஷ்சைகளும் கடற்கரையில் சல்லாபம் என்றுவேற படம் போட்டு இருக்கிறேனே - பாக்கலியா?:grin:

அனுமதி தந்தது நீங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

வேறு ஒரு திரியில் விசுவாமித்திரரும் சிஷ்சைகளும் கடற்கரையில் சல்லாபம் என்றுவேற படம் போட்டு இருக்கிறேனே - பாக்கலியா?:grin:

அனுமதி தந்தது நீங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

 

2 minutes ago, ஜீவன் சிவா said:

வேறு ஒரு திரியில் விசுவாமித்திரரும் சிஷ்சைகளும் கடற்கரையில் சல்லாபம் என்றுவேற படம் போட்டு இருக்கிறேனே - பாக்கலியா?:grin:

அனுமதி தந்தது நீங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

யோவ் ஏன்யா ஏன் நல்லா வருவியள் :2_grimacing:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை வழங்கிய உறவுகள் ஆதவன், ஜீவன்சிவா, யாயினி,புங்கை, நேசன், கண்மணியக்கா,நிலாமதி அக்கா,ஈழப்பிரியன், வல்வை சகாரா,முனிவர்,நவீனன்,குமாரசாமி ஆகிய உறவுகளுக்கு நன்றி.

22 hours ago, வல்வை சகாறா said:

சுமே இன்றைய நாட்களில் பல குடும்பங்களுக்குள் நடந்து கொண்டிருக்கும் அங்கலாய்ப்பு இது. சிறு கதையாக வடித்துள்ளீர்கள். பலர் வீட்டில் இதனால் கைத்தொலைபேசிகள் பல உடைவதாகக் கேள்வி... பாராட்டுக்கள் உரித்தாகட்டும்

நன்றி சகாரா. எங்கட வீட்டில இன்னும் உடையேல்லை.

21 hours ago, புங்கையூரன் said:

பதிவு நல்லாருக்கு!

இதுக்குத் தான் வடிவான படங்களை...முக நூலில் போடக்கூடாது எண்டு சொல்லுறது!

இது நான் ...யூறோ ரெயினிலை  போகேக்கை எடுத்தது....!

இது நான் பரிசுக்குள்ளை தொலைஞ்சு போன போது எடுத்தது...எண்டால் பாக்கிற சனம் கொஞ்சம் ஆர்வக் கோளாறில ..ஏதும் எழுதும் தானே!

அது சரி...உங்கட ஆள்.....அந்தக்காலத்து மனுஷன் போல கிடக்குது..!

 

எதுக்கும் மனுசனிலையும் ஒரு கண் வைச்சிருங்கோ!

உலகம் முன்னை மாதிரி இல்லை..!

முகநூலும் அதுவுமா....காலம் கெட்டுப்போய்க் கிடக்கு!:unsure:

 

மனிசன் கண்டிப்பாச் சொல்லீற்றார் தனிப்படம் போட்டால் முகநூல் தடை எண்டு.tw_dissapointed_relieved:

 

21 hours ago, ஈழப்பிரியன் said:

ம் பண்டியோடு சேர்ந்து பசுவும் மலம் தின்னுது. 

இப்போ எல்லோர் வீடுகளிலும் எத்தனை பேர் இருந்தாலும் ஆளுக்கொரு மூலையில் கைத்தொலைபேசியுடன் இருப்பதைக் காணலாம்.

பாராட்டுக்கள் சுமே.

ஏன் பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் tw_blush: நன்றி சுவைப்பிரியன்.

21 hours ago, suvy said:

இன்றைய கள யதார்த்தத்தை அப்பட்டமாய் போட்டுடைத்துள்ளீர்கள்.... நல்லாய் இருக்கு....! tw_blush:

நன்றி சுவி அண்ணா

18 hours ago, நிலாமதி said:

 தற்போதைய நடை முறையை கூறிய விதம் நன்று 

நன்றி அக்கா

11 hours ago, ஜீவன் சிவா said:

விசுவாமித்திரர் மன்னிப்பாராக.

சில நாட்களின் முன்னர் நம்ம கள உறவுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். எந்த நேரமும் தொலைபேசியை நோண்டிக்கொண்டு இருந்தார். முதல் தடவையாக யாழ்ப்பாணம் வந்தவர் யாழில் பார்த்ததைவிட மொபைலில் பார்த்ததுதான் அதிகம்.

அட பாவி - உதை மூடிற்று வெளியில பாரப்பா என்றேன். 

அடுத்து ஒரு படம் எடுப்பார் + பகிருவார் + கொமெண்ட்ஸை எனக்கு காட்டுவார் + கடுப்பேத்துவார்.

இப்படியே போனபோது என்னிடமும் ஒரு கேள்வி கேட்டார்.
"உங்களுக்கு இப்படி செய்திகள் வருவதில்லையா உங்களின் மொபைலில்?"

இல்லை அப்பன் எனது மொபைலில் மூஞ்சி புத்தகம் + டுவீட்டர் + யாழ் + மெயில் இணைப்பதில்லை. அது வீட்டில் இருக்கும்போது மட்டுமே பார்ப்பன் வெளியே இயற்கையை ரசிப்பேன் என்றேன். என்ன நினைத்தாரோ, என் மீது ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டு மறுபடியும் மொபைலை நோண்டினார்.

இதற்கு நம்ம தலை மோகனும் விதிவிலக்கில்லை - யாழ் தனிமடலினூடாக ஒரு விடயத்தை சொல்லிவிட்டு பதில் வருமென்று காத்திருந்து...  பின்னர் நேரில் தொலைபேசினார்.:grin:

எதுவும் அளவுடன் இருந்தால் அமிர்தமே!
 

உண்மைதான். இப்ப நான் கொஞ்சம் வெளியில வந்திட்டன். முந்தி மாதிரிப் பழிகிடக்கிறேல்லை.

2 hours ago, முனிவர் ஜீ said:

இதில தான் கேள் பிரண்டு இல்லையென்று போய் அதில இருக்கும் மொக்கை கவிதைகளூக்கும் கதைகளுகளும் லைக்கையும் கொமண்டையு ம் போட்டு பிகர உசார் பண்ணலாம் என்று பார்த்தால் போட்டுக்கொடுக்குறீர்களே ந்ல்லா வருவியள் 

இதுல எனக்கு வெளி நாடுகளில் இருந்து தமிழில் ரைப்பண்ணிகொடுக்க முடியுமா என்று நல்ல பெண் நண்பிகள் கிடைத்து விட்டார்கள்  பெண்கள் நம் கண்கள் எப்புடி  போற்றுவோம் போற்றுவோம் என்று கலைஞன் பாடுன பாடல் தான் ஞாபகம் வருது ஹாஹாஹாtw_blush:tw_blush:

இந்த டீமை எங்கேயோ பார்த்தமா கிடக்கு அக்கா அவன்ங்களா இவங்க‌:rolleyes:tw_blush:

இப்பதான் வரிசையா கனபெடிச்சியள் வந்து எழுதினமே உங்கள் பதிவில. இன்னுமா உசார்பண்ணவில்லை. நீங்கள் வேஸ்ட்.

 

உப்பிடி டீம் எத்தனையோ இருக்கு. ஆராய் எண்டு சொல்ல??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் தெரியாதவர்களை நண்பர்களாகச் சேர்ப்பதில்லை எனும் பொலிஸியுடன் இருப்பதாலும், இலக்கியம் பேசுகின்றோம், அரசியல் பேசுகின்றோம் என்று சொறிந்துகொண்டு இருப்பவர்களின் பக்கமே போகாமல் இருப்பதாலும், பிடிக்காத பதிவுகளைப் போடுபவர்களை உடனடியாகவே unfollow செய்வதாலும், எதற்கும், எவருக்கும் அடிமையாக இல்லாமல் இருப்பதாலும் முகநூலூடாக இன்னமும் ஒரு பிரச்சினையும் வரவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முகநூல் ஆரம்பத்தில் புலம்பெயர் உறவுகளுக்கு மிகப்பெரும் ஆறுதலாக இருந்தாலும் தற்போது அந்தபக்கம் போவதுக்கே யோசிக்க வேண்டி உள்ளது ஒரு சாமி படத்தை அனுப்பிவிட்டு பார்த்தவுடன் பகிரவும் நல்லசெய்தி வரும் இல்லயென்றால் கஷ்ட்டம் வந்து நூடில்ஸ் ஆவிர்கள் ,வருடக்கனகான முத்தின கான்சருக்கு மூன்று மணி நேரத்தில் தீர்வு ,எகிப்திய பிரமிட்டை கட்டினவன் தமிழர்களே ஒரு சில குறிபிட்ட செய்திகள் முகநூல் தொடக்க காலத்தில் உலாவியவை இன்றும் திரும்ப திரும்ப வருவது போன்ற முட்டாள்தனமும் ,பாமரத்தனமும் நிறைந்த ஒன்றாய் மாறி உள்ளது இதைவிட நம்ம தமிழ் குடும்பம் ஒன்று  கல்யாணம் காதுகுத்து என்று வெளிக்கிட்டால் முதல் வேலை வீட்டை விட்டு இறங்கும்போது காரில் ஏறியபடி போட்டோ எடுத்து mukanoolil  போட்டுவிட்டு தான் காரில் சாவியை போடும் பாமரகேசுகள் பின்னாலே கள்ளன் போய் வீட்டில் சுவர் மணிக்கூடு வரை ஆறுதலாக இருந்து கழட்டி எடுத்துக்கொண்டுபோய்விட்டார்கள் இப்போது முகநூல் உபத்திரவ பக்கமா மாறி விட்டுது நிறைய சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

முகநூலில் தெரியாதவர்களை நண்பர்களாகச் சேர்ப்பதில்லை எனும் பொலிஸியுடன் இருப்பதாலும், இலக்கியம் பேசுகின்றோம், அரசியல் பேசுகின்றோம் என்று சொறிந்துகொண்டு இருப்பவர்களின் பக்கமே போகாமல் இருப்பதாலும், பிடிக்காத பதிவுகளைப் போடுபவர்களை உடனடியாகவே unfollow செய்வதாலும், எதற்கும், எவருக்கும் அடிமையாக இல்லாமல் இருப்பதாலும் முகநூலூடாக இன்னமும் ஒரு பிரச்சினையும் வரவில்லை!

அடிமைகளாய் இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் பெண்களுக்கு மட்டும்தான்.

7 hours ago, பெருமாள் said:

இந்த முகநூல் ஆரம்பத்தில் புலம்பெயர் உறவுகளுக்கு மிகப்பெரும் ஆறுதலாக இருந்தாலும் தற்போது அந்தபக்கம் போவதுக்கே யோசிக்க வேண்டி உள்ளது ஒரு சாமி படத்தை அனுப்பிவிட்டு பார்த்தவுடன் பகிரவும் நல்லசெய்தி வரும் இல்லயென்றால் கஷ்ட்டம் வந்து நூடில்ஸ் ஆவிர்கள் ,வருடக்கனகான முத்தின கான்சருக்கு மூன்று மணி நேரத்தில் தீர்வு ,எகிப்திய பிரமிட்டை கட்டினவன் தமிழர்களே ஒரு சில குறிபிட்ட செய்திகள் முகநூல் தொடக்க காலத்தில் உலாவியவை இன்றும் திரும்ப திரும்ப வருவது போன்ற முட்டாள்தனமும் ,பாமரத்தனமும் நிறைந்த ஒன்றாய் மாறி உள்ளது இதைவிட நம்ம தமிழ் குடும்பம் ஒன்று  கல்யாணம் காதுகுத்து என்று வெளிக்கிட்டால் முதல் வேலை வீட்டை விட்டு இறங்கும்போது காரில் ஏறியபடி போட்டோ எடுத்து mukanoolil  போட்டுவிட்டு தான் காரில் சாவியை போடும் பாமரகேசுகள் பின்னாலே கள்ளன் போய் வீட்டில் சுவர் மணிக்கூடு வரை ஆறுதலாக இருந்து கழட்டி எடுத்துக்கொண்டுபோய்விட்டார்கள் இப்போது முகநூல் உபத்திரவ பக்கமா மாறி விட்டுது நிறைய சொல்லலாம்.

நீங்கள் சொல்வது உண்மைதான் பெருமாள். சாமிப் படத்தைப் போடுறவையை நானுமுடன நிப்பாட்டிப் போடுறது. வீட்டில் உள்ளவைஎல்லாரின் பிறந்தநாள் நண்பர்கள் பிறந்தநாள் படிப்பிச்ச வாத்க்குப் பிறந்தநாள் என்று போடதிவுகளிலும் லைக் போடுவதும் இல்லை வாசிப்பதும் இல்லை.

6 hours ago, நந்தன் said:

நல்லா இருந்திச்சு  உங்க பதிவு 

அப்பிடிங்களா ?? காரணமே இல்லாமல் ப்ளாக் செய்யிறவையையும் நாங்கள் கணக்கில் எடுக்கிரேல்லை. tw_blush:

On 19/03/2017 at 9:47 PM, புங்கையூரன் said:

எதுக்கும் மனுசனிலையும் ஒரு கண் வைச்சிருங்கோ!

உலகம் முன்னை மாதிரி இல்லை..!

முகநூலும் அதுவுமா....காலம் கெட்டுப்போய்க் கிடக்கு!:unsure:

 

நல்ல கதை. அதை நீங்கள் சொல்லவே வேண்டாம். கவனிக்காத மாதிரி எல்லாம் பாத்துக்கொண்டு இருப்பம்.:14_relaxed:

Link to comment
Share on other sites

முகநூல் மற்றும் சோசியல் மீடியாவால் சில கலியாணங்களும் கைகூடி இருக்குது அதே நேரம் பல குடும்பங்களுக்குள் பிரச்சினைகளும் வந்துகொண்டு இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்பதான் வரிசையா கனபெடிச்சியள் வந்து எழுதினமே உங்கள் பதிவில. இன்னுமா உசார்பண்ணவில்லை. நீங்கள் வேஸ்ட்.

உப்பிடி டீம் எத்தனையோ இருக்கு. ஆராய் எண்டு சொல்ல??

ம்கும் முகத்தையே காட்டுறாங்கள் இல்லை இதுக்குள்ள எப்படி ம்கும்  ஆனால் அந்த டீமை உங்க முகநூலில் பார்த்து இருக்கனே அதான் தீடீர் நினைவு வந்தது 

அவர்கள் கருத்து, பகிடியும் மட்டுமே ஆனால் யாரென்று தெரியாது சத்தியமா சொல்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சுமே அக்கா..உண்மையைச் சொல்லப் போனால் அமைதியாக அடக்கமாக இருக்கும் யாருக்குமே முகப் புத்தகம் ஒத்து வராத இடம். நிறையவே ஆடம்பரமாக வாழ விருப்பப்படுகிறவர்களுக்கு ஏற்ற இடம்.நேரத்துக்கு நேரம் தங்களை மாற்றிக் கொள்பவர்களுக்கு நிமிடத்திற்கு நிமிடம் தங்கள் படங்களை போட்டு ரசிப்பவர்களுக்கே ஏற்ற இடம்..தாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கேக் வெட்டுவதிலிருந்து  ஒன்றும் மிச்சமில்லை.கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகளாக நானும் முகப் புத்தகம் வைத்திருக்கிறேன் அதனால் இன்றுவரை நிறைய மனதளவில் உடைஞ்சிருக்கிறேன்..

யாருக்கும் பெரிதாக ஒன்றும் சொல்லிக் கொள்ள மாட்டேன்..யாரு எப்படி பழகுவார்கள் எப்படி எல்லாம் தண்டிக்கப்படுவோம் என்று தெரியாது...முகப் புத்தகம் எல்லாவிதமாகவும் தண்டனைகளை தந்த இடம்..இன்று எவ்வளவுக்கு மற்றவர்களிடமிருந்து விலகி வாழ முடியுமோ அந்தளவுக்கு விலகிக் கொள்கிறேன்.'நான் ஆண் என்ன செய்தாலும் உலகம் ஏற்றுக் கொள்ளும் ...'நீ பெண் அடங்கி அடிமாடாய் தான் வாழனும் என்று சொல்லி அடிமைப்படுத்தும் உலகம்.'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச  நாளாக அந்தப்பக்கம்  காணவில்லை

இது தான்  சங்கதியோ?

முகநூல்  எமது கையில் தான்  உள்ளது

அதை திறந்து  விடுவதும் நாம்தான் சுயநல பிரபலமாகும் நோக்கோடு..

பின்னர்

ஐயோ குய்யோ  என்று அழுவது தான் தொடர்கிறது.

 

நன்றி  அனுபவப்பதிவுக்கும் நேரத்துக்கும் சுமே

Link to comment
Share on other sites

On ‎19‎.‎03‎.‎2017 at 7:18 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆரோடை நெடுக சற் பண்ணுறாய்? ஆரவன் உனக்கு நெடுக மெசேச் அனுப்புறான்? நான் வீட்டில் நிக்கிறன். என்னோடை கதைச்சுச் சிரிக்காமல் உதுக்குள்ளேயே கிடக்கிறாய். பத்துமணிக்குப் பிறகு போனைத் தொடக்குடாது,

நல்லதொரு பதிவு சுமேரியர் அவர்களே !

அனுப்புறான் என்ற சொல்லில் வரும் "ன்" னுக்கு பதிலாக "ள்" என்று போட்டுப் பார்த்தேன்.!!!! :shocked:  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

கொஞ்ச  நாளாக அந்தப்பக்கம்  காணவில்லை

இது தான்  சங்கதியோ?

முகநூல்  எமது கையில் தான்  உள்ளது

அதை திறந்து  விடுவதும் நாம்தான் சுயநல பிரபலமாகும் நோக்கோடு..

பின்னர்

ஐயோ குய்யோ  என்று அழுவது தான் தொடர்கிறது.

 

நன்றி  அனுபவப்பதிவுக்கும் நேரத்துக்கும் சுமே

யாருக்கும் எப்போதும் எதுவும் ஏற்படலாம்... முகப்புத்தகம் என்பது சாப்பிட்டு குடித்துப் பார்த்து பழகும் இடம் இல்லை.றைற்.உங்களுக்கு ஒன்றும் ஏற்படாதவகையில் சந்தோசபட்டுக் கொள்ளுங்கள்..நீங்களும் எங்கள் வயதுகளை கடந்து தான் போனனீங்கள்.

Link to comment
Share on other sites

7 hours ago, விசுகு said:

முகநூல்  எமது கையில் தான்  உள்ளது

அதை திறந்து  விடுவதும் நாம்தான் 

பின்னர்

ஐயோ குய்யோ  என்று அழுவது தான் தொடர்கிறது.

 

4 hours ago, யாயினி said:

உங்களுக்கு ஒன்றும் ஏற்படாதவகையில் சந்தோசபட்டுக் கொள்ளுங்கள்..நீங்களும் எங்கள் வயதுகளை கடந்து தான் போனனீங்கள்.

நானும் 2009 இலிருந்து மூஞ்சி புத்தகத்தில் உலாவுறேன் - இதுவரை 76 நண்பர்களை மட்டுமே இணைத்துள்ளேன். எதையுமே ஷேர் பண்ணுவதில்லை. சொந்த ஆக்கங்களை தவிர வேறு பகிர்வதில்லை. அரட்டை அடிப்பதில்லை. தொலைபேசியில் facebook ஐ இணைப்பதில்லை - அதனால் எந்த நேரமும் மொபைலை தோண்டவேண்டிய அவசியமும் எனக்கில்லை.

களிமண் பானையாவதும், சட்டியாவதும் குயவனின் கையில்தான் - அதற்கு களிமண்ணை குறை சொல்வது நியாயமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Surveyor said:

முகநூல் மற்றும் சோசியல் மீடியாவால் சில கலியாணங்களும் கைகூடி இருக்குது அதே நேரம் பல குடும்பங்களுக்குள் பிரச்சினைகளும் வந்துகொண்டு இருக்குது.

இந்தக்காலத்தில் தவிர்கவே முடியாத ஒரு பிரச்சனையாக முகநூல் மாறிக்கொண்டே இருக்கு.

19 hours ago, முனிவர் ஜீ said:

ம்கும் முகத்தையே காட்டுறாங்கள் இல்லை இதுக்குள்ள எப்படி ம்கும்  ஆனால் அந்த டீமை உங்க முகநூலில் பார்த்து இருக்கனே அதான் தீடீர் நினைவு வந்தது 

அவர்கள் கருத்து, பகிடியும் மட்டுமே ஆனால் யாரென்று தெரியாது சத்தியமா சொல்கிறேன் 

நீங்கள் ஒழுங்காக்டலை போட ஆரிட்டையன் பழகவேணும்.

9 hours ago, Paanch said:

நல்லதொரு பதிவு சுமேரியர் அவர்களே !

அனுப்புறான் என்ற சொல்லில் வரும் "ன்" னுக்கு பதிலாக "ள்" என்று போட்டுப் பார்த்தேன்.!!!! :shocked:  

 

அதுவும் கனக்க நடக்குதுதான்.

13 hours ago, யாயினி said:


உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சுமே அக்கா..உண்மையைச் சொல்லப் போனால் அமைதியாக அடக்கமாக இருக்கும் யாருக்குமே முகப் புத்தகம் ஒத்து வராத இடம். நிறையவே ஆடம்பரமாக வாழ விருப்பப்படுகிறவர்களுக்கு ஏற்ற இடம்.நேரத்துக்கு நேரம் தங்களை மாற்றிக் கொள்பவர்களுக்கு நிமிடத்திற்கு நிமிடம் தங்கள் படங்களை போட்டு ரசிப்பவர்களுக்கே ஏற்ற இடம்..தாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கேக் வெட்டுவதிலிருந்து  ஒன்றும் மிச்சமில்லை.கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகளாக நானும் முகப் புத்தகம் வைத்திருக்கிறேன் அதனால் இன்றுவரை நிறைய மனதளவில் உடைஞ்சிருக்கிறேன்..

யாருக்கும் பெரிதாக ஒன்றும் சொல்லிக் கொள்ள மாட்டேன்..யாரு எப்படி பழகுவார்கள் எப்படி எல்லாம் தண்டிக்கப்படுவோம் என்று தெரியாது...முகப் புத்தகம் எல்லாவிதமாகவும் தண்டனைகளை தந்த இடம்..இன்று எவ்வளவுக்கு மற்றவர்களிடமிருந்து விலகி வாழ முடியுமோ அந்தளவுக்கு விலகிக் கொள்கிறேன்.'நான் ஆண் என்ன செய்தாலும் உலகம் ஏற்றுக் கொள்ளும் ...'நீ பெண் அடங்கி அடிமாடாய் தான் வாழனும் என்று சொல்லி அடிமைப்படுத்தும் உலகம்.'

நீங்கள் கூறுவது உண்மைதான். இதுவொரு மாயக்கண்ணாடி. சரியாகப் பயன்படுத்தாவிட்டால் உடைவதுமட்டுமன்றி எமக்கே காயங்களை ஏற்படுத்திவிடும்.

11 hours ago, விசுகு said:

கொஞ்ச  நாளாக அந்தப்பக்கம்  காணவில்லை

இது தான்  சங்கதியோ?

முகநூல்  எமது கையில் தான்  உள்ளது

அதை திறந்து  விடுவதும் நாம்தான் சுயநல பிரபலமாகும் நோக்கோடு..

பின்னர்

ஐயோ குய்யோ  என்று அழுவது தான் தொடர்கிறது.

 

நன்றி  அனுபவப்பதிவுக்கும் நேரத்துக்கும் சுமே

கருத்துக்கு நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாட்டுக்கு முன் பின் மருந்து குளிசை போட மறந்தாலும் மறப்பினம் ஆனால் உந்த சொசல் மீடியா விடுப்பை  பார்க்க மறக்கமாட்டினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

 

நானும் 2009 இலிருந்து மூஞ்சி புத்தகத்தில் உலாவுறேன் - இதுவரை 76 நண்பர்களை மட்டுமே இணைத்துள்ளேன். எதையுமே ஷேர் பண்ணுவதில்லை. சொந்த ஆக்கங்களை தவிர வேறு பகிர்வதில்லை. அரட்டை அடிப்பதில்லை. தொலைபேசியில் facebook ஐ இணைப்பதில்லை - அதனால் எந்த நேரமும் மொபைலை தோண்டவேண்டிய அவசியமும் எனக்கில்லை.

களிமண் பானையாவதும், சட்டியாவதும் குயவனின் கையில்தான் - அதற்கு களிமண்ணை குறை சொல்வது நியாயமில்லை.

ஜீவன் சிவா நீங்கள் கூறுவது முகநூலுக்குப் பொருந்தாது. ஏனெனில் ஒரு மனிதனும் சடப்பொருளும் என்பது கையாள்வதற்கு இலகுவானது. முகநூல் விதவித மனிதர்கள், ஆயிரம் விடயங்கள், உணர்வுகள்,மனம் என எத்தனையோ விடயங்களுடன் பின்னிப்பிணைந்த நூலிழை. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாய் இருக்கும். அதிலும் பெண்களுக்கு பல தடைதாண்டல்.

3 minutes ago, putthan said:

சாப்பாட்டுக்கு முன் பின் மருந்து குளிசை போட மறந்தாலும் மறப்பினம் ஆனால் உந்த சொசல் மீடியா விடுப்பை  பார்க்க மறக்கமாட்டினம்

ஆனாலும் எல்லாக் காலகட்டத்திலும் ஒன்றுபோல் இருக்காது புத்தன். ஒரு எல்லைக்குமேல் சலிப்புத்தான் மிஞ்சுவது.வேலை வெட்டி இல்லாதவைதான் தொடர்ந்தும் அதற்குள் கிடப்பது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.