Jump to content

முகநூல் நண்பர்கள்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்கள்  என்பவர்கள்  எம்மோடு  இரண்டரக்கலந்தவர்கள்

எம்மை அறிந்தவர்கள்  புரிந்தவர்கள்  என்பதையும்  தாண்டி

முகம்தெரியாமலேயே நட்பு வைத்துக்கொள்ளலாம்

அதனாலும் பல நல்லது செய்யலாம் 

பல அரிய  விடயங்களை பெறலாம் என்பதை  எனக்கு அறிமுகமாக்கியது யாழ் தான்.

அதன்  தொடர்ச்சியாக முகநூலிலும்  பயணம்  தொடர்கிறது

 கருத்து  எழுதுவதில்  யாழ்  தந்த அனுபவம்  மற்றும்  

அறிமுகங்களோடு முகநூல் பாவனையும் எனக்கு மேலும் நல்ல சிறந்த நட்புக்களையும் 

தேடல்களையும் தொடர்புகளையும்  தந்திருக்கிறது.

அது மேலும் மேலும் வளரும் சாத்தியமுள்ளது.

எமது இலக்கிலும் நண்பர்களை  சேர்ப்பதில் அவதானமாகவும்  தொடர்ச்சியாக இருந்தால்

முகநூலும்  எமக்கு ஒரு வரப்பிரசாதமே.

 

அந்தவகையில்  நண்பர்களை   சேர்ப்பதில்  எப்பொழுதுமே கவனமாக இருப்பேன்

சிலரது கருத்துக்களை  தொடர்ந்து வாசித்து

அவரது நண்பர்  வட்டாரத்தில் எனக்கு நம்பகரமான நட்பும் அவரது நண்பராக  இருந்தால்

நானாகவே அழைப்பும் விடுவதுண்டு

அதே நேரம்  எனக்கு வரும்  புது அழைப்புக்கள்  சார்ந்துமிக மிக  கவனமாக இருப்பதுண்டு.

அவ்வாறு நட்புக்கான அழைப்பு வரும் போது

எனது நண்பர்கள்  குறைந்தது பத்து பேராவது அவரது நண்பர்களாக  இருக்கிறார்களா? என்று பார்ப்பதுண்டு

அந்த 10 பேரும் தேவையற்று  பிரபலத்துக்காக  எல்லோரையும் நண்பர்களாக ஏற்காதவர்களாக இருக்கணும்

அப்படியானவர்களின்  நட்பே ஏற்றுக்கொள்ளப்படும்

அநேகமாக கலைஞர்கள் அரசியல்வாதிகள்

இயக்கங்களின் உறுப்பினர்கள் போன்றரது நண்பர்களாக இருப்பின் 

அவர்கள் எனக்கு நல்ல கருத்தாளர்களாக தெரியும்

நண்பர்கள் வட்டத்துக்குள் இருந்தால் மட்டுமே நண்பராக ஏற்றுக்கொள்ளப்படும்

அப்படியும் சில  சந்தேகங்கள் வந்தால்

எனக்கு நன்கு அறிமுகமான தம்பிமாரிடம்

உள்பெட்டியில்  இவர் பற்றி கேட்டு தெரிந்த பின்பே அழைப்பை ஏற்பதா விடுவதா என்ற முடிவை  எடுப்பதுண்டு.

இவ்வாறு  தெரிவு செய்யும்போது எமக்கு அவரால்  ஏதாவது சிக்கல்  ஏற்பட்டால்

எமக்கு அவரைப்பற்றி அறிமுகம்   தந்தவரிடம் முறையிடலாம்

மற்றும்   மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தலாம்.

இது அனைவருக்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கும்.

மற்றும்படி இன்று அநேகமாக முகநூலில் அடிபாடுகள் நடப்பதற்கு காரணம்

யார்  அதிகம்  பேரை நண்பர்களாக வைத்திருப்பது

அதனூடு  பிரபலமாகலாம்  என்ற போட்டியில் ஆயிரக்கணக்கானவர்களை  சேர்ப்பதும்

யார் அதிகம்  லைக் வாங்குவது என்ற மன உலைச்சலும் தான் காரணம்.

அதற்கு முகநூலையோ

இனங்களையோ தூசித்து என்ன பயன்?

எமது வீட்டுக்குள் ஆட்களை  நுளையவிட்டது யார்??

அவர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் வீட்டு இரகசியங்களை

பெறுமதியானவற்றை

அங்கும்   இங்கும் சிதறிவிட்டது யார்??

நாம் தானே??

அப்போ  வருபவரை  எவ்வாறு குறை  சொல்லமுடியும்???

100 இல் ஒன்று அப்படியும் வரும்

நாம்  தான்  அவதானமாக இருக்கணும்.

அநேகமான யாழ்  உறவுகள் எனது முகநூல் நண்பர்களே

ஒன்று இரண்டு

இங்கிருந்து தாமாகவே போய்

அங்கும் வேறு இடங்களில்  கடி பட்டதால்

அவர்கள் மட்டும் சேர்க்கப்படவில்லை.

நேரம்  பொன்னானது காண்.

நல்லதை  எடுத்துக்கொள்வோம் எங்கிருந்தாலும்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருத்து விசுகு .... ஆனால் நான் முகநூலில் இல்லை. அதை கையாளவும் எனக்கு தெரியாததும் ஒரு காரணம்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நட்பு அழைப்பு விட்டு இருக்குறீர்களே நீங்கள் யார் பல வருடத்துக்கு முன் நடந்த ஒரு உரையாடல் நினைவுக்கு வந்து போனது ஓ நீங்களும் முகநூலில் இருக்குறீர்களா  அட்ரசை தாங்கோ அங்கு வரலாம் என்று இருக்குறன் என்ன மாதிரி கெதியா சொல்லுங்கோtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகநூல் நிறையவே அநுபவங்களைத் தந்திருக்கிறது. தந்துகொண்டிருக்கிறது. தரும். அவ்விடத்தில் மன உளைச்சல் அடைவதற்கு எதுவுமே இல்லை. சக பயணிகளின் குணஅம்சங்களை கண்டபடியே நமது பயணத்தை தொடர வேண்டியதுதான். காலில் இடறுகிறதா நாமே விலகி நடப்பது நல்லது முள்ளாய் குத்துகிறதா? நம் பயணத்திலிருந்தே அதனை அகற்றிவிடுதல். பல விடயம் கொச்சையாகவும் கோணலாகவும் சர்ச்சைக்குரியதாகவும் இருப்பதை பார்க்க முடிகிறது. இருப்பினும் அவை எதுவும் எம்மை ஒன்றும் செய்யமுடியாது என்ற திடத்தோடு நிற்பவர்கள் முகநூலால் எக்காலத்திலும் பாதிக்கப்படமாட்டார்கள். பெண்களின் முகநூலுக்கு அல்லது பெண்களின் படங்களை ப்ரோபைலில் வைத்திருப்பவர்களுக்கு சற்று சிக்கல்கள் அதிகம்தான் ஒன்று அவர்களுடன் எதிர்ப்பாலினத்தவர்கள் தனிப்பட்ட வகையில் பேச முற்படுவது அதே சமயம் குழுக்களாக இணைந்து ஒரு பெண்ணை குறிவைத்து இன்பொக்ஸில் ஆசை வார்த்தைகளைப்பேசி முட்டாள் பெண்களைக் கவிழ்ப்பது இப்படி நிறைய விடயங்கள் அங்கு உள்ளன. நிலவுக்கு அஞ்சி பரதேசமா போகமுடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நல்லதொரு கருத்து விசுகு .... ஆனால் நான் முகநூலில் இல்லை. அதை கையாளவும் எனக்கு தெரியாததும் ஒரு காரணம்....!

வாங்க அண்ணா

நாங்க இருக்கிறம்...

புகுந்து விளையாடலாம்...

நன்றியண்ணா வருகைக்கும் கருத்துக்கும் நேரத்துக்கும்..

1 hour ago, முனிவர் ஜீ said:

எனக்கு நட்பு அழைப்பு விட்டு இருக்குறீர்களே நீங்கள் யார் பல வருடத்துக்கு முன் நடந்த ஒரு உரையாடல் நினைவுக்கு வந்து போனது ஓ நீங்களும் முகநூலில் இருக்குறீர்களா  அட்ரசை தாங்கோ அங்கு வரலாம் என்று இருக்குறன் என்ன மாதிரி கெதியா சொல்லுங்கோtw_blush:

தெரியாத பெயர்களில் இருந்து அழைப்பு   வந்தால்  அப்படித்தான்..

என் தம்பி  முனிவர் ஜீ

என்று  வந்திருந்தால்  உடனேயே  எப்ப திருமணம் ? என்பது தானே கேள்வியாக இருக்கும்:grin:

நன்றி தம்பி வருகைக்கும் கருத்துக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

முகநூல் நிறையவே அநுபவங்களைத் தந்திருக்கிறது. தந்துகொண்டிருக்கிறது. தரும். அவ்விடத்தில் மன உளைச்சல் அடைவதற்கு எதுவுமே இல்லை. சக பயணிகளின் குணஅம்சங்களை கண்டபடியே நமது பயணத்தை தொடர வேண்டியதுதான். காலில் இடறுகிறதா நாமே விலகி நடப்பது நல்லது முள்ளாய் குத்துகிறதா? நம் பயணத்திலிருந்தே அதனை அகற்றிவிடுதல். பல விடயம் கொச்சையாகவும் கோணலாகவும் சர்ச்சைக்குரியதாகவும் இருப்பதை பார்க்க முடிகிறது. இருப்பினும் அவை எதுவும் எம்மை ஒன்றும் செய்யமுடியாது என்ற திடத்தோடு நிற்பவர்கள் முகநூலால் எக்காலத்திலும் பாதிக்கப்படமாட்டார்கள். பெண்களின் முகநூலுக்கு அல்லது பெண்களின் படங்களை ப்ரோபைலில் வைத்திருப்பவர்களுக்கு சற்று சிக்கல்கள் அதிகம்தான் ஒன்று அவர்களுடன் எதிர்ப்பாலினத்தவர்கள் தனிப்பட்ட வகையில் பேச முற்படுவது அதே சமயம் குழுக்களாக இணைந்து ஒரு பெண்ணை குறிவைத்து இன்பொக்ஸில் ஆசை வார்த்தைகளைப்பேசி முட்டாள் பெண்களைக் கவிழ்ப்பது இப்படி நிறைய விடயங்கள் அங்கு உள்ளன. நிலவுக்கு அஞ்சி பரதேசமா போகமுடியும்?

ம்ம்ம்

பெண்களுக்கு பிரச்சினைகள்  அதிகமா??

எங்களுக்கு வரும் அழைப்புக்களை  உங்களுக்கு அனுப்பினால் தெளிவடைவீர்கள் என்று நினைக்கின்றேன்:grin:

ஆனால்  அதில்  சிலர் 

பெண்களாக மாறி  எம்மை ( மாற்று  அரசியல்  மற்றும் கருத்து  சார்ந்து)  மடக்கி 

முடக்க நினைப்போரே...

அதுவும்  அறிவோம்..

நன்றி சகோதரி வருகைக்கும் கருத்துக்கும் நேரத்துக்கும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடமும் முகபுத்தகம் உண்டு.குடும்பம் ஓரிரு நண்பர்கள்.விசுகு யாழில் இருந்து என்னைத் தவிர எல்லோரும் முகபுத்தக நண்பர்கள் போலஇருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது முகநூல் உறவுகள் மூலம் ...தமிழ்நாட்டைப்பற்றி..குறிப்பாக  வெளியே தெரியும்...தமிழ்நாடு என்ற மரத்தைப் பற்றியன்றி..நிலத்தின் கீழுள்ள அதன் வேர்களைப் பற்றி அறிய முடிந்தது! பொதுவாக அங்குள்ளவர்களின் அறிவு....இயற்கை வேளாண்மை போன்றவற்றில் அவர்களின் ஈடுபாடு, நாடு இவ்வாறு சீரழிந்து போகின்றதே என்ற அவர்களின் கவலை போன்றவற்றை அறிய முடிந்தது! குறிப்பாக வயதானவர்கள்..அங்கு கவனிக்கப் படாமல் எவ்வாறு பிள்ளைகளால் ..கைவிடப்படுகின்றார்கள் என்ற கதைகளை..அவர்களின் வாயாலேயே நேரில் கேட்கும் அனுபவம் போன்றவை...வெறும் கல்கி, குமுதம், ஆனந்த விகடன்களை வாசித்து மட்டும் அறிந்து விட முடியாதது! ஒரு வயதானவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லியபோது ( பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுவது..எமது கலாச்சாரமல்ல என்பது வேறு விடயம்) ..அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அளவில்லாதது! இப்போது சென்னைக்குப் போனால் ...ஹோட்டல்களைத் தேடத் தேவையில்லை என்னும் அளவுக்கு..நட்புகள் அங்கு உள்ளன! ஆனால் அவர்களது வீடுகளில் நான் போய்த் தங்கப்போவதில்லை என்பது வேறு விடயம்!

நன்றி..விசுகர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்... முகநூலில்  இணைவது இல்லை என்ற வைராக்கியத்துடன் தான் இருந்தேன்.
யாழ்களத்தில்.... எனக்கு சிலகாலம் எழுத முடியாமல் இருந்த தருணத்தில்,
ஒரு வருடத்துக்கு முன்... குமாரசாமி அண்ணை, என்னை   முகநூலுக்கு வரும்படி அழைத்த போது...
போர் அடித்துக் கொண்டு இருந்ததால்... இணைந்து விட்டேன்.
எனது பக்கத்தில்... நான் ஆர்வமாக எதுவும் பதிவதில்லை.
மற்றவர்கள் போடும் படங்களைப் பார்த்து... "நைஸ்", "ஆகாசம்", "வாவ்", "சூப்பர்"  என்று ஒற்றைவரிகளில் சொல்லி விட்டு, 
ஒரு "லைக்கும்" போட்டு... முகநூல் நட்புகளை சந்தோசப் படுத்தி விடுவேன்.

ஏதாவது பதிவுகளில்... யாரும், யாரையும்... கழுவி ஊத்திக் கொண்டு நின்றால்,
எல்லாவற்றையும் ஒன்று விடாமல் வாசிப்பேனே தவிர, அதற்குள் தலை இடுவதில்லை.
சிலரின் பக்கங்களில்... அருமையான பகிடிகள் இருக்கும், அதனை வாசிக்கும் போது....
மனத்திற்கு உற்சாகம் கிடைப்பதால்... நேரம் கிடைக்கும் போது மட்டும்   அங்கு செல்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/03/2017 at 9:18 PM, ஈழப்பிரியன் said:

என்னிடமும் முகபுத்தகம் உண்டு.குடும்பம் ஓரிரு நண்பர்கள்.விசுகு யாழில் இருந்து என்னைத் தவிர எல்லோரும் முகபுத்தக நண்பர்கள் போலஇருக்கிறது.

வாங்கோ  அண்ணா

எனது பெயரிலேயே  இருக்கின்றேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2017 at 9:21 AM, தமிழ் சிறி said:

நான்... முகநூலில்  இணைவது இல்லை என்ற வைராக்கியத்துடன் தான் இருந்தேன்.
யாழ்களத்தில்.... எனக்கு சிலகாலம் எழுத முடியாமல் இருந்த தருணத்தில்,
ஒரு வருடத்துக்கு முன்... குமாரசாமி அண்ணை, என்னை   முகநூலுக்கு வரும்படி அழைத்த போது...
போர் அடித்துக் கொண்டு இருந்ததால்... இணைந்து விட்டேன்.
எனது பக்கத்தில்... நான் ஆர்வமாக எதுவும் பதிவதில்லை.
மற்றவர்கள் போடும் படங்களைப் பார்த்து... "நைஸ்", "ஆகாசம்", "வாவ்", "சூப்பர்"  என்று ஒற்றைவரிகளில் சொல்லி விட்டு, 
ஒரு "லைக்கும்" போட்டு... முகநூல் நட்புகளை சந்தோசப் படுத்தி விடுவேன்.

ஏதாவது பதிவுகளில்... யாரும், யாரையும்... கழுவி ஊத்திக் கொண்டு நின்றால்,
எல்லாவற்றையும் ஒன்று விடாமல் வாசிப்பேனே தவிர, அதற்குள் தலை இடுவதில்லை.
சிலரின் பக்கங்களில்... அருமையான பகிடிகள் இருக்கும், அதனை வாசிக்கும் போது....
மனத்திற்கு உற்சாகம் கிடைப்பதால்... நேரம் கிடைக்கும் போது மட்டும்   அங்கு செல்வேன்.

எண்ட  முகநூல் பக்கத்தில் வந்து கழுவி ஊத்தியிருக்கிறியள் என்று கூறி  கொள்கிறேன்  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/03/2017 at 10:55 PM, புங்கையூரன் said:

எனது முகநூல் உறவுகள் மூலம் ...தமிழ்நாட்டைப்பற்றி..குறிப்பாக  வெளியே தெரியும்...தமிழ்நாடு என்ற மரத்தைப் பற்றியன்றி..நிலத்தின் கீழுள்ள அதன் வேர்களைப் பற்றி அறிய முடிந்தது! பொதுவாக அங்குள்ளவர்களின் அறிவு....இயற்கை வேளாண்மை போன்றவற்றில் அவர்களின் ஈடுபாடு, நாடு இவ்வாறு சீரழிந்து போகின்றதே என்ற அவர்களின் கவலை போன்றவற்றை அறிய முடிந்தது! குறிப்பாக வயதானவர்கள்..அங்கு கவனிக்கப் படாமல் எவ்வாறு பிள்ளைகளால் ..கைவிடப்படுகின்றார்கள் என்ற கதைகளை..அவர்களின் வாயாலேயே நேரில் கேட்கும் அனுபவம் போன்றவை...வெறும் கல்கி, குமுதம், ஆனந்த விகடன்களை வாசித்து மட்டும் அறிந்து விட முடியாதது! ஒரு வயதானவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லியபோது ( பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுவது..எமது கலாச்சாரமல்ல என்பது வேறு விடயம்) ..அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அளவில்லாதது! இப்போது சென்னைக்குப் போனால் ...ஹோட்டல்களைத் தேடத் தேவையில்லை என்னும் அளவுக்கு..நட்புகள் அங்கு உள்ளன! ஆனால் அவர்களது வீடுகளில் நான் போய்த் தங்கப்போவதில்லை என்பது வேறு விடயம்!

நன்றி..விசுகர்!

உண்மைதான்

விரிந்த உலகில்வாழத்தெரியாத எம்மீது தான்தப்பே தவிர.....

உங்களது முகநூல் அழைப்பு பல காலத்துக்கு முன்பே கிடைத்து

அதை  நான்  கால  தாமதமாக ஏற்றுக்கொண்டமையும் நடந்தது

அட கடவுள் கதவைத்தட்டியும் 

திறக்காத நிலை தான் அது.

நன்றி  அண்ணா

வருகைக்கும் கருத்துக்கும் நேரத்துக்கும்..

On 24/03/2017 at 4:51 AM, தமிழ் சிறி said:

நான்... முகநூலில்  இணைவது இல்லை என்ற வைராக்கியத்துடன் தான் இருந்தேன்.
யாழ்களத்தில்.... எனக்கு சிலகாலம் எழுத முடியாமல் இருந்த தருணத்தில்,
ஒரு வருடத்துக்கு முன்... குமாரசாமி அண்ணை, என்னை   முகநூலுக்கு வரும்படி அழைத்த போது...
போர் அடித்துக் கொண்டு இருந்ததால்... இணைந்து விட்டேன்.
எனது பக்கத்தில்... நான் ஆர்வமாக எதுவும் பதிவதில்லை.
மற்றவர்கள் போடும் படங்களைப் பார்த்து... "நைஸ்", "ஆகாசம்", "வாவ்", "சூப்பர்"  என்று ஒற்றைவரிகளில் சொல்லி விட்டு, 
ஒரு "லைக்கும்" போட்டு... முகநூல் நட்புகளை சந்தோசப் படுத்தி விடுவேன்.

ஏதாவது பதிவுகளில்... யாரும், யாரையும்... கழுவி ஊத்திக் கொண்டு நின்றால்,
எல்லாவற்றையும் ஒன்று விடாமல் வாசிப்பேனே தவிர, அதற்குள் தலை இடுவதில்லை.
சிலரின் பக்கங்களில்... அருமையான பகிடிகள் இருக்கும், அதனை வாசிக்கும் போது....
மனத்திற்கு உற்சாகம் கிடைப்பதால்... நேரம் கிடைக்கும் போது மட்டும்   அங்கு செல்வேன்.

நாங்க  இருக்கின்றோம்

வலது காலை  எடுத்து வைச்சு வாங்க  ராசா என எத்தனை பேர்இருக்கும்போது

வராமல் விடுவாரா எங்க  சிறி?

நன்றி சிறி

வருகைக்கும் கருத்துக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

எண்ட  முகநூல் பக்கத்தில் வந்து கழுவி ஊத்தியிருக்கிறியள் என்று கூறி  கொள்கிறேன்  tw_blush:

நாங்க  கழுவி  ஊத்த மட்டுமே அங்கு வருகின்றோம்

அது தொடரும்...tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

நாங்க  கழுவி  ஊத்த மட்டுமே அங்கு வருகின்றோம்

அது தொடரும்...tw_blush:tw_blush:

அதான் ஒவ்வொரு நாழும் நல்லா செய்யுறியளே  இதை விடவா இன்னும் செய்ய போறியள்    தனியே இருந்து சிரிக்கிறேன் அண்னை tw_blush:tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

அதான் ஒவ்வொரு நாழும் நல்லா செய்யுறியளே  இதை விடவா இன்னும் செய்ய போறியள்    தனியே இருந்து சிரிக்கிறேன் அண்னை tw_blush:tw_blush:tw_blush:

அதற்கு யாழுக்கு தான் நன்றி சொல்லணும்

இந்த  உறவும்  உரிமையும் யாழ் தந்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/03/2017 at 9:18 PM, ஈழப்பிரியன் said:

என்னிடமும் முகபுத்தகம் உண்டு.குடும்பம் ஓரிரு நண்பர்கள்.விசுகு யாழில் இருந்து என்னைத் தவிர எல்லோரும் முகபுத்தக நண்பர்கள் போலஇருக்கிறது.

நன்றியண்ணா

என்னுடன்  முகநூலில்  இணைந்ததற்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

நன்றியண்ணா

என்னுடன்  முகநூலில்  இணைந்ததற்கு...

ஆகா நானும் விசுகுவின் முகப் புத்தகத்தில் இணைந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா நானும் விசுகுவின் முகப் புத்தகத்தில் இணைந்துள்ளேன்.

அடியேனும் இதேபெயரில் அங்கு உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2017 at 4:07 AM, விசுகு said:

 

அநேகமான யாழ்  உறவுகள் எனது முகநூல் நண்பர்களே

யாழில் எழுதும் கருத்துக்களை வைத்து ஒருவரை ஏடைபோட முடியாது . சிலர் ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களில் யாழில் இருப்பார்கள். ஒரு பெயரில் எழுதும்போது ஒரு கருத்தையும், மறுபெயரில் எழுதும்போது அக்கருத்துக்கு எதிரான கருத்தையும் எழுதினால்..  உ+ம் புலி எதிர்ப்பு, ஆதரவு.  இவர் புலி எதிர்ப்பாளரா? ஆதரவானவரா?.  யாழ் உறவுகள் என்றாலும் முன்பின் முகம் அறியாதவர்களை நண்பர்களாக இணைப்பது அவ்வளவு நல்லதாகச் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2017 at 12:38 AM, குமாரசாமி said:

அடியேனும் இதேபெயரில் அங்கு உள்ளேன்.

விசுகு அண்ண சொன்னார் ரெண்டு ஐடில இருக்கிறியளாமே உன்மையா?? சா.... மி :104_point_left::rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

விசுகு அண்ண சொன்னார் ரெண்டு ஐடில இருக்கிறியளாமே உன்மையா?? சா.... மி :104_point_left::rolleyes::unsure:

விசுகருக்கு வேறை வேலையில்லை.....:grin:.....:grin:.......:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

விசுகருக்கு வேறை வேலையில்லை.....:grin:.....:grin:.......:grin:

எனக்கு போட்டோவையும் அனுப்பியுள்ளார் அதன் பிறகே உங்கள் ஒறிஞ்சினல் ஐடியை சும்மா வச்சிருக்கன் இல்லையென்றால் ஆளை நீக்கியிருப்பன்tw_blush:tw_blush:tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/03/2018 at 5:46 AM, கந்தப்பு said:

யாழில் எழுதும் கருத்துக்களை வைத்து ஒருவரை ஏடைபோட முடியாது . சிலர் ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களில் யாழில் இருப்பார்கள். ஒரு பெயரில் எழுதும்போது ஒரு கருத்தையும், மறுபெயரில் எழுதும்போது அக்கருத்துக்கு எதிரான கருத்தையும் எழுதினால்..  உ+ம் புலி எதிர்ப்பு, ஆதரவு.  இவர் புலி எதிர்ப்பாளரா? ஆதரவானவரா?.  யாழ் உறவுகள் என்றாலும் முன்பின் முகம் அறியாதவர்களை நண்பர்களாக இணைப்பது அவ்வளவு நல்லதாகச் தெரியவில்லை.

அங்கு  கத்திரிக்கோல்   நம்மிடம்  தானே  சகோ...

ஒத்தவரவில்லை  என்றால்

வெட்டி  வைத்துவிடலாம்...?

எனக்கு  இதுவரை  அப்படி  ஒரு  நிலை  வரவில்லை

On 12/03/2018 at 3:24 PM, குமாரசாமி said:

விசுகருக்கு வேறை வேலையில்லை.....:grin:.....:grin:.......:grin:

அண்ணா

என்னை   மட்டும் நம்புங்கள்

நம்பினோர்   என்னால்   ஏமாற்றப்படுவதில்லைtw_love:

ஆனால்   என் தம்பிமாரால்....?????tw_sleepy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12.3.2018 at 4:56 PM, தனிக்காட்டு ராஜா said:

எனக்கு போட்டோவையும் அனுப்பியுள்ளார் அதன் பிறகே உங்கள் ஒறிஞ்சினல் ஐடியை சும்மா வச்சிருக்கன் இல்லையென்றால் ஆளை நீக்கியிருப்பன்tw_blush:tw_blush:tw_blush:tw_blush:

மெத்தப்பெரிய உபகாரம். :17_heart_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

மெத்தப்பெரிய உபகாரம். :17_heart_eyes:

போட்டு வாங்கலாம் என்று எதிர்பார்த்தன் ஆள் உஷாராத்தான் இருக்கிறார் கtw_blush:ண்டு பிடிக்காமலா விடுவன் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.