Jump to content

தூய தமிழ்ச்சொற்கள்


Recommended Posts

கனடா படைப்பாளிகள் கழகம் தூய தமிழ்ச்சொற்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தமிழ் ஊடகங்களை மிகப்பயனுள்ளதாக இந்தச் சொற்கள் அமைந்துள்ளன. தமிழ் ஊடகங்களிற்கு இவற்றைச் சுட்டுக்காட்டுவது செவிடன் காதில் ஊதிய சங்கு(ஒலி) போன்றது. எனினும் இதன்மூலம் ஒரு ஊடகமாகவது திருந்தினால் மகிழ்ச்சி.

இது தொடர்பாக தமிழ் படைப்பாளிகள் கழகம் வெளியிட்ட அறிக்கையும், தமிழ்ச்சொற்களும்

http://nakkeran.com/Thamilpure2004.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பளிக்கழகத்தின் இந்த முயற்சிக்கு நிச்சயம் பாராட்ட வேண்டும். இதனை யாழில் இணைத்த மின்னலுக்கு மிக்க நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. எந்தவொரு சொற்களையும் பழக்கத்திற்கு கொண்டு வர ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. ஊடகங்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

ஒரு வேதனையான சம்பவம், தமிழ் படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் திரு.நக்கீரன் ஆக்கங்களை எழுதும் முழக்கம் பத்திரிகைக்கு ஸ். ஷ் போன்றவை மாத்திரமே வேற்றுமொழியில் இருந்து நாம் பயன்படுத்துவை மாதிரித் தெரியுது. செய்திகளில் பாகிஸ்தான் என்பதற்குப் பதிலாக பாகிசுதான் என்று மாற்றி எழுதுவினம். ஆனால் பிறமொழிச் சொற்கள் பரவலாகவே பயன்படுத்துகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சிரத்தைக்கு நன்றி மின்னல்.

Link to comment
Share on other sites

எனக்கு எல்லாம் மாறி மாறி போட்ட மாதிரிக் கிடக்குது. இவ்வளவு பேரும் வாசிச்சுச் சொன்ன படியால் என் கணியில்தான் எதாவது பிழையோ? :icon_idea:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்

ந.வெற்றியழகன்

சாந்தம் - அடக்கம்

சாந்தி - அமைதி

சாரம் - சாறு; பிழிவு

சாராம்சம் - சாறு; பிழிவு

சாத்தியமான - இயலக்கூடிய

சாம்ராச்சியம் - பேரரசு

சிகரம் - உச்சி; முகடு

சிகை - தலைமயிர்

சிரம் - தலை

சிரசு - தலை

சிங்கம் - அரிமா

சிங்காரம் - ஒப்பனை; அழகு

சிசு - குழந்தை; சேய்

சித்தப்பிரமை - மனமயக்கம்

சிகிச்சை - மருத்துவம்

சித்தாந்தம் - கோட்பாடு

சிந்தனை - எண்ணம்

சிரமம் - கடுமை

சிலை - படிமம்

சிநேகம் - நட்பு

சிருங்காரம் - காமம்

சிதிலம் - சிதைவு

சீக்கிரமாக - சுருக்காக

சீதபேதி - வயிற்றுக்கடுப்பு

சீலம் - நல்லொழுக்கம்

சீ(ஜீ)ரணம் - செரிமானம்

சீ(ஜீ)வன் - உயிர்

சீ(ஜீ)வனம் - பிழைப்பு

சுகம் - நலம்

சுலபம் - எளிது

சுகவீனம் - நலக்குறைவு

சுகாதாரம் - நலவாழ்வு

சுத்தம் - தூய்மை

சுத்திகரிப்பு - துப்புரவு

சுதந்திரம் - விடுதலை; தன்னுரிமை

சுந்தரம் - எழில்

சுபம் - நன்மை

சுபீட்சம் - செழிப்பு

சுபாவம் - இயல்பு

சுய(நலம்) - தன்(னலம்)

சுயமாக - தானாக, சொந்தமாக

சுவாசம் - மூச்சு

சுரணை - உணர்ச்சி

சுயாதீனம் - தன்னுரிமை

சு(ஜு)வாலை - தீக்கொழுந்து

சுயேச்சை - தன்விருப்பம்

சூட்சுமம் - நுட்பம்

சூசகம் - மறைமுகம்

சூத்திரம் - நூற்பா

சூன்யம் - வெறுமை; பாழ்; இன்மை

சேட்டை - குறும்பு

சொகுசு - பகட்டு

சொப்பனம் - கனவு

சொற்பம் - சிறுமை; கொஞ்சம்

சோகம் - துயரம்

சோதனை - ஆய்வு

சோரம் - கள்ளம்

சவுக்யம் - நலம்

சவுபாக்யம் - நற்பேறு

ஞாபகம் - நினைவு

ஞானம் - அறிவு

தண்டனை - ஒறுத்தல்

தத்துவம் - மெய்யியல்; மெய்யுணர்வு; மெய்ப்பொருளியல்

தயவு (தயை) - இரக்கம்

தயாளம் - இரக்கம்

தந்தி - தொலைவரி

தயிலம் - எண்ணெய்

தரிசு - வறள்நிலம்; விடுநிலம்

தருணம் - வேளை

தனம் - செல்வம்

தரித்திரம் - வறுமை

தயாரிப்பு - விளைவாக்கம்

தகனம் - எரியூட்டல்

தய்ரியம் - துணிச்சல்

தானம் - கொடை

தாகம் - நீர்வேட்கை

தாசன் - அடியான்

தாட்சண்யம் - கண்ணோட்டம்; இரக்கம்

தாமதம் - காலநீட்சி; காலத்தாழ்ச்சி; நெடுநீர்

திடம் - திண்மை

திடகாத்திரம் - உடலுறுதி; உடற்கட்டு; கட்டுடல்

தியாகம் - ஈகம்

திரவம் - நீர்மம்

திரவியம் - செல்வம்

திராணி - தெம்பு; வலிமை

http://www.keetru.com/info_box/general/tamil.html

சிவப்பில் உள்ளதெல்லாம் தமிழ் இல்லையெனில் தமிழ் எப்படி வளர்ந்தது? தூய தமிழ் என்று சொல்லி மொழியை வளராமல் பண்ணுவது நல்லதல்ல. :lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்

சாந்தம் - அடக்கம்

சாந்தி - அமைதி

சாரம் - சாறு; பிழிவு

சாராம்சம் - சாறு; பிழிவு

சாத்தியமான - இயலக்கூடிய

சாம்ராச்சியம் - பேரரசு

சிகரம் - உச்சி; முகடு

சிகை - தலைமயிர்

சிரம் - தலை

சிரசு - தலை

சிங்கம் - அரிமா

சிங்காரம் - ஒப்பனை; அழகு

சிசு - குழந்தை; சேய்

சித்தப்பிரமை - மனமயக்கம்

சிகிச்சை - மருத்துவம்

சித்தாந்தம் - கோட்பாடு

சிந்தனை - எண்ணம்

சிரமம் - கடுமை

சிலை - படிமம்

சிநேகம் - நட்பு

சிருங்காரம் - காமம்

சிதிலம் - சிதைவு

சீக்கிரமாக - சுருக்காக

சீதபேதி - வயிற்றுக்கடுப்பு

சீலம் - நல்லொழுக்கம்

சீ(ஜீ)ரணம் - செரிமானம்

சீ(ஜீ)வன் - உயிர்

சீ(ஜீ)வனம் - பிழைப்பு

சுகம் - நலம்

சுலபம் - எளிது

சுகவீனம் - நலக்குறைவு

சுகாதாரம் - நலவாழ்வு

சுத்தம் - தூய்மை

சுத்திகரிப்பு - துப்புரவு

சுதந்திரம் - விடுதலை; தன்னுரிமை

சுந்தரம் - எழில்

சுபம் - நன்மை

சுபீட்சம் - செழிப்பு

சுபாவம் - இயல்பு

சுய(நலம்) - தன்(னலம்)

சுயமாக - தானாக, சொந்தமாக

சுவாசம் - மூச்சு

சுரணை - உணர்ச்சி

சுயாதீனம் - தன்னுரிமை

சு(ஜு)வாலை - தீக்கொழுந்து

சுயேச்சை - தன்விருப்பம்

சூட்சுமம் - நுட்பம்

சூசகம் - மறைமுகம்

சூத்திரம் - நூற்பா

சூன்யம் - வெறுமை; பாழ்; இன்மை

சேட்டை - குறும்பு

சொகுசு - பகட்டு

சொப்பனம் - கனவு

சொற்பம் - சிறுமை; கொஞ்சம்

சோகம் - துயரம்

சோதனை - ஆய்வு

சோரம் - கள்ளம்

சவுக்யம் - நலம்

சவுபாக்யம் - நற்பேறு

ஞாபகம் - நினைவு

ஞானம் - அறிவு

தண்டனை - ஒறுத்தல்

தத்துவம் - மெய்யியல்; மெய்யுணர்வு; மெய்ப்பொருளியல்

தயவு (தயை) - இரக்கம்

தயாளம் - இரக்கம்

தந்தி - தொலைவரி

தயிலம் - எண்ணெய்

தரிசு - வறள்நிலம்; விடுநிலம்

தருணம் - வேளை

தனம் - செல்வம்

தரித்திரம் - வறுமை

தயாரிப்பு - விளைவாக்கம்

தகனம் - எரியூட்டல்

தய்ரியம் - துணிச்சல்

தானம் - கொடை

தாகம் - நீர்வேட்கை

தாசன் - அடியான்

தாட்சண்யம் - கண்ணோட்டம்; இரக்கம்

தாமதம் - காலநீட்சி; காலத்தாழ்ச்சி; நெடுநீர்

திடம் - திண்மை

திடகாத்திரம் - உடலுறுதி; உடற்கட்டு; கட்டுடல்

தியாகம் - ஈகம்

திரவம் - நீர்மம்

திரவியம் - செல்வம்

திராணி - தெம்பு; வலிமை

நன்றி : தோப்பு

Link to comment
Share on other sites

வடமொழி-தமிழ் அகராதியை இணைத்தமைக்கு நன்றி.

நம்பவே முடியலையே இவ்வளவு சொல்லும் வடமொழியா? நாங்க அரைக்கரைவாசி வடமொழியையா கலந்து பேசுறோம்?

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல ஆக்கங்கள், நன்றி மின்னல். :huh::lol:

Link to comment
Share on other sites

திரு. ஜெயபாரதன் அவர்களின் தமிழ் விடுதலையாகட்டும் என்ற கட்டுரையை வாசித்தேன் என் கருத்துக்களையும் பதிவுகளில் பதிவு செய்கிறேன். (ஜெயபாரதனின் கட்டுரை இக்கட்டுரைக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

ஜெயபாரதன் சொல்வதுபோல, தூயதமிழ் என்பது நிலவ வழியில்லைதான். மொழியின் வளர்ச்சியியல்படி தூய்மை என்பது பொருளற்றுப் போகும்.

ஆனால் எது தூய்மை என்று நாம் வரையறுத்துக்கொண்டால், நம் தமிழ்மொழி தூய்மையாகவே இருக்கும்.

அவசியம் ஏற்படும்போது மட்டும், பிறமொழிச்சொற்களைத் தமிழ்ப் படுத்தி ஏற்றுக்கொள்வதால் தமிழின் தூய்மை கெட்டுவிடும் என்று கொள்வதற்கில்லை. இதைத் தொல்காப்பியக்காலம்தொட்டே ஏற்றுக்கொண்டுள்ளோம். இலக்கணமாகவும் வகுத்துக்கொண்டுள்ளோம்.

ஆனால், வேண்டுமென்றே, தமிழென்னும் இனிய நதிக்குள் சாக்கடை கலப்பதுபோல், பிறமொழிச்சொற்களை, தமிழில் இணையான சொற்கள் இருந்தும் வலுக்கட்டாயமாகக் கலப்பது தமிழ் மொழியின் தூய்மைக்கு நாசம்தான்.

உதாரணமாக, ஜெயபாரதன் எழுதி இருக்கும் இந்தக் கட்டுரையே ஒரு எடுத்துக்காட்டு. அவர் இக்கட்டுரையில் அவசியம் இல்லாமல் எந்த ஒரு கலப்பையும் செய்யவே இல்லை. இப்படி எழுதினால் போதும். ஜெயபாரதனின் அறிவியல் கட்டுரைகளை நான் திண்ணையில் வாசித்திருக்கிறேன், அவை நல்ல தமிழில், அழகு தமிழ்ச் சொற்களின் மொழிபெயர்ப்போடு உலா வருகின்றன. அதை நான் பாராட்டுகிறேன்.

பதிலாக சிலர் நான் "வாக்" பண்ணும்போது என் "டாக்" என் "ஹாண்ட்" ஐ விட்டு "ரன்" பண்ணிவிட்டது. என்கிறார்களே. கேட்டால் தமிழ் வளர்க்கிறேன் என்கிறார்கள். தமிழ் எனக்கு மூச்சு ஆனால், அதைப் பிறர்மேல் விடமாட்டேன் என்கிறார்கள். என்ன கூத்து இது.

தமிழைச் செம்மொழி என்று அறிவித்ததன் காரணமாக மிகமுக்கியமாக ஒன்றைச் சொல்கிறார்கள். அது தமிழின் தொடர்ச்சி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழும் இன்று இருக்கும் தமிழும் மிகச் சிறிய மாற்றங்களோடு மட்டுமே இருக்கின்றன. இச்சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை என்கிறார்கள். .

இன்று தமிழ் கணினி மொழியாக அருமையாக பவனி வருகிறது. ஆங்கில மொழிக்குப் பிறகு தமிழ் மொழிதான் இணையத்தில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. ஜெயபாரதனைப் போலவே தாங்கள் சொல்ல வேண்டியவற்றைத் தமிழர்கள் எந்தத் தடையும் இன்றி சொல்லிவருகிறார்கள்.

புதிய சொற்களின் தேடல் ஒருபுறம் செழுமையாய் நடந்து கொண்டிருக்கிறது. கணினி, இணையம், மின்னஞ்சல், மடலாடல், மட்டுநர், ஊடகம், தொலைக்காட்சி என்று ஏராளமான சிறந்த தமிழாக்கங்கள் உருவாகிக்கொண்டும் பலரால் பயன்படுத்தப்பட்டு வெற்றிநடை போட்டுக்கொண்டும்தான் இருக்கின்றன. ஜெயபாரதனும் நிறைய மொழியாக்கம் செய்திருக்கிறார் என்று அறிகிறேன்.

திடீர் என்று ஒரு சொல் அறிமுகமாகும்போது அதை அப்படியே ஏற்பதும், பிறகு நல்ல தமிழாக்கம் வந்ததும் மாற்றிக் கொள்வதையும் தமிழ் தொன்றுதொட்டே செய்துகொண்டுதான் இருக்கிறது.

"தமிழில் ஸ(ஸ), ஸ்க(ஷ), Jஅ(ஜ), Hஅ(ஹ), Gஅ(?), Dஅ(?), Bஅ(?), Dக(?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும்" என்று எழுதி இருக்கிறார் ஜெயபாரதன்.

தமிழுக்குப் புதிய எழுத்துக்கள் தேவையில்லை. கிரந்த எழுத்துக்கள் தமிழிலிருந்து அகற்றப்படவும் இல்லை. இருக்கும் எழுத்துக்களைக் கொண்டே நம்மால் எந்தச் சொற்களையும் எழுதமுடியும். ஒரு மொழியில் எழுதப்பட்ட வார்த்தையை உச்சரிப்பது அந்த மொழியின் இயல்பைப் பொருத்தது.

உதாரணமாக முகம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை மு க ம் என்றுதான் எழுதி இருக்கிறோம் ஆனால் உச்சரிக்கும்போது முகம் என்றுதான் உச்சரிக்கிறோம். அதற்காக இதை முஹம் என்று மாற்றி எழுதலாமா?

இதேபோல, சங்கம் என்ற சொல். இது Cகஙம் என்று உச்சரிக்கப்படுகிறது. Cகன்கம் என்று உச்சரிக்கப்படாது. இதுதான் நம் தமிழ் மொழியின் இயல்பு.

இது அனைத்து மொழிகளுக்கும் உள்ள இயல்புதான். ஆங்கிலத்தில் இது மிக அதிகம். தமிழில் மிகமிகக் குறைவு. உதாரணம்: எனொஉக்க், cஉட், ச்டடிஒன், ப்ச்ய்சொலொக்ய், க்னிfஎ என்று மிக நீளமாய் நீளும். இவற்றை எழுதி இருப்பதுபோலவே வாசித்தால் வினோதமாக இருக்கும். அது ஆங்கிலத்தின் இயல்பு. இதனால் அந்த மொழி நகைப்புக்குரியதல்ல.

தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எழுதமுடியாது. Tஅமில் என்று அன்று வெள்ளையர் எழுதிவிட்டுப் போய்விட்டார்கள். அதை இன்றும் தமிழ்நாடு ஏற்று பயன்படுத்துவதை நான் வெறுக்கிறேன்.

Tகமிழ் என்று அதை அரசு ஆவனங்களில் மாற்றியமைக்க வேண்டும். ழ் என்ற எழுத்துக்கு இணையான எழுத்து ஆங்கிலத்தில் கிடையாது. அதனால் வேறொரு எழுத்தை அதற்காகப் பயன்படுத்தி உச்சரிக்கும்போது சரியாக உச்சரிக்கிறோம். அப்படித்தான் தமிழிலும், இல்லாத எழுத்துக்களுக்குப் பதிலாக, கூடுமானவரை உச்சரிக்கக்கூடிய எழுத்தை இட்டு நம் தமிழ் மொழியைக் காத்து முன்னேறுகிறோம்.

புஹாரி என்ற என் பெயரை நான் புகாரி என்று எழுதுகிறேன். உச்சரிப்பவர்கள், Bஉகரி என்று மிகச் சரியாக உச்சரிக்கிறார்கள். அப்துல் ரஹ்மான் என்ற பெயரை, அப்துல் ரகுமான் என்று கவிக்கோ எழுதுகிறார். எல்லோரும் சரியாகத்தான் உச்சரிக்கிறோம். ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை

கட்டுரையாளர் தன் பெயரை ஜெயபாரதன் என்று எழுதுகிறார். அதில் எனக்கு முழு உடன்பாடு. அதை செயபாரதன் என்று எழுதவேண்டிய அவசியம் இல்லை. அப்படி செயபாரதன் என்று எழுதினாலும் தவறில்லை. அது அவருடைய விருப்பம்.

பாரதி என்ற பெயரை Bகரதி என்று நாம் மிகச் சரியாக உச்சரிக்கிறோம். Pஆரதி என்று உச்சரிப்பதில்லை. எனவே அது சரிதான் என்பது என் கருத்து. புகாரி என்பதை Pஉகாரி என்று உச்சரிப்பவர்கள், அறியாமல் உச்சரிப்பார்கள், அறிந்ததும் மாற்றிக்கொண்டு Bஉகரி என்று உச்சரிப்பார்கள். இது எல்லா மொழிகளுக்கும் பொது. ஆங்கிலத்தில் "கினவ்லெட்ஜி - க்னொந்லெட்கெ" என்று அறியாமல் வாசித்தவர்கள் பிறகு "நாலட்ஜ்" என்று கற்றுக்கொண்டதும் சரியாக வாசிக்கிறார்கள்.

எனவே தமிழுக்குப் புதிய எழுத்துக்கள் அவசியமில்லை என்பதே என் கருத்து

"கிரந்த எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும்" என்று ஜெயபாரதன் சொல்வதை நான் ஏற்கிறேன்.

ஹாசன் என்பதை காசன் என்று எழுதமுடியாது. ஏனெனில் அது அவர் பெயர். ஆனால் என் தகப்பனார் பெயர் ஹசன் அதை அவர் அசன் என்று எழுதினார். நன்றாகத்தான் இருக்கிறது. பெயரைப் பொருத்தவரை அது அவரவர் விருப்பம். ஆனால் பெயர்ச்சொற்களைத் தவிர்த்த தமிழின் சொற்கள் தமிழ்ப் படுத்தப்படுவதையே நான் விரும்புகிறேன். அதையே நான் தூயதமிழ் என்கிறேன்.

ஸந்தோஷம் என்ற சொல் வடச்சொல். அதை நான் சந்தோசம் என்று எழுதுகிறேன். எழுதும்போதே சந்தோசப்படுகிறேன். ஜீசஸ் என்ற பெயர் ஏசுநாதர் என்று எப்போதோ ஆனது. இப்போதும் எனக்கு ஏசுநாதர் என்று சொல்வதே பிடித்திருக்கிறது. செவி பழகியபின் தமிழ் இனிக்கிறது. இதில் தவறில்லை என்பதே என் கருத்து.

என் நண்பர் ஒருவரின் பெயர் ராஜு ராஜேந்திரன். அவர் பெயரை நான் ராசு ராசேந்திரன் என்று எழுதலாம். ஆனால் அதை அவர் அனுமதிக்க வேண்டும். ஏனெனில் அது அவரின் பெயர். நான் விளையாடுவதற்கு ஒன்றும் இல்லை. என் பெயராக இருந்தால் நான் ராசு ராசேந்திரன் என்று மாற்றிக்கொள்வேன். அதனால் என் பெயர் சிதைந்ததாய் நான் எண்ணமாட்டேன். ஆனால் ராஜு ராஜேந்திரன் தன் பெயரை "வேந்தன் அரசு" என்று மாற்றிக்கொண்டார். அது அவரின் தனித் தமிழ்ப்பற்று, பரிதிமாற்கலைஞரைப் போல. அவரின் தனி விருப்பம். நான் அதை மதிக்கிறேன். சுரேஷ் என்று ஒரு நண்பர் பெயரை எழுதும்போது நான் சுரேசு என்று எழுதி நோகடிக்க விரும்புவதில்லை. இது என் வழக்கம். இதெல்லாம் தமிழில் தூய்மையைக் கெடுத்துவிடாது.

சமஸ்கிரதச் சொற்களைப்போல் வேறு எந்த மொழிச் சொற்களும் தமிழில் மிகமோசமாய்க் கலக்கவில்லை. நாம் எழுதும் அனைத்து எழுத்துக்களிலும் அவை உள்ளன. இன்று இயன்றவற்றை மட்டும் நீக்கிவிட்டு பழந்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த முனைகிறோம். அவற்றைச் செய்பவர்களை நான் பெரிதும் மதித்து வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். இதில் தமிழறிஞர்களின் பணி அளப்பரியது. அவர்களுக்கு என் நன்றி.

சங்கம் என்ற சொல் வடமொழிதான் என்று உறுதியாக சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நான் வடமொழி என்று நினைத்த எத்தனையோ சொற்களை சில தமிழறிஞர்கள் தமிழ்தான் என்று சொல்லி நிறுவுகிறார்கள். உதாரணமாக. வேட்டி என்ற சொல். இது நம்மிடமிருந்து வடமொழிக்குள் நுழைந்து வேஷ்டியாகி பிறகு நம்மிடமே வந்து மல்லுக்கு நிற்கிறது என்பார் ஒரு தமிழறிஞர். வேட்டி என்பதுதான் மூலம் என்பார்.

ஜெயபாரதனின் பட்டியலில் உள்ள பல சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் உண்டு. உதாரணம்.

பட்டர் = வெண்ணை

பவுடர் = பொடி

பஸ் = பேருந்து

டிரெய்ன் = புகைவண்டி, புகைரதம்

காலேஜ் = கல்லூரி

அல்ஜிப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ் போன்ற சொற்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.

சேக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா போன்றவை அவர்களின் பெயர்கள் அதில் நாம் கைவைப்பதில்லை.

தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்கள், தமிழ்ச்சொற்கள் ஆகிவிடுகின்றன. அதன் மூலம் எது என்று ஆராயும்போதுதான் அது எந்தமொழியில் இருந்து வந்தது என்ற தகவல் தெரியவரும். உதாரணமாக, சொர்க் நர்க் என்பார்கள் வடமொழியில். இவை சொர்க்கம் நரகம் என்று தமிழ்ப்படுத்தப் பட்டுவிட்டன. அப்படியே நாம் அவற்றைச் சொர்க் நர்க் என்று பாவிப்பதில்லை.

மன் என்ற சொல்லை மனது என்றும் மனசு என்றும்தான் நாம் பயன்படுத்துகிறோம். இப்படித் தமிழாக்கப்பட்ட மனது என்ற சொல்லை மீண்டும் அதன் மூல மொழியான வடமொழியில் பயன்படுத்தமுடியாது. அங்கே அது மன் தான். பர்வாநஹி தமிழில் பரவாயில்லை என்று ஆகவில்லையா?

தமிழ் என்ற சொல்லை Tஅமில் என்று ஆங்கிலேயர் இன்றும் எழுதுகிறார்கள். தஞ்சாவூர் என்ற சொல்லை Tஅஞொரெ என்றும், மதுரை என்ற சொல்லை

Mஎஜ்ர என்றும், தூத்துக்குடியை Tஉடிcஒரின் என்றும்தான் ஆங்கிலேயர் எழுதினார்கள். இந்த அசுத்தங்களைக் களைவது தமிழனின் கடமையல்லவா?

காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்ட்ரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்காங், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, கஸ்தூரி, சரஸ்வதி போன்ற பெயர்களை நான் அப்படியே எழுதுவதைத்தான் விரும்புகிறேன். ஏனெனில் இவையாவும் பிறநாட்டு, பிறமொழிப் பெயர்ச்சொற்கள். இவற்றைத் தமிழ்ப்படுத்த வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. தமிழ்ப் படுத்தினாலும் தவறில்லை.

டாமில் டமில் டாமிள் தமில் தமிள் என்று ஆங்கிலம் வாயிலாக என் அழகு தமிழைப் பிறர் உச்சரிக்கும்போது தமிழனாய்ப் பிறந்து தமிழனாய் வாழும் எனக்கு மிகுந்த வேதனையாய் இருக்கிறது.

ஆங்கிலத்தில் 'ழ' என்ற எழுத்தை ஏன் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றாமல் அது என்ன உலக மொழி என்று நான் கேட்கமாட்டேன். அதேபோலத்தான் தமிழிலும் வேண்டாத புதிய எழுத்துக்களை ஏற்றவேண்டிய அவசியமில்லை

சவுதியில் எனக்கு ஓர் இலங்கைத் தமிழர் நண்பராயிருந்தார். அவர் நண்பரானதே நான் அவர் பெயரை மிகச் சரியாக உச்சரித்ததால்தான். அன்று வரை சவுதியில் எவருமே அவர் பெயரைச் சரியாக உச்சரிக்கவில்லை என்றார். ண்கனென்ட்ரன் என்பதுதான் அவர் பெயர். ஞானேந்திரன் என்று நான் அவரை முதல் முறை அழைத்ததும். கண்ணீரே வந்துவிட்டது அவருக்கு. மற்றவர்களெல்லாம், காணேட்ரன், நானேன்ரன், நக்னேட்ரன் என்று கொன்று எடுத்திருக்கிறர்கள். ஞானேந்திரன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவதற்கு ஆங்கில எழுத்துக்கள்தாம் காரணம். ஆங்கிலத்தில் 'ஞ' என்ற எழுத்தை ஏன் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றாமல் அது என்ன உலக மொழி என்றும் நான் கேட்கமாட்டேன்.

நான் சவூதி அரேபியாவில் வாழ்ந்த காலங்களில் கொஞ்சம் அரபு மொழிப் பரிச்சயம் ஏற்பட்டது. கொஞ்சம் எழுதவும் வாசிக்கவும் பயின்றேன். அதிலுள்ள சில எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதவே முடியாது. கத்தான் என்ற ஓர் ஊர் உண்டு. அதை ஆங்கிலத்தில் Qஅடன் என்று எழுதுவார்கள். ஆனால் அராபியர்கள் உச்சரிப்பது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். அதற்கொரு எழுத்து ஆங்கிலத்தில் வேண்டாமா? இதெல்லாம் இல்லாமல் உலக மொழி அங்கீகாரம் எப்படி ஒரு மொழிக்கு வருகிறது என்று யோசிக்கலாம்.

"முஅஅல்லம்" என்று ஒரு பெயர் அரபு மொழியில் வரும். அதை ஆங்கிலத்தில் Mஉ'அல்லம் என்று மேலே ஒரு குறியிட்டு எழுதுவார்கள். அராபியர்கள் சொல்லித்தந்தபின்தான் அதன் உச்சரிப்பு நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் திண்டாட்டம்தான். எப்படிப்பார்த்தாலும், அராபியர்கள் அரபு மொழியை உச்சரிப்பதுபோல் நம்மால் உச்சரிக்கமுடியாது.

சைனாக்காரர்கள் பேசக் கேட்டிருக்கலாம். பல எழுத்துக்களை நம் செவியால் பிடிக்கவே முடியாது. தமிழில் புதிய எழுத்துக்களைக் கொண்டு வர விரும்பும்போது எந்த மொழியிலிருந்து உள்ள சொல்லை உச்சரிக்க நாம் கொண்டுவரவேண்டும் என்று ஜெயபாரதன் விரும்புகிறார்?

பிரஞ்சு மொழி வாசகங்களைப் பார்த்திருக்கலாம். எல்லாம் தெரிந்த எழுத்துக்கள் போலவே இருக்கும். ஏனெனில் பெரும்பாலானவை ஆங்கில எழுத்துக்கள். ஆனால் நாம் உச்சரித்தால் அப்படியே தப்பாய்ப்போய் முடியும். பிரஞ்சுக் காரர்கள் அல்லது பிரஞ்சு அறிந்தவர்கள்தாம் நமக்குச் சரியானதைச் சொல்லித்தரமுடியும்.

ஒவ்வொரு மொழியும் அழகுதான். எந்த மொழி அழகில்லாதது?

தாய்முலைப்பாலோடு, தாய்மண் வாசனையோடு, மூதாதயர் மரபணுக்களோடு எந்த மொழி மூச்சின் உட்செல்கிறதோ அந்த மொழிதான் அவனவனுக்கு உயிர். இதனால் அடுத்த மொழிகளெல்லாம் அழகல்ல என்று பொருளல்ல.

எனக்குத் தமிழ்த்தாய்தான் மிக மிக இனிப்பானவள். அவள் மடியில்படுத்து பொன்னூஞ்சலாடுவதில்தான் என் ஆன்மாவுக்கு நிறைவு. அடடா தமிழ்த்தாய் எத்தனை அழகு என்று நான் நாளெல்லாம் அதிசயிக்கிறேன்!

முகம், மாசம், சனி, சக்கரம் என்றெல்லாம் எழுதுகிறோம். இதில் முகம் என்ற சொல்லில் க வுக்கு என்ன உச்சரிக்கிறோம்? க என்றா ஹ என்றா?

மாசம் என்ற சொல்லில் ச வுக்கு என்ன உச்சரிப்பு ச வா ச வா? சனி என்பதன் ச வும் சக்கரம் என்பதின் ச வும் உச்சரிப்பில் ஒன்றா?

இது தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் உண்டு. Cஉட், Pஉட் இதில் உ வுக்கு என்ன ஓசை? இரண்டிலும் ஒன்றா? ஸுன், ஸொன் எப்படி வித்தியாசப் படுத்துகிறோம்? கிரெ, கெரெ, கெஅர், கெஇர், கைர் நுணுக்கமாக எப்படி உச்சரிக்கிறோம்? ஸ்டடிஒன் இதில் டி க்கு என்ன உச்சரிப்பு? ஏன்? இன்னும் எனக்கு இதுபோல் ஒரு லட்சம் கேள்விகளும் சொச்சமும் இருக்கின்றன.

உலகத்தில் உள்ள அத்தனை மொழிச் சொற்களும் அதன் மூல மொழியில் உள்ளதுபோலவே பிற மொழிகளிலும் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால், அத்தனை மொழிகளையும் அழித்துவிட்டு, புதிதாக ஒரு மொழியை உருவாக்கி, உலகமொழி என்று அழைக்கவேண்டும். இல்லாவிட்டால், ஜெயபாரதன் கூறுவது சாத்தியப்படாது.

பிறமொழிப் பெயர்களை அந்த மொழியில் உள்ளதுபோலவே தமிழில் எழுத முடியவில்லை (உச்சரிக்கமுடியும்) என்பதற்காகத் தமிழைக் குறைகூறலாமா?

அதேபோல் தமிழ்ச்சொல் ஒன்றைப் பிறமொழியில் எழுதமுடியவில்லை என்பதற்காக அந்த மொழியைக் குறைசொல்லலாமா? ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் இயல்பு இருப்பதை ரசிப்பதும். இயன்றவரை எப்படி வளைக்கலாம் என்பதை சாதுர்யமாய்ச் செய்தும்தானே நாமே மொழியைப் போற்றவும் வளர்க்கவும் முடியும்?

தமிழை ஒரு மருமகளாகக் கற்பனை செய்து பாருங்கள். அடுத்த வீட்டுக்குச் சென்ற மருமகள் தன் அடையாடங்களைச் சுத்தமாகத் தொலைத்துவிட்டு, அப்படியே மாறிவிட்டாள் என்பது ஒன்று. தன் அடையாடளங்களையும் தக்க வைத்துக்கொண்டு, புகுந்த இடத்துக்கும் வளைந்து கொடுத்துக்கொண்டு வாழ்கிறாள் என்பது ஒன்று. இவை இரண்டில் தமிப்பற்றுள்ள ஜெயபாரதன் எதை விடும்புவார்? ஆயினும் தமிழ் மருமகள் ஆகமாட்டாள். தமிழ் ஒரு தாய் அந்தத் தாய் தன் வீடு வந்த மருகளுக்காகக் கொஞ்சம் வளைந்து கொடுப்பாள். ஆனால் தன் வீட்டின் பாரம்பரியம் இயல்பு இவை சிதையும் பட்சத்தில் உறுதியாக நிற்பாள்.

தமிழன் தமிழ்ப் பெயர்தான் வைக்கவேண்டும். நாம் அதற்குத் தயாராயில்லை. ஆனால் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டுதான் வாழ்கிறோம்.

பிறமொழிப் பெயர்களை நாம் வைத்துக்கொண்டு, அதாவது குறையை நம்மீது வைத்துக்கொண்டு தமிழைக் குறைகூற வருகிறோம். ஜெயபாரதனின் அத்தனை பிரச்சினையும் பெயரை உச்சரிக்கமுடியவில்லையே என்பதிலேயே இருக்கிறது.

தமிழ்ப்பெயர் வைக்க விரும்பாதவர்கள், ஒரு சைனா பெயரை வைத்துக் கொள்ளலாம். அது அவர்கள் விருப்பம். ஸ்சூங் ஷ்சயாங் ப்ச்ஞ்சூய் என்று தான் அவர் பெயரை தமிழில் எழுதமுடியும். அவர் உச்சரிப்பதை அப்படியே ஒருக்காலும் தமிழில் மட்டுமல்ல வேறு எந்த மொழியிலும் எழுதமுடியாது.

அடுத்தது தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது தொடர்பாகவும் ஜெயபாரதன் எழுதியிருக்கிறார். இதை வாசிக்கும்போது கவிஞர் மதுமிதா தன் நேர்காணலில் "நமது இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இரண்டுக்குமே தமிழ்த் தலைப்பு கிடையாது. ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி எதிலுமே தமிழ் இல்லையே" என்று சொன்னது என் ஞாபகத்துக்கு வருகிறது.

திருக்குறள், நன்னூல், புறநானூறு, அகநானூறு, குற்றாலக் குறவஞ்சி, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று ஏராளமான தமிழ்த் தலைப்புகளில் கவிதைகள், காவியங்கள் தமிழில் உண்டு.

ஆரியர்களின் வரவால் சமஸ்கிருதப் பெயர்கள் திராவிடர்களுக்கு வைக்கப்பட்டன. மணிமேகலை, சீவகன், கோபால், சண்முகம் எல்லாம் தமிழ்ப் பெயர்கள் அல்ல. அவை புகுத்தப்பட்ட பிறமொழிப் பெயர்கள். அப்துல்காதர், அப்துல்ரகுமான் பொன்ற இஸ்லாமியப் பெயர்கள், டேவிட், ஜேகப் போன்ற கிருத்தவப் பெயர்கள், விக்னேஷ்வர், திலிப் போன்ற இந்துப் பெயர்கள் எல்லாம் மத அடையாளங்களாக வைக்கப்பட்டன.

அன்பு, முத்தழகு, அரசு, பூங்கொடி என்ற தமிழ்ப் பெயர்கள் பிறகு தலைகாட்டத் தொடங்கின. ஈராயிரம் வருடங்களாக, மதம் என்பது சக்திவாய்ந்த ஒன்றாக இருப்பதால், இதன் வளர்ச்சி அத்தனை வேகமானதாக அமையவில்லை. ஆனால் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

உண்மைதான். பெயரில் ஒன்றும் இல்லை. பெயரைச் சுமந்தவர் தமிழை நேசிக்கும் தமிழராய் இருக்கும் பட்சத்தில். ஆனால் நாம் ஒன்றை இங்கே கவனிக்கவேண்டும். சீவக சிந்தாமணி என்று ஒரு காவியத்துக்குப் பெயரிட அந்தப் பாத்திரம் காரணமாய் இருந்தது.

உதாரணமாக, காந்தி என்று ஆங்கிலப்படத்துக்குப் பெயரிட்டார்கள். அது மிகவும் சரி. அவர்களே, "நல்லவன் வாழ்வான்" என்று ஓர் ஆங்கிலப் படத்துக்குப் பெயர் வைப்பார்களா?

நம் திரைப்படப் பெயர்களைப் பாருங்கள், நியூ, பாய்ஸ், ஜீன்ஸ், ஜெண்டில்மேன், ஆட்டோகிராப். இவர்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க ஏதேனும் காரணம் உண்டா?

ஆட்டோகிராப் என்ற படம் தலைப்பில் ஆங்கிலம் வைத்திருந்தாலும், ஆதாம் ஏவாள் பேசியது தமிழ்தான் என்றும் மலையாளிக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது போலவும் சிறப்பான தமிழ்ப்படமாய் இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அந்தப் படத்திற்கு தமிழில் பெயரிட முடியாதா?

பெயரிட்டால் அந்தப் படத்தின் கருவுக்கு களங்கம் வந்துவிடுமா? அந்தப் படத்தில் உள்ள அருமையான பாடல்களின் முதல் வரியை வைத்தாலே அற்புதமாய் இருக்குமே. "மனசுக்குள்ளே" என்று கூட வைக்கலாமே. இன்னும் பொருத்தமானதாகத்தானே இருக்கும்?

மாவீரன் நெப்போலியனைப் பற்றி படம் எடுத்தால், "நெப்போலியன்" என்று பெயரிடலாம். அதில் பொருள் உண்டு. திருச்சியிலிருந்து சென்னைக்குப் போய் வாழும் ஒருவனின் படத்துக்கு ரன் - Jஒஎ என்று பெயர் வைத்தால், இவர்கள் என்ன தமிழர்கள்? தமிழ்ப் படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கக் கோரி போராடாமல், ஹாலிவுட் படங்களுக்கு, 'காக்கைச் சிறகினிலே', 'நின்னைச் சரணடைந்தேன்' என்று கூறியா போராடமுடியும்?

நன்றி: பதிவுகள்.காம்

க்ட்ட்ப்://ந்ந்ந்.கெஒடமில்.cஒம்/பதிவுகல்/புகரி_ஒன்_ஜயபரதன்_டமில்_1.க்ட்

Link to comment
Share on other sites

  • 11 years later...
On 9/27/2007 at 5:52 AM, nunavilan said:

அருமையான பதிவு...

இவற்றை நாம் பலமுறை பல விவாதங்களில் பேசியுள்ளேன், யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை,

-------------------------------------------------

திரு. ஜெயபாரதன் அவர்களின் தமிழ் விடுதலையாகட்டும் என்ற கட்டுரையை வாசித்தேன் என் கருத்துக்களையும் பதிவுகளில் பதிவு செய்கிறேன். (ஜெயபாரதனின் கட்டுரை இக்கட்டுரைக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

 

ஜெயபாரதன் சொல்வதுபோல, தூயதமிழ் என்பது நிலவ வழியில்லைதான். மொழியின் வளர்ச்சியியல்படி தூய்மை என்பது பொருளற்றுப் போகும்.

 

ஆனால் எது தூய்மை என்று நாம் வரையறுத்துக்கொண்டால், நம் தமிழ்மொழி தூய்மையாகவே இருக்கும்.

 

அவசியம் ஏற்படும்போது மட்டும், பிறமொழிச்சொற்களைத் தமிழ்ப் படுத்தி ஏற்றுக்கொள்வதால் தமிழின் தூய்மை கெட்டுவிடும் என்று கொள்வதற்கில்லை. இதைத் தொல்காப்பியக்காலம்தொட்டே ஏற்றுக்கொண்டுள்ளோம். இலக்கணமாகவும் வகுத்துக்கொண்டுள்ளோம்.

 

ஆனால், வேண்டுமென்றே, தமிழென்னும் இனிய நதிக்குள் சாக்கடை கலப்பதுபோல், பிறமொழிச்சொற்களை, தமிழில் இணையான சொற்கள் இருந்தும் வலுக்கட்டாயமாகக் கலப்பது தமிழ் மொழியின் தூய்மைக்கு நாசம்தான்.

 

உதாரணமாக, ஜெயபாரதன் எழுதி இருக்கும் இந்தக் கட்டுரையே ஒரு எடுத்துக்காட்டு. அவர் இக்கட்டுரையில் அவசியம் இல்லாமல் எந்த ஒரு கலப்பையும் செய்யவே இல்லை. இப்படி எழுதினால் போதும். ஜெயபாரதனின் அறிவியல் கட்டுரைகளை நான் திண்ணையில் வாசித்திருக்கிறேன், அவை நல்ல தமிழில், அழகு தமிழ்ச் சொற்களின் மொழிபெயர்ப்போடு உலா வருகின்றன. அதை நான் பாராட்டுகிறேன்.

 

பதிலாக சிலர் நான் "வாக்" பண்ணும்போது என் "டாக்" என் "ஹாண்ட்" ஐ விட்டு "ரன்" பண்ணிவிட்டது. என்கிறார்களே. கேட்டால் தமிழ் வளர்க்கிறேன் என்கிறார்கள். தமிழ் எனக்கு மூச்சு ஆனால், அதைப் பிறர்மேல் விடமாட்டேன் என்கிறார்கள். என்ன கூத்து இது.

 

தமிழைச் செம்மொழி என்று அறிவித்ததன் காரணமாக மிகமுக்கியமாக ஒன்றைச் சொல்கிறார்கள். அது தமிழின் தொடர்ச்சி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழும் இன்று இருக்கும் தமிழும் மிகச் சிறிய மாற்றங்களோடு மட்டுமே இருக்கின்றன. இச்சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை என்கிறார்கள். .

 

இன்று தமிழ் கணினி மொழியாக அருமையாக பவனி வருகிறது. ஆங்கில மொழிக்குப் பிறகு தமிழ் மொழிதான் இணையத்தில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. ஜெயபாரதனைப் போலவே தாங்கள் சொல்ல வேண்டியவற்றைத் தமிழர்கள் எந்தத் தடையும் இன்றி சொல்லிவருகிறார்கள்.

 

புதிய சொற்களின் தேடல் ஒருபுறம் செழுமையாய் நடந்து கொண்டிருக்கிறது. கணினி, இணையம், மின்னஞ்சல், மடலாடல், மட்டுநர், ஊடகம், தொலைக்காட்சி என்று ஏராளமான சிறந்த தமிழாக்கங்கள் உருவாகிக்கொண்டும் பலரால் பயன்படுத்தப்பட்டு வெற்றிநடை போட்டுக்கொண்டும்தான் இருக்கின்றன. ஜெயபாரதனும் நிறைய மொழியாக்கம் செய்திருக்கிறார் என்று அறிகிறேன்.

 

திடீர் என்று ஒரு சொல் அறிமுகமாகும்போது அதை அப்படியே ஏற்பதும், பிறகு நல்ல தமிழாக்கம் வந்ததும் மாற்றிக் கொள்வதையும் தமிழ் தொன்றுதொட்டே செய்துகொண்டுதான் இருக்கிறது.

 

"தமிழில் ஸ(ஸ), ஸ்க(ஷ), Jஅ(ஜ), Hஅ(ஹ), Gஅ(?), Dஅ(?), Bஅ(?), Dக(?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும்" என்று எழுதி இருக்கிறார் ஜெயபாரதன்.

 

தமிழுக்குப் புதிய எழுத்துக்கள் தேவையில்லை. கிரந்த எழுத்துக்கள் தமிழிலிருந்து அகற்றப்படவும் இல்லை. இருக்கும் எழுத்துக்களைக் கொண்டே நம்மால் எந்தச் சொற்களையும் எழுதமுடியும். ஒரு மொழியில் எழுதப்பட்ட வார்த்தையை உச்சரிப்பது அந்த மொழியின் இயல்பைப் பொருத்தது.

 

உதாரணமாக முகம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை மு க ம் என்றுதான் எழுதி இருக்கிறோம் ஆனால் உச்சரிக்கும்போது முகம் என்றுதான் உச்சரிக்கிறோம். அதற்காக இதை முஹம் என்று மாற்றி எழுதலாமா?

 

இதேபோல, சங்கம் என்ற சொல். இது Cகஙம் என்று உச்சரிக்கப்படுகிறது. Cகன்கம் என்று உச்சரிக்கப்படாது. இதுதான் நம் தமிழ் மொழியின் இயல்பு.

 

இது அனைத்து மொழிகளுக்கும் உள்ள இயல்புதான். ஆங்கிலத்தில் இது மிக அதிகம். தமிழில் மிகமிகக் குறைவு. உதாரணம்: எனொஉக்க், cஉட், ச்டடிஒன், ப்ச்ய்சொலொக்ய், க்னிfஎ என்று மிக நீளமாய் நீளும். இவற்றை எழுதி இருப்பதுபோலவே வாசித்தால் வினோதமாக இருக்கும். அது ஆங்கிலத்தின் இயல்பு. இதனால் அந்த மொழி நகைப்புக்குரியதல்ல.

 

தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எழுதமுடியாது. Tஅமில் என்று அன்று வெள்ளையர் எழுதிவிட்டுப் போய்விட்டார்கள். அதை இன்றும் தமிழ்நாடு ஏற்று பயன்படுத்துவதை நான் வெறுக்கிறேன்.

 

Tகமிழ் என்று அதை அரசு ஆவனங்களில் மாற்றியமைக்க வேண்டும். ழ் என்ற எழுத்துக்கு இணையான எழுத்து ஆங்கிலத்தில் கிடையாது. அதனால் வேறொரு எழுத்தை அதற்காகப் பயன்படுத்தி உச்சரிக்கும்போது சரியாக உச்சரிக்கிறோம். அப்படித்தான் தமிழிலும், இல்லாத எழுத்துக்களுக்குப் பதிலாக, கூடுமானவரை உச்சரிக்கக்கூடிய எழுத்தை இட்டு நம் தமிழ் மொழியைக் காத்து முன்னேறுகிறோம்.

 

புஹாரி என்ற என் பெயரை நான் புகாரி என்று எழுதுகிறேன். உச்சரிப்பவர்கள், Bஉகரி என்று மிகச் சரியாக உச்சரிக்கிறார்கள். அப்துல் ரஹ்மான் என்ற பெயரை, அப்துல் ரகுமான் என்று கவிக்கோ எழுதுகிறார். எல்லோரும் சரியாகத்தான் உச்சரிக்கிறோம். ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை

 

கட்டுரையாளர் தன் பெயரை ஜெயபாரதன் என்று எழுதுகிறார். அதில் எனக்கு முழு உடன்பாடு. அதை செயபாரதன் என்று எழுதவேண்டிய அவசியம் இல்லை. அப்படி செயபாரதன் என்று எழுதினாலும் தவறில்லை. அது அவருடைய விருப்பம்.

 

பாரதி என்ற பெயரை Bகரதி என்று நாம் மிகச் சரியாக உச்சரிக்கிறோம். Pஆரதி என்று உச்சரிப்பதில்லை. எனவே அது சரிதான் என்பது என் கருத்து. புகாரி என்பதை Pஉகாரி என்று உச்சரிப்பவர்கள், அறியாமல் உச்சரிப்பார்கள், அறிந்ததும் மாற்றிக்கொண்டு Bஉகரி என்று உச்சரிப்பார்கள். இது எல்லா மொழிகளுக்கும் பொது. ஆங்கிலத்தில் "கினவ்லெட்ஜி - க்னொந்லெட்கெ" என்று அறியாமல் வாசித்தவர்கள் பிறகு "நாலட்ஜ்" என்று கற்றுக்கொண்டதும் சரியாக வாசிக்கிறார்கள்.

 

எனவே தமிழுக்குப் புதிய எழுத்துக்கள் அவசியமில்லை என்பதே என் கருத்து

 

"கிரந்த எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும்" என்று ஜெயபாரதன் சொல்வதை நான் ஏற்கிறேன்.

 

ஹாசன் என்பதை காசன் என்று எழுதமுடியாது. ஏனெனில் அது அவர் பெயர். ஆனால் என் தகப்பனார் பெயர் ஹசன் அதை அவர் அசன் என்று எழுதினார். நன்றாகத்தான் இருக்கிறது. பெயரைப் பொருத்தவரை அது அவரவர் விருப்பம். ஆனால் பெயர்ச்சொற்களைத் தவிர்த்த தமிழின் சொற்கள் தமிழ்ப் படுத்தப்படுவதையே நான் விரும்புகிறேன். அதையே நான் தூயதமிழ் என்கிறேன்.

 

ஸந்தோஷம் என்ற சொல் வடச்சொல். அதை நான் சந்தோசம் என்று எழுதுகிறேன். எழுதும்போதே சந்தோசப்படுகிறேன். ஜீசஸ் என்ற பெயர் ஏசுநாதர் என்று எப்போதோ ஆனது. இப்போதும் எனக்கு ஏசுநாதர் என்று சொல்வதே பிடித்திருக்கிறது. செவி பழகியபின் தமிழ் இனிக்கிறது. இதில் தவறில்லை என்பதே என் கருத்து.

 

என் நண்பர் ஒருவரின் பெயர் ராஜு ராஜேந்திரன். அவர் பெயரை நான் ராசு ராசேந்திரன் என்று எழுதலாம். ஆனால் அதை அவர் அனுமதிக்க வேண்டும். ஏனெனில் அது அவரின் பெயர். நான் விளையாடுவதற்கு ஒன்றும் இல்லை. என் பெயராக இருந்தால் நான் ராசு ராசேந்திரன் என்று மாற்றிக்கொள்வேன். அதனால் என் பெயர் சிதைந்ததாய் நான் எண்ணமாட்டேன். ஆனால் ராஜு ராஜேந்திரன் தன் பெயரை "வேந்தன் அரசு" என்று மாற்றிக்கொண்டார். அது அவரின் தனித் தமிழ்ப்பற்று, பரிதிமாற்கலைஞரைப் போல. அவரின் தனி விருப்பம். நான் அதை மதிக்கிறேன். சுரேஷ் என்று ஒரு நண்பர் பெயரை எழுதும்போது நான் சுரேசு என்று எழுதி நோகடிக்க விரும்புவதில்லை. இது என் வழக்கம். இதெல்லாம் தமிழில் தூய்மையைக் கெடுத்துவிடாது.

 

சமஸ்கிரதச் சொற்களைப்போல் வேறு எந்த மொழிச் சொற்களும் தமிழில் மிகமோசமாய்க் கலக்கவில்லை. நாம் எழுதும் அனைத்து எழுத்துக்களிலும் அவை உள்ளன. இன்று இயன்றவற்றை மட்டும் நீக்கிவிட்டு பழந்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த முனைகிறோம். அவற்றைச் செய்பவர்களை நான் பெரிதும் மதித்து வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். இதில் தமிழறிஞர்களின் பணி அளப்பரியது. அவர்களுக்கு என் நன்றி.

 

சங்கம் என்ற சொல் வடமொழிதான் என்று உறுதியாக சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நான் வடமொழி என்று நினைத்த எத்தனையோ சொற்களை சில தமிழறிஞர்கள் தமிழ்தான் என்று சொல்லி நிறுவுகிறார்கள். உதாரணமாக. வேட்டி என்ற சொல். இது நம்மிடமிருந்து வடமொழிக்குள் நுழைந்து வேஷ்டியாகி பிறகு நம்மிடமே வந்து மல்லுக்கு நிற்கிறது என்பார் ஒரு தமிழறிஞர். வேட்டி என்பதுதான் மூலம் என்பார்.

 

ஜெயபாரதனின் பட்டியலில் உள்ள பல சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் உண்டு. உதாரணம்.

 

பட்டர் = வெண்ணை

பவுடர் = பொடி

பஸ் = பேருந்து

டிரெய்ன் = புகைவண்டி, புகைரதம்

காலேஜ் = கல்லூரி

 

அல்ஜிப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ் போன்ற சொற்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.

 

சேக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா போன்றவை அவர்களின் பெயர்கள் அதில் நாம் கைவைப்பதில்லை.

 

தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்கள், தமிழ்ச்சொற்கள் ஆகிவிடுகின்றன. அதன் மூலம் எது என்று ஆராயும்போதுதான் அது எந்தமொழியில் இருந்து வந்தது என்ற தகவல் தெரியவரும். உதாரணமாக, சொர்க் நர்க் என்பார்கள் வடமொழியில். இவை சொர்க்கம் நரகம் என்று தமிழ்ப்படுத்தப் பட்டுவிட்டன. அப்படியே நாம் அவற்றைச் சொர்க் நர்க் என்று பாவிப்பதில்லை.

 

மன் என்ற சொல்லை மனது என்றும் மனசு என்றும்தான் நாம் பயன்படுத்துகிறோம். இப்படித் தமிழாக்கப்பட்ட மனது என்ற சொல்லை மீண்டும் அதன் மூல மொழியான வடமொழியில் பயன்படுத்தமுடியாது. அங்கே அது மன் தான். பர்வாநஹி தமிழில் பரவாயில்லை என்று ஆகவில்லையா?

 

தமிழ் என்ற சொல்லை Tஅமில் என்று ஆங்கிலேயர் இன்றும் எழுதுகிறார்கள். தஞ்சாவூர் என்ற சொல்லை Tஅஞொரெ என்றும், மதுரை என்ற சொல்லை

 

Mஎஜ்ர என்றும், தூத்துக்குடியை Tஉடிcஒரின் என்றும்தான் ஆங்கிலேயர் எழுதினார்கள். இந்த அசுத்தங்களைக் களைவது தமிழனின் கடமையல்லவா?

 

காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்ட்ரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்காங், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, கஸ்தூரி, சரஸ்வதி போன்ற பெயர்களை நான் அப்படியே எழுதுவதைத்தான் விரும்புகிறேன். ஏனெனில் இவையாவும் பிறநாட்டு, பிறமொழிப் பெயர்ச்சொற்கள். இவற்றைத் தமிழ்ப்படுத்த வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. தமிழ்ப் படுத்தினாலும் தவறில்லை.

 

டாமில் டமில் டாமிள் தமில் தமிள் என்று ஆங்கிலம் வாயிலாக என் அழகு தமிழைப் பிறர் உச்சரிக்கும்போது தமிழனாய்ப் பிறந்து தமிழனாய் வாழும் எனக்கு மிகுந்த வேதனையாய் இருக்கிறது.

 

ஆங்கிலத்தில் 'ழ' என்ற எழுத்தை ஏன் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றாமல் அது என்ன உலக மொழி என்று நான் கேட்கமாட்டேன். அதேபோலத்தான் தமிழிலும் வேண்டாத புதிய எழுத்துக்களை ஏற்றவேண்டிய அவசியமில்லை

 

சவுதியில் எனக்கு ஓர் இலங்கைத் தமிழர் நண்பராயிருந்தார். அவர் நண்பரானதே நான் அவர் பெயரை மிகச் சரியாக உச்சரித்ததால்தான். அன்று வரை சவுதியில் எவருமே அவர் பெயரைச் சரியாக உச்சரிக்கவில்லை என்றார். ண்கனென்ட்ரன் என்பதுதான் அவர் பெயர். ஞானேந்திரன் என்று நான் அவரை முதல் முறை அழைத்ததும். கண்ணீரே வந்துவிட்டது அவருக்கு. மற்றவர்களெல்லாம், காணேட்ரன், நானேன்ரன், நக்னேட்ரன் என்று கொன்று எடுத்திருக்கிறர்கள். ஞானேந்திரன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவதற்கு ஆங்கில எழுத்துக்கள்தாம் காரணம். ஆங்கிலத்தில் 'ஞ' என்ற எழுத்தை ஏன் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றாமல் அது என்ன உலக மொழி என்றும் நான் கேட்கமாட்டேன்.

 

நான் சவூதி அரேபியாவில் வாழ்ந்த காலங்களில் கொஞ்சம் அரபு மொழிப் பரிச்சயம் ஏற்பட்டது. கொஞ்சம் எழுதவும் வாசிக்கவும் பயின்றேன். அதிலுள்ள சில எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதவே முடியாது. கத்தான் என்ற ஓர் ஊர் உண்டு. அதை ஆங்கிலத்தில் Qஅடன் என்று எழுதுவார்கள். ஆனால் அராபியர்கள் உச்சரிப்பது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். அதற்கொரு எழுத்து ஆங்கிலத்தில் வேண்டாமா? இதெல்லாம் இல்லாமல் உலக மொழி அங்கீகாரம் எப்படி ஒரு மொழிக்கு வருகிறது என்று யோசிக்கலாம்.

 

"முஅஅல்லம்" என்று ஒரு பெயர் அரபு மொழியில் வரும். அதை ஆங்கிலத்தில் Mஉ'அல்லம் என்று மேலே ஒரு குறியிட்டு எழுதுவார்கள். அராபியர்கள் சொல்லித்தந்தபின்தான் அதன் உச்சரிப்பு நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் திண்டாட்டம்தான். எப்படிப்பார்த்தாலும், அராபியர்கள் அரபு மொழியை உச்சரிப்பதுபோல் நம்மால் உச்சரிக்கமுடியாது.

 

சைனாக்காரர்கள் பேசக் கேட்டிருக்கலாம். பல எழுத்துக்களை நம் செவியால் பிடிக்கவே முடியாது. தமிழில் புதிய எழுத்துக்களைக் கொண்டு வர விரும்பும்போது எந்த மொழியிலிருந்து உள்ள சொல்லை உச்சரிக்க நாம் கொண்டுவரவேண்டும் என்று ஜெயபாரதன் விரும்புகிறார்?

 

பிரஞ்சு மொழி வாசகங்களைப் பார்த்திருக்கலாம். எல்லாம் தெரிந்த எழுத்துக்கள் போலவே இருக்கும். ஏனெனில் பெரும்பாலானவை ஆங்கில எழுத்துக்கள். ஆனால் நாம் உச்சரித்தால் அப்படியே தப்பாய்ப்போய் முடியும். பிரஞ்சுக் காரர்கள் அல்லது பிரஞ்சு அறிந்தவர்கள்தாம் நமக்குச் சரியானதைச் சொல்லித்தரமுடியும்.

 

ஒவ்வொரு மொழியும் அழகுதான். எந்த மொழி அழகில்லாதது?

 

தாய்முலைப்பாலோடு, தாய்மண் வாசனையோடு, மூதாதயர் மரபணுக்களோடு எந்த மொழி மூச்சின் உட்செல்கிறதோ அந்த மொழிதான் அவனவனுக்கு உயிர். இதனால் அடுத்த மொழிகளெல்லாம் அழகல்ல என்று பொருளல்ல.

 

எனக்குத் தமிழ்த்தாய்தான் மிக மிக இனிப்பானவள். அவள் மடியில்படுத்து பொன்னூஞ்சலாடுவதில்தான் என் ஆன்மாவுக்கு நிறைவு. அடடா தமிழ்த்தாய் எத்தனை அழகு என்று நான் நாளெல்லாம் அதிசயிக்கிறேன்!

 

முகம், மாசம், சனி, சக்கரம் என்றெல்லாம் எழுதுகிறோம். இதில் முகம் என்ற சொல்லில் க வுக்கு என்ன உச்சரிக்கிறோம்? க என்றா ஹ என்றா?

 

மாசம் என்ற சொல்லில் ச வுக்கு என்ன உச்சரிப்பு ச வா ச வா? சனி என்பதன் ச வும் சக்கரம் என்பதின் ச வும் உச்சரிப்பில் ஒன்றா?

 

இது தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் உண்டு. Cஉட், Pஉட் இதில் உ வுக்கு என்ன ஓசை? இரண்டிலும் ஒன்றா? ஸுன், ஸொன் எப்படி வித்தியாசப் படுத்துகிறோம்? கிரெ, கெரெ, கெஅர், கெஇர், கைர் நுணுக்கமாக எப்படி உச்சரிக்கிறோம்? ஸ்டடிஒன் இதில் டி க்கு என்ன உச்சரிப்பு? ஏன்? இன்னும் எனக்கு இதுபோல் ஒரு லட்சம் கேள்விகளும் சொச்சமும் இருக்கின்றன.

 

உலகத்தில் உள்ள அத்தனை மொழிச் சொற்களும் அதன் மூல மொழியில் உள்ளதுபோலவே பிற மொழிகளிலும் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால், அத்தனை மொழிகளையும் அழித்துவிட்டு, புதிதாக ஒரு மொழியை உருவாக்கி, உலகமொழி என்று அழைக்கவேண்டும். இல்லாவிட்டால், ஜெயபாரதன் கூறுவது சாத்தியப்படாது.

 

பிறமொழிப் பெயர்களை அந்த மொழியில் உள்ளதுபோலவே தமிழில் எழுத முடியவில்லை (உச்சரிக்கமுடியும்) என்பதற்காகத் தமிழைக் குறைகூறலாமா?

 

அதேபோல் தமிழ்ச்சொல் ஒன்றைப் பிறமொழியில் எழுதமுடியவில்லை என்பதற்காக அந்த மொழியைக் குறைசொல்லலாமா? ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் இயல்பு இருப்பதை ரசிப்பதும். இயன்றவரை எப்படி வளைக்கலாம் என்பதை சாதுர்யமாய்ச் செய்தும்தானே நாமே மொழியைப் போற்றவும் வளர்க்கவும் முடியும்?

 

தமிழை ஒரு மருமகளாகக் கற்பனை செய்து பாருங்கள். அடுத்த வீட்டுக்குச் சென்ற மருமகள் தன் அடையாடங்களைச் சுத்தமாகத் தொலைத்துவிட்டு, அப்படியே மாறிவிட்டாள் என்பது ஒன்று. தன் அடையாடளங்களையும் தக்க வைத்துக்கொண்டு, புகுந்த இடத்துக்கும் வளைந்து கொடுத்துக்கொண்டு வாழ்கிறாள் என்பது ஒன்று. இவை இரண்டில் தமிப்பற்றுள்ள ஜெயபாரதன் எதை விடும்புவார்? ஆயினும் தமிழ் மருமகள் ஆகமாட்டாள். தமிழ் ஒரு தாய் அந்தத் தாய் தன் வீடு வந்த மருகளுக்காகக் கொஞ்சம் வளைந்து கொடுப்பாள். ஆனால் தன் வீட்டின் பாரம்பரியம் இயல்பு இவை சிதையும் பட்சத்தில் உறுதியாக நிற்பாள்.

 

தமிழன் தமிழ்ப் பெயர்தான் வைக்கவேண்டும். நாம் அதற்குத் தயாராயில்லை. ஆனால் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டுதான் வாழ்கிறோம்.

 

பிறமொழிப் பெயர்களை நாம் வைத்துக்கொண்டு, அதாவது குறையை நம்மீது வைத்துக்கொண்டு தமிழைக் குறைகூற வருகிறோம். ஜெயபாரதனின் அத்தனை பிரச்சினையும் பெயரை உச்சரிக்கமுடியவில்லையே என்பதிலேயே இருக்கிறது.

 

தமிழ்ப்பெயர் வைக்க விரும்பாதவர்கள், ஒரு சைனா பெயரை வைத்துக் கொள்ளலாம். அது அவர்கள் விருப்பம். ஸ்சூங் ஷ்சயாங் ப்ச்ஞ்சூய் என்று தான் அவர் பெயரை தமிழில் எழுதமுடியும். அவர் உச்சரிப்பதை அப்படியே ஒருக்காலும் தமிழில் மட்டுமல்ல வேறு எந்த மொழியிலும் எழுதமுடியாது.

 

அடுத்தது தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது தொடர்பாகவும் ஜெயபாரதன் எழுதியிருக்கிறார். இதை வாசிக்கும்போது கவிஞர் மதுமிதா தன் நேர்காணலில் "நமது இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இரண்டுக்குமே தமிழ்த் தலைப்பு கிடையாது. ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி எதிலுமே தமிழ் இல்லையே" என்று சொன்னது என் ஞாபகத்துக்கு வருகிறது.

 

திருக்குறள், நன்னூல், புறநானூறு, அகநானூறு, குற்றாலக் குறவஞ்சி, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று ஏராளமான தமிழ்த் தலைப்புகளில் கவிதைகள், காவியங்கள் தமிழில் உண்டு.

 

ஆரியர்களின் வரவால் சமஸ்கிருதப் பெயர்கள் திராவிடர்களுக்கு வைக்கப்பட்டன. மணிமேகலை, சீவகன், கோபால், சண்முகம் எல்லாம் தமிழ்ப் பெயர்கள் அல்ல. அவை புகுத்தப்பட்ட பிறமொழிப் பெயர்கள். அப்துல்காதர், அப்துல்ரகுமான் பொன்ற இஸ்லாமியப் பெயர்கள், டேவிட், ஜேகப் போன்ற கிருத்தவப் பெயர்கள், விக்னேஷ்வர், திலிப் போன்ற இந்துப் பெயர்கள் எல்லாம் மத அடையாளங்களாக வைக்கப்பட்டன.

 

அன்பு, முத்தழகு, அரசு, பூங்கொடி என்ற தமிழ்ப் பெயர்கள் பிறகு தலைகாட்டத் தொடங்கின. ஈராயிரம் வருடங்களாக, மதம் என்பது சக்திவாய்ந்த ஒன்றாக இருப்பதால், இதன் வளர்ச்சி அத்தனை வேகமானதாக அமையவில்லை. ஆனால் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

 

உண்மைதான். பெயரில் ஒன்றும் இல்லை. பெயரைச் சுமந்தவர் தமிழை நேசிக்கும் தமிழராய் இருக்கும் பட்சத்தில். ஆனால் நாம் ஒன்றை இங்கே கவனிக்கவேண்டும். சீவக சிந்தாமணி என்று ஒரு காவியத்துக்குப் பெயரிட அந்தப் பாத்திரம் காரணமாய் இருந்தது.

 

உதாரணமாக, காந்தி என்று ஆங்கிலப்படத்துக்குப் பெயரிட்டார்கள். அது மிகவும் சரி. அவர்களே, "நல்லவன் வாழ்வான்" என்று ஓர் ஆங்கிலப் படத்துக்குப் பெயர் வைப்பார்களா?

 

நம் திரைப்படப் பெயர்களைப் பாருங்கள், நியூ, பாய்ஸ், ஜீன்ஸ், ஜெண்டில்மேன், ஆட்டோகிராப். இவர்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க ஏதேனும் காரணம் உண்டா?

 

ஆட்டோகிராப் என்ற படம் தலைப்பில் ஆங்கிலம் வைத்திருந்தாலும், ஆதாம் ஏவாள் பேசியது தமிழ்தான் என்றும் மலையாளிக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது போலவும் சிறப்பான தமிழ்ப்படமாய் இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அந்தப் படத்திற்கு தமிழில் பெயரிட முடியாதா?

 

பெயரிட்டால் அந்தப் படத்தின் கருவுக்கு களங்கம் வந்துவிடுமா? அந்தப் படத்தில் உள்ள அருமையான பாடல்களின் முதல் வரியை வைத்தாலே அற்புதமாய் இருக்குமே. "மனசுக்குள்ளே" என்று கூட வைக்கலாமே. இன்னும் பொருத்தமானதாகத்தானே இருக்கும்?

 

மாவீரன் நெப்போலியனைப் பற்றி படம் எடுத்தால், "நெப்போலியன்" என்று பெயரிடலாம். அதில் பொருள் உண்டு. திருச்சியிலிருந்து சென்னைக்குப் போய் வாழும் ஒருவனின் படத்துக்கு ரன் - Jஒஎ என்று பெயர் வைத்தால், இவர்கள் என்ன தமிழர்கள்? தமிழ்ப் படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கக் கோரி போராடாமல், ஹாலிவுட் படங்களுக்கு, 'காக்கைச் சிறகினிலே', 'நின்னைச் சரணடைந்தேன்' என்று கூறியா போராடமுடியும்?

 

நன்றி: பதிவுகள்.காம்

க்ட்ட்ப்://ந்ந்ந்.கெஒடமில்.cஒம்/பதிவுகல்/புகரி_ஒன்_ஜயபரதன்_டமில்_1.க்ட்

 

தமிழில் வடமொழி கலப்பு சொற்கள் - Android செயலி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.