Jump to content

தூய தமிழ்ச்சொற்கள்


Recommended Posts

கனடா படைப்பாளிகள் கழகம் தூய தமிழ்ச்சொற்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தமிழ் ஊடகங்களை மிகப்பயனுள்ளதாக இந்தச் சொற்கள் அமைந்துள்ளன. தமிழ் ஊடகங்களிற்கு இவற்றைச் சுட்டுக்காட்டுவது செவிடன் காதில் ஊதிய சங்கு(ஒலி) போன்றது. எனினும் இதன்மூலம் ஒரு ஊடகமாகவது திருந்தினால் மகிழ்ச்சி.

இது தொடர்பாக தமிழ் படைப்பாளிகள் கழகம் வெளியிட்ட அறிக்கையும், தமிழ்ச்சொற்களும்

http://nakkeran.com/Thamilpure2004.htm

Link to comment
Share on other sites

படைப்பளிக்கழகத்தின் இந்த முயற்சிக்கு நிச்சயம் பாராட்ட வேண்டும். இதனை யாழில் இணைத்த மின்னலுக்கு மிக்க நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. எந்தவொரு சொற்களையும் பழக்கத்திற்கு கொண்டு வர ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. ஊடகங்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

ஒரு வேதனையான சம்பவம், தமிழ் படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் திரு.நக்கீரன் ஆக்கங்களை எழுதும் முழக்கம் பத்திரிகைக்கு ஸ். ஷ் போன்றவை மாத்திரமே வேற்றுமொழியில் இருந்து நாம் பயன்படுத்துவை மாதிரித் தெரியுது. செய்திகளில் பாகிஸ்தான் என்பதற்குப் பதிலாக பாகிசுதான் என்று மாற்றி எழுதுவினம். ஆனால் பிறமொழிச் சொற்கள் பரவலாகவே பயன்படுத்துகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சிரத்தைக்கு நன்றி மின்னல்.

Link to comment
Share on other sites

எனக்கு எல்லாம் மாறி மாறி போட்ட மாதிரிக் கிடக்குது. இவ்வளவு பேரும் வாசிச்சுச் சொன்ன படியால் என் கணியில்தான் எதாவது பிழையோ? :icon_idea:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்

ந.வெற்றியழகன்

சாந்தம் - அடக்கம்

சாந்தி - அமைதி

சாரம் - சாறு; பிழிவு

சாராம்சம் - சாறு; பிழிவு

சாத்தியமான - இயலக்கூடிய

சாம்ராச்சியம் - பேரரசு

சிகரம் - உச்சி; முகடு

சிகை - தலைமயிர்

சிரம் - தலை

சிரசு - தலை

சிங்கம் - அரிமா

சிங்காரம் - ஒப்பனை; அழகு

சிசு - குழந்தை; சேய்

சித்தப்பிரமை - மனமயக்கம்

சிகிச்சை - மருத்துவம்

சித்தாந்தம் - கோட்பாடு

சிந்தனை - எண்ணம்

சிரமம் - கடுமை

சிலை - படிமம்

சிநேகம் - நட்பு

சிருங்காரம் - காமம்

சிதிலம் - சிதைவு

சீக்கிரமாக - சுருக்காக

சீதபேதி - வயிற்றுக்கடுப்பு

சீலம் - நல்லொழுக்கம்

சீ(ஜீ)ரணம் - செரிமானம்

சீ(ஜீ)வன் - உயிர்

சீ(ஜீ)வனம் - பிழைப்பு

சுகம் - நலம்

சுலபம் - எளிது

சுகவீனம் - நலக்குறைவு

சுகாதாரம் - நலவாழ்வு

சுத்தம் - தூய்மை

சுத்திகரிப்பு - துப்புரவு

சுதந்திரம் - விடுதலை; தன்னுரிமை

சுந்தரம் - எழில்

சுபம் - நன்மை

சுபீட்சம் - செழிப்பு

சுபாவம் - இயல்பு

சுய(நலம்) - தன்(னலம்)

சுயமாக - தானாக, சொந்தமாக

சுவாசம் - மூச்சு

சுரணை - உணர்ச்சி

சுயாதீனம் - தன்னுரிமை

சு(ஜு)வாலை - தீக்கொழுந்து

சுயேச்சை - தன்விருப்பம்

சூட்சுமம் - நுட்பம்

சூசகம் - மறைமுகம்

சூத்திரம் - நூற்பா

சூன்யம் - வெறுமை; பாழ்; இன்மை

சேட்டை - குறும்பு

சொகுசு - பகட்டு

சொப்பனம் - கனவு

சொற்பம் - சிறுமை; கொஞ்சம்

சோகம் - துயரம்

சோதனை - ஆய்வு

சோரம் - கள்ளம்

சவுக்யம் - நலம்

சவுபாக்யம் - நற்பேறு

ஞாபகம் - நினைவு

ஞானம் - அறிவு

தண்டனை - ஒறுத்தல்

தத்துவம் - மெய்யியல்; மெய்யுணர்வு; மெய்ப்பொருளியல்

தயவு (தயை) - இரக்கம்

தயாளம் - இரக்கம்

தந்தி - தொலைவரி

தயிலம் - எண்ணெய்

தரிசு - வறள்நிலம்; விடுநிலம்

தருணம் - வேளை

தனம் - செல்வம்

தரித்திரம் - வறுமை

தயாரிப்பு - விளைவாக்கம்

தகனம் - எரியூட்டல்

தய்ரியம் - துணிச்சல்

தானம் - கொடை

தாகம் - நீர்வேட்கை

தாசன் - அடியான்

தாட்சண்யம் - கண்ணோட்டம்; இரக்கம்

தாமதம் - காலநீட்சி; காலத்தாழ்ச்சி; நெடுநீர்

திடம் - திண்மை

திடகாத்திரம் - உடலுறுதி; உடற்கட்டு; கட்டுடல்

தியாகம் - ஈகம்

திரவம் - நீர்மம்

திரவியம் - செல்வம்

திராணி - தெம்பு; வலிமை

http://www.keetru.com/info_box/general/tamil.html

சிவப்பில் உள்ளதெல்லாம் தமிழ் இல்லையெனில் தமிழ் எப்படி வளர்ந்தது? தூய தமிழ் என்று சொல்லி மொழியை வளராமல் பண்ணுவது நல்லதல்ல. :lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்

சாந்தம் - அடக்கம்

சாந்தி - அமைதி

சாரம் - சாறு; பிழிவு

சாராம்சம் - சாறு; பிழிவு

சாத்தியமான - இயலக்கூடிய

சாம்ராச்சியம் - பேரரசு

சிகரம் - உச்சி; முகடு

சிகை - தலைமயிர்

சிரம் - தலை

சிரசு - தலை

சிங்கம் - அரிமா

சிங்காரம் - ஒப்பனை; அழகு

சிசு - குழந்தை; சேய்

சித்தப்பிரமை - மனமயக்கம்

சிகிச்சை - மருத்துவம்

சித்தாந்தம் - கோட்பாடு

சிந்தனை - எண்ணம்

சிரமம் - கடுமை

சிலை - படிமம்

சிநேகம் - நட்பு

சிருங்காரம் - காமம்

சிதிலம் - சிதைவு

சீக்கிரமாக - சுருக்காக

சீதபேதி - வயிற்றுக்கடுப்பு

சீலம் - நல்லொழுக்கம்

சீ(ஜீ)ரணம் - செரிமானம்

சீ(ஜீ)வன் - உயிர்

சீ(ஜீ)வனம் - பிழைப்பு

சுகம் - நலம்

சுலபம் - எளிது

சுகவீனம் - நலக்குறைவு

சுகாதாரம் - நலவாழ்வு

சுத்தம் - தூய்மை

சுத்திகரிப்பு - துப்புரவு

சுதந்திரம் - விடுதலை; தன்னுரிமை

சுந்தரம் - எழில்

சுபம் - நன்மை

சுபீட்சம் - செழிப்பு

சுபாவம் - இயல்பு

சுய(நலம்) - தன்(னலம்)

சுயமாக - தானாக, சொந்தமாக

சுவாசம் - மூச்சு

சுரணை - உணர்ச்சி

சுயாதீனம் - தன்னுரிமை

சு(ஜு)வாலை - தீக்கொழுந்து

சுயேச்சை - தன்விருப்பம்

சூட்சுமம் - நுட்பம்

சூசகம் - மறைமுகம்

சூத்திரம் - நூற்பா

சூன்யம் - வெறுமை; பாழ்; இன்மை

சேட்டை - குறும்பு

சொகுசு - பகட்டு

சொப்பனம் - கனவு

சொற்பம் - சிறுமை; கொஞ்சம்

சோகம் - துயரம்

சோதனை - ஆய்வு

சோரம் - கள்ளம்

சவுக்யம் - நலம்

சவுபாக்யம் - நற்பேறு

ஞாபகம் - நினைவு

ஞானம் - அறிவு

தண்டனை - ஒறுத்தல்

தத்துவம் - மெய்யியல்; மெய்யுணர்வு; மெய்ப்பொருளியல்

தயவு (தயை) - இரக்கம்

தயாளம் - இரக்கம்

தந்தி - தொலைவரி

தயிலம் - எண்ணெய்

தரிசு - வறள்நிலம்; விடுநிலம்

தருணம் - வேளை

தனம் - செல்வம்

தரித்திரம் - வறுமை

தயாரிப்பு - விளைவாக்கம்

தகனம் - எரியூட்டல்

தய்ரியம் - துணிச்சல்

தானம் - கொடை

தாகம் - நீர்வேட்கை

தாசன் - அடியான்

தாட்சண்யம் - கண்ணோட்டம்; இரக்கம்

தாமதம் - காலநீட்சி; காலத்தாழ்ச்சி; நெடுநீர்

திடம் - திண்மை

திடகாத்திரம் - உடலுறுதி; உடற்கட்டு; கட்டுடல்

தியாகம் - ஈகம்

திரவம் - நீர்மம்

திரவியம் - செல்வம்

திராணி - தெம்பு; வலிமை

நன்றி : தோப்பு

Link to comment
Share on other sites

வடமொழி-தமிழ் அகராதியை இணைத்தமைக்கு நன்றி.

நம்பவே முடியலையே இவ்வளவு சொல்லும் வடமொழியா? நாங்க அரைக்கரைவாசி வடமொழியையா கலந்து பேசுறோம்?

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல ஆக்கங்கள், நன்றி மின்னல். :huh::lol:

Link to comment
Share on other sites

திரு. ஜெயபாரதன் அவர்களின் தமிழ் விடுதலையாகட்டும் என்ற கட்டுரையை வாசித்தேன் என் கருத்துக்களையும் பதிவுகளில் பதிவு செய்கிறேன். (ஜெயபாரதனின் கட்டுரை இக்கட்டுரைக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

ஜெயபாரதன் சொல்வதுபோல, தூயதமிழ் என்பது நிலவ வழியில்லைதான். மொழியின் வளர்ச்சியியல்படி தூய்மை என்பது பொருளற்றுப் போகும்.

ஆனால் எது தூய்மை என்று நாம் வரையறுத்துக்கொண்டால், நம் தமிழ்மொழி தூய்மையாகவே இருக்கும்.

அவசியம் ஏற்படும்போது மட்டும், பிறமொழிச்சொற்களைத் தமிழ்ப் படுத்தி ஏற்றுக்கொள்வதால் தமிழின் தூய்மை கெட்டுவிடும் என்று கொள்வதற்கில்லை. இதைத் தொல்காப்பியக்காலம்தொட்டே ஏற்றுக்கொண்டுள்ளோம். இலக்கணமாகவும் வகுத்துக்கொண்டுள்ளோம்.

ஆனால், வேண்டுமென்றே, தமிழென்னும் இனிய நதிக்குள் சாக்கடை கலப்பதுபோல், பிறமொழிச்சொற்களை, தமிழில் இணையான சொற்கள் இருந்தும் வலுக்கட்டாயமாகக் கலப்பது தமிழ் மொழியின் தூய்மைக்கு நாசம்தான்.

உதாரணமாக, ஜெயபாரதன் எழுதி இருக்கும் இந்தக் கட்டுரையே ஒரு எடுத்துக்காட்டு. அவர் இக்கட்டுரையில் அவசியம் இல்லாமல் எந்த ஒரு கலப்பையும் செய்யவே இல்லை. இப்படி எழுதினால் போதும். ஜெயபாரதனின் அறிவியல் கட்டுரைகளை நான் திண்ணையில் வாசித்திருக்கிறேன், அவை நல்ல தமிழில், அழகு தமிழ்ச் சொற்களின் மொழிபெயர்ப்போடு உலா வருகின்றன. அதை நான் பாராட்டுகிறேன்.

பதிலாக சிலர் நான் "வாக்" பண்ணும்போது என் "டாக்" என் "ஹாண்ட்" ஐ விட்டு "ரன்" பண்ணிவிட்டது. என்கிறார்களே. கேட்டால் தமிழ் வளர்க்கிறேன் என்கிறார்கள். தமிழ் எனக்கு மூச்சு ஆனால், அதைப் பிறர்மேல் விடமாட்டேன் என்கிறார்கள். என்ன கூத்து இது.

தமிழைச் செம்மொழி என்று அறிவித்ததன் காரணமாக மிகமுக்கியமாக ஒன்றைச் சொல்கிறார்கள். அது தமிழின் தொடர்ச்சி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழும் இன்று இருக்கும் தமிழும் மிகச் சிறிய மாற்றங்களோடு மட்டுமே இருக்கின்றன. இச்சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை என்கிறார்கள். .

இன்று தமிழ் கணினி மொழியாக அருமையாக பவனி வருகிறது. ஆங்கில மொழிக்குப் பிறகு தமிழ் மொழிதான் இணையத்தில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. ஜெயபாரதனைப் போலவே தாங்கள் சொல்ல வேண்டியவற்றைத் தமிழர்கள் எந்தத் தடையும் இன்றி சொல்லிவருகிறார்கள்.

புதிய சொற்களின் தேடல் ஒருபுறம் செழுமையாய் நடந்து கொண்டிருக்கிறது. கணினி, இணையம், மின்னஞ்சல், மடலாடல், மட்டுநர், ஊடகம், தொலைக்காட்சி என்று ஏராளமான சிறந்த தமிழாக்கங்கள் உருவாகிக்கொண்டும் பலரால் பயன்படுத்தப்பட்டு வெற்றிநடை போட்டுக்கொண்டும்தான் இருக்கின்றன. ஜெயபாரதனும் நிறைய மொழியாக்கம் செய்திருக்கிறார் என்று அறிகிறேன்.

திடீர் என்று ஒரு சொல் அறிமுகமாகும்போது அதை அப்படியே ஏற்பதும், பிறகு நல்ல தமிழாக்கம் வந்ததும் மாற்றிக் கொள்வதையும் தமிழ் தொன்றுதொட்டே செய்துகொண்டுதான் இருக்கிறது.

"தமிழில் ஸ(ஸ), ஸ்க(ஷ), Jஅ(ஜ), Hஅ(ஹ), Gஅ(?), Dஅ(?), Bஅ(?), Dக(?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும்" என்று எழுதி இருக்கிறார் ஜெயபாரதன்.

தமிழுக்குப் புதிய எழுத்துக்கள் தேவையில்லை. கிரந்த எழுத்துக்கள் தமிழிலிருந்து அகற்றப்படவும் இல்லை. இருக்கும் எழுத்துக்களைக் கொண்டே நம்மால் எந்தச் சொற்களையும் எழுதமுடியும். ஒரு மொழியில் எழுதப்பட்ட வார்த்தையை உச்சரிப்பது அந்த மொழியின் இயல்பைப் பொருத்தது.

உதாரணமாக முகம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை மு க ம் என்றுதான் எழுதி இருக்கிறோம் ஆனால் உச்சரிக்கும்போது முகம் என்றுதான் உச்சரிக்கிறோம். அதற்காக இதை முஹம் என்று மாற்றி எழுதலாமா?

இதேபோல, சங்கம் என்ற சொல். இது Cகஙம் என்று உச்சரிக்கப்படுகிறது. Cகன்கம் என்று உச்சரிக்கப்படாது. இதுதான் நம் தமிழ் மொழியின் இயல்பு.

இது அனைத்து மொழிகளுக்கும் உள்ள இயல்புதான். ஆங்கிலத்தில் இது மிக அதிகம். தமிழில் மிகமிகக் குறைவு. உதாரணம்: எனொஉக்க், cஉட், ச்டடிஒன், ப்ச்ய்சொலொக்ய், க்னிfஎ என்று மிக நீளமாய் நீளும். இவற்றை எழுதி இருப்பதுபோலவே வாசித்தால் வினோதமாக இருக்கும். அது ஆங்கிலத்தின் இயல்பு. இதனால் அந்த மொழி நகைப்புக்குரியதல்ல.

தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எழுதமுடியாது. Tஅமில் என்று அன்று வெள்ளையர் எழுதிவிட்டுப் போய்விட்டார்கள். அதை இன்றும் தமிழ்நாடு ஏற்று பயன்படுத்துவதை நான் வெறுக்கிறேன்.

Tகமிழ் என்று அதை அரசு ஆவனங்களில் மாற்றியமைக்க வேண்டும். ழ் என்ற எழுத்துக்கு இணையான எழுத்து ஆங்கிலத்தில் கிடையாது. அதனால் வேறொரு எழுத்தை அதற்காகப் பயன்படுத்தி உச்சரிக்கும்போது சரியாக உச்சரிக்கிறோம். அப்படித்தான் தமிழிலும், இல்லாத எழுத்துக்களுக்குப் பதிலாக, கூடுமானவரை உச்சரிக்கக்கூடிய எழுத்தை இட்டு நம் தமிழ் மொழியைக் காத்து முன்னேறுகிறோம்.

புஹாரி என்ற என் பெயரை நான் புகாரி என்று எழுதுகிறேன். உச்சரிப்பவர்கள், Bஉகரி என்று மிகச் சரியாக உச்சரிக்கிறார்கள். அப்துல் ரஹ்மான் என்ற பெயரை, அப்துல் ரகுமான் என்று கவிக்கோ எழுதுகிறார். எல்லோரும் சரியாகத்தான் உச்சரிக்கிறோம். ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை

கட்டுரையாளர் தன் பெயரை ஜெயபாரதன் என்று எழுதுகிறார். அதில் எனக்கு முழு உடன்பாடு. அதை செயபாரதன் என்று எழுதவேண்டிய அவசியம் இல்லை. அப்படி செயபாரதன் என்று எழுதினாலும் தவறில்லை. அது அவருடைய விருப்பம்.

பாரதி என்ற பெயரை Bகரதி என்று நாம் மிகச் சரியாக உச்சரிக்கிறோம். Pஆரதி என்று உச்சரிப்பதில்லை. எனவே அது சரிதான் என்பது என் கருத்து. புகாரி என்பதை Pஉகாரி என்று உச்சரிப்பவர்கள், அறியாமல் உச்சரிப்பார்கள், அறிந்ததும் மாற்றிக்கொண்டு Bஉகரி என்று உச்சரிப்பார்கள். இது எல்லா மொழிகளுக்கும் பொது. ஆங்கிலத்தில் "கினவ்லெட்ஜி - க்னொந்லெட்கெ" என்று அறியாமல் வாசித்தவர்கள் பிறகு "நாலட்ஜ்" என்று கற்றுக்கொண்டதும் சரியாக வாசிக்கிறார்கள்.

எனவே தமிழுக்குப் புதிய எழுத்துக்கள் அவசியமில்லை என்பதே என் கருத்து

"கிரந்த எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும்" என்று ஜெயபாரதன் சொல்வதை நான் ஏற்கிறேன்.

ஹாசன் என்பதை காசன் என்று எழுதமுடியாது. ஏனெனில் அது அவர் பெயர். ஆனால் என் தகப்பனார் பெயர் ஹசன் அதை அவர் அசன் என்று எழுதினார். நன்றாகத்தான் இருக்கிறது. பெயரைப் பொருத்தவரை அது அவரவர் விருப்பம். ஆனால் பெயர்ச்சொற்களைத் தவிர்த்த தமிழின் சொற்கள் தமிழ்ப் படுத்தப்படுவதையே நான் விரும்புகிறேன். அதையே நான் தூயதமிழ் என்கிறேன்.

ஸந்தோஷம் என்ற சொல் வடச்சொல். அதை நான் சந்தோசம் என்று எழுதுகிறேன். எழுதும்போதே சந்தோசப்படுகிறேன். ஜீசஸ் என்ற பெயர் ஏசுநாதர் என்று எப்போதோ ஆனது. இப்போதும் எனக்கு ஏசுநாதர் என்று சொல்வதே பிடித்திருக்கிறது. செவி பழகியபின் தமிழ் இனிக்கிறது. இதில் தவறில்லை என்பதே என் கருத்து.

என் நண்பர் ஒருவரின் பெயர் ராஜு ராஜேந்திரன். அவர் பெயரை நான் ராசு ராசேந்திரன் என்று எழுதலாம். ஆனால் அதை அவர் அனுமதிக்க வேண்டும். ஏனெனில் அது அவரின் பெயர். நான் விளையாடுவதற்கு ஒன்றும் இல்லை. என் பெயராக இருந்தால் நான் ராசு ராசேந்திரன் என்று மாற்றிக்கொள்வேன். அதனால் என் பெயர் சிதைந்ததாய் நான் எண்ணமாட்டேன். ஆனால் ராஜு ராஜேந்திரன் தன் பெயரை "வேந்தன் அரசு" என்று மாற்றிக்கொண்டார். அது அவரின் தனித் தமிழ்ப்பற்று, பரிதிமாற்கலைஞரைப் போல. அவரின் தனி விருப்பம். நான் அதை மதிக்கிறேன். சுரேஷ் என்று ஒரு நண்பர் பெயரை எழுதும்போது நான் சுரேசு என்று எழுதி நோகடிக்க விரும்புவதில்லை. இது என் வழக்கம். இதெல்லாம் தமிழில் தூய்மையைக் கெடுத்துவிடாது.

சமஸ்கிரதச் சொற்களைப்போல் வேறு எந்த மொழிச் சொற்களும் தமிழில் மிகமோசமாய்க் கலக்கவில்லை. நாம் எழுதும் அனைத்து எழுத்துக்களிலும் அவை உள்ளன. இன்று இயன்றவற்றை மட்டும் நீக்கிவிட்டு பழந்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த முனைகிறோம். அவற்றைச் செய்பவர்களை நான் பெரிதும் மதித்து வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். இதில் தமிழறிஞர்களின் பணி அளப்பரியது. அவர்களுக்கு என் நன்றி.

சங்கம் என்ற சொல் வடமொழிதான் என்று உறுதியாக சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நான் வடமொழி என்று நினைத்த எத்தனையோ சொற்களை சில தமிழறிஞர்கள் தமிழ்தான் என்று சொல்லி நிறுவுகிறார்கள். உதாரணமாக. வேட்டி என்ற சொல். இது நம்மிடமிருந்து வடமொழிக்குள் நுழைந்து வேஷ்டியாகி பிறகு நம்மிடமே வந்து மல்லுக்கு நிற்கிறது என்பார் ஒரு தமிழறிஞர். வேட்டி என்பதுதான் மூலம் என்பார்.

ஜெயபாரதனின் பட்டியலில் உள்ள பல சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் உண்டு. உதாரணம்.

பட்டர் = வெண்ணை

பவுடர் = பொடி

பஸ் = பேருந்து

டிரெய்ன் = புகைவண்டி, புகைரதம்

காலேஜ் = கல்லூரி

அல்ஜிப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ் போன்ற சொற்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.

சேக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா போன்றவை அவர்களின் பெயர்கள் அதில் நாம் கைவைப்பதில்லை.

தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்கள், தமிழ்ச்சொற்கள் ஆகிவிடுகின்றன. அதன் மூலம் எது என்று ஆராயும்போதுதான் அது எந்தமொழியில் இருந்து வந்தது என்ற தகவல் தெரியவரும். உதாரணமாக, சொர்க் நர்க் என்பார்கள் வடமொழியில். இவை சொர்க்கம் நரகம் என்று தமிழ்ப்படுத்தப் பட்டுவிட்டன. அப்படியே நாம் அவற்றைச் சொர்க் நர்க் என்று பாவிப்பதில்லை.

மன் என்ற சொல்லை மனது என்றும் மனசு என்றும்தான் நாம் பயன்படுத்துகிறோம். இப்படித் தமிழாக்கப்பட்ட மனது என்ற சொல்லை மீண்டும் அதன் மூல மொழியான வடமொழியில் பயன்படுத்தமுடியாது. அங்கே அது மன் தான். பர்வாநஹி தமிழில் பரவாயில்லை என்று ஆகவில்லையா?

தமிழ் என்ற சொல்லை Tஅமில் என்று ஆங்கிலேயர் இன்றும் எழுதுகிறார்கள். தஞ்சாவூர் என்ற சொல்லை Tஅஞொரெ என்றும், மதுரை என்ற சொல்லை

Mஎஜ்ர என்றும், தூத்துக்குடியை Tஉடிcஒரின் என்றும்தான் ஆங்கிலேயர் எழுதினார்கள். இந்த அசுத்தங்களைக் களைவது தமிழனின் கடமையல்லவா?

காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்ட்ரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்காங், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, கஸ்தூரி, சரஸ்வதி போன்ற பெயர்களை நான் அப்படியே எழுதுவதைத்தான் விரும்புகிறேன். ஏனெனில் இவையாவும் பிறநாட்டு, பிறமொழிப் பெயர்ச்சொற்கள். இவற்றைத் தமிழ்ப்படுத்த வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. தமிழ்ப் படுத்தினாலும் தவறில்லை.

டாமில் டமில் டாமிள் தமில் தமிள் என்று ஆங்கிலம் வாயிலாக என் அழகு தமிழைப் பிறர் உச்சரிக்கும்போது தமிழனாய்ப் பிறந்து தமிழனாய் வாழும் எனக்கு மிகுந்த வேதனையாய் இருக்கிறது.

ஆங்கிலத்தில் 'ழ' என்ற எழுத்தை ஏன் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றாமல் அது என்ன உலக மொழி என்று நான் கேட்கமாட்டேன். அதேபோலத்தான் தமிழிலும் வேண்டாத புதிய எழுத்துக்களை ஏற்றவேண்டிய அவசியமில்லை

சவுதியில் எனக்கு ஓர் இலங்கைத் தமிழர் நண்பராயிருந்தார். அவர் நண்பரானதே நான் அவர் பெயரை மிகச் சரியாக உச்சரித்ததால்தான். அன்று வரை சவுதியில் எவருமே அவர் பெயரைச் சரியாக உச்சரிக்கவில்லை என்றார். ண்கனென்ட்ரன் என்பதுதான் அவர் பெயர். ஞானேந்திரன் என்று நான் அவரை முதல் முறை அழைத்ததும். கண்ணீரே வந்துவிட்டது அவருக்கு. மற்றவர்களெல்லாம், காணேட்ரன், நானேன்ரன், நக்னேட்ரன் என்று கொன்று எடுத்திருக்கிறர்கள். ஞானேந்திரன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவதற்கு ஆங்கில எழுத்துக்கள்தாம் காரணம். ஆங்கிலத்தில் 'ஞ' என்ற எழுத்தை ஏன் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றாமல் அது என்ன உலக மொழி என்றும் நான் கேட்கமாட்டேன்.

நான் சவூதி அரேபியாவில் வாழ்ந்த காலங்களில் கொஞ்சம் அரபு மொழிப் பரிச்சயம் ஏற்பட்டது. கொஞ்சம் எழுதவும் வாசிக்கவும் பயின்றேன். அதிலுள்ள சில எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதவே முடியாது. கத்தான் என்ற ஓர் ஊர் உண்டு. அதை ஆங்கிலத்தில் Qஅடன் என்று எழுதுவார்கள். ஆனால் அராபியர்கள் உச்சரிப்பது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். அதற்கொரு எழுத்து ஆங்கிலத்தில் வேண்டாமா? இதெல்லாம் இல்லாமல் உலக மொழி அங்கீகாரம் எப்படி ஒரு மொழிக்கு வருகிறது என்று யோசிக்கலாம்.

"முஅஅல்லம்" என்று ஒரு பெயர் அரபு மொழியில் வரும். அதை ஆங்கிலத்தில் Mஉ'அல்லம் என்று மேலே ஒரு குறியிட்டு எழுதுவார்கள். அராபியர்கள் சொல்லித்தந்தபின்தான் அதன் உச்சரிப்பு நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் திண்டாட்டம்தான். எப்படிப்பார்த்தாலும், அராபியர்கள் அரபு மொழியை உச்சரிப்பதுபோல் நம்மால் உச்சரிக்கமுடியாது.

சைனாக்காரர்கள் பேசக் கேட்டிருக்கலாம். பல எழுத்துக்களை நம் செவியால் பிடிக்கவே முடியாது. தமிழில் புதிய எழுத்துக்களைக் கொண்டு வர விரும்பும்போது எந்த மொழியிலிருந்து உள்ள சொல்லை உச்சரிக்க நாம் கொண்டுவரவேண்டும் என்று ஜெயபாரதன் விரும்புகிறார்?

பிரஞ்சு மொழி வாசகங்களைப் பார்த்திருக்கலாம். எல்லாம் தெரிந்த எழுத்துக்கள் போலவே இருக்கும். ஏனெனில் பெரும்பாலானவை ஆங்கில எழுத்துக்கள். ஆனால் நாம் உச்சரித்தால் அப்படியே தப்பாய்ப்போய் முடியும். பிரஞ்சுக் காரர்கள் அல்லது பிரஞ்சு அறிந்தவர்கள்தாம் நமக்குச் சரியானதைச் சொல்லித்தரமுடியும்.

ஒவ்வொரு மொழியும் அழகுதான். எந்த மொழி அழகில்லாதது?

தாய்முலைப்பாலோடு, தாய்மண் வாசனையோடு, மூதாதயர் மரபணுக்களோடு எந்த மொழி மூச்சின் உட்செல்கிறதோ அந்த மொழிதான் அவனவனுக்கு உயிர். இதனால் அடுத்த மொழிகளெல்லாம் அழகல்ல என்று பொருளல்ல.

எனக்குத் தமிழ்த்தாய்தான் மிக மிக இனிப்பானவள். அவள் மடியில்படுத்து பொன்னூஞ்சலாடுவதில்தான் என் ஆன்மாவுக்கு நிறைவு. அடடா தமிழ்த்தாய் எத்தனை அழகு என்று நான் நாளெல்லாம் அதிசயிக்கிறேன்!

முகம், மாசம், சனி, சக்கரம் என்றெல்லாம் எழுதுகிறோம். இதில் முகம் என்ற சொல்லில் க வுக்கு என்ன உச்சரிக்கிறோம்? க என்றா ஹ என்றா?

மாசம் என்ற சொல்லில் ச வுக்கு என்ன உச்சரிப்பு ச வா ச வா? சனி என்பதன் ச வும் சக்கரம் என்பதின் ச வும் உச்சரிப்பில் ஒன்றா?

இது தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் உண்டு. Cஉட், Pஉட் இதில் உ வுக்கு என்ன ஓசை? இரண்டிலும் ஒன்றா? ஸுன், ஸொன் எப்படி வித்தியாசப் படுத்துகிறோம்? கிரெ, கெரெ, கெஅர், கெஇர், கைர் நுணுக்கமாக எப்படி உச்சரிக்கிறோம்? ஸ்டடிஒன் இதில் டி க்கு என்ன உச்சரிப்பு? ஏன்? இன்னும் எனக்கு இதுபோல் ஒரு லட்சம் கேள்விகளும் சொச்சமும் இருக்கின்றன.

உலகத்தில் உள்ள அத்தனை மொழிச் சொற்களும் அதன் மூல மொழியில் உள்ளதுபோலவே பிற மொழிகளிலும் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால், அத்தனை மொழிகளையும் அழித்துவிட்டு, புதிதாக ஒரு மொழியை உருவாக்கி, உலகமொழி என்று அழைக்கவேண்டும். இல்லாவிட்டால், ஜெயபாரதன் கூறுவது சாத்தியப்படாது.

பிறமொழிப் பெயர்களை அந்த மொழியில் உள்ளதுபோலவே தமிழில் எழுத முடியவில்லை (உச்சரிக்கமுடியும்) என்பதற்காகத் தமிழைக் குறைகூறலாமா?

அதேபோல் தமிழ்ச்சொல் ஒன்றைப் பிறமொழியில் எழுதமுடியவில்லை என்பதற்காக அந்த மொழியைக் குறைசொல்லலாமா? ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் இயல்பு இருப்பதை ரசிப்பதும். இயன்றவரை எப்படி வளைக்கலாம் என்பதை சாதுர்யமாய்ச் செய்தும்தானே நாமே மொழியைப் போற்றவும் வளர்க்கவும் முடியும்?

தமிழை ஒரு மருமகளாகக் கற்பனை செய்து பாருங்கள். அடுத்த வீட்டுக்குச் சென்ற மருமகள் தன் அடையாடங்களைச் சுத்தமாகத் தொலைத்துவிட்டு, அப்படியே மாறிவிட்டாள் என்பது ஒன்று. தன் அடையாடளங்களையும் தக்க வைத்துக்கொண்டு, புகுந்த இடத்துக்கும் வளைந்து கொடுத்துக்கொண்டு வாழ்கிறாள் என்பது ஒன்று. இவை இரண்டில் தமிப்பற்றுள்ள ஜெயபாரதன் எதை விடும்புவார்? ஆயினும் தமிழ் மருமகள் ஆகமாட்டாள். தமிழ் ஒரு தாய் அந்தத் தாய் தன் வீடு வந்த மருகளுக்காகக் கொஞ்சம் வளைந்து கொடுப்பாள். ஆனால் தன் வீட்டின் பாரம்பரியம் இயல்பு இவை சிதையும் பட்சத்தில் உறுதியாக நிற்பாள்.

தமிழன் தமிழ்ப் பெயர்தான் வைக்கவேண்டும். நாம் அதற்குத் தயாராயில்லை. ஆனால் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டுதான் வாழ்கிறோம்.

பிறமொழிப் பெயர்களை நாம் வைத்துக்கொண்டு, அதாவது குறையை நம்மீது வைத்துக்கொண்டு தமிழைக் குறைகூற வருகிறோம். ஜெயபாரதனின் அத்தனை பிரச்சினையும் பெயரை உச்சரிக்கமுடியவில்லையே என்பதிலேயே இருக்கிறது.

தமிழ்ப்பெயர் வைக்க விரும்பாதவர்கள், ஒரு சைனா பெயரை வைத்துக் கொள்ளலாம். அது அவர்கள் விருப்பம். ஸ்சூங் ஷ்சயாங் ப்ச்ஞ்சூய் என்று தான் அவர் பெயரை தமிழில் எழுதமுடியும். அவர் உச்சரிப்பதை அப்படியே ஒருக்காலும் தமிழில் மட்டுமல்ல வேறு எந்த மொழியிலும் எழுதமுடியாது.

அடுத்தது தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது தொடர்பாகவும் ஜெயபாரதன் எழுதியிருக்கிறார். இதை வாசிக்கும்போது கவிஞர் மதுமிதா தன் நேர்காணலில் "நமது இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இரண்டுக்குமே தமிழ்த் தலைப்பு கிடையாது. ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி எதிலுமே தமிழ் இல்லையே" என்று சொன்னது என் ஞாபகத்துக்கு வருகிறது.

திருக்குறள், நன்னூல், புறநானூறு, அகநானூறு, குற்றாலக் குறவஞ்சி, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று ஏராளமான தமிழ்த் தலைப்புகளில் கவிதைகள், காவியங்கள் தமிழில் உண்டு.

ஆரியர்களின் வரவால் சமஸ்கிருதப் பெயர்கள் திராவிடர்களுக்கு வைக்கப்பட்டன. மணிமேகலை, சீவகன், கோபால், சண்முகம் எல்லாம் தமிழ்ப் பெயர்கள் அல்ல. அவை புகுத்தப்பட்ட பிறமொழிப் பெயர்கள். அப்துல்காதர், அப்துல்ரகுமான் பொன்ற இஸ்லாமியப் பெயர்கள், டேவிட், ஜேகப் போன்ற கிருத்தவப் பெயர்கள், விக்னேஷ்வர், திலிப் போன்ற இந்துப் பெயர்கள் எல்லாம் மத அடையாளங்களாக வைக்கப்பட்டன.

அன்பு, முத்தழகு, அரசு, பூங்கொடி என்ற தமிழ்ப் பெயர்கள் பிறகு தலைகாட்டத் தொடங்கின. ஈராயிரம் வருடங்களாக, மதம் என்பது சக்திவாய்ந்த ஒன்றாக இருப்பதால், இதன் வளர்ச்சி அத்தனை வேகமானதாக அமையவில்லை. ஆனால் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

உண்மைதான். பெயரில் ஒன்றும் இல்லை. பெயரைச் சுமந்தவர் தமிழை நேசிக்கும் தமிழராய் இருக்கும் பட்சத்தில். ஆனால் நாம் ஒன்றை இங்கே கவனிக்கவேண்டும். சீவக சிந்தாமணி என்று ஒரு காவியத்துக்குப் பெயரிட அந்தப் பாத்திரம் காரணமாய் இருந்தது.

உதாரணமாக, காந்தி என்று ஆங்கிலப்படத்துக்குப் பெயரிட்டார்கள். அது மிகவும் சரி. அவர்களே, "நல்லவன் வாழ்வான்" என்று ஓர் ஆங்கிலப் படத்துக்குப் பெயர் வைப்பார்களா?

நம் திரைப்படப் பெயர்களைப் பாருங்கள், நியூ, பாய்ஸ், ஜீன்ஸ், ஜெண்டில்மேன், ஆட்டோகிராப். இவர்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க ஏதேனும் காரணம் உண்டா?

ஆட்டோகிராப் என்ற படம் தலைப்பில் ஆங்கிலம் வைத்திருந்தாலும், ஆதாம் ஏவாள் பேசியது தமிழ்தான் என்றும் மலையாளிக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது போலவும் சிறப்பான தமிழ்ப்படமாய் இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அந்தப் படத்திற்கு தமிழில் பெயரிட முடியாதா?

பெயரிட்டால் அந்தப் படத்தின் கருவுக்கு களங்கம் வந்துவிடுமா? அந்தப் படத்தில் உள்ள அருமையான பாடல்களின் முதல் வரியை வைத்தாலே அற்புதமாய் இருக்குமே. "மனசுக்குள்ளே" என்று கூட வைக்கலாமே. இன்னும் பொருத்தமானதாகத்தானே இருக்கும்?

மாவீரன் நெப்போலியனைப் பற்றி படம் எடுத்தால், "நெப்போலியன்" என்று பெயரிடலாம். அதில் பொருள் உண்டு. திருச்சியிலிருந்து சென்னைக்குப் போய் வாழும் ஒருவனின் படத்துக்கு ரன் - Jஒஎ என்று பெயர் வைத்தால், இவர்கள் என்ன தமிழர்கள்? தமிழ்ப் படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கக் கோரி போராடாமல், ஹாலிவுட் படங்களுக்கு, 'காக்கைச் சிறகினிலே', 'நின்னைச் சரணடைந்தேன்' என்று கூறியா போராடமுடியும்?

நன்றி: பதிவுகள்.காம்

க்ட்ட்ப்://ந்ந்ந்.கெஒடமில்.cஒம்/பதிவுகல்/புகரி_ஒன்_ஜயபரதன்_டமில்_1.க்ட்

Link to comment
Share on other sites

  • 11 years later...
On 9/27/2007 at 5:52 AM, nunavilan said:

அருமையான பதிவு...

இவற்றை நாம் பலமுறை பல விவாதங்களில் பேசியுள்ளேன், யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை,

-------------------------------------------------

திரு. ஜெயபாரதன் அவர்களின் தமிழ் விடுதலையாகட்டும் என்ற கட்டுரையை வாசித்தேன் என் கருத்துக்களையும் பதிவுகளில் பதிவு செய்கிறேன். (ஜெயபாரதனின் கட்டுரை இக்கட்டுரைக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

 

ஜெயபாரதன் சொல்வதுபோல, தூயதமிழ் என்பது நிலவ வழியில்லைதான். மொழியின் வளர்ச்சியியல்படி தூய்மை என்பது பொருளற்றுப் போகும்.

 

ஆனால் எது தூய்மை என்று நாம் வரையறுத்துக்கொண்டால், நம் தமிழ்மொழி தூய்மையாகவே இருக்கும்.

 

அவசியம் ஏற்படும்போது மட்டும், பிறமொழிச்சொற்களைத் தமிழ்ப் படுத்தி ஏற்றுக்கொள்வதால் தமிழின் தூய்மை கெட்டுவிடும் என்று கொள்வதற்கில்லை. இதைத் தொல்காப்பியக்காலம்தொட்டே ஏற்றுக்கொண்டுள்ளோம். இலக்கணமாகவும் வகுத்துக்கொண்டுள்ளோம்.

 

ஆனால், வேண்டுமென்றே, தமிழென்னும் இனிய நதிக்குள் சாக்கடை கலப்பதுபோல், பிறமொழிச்சொற்களை, தமிழில் இணையான சொற்கள் இருந்தும் வலுக்கட்டாயமாகக் கலப்பது தமிழ் மொழியின் தூய்மைக்கு நாசம்தான்.

 

உதாரணமாக, ஜெயபாரதன் எழுதி இருக்கும் இந்தக் கட்டுரையே ஒரு எடுத்துக்காட்டு. அவர் இக்கட்டுரையில் அவசியம் இல்லாமல் எந்த ஒரு கலப்பையும் செய்யவே இல்லை. இப்படி எழுதினால் போதும். ஜெயபாரதனின் அறிவியல் கட்டுரைகளை நான் திண்ணையில் வாசித்திருக்கிறேன், அவை நல்ல தமிழில், அழகு தமிழ்ச் சொற்களின் மொழிபெயர்ப்போடு உலா வருகின்றன. அதை நான் பாராட்டுகிறேன்.

 

பதிலாக சிலர் நான் "வாக்" பண்ணும்போது என் "டாக்" என் "ஹாண்ட்" ஐ விட்டு "ரன்" பண்ணிவிட்டது. என்கிறார்களே. கேட்டால் தமிழ் வளர்க்கிறேன் என்கிறார்கள். தமிழ் எனக்கு மூச்சு ஆனால், அதைப் பிறர்மேல் விடமாட்டேன் என்கிறார்கள். என்ன கூத்து இது.

 

தமிழைச் செம்மொழி என்று அறிவித்ததன் காரணமாக மிகமுக்கியமாக ஒன்றைச் சொல்கிறார்கள். அது தமிழின் தொடர்ச்சி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழும் இன்று இருக்கும் தமிழும் மிகச் சிறிய மாற்றங்களோடு மட்டுமே இருக்கின்றன. இச்சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை என்கிறார்கள். .

 

இன்று தமிழ் கணினி மொழியாக அருமையாக பவனி வருகிறது. ஆங்கில மொழிக்குப் பிறகு தமிழ் மொழிதான் இணையத்தில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. ஜெயபாரதனைப் போலவே தாங்கள் சொல்ல வேண்டியவற்றைத் தமிழர்கள் எந்தத் தடையும் இன்றி சொல்லிவருகிறார்கள்.

 

புதிய சொற்களின் தேடல் ஒருபுறம் செழுமையாய் நடந்து கொண்டிருக்கிறது. கணினி, இணையம், மின்னஞ்சல், மடலாடல், மட்டுநர், ஊடகம், தொலைக்காட்சி என்று ஏராளமான சிறந்த தமிழாக்கங்கள் உருவாகிக்கொண்டும் பலரால் பயன்படுத்தப்பட்டு வெற்றிநடை போட்டுக்கொண்டும்தான் இருக்கின்றன. ஜெயபாரதனும் நிறைய மொழியாக்கம் செய்திருக்கிறார் என்று அறிகிறேன்.

 

திடீர் என்று ஒரு சொல் அறிமுகமாகும்போது அதை அப்படியே ஏற்பதும், பிறகு நல்ல தமிழாக்கம் வந்ததும் மாற்றிக் கொள்வதையும் தமிழ் தொன்றுதொட்டே செய்துகொண்டுதான் இருக்கிறது.

 

"தமிழில் ஸ(ஸ), ஸ்க(ஷ), Jஅ(ஜ), Hஅ(ஹ), Gஅ(?), Dஅ(?), Bஅ(?), Dக(?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும்" என்று எழுதி இருக்கிறார் ஜெயபாரதன்.

 

தமிழுக்குப் புதிய எழுத்துக்கள் தேவையில்லை. கிரந்த எழுத்துக்கள் தமிழிலிருந்து அகற்றப்படவும் இல்லை. இருக்கும் எழுத்துக்களைக் கொண்டே நம்மால் எந்தச் சொற்களையும் எழுதமுடியும். ஒரு மொழியில் எழுதப்பட்ட வார்த்தையை உச்சரிப்பது அந்த மொழியின் இயல்பைப் பொருத்தது.

 

உதாரணமாக முகம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை மு க ம் என்றுதான் எழுதி இருக்கிறோம் ஆனால் உச்சரிக்கும்போது முகம் என்றுதான் உச்சரிக்கிறோம். அதற்காக இதை முஹம் என்று மாற்றி எழுதலாமா?

 

இதேபோல, சங்கம் என்ற சொல். இது Cகஙம் என்று உச்சரிக்கப்படுகிறது. Cகன்கம் என்று உச்சரிக்கப்படாது. இதுதான் நம் தமிழ் மொழியின் இயல்பு.

 

இது அனைத்து மொழிகளுக்கும் உள்ள இயல்புதான். ஆங்கிலத்தில் இது மிக அதிகம். தமிழில் மிகமிகக் குறைவு. உதாரணம்: எனொஉக்க், cஉட், ச்டடிஒன், ப்ச்ய்சொலொக்ய், க்னிfஎ என்று மிக நீளமாய் நீளும். இவற்றை எழுதி இருப்பதுபோலவே வாசித்தால் வினோதமாக இருக்கும். அது ஆங்கிலத்தின் இயல்பு. இதனால் அந்த மொழி நகைப்புக்குரியதல்ல.

 

தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எழுதமுடியாது. Tஅமில் என்று அன்று வெள்ளையர் எழுதிவிட்டுப் போய்விட்டார்கள். அதை இன்றும் தமிழ்நாடு ஏற்று பயன்படுத்துவதை நான் வெறுக்கிறேன்.

 

Tகமிழ் என்று அதை அரசு ஆவனங்களில் மாற்றியமைக்க வேண்டும். ழ் என்ற எழுத்துக்கு இணையான எழுத்து ஆங்கிலத்தில் கிடையாது. அதனால் வேறொரு எழுத்தை அதற்காகப் பயன்படுத்தி உச்சரிக்கும்போது சரியாக உச்சரிக்கிறோம். அப்படித்தான் தமிழிலும், இல்லாத எழுத்துக்களுக்குப் பதிலாக, கூடுமானவரை உச்சரிக்கக்கூடிய எழுத்தை இட்டு நம் தமிழ் மொழியைக் காத்து முன்னேறுகிறோம்.

 

புஹாரி என்ற என் பெயரை நான் புகாரி என்று எழுதுகிறேன். உச்சரிப்பவர்கள், Bஉகரி என்று மிகச் சரியாக உச்சரிக்கிறார்கள். அப்துல் ரஹ்மான் என்ற பெயரை, அப்துல் ரகுமான் என்று கவிக்கோ எழுதுகிறார். எல்லோரும் சரியாகத்தான் உச்சரிக்கிறோம். ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை

 

கட்டுரையாளர் தன் பெயரை ஜெயபாரதன் என்று எழுதுகிறார். அதில் எனக்கு முழு உடன்பாடு. அதை செயபாரதன் என்று எழுதவேண்டிய அவசியம் இல்லை. அப்படி செயபாரதன் என்று எழுதினாலும் தவறில்லை. அது அவருடைய விருப்பம்.

 

பாரதி என்ற பெயரை Bகரதி என்று நாம் மிகச் சரியாக உச்சரிக்கிறோம். Pஆரதி என்று உச்சரிப்பதில்லை. எனவே அது சரிதான் என்பது என் கருத்து. புகாரி என்பதை Pஉகாரி என்று உச்சரிப்பவர்கள், அறியாமல் உச்சரிப்பார்கள், அறிந்ததும் மாற்றிக்கொண்டு Bஉகரி என்று உச்சரிப்பார்கள். இது எல்லா மொழிகளுக்கும் பொது. ஆங்கிலத்தில் "கினவ்லெட்ஜி - க்னொந்லெட்கெ" என்று அறியாமல் வாசித்தவர்கள் பிறகு "நாலட்ஜ்" என்று கற்றுக்கொண்டதும் சரியாக வாசிக்கிறார்கள்.

 

எனவே தமிழுக்குப் புதிய எழுத்துக்கள் அவசியமில்லை என்பதே என் கருத்து

 

"கிரந்த எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும்" என்று ஜெயபாரதன் சொல்வதை நான் ஏற்கிறேன்.

 

ஹாசன் என்பதை காசன் என்று எழுதமுடியாது. ஏனெனில் அது அவர் பெயர். ஆனால் என் தகப்பனார் பெயர் ஹசன் அதை அவர் அசன் என்று எழுதினார். நன்றாகத்தான் இருக்கிறது. பெயரைப் பொருத்தவரை அது அவரவர் விருப்பம். ஆனால் பெயர்ச்சொற்களைத் தவிர்த்த தமிழின் சொற்கள் தமிழ்ப் படுத்தப்படுவதையே நான் விரும்புகிறேன். அதையே நான் தூயதமிழ் என்கிறேன்.

 

ஸந்தோஷம் என்ற சொல் வடச்சொல். அதை நான் சந்தோசம் என்று எழுதுகிறேன். எழுதும்போதே சந்தோசப்படுகிறேன். ஜீசஸ் என்ற பெயர் ஏசுநாதர் என்று எப்போதோ ஆனது. இப்போதும் எனக்கு ஏசுநாதர் என்று சொல்வதே பிடித்திருக்கிறது. செவி பழகியபின் தமிழ் இனிக்கிறது. இதில் தவறில்லை என்பதே என் கருத்து.

 

என் நண்பர் ஒருவரின் பெயர் ராஜு ராஜேந்திரன். அவர் பெயரை நான் ராசு ராசேந்திரன் என்று எழுதலாம். ஆனால் அதை அவர் அனுமதிக்க வேண்டும். ஏனெனில் அது அவரின் பெயர். நான் விளையாடுவதற்கு ஒன்றும் இல்லை. என் பெயராக இருந்தால் நான் ராசு ராசேந்திரன் என்று மாற்றிக்கொள்வேன். அதனால் என் பெயர் சிதைந்ததாய் நான் எண்ணமாட்டேன். ஆனால் ராஜு ராஜேந்திரன் தன் பெயரை "வேந்தன் அரசு" என்று மாற்றிக்கொண்டார். அது அவரின் தனித் தமிழ்ப்பற்று, பரிதிமாற்கலைஞரைப் போல. அவரின் தனி விருப்பம். நான் அதை மதிக்கிறேன். சுரேஷ் என்று ஒரு நண்பர் பெயரை எழுதும்போது நான் சுரேசு என்று எழுதி நோகடிக்க விரும்புவதில்லை. இது என் வழக்கம். இதெல்லாம் தமிழில் தூய்மையைக் கெடுத்துவிடாது.

 

சமஸ்கிரதச் சொற்களைப்போல் வேறு எந்த மொழிச் சொற்களும் தமிழில் மிகமோசமாய்க் கலக்கவில்லை. நாம் எழுதும் அனைத்து எழுத்துக்களிலும் அவை உள்ளன. இன்று இயன்றவற்றை மட்டும் நீக்கிவிட்டு பழந்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த முனைகிறோம். அவற்றைச் செய்பவர்களை நான் பெரிதும் மதித்து வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். இதில் தமிழறிஞர்களின் பணி அளப்பரியது. அவர்களுக்கு என் நன்றி.

 

சங்கம் என்ற சொல் வடமொழிதான் என்று உறுதியாக சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நான் வடமொழி என்று நினைத்த எத்தனையோ சொற்களை சில தமிழறிஞர்கள் தமிழ்தான் என்று சொல்லி நிறுவுகிறார்கள். உதாரணமாக. வேட்டி என்ற சொல். இது நம்மிடமிருந்து வடமொழிக்குள் நுழைந்து வேஷ்டியாகி பிறகு நம்மிடமே வந்து மல்லுக்கு நிற்கிறது என்பார் ஒரு தமிழறிஞர். வேட்டி என்பதுதான் மூலம் என்பார்.

 

ஜெயபாரதனின் பட்டியலில் உள்ள பல சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் உண்டு. உதாரணம்.

 

பட்டர் = வெண்ணை

பவுடர் = பொடி

பஸ் = பேருந்து

டிரெய்ன் = புகைவண்டி, புகைரதம்

காலேஜ் = கல்லூரி

 

அல்ஜிப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ் போன்ற சொற்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.

 

சேக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா போன்றவை அவர்களின் பெயர்கள் அதில் நாம் கைவைப்பதில்லை.

 

தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்கள், தமிழ்ச்சொற்கள் ஆகிவிடுகின்றன. அதன் மூலம் எது என்று ஆராயும்போதுதான் அது எந்தமொழியில் இருந்து வந்தது என்ற தகவல் தெரியவரும். உதாரணமாக, சொர்க் நர்க் என்பார்கள் வடமொழியில். இவை சொர்க்கம் நரகம் என்று தமிழ்ப்படுத்தப் பட்டுவிட்டன. அப்படியே நாம் அவற்றைச் சொர்க் நர்க் என்று பாவிப்பதில்லை.

 

மன் என்ற சொல்லை மனது என்றும் மனசு என்றும்தான் நாம் பயன்படுத்துகிறோம். இப்படித் தமிழாக்கப்பட்ட மனது என்ற சொல்லை மீண்டும் அதன் மூல மொழியான வடமொழியில் பயன்படுத்தமுடியாது. அங்கே அது மன் தான். பர்வாநஹி தமிழில் பரவாயில்லை என்று ஆகவில்லையா?

 

தமிழ் என்ற சொல்லை Tஅமில் என்று ஆங்கிலேயர் இன்றும் எழுதுகிறார்கள். தஞ்சாவூர் என்ற சொல்லை Tஅஞொரெ என்றும், மதுரை என்ற சொல்லை

 

Mஎஜ்ர என்றும், தூத்துக்குடியை Tஉடிcஒரின் என்றும்தான் ஆங்கிலேயர் எழுதினார்கள். இந்த அசுத்தங்களைக் களைவது தமிழனின் கடமையல்லவா?

 

காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்ட்ரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்காங், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, கஸ்தூரி, சரஸ்வதி போன்ற பெயர்களை நான் அப்படியே எழுதுவதைத்தான் விரும்புகிறேன். ஏனெனில் இவையாவும் பிறநாட்டு, பிறமொழிப் பெயர்ச்சொற்கள். இவற்றைத் தமிழ்ப்படுத்த வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. தமிழ்ப் படுத்தினாலும் தவறில்லை.

 

டாமில் டமில் டாமிள் தமில் தமிள் என்று ஆங்கிலம் வாயிலாக என் அழகு தமிழைப் பிறர் உச்சரிக்கும்போது தமிழனாய்ப் பிறந்து தமிழனாய் வாழும் எனக்கு மிகுந்த வேதனையாய் இருக்கிறது.

 

ஆங்கிலத்தில் 'ழ' என்ற எழுத்தை ஏன் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றாமல் அது என்ன உலக மொழி என்று நான் கேட்கமாட்டேன். அதேபோலத்தான் தமிழிலும் வேண்டாத புதிய எழுத்துக்களை ஏற்றவேண்டிய அவசியமில்லை

 

சவுதியில் எனக்கு ஓர் இலங்கைத் தமிழர் நண்பராயிருந்தார். அவர் நண்பரானதே நான் அவர் பெயரை மிகச் சரியாக உச்சரித்ததால்தான். அன்று வரை சவுதியில் எவருமே அவர் பெயரைச் சரியாக உச்சரிக்கவில்லை என்றார். ண்கனென்ட்ரன் என்பதுதான் அவர் பெயர். ஞானேந்திரன் என்று நான் அவரை முதல் முறை அழைத்ததும். கண்ணீரே வந்துவிட்டது அவருக்கு. மற்றவர்களெல்லாம், காணேட்ரன், நானேன்ரன், நக்னேட்ரன் என்று கொன்று எடுத்திருக்கிறர்கள். ஞானேந்திரன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவதற்கு ஆங்கில எழுத்துக்கள்தாம் காரணம். ஆங்கிலத்தில் 'ஞ' என்ற எழுத்தை ஏன் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றாமல் அது என்ன உலக மொழி என்றும் நான் கேட்கமாட்டேன்.

 

நான் சவூதி அரேபியாவில் வாழ்ந்த காலங்களில் கொஞ்சம் அரபு மொழிப் பரிச்சயம் ஏற்பட்டது. கொஞ்சம் எழுதவும் வாசிக்கவும் பயின்றேன். அதிலுள்ள சில எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதவே முடியாது. கத்தான் என்ற ஓர் ஊர் உண்டு. அதை ஆங்கிலத்தில் Qஅடன் என்று எழுதுவார்கள். ஆனால் அராபியர்கள் உச்சரிப்பது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். அதற்கொரு எழுத்து ஆங்கிலத்தில் வேண்டாமா? இதெல்லாம் இல்லாமல் உலக மொழி அங்கீகாரம் எப்படி ஒரு மொழிக்கு வருகிறது என்று யோசிக்கலாம்.

 

"முஅஅல்லம்" என்று ஒரு பெயர் அரபு மொழியில் வரும். அதை ஆங்கிலத்தில் Mஉ'அல்லம் என்று மேலே ஒரு குறியிட்டு எழுதுவார்கள். அராபியர்கள் சொல்லித்தந்தபின்தான் அதன் உச்சரிப்பு நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் திண்டாட்டம்தான். எப்படிப்பார்த்தாலும், அராபியர்கள் அரபு மொழியை உச்சரிப்பதுபோல் நம்மால் உச்சரிக்கமுடியாது.

 

சைனாக்காரர்கள் பேசக் கேட்டிருக்கலாம். பல எழுத்துக்களை நம் செவியால் பிடிக்கவே முடியாது. தமிழில் புதிய எழுத்துக்களைக் கொண்டு வர விரும்பும்போது எந்த மொழியிலிருந்து உள்ள சொல்லை உச்சரிக்க நாம் கொண்டுவரவேண்டும் என்று ஜெயபாரதன் விரும்புகிறார்?

 

பிரஞ்சு மொழி வாசகங்களைப் பார்த்திருக்கலாம். எல்லாம் தெரிந்த எழுத்துக்கள் போலவே இருக்கும். ஏனெனில் பெரும்பாலானவை ஆங்கில எழுத்துக்கள். ஆனால் நாம் உச்சரித்தால் அப்படியே தப்பாய்ப்போய் முடியும். பிரஞ்சுக் காரர்கள் அல்லது பிரஞ்சு அறிந்தவர்கள்தாம் நமக்குச் சரியானதைச் சொல்லித்தரமுடியும்.

 

ஒவ்வொரு மொழியும் அழகுதான். எந்த மொழி அழகில்லாதது?

 

தாய்முலைப்பாலோடு, தாய்மண் வாசனையோடு, மூதாதயர் மரபணுக்களோடு எந்த மொழி மூச்சின் உட்செல்கிறதோ அந்த மொழிதான் அவனவனுக்கு உயிர். இதனால் அடுத்த மொழிகளெல்லாம் அழகல்ல என்று பொருளல்ல.

 

எனக்குத் தமிழ்த்தாய்தான் மிக மிக இனிப்பானவள். அவள் மடியில்படுத்து பொன்னூஞ்சலாடுவதில்தான் என் ஆன்மாவுக்கு நிறைவு. அடடா தமிழ்த்தாய் எத்தனை அழகு என்று நான் நாளெல்லாம் அதிசயிக்கிறேன்!

 

முகம், மாசம், சனி, சக்கரம் என்றெல்லாம் எழுதுகிறோம். இதில் முகம் என்ற சொல்லில் க வுக்கு என்ன உச்சரிக்கிறோம்? க என்றா ஹ என்றா?

 

மாசம் என்ற சொல்லில் ச வுக்கு என்ன உச்சரிப்பு ச வா ச வா? சனி என்பதன் ச வும் சக்கரம் என்பதின் ச வும் உச்சரிப்பில் ஒன்றா?

 

இது தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் உண்டு. Cஉட், Pஉட் இதில் உ வுக்கு என்ன ஓசை? இரண்டிலும் ஒன்றா? ஸுன், ஸொன் எப்படி வித்தியாசப் படுத்துகிறோம்? கிரெ, கெரெ, கெஅர், கெஇர், கைர் நுணுக்கமாக எப்படி உச்சரிக்கிறோம்? ஸ்டடிஒன் இதில் டி க்கு என்ன உச்சரிப்பு? ஏன்? இன்னும் எனக்கு இதுபோல் ஒரு லட்சம் கேள்விகளும் சொச்சமும் இருக்கின்றன.

 

உலகத்தில் உள்ள அத்தனை மொழிச் சொற்களும் அதன் மூல மொழியில் உள்ளதுபோலவே பிற மொழிகளிலும் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால், அத்தனை மொழிகளையும் அழித்துவிட்டு, புதிதாக ஒரு மொழியை உருவாக்கி, உலகமொழி என்று அழைக்கவேண்டும். இல்லாவிட்டால், ஜெயபாரதன் கூறுவது சாத்தியப்படாது.

 

பிறமொழிப் பெயர்களை அந்த மொழியில் உள்ளதுபோலவே தமிழில் எழுத முடியவில்லை (உச்சரிக்கமுடியும்) என்பதற்காகத் தமிழைக் குறைகூறலாமா?

 

அதேபோல் தமிழ்ச்சொல் ஒன்றைப் பிறமொழியில் எழுதமுடியவில்லை என்பதற்காக அந்த மொழியைக் குறைசொல்லலாமா? ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் இயல்பு இருப்பதை ரசிப்பதும். இயன்றவரை எப்படி வளைக்கலாம் என்பதை சாதுர்யமாய்ச் செய்தும்தானே நாமே மொழியைப் போற்றவும் வளர்க்கவும் முடியும்?

 

தமிழை ஒரு மருமகளாகக் கற்பனை செய்து பாருங்கள். அடுத்த வீட்டுக்குச் சென்ற மருமகள் தன் அடையாடங்களைச் சுத்தமாகத் தொலைத்துவிட்டு, அப்படியே மாறிவிட்டாள் என்பது ஒன்று. தன் அடையாடளங்களையும் தக்க வைத்துக்கொண்டு, புகுந்த இடத்துக்கும் வளைந்து கொடுத்துக்கொண்டு வாழ்கிறாள் என்பது ஒன்று. இவை இரண்டில் தமிப்பற்றுள்ள ஜெயபாரதன் எதை விடும்புவார்? ஆயினும் தமிழ் மருமகள் ஆகமாட்டாள். தமிழ் ஒரு தாய் அந்தத் தாய் தன் வீடு வந்த மருகளுக்காகக் கொஞ்சம் வளைந்து கொடுப்பாள். ஆனால் தன் வீட்டின் பாரம்பரியம் இயல்பு இவை சிதையும் பட்சத்தில் உறுதியாக நிற்பாள்.

 

தமிழன் தமிழ்ப் பெயர்தான் வைக்கவேண்டும். நாம் அதற்குத் தயாராயில்லை. ஆனால் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டுதான் வாழ்கிறோம்.

 

பிறமொழிப் பெயர்களை நாம் வைத்துக்கொண்டு, அதாவது குறையை நம்மீது வைத்துக்கொண்டு தமிழைக் குறைகூற வருகிறோம். ஜெயபாரதனின் அத்தனை பிரச்சினையும் பெயரை உச்சரிக்கமுடியவில்லையே என்பதிலேயே இருக்கிறது.

 

தமிழ்ப்பெயர் வைக்க விரும்பாதவர்கள், ஒரு சைனா பெயரை வைத்துக் கொள்ளலாம். அது அவர்கள் விருப்பம். ஸ்சூங் ஷ்சயாங் ப்ச்ஞ்சூய் என்று தான் அவர் பெயரை தமிழில் எழுதமுடியும். அவர் உச்சரிப்பதை அப்படியே ஒருக்காலும் தமிழில் மட்டுமல்ல வேறு எந்த மொழியிலும் எழுதமுடியாது.

 

அடுத்தது தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது தொடர்பாகவும் ஜெயபாரதன் எழுதியிருக்கிறார். இதை வாசிக்கும்போது கவிஞர் மதுமிதா தன் நேர்காணலில் "நமது இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இரண்டுக்குமே தமிழ்த் தலைப்பு கிடையாது. ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி எதிலுமே தமிழ் இல்லையே" என்று சொன்னது என் ஞாபகத்துக்கு வருகிறது.

 

திருக்குறள், நன்னூல், புறநானூறு, அகநானூறு, குற்றாலக் குறவஞ்சி, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று ஏராளமான தமிழ்த் தலைப்புகளில் கவிதைகள், காவியங்கள் தமிழில் உண்டு.

 

ஆரியர்களின் வரவால் சமஸ்கிருதப் பெயர்கள் திராவிடர்களுக்கு வைக்கப்பட்டன. மணிமேகலை, சீவகன், கோபால், சண்முகம் எல்லாம் தமிழ்ப் பெயர்கள் அல்ல. அவை புகுத்தப்பட்ட பிறமொழிப் பெயர்கள். அப்துல்காதர், அப்துல்ரகுமான் பொன்ற இஸ்லாமியப் பெயர்கள், டேவிட், ஜேகப் போன்ற கிருத்தவப் பெயர்கள், விக்னேஷ்வர், திலிப் போன்ற இந்துப் பெயர்கள் எல்லாம் மத அடையாளங்களாக வைக்கப்பட்டன.

 

அன்பு, முத்தழகு, அரசு, பூங்கொடி என்ற தமிழ்ப் பெயர்கள் பிறகு தலைகாட்டத் தொடங்கின. ஈராயிரம் வருடங்களாக, மதம் என்பது சக்திவாய்ந்த ஒன்றாக இருப்பதால், இதன் வளர்ச்சி அத்தனை வேகமானதாக அமையவில்லை. ஆனால் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

 

உண்மைதான். பெயரில் ஒன்றும் இல்லை. பெயரைச் சுமந்தவர் தமிழை நேசிக்கும் தமிழராய் இருக்கும் பட்சத்தில். ஆனால் நாம் ஒன்றை இங்கே கவனிக்கவேண்டும். சீவக சிந்தாமணி என்று ஒரு காவியத்துக்குப் பெயரிட அந்தப் பாத்திரம் காரணமாய் இருந்தது.

 

உதாரணமாக, காந்தி என்று ஆங்கிலப்படத்துக்குப் பெயரிட்டார்கள். அது மிகவும் சரி. அவர்களே, "நல்லவன் வாழ்வான்" என்று ஓர் ஆங்கிலப் படத்துக்குப் பெயர் வைப்பார்களா?

 

நம் திரைப்படப் பெயர்களைப் பாருங்கள், நியூ, பாய்ஸ், ஜீன்ஸ், ஜெண்டில்மேன், ஆட்டோகிராப். இவர்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க ஏதேனும் காரணம் உண்டா?

 

ஆட்டோகிராப் என்ற படம் தலைப்பில் ஆங்கிலம் வைத்திருந்தாலும், ஆதாம் ஏவாள் பேசியது தமிழ்தான் என்றும் மலையாளிக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது போலவும் சிறப்பான தமிழ்ப்படமாய் இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அந்தப் படத்திற்கு தமிழில் பெயரிட முடியாதா?

 

பெயரிட்டால் அந்தப் படத்தின் கருவுக்கு களங்கம் வந்துவிடுமா? அந்தப் படத்தில் உள்ள அருமையான பாடல்களின் முதல் வரியை வைத்தாலே அற்புதமாய் இருக்குமே. "மனசுக்குள்ளே" என்று கூட வைக்கலாமே. இன்னும் பொருத்தமானதாகத்தானே இருக்கும்?

 

மாவீரன் நெப்போலியனைப் பற்றி படம் எடுத்தால், "நெப்போலியன்" என்று பெயரிடலாம். அதில் பொருள் உண்டு. திருச்சியிலிருந்து சென்னைக்குப் போய் வாழும் ஒருவனின் படத்துக்கு ரன் - Jஒஎ என்று பெயர் வைத்தால், இவர்கள் என்ன தமிழர்கள்? தமிழ்ப் படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கக் கோரி போராடாமல், ஹாலிவுட் படங்களுக்கு, 'காக்கைச் சிறகினிலே', 'நின்னைச் சரணடைந்தேன்' என்று கூறியா போராடமுடியும்?

 

நன்றி: பதிவுகள்.காம்

க்ட்ட்ப்://ந்ந்ந்.கெஒடமில்.cஒம்/பதிவுகல்/புகரி_ஒன்_ஜயபரதன்_டமில்_1.க்ட்

 

தமிழில் வடமொழி கலப்பு சொற்கள் - Android செயலி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.