Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இருட்டடி

 

பாகம் - 1

எங்கள் ஊரும் பிற ஊர்களைப் போலவே செழிப்பான தோட்டங்கள், தோப்புக்கள், பனங்கூடல்கள், வெட்டைகள், புல்வெளிகள் நிறைந்த  ஒரு சாதாரண கிராமம்.  எல்லா ஊர்ப் பிள்ளைகளையும் போலவே பள்ளிக்குடம், ரியூசன் என்று இளம் பிராயத்து சிறுவர்கள் முதல் வளர்ந்த மாணவர்கள் வரை நித்தமும் படிக்கவென்று ஓடுப்பட்டுத் திரிந்தாலும், கிடைக்கும் சொற்ப இடைவேளைகளில் விளையாட்டுக்களுக்கும் வேறு பொழுதுபோக்குகளுக்கும் எங்களால் நேரத்தை ஒதுக்கக் கூடியதாகத்தான் இருந்தது. 

ஓவ்வொரு வயதுக் குழுவிலும் இருப்பவர்கள் காலநேரத்துக்கு ஏற்றபடி வேறுவேறு விளையாட்டுக்கள் விளையாடுவோம். கிட்டிப்புல், கிளித்தட்டு, சிரட்டைப்பந்து போன்ற கிராமத்துக்கேயுரிய பாரம்பரிய விளையாட்டுக்கள் முதல் கிரிக்கெற், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற நகரத்து  நாகரீக விளையாட்டுக்களும் எங்கள் ஊரில் இருக்கும் வெட்டை வெளிகளில் விளையாடித் திரிவதுதான் எமது முக்கிய பொழுதுபோக்கு.

ஊரிலுள்ள பல வெட்டைகளை நாங்கள் பாவித்தாலும் பெரும் பனங்கூடல் ஒன்றுக்கு நடுவில் இருக்கும் 'குருவியன்' வெட்டைதான் நாங்கள் அதிகம் கிரிக்கெற், உதைபந்தாட்டம் விளையாடும் இடம்.  பெரும் பனங்கூடலுக்குள் இருக்கும் குருவியன் வெட்டையை அடைவதற்கு ஐந்தாறு ஒற்றையடிப்பாதைகள் ஒவ்வொரு மூலையிலிருந்தும், ஊர் மனைகளைப் பிரிக்கும் பிற ஒழுங்கைகளிலிருந்தும்,  பிரதான தெருக்கள் இரண்டைக் குறுக்கறுக்கும் கல்லுரோட்டில் இருந்தும் பிரிந்து பாம்புகள் பிணைந்து விலகுவதுபோல வளைந்தும் நெளிந்தும் செல்லும். இந்த ஒற்றையடிப்பாதைகளில் மிக வேகமாகவும், லாகவமாகவும், ஹாண்டில் பாரில் கையை வைக்காமலும் சைக்கிள் ஓடுவதும் எமது 'திரில்' பொழுதுபோக்குகளில் ஒன்று.

பள்ளிக்கூட நாட்களில்  பின்னேர ரியூசனுக்குப் போக முதல் கிடைக்கும் ஒரு மணித்தியாலத்தில் கூட உதைபந்தாட்டம் விளையாடி, வேர்க்க விறுவிறுக்க ரியூசன் வகுப்புக்களில் போய் குந்தி இருந்து படிப்பது எல்லோருக்கும் பழகிவிட்டது. 

 ஆனாலும் வார இறுதி நாட்கள், பாடசாலை விடுமுறைக்காலம் என்றால் காலை பத்து மணிக்கெல்லாம் ஒன்றுகூடி 'கன்னை' பிரித்து கிரிக்கெற் விளையாடுவோம். கிரிக்கெற் முடிய வம்பளந்து இளைப்பாறுவோம்.  சிலவேளைகளில் கள்ள இளனி பிடுங்க அல்லது கள்ள மாங்காய் ஆய என்று ஊரிலுள்ள முள்ளுக்கம்பியாலும், அலம்பல் வேலிகளாலும் கட்டிக்காக்கப்படும் காணிகளுக்குள் போய்வருவோம். மாலை மங்கும் நேரத்தில் மீண்டும் உதைபந்தாட்டம் இருள் கவிந்து ஆளையாள் தெரியாதமட்டும் விளையாடித்தான் வீடு போய்ச்சேருவோம்.
 
குருவியன் வெட்டையில் வயதுக்கேற்றபடி மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விளையாடுவதுண்டு. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட தவ்வல்கள் ஒரு பிரிவிலும், பன்னிரண்டு வயது தொடங்கி O/L வரை அடுத்த பிரிவிலும், A/L படிப்பவர்கள் இன்னொரு பிரிவிலும் விளையாடுவது வழமை. நான் நடுப்பிரிவில் இருந்தேன். குறைந்த வயதுக்காரர்கள் எப்போதும் தங்களைவிட வயது கூடியவர்களுடன் விளையாட விரும்பினாலும்,  வயது கூடியவர்கள் விளையாட ஆட்கள் போதாமல் இருந்தால்தான் தங்களுடன் சேர்ப்பார்கள்.  மதியநேரத்தோடு பாடசாலை முடிவதால் இளம்பிராயத்து சிறுவர்கள் குருவியன் வெட்டையைச் சூழவுள்ள பனங்கூடலுக்குள் ஆமி-புலி போல ஒளித்துப் பிடித்து விளையாடுவதில்தான்  அதிகம் மினக்கெடுவார்கள். 

பல ஒற்றையடிப்பாதைகள் குருவியன் வெட்டையைக் குறுக்கறுத்துப் போவதால், அடிக்கடி சனங்களும் எமது வெட்டையை குறுக்குப்பாதையாகப் பாவிப்பதுண்டு. இதனால் சைக்கிள்களில் போகின்றவர்களாலும், பொடிநடையில் போகின்றவர்களாலும் எமது விளையாட்டுக்கள் தடைப்படுவதுண்டு.

இப்படிக் குருவியன் வெட்டைக் குறுக்குப்பாதையை தினந்தோறும் பாவிப்பவர்களில் "பெட்டைக் குயிலன்" என்று நாங்கள் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடும் ஒரு நடுத்தர வயதுக்காரனும் ஒருவன். பெட்டைக் குயிலன் எப்போதும் ஒரு கருநீல நிறச் சாரமும், வெளிர்நீல நிறச் சேர்ட்டும் அணிந்திருப்பான். அவன் தினமும் காலையில் வடக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஊரிலிருந்து கட்டுவேலைக்காக தெற்குப் பக்கமும், மைம்மல் தாண்டிய பொழுதில் திரும்பவும் தனது ஊருக்கும் போய்வருவான். அவனது பெண்களைப் போன்ற இடுப்பை ஒடித்த ஒயிலான நெளிநடையும், கைகளை அபியம் பிடித்து ஆட்டியபடி குழைந்து பேசுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும். பனங்கூடலுக்குள்ளால் போகும்போது இராகம் இழுத்தவாறு ஏதாவது பாட்டை கொஞ்சம் சத்தமாகவே பாடிக்கொண்டு போவான். நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தால், வெட்டைக்கு நடுவாகப் போகாமல் ஓரமாக விலத்தித்தான் போவான். இதனால் நாங்கள் அவனை அதிகம் பொருட்படுத்துவதில்லை. சிலவேளைகளில் எங்களுக்கு வேறு பொழுதுபோக்குகள் இல்லாவிட்டால் அவனை வம்புக்கிழுப்பதற்காக "பெட்டைக் குயிலன்" என்று உரத்துக் கூச்சலிட்டும், மண்ணாங்கட்டிகளால் எறிந்தும் அவனை ஓட ஓட விரட்டுவதுண்டு.

ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணியளவில் கிரிக்கெற் விளையாடலாம் என்ற நினைப்போடு குருவியன் வெட்டைக்குப் போனபோது அங்கு கூட்டமாக நின்ற இளவயதுச் சிறுவர்கள்  மிகுந்த கோபத்துடனும் ஆத்திரத்துடனும் கத்திக்கொண்டு நின்றார்கள். அவர்களின் சஞ்சலமான உரையாடல் காதில் விழுந்தபோது ஏதோ விபரீதம் நடந்திருக்கவேண்டும் என்று உணர்ந்து என்ன நடந்தது என்று அதட்டிக் கேட்டேன்.

அழுவாரைப் போல சிவந்த முழிக் கண்களுடன் நின்ற குழவியன் - கட்டையாகவும் உருண்டையான தோற்றம் உள்ளதால் வைத்த பட்டப் பெயர் - தாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, வழமையாக ஓரத்தால் போகும் பெட்டைக் குயிலன் வெட்டைக்கு நடுவாக தங்களைக் குழப்புகின்ற மாதிரி வந்ததால், அவனை "பெட்டைக் குயிலன்" என்று பட்டம் தெளித்துக் கூப்பிட்டு வெட்டைக்கு வெளிப்பக்கத்தால் போகும்படி ஊண்டிச் சொன்னோம் என்றான்.  அப்படிச் சொன்னது பிடிக்காமல் பெட்டைக் குயிலன் கோபம் கொண்டு அடிக்க ஓடி வந்தபோது எல்லோரும் பனங்கூடலுக்குள் தலைதெறிக்க ஓடியபோதும், குழவியனை பெட்டைக் குயிலன் பிடித்துவிட்டான்.  "பெட்டையன் எண்டு இனிக் கூப்பிடுவியளோடா பாப்பம்" என்று பிலத்துக் கத்தியவாறே பிடிபட்ட குழவியனின் அரைக்காற்சட்டையை முரட்டுத்தனமாக உருவி, தொடைகளை இறுக்கிக் கசக்கி குஞ்சாமணியைப் பிடிச்சுப் பிசுக்கிப் பினைஞ்சு போட்டானென்று சொன்னார்கள். அந்தக் கதையைச் சொல்லும்போதே குழவியன் பெருத்த அவமானமும் கூச்சமும்  அசூசையும் கலந்த  உணர்வுகளை முகத்தில் அப்பிகொண்டு தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிட்டான்.

நடந்த கதையைக் கேட்டபோதே உடம்பெல்லாம் அதிர்ந்து ஆடுமளவிற்கு ஆத்திரம் வேகமாக வந்தது. பெட்டைக் குயிலன் விடுபேயன் போல இவ்வளவு காலமும் திரிந்தவன், இப்ப ஆருமே நினைச்சுப் பார்க்காத இப்படி ஒரு கூடாத செயலை, அதுவும் எங்கள் வெட்டையில வைத்து செய்தது,  எங்கட ஊர் மானத்திற்கும் மதிப்புக்கும், பெருமைக்கும் விட்ட  பெரிய சவால் மாதிரி இருந்தது.  பெட்டைக் குயிலனுக்கு எங்கட ஊர்ப்பொடியளில கைவைக்கிற அளவுக்கு துணிவு வந்ததை சும்மா விட்டுவிடக்கூடாது.  சூட்டோட சூடாக அவனுக்கு அவன்ரை வாழ்க்கையில கேள்விப்பட்டிருக்காத ஒரு பாடம் படிப்பித்து, அவனை எங்கள் வெட்டைப் பக்கம் சீவியத்திற்கும் தலைவைக்காமல் பார்ப்பதுதான் அடுத்த வேலை என்று கறுவிக்கொண்டே மனதுக்குள் சபதம் போட்டேன்.

குழவியனை சமாதானப்படுத்துவதற்காக "பெட்டைக் குயிலன் எங்களை ஆரெண்டு தெரியாமல், எங்கட பரம்பரை கத்தி எடுத்தால் தரம் பறிக்காமல் விடுறதில்லை எண்டு தெரியாமல் உனக்கு நுள்ளிப் போட்டான்;  எங்களைத் தொட்ட அவனை இண்டைக்கே ரெண்டில ஒண்டு பாத்துவிட்டுத்தான் நித்திரைப்பாயிக்குப் போறது" என்று வீரவசனம் பேசினேன்.

பெட்டைக் குயிலன் வழமையாக ஏழு மணியளவில் இருட்டாக இருக்கும்போதுதான் திரும்பவும் பனங்கூடல் குறுக்குவழியில் தனது ஊருக்குப் போவது என்று தெரிந்திருந்ததால், உடனடியாகவே சரியான திட்டம் போட்டு நல்ல இருட்டடி கொடுத்து வாழ்க்கையில அவன் எங்கள மறக்கமுடியாத பாடம் கொடுப்பதுதான் சரி என்று எனக்குள் யோசித்தவாறே யார் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று சிந்தித்தேன். கனபேரைச் சேர்த்தால் திட்டம் பிசகிவிடும். என்றாலும் குறைந்தது ஒரு நாலுபேராவது இருந்தால்தான் வேகமான அதிரடித்தாக்குதலை செய்துமுடிக்கலாம் என்று தோன்றியது. பெட்டைக் குயிலன் ஏற்கனவே சின்னப்பொடியளோட தனகினபடியால் சிலநேரம் எங்களைப் போல பதினாலு-பதினைஞ்து வயதினரையும் கண்டு பயப்படாமல் இருக்கவும்கூடும். அதனால் எப்படியும் ஒரு பெரிய பொடியனையும் சேர்த்தால்தான் எங்களுக்கும் ஒரு பலமாக இருக்கும் என்று தீர்மானித்தேன்.

- தொடரும் -

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கதை விறுவிறுப்பாய் இருக்கு தொடருங்கள் கிருபன்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், எழுத்து நடை வாசிக்க மிகவும் இலகுவாக உள்ளது ! புதிதாக     எழுதுபவர் போலத் தெரியவில்லை! தொடரட்டும்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புங்கையூரன் said:

கிருபன், எழுத்து நடை வாசிக்க மிகவும் இலகுவாக உள்ளது ! புதிதாக     எழுதுபவர் போலத் தெரியவில்லை! தொடரட்டும்!

 

 

 

புதிதாகத்தான் எழுதுகின்றேன்?

ஆனால் இக்கதையை 2005 இல் எழுதத் தொடங்கியிருந்தேன்?

2011 இல் கூட யாழில் சொல்லியிருக்கின்றேன். இந்தமுறை எழுதிமுடிப்பேன் என்று நம்புகின்றேன்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புங்கையூரன் said:

கிருபன், எழுத்து நடை வாசிக்க மிகவும் இலகுவாக உள்ளது ! புதிதாக     எழுதுபவர் போலத் தெரியவில்லை! தொடரட்டும்!

 

 

கிருபனா புதிது ??? முன்னர் ஒரு விறுவிறுப்பான தொடர் எழுதி தொடர்ந்து எழுதாமல்  எம்மைத் தவிக்கவிட்டதை மறந்தாச்சோ???

ஆனால் இதில் அவரின் சிறுவயது உணர்வு வெளிப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கிருபனா புதிது ??? முன்னர் ஒரு விறுவிறுப்பான தொடர் எழுதி தொடர்ந்து எழுதாமல்  எம்மைத் தவிக்கவிட்டதை மறந்தாச்சோ???

அதையும் முடிக்கிறதுதான் அடுத்த புறஜெக்ற்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லி முடியுங்க பெட்டைகுயிலன் என்னானான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்! ஊர்க்கதை சுப்பராய் இருக்கு......tw_thumbsup:
என்ரை கேள்வி என்னவெண்டால் உந்த "குருவியன் வெட்டை" எங்கையிருக்கு??

ஏனெண்டால் நான் ஊருக்கு போனால்???  
குருவியன் வெட்டையிலை ஒருக்கால் கிளித்தட்டு விளையாடோணும் போலை கிடக்கு tw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

கிருபன்! ஊர்க்கதை சுப்பராய் இருக்கு......tw_thumbsup:
என்ரை கேள்வி என்னவெண்டால் உந்த "குருவியன் வெட்டை" எங்கையிருக்கு??

ஏனெண்டால் நான் ஊருக்கு போனால்???  
குருவியன் வெட்டையிலை ஒருக்கால் கிளித்தட்டு விளையாடோணும் போலை கிடக்கு tw_lol:

"குருவியன் வெட்டை" பூசலார் கட்டின கோயில் மாதிரி மனதிலதான் இருக்கு கு.சா. ஐயா.:cool:

ஆனால் நாங்கள் விளையாடின வெட்டை இப்ப ஒருத்தரும் விளையாடாமல் காடு பத்திப்போய்விட்டது என்று நினைக்கின்றேன். 

ஊரைவிட்டு அகலுவதை வெளிக்கிடும் நாளுக்கு முதல்நாள்தான் அந்த வெட்டையில் வைத்து நண்பர்களுக்குச் சொன்னேன். அதன் பின்னர் அந்த வெட்டையில் இன்னமும் கால் வைக்கவில்லைtw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

-----இப்படிக் குருவியன் வெட்டைக் குறுக்குப்பாதையை தினந்தோறும் பாவிப்பவர்களில் "பெட்டைக் குயிலன்" என்று நாங்கள் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடும் ஒரு நடுத்தர வயதுக்காரனும் ஒருவன். பெட்டைக் குயிலன் எப்போதும் ஒரு கருநீல நிறச் சாரமும், வெளிர்நீல நிறச் சேர்ட்டும் அணிந்திருப்பான். அவன் தினமும் காலையில் வடக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஊரிலிருந்து கட்டுவேலைக்காக தெற்குப் பக்கமும், மைம்மல் தாண்டிய பொழுதில் திரும்பவும் தனது ஊருக்கும் போய்வருவான். அவனது பெண்களைப் போன்ற இடுப்பை ஒடித்த ஒயிலான நெளிநடையும், கைகளை அபியம் பிடித்து ஆட்டியபடி குழைந்து பேசுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும். பனங்கூடலுக்குள்ளால் போகும்போது இராகம் இழுத்தவாறு ஏதாவது பாட்டை கொஞ்சம் சத்தமாகவே பாடிக்கொண்டு போவான். நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தால், வெட்டைக்கு நடுவாகப் போகாமல் ஓரமாக விலத்தித்தான் போவான். இதனால் நாங்கள் அவனை அதிகம் பொருட்படுத்துவதில்லை. சிலவேளைகளில் எங்களுக்கு வேறு பொழுதுபோக்குகள் இல்லாவிட்டால் அவனை வம்புக்கிழுப்பதற்காக "பெட்டைக் குயிலன்" என்று உரத்துக் கூச்சலிட்டும், மண்ணாங்கட்டிகளால் எறிந்தும் அவனை ஓட ஓட விரட்டுவதுண்டு.

ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணியளவில் கிரிக்கெற் விளையாடலாம் என்ற நினைப்போடு குருவியன் வெட்டைக்குப் போனபோது அங்கு கூட்டமாக நின்ற இளவயதுச் சிறுவர்கள்  மிகுந்த கோபத்துடனும் ஆத்திரத்துடனும் கத்திக்கொண்டு நின்றார்கள். அவர்களின் சஞ்சலமான உரையாடல் காதில் விழுந்தபோது ஏதோ விபரீதம் நடந்திருக்கவேண்டும் என்று உணர்ந்து என்ன நடந்தது என்று அதட்டிக் கேட்டேன்.

அழுவாரைப் போல சிவந்த முழிக் கண்களுடன் நின்ற குழவியன் - கட்டையாகவும் உருண்டையான தோற்றம் உள்ளதால் வைத்த பட்டப் பெயர் - தாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, வழமையாக ஓரத்தால் போகும் பெட்டைக் குயிலன் வெட்டைக்கு நடுவாக தங்களைக் குழப்புகின்ற மாதிரி வந்ததால், அவனை "பெட்டைக் குயிலன்" என்று பட்டம் தெளித்துக் கூப்பிட்டு வெட்டைக்கு வெளிப்பக்கத்தால் போகும்படி ஊண்டிச் சொன்னோம் என்றான்.  அப்படிச் சொன்னது பிடிக்காமல் பெட்டைக் குயிலன் கோபம் கொண்டு அடிக்க ஓடி வந்தபோது எல்லோரும் பனங்கூடலுக்குள் தலைதெறிக்க ஓடியபோதும், குழவியனை பெட்டைக் குயிலன் பிடித்துவிட்டான்.  "பெட்டையன் எண்டு இனிக் கூப்பிடுவியளோடா பாப்பம்" என்று பிலத்துக் கத்தியவாறே பிடிபட்ட குழவியனின் அரைக்காற்சட்டையை முரட்டுத்தனமாக உருவி, தொடைகளை இறுக்கிக் கசக்கி குஞ்சாமணியைப் பிடிச்சுப் பிசுக்கிப் பினைஞ்சு போட்டானென்று சொன்னார்கள். அந்தக் கதையைச் சொல்லும்போதே குழவியன் பெருத்த அவமானமும் கூச்சமும்  அசூசையும் கலந்த  உணர்வுகளை முகத்தில் அப்பிகொண்டு தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிட்டான்.

குருவியன்  வெட்டையால்.... குறுக்காலை  போன  "பெட்டைக் குயிலனை"  
குழவியன்...  பட்டப் பெயர் சொல்லி அழைத்ததால்.....
கோபம் கொண்ட குயிலன், குழவியனின்...  குஞ்சாமணியைப் பிடிச்சுப் பிசுக்கிப், பினைஞ்சு... போட்டான்.
எதுகை மோனையுடன் எழுதிய  கதை, சூப்பராக இருக்கு கிருபன் ஜீ.  :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்தின் அழகு, வாசம் உங்கள் கிராமிய வர்ணணையில் மிளிர்கிறது, கிருபன்..

வெட்டவெளியில் இருக்கும் தாழ்வான புங்கை மரத்தில், அக்காலத்தில் நாங்கள் விளையாடிய 'மர புல்லாக்குச்சி' ஆட்டம் நினைவை மீட்டிச் செல்கிறது.. bicycle.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

அவனை "பெட்டைக் குயிலன்" என்று பட்டம் தெளித்துக் கூப்பிட்டு வெட்டைக்கு

யார் அவனுக்கு பட்டம் தெளித்தது எழும்புங்கோ  என்று ஆசிரியர் எங்களை கேட்ட ஞாபகம் வருகின்றது......"பட்டம் தெளித்தல்" ஊரில் இப்ப இந்த தமிழ் சொல் பாவனையில் இருக்கோ தெரியவில்லை கதை சுப்பர் தொடருங்கோ
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

கதை விறுவிறுப்பாய் இருக்கு தொடருங்கள் கிருபன்....! tw_blush:

எங்களையெல்லாம் கட்டிப் போட்டிருக்கும் துருச்சாமிக்கு முன்னால் இது வெறும் ஜுஜுபி?

9 hours ago, ஈழப்பிரியன் said:

சொல்லி முடியுங்க பெட்டைகுயிலன் என்னானான்?

மலிஞ்சால் சந்தைக்கு வரும்தானே. அப்ப தெரியும்?

2 hours ago, தமிழ் சிறி said:

குருவியன்  வெட்டையால்.... குறுக்காலை  போன  "பெட்டைக் குயிலனை"  
குழவியன்...  பட்டப் பெயர் சொல்லி அழைத்ததால்.....
கோபம் கொண்ட குயிலன், குழவியனின்...  குஞ்சாமணியைப் பிடிச்சுப் பிசுக்கிப், பினைஞ்சு... போட்டான்.
எதுகை மோனையுடன் எழுதிய  கதை, சூப்பராக இருக்கு கிருபன் ஜீ.  :grin: :D:

எழுதும்போது எதுகை, மோனையாக நினைத்து எழுதவில்லை! ஆனால் நீல நிறத்தில் நீங்கள் காட்டியது உங்கள் கண்ணுக்கு எப்படியும் தப்பாது என்று எதிர்பார்த்திருந்தேன் தமிழ் சிறி அண்ணா?

1 hour ago, ராசவன்னியன் said:

கிராமத்தின் அழகு, வாசம் உங்கள் கிராமிய வர்ணணையில் மிளிர்கிறது, கிருபன்..

வெட்டவெளியில் இருக்கும் தாழ்வான புங்கை மரத்தில், அக்காலத்தில் நாங்கள் விளையாடிய 'மர புல்லாக்குச்சி' ஆட்டம் நினைவை மீட்டிச் செல்கிறது.. bicycle.gif

நன்றி. ராசவன்னியன் ஐயா!

எத்தனை வருடங்கள் போனாலும் மறந்துபோகாத வாழ்வின் பகுதி. மனதில் ஓடும் சித்திரத்தை எழுத்தில் கொண்டுவருவது கடினமாக இருந்தது. 

15 minutes ago, putthan said:

யார் அவனுக்கு பட்டம் தெளித்தது எழும்புங்கோ  என்று ஆசிரியர் எங்களை கேட்ட ஞாபகம் வருகின்றது......"பட்டம் தெளித்தல்" ஊரில் இப்ப இந்த தமிழ் சொல் பாவனையில் இருக்கோ தெரியவில்லை கதை சுப்பர் தொடருங்கோ
 

நன்றி புத்தன் ஐயா!

சாரம் கட்டுவதை மறந்துபோன மாதிரி பட்டம் தெளிப்பதையும் மறந்திருக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரது  உடை

நடை

இடுப்பு  என்று தொடங்கும் போதே கதையின் நளினத்தை புரிந்து கொண்டேன்..

முடியுங்கள்

பின்னர  பேசுவோம்....

மற்றும்படி இருட்டடி நானும்   போட்டிருக்கின்றேன்

அதுவும் சாக்கால் தலையில்   மூடிவிட்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் யாழ் களம் களைகட்டுகிறது மகிழ்ச்சி  தொடரட்டும் 

 tw_blush:tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

அவரது  உடை

நடை

இடுப்பு  என்று தொடங்கும் போதே கதையின் நளினத்தை புரிந்து கொண்டேன்..

முடியுங்கள்

பின்னர  பேசுவோம்....

மற்றும்படி இருட்டடி நானும்   போட்டிருக்கின்றேன்

அதுவும் சாக்கால் தலையில்   மூடிவிட்டு...

விசுகு எனது நண்பனும் நானும் சேர்ந்து ஒருவருக்கு இருட்டடி போட்டு ஒரு கிழமையாக பேய் அடித்துப் போட்டுதென்று ஆளுக்கு காய்ச்சல்.பின் நீண்ட காலம் பேய் பயத்தில் பொழுது பட்டா வெளிக்கிடுவதே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலருடைய ஆக்கங்களை வந்து படிப்பதற்கு கடினமாக இருக்கிறது..அவர்களுக்கு இப்படி எழுதினால் தான் வாசகர்கள் படிப்பார்கள் என்ற வித்தை தெரிந்திருந்தாலும் நமக்கு அது புரிய மாட்டேன்கிறது..தயவு செய்து குறைந்த பட்ச அளவு நாகரீகத்தையாவது கடைப்பிடியுங்கள்.இது எனது அன்பு வேண்டுகோள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

விசுகு எனது நண்பனும் நானும் சேர்ந்து ஒருவருக்கு இருட்டடி போட்டு ஒரு கிழமையாக பேய் அடித்துப் போட்டுதென்று ஆளுக்கு காய்ச்சல்.பின் நீண்ட காலம் பேய் பயத்தில் பொழுது பட்டா வெளிக்கிடுவதே இல்லை.

உண்மைதான்

இது தான் இயக்கங்கள்   தோன்றுவதற்கான முதல்படியாக இருந்திருக்குமோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, யாயினி said:

சிலருடைய ஆக்கங்களை வந்து படிப்பதற்கு கடினமாக இருக்கிறது..அவர்களுக்கு இப்படி எழுதினால் தான் வாசகர்கள் படிப்பார்கள் என்ற வித்தை தெரிந்திருந்தாலும் நமக்கு அது புரிய மாட்டேன்கிறது..தயவு செய்து குறைந்த பட்ச அளவு நாகரீகத்தையாவது கடைப்பிடியுங்கள்.இது எனது அன்பு வேண்டுகோள்.

என்ன அம்மா பிரச்சனை.சுற்றி வழைக்காமல் நேரடியாகவே எழுதுங்கள்.அப்போது தான் எழுதுறவர்களுக்கு புரியும்.இதில் குறைபட ஏதுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அநேகமாக ஊர்ப்பக்கங்களில் ஒருவரை அடையாளப்படுத்துவதற்கு பட்டப்பெயர்கள்தான் அதிக பாவனையில் இருந்துள்ளது. உங்கள் எழுத்துக்கள் சிறு பிராயத்தை மனதிற்குள் கொண்டுவந்து நிறுத்துகிறது. இந்தக்கதையில் வரும் சிறுபிராயத்துடுக்குத்தனம் எனக்கும் சிறுவயதில் ஆண்பிள்ளைகளுக்கு ஒப்பாக இருந்திருக்கிறது . பெண் பிள்ளைபோன்று என் பெற்றோர் என்னை வளர்க்க மறுத்துவிட்டார்கள்... அதன் பலனாக இப்படியான துடுக்குக்குணங்களை அண்ணன்களுடன் சேர்ந்து நானும் பழகித் தொலைத்துவிட்டேன். பக்கத்துவீட்டு அன்ரி ஆண்சிங்கி என்றே கூப்பிடுகிற அளவுக்கு இருந்தேனாக்கும்.....!!!! விடலைபபருவத்தில் பருவமாற்றம் கட்டுப்போடாவிட்டால் என்ன என்னெல்லாம் செய்திருப்பேனோ....

 

அட கிருபன் நீங்கள் எழுதும் கதை வாசிக்க சுவார்சியமாக இருக்கிறது. உங்களின் அட்டகாசத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

சிலருடைய ஆக்கங்களை வந்து படிப்பதற்கு கடினமாக இருக்கிறது..அவர்களுக்கு இப்படி எழுதினால் தான் வாசகர்கள் படிப்பார்கள் என்ற வித்தை தெரிந்திருந்தாலும் நமக்கு அது புரிய மாட்டேன்கிறது..தயவு செய்து குறைந்த பட்ச அளவு நாகரீகத்தையாவது கடைப்பிடியுங்கள்.இது எனது அன்பு வேண்டுகோள்.

யாயினி,

நான் எழுதியதை வாசித்தமையால் மனவுளைச்சல் ஏதும் வந்திருக்காது என்று நம்புகின்றேன்?. வாசகர்கள் விருப்பத்துக்குத் தக்கமாதிரி எழுதுவது ஜனரஞ்சக எழுத்து. அதிலும் சில மஞ்சள் பத்திரிகை எழுத்து? சிலது உள்ளதை உள்ளபடியே எதிவித பாசாங்கு இல்லாமலும் எழுதும் எழுத்து. ?

எனது எழுத்து எந்தவகை என்பதை வாசிப்பவர்களுக்கே விட்டுவிடுகின்றேன்?

 

 

2 hours ago, வல்வை சகாறா said:

கிருபன் அநேகமாக ஊர்ப்பக்கங்களில் ஒருவரை அடையாளப்படுத்துவதற்கு பட்டப்பெயர்கள்தான் அதிக பாவனையில் இருந்துள்ளது. உங்கள் எழுத்துக்கள் சிறு பிராயத்தை மனதிற்குள் கொண்டுவந்து நிறுத்துகிறது. இந்தக்கதையில் வரும் சிறுபிராயத்துடுக்குத்தனம் எனக்கும் சிறுவயதில் ஆண்பிள்ளைகளுக்கு ஒப்பாக இருந்திருக்கிறது . பெண் பிள்ளைபோன்று என் பெற்றோர் என்னை வளர்க்க மறுத்துவிட்டார்கள்... அதன் பலனாக இப்படியான துடுக்குக்குணங்களை அண்ணன்களுடன் சேர்ந்து நானும் பழகித் தொலைத்துவிட்டேன். பக்கத்துவீட்டு அன்ரி ஆண்சிங்கி என்றே கூப்பிடுகிற அளவுக்கு இருந்தேனாக்கும்.....!!!! விடலைபபருவத்தில் பருவமாற்றம் கட்டுப்போடாவிட்டால் என்ன என்னெல்லாம் செய்திருப்பேனோ....

 

அட கிருபன் நீங்கள் எழுதும் கதை வாசிக்க சுவார்சியமாக இருக்கிறது. உங்களின் அட்டகாசத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் ஆண்சிங்கி என்று நீங்களே சொல்லித்தான் நாங்கள் தெரியவேண்டுமே!? அது உலகத்துக்கே தெரியுமே?

அடுத்த பாகத்தை எழுதிவிட்டேன். ஆனால் கொஞ்சம் திருத்தம் செய்யவேண்டும்!!

முடிவுப் பகுதி இன்னும் முடிக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் மிகச் சுவாரசியமாக கிராமியச் சூழலையும் அங்கு நடைபெறும் சிறுபராய சம்பவங்களையும் எம் கண்முன் நிகழ்ச்சிப் படுத்தியுள்ளார். பாவம் பெட்டைக்குயிலன் இருட்டடி  வாங்குவது தெரியாமல் இரண்டாம் பாகத்தில் வரப் போகிறான். யாராவது காப்பாத்துங்கள். நன்றாக எழுதியுள்ளீர்கள். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 இல இருட்டடி பற்றி ஒரு நகைச்சுவைக் கதை எழுதி இருந்தேன்... அதில் கிருபன் அண்ணா இப்படி எழுதி இருந்தார்..

"நானும் ஒரு இருட்டடி பற்றிய கதை ஒன்றைக் எழுதிக் குறையில் வைத்திருக்கின்றேன்.. ஆனால் அது அடிவாங்கியதைப் பற்றியதல்ல!"

இப்பொழுது 2017... கிட்டத்தட்ட ஆறுவருசம் ஆகி இருக்கு எழுதி முடிக்க... தும்பளையான் பழையகதைக்கு இன்று லைக் போட்டிருந்ததால் என்ன ஏது என்று பார்க்க போன இடத்தில் சிக்கியது..

இணைப்பு இது... https://www.yarl.com/forum3/topic/95751-நான்-அவனில்லை/


பெட்டைக்குயிலனுக்கு செவிட்டப்பொத்தி அடிச்சதில அநேகமா அவனுக்கு காதுகேக்காமா போயிருக்குமோ தெரியல அடுத்த தொடரில...

அப்பிடி நடந்திருந்தா அடுத்தமுறை வெட்டையால போகேக்க பொடியளின்ர வாய் அசையுறத வச்சுத்தான் என்ன கத்துறாங்கள் எண்டு மட்டுப்பிடிச்சு இந்தவாட்டி நலமெடுத்திருப்பான்...

இல்லை எண்டா ஒண்டில் வெட்டைக்கு மறுக கிறுகி இருக்கமாட்டான்.. tw_bawling:

Link to comment
Share on other sites

நேற்று இரவு கைபேசியில் உங்கள் கதையை பயணத்தின் போது படித்தேன். மிகவும் சுவார்ஸயமாக இருந்தது. சிறு வயதில் மாயாவி காமிக்ஸ்சில் ஆரம்பித்து ராஜேஸ்குமார் பட்டுக்கோட்டை பிரபாகர் என பல நுற்றுக்கணக்கான கிரைம் நாவல்கள் திரிலர்கள் என படித்தது ஞாபகம் வந்தது. அதன் ஆர்வாம் அடுத்து என்ன என்பதிலேயே இருக்கும். இதிலும் அவ்வாறு ஒரு ஆர்வரம் அடுத்து பெட்டைக் குயிலன் என்ன ஆனான்? மண்மணத்தோடு சேர்ந்த உங்கள் கதை ஏதோ பரிட்சயமான எழுத்தாளரின் கதையை படிப்பது போல் இயல்பாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் - 2

அநேகமான பெரிய பொடியங்கள் படிப்பிலும் அல்லது பெட்டை பாக்கிறதிலையும் மினக்கெடுவாங்கள் என்பதால் இதில் இரண்டிலும் அதிகம் ஈடுபாடு காட்டாத, நேர்மை, நியாயம், புரட்சி, தத்துவம் என்று எந்த நேரமும் பெரிய தடிமனான புத்தகங்களைப் படித்து, விளங்காத தமிழில் அகிலம், பிரபஞ்சம்  என்ற வாயோயாமல் தத்துவம் கதைக்கும் சொக்கியை கேட்டால் உடனடியாகச் சம்மதிப்பான் என்று நினைத்தேன். 

சொக்கிக்கு பதினேழு வயதுதான் என்றாலும் ஆள் வாதநாராயணி மரம் மாதிரி நல்ல வளர்த்தி. மெலிஞ்ச தேகம்.  முள்ளுப் பண்டி மாதிரி தலையும் தாடி, மீசையும் வளர்ந்திருக்கும். அவன் உலக சோசலிச இயக்கத்தினது நான்காம் அகிலத்தின் லியோன் ட்ரொட்ஸ்கியின் தீவிர பக்தனாக இருந்தபடியால் அவனுக்கு ட்ரொட்ஸ்கி என்று பட்டப்பெயர் வைத்தோம். அது எங்கள்  பல்லுக்கையே கொழுவிக்கொண்டு நிண்டு, வாய்க்குள்ள பூராததால் சொக்கி என்று மருவி விட்டது. அடிதடியில பெரிதாக ஈடுபாடு காட்டாவிட்டாலும், சமூக சிந்தனை கூடினவன். பெட்டைக் குயிலனுக்கு இருட்டடி போட அவன் போதுமென்று நினைத்தேன்.  

அடுத்ததாக பெட்டைக் குயிலனை திகைக்க வைக்கக் கூடியமாதிரி அதிவேகமாக இயங்கி, இடக்கு முடக்கான இடத்தில மோட்டு அடிபோடக்கூடியவனும், அதிகம் விளக்கம் கேளாமல் சொன்னதைச் செய்யத் தோதாய் இருக்கக் கூடியவனுமான உசார் மடையன் கட்டையனைத் தேர்ந்தெடுத்தேன். கட்டையன் கருங்காலி நிறமும் வலிமையுமானவன். எங்களுடன் எப்பவும் கூடித் திரிய விரும்புகிறவன். என்னைவிட ஒரு வயதுதான் மூத்தவன். இருந்துவிட்டு எப்போதாவது ஞாபகம் வந்தால் மாத்திரமே பள்ளிக்கூடப் பக்கம் எட்டிப் பார்ப்பான். அநேகமான நேரம் தோட்டம், துரவு என்று உழுவான் மாதிரி உழுதுகொண்டு திரிவதும், விளையாடுவதும்தான் அவனது தினப்படி உத்தியோகம்.

மூன்றாவதாகப் பனங்கூடலுக்குக் கிட்டடியில் உள்ள புக்கையரை பிடிக்கலாம் என்று தோன்றியது. புக்கையருக்கு என்னைவிட ஒருவயது குறைவு என்றாலும் நல்ல தோற்றம். விளையாடும்போது அடிக்கடி அளாப்பல் வேலைகள் செய்து சண்டையில் ஈடுபடுபவன் என்பதால் பிரயோசனப்படுவான் என்று நினைத்தேன். புக்கையரின் தகப்பனார் 'அன்' விகுதியில் பேர் வந்தால் 'அவன்/இவன்' என்று மற்றவர்கள் சொல்லக்கூடும் என்பதால் கவனமாகப் பிள்ளைக்கு பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்தவர். செல்லப் பெயரிலும் 'அன்' விகுதி வரக்கூடாது என்று தானே நல்ல மரியாதையான வீட்டுப் பெயரையும் வைத்திருந்தார். நாங்களும் புக்கையரின் தகப்பனாருக்கு மதிப்புக்கொடுக்கவேண்டும் என்பதற்காக பட்டப்பெயரிலும் 'அன்' வராமல் பார்த்து வைத்த பெயர்தான் புக்கையர்.  அளாப்பிக் குழப்பும்போதுகூட கோபம் வந்தால் நாங்கள் "டேய் புக்கை" என்றுதான் கூப்பிடுவோம்.

உடனடியாகவே  தெரிவுசெய்த ஓவ்வொருவரினதும் வீடுகளுக்கும் போய் அவர்களைத் தனித்தனியே ரகசியமாக அழைத்து வெட்டையில் நடந்த விடயத்தை சுருக்கமாகச் சொல்லி, பெட்டைக் குயிலனுக்கு இருட்டடி கொடுப்பதற்கு விடாப்பிடியாகச் சம்மதம் வாங்கிவிட்டேன். சொக்கி பல குறுக்குக்கேள்விகள் கேட்டாலும் நடந்தது  மிகவும் பாரதூரமான விடயம் என்பதை உணர்ந்ததும் ஒரு சமூகக் குற்றத்தை ஒழிக்கவேண்டும், ஒரு மோசமான சமூகவிரோதியைத் தண்டிக்கவேண்டும் என்பதற்காக என்னைவிட ஆவேசமாக இருட்டடி கொடுப்பதுதான் சரி என்ற முனைப்பில் நின்றான். அவன் படிக்கும் தடிமனான புத்தகங்களில் இப்படியான விடயங்களை எப்படிக் கையாளாலாம்  என்று அகிலக்காரர்களின் மத்திய குழுவினர் முன்னரே தீர்மானம் போட்டிருந்தார்களா என்று கேட்க நினைத்தாலும் அது அன்றையநாளின் முக்கிய நோக்கத்தை திசை திருப்பிவிடும் என்பதால் விட்டுவிட்டேன்.

இருட்டடித் தாக்குதல் பற்றிய விரிவான  விளக்கத்திற்கு மூவரையும் பிற்பகல் மூன்று மணியளவில் குருவியன் வெட்டைக்கு   வரச்சொல்லிவிட்டு, மத்தியானச் சாப்பாட்டுக்கு அம்மா தேடத் தொடங்க முதலே வீட்டுக்குப் போனேன். சாப்பிடும்போதே ஏதோ பெரிய காரியம் ஒன்றைச் சாதிக்கப்போவதாக மனம் மிகவும் சந்தோஷப்பட்டது. மயிர்க்கூச்செறியும் மின்னல்வேகத் தாக்குதலை சிறு பிசகும் இல்லாமல் காரியமாற்ற ஒழுங்கான திட்டம் தேவை என்பதால் நண்பர்களைச் சந்திக்கும் தருணம் மட்டும் பொறுமைகாக்க முடியவில்லை. முற்றத்திற்குப் போவதும், வீட்டுக்குள் வருவதுமாக மனதுக்குள் பல கோணங்களில் இருட்டடித் தாக்குதலை ஒத்திகை பார்த்தேன். எதுவும் திருப்தியானதாக இருக்கவில்லை. ஆனால் நல்லா செவிள் பறக்க சப்பல் அடி கொடுக்கவேண்டும் என்ற உந்துதல் கூடிக்கொண்டுவந்தது.

முன்னைய வீரதீரச் செயல்களை நினைவுபடுத்த முயன்றேன். பெரிதாகத் தன்னும் சொல்லிக்கொள்ளுமளவில் ஒன்றும் இருக்கவில்லை. வீட்டில் எந்நேரமும் அண்ணன், தம்பியோடு அடிபாடுகள் இருந்தாலும், வெளியில் நல்லபிள்ளையாகவே அநேகமாக இருந்திருக்கின்றேன்.  விளையாடும்போது இடையிடையே எதிர்க் 'கன்னை'யாருடனும் விளையாட்டு ருசியில் சில்லறைச் சண்டைகள் பிடித்திருந்தாலும், அவை ஒருநாளும் மோசமான சண்டைகளாக மாறியதில்லை.

இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது பருப்பனுடன் அங்கிரி போட்டதால் வகுப்பில் நாங்கள் இரு கோஸ்டிகளாக இருந்தோம். ஒரு கோஸ்டிக்கு நானும், மற்றக் கோஸ்டிக்கு பருப்பனும் தலைவர்கள். வகுப்பிலும் மைதானத்திலும் வாய்த் தர்க்கங்களிலும், பட்டம் தெளித்தலிலும்தான் எங்கள் கோஸ்டிகள் முறுகுப்பட்டுத் திரிந்தன. ஆளுக்காள் கை வைத்தால் தலைமை வாத்தி செகிடு கிழிய அறைந்துவிடுவார் என்ற பயத்தில் முட்டுப்பட்டதில்லை. 

எங்கள் கோஸ்டிகளின் முறுகல் முற்றிய நேரத்தில்தான் ஊர்த்திருவிழா வந்தது. சப்பறத் திருவிழா இரவில் கோயில் பின்வீதியில்  சப்பறம் போனதன் பிற்பாடு போட்டுப் பிடிப்பதென்று பருப்பனும் நானும் சம்மதித்திருந்தோம். பருப்பன் என்னைவிடப் பலசாலி மாதிரி எனக்குத்தோன்றியது. அதனால் அவன் எதிர்பார்க்காதமாதிரி ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்தபோது, அப்போதுதான் வீட்டில் 'வயறிங்' வேலை செய்து மிஞ்சியிருந்த வயர் துண்டுகளில் இரண்டைச் சுத்திக் காற்சட்டைப் பொக்கற்றுக்குள் திணித்துக்கொண்டு கோயிலடிக்குப் போனேன்.

சப்பறத்திற்குப் பின்னால் பொருமிப் புடைத்த காற்சட்டைப் பொக்கற்றுகளுடன் போய்க்கொண்டிருந்தபோது பருப்பனும் அவன் கோஸ்டியினரும் சில அடிகள் பின்னாலேயே வந்துகொண்டிருந்தனர். சப்பறம் மேற்கு வீதியிலிருந்து வடக்கு வீதிக்குத் திரும்ப நாங்கள் இருதரப்பினரும் பின்தங்கிவிட்டோம்.  போட்டுப் பிடிப்பதில் முந்துபவன்தான் வெல்வான் என்பதால் பருப்பன் எதிர்பாராத வேளையில் பொக்கற்றுக்குளிருந்த வயரை சடாரென்று எடுத்துச் சுழற்றியபோது, திடீரென எங்கிருந்தோ வந்த பெரிய பொடியன் ஒருவன் எங்கள் இருவரையும் காதில பிடித்து "சின்ன முளையான்களாக இருக்கிற நீங்கள் கோயில் திருவிழாவில் சண்டைபிடிக்கப் போறியளோ?" என்று கேட்டு புறங்கையால் பளீரென கன்னத்தில் இருவருக்கும் மாறி மாறி அறைந்தான். வயர் வைத்திருந்த காரணத்தால் எனக்குப் பல அடிகள் விழுந்து கன்னம் விண்விண் என்று வலித்தது.  பருப்பனும் நானும் "ஐயோ அம்மா" என்று அலறிக் கத்தியவாறே எங்களை விட்டுவிடுமாறு மன்றாடினோம். "இனி எங்கையாவது சண்டை பிடிக்கிறது கண்டனெண்டால் அந்த இடத்தில கை காலை ஒடிச்சு கரண்ட் கம்பியில தோரணம் கட்டிவிடுவன் " என்று வெருட்டி எங்களை ஓடித்தப்புமாறு சொன்னதும், நாங்கள் குதிகால் குண்டியில்பட கன்னத்தைப் பிடித்தவாறே ஓடி வீட்டுக்குப் போனதும் இப்பத்தான் நடந்தமாதிரி இன்னமும் உணர்வில் உள்ளது.

மூன்று மணிக்கு முந்தியே சைக்கிளை எடுத்துக்கொண்டு குருவியன் வெட்டைக்கு வேகமாகப் பறந்தேன். சொல்லி வைத்த மாதிரி நண்பர்கள் மூவரும் வந்து சேர்ந்திருந்தார்கள். வெட்டையின் ஒரத்தில் பனைமர நிழலின் கீழ் வழமையாக இருந்து கதைக்கும் பனங்குத்தியில் குந்தியவாறே  இருட்டடி கொடுக்கும் திட்டத்தை விபரிக்கத் தொடங்கினேன்.  பின்னேரம் விளையாட்டு முடிந்தபின்னர், வீட்டுக்குப் போவது மாதிரிப் போய் இருள் கூடியதும் திரும்பவும் குருவியன் வெட்டையில் சந்திக்கவேண்டும் என்றேன். கல்லுரோட்டில் இருந்து பனங்கூடலுக்குள்ளால் பிரியும் ஒற்றையடிப்பாதை வெட்டைக்கு வர சுமார் நூறு யாருக்கு முன்னால் வில்லு மாதிரி வளையும் இடம்தான் தோதான இடம் என்று அந்த இடத்தை நோக்கிக் கையைக் காட்டிச் சொன்னேன். அந்த வளைவான பாதைக்கு கிட்டவாக பல பனைமரங்கள் நெருங்கி நிற்பதால், கரிய இருளில் பனைமரத்தோடு இருட்டாக இருட்டாக நின்று தாக்குதலைச் செய்யலாம் என்று சொன்னதை மற்றவர்களும் ஆமோதித்தார்கள். கட்டையன் தன்னிடம் இருக்கின்ற மம்பட்டிப் பிடிக் கொட்டனைக் கொண்டுவரவா என்று கேட்டபோது, கொட்டன், பொல்லுகளால் அடித்தால் பெட்டைக் குயிலன் சிலநேரம் பொட்டென்று போனாலும் போய்விடுவான் என்ற பயத்தில் வேண்டாம் என்று சொன்னேன். நாங்கள் நாலு ஆம்பிளையள் அவனைக் கையாலையும் காலாலையும் உழக்கினாலே சவிள் அடி சம்பல் இடியாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் பெட்டைக் குயிலன் விட்ட சேட்டைக்கு அவனுக்கு நல்ல பூசை கொடுக்கவேண்டும் என்பதால், கட்டையனை பெட்டைக் குயிலனின் கவிட்டைக் குறி தப்பாமல் நாலு எத்து எத்தி அடிபட்ட ட்றக் மாதிரிச் சப்பிளிக்கிறதுதான் முக்கியம் என்று சொன்னேன்.   பெட்டைக் குயிலனுக்கு தான் கொழுப்பு முத்திச் செய்த வேலையாலதான் அடிவிழுகுது என்று தெரிந்தாலும் ஆர் அடிக்கிறது என்று தெரியக்கூடாது. எங்களில ஒருத்தனையும் அவன் மட்டுக்கட்டக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும். அதாலை அடிபோடும்போது ஒரு சொல்லுத்தன்னும் கதைக்காமல் நாங்கள் உசாராக இருக்கவேண்டும் என்று சொன்னேன்.

அரை மணித்தியாலமாக பல்வேறு உத்திகளையும் அலசிய பின்னர் திட்டத்தை இவ்வாறாகச் செய்யலாம் என்று நாலுபேரும் உடன்பட்டோம்.  கல்லுரோட்டுப் பக்கத்தால் வரும் பாதை வளைவதற்கு முன்னால் சொக்கியும், புக்கையரும் பாதையின் இருபக்கமும் உள்ள பனை மரங்களின் பின்னால் சத்தம் சலாரில்லாமல் ஒளித்திருக்கவேண்டும். வளைவில் இருந்து வெட்டைப் பக்கமாக வரும் பாதையின் இரு பக்கத்தில் கட்டையனும் நானும் பனைகளுக்கு பின்னால்  பதுங்கியிருக்கவேண்டும். பெட்டைக் குயிலன் வளைவில் வர அவனுக்கு பின் பக்கமாக நிற்கும் புக்கையர் முதலில் ஓடிவந்து பெட்டைக் குயிலனின் கும்பத்தில் பாய்ந்து அவனை நிலத்தில் தடாலடியாக விழுத்தவேண்டும்.  பெட்டைக் குயிலன் நிலைகுலைந்த கணத்தில் சொக்கி ஓடிவந்து அவனின் கைகளைப் பின்பக்கமாக வளைத்து இறுக்கி பூட்டுப்போட்டு, அவனைத் திமிறாமல் பார்க்கவேண்டும்.  நிலத்தில பெட்டைக் குயிலன் விழுந்து கிடக்கிற நேரத்தில கட்டையன் ஓடிவந்து பெட்டைக் குயிலனின் கவிட்டைக் காலால் பதம் பார்க்கவேண்டும். நான் பெட்டைக் குயிலனின் நெஞ்சிலையும் முகத்திலையும் ஓங்கிக் குத்தி அவனின் சொண்டை உடைத்து, பல்லை நொருக்கி, சொத்தையையும் வீங்கச் செய்யவேண்டும். இதெல்லாம் இரண்டு நிமிடங்களுக்குள் முடிக்கவேண்டும். அதிரடியான இருட்டடியை முடித்துக்கொண்டு, வேறு ஆட்கள் வரமுன்னர் நாங்கள் நாலுபேரும் பிரிந்து ஓடி முங்கியன் தோட்டத்து தண்ணித்தொட்டியடியில சந்திக்கவேண்டும். சிக்கல்கள், குழறுபடிகள் எதுவும் வராத மிகவும் தெளிவான திட்டத்தை போட்டதில் மனதில் பெருமிதம் குடிகொண்டது.

நேரம் நிறைய இருந்ததால் தாக்குதல் ஒத்திகை பார்க்க முங்கியன் தோட்டத்திற்கு கல்லுரோட்டில் ஏறி, கிழக்குப் பக்கமாகத் திரும்பும் எருக்கலை, பாவட்டை, ஆமணக்குகளால் நிறைந்த பத்தைகளைக் கூறுபோடும் ஒற்றையடிப் பாதையூடாகப் போனோம்.  முங்கியன் தோட்டம் குத்தினால் ஏற்பேத்தும் கறள்பிடித்த முள்ளுக்கம்பிகளாலும், பட்ட இடத்தைக் குத்திக் கிழிக்கும் முள்ளுகளைக் கொண்ட கிளுவைகளாலும், மூரி மட்டைகளால்  அடைக்கப்பட்ட வேலியாலும் திறமாக அறுக்கை செய்யப்பட்ட பெரியதோட்டமாக இருந்தாலும், நாங்கள் களவாகப் போய்ப் புழங்க இடையிடையே பொட்டுக்களை பிரிச்சு வைத்திருந்தோம்.  பிரிச்ச பொட்டு ஒன்றுக்குள்ளால் உள்ளே புகுந்து, தோட்டவேலியோடு  பத்தையாக வளர்ந்திருந்த நாயுருவி, கூப்பிட்டுகுத்தி, காவிளாய்ச் செடிகளை விலத்தி பெரிய வாய்க்கால் பாதையூடாக தண்ணித்தொட்டியடிக்குப் போனோம். 

முங்கியன் தோட்டத்தில் அழுக்கணவன் பூச்சிகள் பிடிச்சு கீழ்ப்பக்கமாக இலை சுருட்டிக் கிடந்த மிளகாய்க் கண்டுகளுக்கு கள்ளுமுட்டித் தலையோடு காவல் செய்யும் வெருளியைக் கண்டதும், அதை பெட்டைக் குயிலனாகப் பாவித்து அடிபோடுகின்ற ஒத்திகையைச் செய்யலாம் என்ற யோசனை வந்தது.  வெருளிக்கு முதுகு கிடையாததால் வாய்க்கால் மணலில் நான் நிற்க புக்கையர் எனக்குப் பின்பக்கமாக ஓடிவந்து என்னைக் கீழே விழுத்துவது முதலாவது ஒத்திகையாக இருந்தது. நான் கீழே விழாமல் இருக்க அகட்டிய கால்களை இறுக்கமாக நிலத்தில் ஊண்டியபடி நின்றேன். புக்கையர் வேகமாக ஓடிவந்து ஒரு பண்டிக்குட்டி மாதிரி எனது முதுகில் ஏறியபோது, அவனது பாரம் தாங்கமுடியாமல் முகம் குப்புற வாய்க்கால் மணலில் விழுந்தேன். வாயெல்லாம் வாய்க்கால் மண் போய்விட்டது. ஏதோ பழைய கறளை வைத்து புக்கையர் என்னை வேண்டுமென்றே விழுத்திவிட்டான் என்று சரியான கோபம் வந்தாலும், ஒத்திகை ஒழுங்காக இருந்ததால் பொறுத்துக்கொண்டேன். 

அடுத்ததாக கட்டையனை கவிட்டைப் பொத்தி அடிக்க தயாராகச் சொன்னேன். அவனும் அதிவேகமாக எனது இடுப்புப் பிரதேசத்தை நோக்கிக் காலை வளைத்து சுழற்றமுனைந்தான். அவனைச் சரமாரியாக வாய்க்குவந்தபடி தூஷணத்தால் அர்ச்சித்து திட்டியபடி வெருளியின் கவிட்டுக்கு உதைக்கச் சொன்னேன். கட்டையன் வலுவேகமாக ஓடிப்போய் வெருளிக்கு ஒரு உதைவிட்டான். அந்த உதையில் வெருளியின் தலையாக இருந்து கள்ளுமுட்டி நிலத்தில் விழுந்து சிதிலமாக உடைந்து சிதறியது.  விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் கதை சொல்லிய பின்னர் கேட்கின்ற கேள்விக்கு விக்கிரமாதித்தன் விடை தெரிந்தும் சொல்லாமல்  மெளனம் சாதித்தால் அவன் தலையும் வெருளியின் முட்டித்தலை மாதிரி சுக்குநூறாக இப்படித்தான் வெடித்திருக்கும் என்று பட்டது.

கைகளை முறுக்கிப் பூட்டுப் போடுவது தனக்கு வடிவாகச் செய்யத் தெரியும் என்றும், தான் வீட்டில் தமையன்மாரை அடிக்கடி பூட்டுப்போட்டு மடக்கிறானென்று சொக்கி சொன்னதால் பூட்டுப்போடும் ஒத்திகை தேவையில்லை என்று விட்டுவிட்டோம்.  நானும் என் பங்குக்கு எனக்கு இடக்கைக் பழக்கம் என்பதால், என்ரை கை ஓங்குவதை எதிராளி பார்க்கமுன்னரே கன்னத்திலும், தோள்மூட்டிலும் உரமான குத்துவிட்டு கொழுக்கட்டை மாதிரி வீங்கச் செய்யமுடியும் என்று சொன்னேன். ஏற்கனவே முன்னர் ஒருக்கால் த்றீ, நோட், ஃபோர் காட்ஸ் விளையாடும்போது அளாப்பியதால் புக்கையருக்குக் குடுத்த குடுவையை ஞாபகப்படுத்த, புக்கையரும் நான் கள்ள இடிகள் நல்லாப் போடுவதில் மன்னன் என்று ஒத்துக்கொண்டான். 

நாலு பேரும் சேர்ந்து பெட்டைக் குயிலனுக்கு கும்முற கும்மலில அவன் பிழியப்பட்ட சக்கையாகத்தான் போகிறான் என்ற திருப்தி எல்லோர் முகத்திலும் இழையோடியது.

ஒத்திகை வேகமாக முடிந்ததால் திரும்பவும் குருவியன் வெட்டைக்குப் போய் உதைபந்து விளையாடிவிட்டு வெய்யில் தாண்டு இருட்டுப்படும் கருக்கல் நேரத்தில் எல்லோரும் கலைந்து வீட்டுக்குப் போனோம்.  அம்மா மேச்சலுக்குப் போட்டு வந்த பசுமாட்டில் பாலைக் கறந்து காய்ச்சி ஈயப்பேணியில் விட்டு ஆத்தியபடி இருந்தா.  உலகத்தில என்னதான் நடந்தாலும், ஆறு மணிக்கு அம்மா பால் காய்ச்சுவதும், அதை நானும் அண்ணன், தம்பியும் குடிப்பதும் நடந்துதான் ஆகவேண்டும். தப்பித் தவறி பிந்திப் போனால் அம்மாவின் ஏச்சுப் பேச்சுக்குத் தப்பமுடியாது. எனவே, நல்ல பிள்ளைமாதிரி மேலைக் காலைக் கழுவி, ஆத்தி மிதமான சூட்டிலிருக்கும் பாலை மடக் மடக்கென்று குடித்துவிட்டு, காற்சட்டைக்கு மேல் சாரத்தையும் கட்டிகொண்டு சேர்ட்டும் இல்லாமல் பட்டிக்கு வந்த ஆடு மாதிரி பவ்வியமாக இருந்தேன்.  அம்மா இரவுச்சாப்பாடு செய்வதற்கு தட்டுமூடல், நீத்துப் பெட்டிகளை தேடுவதில் பிராக்காக இருந்தநேரம்,  டக்கென்று சைக்கிளை எடுத்து வேகமாக உருட்டிக் கேற்றைத் தாண்டியதும் பாய்ந்தேறி பெடலை உழக்கிக் கொண்டு குருவியன் வெட்டைக்குப் பறந்தேன். தப்பித் தவறிச் சுணங்கிப் போனால் மற்றவர்கள் திட்டத்தை மாற்றிக் குழப்பக்கூடும் என்பதால் முதலில் நானே போகவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

- தொடரும் -

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.