Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படுபயங்கரமாக ரெக்கி எல்லாம் எடுத்திருக்கிறீங்கள்..... கடைசி வரைக்கும் பெட்டைக்குயிலனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என்று மனம் கவலைப்பட்டுப்போச்சு கிருமி. இயல்பான சுபாவத்தால் இயற்கையால் மாறுபட்ட குண அம்சங்களைக் கொண்டவர்கள் சமூகவெளியில் நிறையவே மனக்காயங்களை அடைந்து கொண்டிருப்பவர்கள் எனக்கு ஏனோ நீங்கள் ஆரம்பத்திலிருந்து பெட்டைக்குயிலனை தாக்கவேண்டும் என்று கதைப்படுத்திக் கொண்டு செல்லும்போதே என்னை அறியாமலே பெட்டைக்குயிலனுக்காக மனம் கவலை கொள்ளத் தொடங்கிவிட்டது. ஒன்று உங்களுடைய எழுத்தின் தன்மை மற்றது சராசரி இயல்பிழந்த கதாப்பாத்திரம் இவை இரண்டும் பெரும் தாக்கத்தை எனக்குள் கொடுத்து விட்டது கிருமி; நல்ல பதிவு.

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடியெண்டாலும் கட்டையன் ஒரு அப்பாவியை போட்டு இப்பிடி அடித்திருக்கக்கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Paanch said:

கதை... கற்பனை ஆகட்டும், நிகழ்வு ஆகட்டும், கதையைக்கொண்டு கதை வடிப்பவரின் உள்ளத்தைப் புரிந்து கொள்ளலாம். இங்கு கதை முடிவு கிருபனின் பண்பை வெளிப்படுத்துகிறது. 

பாஞ்ச் ஐயா, கதையின் முடிவை வைத்துத்தான் மற்றவற்றைப் பின்னினேன்.

படித்துக் கருத்துக் கூறியமைக்கு நன்றிகள்.

20 hours ago, ஈழப்பிரியன் said:

கிருபன் நாங்கள் படிக்கும் காலத்தில் ரொம்ப ரொம்ப பிரபலமாக இருந்த ஒரு சொல்.

இங்கே கே என்ற சொல்லை தாங்க முடியாதவர்கள் அந்த நேரமே இவைகளுக்கு பெயர் போனவர்கள் இருந்தார்கள் என்றால் நம்பவா போகிறார்கள்.  

கடைசியில் பெட்டைக் குயிலன் செத்தான் என்று பார்த்தா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறீர்கள்.

என்ன செய்வது! விதி அப்படி ஆகிவிட்டது?

19 hours ago, வாத்தியார் said:

இருட்டடி வர்ணனை அருமையாக இருந்தது.
இருந்தாலும் அடித்தவனுக்கு அடி வாங்கியதற்கான காரணம் தெரியவில்லை .
அவன் எப்படித் திருந்துவான்.
உண்மையிலேயே கிருபனின் சுபாவம் இது தான் என்று நினைக்கின்றேன்  
அதற்காகச் சொத்தையென்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை.

அவனுக்காகப் பரிதாபப்பட்ட கிருபனாவது  குரலை மாத்தி அவனுக்கு அவன் செய்த பிழையை சுட்டிக்காட்டியிருக்கலாம்.
அதன் பிறகு பெட்டைக் குயிலான் திருந்தியிருக்கலாம்
இருட்டடிக்குப் பின்னர் அவனின் நிலைமை தெளிவில்லை.

ஆனால் இங்கு  இருட்டடிதான் பிரதான விடயம் என்பதால் இவற்றை விட்டு  விடலாம்

பெட்டைக் குயிலன் திருந்துவதை விட திட்டம் எப்படி பிசகியது என்பதைத்தான் கதையின் கருவாக எடுத்திருந்தேன். மிச்சம் உங்கள் கற்பனைக்கே!

வாசித்துக் கருத்துக் கூறியமைக்கு நன்றிகள் வாத்தியார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டைக் குயிலனுக்கு தானும் அடித்தேன் என்டு கிருபன் எழுதியிருந்தால் அது உண்மையுடன் சேர்ந்த கற்பனை கதையாகத் தான் இருந்திருக்கும்..."எனக்கு எழுதத் தெரியாது என்டு சொல்லிப் போட்டு" எழுத கிருபனால் மட்டுமே முடியும்.:101_point_up:

Link to comment
Share on other sites

கதை அருமை . திட்டமிடல் எல்லாம் பெரியளவில் இருந்தது, இந்த விசயத்திற்கு இவ்வள திட்டமிடல் அவசியம் தானா என்று நினைக்கையில் முடிவில் |ஏற்பட்ட திருபம் பதிலாக இருந்தது. ஒருவன் எம்மை அடித்து விட்டால் அதற்கான பாதிலடி|யும் வன்மமும் எமது நல்ல பக்கங்களை மறைத்து விடுகின்ற|து. அதை உண|ரும் தருணம் காலம் கடந்து விடுகின்றது, பெட்டைக்குயிலனுக்\கு அடி மாதிரி பல இடங்களில் எமக்|கு துயரங்கள். முடிவு  அருமை. குயிலனை விட வலி உங்களுக்க அதிகம். பல இடத்தில் எங்க|ளுக்கும் இந்த நிலைமை தான். 

Link to comment
Share on other sites

சிறந்த முறையில் திட்டமிட்டு எழுதியிருக்கிறியள், வாழ்த்துக்கள். ரசித்து வாசித்தேன். பெட்டைக்குயிலனுக்கு அடி விழும் என நான் நினைத்திருக்கவில்லை, வேறு பலரும் அதைத்தான் கூறியிருக்கிறார்கள். பெரும் திட்டமிடலுடன் நடந்த தாக்குதல் பிசுபிசுத்துப் போகும் என்ற வாசகனின் எதிர்பார்ப்புக்கு நேர்மறையான முடிவை தந்தது உங்களின் கதையின் உச்சப்புள்ளி.வாசிக்கும் எமக்கும் தாக்குதலில் ஈடுபட்ட உங்கள்  நண்பர்களின் பார்வையிலும் தாக்குதல் வெற்றி, அவரவர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை சரியாக முடித்திருந்தார்கள் ஆனால் உங்களது பார்வையில் திட்டம் தோல்வி.

"சாப்பாடு தேடுவது" - கனகாலத்தின் பின்னர் வாயினுள் புகுந்து புன்னகையாக வெளியேறிய சொல். வடமராட்டிசியில் பரவலாக பாவிக்கப்பட்டாலும் ஏனைய யாழ்குடாவின் பகுதிகளில் பாவிக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

கிருபன், கதை வாசிப்பதற்கு விறுவிறுப்பாய் இருந்தது. எனக்கு சகாறா அக்கா கூறியதுபோல் பெட்டைகுயிலன் மீது அனுதாபமே ஏற்பட்டது. இப்போது பெட்டைகுயிலன் எப்படி, எங்கே இருக்கிறார் என்று அறிந்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

 செம்பகத்தின் அலகுக்குள் அகப்பட்டு உயிரைவிடப் போகும் மசுக்குட்டியைப் போல நெளிந்துகொண்டு, 

இந்தக் கதைக்கும் சம்பவத்துக்கும் ஏற்ற பொருத்தமான உவமை. ஒரு கிராமத்துக்குள் பனங் கூடல்களுக்குள் கும்மாளம் இடுபவர்களுக்குத்தான் இந்த உவமைகள் வசப்படும்....!  tw_blush:

இந்த உவமையை எடுத்துவிடுவோமா என்று பலதடவை நினைத்தேன். ஆனால் செம்பகம் மசுக்குட்டி விருந்து சாப்பிடுவதை நீக்கிவிடமுடியவில்லை.?

பனங்கூடல்களும் தோட்டவெளிகளும் புரண்டுபடுத்த இடங்கள்!

 

20 hours ago, putthan said:

கிருபன் கதை அந்தமாதிரியிருக்கு.....ஈழப்பிரியன் கே.கே என்ற சொல்லை தாங்குவினமோ:10_wink:

நன்றி புத்தன் ஐயா! படத்தைப் பார்த்த பின்னரும் அண்ணை என்று சொல்ல வருகுதில்லை?

மே.கே. மாதிரியான சொற்கள் இப்பவும் புழக்கத்தில் இருக்குத்தானே.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

 

 

நன்றி புத்தன் ஐயா! படத்தைப் பார்த்த பின்னரும் அண்ணை என்று சொல்ல வருகுதில்லை?

மே.கே. மாதிரியான சொற்கள் இப்பவும் புழக்கத்தில் இருக்குத்தானே.?

உதுக்கு தான் கந்தப்பு சொன்னவர் மேல காட்டதையுங்கோ கீழ காட்டுங்கோ என்று....தப்பு பண்ணிப்போட்டனோ?:rolleyes:அது சரி மே கே என்றால் என்ன? மெகா....கே யோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை முடித்த விதம் நன்றாக இருந்தது. விசரங்கள் அடிக்காமல் விட்டிட்டு ஓடப்போறாங்கள் என்று பதட்டமாயுமிருந்துது வாசித்து முடியும் மட்டும். பச்சை இல்லைப் போட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2017 at 11:00 AM, புங்கையூரன் said:

கதாசிரியன் ஒருவன்.....கதையாக மாறிய கதை போல உள்ளது!

கிருபன் நீங்கள் மிகவும் மென்மையான மனம் படைத்தவராக இருக்க வேண்டும்!

உங்கள் கதையின் மொழி நடையும், அதில் வந்து விழுந்த நாட்டுச் சொற்களும் எம்மை விசாப் பிரச்சனை இல்லாமலே ஊருக்கு ஒரு முறை அழைத்துச் சென்று விட்டன!

கூப்பிட்டுக் குத்தி....நான் கேள்வியே பட்டிராத வார்த்தை!

ஒரு வேளை நான் வளர்ந்த இடங்களில் .....வளர்ந்த செடி கொடிகள் எல்லாமே மிகவும் நல்லவை போல இருக்கின்றது!

ஆனால் என்ன காரணத்தாலோ...எனக்கு இந்தப் பெயர் நன்றாகப் பிடித்துப் போய் விட்டது!

ஒரு வேளை ...நல்ல வடிவான பூவாய்ப் பூத்து...அதை ஆசையாய்..பிடுங்கப் போகும் போது முள்ளுக் குத்தி விடுமோ..?

பல பெண்களுக்கும் இது பொருந்தும் போல உள்ளது!:cool:

புங்கை அண்ணா, நான் விளாம்பழக் கதை சொல்லித்தான் வாழ்க்கையே ஆரம்பித்தேன்!:cool:

கதையில் சில ஊர் வழக்குகளையும் எங்கள் பிரதேசத்துக்கேயுரிய தனித்துவமான சொற்களையும் கவனமாகப் புகுத்தியது உண்மைதான். ஆனால் பலவற்றை நினைவுக்குக் கொண்டுவர நேரம் எடுத்தது. ஒவ்வொருநாளும் 3 - 4 மணித்தியாலம் காரில் வேலைக்குப் போகவருவதால் சொற்களை நினைவுபடுத்த முடிந்தது.

கூப்பிட்டுக் குத்தி என்று நாங்கள் சொல்வது ஊரில் பரவலாக தோட்டங்களில் இருக்கும். நீங்கள் வேறு பெயரில் அறிந்திருக்கலாம். படம் தேடித்தான் எடுக்கவேண்டும்.

On 3/30/2017 at 11:29 AM, விசுகு said:

வணக்கம்  கிருபன் ஐயா

கதாயாசிரியராக வெளி  வந்திருக்கின்றீர்கள்

வாழ்த்துக்கள்..

ஒரு வாசகனாக பெரிய  கதைகள்

தொடர்கள்

விபரித்தல் போன்றவற்றில் நாட்டமில்லை

இன்றைய உலக ஒழுங்கு அதற்கு இடம் தரவில்லையோ என்னவோ...

உங்களுடைய  கதையையும் சில இடங்களில்  (பந்தி) தாவி  தாவித்தான் வாசித்தேன்

கதையை  சொல்லு

முடி என்பது எனது பாணி

யாரும்  எதையாவது என்னிடம் சொல்ல வந்தால் கூட இழுக்க விடமாட்டேன்

நேரே விசயத்துக்கு வா என்று தான் சொல்வேன்

ஆனால் உங்களுடைய  கதையில் பல எமது தாயக விடயங்களை  கொண்டு வந்தீர்கள்

அதை பலரும் ரசித்தார்கள்

நான் மீண்டும்  ஒருமுறை திருப்பி அவற்றை வாசிக்கும் அளவுக்கு அவை பேசப்பட்டன

வாழ்த்துக்கள்

நமக்கு நேரமிருக்கோ

வாசிக்கின்றோமா என்பதைவிட

அவை பேசப்படணும்

மீள மக்கள் முன் வைக்கப்படணும்

உலா வரணும்.

 

கதையின்படி திட்டம் போடுவது இலகு

ஆனால் செயல் என்று வரும் போது ..??

நன்றி  ஐயா.

நன்றிகள் விசுகு ஐயா.

உலகம் அவசரமாக ஓடினாலும், கதையை ஒரு வரியில் சொல்லமுடியாது. அது வெறும் சம்பவத்தைச் சொல்லுவதாகத்தான் முடியும்.

விபரிப்பு, சித்தரிப்பு எல்லாம் கதைக்கு வேண்டுமென்று பெரும் பெரும் கதையாசிரியர்கள் சொல்லுகின்றார்கள். அதனால் ஒரு சிறு சம்பவத்தை கதையாக்க முயற்சித்தேன். படிக்க 1000 பக்கங்கள் தாண்டிய புத்தகங்கள் 20க்கு மேல் உள்ளன. அதைவிட இன்னும் 100 புத்தகங்கள் உள்ளன. எனவே அவையெல்லாவற்றையும் படிப்பதுதான் இனிப் பொழுதுபோக்கு!!

ஜெயமோகன் சித்தரிப்பைச் பற்றி குறிப்பிட்டதை கீழே தருகின்றேன். நீங்கள் எழுதும் விடயங்களையும் சுவாரசியமான கதைகளாக மாற்றலாம் :)

இதையெல்லாம் மனதில்கொண்டு நான் கதையை எழுதவில்லை!!!

 

 

Quote

 

சிறுகதைகள் எழுதத் தொடங்குபவர்கள் முதலில் செய்யும் தவறு என்ன? சொல்ல உத்தேசிப்பதை சுருக்கமாகச் சொல்வதுதான். அதாவது நேரில் பேசினால் சொல்வது போல சொல்வது. அது சிறுகதைக்குப் போதாது. ஏன்?

”நேற்று காலையில் சாலையில் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டேன். கையில் நல்ல அடி. அப்போது சாலையில் யாருமே இல்லை. மழைவேறு பெய்தது. அதனால் வண்டியின் என்ணைப் பார்க்க முடியவில்லை. ” இப்படி நடந்த விஷயத்தை சுருக்கமாகச் சொல்லலாம். இப்படித்தான் நாம் சாதாரணமாகப் பேசுவோம். நடந்ததை பிறருக்கு ‘தெரிவிக்க’ இது போதும்.

ஆனால் இலக்கியம் நடந்ததை தெரிவித்தால் போதாது. நடந்த நிகழ்ச்சியை வாசிப்பவருக்கு ‘அனுபவமாக’ ஆக்க வேண்டும். அவரும் தனக்கு உண்மையில் நிகழ்ந்தது போல அதை உணரவேண்டும். அதற்குத்தான் ‘சித்தரிப்பு ‘ தேவையாகிறது.

”காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை. சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்பரப்பை மூடியிருந்தது. கார்களின் ஹெட்லைட் ஒளிகள் நீரின் அடியில்தெரிவதுபோல கலங்கி தெரிந்து தாண்டி மறைந்துகொண்டிருந்தன. நான் இருபக்கமும் பார்த்தேன், வண்டிகள் வரும் ஒலி கேட்கவில்லை. என் மனதில் காலைநேரக் கவலைகள். ஆபீஸில் ஒரு சின்ன நிதிச்சிக்கல். ஒரு தைரியத்தில் சட்டென்று சாலையைக் கடந்தென்.யாரோ கையை ஓங்கி தட்டுவது போலிருந்தது. சுழன்று விழுந்தேன். ஒரு கார் என்னைத்தாண்டிச் சென்றது. அதன் பின் விளக்குகளின் சிவப்பு சீறிசீறி அணைவதை மட்டும்தான் கண்டேன். ஒரு கணம் என் மனதில் எதுவுமே இல்லை. என்ன நடந்தது என்பது பொழுதுவிடிவது போல மெல்லத்தான் தெளிவாகியது. ஆபீஸ¤க்கு நேரமாகிவிடுமே என்ற எண்ணமும் கையில் வலியும் சேர்ந்தே எழுந்தன….”

இது ஒரு கதையின் தொடக்கமாக அமையலாம். வேறுபாட்டை கவனித்திருப்பீர்கள். என்னென்ன சிறப்பம்சம்ங்கள் இரண்டாவது சித்தரிப்பில் உள்ளன?

முக்கியமாக இரண்டு. 1. காட்சி விவரிப்பு 2. உள்ள விவரிப்பு.

”காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை. சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்பரப்பை மூடியிருந்தது. கார்களின் ஹெட்லைட் ஒளிகள் நீரின் அடியில்தெரிவதுபோல கலங்கி தெரிந்து தாண்டி மறைந்துகொண்டிருந்தன” — இது காட்சி விவரிப்பு. துல்லியமான தகவல்கள் மூலம் அந்த சாலையை அப்படியே வாசகனின் கற்பனையில் எழுப்ப முயலப்பட்டுள்ளது.

இந்த காட்சி விவரிப்பில் இரு கூறுகள் உள்ளன. அ.. தகவல், ஆ. உவமை முதலிய அணிகள்

”காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை.” ” வண்டிகள் வரும் ஒலி கேட்கவில்லை. ” இது தகவல். நுட்பமான தகவல்கள் ஒரு கதையை நம் கண்முன் நிறுத்துபவை.

”சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்பரப்பை மூடியிருந்தது. கார்களின் ஹெட்லைட் ஒளிகள் நீரின் அடியில்தெரிவதுபோல கலங்கி தெரிந்து தாண்டி மறைந்துகொண்டிருந்தன” — இவை இரண்டும் உவமைகள். உவமைகள், உருவகங்கள் மூலம் காட்சிகளை மேலும் துல்லியமாக வாசகனின் கற்பனையில் எழுப்பலாம். இன்றும் சிறந்த கதைகளில் இத்தகைய அணிகளுக்கு பெரிய இடமிருப்பதைக் காணலாம்.

பொதுவாக வழக்கமான உவமைகளை பயன்படுத்தக் கூடாது. அவை எந்த வாசகனில் விளைவையும் ஏற்படுத்தாது. வெறும் அலங்காரமாகவே நின்றுவிடும். புதிய உவமைகள் வாசகனின் கற்பனையை தூண்டும்.

சித்தரிப்பில் இரண்டாவது கூறு ,உள்ளம் செயல்படுவதைச் சொல்வது. பெரும்பாலும் மையக்கதாபாத்திரத்தின் மனத்தை சித்த்ரிப்பது வழக்கம். ஒன்றுக்குமேல் மனங்களை சித்தரிக்க ஆரம்பித்தால் கதையின் ஒருமை இல்லாமலாகும்.

மனதையும் இருவகையில் சித்தரிக்கலாம். அ.நேரடியாக ஆ. அணிகல் மூலம். ”என் மனதில் காலைநேரக் கவலைகள்.” இது நேரடியான உள்ளச் சித்தரிப்பு ”என்ன நடந்தது என்பது பொழுதுவிடிவது போல மெல்லத்தான் தெளிவாகியது. ” இது உவமை அணி.

காட்சி சித்தரிப்பு புற உலகை காட்டுகிறது. உள்ளச் சித்தரிப்பு அக உலகைக் காட்டுகிறது. இவை இரண்டையும் மாறிமாறி தேவைக்கேற்ப பிணைத்து புனையும்போது கதையின் அனுபவம் உண்மையாகவே வாசகனுக்குள் நிகழ்கிறது.


 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையைப் படித்தவர்களுக்கும், கருத்துகளைக் கூறியவர்களுக்கும், விருப்பப்புள்ளிகளை இட்டவர்களுக்கும் நன்றிகள்.

ஒரு பிற்சேர்க்கையை (கதையாக இல்லை) பின்னர் எழுதுகின்றேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/03/2017 at 11:58 AM, முனிவர் ஜீ said:

கிருபன் இன்னும் நீட்டியிருந்தால்  என்று கேட்கிறது மனது  ஆயிரம் பச்சைகள்  உங்களுக்கு  தொடரட்டும்  கதைகள் :97_raised_hand:

ஏற்கனவே நீட்டி முழக்கிவிட்டேன் என்று நினைக்கின்றேன் முனி! 

On 30/03/2017 at 2:42 PM, வல்வை சகாறா said:

படுபயங்கரமாக ரெக்கி எல்லாம் எடுத்திருக்கிறீங்கள்..... கடைசி வரைக்கும் பெட்டைக்குயிலனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என்று மனம் கவலைப்பட்டுப்போச்சு கிருமி. இயல்பான சுபாவத்தால் இயற்கையால் மாறுபட்ட குண அம்சங்களைக் கொண்டவர்கள் சமூகவெளியில் நிறையவே மனக்காயங்களை அடைந்து கொண்டிருப்பவர்கள் எனக்கு ஏனோ நீங்கள் ஆரம்பத்திலிருந்து பெட்டைக்குயிலனை தாக்கவேண்டும் என்று கதைப்படுத்திக் கொண்டு செல்லும்போதே என்னை அறியாமலே பெட்டைக்குயிலனுக்காக மனம் கவலை கொள்ளத் தொடங்கிவிட்டது. ஒன்று உங்களுடைய எழுத்தின் தன்மை மற்றது சராசரி இயல்பிழந்த கதாப்பாத்திரம் இவை இரண்டும் பெரும் தாக்கத்தை எனக்குள் கொடுத்து விட்டது கிருமி; நல்ல பதிவு.

அடிக்கடி பெட்டை என்ற வார்த்தையை உபயோகித்தால் அனுதாபம் வரும்தானே.. ஆனால் பதின்ம வயதில் "மெலியாரைத் தண்டித்தல்" பெரிய பிரச்சினைகளாகத் தெரிவதில்லைத்தானே.

ரெக்கி எடுத்ததெல்லாம் பெட்டைகளைப் பார்க்கமட்டும்தான்?

On 30/03/2017 at 5:13 PM, வாதவூரான் said:

எப்பிடியெண்டாலும் கட்டையன் ஒரு அப்பாவியை போட்டு இப்பிடி அடித்திருக்கக்கூடாது

அப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனால் அடிபோடாமல் கதையை முடித்தால் சப்பென்று போயிருக்கும்?

On 30/03/2017 at 7:22 PM, ரதி said:

பெட்டைக் குயிலனுக்கு தானும் அடித்தேன் என்டு கிருபன் எழுதியிருந்தால் அது உண்மையுடன் சேர்ந்த கற்பனை கதையாகத் தான் இருந்திருக்கும்..."எனக்கு எழுதத் தெரியாது என்டு சொல்லிப் போட்டு" எழுத கிருபனால் மட்டுமே முடியும்.:101_point_up:

தெரியாத விடயங்களைத் தெரிந்தமாதிரி காட்டுவதில் நான் ஒரு விண்ணன் என்று நண்பர்கள் சிலர் அப்பவே கண்டுபிடித்துச் சொலிவிட்டார்கள்?

அதனால் நானும் அடித்தேன் என்று கதைவிடமுடியவில்லை?

On 31/03/2017 at 5:55 AM, கலைஞன் said:

கிருபன், கதை வாசிப்பதற்கு விறுவிறுப்பாய் இருந்தது. எனக்கு சகாறா அக்கா கூறியதுபோல் பெட்டைகுயிலன் மீது அனுதாபமே ஏற்பட்டது. இப்போது பெட்டைகுயிலன் எப்படி, எங்கே இருக்கிறார் என்று அறிந்தீர்களா?

மென்மையானவர்களுக்கு அனுதாபம் வரும்தானே!

அவரைப் பற்றித் தெரியாது. ஆனால் எங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார் என்றே நினைக்கின்றேன்.

22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதையை முடித்த விதம் நன்றாக இருந்தது. விசரங்கள் அடிக்காமல் விட்டிட்டு ஓடப்போறாங்கள் என்று பதட்டமாயுமிருந்துது வாசித்து முடியும் மட்டும். பச்சை இல்லைப் போட.

கதையின் முடிவில்தான் திருப்பத்தைக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பதட்டம் வருமளவிற்கு எழுதியதாய் நினைக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/03/2017 at 11:27 PM, சண்டமாருதன் said:

கதை அருமை . திட்டமிடல் எல்லாம் பெரியளவில் இருந்தது, இந்த விசயத்திற்கு இவ்வள திட்டமிடல் அவசியம் தானா என்று நினைக்கையில் முடிவில் |ஏற்பட்ட திருபம் பதிலாக இருந்தது. ஒருவன் எம்மை அடித்து விட்டால் அதற்கான பாதிலடி|யும் வன்மமும் எமது நல்ல பக்கங்களை மறைத்து விடுகின்ற|து. அதை உண|ரும் தருணம் காலம் கடந்து விடுகின்றது, பெட்டைக்குயிலனுக்\கு அடி மாதிரி பல இடங்களில் எமக்|கு துயரங்கள். முடிவு  அருமை. குயிலனை விட வலி உங்களுக்க அதிகம். பல இடத்தில் எங்க|ளுக்கும் இந்த நிலைமை தான். 

திட்டம் இல்லாமல்தான் கதையை முன்னர் எழுதி வைத்திருந்தேன். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு திரும்ப எடுத்து வாசித்தபோது கதையில் சுவாரசியம் இல்லாமல் இருந்தது. அதனால் சேர்த்துவிட்டேன்.

பாராட்டுக்களுக்கு நன்றிகள் சண்டமாருதன் (சுகன்)

 

On 31/03/2017 at 1:19 AM, Thumpalayan said:

சிறந்த முறையில் திட்டமிட்டு எழுதியிருக்கிறியள், வாழ்த்துக்கள். ரசித்து வாசித்தேன். பெட்டைக்குயிலனுக்கு அடி விழும் என நான் நினைத்திருக்கவில்லை, வேறு பலரும் அதைத்தான் கூறியிருக்கிறார்கள். பெரும் திட்டமிடலுடன் நடந்த தாக்குதல் பிசுபிசுத்துப் போகும் என்ற வாசகனின் எதிர்பார்ப்புக்கு நேர்மறையான முடிவை தந்தது உங்களின் கதையின் உச்சப்புள்ளி.வாசிக்கும் எமக்கும் தாக்குதலில் ஈடுபட்ட உங்கள்  நண்பர்களின் பார்வையிலும் தாக்குதல் வெற்றி, அவரவர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை சரியாக முடித்திருந்தார்கள் ஆனால் உங்களது பார்வையில் திட்டம் தோல்வி.

"சாப்பாடு தேடுவது" - கனகாலத்தின் பின்னர் வாயினுள் புகுந்து புன்னகையாக வெளியேறிய சொல். வடமராட்டிசியில் பரவலாக பாவிக்கப்பட்டாலும் ஏனைய யாழ்குடாவின் பகுதிகளில் பாவிக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை.

நன்றி தும்பளையான். திட்டம் போட்டுச் செய்வதெல்லாம் எப்போதும் பிழைக்கக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு இருப்பதனால் முடிவை ஊகிக்கக்கூடாது என்பதில் கவனம் எடுத்திருந்தேன்?

எனக்கு வடமராட்சியைத் தவிர வேறு இடங்கள் தெரியாது. 87 இல் தென்மராட்சிக்கு ஒருமாதம் இடம்பெயர்ந்திருந்தபோதுதான் எங்கள் வட்டாரமொழி வேறானது என்று புரிந்தது?

Link to comment
Share on other sites

இறந்த காலம் என்று சொல்வார்கள். ஆனால் இறந்த காலத்தை உயிரோடு நிகழ்காலத்தில் கொண்டுவந்தது காட்டியது இருட்டடி. மரம் செடி கொடிகளின் அழகான பெயர்களை தமிழில் சொல்ல வாய் இனிக்கிறது.:) 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிற்சேர்க்கை:

பெட்டைக் குயிலன் (உண்மையான பெயர் வேறு) ஒரு பொடியனுக்கு சேட்டை விட்டது உண்மைதான். அன்று பின்னேரம் அவன் திரும்பி வர நாங்கள் நாலு பேர் மறிச்சு அடிக்கவெளிக்கிட்டதும் உண்மைதான். ஆனால் 'சொக்கி' பிடிக்க கட்டையன் தன் கண்ணை சேர்ட்டால் சுத்திக் கட்டி மறைத்து குருடன் பெண்டாட்டிக்கு அடித்தமாதிரி அடித்ததைத் தவிர வேறு ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை.  அதனால் பெரிய அடிகள் ஒன்றும் விழவில்லை!

நான் ஒரு அடிகூட கொடுக்கமுடியாமல் தடுமாறிப்போனது உண்மை. ஆனால் காரணம் என்னவென்று இன்றுவரை பிடிபடவில்லை!

பெட்டைக் குயிலனை அடுத்த நாளே பார்த்தோம். ஆனால் வெட்டைக்குள்ளால் வராமல் கல்லுரோட்டால் சுத்திப் போனான். அதுதான் எங்களுக்கு கிடைத்த வெற்றி புளுகிக்கொண்டோம்!

கட்டையன் இப்போது உயிரோடு இல்லை. ஏதோ காரணத்திற்காக தற்கொலை செய்துவிட்டான். கதையில் வந்த மற்றவர்கள் (புனைபெயர்கள்) எல்லாம் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

நான் ஒரு அடிகூட கொடுக்கமுடியாமல் தடுமாறிப்போனது உண்மை. ஆனால் காரணம் என்னவென்று இன்றுவரை பிடிபடவில்லை                                                                                                                  

 

கிராமிய மணம் தலைமைத்தவத்தின் பண்பு (நேரம்பிந்தாது போதல்) மொத்தப்புத்தகங்களைப்படித்து விளங்காத இஸங்களைபேசுதல் பலவகை மரங்கள் செடிகளென ஒரு கிராமத்தை உலவவிட்டு சுவையாக் கதையைநகர்த்திச் சென்றமை அழகு. வாழ்த்துகள். இளமைக்காலங்களை மீட்டுச்செல்கிறது.  ஒருமனம் அடியென்னும் ஒருமனம் அதை தடுக்கின்ற சூழல்  மனிதத்தின் இயல்பாக  உலகை நகர்த்துகிறது.

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.