Jump to content

யாழ்ப்பாணத்தில், மாடு களவெடுத்த இளைஞனுக்கு... பொது மக்கள், கொடுத்த தண்டனை சரியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien  Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, im Freien und Natur 

உங்கள்... கருத்து  என்ன?  
நேற்று...  நல்லூரில், மாடு களவெடுத்த இளைஞனை.. மனிதநேயமின்றி கட்டி வைத்து... 
அடித்து,  சித்திரவதை செய்த   புகைப்படத்தை  பார்த்த போது, 
இவ்வளவு... சித்திரவதை செய்ய வேண்டுமா? 
:shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான காயங்கள்...தடியினால் அடிக்கப்பட்டதனாலேயே ஏற்பட்டுள்ளன போல உள்ளன!

காலுக்குக் கீழேயும்...கைகளிலும் மட்டுமே காயங்கள் உள்ளன!

என்னைக் கேட்டால்....எனது பதில் சரியென்றே இருக்கும்!

பெடியனைப் பார்க்கக் கஷ்டத்திலை திருடின ஆள் மாதிரி இல்லை!

களவை ஒரு தொழிலாகச் செய்பவர் போல உள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

   

 

உங்கள்... கருத்து  என்ன?  
நேற்று...  நல்லூரில், மாடு களவெடுத்த இளைஞனை.. மனிதநேயமின்றி கட்டி வைத்து... 
அடித்து,  சித்திரவதை செய்த   புகைப்படத்தை  பார்த்த போது, 
இவ்வளவு... சித்திரவதை செய்ய வேண்டுமா? 
:shocked:

பொதுமக்கள் தண்டனை கொடுக்க அவர்கள் என்ன நீதிபதிகளா அல்லது  தேவ தூதர்களா?பிழை என்று தான் எனக்கு படுகுது....மைத்திரிமாமாவின் பொலிஸிடம் பிடிச்சு கொடுத்திருக்கலாம்...

Link to comment
Share on other sites

காவல்துறை வி.புலிகள் சந்தேக நபர்கள் என்றால் பாய்ந்து பாய்ந்து பிடிப்பார்கள்.இப்படியான திருடர்களை கண்டும் காணாமலும் விடுகிறார்கள் போலுள்ளது. மக்களும் திருடர்களின் தொல்லையால் வெறுத்துப் போனார்கள். காவல்துறையில் நம்பிக்கை இல்லாதாலும் ஆத்திரத்தாலும் இனி மேல் இப்படி நடக்காமல் இருக்க ஒரு படிப்பினைக்காக(ஏனைய திருடர்களுக்கு) உடனடி தீர்வாக மக்கள் இதனை செய்திருக்கலாம்.

கும்பலாக வன்புணர்வு செய்தவர்களுக்கே உரிய தீர்வை வழங்காத காவல்துறை இப்படியான கள்வர்களை பிடிப்பதாவது, தண்டிப்பதாவது என்ற மக்களின் எண்ணமே இத்தகைய தண்டனையை மக்கள் எடுக்க தூண்டியது எனலாம்.

மற்றும்படி மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுப்பதில் உடன்பாடில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் ஒரு செய்தி பார்க்க நேர்ந்தது. 
நெஞ்சை ஏதோ செய்தது.

களவின் அளவையோ
அதன் தாக்கத்தையோ 
அந்த அந்த மக்கள் தான் தீர்மானிக்கணும்
ஒருவருக்கு 10 ரூபா பெரிதாகவும்
ஒருவருக்கு பல கோடிகள் சிறிதாகவும் தெரியலாம்.

சட்டம் நீதி தனது கடமையிலிருந்து தவறும் நாட்டில் அல்லது பக்க சார்பாக செயற்படும் நாட்டில் 
அல்லது அரசை நீதியை நம்பி பலமுறை ஏமாந்து போகும் நிலையில் மக்கள் அதிகாரங்களை கையிலெடுப்பது நடைபெறுகிறது. இதை அரசின்மீது அதிகாரங்களின் மீதான தாக்குதலாகத்தான் பார்க்கமுடிகிறது. 
இது எனது ஊரிலேயே தொடங்கிவிட்டது. 
அது தான் நீதியின் பால் அரசின் பால் மக்கள் வைத்திருந்த இறுதி நம்பிக்கை.

அந்த இளைஞனின் படத்தை இங்கு பகிர்வதில் எனக்கு உடன்பாடில்லை
அவன் ஒரு குறியீடு மட்டுமே..

இதன் தொடர்ச்சி
எம்மை அழித்துவிட்டு
எமது மண்ணை அபகரித்துவிட்டு
எமது கலாச்சாரங்களை
இனத்தூய்மையை அழித்துவிட்டு
முகாம்களில் நிம்மதியாக தூங்குபவர்மீது பாயணும்
அப்படி நடந்தால் தான் இந்த உணர்வும் 
இந்த தாக்குதலும் சரியான பாதையில் பயணிக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்
அல்லது சும்மா இடங்கண்ட இடத்தில்........????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாள் வெட்டிலிருந்து சகலதும் தெரிந்தும் கட்டுப்படுத்த போலிசுக்கு இன்னமும் அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்டோர் சட்டத்தை தாங்களே கையிலெடுப்பது தவிர்க முடியாததாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களவு என்பதை  நீங்கள் உங்களிடம் இருக்கும் ஒரு பொருளை ஒருவர் தெரிந்து திருடி செல்கிறார் என்றால் எப்படி கோபம் வரும் ஒருவரின் , ஒரு குடும்பத்தின் வருமானத்தில் கைவைத்து விட்டு அவரை மன்னித்து விடுவதென்பது முடியாது  குறிப்பா யாழ்ப்பாணத்தில் கூலி வேலைக்கு 1200 ரூபாய்க்கும் ஆள் இல்லை இவர் ஏன் கூலி வேலை செய்ய கூடாது பல நாளாக செய்து வருகிறார் போல் தெரிகிறது இதில் இவரது சகாக்களும் அடக்கம் போல் தெரிகிறது பல முகநூல் பதிவுகளை பார்க்கும் போது 

என்னை பொறுத்த வரைக்கும் நான் கஸ்ரப்பட்டு உழைத்த பொருள் ஒன்றை தெரிந்து களவாடி செல்கிறார் என்றால் அவருக்கு இதைவிட அதிக  தண்டனை கொடுப்பேன்.

இதற்கு சவுதியில்  திருட்டு என்றால் பொருளின் தன்மைக்கேற்ப விரல் ,மணிக்கட்டு அல்லது தலை வெட்டப்படும் ஆனால் யாரும் கேட்பதில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இதன் தொடர்ச்சி
எம்மை அழித்துவிட்டு
எமது மண்ணை அபகரித்துவிட்டு
எமது கலாச்சாரங்களை
இனத்தூய்மையை அழித்துவிட்டு
முகாம்களில் நிம்மதியாக தூங்குபவர்மீது பாயணும்
அப்படி நடந்தால் தான் இந்த உணர்வும் 
இந்த தாக்குதலும் சரியான பாதையில் பயணிக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்
அல்லது சும்மா இடங்கண்ட இடத்தில்........????

காம்ப் அடிக்க வேணும் என்றீர்கள்.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியும் எடுக்கலாம்

இல்லை

இடம் கண்ட இடத்தில  தான் நாங்க காம்ப்  அடிப்பம் என்றும் எடுத்துக்கலாம்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு ஆறுமணி என்றால் காணும் வீடு முழுக்க பார்கம்பு போட்டு அடைத்துவிட்டு உள்ளே வெக்கை பான் சுழல் காற்றுடன் அரை தூக்கம் போடணும் இந்த களவை தொழிலாக செய்யும் கள்வர்களுக்கு அவ்வளவு பயமாம் திருப்பி அடித்தால் போலிஸ் வந்து கட்டபஞ்சாயத்து செய்து அடிவேண்டின கள்வனுக்கு இழப்பீடு பெற்றுகொடுத்த சம்வங்களும் யாழில் உண்டாம் .

அங்கு குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதுக்கே போலிஸ் உள்ளது போல் இருக்கு 

இங்கு மாடு களவெடுத்தவனின் காலை கையை முறிச்சு விட்டு இருக்கணும் . 

Link to comment
Share on other sites

அவ் கள்ளரை பொது மக்கள் தண்டித்தமை. மிக மிக தவறான செயல் மட்டுமல்ல, தண்டிக்கப்பட வேண்டிய செயல்.

இயக்கங்களின் காலத்தில் போஸ்ட் கட்டையில் கட்டி திருடர்களை மண்டையில் போட்டதை ரசிச்ச, சமாதான காலத்தில் தாய்/ சகோதரி கண் முன்னால் வைச்சு ஒரு திருடரை அடிச்சே கொன்ற கலாச்சார காவலாளிகள் எனும் காவாலிகள் செய்ததை ஆதரித்த அதே கூட்டத்தின் வழி வந்தவர்களால் தான் இங்கு இவரையும் கட்டி வைச்சு சித்திரவதை செய்து இருக்கும்.

வாள் வெட்டில் ஈடுபடுகின்றவர்கள் எவர் என அறிந்தும் தடுக்க மட்டுமல்ல பொலிசுக்கு முறையிடக் கூட பயப்படும் யாழ் சமூகம், அப்படி வாள் வெட்டில் ஈடுபட்டவர் முகனூலில் தன் படத்தையும் வாளையும் போட்டு கவிதை வடிக்க அதுக்கு 400 லைக் இட்ட சமூகம், பின்னேரம் ஆனால் கசிப்பையும் போதைப் பொருளையும் போட்டுக் கொண்டு மதில்களில் அமர்ந்து போக வரும் பெண்களிடம் படு கேவலமாக பாலியல் தொல்லை கொடுக்கும் இளைஞர்களை கேள்வி கேட்க அஞ்சிக் கொண்டு,கொலையும் கொள்ளையும் செய்தே கட்சி வளர்த்த கொலையாளி டக்கிளசுக்கு வாக்களித்து வெல்ல வைச்ச வெட்கம் கெட்ட சமூகம் ஒரு மாடு  திருடரை பிடிச்சு தண்டனை வழங்குகின்றது

சித்திரவதைகளுக்கு எதிராக குரல் கொடுத்து தம் மீது இழைக்கப்பட்ட  வன்முறைகளுக்கு எதிராக சர்வதேசத்திடம் நீதீ கேட்டுக் கொண்டே சக தமிழ் இளைஞனை சித்திரவதை செய்து, அதை படம் பிடிச்சு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து குரூர சுகம் காண்கின்றது இந்த சமூகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பக்கத்து ஊரான் எங்கடை ஊர் பெட்டையளுக்கு லவ் லெட்டர் குடுத்தாலே.....அவனை புடிச்சு இரவிரவாய் முழத்துக்கு முழம் தட்டியனுப்பிற சமூகத்திலை வளர்ந்தவன். அந்த சமுதாயத்தில் இருக்கும் போது அது சரியாக பட்டது.ஆனால் இங்கிருந்து அதாவது சனநாயக உரிமைகள்/சட்டங்கள் நிறைந்த நாடுகளிலிருந்து அப்படியான தண்டனைகளை பார்க்கும் போது கேவலமாகத்தான் தெரிகின்றது. இருந்தாலும் அங்கு இருப்பவர்களுக்குத்தான் தெரியும் கள்ளர்களின் களவும் அவர்களின் ஆக்கிரோசமும்...

தண்டனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் சித்திரவதை மனிதத்திற்கு அப்பாற்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

அவ் கள்ளரை பொது மக்கள் தண்டித்தமை. மிக மிக தவறான செயல் மட்டுமல்ல, தண்டிக்கப்பட வேண்டிய செயல்.

எனது ஊரில் ஒரு லெக்சர் (விரிவுரையாளர், வீட்டில் மனிசி விடியற்காலை 4 மணிக்கு எழும்பி சமைக்க வெளிக்கிட ஆயத்தமாக வீட்டுக்காரர் சாமிக்கு பூ பறிக்க வெளிக்கிட யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள்ள வந்தவன் காசு அவரின்ட ஸ்கூட்டி எல்லாம் எடுத்துட்டு போய்ட்டான் நிழலி அவன் அன்று சிக்கியிருந்தால் அவன் நிலமை இதைவிட மோசமாக இருக்கும் எனென்றால் எங்க ஊருக்கு வேற பழமொழியும் இருக்கிறது மனிசியும் வேலையென்ற படியால் அதிகாலையில் சமைக்க வேண்டிய சூழ் நிலை இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை அந்த கள்ளனை .

மரண வீட்டுக்கு சென்ற இன்னொரு குடும்பத்தினர்  சென்றதை பார்த்து அவர்கள் வீட்டுக்குள் இறங்கி  அவர்கள் நகைகள் போட்டு போகவில்லை அவர்களின் மொத்த நகைகளையும் அள்ளி சென்றுவிட்டார்கள்  அது அவர்களின் பரம்பரை வழி வந்தது இன்னும்கண்டு பிடிக்க வில்லை பாருங்கோ கள்ளனையெல்லாம் ஆலாத்தி எடுக்க இயலாது பாருங்கோ

ஊரில்  கள்ளன் பிடி பட்டால் அவனை கட்டி உரிப்பது இங்கு வழமை தானே அது உங்களுக்கு தெரியும் தானே  அடிச்சு முடிஞ்ச பிறகு பொலிஸ் கொண்டு போரதும் வழமை 


 

Link to comment
Share on other sites

1 hour ago, முனிவர் ஜீ said:

எனது ஊரில் ஒரு லெக்சர் (விரிவுரையாளர், வீட்டில் மனிசி விடியற்காலை 4 மணிக்கு எழும்பி சமைக்க வெளிக்கிட ஆயத்தமாக வீட்டுக்காரர் சாமிக்கு பூ பறிக்க வெளிக்கிட யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள்ள வந்தவன் காசு அவரின்ட ஸ்கூட்டி எல்லாம் எடுத்துட்டு போய்ட்டான் நிழலி அவன் அன்று சிக்கியிருந்தால் அவன் நிலமை இதைவிட மோசமாக இருக்கும் எனென்றால் எங்க ஊருக்கு வேற பழமொழியும் இருக்கிறது மனிசியும் வேலையென்ற படியால் அதிகாலையில் சமைக்க வேண்டிய சூழ் நிலை இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை அந்த கள்ளனை .

மரண வீட்டுக்கு சென்ற இன்னொரு குடும்பத்தினர்  சென்றதை பார்த்து அவர்கள் வீட்டுக்குள் இறங்கி  அவர்கள் நகைகள் போட்டு போகவில்லை அவர்களின் மொத்த நகைகளையும் அள்ளி சென்றுவிட்டார்கள்  அது அவர்களின் பரம்பரை வழி வந்தது இன்னும்கண்டு பிடிக்க வில்லை பாருங்கோ கள்ளனையெல்லாம் ஆலாத்தி எடுக்க இயலாது பாருங்கோ

ஊரில்  கள்ளன் பிடி பட்டால் அவனை கட்டி உரிப்பது இங்கு வழமை தானே அது உங்களுக்கு தெரியும் தானே  அடிச்சு முடிஞ்ச பிறகு பொலிஸ் கொண்டு போரதும் வழமை 


 

முனிவர்,
திருட வந்தவரை கட்டி வைத்து ஆத்திரத்தில்  இரண்டு சாத்து சாத்தி விட்டு போலீசை கூப்பிடுவது எங்கும் நடப்பது. சுய பாதுகாப்பிற்காக இங்கு கூட இது நிகழ்வதுண்டு. ஆனால் கட்டி வைத்து கையை காலை முறிப்பது, சித்திரவதை செய்வது, சாகும் வரைக்கும் அடிச்சுக்க கொல்வது, அடி வாங்கியவரது படத்தை பகிர்ந்து குரூரமாக ரசிப்பது போன்றவை ஏற்றுக் கொள்ள முடியாது.

திருடராக இருப்பதால் அவர் மனிதரல்லாதவராக ஆகி விட்டாரா? அவருக்கான மனித உரிமைகள் என்று எதுவும் இல்லையா? எவரும் அவருக்கு தண்டனை கொடுக்கலாமா?

யாழ்ப்பாணத்தில் லஞ்சம் வாங்காத அரச / கிராம  அதிகாரிகள் குறைவு. அவர்களிடம் உதவிக்கு போகின்றவர்கள் தாமாகவே லஞ்சம் கொடுத்து விடுவார்கள். அப்படி கொடுக்காமல் விடின் அலைக்கழிப்பார்கள். அவர்கள் மட்டுமன்றி மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் எம்பிக்கள் எல்லாரும் ஊழலில் திளைத்தவர்கள். வடக்கு மாகாண சபையே ஒரு பெரும் ஊழல் சபை என்று பெயர் வாங்கி வைத்துள்ளது (இதன் முதலமைசார் ஒரு முன்னாள் நீதியரசர்!).  எந்த வேலைக்காக அரசிடம் இருந்து சம்பளம் வாங்குகின்றனரோ  அதை செய்ய மேலதிகமாக லஞ்சம் வாங்குகின்றனர். இது ஒரு பெரும் திருட்டு. ஆனால் இப்படியான பெரும் திருடர்களை "ஆள் ஒரு சுழியன்' என்று பெயர் சூட்டி  மதிப்பர். ஆனால் வெறும் மாட்டு திருடனை அடித்து சித்திரவதை செய்வர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு  கள்வருக்கு மனித நேயம் இல்லாத ஊர் இரவானதும் கள்வர்களினதும் கயவர்களின் ஆட்சி நடக்கும் இடம் யாழில் சில பகுதிகளில் மத்தியான நேரத்தில் கூட போக சனம் பயபிடுகினம் சொறிலங்காவின் கூலிகளுக்கு இப்படியான சுழல் மிக தேவை அழிவது தமிழன் தானே என்னும் இனவாதம் நோக்கம்.இங்கு வந்து மாட்டை திண்டு வாகாக செற்றி யில் இருந்தபடி தட்டுபவர்களுக்கு தெரியாது யாழ் வீடுகளில் பசு உறவின் அங்கமாகவே இருப்பது. அப்படியான பசுக்களை களவாடா வந்தவன கும்பம் மரியாதை வைச்சு ஆலத்தி எடுத்து விட்டு சொறிலங்கா கூலி போலிசுகளிடம் குடுக்க கள்வனை ராஜமரியாதையுடன் அவனின் வீட்டில் கொண்டு போய் விட்டு விடும் அவனும் அவன் கூட்டமும் அன்று இரவே அடுத்த களவுக்கு கிளம்புவார்கள் இதுதான் இங்கும் பலருக்கு தேவைபடுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள படம் மக்கள் சட்டத்தை கையில் எடுத்தபோது...

கீழ் உள்ள படம் ராணுவம் சட்டத்தை கையில் எடுத்தபோது...

 

எனக்கு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.. இரண்டிலும் மனிதர்கள்தான் தெரிகிறார்கள்... 

 

17798979_153053828554667_1845906602102535295_n.jpg?oh=3416813bc1658e10f597ca80e67008bb&oe=5962B74717796573_153053831888000_6385754773559590806_n.jpg?oh=065a81a4cf7ce3535099cb41da529ff6&oe=595D2BC1

Link to comment
Share on other sites

33 minutes ago, பெருமாள் said:

அங்கு  கள்வருக்கு மனித நேயம் இல்லாத ஊர் இரவானதும் கள்வர்களினதும் கயவர்களின் ஆட்சி நடக்கும் இடம் யாழில் சில பகுதிகளில் மத்தியான நேரத்தில் கூட போக சனம் பயபிடுகினம் சொறிலங்காவின் கூலிகளுக்கு இப்படியான சுழல் மிக தேவை அழிவது தமிழன் தானே என்னும் இனவாதம் நோக்கம்.இங்கு வந்து மாட்டை திண்டு வாகாக செற்றி யில் இருந்தபடி தட்டுபவர்களுக்கு தெரியாது யாழ் வீடுகளில் பசு உறவின் அங்கமாகவே இருப்பது. அப்படியான பசுக்களை களவாடா வந்தவன கும்பம் மரியாதை வைச்சு ஆலத்தி எடுத்து விட்டு சொறிலங்கா கூலி போலிசுகளிடம் குடுக்க கள்வனை ராஜமரியாதையுடன் அவனின் வீட்டில் கொண்டு போய் விட்டு விடும் அவனும் அவன் கூட்டமும் அன்று இரவே அடுத்த களவுக்கு கிளம்புவார்கள் இதுதான் இங்கும் பலருக்கு தேவைபடுது .

அங்கு என்ன நடக்குது என்பதை  வெறும் கனவில் வரும் செய்திகளை மட்டும் வைச்சு எழுதுகின்றீர்கள். அங்கு கள்வர் பயம் இருக்கு, ஆனால் அது நீங்கள் ஊதிப் பெருப்பித்து பார்த்து இன்பம் கொள்ளும் அளவுக்கு அல்ல. இரவு 12 மணி வரைக்கும் விறாந்தையில் இருந்து இன்றும் கதைக்கும் சூழலும் அங்கு இருக்கு. கள்வர் பயத்தை விட அதிகமாக இருப்பது வாள் வெட்டு பயம். இவ்வாறு வாள் வெட்டுகின்றவர்களை கைது செய்து சிறையில் அடைச்சு பின் வெளிவிட்டாலும் அவர்கள் அங்கு தொடர்ந்து இயங்க கூடியதாக இருப்பதற்கு அங்குள்ள முதலாளிமார்களும் கெளரவத்துக்காக தாரளமாக பணம் அனுப்பும் புலம்பெயர் உறவுகளுமே முக்கிய காரணம். அடுத்தது சாதாரண சட்டங்களால் அவர்களை கைது பண்ணி அதிக காலம் வைத்திருக்கவும் முடியாது. நீதிபதி இளஞ்செழியன் இது தொடர்பாக விளக்கமாக உரையாற்றியும் இருக்கின்றார்.

பசு உறவின் அங்கமாகவே இருந்து விட்டு போகட்டும். ஆனால் அதனை களவெடுக்க வந்தவரை மிருகத்தனமாக அடித்து துன்புறுத்துவதற்கு அந்த பசுவை  காரணம் காட்டாதீர்கள். செய்த செயல் கொடூரச் செயல், அதற்கு வந்து ஆயிரம் நியாயம் கற்பிற்கின்றீர்கள். சித்திரவதைக்கு நியாயம் கற்பிக்க இனமானம், சிங்கள இனவாதம் என்றேல்லாம் எடுத்து விடுகின்றீர்கள்.

நாங்கள் மாட்டை தின்று விட்டு வந்து சித்திரவதைக்கு எதிராக கதைக்கின்றோம். ஒரு சக மானுடனை கட்டி வைத்து அடித்து துன்புறுத்தி அதை படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து குரூர இன்பம் காணும் ஒரு கூட்டத்திற்கு எதிராக கதைகின்றோம். சட்டத்தினை கையிலெடுத்து எந்த விசாரணையும் இன்றி உடனே தண்டனை கொடுக்கும் அநீதியை எதிர்த்து கதைக்கின்றோம். ஆனால் இந்த அநீதியை நீங்கள் எதைச் சாப்பிட்டு விட்டு வந்து நியாயபடுத்துகின்றீர்கள்? நீங்கள் வேணும் என்றால் ஒருவனை கட்டி வைத்து தடியால் கதற கதற அடிக்க கூடியவராக இருக்கலாம்; ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடும் எம்மால் முடியாது.

 

 

9 hours ago, பெருமாள் said:

இரவு ஆறுமணி என்றால் காணும் வீடு முழுக்க பார்கம்பு போட்டு அடைத்துவிட்டு உள்ளே வெக்கை பான் சுழல் காற்றுடன் அரை தூக்கம் போடணும் இந்த களவை தொழிலாக செய்யும் கள்வர்களுக்கு அவ்வளவு பயமாம் திருப்பி அடித்தால் போலிஸ் வந்து கட்டபஞ்சாயத்து செய்து அடிவேண்டின கள்வனுக்கு இழப்பீடு பெற்றுகொடுத்த சம்வங்களும் யாழில் உண்டாம் .

எழுந்தமானமாக இல்லாமல், நம்பகத்தன்மையான ஊடகத்தில் வந்த ஒரு செய்தியை தானும் காட்டுங்கள். இன்று யாழில் பல சிவில் பிரச்சனைகளுக்கு சனம் பொலிஸ் நிலையங்களுக்கு தாராளமாக சென்று முறையிட்டு வருகின்றனர். மற்றது அங்கொன்றும் 6 மணிக்கு சனம் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே போய் படுக்கவில்லை. இரவு 9 மணி வரைக்கும் கூட கடைகளை திறந்து வைத்து வியாபாரம் கூட நடக்கின்றது.

9 hours ago, பெருமாள் said:

இங்கு மாடு களவெடுத்தவனின் காலை கையை முறிச்சு விட்டு இருக்கணும் . 

முஸ்லிம் அடிப்படைவாத நாடுகளில் தான் களவெடுத்தால் கையை காலை வெட்டி தண்டனை கொடுப்பார்கள். ஆச்சரியமாக இருக்கு மேலை நாட்டுக்கு வந்த பின்னும் நீங்கள் அப்படியான அடிப்படைவாத கொள்கையுடன் இன்னும் இருப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளமாட்டுக்கு சாகிற அளவுக்கு தண்டனை என்றால் (அதையும் யாராவது ஒரு ரவுடிதான் செஞ்சிருக்கும்) கோடிக்கணக்கில் பணம் புரளும் கள்ளமட்டைக்கு இந்நேரம் வெளிநாட்டில் பாதி தமிழ்பெண்டுகள் வெள்ளை சீலையுடந்தான் இருக்கோணும்...

மில்லியன் கணக்கில் கொள்ளை அடிக்கும் லைக்கா மற்றும் பல தமிழ்வர்த்தகர்களை கோட்சூட்டுடன் கூப்பிட்டு ஆலாத்தி எடுக்கிறார்கள்...

ஏழைக்கு செல்லுபடியாகும் இந்த மக்கள் தண்டனை நியாயம் பணக்காரனுக்கு செல்லாதாக்கும்...

Link to comment
Share on other sites

களவெடுத்தது பிழையான விடயம். மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது அதைவிடப் பிழையானது.  கள்வனுக்கும் சில உரிமைகள் இருக்கின்றன,  உரிமைகளை மதிப்பதுதான்  காட்டு மிராண்டிகளுக்கும் நாகரீகமடைந்த சமூகத்திற்கும் இடையிலான வேறுபாடு. கையை தலையை வெட்டும் மத்திய கிழக்கு  காட்டுமிராண்டி குழுமத்தினுள்ளேயே வருகின்றனர்.

நாம் வாழும் மேலைத்தேய நாடுகளில் கொலை செய்தவர்களை அடிக்கவோ துன்புறுத்தவோ அரசாங்கத்திற்கு கூட உரிமையில்லயே. வழக்கு நடத்தி சிறையில் அடைக்க முடியும். அங்கும் அவர்களுக்கு கணணிவசதி, நூல்நிலையம், ஜிம், என்று சகலவசதிகளும் இருக்கின்றதே. 

இது நடந்தது 2005/6 காலப் பகுதியில். எனது வீட்டிற்கு  அண்மையில் இருக்கும் எனது நண்பனின் வீட்டினுள்ளே ஒரு திருடன் பட்டப்பகலில்  வந்துவிட்டான். அவனை அவனின் அப்பர் ஒருமாதிரி மடக்கிப் பிடித்துவிட்டார். ஊர் மக்கள் திரண்டுவந்து அந்த திருடனுக்கு மொட்டையடித்து நாயடி அடித்தார்கள். பின்னர் அவனை சித்திரவதை செய்கிறோம் என்று அவனுக்கு மின்சாரத்தை செலுத்தியதில் அவன் இறந்து விட்டான். சந்தியிலே போடப்பட்ட அவனது பிரேதத்தை மடியில் வைத்து தாய் மனிசி கதறிய கதறல் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. 

Link to comment
Share on other sites

19 hours ago, புங்கையூரன் said:

அநேகமான காயங்கள்...தடியினால் அடிக்கப்பட்டதனாலேயே ஏற்பட்டுள்ளன போல உள்ளன!

காலுக்குக் கீழேயும்...கைகளிலும் மட்டுமே காயங்கள் உள்ளன!

என்னைக் கேட்டால்....எனது பதில் சரியென்றே இருக்கும்!

பெடியனைப் பார்க்கக் கஷ்டத்திலை திருடின ஆள் மாதிரி இல்லை!

களவை ஒரு தொழிலாகச் செய்பவர் போல உள்ளது!

இப்படி ஒரு கருத்தை உங்களிடம் இருந்து கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை புங்கை tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இரண்டு நிலையினை  நான் எடுக்கலாம் , ஒன்று  புத்தன்  ஜேசு  காந்தி  வழி , மற்றது  என் இயல்பான  வழி 

இந்தோனிசியாவில்  மயூரனை  சுட்டது  சரி என்று  வாதாடியவர்கள் இங்கு மாடு களவெடுத்தவனை  அடித்தது  பிழை என்று வேஷம் போடுகிறார்கள்.

புல் தரை இல்லா இடத்தில்  மாடு வளர்த்தவனுக்கே  மாட்டின்  அருமை தெரியும்.

Link to comment
Share on other sites

20 minutes ago, நந்தன் said:

இங்கு இரண்டு நிலையினை  நான் எடுக்கலாம் , ஒன்று  புத்தன்  ஜேசு  காந்தி  வழி , மற்றது  என் இயல்பான  வழி 

இந்தோனிசியாவில்  மயூரனை  சுட்டது  சரி என்று  வாதாடியவர்கள் இங்கு மாடு களவெடுத்தவனை  அடித்தது  பிழை என்று வேஷம் போடுகிறார்கள்.

புல் தரை இல்லா இடத்தில்  மாடு வளர்த்தவனுக்கே  மாட்டின்  அருமை தெரியும்.

மயூரனின் மரணதண்டனையை அன்று மட்டுமல்ல இப்பவும் முழு மூச்சாக ஆதரித்தவன் என்கின்ற முறையில் இதற்கும் பதில் எழுதுகின்றேன்.

மயூரன் ஒரு சமூகத்தையே நாசமாக்கும் போதைப் பொருட்களை விற்பனை செய்த ஒரு பெரும் குற்றவாளி. மற்றவர்களின் வாழ்வை அடியோடு நாசமாக்கி அதன் மூலம் வருமானம் தேடி பணக்காரனாக ஆசைப்பட்ட ஒரு சமூக விரோதி. அவரையும் மாட்டை களவெடுக்க முயன்ற திருடரையும் உங்களைப் போல என்னால் ஒரே தராசில் வைச்சுப் பார்க்க முடியாது. விடுதலைப் புலிகளின் சட்ட திட்டங்கள் கூட இவ் இரு குற்றங்களுக்குமான தண்டனைகளுக்கு இடையில் பெரும் வேறுபாட்டை காட்டி நின்றதை மறந்து இருக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன் (வன்னியில் புலிகளின் காவல் துறைக்கு வந்த வழக்குகளில் பெரும்பாலானவை மாடு/ஆடு திருட்டும் கள்ள காதலும் என்பதையும் மறந்து இருக்க மாட்டீர்கள்). 

என்னைப் பொறுத்தவரைக்கும்

மற்றது, இங்கு யாரும் திருடரை புண்ணியவானாக காட்டவோ, விடுவிக்கவோ, அல்லது தாம்பாளத்தில் வைச்சு தாங்கவோ சொல்லவில்லை. அவரை சட்டம் பார்த்துக் கொள்ளட்டும் என பொலிசுக்கு பிடிச்சுக் கொடுத்து இருக்க வேண்டும். இலங்கை நீதித்துறையில் எனக்கு நம்பிக்கை இல்லை, எனவே நீதியை நானே கையிலெடுப்பேன் என்று சொல்வது மேலும் மேலும் குற்றவாளிகளை பெருகத்தான் வழி சமைக்கும். இதைச் சொல்ல நான் யேசுவாகவோ புத்தன் காந்தியாகவோ இருக்கத் தேவை இல்லை, ஒரு மனிதனாக இருத்தலே போதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இப்படி ஒரு கருத்தை உங்களிடம் இருந்து கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை புங்கை tw_cry:

வரலாற்றில் சில நிகழ்வுகள்..காரணமில்லாமல் நிகழ்வதில்லை!

இது போன்றதே...குர் ஆனின் பிறப்பும் அமைகின்றது! எந்த விதமான கொள்கைகள் எதுவுமில்லாமல்..அழுக்காகவும், களவுகளில் ஈடுபட்டும், பல பெண்களுடன் உறவுகளில் ஈடுபட்டும்...நாடோடிகளாக வாழ்ந்த அரபுக்களை ஒரு ஒழுங்கான வழியில் நெறிப்படுத்தும் நோக்குடனே குர் ஆன் எழுதப்பட்டது! மெக்காவில் இருந்து மதீனாவுக்குத் துரத்தப்பட்ட முகமது நபி..இனி வேறு வழியில்லை என்ற நிலையிலேயே...ஜிஹாதைப் பிரகடனப் படுத்த வேண்டியேற்பட்டது!

அதே போன்ற நிலை தான் யாழில் இன்று உள்ளது!

மனு நீதிச் சோழனைப் போல...தனது மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொள்ளுமளவுக்கு...நீதி இன்று யாழில் இல்லை!

ஒரு வேளை ..இந்தச் செயலைப் புரிந்தவரைப் போலீசில் கொடுத்திருந்தால்...நாளை அவர் இன்னும் சிலருடன் வாள்களோடும் வரக்கூடும்!

அல்லது...பொலிசாரால் விடுவிக்கப் பட்டு...நீ ..நீனி.   நீ..நீ ! யூ கான்ற் காட்ச் மீ...என்ற மாதிரியும் வரக்கூடும்!

பாதிக்கப் பட்ட மக்கள் இதைச் செய்திருக்கிறார்கள்! அவர்கள் சட்டத்தைக் கையிலெடுத்தது சரியென்று கூற வரவில்லை!

அவர்கள் ஒரு ஆற்றாமையால் தான் இதைச் செய்திருக்கின்றார்கள்! அவருக்குப் பாடம் புகட்டுவது தான் அவர்களது நோக்கமாக இருந்திருக்கின்றது!

நாளை இவ்வாறு ஒரு செயல் நடக்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்தச் செயல் செய்யப்பட்டிருக்கின்றது!

ஆனால்..அவர்கள்...அவரது கட்டை அவிழ்த்து விட்டுள்ளதையும் கவனிக்கவும்!

அவரைக் கொல்வதோ ...அல்லது சித்திர வதை செய்வதோ அவர்களது நோக்கமாக இருந்திருந்தால்...எனது கருத்து வேறு விதமாக இருந்திருக்கும்!

Link to comment
Share on other sites

21 minutes ago, புங்கையூரன் said:

அவர்கள் ஒரு ஆற்றாமையால் தான் இதைச் செய்திருக்கின்றார்கள்! அவருக்குப் பாடம் புகட்டுவது தான் அவர்களது நோக்கமாக இருந்திருக்கின்றது!

நாளை இவ்வாறு ஒரு செயல் நடக்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்தச் செயல் செய்யப்பட்டிருக்கின்றது!

ஆனால்..அவர்கள்...அவரது கட்டை அவிழ்த்து விட்டுள்ளதையும் கவனிக்கவும்!

 

நன்றி புங்கை..

ஆனால் மக்கள் ஆற்றாமையால் இதை செய்யவில்லை மாறாக எம் சனத்தின் இரத்தத்தில் ஊறி இருக்கும்  அதிகாரம் / இளைச்சவரை துன்புறுத்தல்  / வலியவன் செய்யும் அக்கிரமங்களை சகித்து கொண்டு வலிமையற்றவர் மீது வன்முறை  மேற்கொள்ளல்  போன்ற மனப்பாங்கில் தான் இதனைச் செய்து இருக்கின்றனர் என திடமாக நம்புகின்றேன். ஏனெனில் இத் திரியில் நான் ஏற்கனவே பலர் செய்யும் அக்கிரமங்களை குறிப்பிட்டு (வாள் வெட்டு பேர்வழிகளில் இருந்து டக்கிளஸ் வரை) இதற்கு எதிராக மக்களின் ஆத்திரம் திரும்பவில்லை, ஆனால் தனியாக வந்து மாட்டுப்பட்டு போன ஒரு மாட்டுத் திருடர் மீதுதான் அவ்வளவு ஆத்திரமும் திரும்பி இருக்கு.

இந்த வன்முறை கூட அத் திருடரை தன் செயலுக்கு வருந்தச் செய்யப் போவது இல்லை. மாறாக வன்மமும், தன் சுய மரியாதையை இழந்ததன் ஆத்திரமும் தான் கூடி இருக்கும். விளைவுகள் மேலும் வன்முறைக்கு தான் வழிவகுக்கும்.

Quote

 

இது போன்றதே...குர் ஆனின் பிறப்பும் அமைகின்றது! எந்த விதமான கொள்கைகள் எதுவுமில்லாமல்..அழுக்காகவும், களவுகளில் ஈடுபட்டும், பல பெண்களுடன் உறவுகளில் ஈடுபட்டும்...நாடோடிகளாக வாழ்ந்த அரபுக்களை ஒரு ஒழுங்கான வழியில் நெறிப்படுத்தும் நோக்குடனே குர் ஆன் எழுதப்பட்டது! மெக்காவில் இருந்து மதீனாவுக்குத் துரத்தப்பட்ட முகமது நபி..இனி வேறு வழியில்லை என்ற நிலையிலேயே...ஜிஹாதைப் பிரகடனப் படுத்த வேண்டியேற்பட்டது!

அதே போன்ற நிலை தான் யாழில் இன்று உள்ளது!

 

இந்த நிலையில் யாழ்ப்பாணம் இல்லை என நம்புகின்றேன். மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்ற பாதையில் செல்லத் தொடங்கியுள்ளனர் யாழ் மக்கள். சின்ன சின்ன அளவுகளில் மக்கள் போராட்டங்களும், கல்வியில் முன்னேற்றமும், பொருளாதார உயர்வும் என்னால் காண முடிகின்றது.

அவர்களிக்கு நபியை போன்ற ஒருவர் தேவைப்படவில்லை, அவர்களை முன்னேற்ற ஒரு நல்ல தலைவர் தேவைப்படுகின்றார்

இந்த திரியில் என் கருத்தை போதுமான அளவுக்கு வைத்து விட்டேன் என நம்புகின்றேன்.  திரியை ஆரம்பித்த தமிழ் சிறிக்கு நன்றி!

நன்றி!

Link to comment
Share on other sites

42 minutes ago, நந்தன் said:

இங்கு இரண்டு நிலையினை  நான் எடுக்கலாம் , ஒன்று  புத்தன்  ஜேசு  காந்தி  வழி , மற்றது  என் இயல்பான  வழி 

இந்தோனிசியாவில்  மயூரனை  சுட்டது  சரி என்று  வாதாடியவர்கள் இங்கு மாடு களவெடுத்தவனை  அடித்தது  பிழை என்று வேஷம் போடுகிறார்கள்.

புல் தரை இல்லா இடத்தில்  மாடு வளர்த்தவனுக்கே  மாட்டின்  அருமை தெரியும்.

மயூரன் முதல் முறை போதைப் பொருளை கடத்தியபோது பிடிபடவில்லை. முதலாவது முறை வெற்றிகரமாக கொண்டுவந்து சேர்த்தார்கள், இரண்டாவது முறை பிடபடப்போகிறோம் எனத் தெரிந்து கைவிட்டு விட்டு தப்பி வந்தார்கள். மூன்றாவது முறை விமானம் ஓடுபாதையில்  தயாராக இருந்த போது பிடித்தார்கள். இந்தோனேசிய, சிங்கப்பூர்,மலேசிய விமான நிலையங்களில்  எழுத்துக்களில் போட்டிருக்கும் "Death Penalty for Those Who Carry Drugs" எனப் போட்டிருப்பதை வாசிக்கவே உடம்பு ஒருமுறை நடுங்குமே. பிடிபடாவிட்டால் மயூரன் இப்பவும் தூள் கடத்துவார். போதைப்பொருள் கடத்துவது இந்தோனேசியாவில் மரணத்திற்குரிய குற்றம், அவுசில் ஆயுள் தண்டனை.இப்போது அவுசிகள் யாராவது தூள் கடத்துகிறார்கள் எனது தெரிந்தாலும் அவுசினுள் வருமட்டும் வேற்று நாடுகளுடன் தகவல்களை பகிர்ந்து  கொள்ளுவது இல்லை.

கள்வன் களவெடுத்தது சரி அல்ல, ஆனால் அதற்கு தண்டனை கொடுக்க  அனுமதியில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.