Jump to content

இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கான்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பைப் பார்க்கும் பலருக்கு இதில என்ன புதினம் இருக்கு என்று நக்கல் நழினமாக பார்க்கலாம்.

ஆனால் என்னோடு ஒத்த வயதினருக்கு இந்த லோங்ஸ்இன் வலி புரிந்திருக்கும்.

ஏறத்தாள 45 வருடங்கள் முன்பாக யாரும் நினைத்த நேரத்தில் இந்த லோங்சை மாட்ட முடியாது.அதை மாட்டுவதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று எழுதாத சட்டம் ஒன்று இருந்தது.

பாலர் வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்பு வரை சந்தோசமாக போகும் பள்ளி வாழ்க்கை ஜீசிஈ எனும் பரீட்சையில் வந்து தடம் புரழும்.

இதுவரை அரைக் காற்சட்டைளோடு சுதந்திரமாக திரிந்தவர்கள் இந்த பரீட்சையில் சித்தியெய்தினால் மட்டுமே அடுத்த கட்ட படிப்பு மாத்திரமல்ல எதிர் காலமே சூனியமாகிவிடும்.

இந்த சோதனைகளில் சித்தியடைந்தவர் மட்டும் புதிதாக லோங்ஸ் மாட்டிக் கொண்டு வருவார்கள்.மற்றையவர்கள் அதே அரைக் காற்சட்டையோடு கொஞ்ச காலம் பின்னர் வெளியில் வேட்டி வீட்டிலும் ஊரிலும் சாரம் தான்.

அந்த நேரங்களில் யார்யார் சோதனை பாசாகிட்டார்கள் என்று உடுப்பிலேயே தெரியும்.இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கிறான் என்றால் அவன் பாசாகிட்டான் என்றே அர்த்தம்.

இதே மாதிரி மணிக்கூடு கட்டியிருந்தால் அவர் ஏஎல் பாசாகிட்டார்.

பெண்கள் தாவணி போட்ட ஞாபகம்.வீட்டிலும் பள்ளியிலும் பெண்கள் இல்லாதபடியால் சரிவர தெரியவில்லை.இதை பெண்கள் தான் எழுத வேண்டும்.

இப்போது பிறக்கும் போதே விரும்பிய உடுப்புகள் போடலாம்.

நானும் 1971 இல் லோங்ஸ் போட்டேன்.மணிக்கூடு கட்ட முடியாமல் போய்விட்டது.அந்த நேரம் தான் பெல்பொட்டம் வந்த நேரம் மாட்டிக் கொண்டு சுற்ற வேண்டியது தானே.

யாழ் களத்திலும் இப்படி அனுபவப்பட்ட புங்கை குமாரசாமி தமிழ்சிறி சுவியர் இன்னும் பலர் இருக்லாம்.உங்கள் அனுபவத்தையும் கொட்டுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் லோங்கிஸ் போட்டது 1999  பத்தாம் வகுப்பு  எப்ப பத்தாம் ஆண்டுக்கு போய் லோங்கிசை போடுவம் என்ற ஆவல்  லோங்கிஸ் போட்ட பிறகே பொடிச்சிகளை பார்க்க ஒரு ஆசை வந்தது அந்த வயது அப்படி :unsure:tw_blush:

மீண்டுமொரு  நினைவுக்குள் இழுத்து சென்று விட்டியளே :104_point_left::104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

நான் லோங்கிஸ் போட்டது 1999  பத்தாம் வகுப்பு  எப்ப பத்தாம் ஆண்டுக்கு போய் லோங்கிசை போடுவம் என்ற ஆவல்  லோங்கிஸ் போட்ட பிறகே பொடிச்சிகளை பார்க்க ஒரு ஆசை வந்தது அந்த வயது அப்படி :unsure:tw_blush:

மீண்டுமொரு  நினைவுக்குள் இழுத்து சென்று விட்டியளே :104_point_left::104_point_left:

முனிவர் 75 அல்லது 80 களின் பின்பே அந்த கலாச்சாரம் முடிந்ததென்றே எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

முனிவர் 75 அல்லது 80 களின் பின்பே அந்த கலாச்சாரம் முடிந்ததென்றே எண்ணுகிறேன்.

இல்லை 90 களிலும் இருந்தது, யாழ் நகரப் பகுதிகளில் 10/11 ம் ஆண்டுகளிலேயே போடத் தொடங்கி விட்டார்கள். யாழ் நகர தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டு சென்றார்கள்.

(10ம் ஆண்டிலேயே private ஆக O/L சோதனை எடுத்து,  8பாடங்களும் சித்தியடைந்ததால் முன்னரே போட்டாச்சு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

இல்லை 90 களிலும் இருந்தது, யாழ் நகரப் பகுதிகளில் 10/11 ம் ஆண்டுகளிலேயே போடத் தொடங்கி விட்டார்கள். யாழ் நகர தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டு சென்றார்கள்.

(10ம் ஆண்டிலேயே private ஆக O/L சோதனை எடுத்து,  8பாடங்களும் சித்தியடைந்ததால் முன்னரே போட்டாச்சு)

நான் 77 இலேயே வெளிநாடு புறப்பட்டதால் 80 களிலேயே அந்த கலாச்சாரம் மாறியிருக்கும் என நினைத்தேன்.90 வரை இருந்ததென்றால் ரொம்பவும் அதிசயம் தான்.நன்றி மீரா.

Link to comment
Share on other sites

வேலையில் சேர்ந்த பின்புதான் காக்கித் துணியில் முதன் முதலில் லோங்சை மாட்டியது ஞாபகம்.

அக்காவும் அவரது நண்பியும் அரைத்தாவணி போடும் பருவம் அடைந்ததும், அதற்கேற்ற துணிகள் வாங்கவும், தைக்கவும், நான் விளையாடக்கூடப் போகமுடியாது அவர்களுக்குக் காவல் நாயாக அலைந்ததும், தாவணி போட்டபின் அவர்களுக்கு வந்த வெட்கமும், முகத்தில் ஏற்பட்ட சந்தோசமும்,பூரிப்பும் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

Bildergebnis für தாவணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஒரு பத்து நிமிடத்துக்கு முன்தான் எனது அயலவர்கள் வீட்டில் வந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது கதை உங்களின் எந்த சிறு வயதில் இருந்து சம்பவங்கள் ஞபகத்தில் இருக்கு என்று சுவாரஸ்யமாய் கதைத்துக் கொண்டிருந்தோம். கிட்டதட்ட அதே தலைப்பில் இங்கே கருத்தாடல்கள் நடந்து கொண்டிருக்கு.

நான் எட்டாம் வகுப்பிற்கு பிறகு ஜி.சி. ஈ-- ஓ எல் வரை கல்லூரியில் நடக்கும் விழாக்களுக்கு பிரிபக்துராக வெள்ளை லோங்ஸ்சும் வெள்ளை சேட்டும் போடுவோம். அது முடிந்ததும் உடனே அரைக்காற் சட்டைக்கு மாறிடுவோம். பின்பு நான் பாடசாலை விட்டதும் கொழும்பில் ஓரிரு வருடங்கள். அங்கு கூச்சமின்றி லோங்ஸ் போட முடிந்தது. ஆனால் யாழ்ப்பாணம் வரும்போது காற்சட்டைதான். பின்பு அத்தான் வற்புறுத்தி லோங்ஸ் போடவைத்து முள்ளியவளைக்கு அக்கா வீட்டுக்கு வந்தேன். அங்கு பெரியம்மாவுக்கும் அக்காவுக்கும் நல்ல சந்தோசம். பிறகு அப்படியே யாழ்ப்பாணம் வந்தேன்.

அதைவிட எனது நண்பன் ஐந்தாம் வகுப்புடன் வேலைக்கு போய்விட்டான்.அவன்  வாகனத்துக்கு சாமான் எடுக்க கொழும்பு வந்தவன் என்னிடம் மாட்டுப் பட்டு அவன்ர வெட்கம் கீல வெடக் நே. அங்கேயே இரண்டு லோங்ஸ் தைத்து அதைப் போட்டுக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தபோது அவரின் தாயார் அடைந்த சந்தோஷத்துக்கு அளவில்லை......! நன்றி ஈழப்பிரியன்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

யாழ் களத்திலும் இப்படி அனுபவப்பட்ட புங்கை குமாரசாமி தமிழ்சிறி சுவியர் இன்னும் பலர் இருக்லாம்.உங்கள் அனுபவத்தையும் கொட்டுங்கள் பார்க்கலாம்.

அதையேன் பேசுவான்......

ஓஎல் பாஸ் பண்ணினவுடனை லோஞ்சுக்கும் சேட்டுக்கும் துணி எடுக்க ஜப்னா நியூ மாக்கற்ருக்கு போய் அவிஞ்சு கருவாடாகி வந்த கதை பிள்ளையார்கதையை விட பெருங்கதை...:grin:

பாப்பம் ...

நேரமும் மனமும் ஒருங்கிணைந்தால் ஆயிரம் பக்கக்கங்கள் எழுதலாம்.

நீங்கள் ஆரம்பித்த கதை ஈழத்தவர்களுக்கு மிகமிக சுவாரசியமானது.tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நினைவிருக்கின்றன...அந்த நாட்கள்!

அதுவும் வெள்ளை நிறம் தான் எங்களுக்குப் போட அனுமதியுண்டு!

அதுவும் அயன் பண்ணி...அந்த மடிப்புத் தெரிய...!

அதுவும் ஒரு காலம்..!

 

நன்றி....ஈழப்பிரியன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினைஞ்சு வயசிலிருந்து  களிசானுடனும்,சாரத்துடனும் திரிந்த காலம் ,1989 கடைசியில் 1990 தொடக்கத்தில் தான் புது உடுப்பு வந்தபோது தான் ரவுசர் போடும் சந்தர்ப்பம்  கிடைத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த லோங்ஸ் ஐ வாங்க காசுக்கு படும்பாடு ... நடுத்தர குடும்பத்துக்கு ஒரு  சுமை  யாக இருக்கும்.

 காலங் கடந்த பின் இளமையை அசை போடுவது ஒரு சுகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1970s fashion women bell bottom jeans     bell bottom jeans  

"இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கான்." என்ற வார்த்தையை, நண்பர்களின் வாயால் கேட்கும் போது....
வரும் ஆனந்தத்தையும், பெருமையும் வெறும்  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அப்படி ஒரு பரவசம் உடம்பெல்லாம் பரவி இருக்கும்:love:. முதல் கால் சட்டை போட்டால்...  நண்பர்களுக்கு, தேத்தண்ணி கடையில்.. வடை, சூசியம் எல்லாம் வாங்கிக் கொடுத்து பார்ட்டி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அந்தச் செலவு... கால் சட்டை  தைத்ததை  விட அதிகம் பிடிக்கும். :grin:

அப்போது "ஜீன்ஸ்" துணி அவ்வளவு பிரபலமாகாத காலம். ரெடிமேட் கால்சட்டைகளையும் யாரும் விரும்புவதில்லை. நாமே துணி எடுத்து...  தமக்கு பிடித்த, தையல்காரரிடம் கொடுத்து தைப்போம்.
எனது முதல் கால்சட்டை துணியின் நிறம்.. மெல்லிய மண்ணிறம் என்பது. இப்போதும் நினைவில் உள்ளது. 
அந்நேரம் "பெல் பொட்டம்"  தான்.... பலரும் அணிவார்கள். சாதாரண பெல் பொட்டத்தின்  அடிப்பகுதி... 28 இஞ்சியிலிருந்து 30 இஞ்சிக்குள் இருந்தால் தான் நாம் நிற்கும் போது... அது நேராக நிற்கும் என்று ரெய்லர் சொல்லுவார். இன்னும் பெரிதாக இருந்தால் தான்...  "லேடீஸ்  கொளிச்"  பெட்டையள் திரும்பி பார்ப்பார்கள்:D:  என்பதற்காக...  நாங்கள் அதை 32, 33 இஞ்சியாக தைத்து தரும்படிதான்  ரெய்லரிடம் சொல்வோம். ஒரு பெல் பொட்டம் தைக்க... 25 - 30 ரூபாய் வரை   கூலி கொடுக்க வேண்டும்.

அந்த  பெல் பொட்டம் நிலத்தில்  முட்டாமல் இருக்க... சிங்கப்பூரில் இருந்து வந்த.. ஒரு இஞ்சி மொத்தமான றப்பர் செருப்பு வேறை செலவு. அதற்கிடையில்... சைக்கிள் ஓடும் போது, அது செயின்  கவர் இல்லாத சைக்கிள் என்றால்.... கொழுப்பு பிரண்டுடும் என்று, காலை அகட்டி, குதிக்காலால்  "பெடலை" மிதிக்க வேண்டும். அப்படியும்... சிலவேளை கொழுப்பு   பிரளும். அந்தக் கொழுப்பை எடுக்க, கால்பகுதியை   மண்ணெண்ணெய்க்குள்   ஊறவிட்டு, பொச்சு மட்டையால் உரஞ்ச வேண்டும்.  எத்தனை  கஸ்ரப் பட்டாலும்  அந்த வயதில்... கால் சட் டையுடன் வலம்  வருவது இனிமையான அனுபவம்.:love:

நல்ல தொரு தலைப்பை... நினைவு ஊட்டியதற்கு,  நன்றி ஈழப்பிரியன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எச்என்சிE( HNCE)குறூப் அது 78 இல் பெல்பொட்டம் காலம்.அதுவும் எலிபன்ற் பெல்ஸ் மிகவும் அகலம்.நல்லா காத்து கீழால போகும்.பிறகு ஜீன்ஸ்.அதிலையும் இந்த டெனிம் போட்டா மதிக்க மாட்டாங்கள்.கொசப்புகள்தான் இதைப் போடுறது என்று பெரியாக்கள் சொல்லுவினம். அனா அதுதான் நல்லாப் பாவிக்கும். ஊரிலஒரே ஒரு டெனிம் ஜீன்ஸ் போட்டன். புதது ஆக்களுக்கு நான் இயக்கத்தில சேர்ந்துட்டனோ என்று டவுட். ஒருத்தர் வெளிப்படையாகவே கேட்டார். தம்பி ஏதாவது முவ்மென்ற்றில இருக்கிறீங்களோ னெ;று. அது ஒரு கனாக்காலம். வெளிநாட்டுக்கு வந்த பிறகு டெனிம் ஜீன்ஸ்தான்அதுதான் குளிருக்கும் நல்லது. பட்டையடி அடிக்கும் அதைக் கிழியக்கிழியப் போட்டாலும் ஸ்ரைல்தான் ஊத்தையாப்போட்டாலும் ஸ்ரைல்தான்.யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள்.

ஒருகாலத்தில ஒரு ஸரையில் பொக்கற் உள்ளே வைச்சிருப்பாங்கள். நான் ரியூசன் காசை உள் பொக்கற்றுக்குள் வைக்கிறதுப்பதிலாக ஆக உள்ளே வைச்சிட்டன் அது கீழால காலுக்குள்ளால கீழ விழுந்துட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

 

யாழ் களத்திலும் இப்படி அனுபவப்பட்ட புங்கை குமாரசாமி தமிழ்சிறி சுவியர் இன்னும் பலர் இருக்லாம்.உங்கள் அனுபவத்தையும் கொட்டுங்கள் பார்க்கலாம்.

எங்களுக்கும் உந்த அனுபவமுண்டு ....நான் 77 ஆம் ஆண்டு போடத்தொடங்கி விட்டேன் இரண்டு மூன்று காற்சட்டையோட இரண்டு வருடஉயர்தர‌ பள்ளி படிப்பை முடித்து விட்டேன்..அனுபவம் பகிர்வு சுப்பர் ....சிட்னிக்கு வந்து போனபின்பு நீங்களும் ஒரு எழுத்தாளராக வாறீங்கள்:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

எங்களுக்கும் உந்த அனுபவமுண்டு ....நான் 77 ஆம் ஆண்டு போடத்தொடங்கி விட்டேன் இரண்டு மூன்று காற்சட்டையோட இரண்டு வருடஉயர்தர‌ பள்ளி படிப்பை முடித்து விட்டேன்..அனுபவம் பகிர்வு சுப்பர் ....சிட்னிக்கு வந்து போனபின்பு நீங்களும் ஒரு எழுத்தாளராக வாறீங்கள்:10_wink:

அந்த மண்ணின் மகிமை அப்படி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

அந்த மண்ணின் மகிமை அப்படி !

பின்ன ....மண் அப்படி சந்திச்ச ஆட்கள் அப்படி:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Paanch said:

வேலையில் சேர்ந்த பின்புதான் காக்கித் துணியில் முதன் முதலில் லோங்சை மாட்டியது ஞாபகம்.

அக்காவும் அவரது நண்பியும் அரைத்தாவணி போடும் பருவம் அடைந்ததும், அதற்கேற்ற துணிகள் வாங்கவும், தைக்கவும், நான் விளையாடக்கூடப் போகமுடியாது அவர்களுக்குக் காவல் நாயாக அலைந்ததும், தாவணி போட்டபின் அவர்களுக்கு வந்த வெட்கமும், முகத்தில் ஏற்பட்ட சந்தோசமும்,பூரிப்பும் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

Bildergebnis für தாவணி

பாஞ்ச் பெண் பிள்ளைகள் பருவ வயதில் இயற்கை அழகோ அழகு அதிலும் தாவணியில் சொல்லத் தேவையில்லை.

சரி மணிக்கூடு எப்போது?

15 hours ago, suvy said:

இப்ப ஒரு பத்து நிமிடத்துக்கு முன்தான் எனது அயலவர்கள் வீட்டில் வந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது கதை உங்களின் எந்த சிறு வயதில் இருந்து சம்பவங்கள் ஞபகத்தில் இருக்கு என்று சுவாரஸ்யமாய் கதைத்துக் கொண்டிருந்தோம். கிட்டதட்ட அதே தலைப்பில் இங்கே கருத்தாடல்கள் நடந்து கொண்டிருக்கு.

நான் எட்டாம் வகுப்பிற்கு பிறகு ஜி.சி. ஈ-- ஓ எல் வரை கல்லூரியில் நடக்கும் விழாக்களுக்கு பிரிபக்துராக வெள்ளை லோங்ஸ்சும் வெள்ளை சேட்டும் போடுவோம். அது முடிந்ததும் உடனே அரைக்காற் சட்டைக்கு மாறிடுவோம். பின்பு நான் பாடசாலை விட்டதும் கொழும்பில் ஓரிரு வருடங்கள். அங்கு கூச்சமின்றி லோங்ஸ் போட முடிந்தது. ஆனால் யாழ்ப்பாணம் வரும்போது காற்சட்டைதான். பின்பு அத்தான் வற்புறுத்தி லோங்ஸ் போடவைத்து முள்ளியவளைக்கு அக்கா வீட்டுக்கு வந்தேன். அங்கு பெரியம்மாவுக்கும் அக்காவுக்கும் நல்ல சந்தோசம். பிறகு அப்படியே யாழ்ப்பாணம் வந்தேன்.

அதைவிட எனது நண்பன் ஐந்தாம் வகுப்புடன் வேலைக்கு போய்விட்டான்.அவன்  வாகனத்துக்கு சாமான் எடுக்க கொழும்பு வந்தவன் என்னிடம் மாட்டுப் பட்டு அவன்ர வெட்கம் கீல வெடக் நே. அங்கேயே இரண்டு லோங்ஸ் தைத்து அதைப் போட்டுக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தபோது அவரின் தாயார் அடைந்த சந்தோஷத்துக்கு அளவில்லை......! நன்றி ஈழப்பிரியன்....! tw_blush:

சுவியர் நான் நினைத்த மாதிரியே உங்களிடமிருந்து அனுபவ ஞாபகம் வந்திருக்கிறது.நன்றி.

12 hours ago, குமாரசாமி said:

அதையேன் பேசுவான்......

ஓஎல் பாஸ் பண்ணினவுடனை லோஞ்சுக்கும் சேட்டுக்கும் துணி எடுக்க ஜப்னா நியூ மாக்கற்ருக்கு போய் அவிஞ்சு கருவாடாகி வந்த கதை பிள்ளையார்கதையை விட பெருங்கதை...:grin:

பாப்பம் ...

நேரமும் மனமும் ஒருங்கிணைந்தால் ஆயிரம் பக்கக்கங்கள் எழுதலாம்.

நீங்கள் ஆரம்பித்த கதை ஈழத்தவர்களுக்கு மிகமிக சுவாரசியமானது.tw_thumbsup:

குமாரசாமி அந்த நேரங்களில் பண்டதரிப்பு நெசவாலையில் இருந்து கொஞ்சம் மலிவு விலையில் கூப்பன் கடைகளில் கொடுத்ததாக ஞாபகம்.அதிலே தான் எனது முதல் லோங்ஸ்.

பெல்பொட்டமெல்லாம் போடலையோ?

மணிக்கூடு என்ன மாதிரி?எனக்கு கட்ட கிடைக்கவில்லை.

ஆனால் கட்டிய சிலர் அந்த கையால் போற வாறவருக்கெல்லாம் கை காட்டுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

இன்னும் நினைவிருக்கின்றன...அந்த நாட்கள்!

அதுவும் வெள்ளை நிறம் தான் எங்களுக்குப் போட அனுமதியுண்டு!

அதுவும் அயன் பண்ணி...அந்த மடிப்புத் தெரிய...!

அதுவும் ஒரு காலம்..!

 

நன்றி....ஈழப்பிரியன்!

புங்கை உங்களிடமிருந்து இன்னும் எதிர் பார்த்தேன்.மடிப்பு கலையாமல் போடுறதிலேயே கவனமாக இருந்திருக்கிறிர்கள்.

அந்த நாட்களில் மின்சார அயன் இல்லை.சிரட்டையை எரித்து தணல் போட்டுத் தான் அயன்.இத்தனையும் செய்வதை விட மடித்து போட்டு பேப்பருக்குள் வைத்து கட்டில் மெத்தைக்கு கீழ் வைத்தால் அயன் பண்ணியது போலவே வரும்.

10 hours ago, நந்தன் said:

பதினைஞ்சு வயசிலிருந்து  களிசானுடனும்,சாரத்துடனும் திரிந்த காலம் ,1989 கடைசியில் 1990 தொடக்கத்தில் தான் புது உடுப்பு வந்தபோது தான் ரவுசர் போடும் சந்தர்ப்பம்  கிடைத்தது.

நந்தன் எமது காலம் தான் அப்படி.பின்னால் வந்தவர்கள் சிறு வயதிலேயே போட்டிருப்பார்கள் என தவறான எண்ணம் கொண்டுவிட்டேனோ என்று எண்ண தோன்றுகின்றது.

9 hours ago, நிலாமதி said:

அந்த லோங்ஸ் ஐ வாங்க காசுக்கு படும்பாடு ... நடுத்தர குடும்பத்துக்கு ஒரு  சுமை  யாக இருக்கும்.

 காலங் கடந்த பின் இளமையை அசை போடுவது ஒரு சுகம் 

நிலாமதி நீங்கழுமா லோங்ஸ் போட்டீர்கள்.நான் நினைத்தேன் உங்கள் தாவணிக் கனவுகளைத் தான் எழுதப் போகிறீர்கள் என்று.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

"இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கான்." என்ற வார்த்தையை, நண்பர்களின் வாயால் கேட்கும் போது....
வரும் ஆனந்தத்தையும், பெருமையும் வெறும்  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அப்படி ஒரு பரவசம் உடம்பெல்லாம் பரவி இருக்கும்:love:. முதல் கால் சட்டை போட்டால்...  நண்பர்களுக்கு, தேத்தண்ணி கடையில்.. வடை, சூசியம் எல்லாம் வாங்கிக் கொடுத்து பார்ட்டி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அந்தச் செலவு... கால் சட்டை  தைத்ததை  விட அதிகம் பிடிக்கும். :grin:

சிறி லோங்ஸ் போட்டிருக்கிறான் என்றால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.படித்தவன் என்ற மரியாதையையும் சமூகத்தில் தந்துவிடும்.

இந்த பெல்பொட்டங்களை நினைக்க உண்மையிலேயே சரியான வெட்கமாக இருக்கிறது சிறி.காலுக்கு கீழ் பெரிதாக ஆட வேண்டும்.பொக்கிளுக்கு மேல் நிற்க வேண்டும்.நீங்கள் எழுதியது போல் அதை பராமரிப்பது மகா கஸ்டம்.

உங்களிடமிருந்து எதை எதிர்பார்த்தேனோ அதைவிட மிக அழகாக படங்களுடன் விபரமாக எழுதி இருக்கிறீர்கள்.நன்றி சிறி.

3 hours ago, புலவர் said:

நான் எச்என்சிE( HNCE)குறூப் அது 78 இல் பெல்பொட்டம் காலம்.அதுவும் எலிபன்ற் பெல்ஸ் மிகவும் அகலம்.நல்லா காத்து கீழால போகும்.பிறகு ஜீன்ஸ்.அதிலையும் இந்த டெனிம் போட்டா மதிக்க மாட்டாங்கள்.கொசப்புகள்தான் இதைப் போடுறது என்று பெரியாக்கள் சொல்லுவின

புலவர் எமக்கு பின் வந்தவர்களை என் சி ஈ ஈ  ஏச் என் சி ஈ என்று பாடங்களையும் கூட்டி பிள்ளைகளை குழப்பியடித்த காலம்.

இருந்தும் இலகுவாக சித்தியடையலாம் என்று சொன்னார்கள்.

இலங்கையில் அந்த காலத்தில் யாரும் டெனிம் போட்டதாக ஞாபகம் இல்லை.வெளிநாடு வந்த பின்பே டெனிமைப் பற்றி தெரிந்து கொண்டேன்.நன்றி புலவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

எங்களுக்கும் உந்த அனுபவமுண்டு ....நான் 77 ஆம் ஆண்டு போடத்தொடங்கி விட்டேன் இரண்டு மூன்று காற்சட்டையோட இரண்டு வருடஉயர்தர‌ பள்ளி படிப்பை முடித்து விட்டேன்..அனுபவம் பகிர்வு சுப்பர் ....சிட்னிக்கு வந்து போனபின்பு நீங்களும் ஒரு எழுத்தாளராக வாறீங்கள்:10_wink:

புத்து வெளிநாட்டு கலாசாரம் 80 களிலேயே வந்தபடியால்

ஒ எல் பாசாகி தான் லோங்ஸ் ஏ எல் பாசாகி தான் மணிக்கூடு என்ற வரையறை முடிந்திருக்குமென எண்ணிவிட்டேன்.

3 hours ago, putthan said:

....சிட்னிக்கு வந்து போனபின்பு நீங்களும் ஒரு எழுத்தாளராக வாறீங்கள்

எல்லாம் உங்களை சந்தித்ததன் பலன் தான்.

உனது நண்பன் யாரென்று சொல்லு
நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பவும் நல்லஞாபகம் இருக்க முதல் முதல் லோன்ஸ் போட்டது.இங்கை எல்லாரும் முக்கியமான ஒன்றை மறந்து விட்டீhக்ள் அநேகமாக லோன்ஸ் போடத் தொடங்கும் போதுதான் கோவணமும் பொடத் தொடங்கியிருப்பம்.:)

Link to comment
Share on other sites

 

37 minutes ago, சுவைப்பிரியன் said:

எனக்கு இப்பவும் நல்லஞாபகம் இருக்க முதல் முதல் லோன்ஸ் போட்டது.இங்கை எல்லாரும் முக்கியமான ஒன்றை மறந்து விட்டீhக்ள் அநேகமாக லோன்ஸ் போடத் தொடங்கும் போதுதான் கோவணமும் பொடத் தொடங்கியிருப்பம்.:)

ஞாலத்துக்கே முதல்வர் விநாயகர். அவர்காலத்திலேயே கோவணமும் வந்துவிட்டது. உள்ளே தெரிகிறதா சுவியரே.! :103_point_down:

Bildergebnis für கோவணம் 

Link to comment
Share on other sites

எழுதாத சட்டங்கள் ஏராளம். இச்சட்டங்கள் எப்போதும் மிக மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். சமூக ஒடுக்குமுறைகள் வாய்வழியாகவே நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் தான் எம்மவர்கள் சிறு சுடு சொல்லையும் தாங்க மாட்டார்கள். சில பேர்  10. 20 வருடமாக பகையாக இருப்பார்கள் ஆராய்ந்துபார்த்தால் சிறு வார்த்தைப் பிரயோகம் நொட்டை சொட்டை  சுடுசொல் காரணமாக இருக்கும். இதற்கு உதாரணம் இக்களத்தில் கோபித்துக்கொண்டு போகின்றவர்களில் கூட காண முடியும். அடுத்தவன் என்ன நினைப்பானோ சொல்வானோ என்று தமது சந்தோசத்தை அழித்தவர்கள் உலகில் நம்மவர்கள் தான் அதிகம் என்பேன். எத்தனையோ பேர் வாங்கிய உடுப்பை போடாமலே இருப்பார்கள். 

இவ்வாறான பல கட்டமைப்புகளை எழுதாத சட்டங்களை உடைத்தெறிந்தது போராட்டமே !  சிங்களவனிடம் போராட்டம் தோற்றபோதிலும் பல இடங்களில் வெற்றிபெற்றிருக்கின்றது. இவ்வாறான சின்ன சின்ன விடயங்களை ஆராயும் போதுதான் இதற்கு பின்னாலான பெரும் சமூக ஒடுக்குமுறைகள் புரியும். 

பதிவுக்கு நன்றி

 

Link to comment
Share on other sites

நல்லதொரு அனுபவ பதிவு ஈழப்பிரியன். 

எனக்கு நினைவில் உள்ளபடி நான் 8 ம் வகுப்பு படிக்கும்போது லோங்ஸ் போட்டேன். பாடசாலை நேரம் போடாவிடினும் கிரிக்கெட் விளையாட போடுவது. 

நீள காற்சட்டையை எல்லா இடமும் தைக்க கொடுப்பதில்லை. யாழ் நகரில் மின்சார நிலைய வீதியால்  மலாயன்கபே தாண்டி போக அதே பக்கம் ஒரு சிறு ஒடுக்கமான வீதி வரும். அதில் இருக்கும் முதல் கடை முஸ்லிம் ஆட்களது அங்குதான் தைக்க கொடுப்போம். அவர்கள் இடம் கொடுத்தால் எப்படியும் தைத்து தர 15 இல் இருந்து 20 நாள் எடுக்கும். அந்த அளவு அவர்கள் பிஸி. :)

அதே போல அந்த நேரத்தில் காதை மூடி தலைமயிர் வளர்ப்பதுதான் ஸைரைல் அதை சக்கி கட் என்பார்கள்.tw_blush: அதற்கும் ஆஸ்பத்திரி வீதியில் ஒரு சலூன் இருந்து. அதன் பெயரே சக்கி சலூன் என நினைக்கிறேன். அங்கு தலைமயிர் வெட்ட அந்த காலத்திலேயே Appoinment வைக்க வேண்டும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சண்டமாருதன் said:

அடுத்தவன் என்ன நினைப்பானோ சொல்வானோ என்று தமது சந்தோசத்தை அழித்தவர்கள் உலகில் நம்மவர்கள் தான் அதிகம் என்பேன்.

 

உண்மை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.