Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோபம் 

 

 

 காலையில் காபி சூடாயிருந்தால் கோபம் 

பஸ் வண்டி க்கு காத்திருக்கும் போது 

ஒரு வகை எரிச்சல் உடனான கோபம் .

வேளைக்கு உணவின்றேல்.  புகைச்சலுடன் கோபம்.

ஏழைக்கு இறைவன் மீது கோபம் 

 

குழந்தை   சிந்தும் உணவின் மேல் கோபம் 

 குழந்தையின் முரண்டு பிடித்தால் கோபம்  

 உதட்டு அருகே வரும் உணவு  கீழே சிந்திய கோவம்  

எரியும்  அடுப்பில் காஸ் தீர்த்து விடடால்   கோபம் ..

ஆழ்ந்த  உறக்கத்தில் அலாரம் மீது கோபம் 

 

விரும்பியது கிடை  க்கா விடடால் கோபம் .

 காத்திருக்கும்  அவள்/அவன் வராவிடடால்  கோபம் .

பந்தி உணவில் கடைசி வரி கிடைத்தால் கோபம் 

 பசி வேளையில் உணவின்றேல் கோபம்  

நீண்ட வரிசையி ல்  குறு க்கிடல் கோபம் 

 படித்தும் உரிய வேலை  கிடைக்காவிடில்  கோபம் 

 

கள்ளுண்ட கணவனுக்கு  கருவாட்டு 

பொரிய ல்  இல்லாத கோபம் 

அடுப்பெரிக்கும் மனைவிக்கு  ஈர விறகின் மீது கோபம்

கோவிலுக்கு   செல்ல  நினைத்த  மனை யாளுக்கு

கணவன் தாமதமாய் வந்தால் கோபம்,

 எனக்கும் வரும் உனக்கும் வரும் 

எவருக்கும் வரலாம் கோபம் 

 

 சினிமா  வரிசையில் ஹவுஸ் புள் வந்தால் கோபம் ..

அண்ணனும் தம்பியும் அடிக்கடி கோபம்  

..காதலன் காதலி  செல்லக்கோபம் .

ஏறு   என்றால் எருதுக்கு கோபம்  

 இறங்க சொன்னால் முடவனுக்கு கோபம் .

 எதிர் பார்ப்பு ஏமாறும் போது வரும்  பெருங் கோபம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிலாமதி said:

கள்ளுண்ட கணவனுக்கு  கருவாட்டு 

பொரிய ல்  இல்லாத கோபம் 

அடுப்பெரிக்கும் மனைவிக்கு  ஈர விறகின் மீது கோபம்

அசத்தல் வரிகள்...நிலாக்கா!

கள்ளுக்கும், கருவாட்டுப் பொரியலுக்கும்...இவ்வளவு நெருக்கமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

எதிர் பார்ப்பு ஏமாறும் போது வரும்  பெருங் கோபம்

Bildergebnis für angry man gif Bildergebnis für angry man gif

Bildergebnis für angry man gif

Bildergebnis für angry man gif 

Bildergebnis für angry man gif

  Bildergebnis für angry man gif  Bildergebnis für angry man gif

மனிதனின் இயந்திர வாழ்க்கையில்.....
கோபம் என்பது, இப்போது சர்வ சாதாரணமாக,  தினமும் பலமுறை வந்து போவது கவலைக்குரிய விடயம்.
சாதாரண விடயத்துக்கு கூட, மனிதன் தினமும் கோபப்  படுவதை கணக்கிட்டால்  50 முறைக்கு மேலாக வரும்.
இது...  ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல.  இதனால் தான்... பலர் பிரசர் தலைக்கு ஏறி, தினமும் பிரசர்  குளிசை விழுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். 

நல்லதொரு விடயத்தை... கவிதை வடிவில் தந்த நிலாமதி அக்காவுக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

வணக்கம்  நிலாமதி. 

அருமையான ஆக்கம் 

இதில் கோபம் என்பது எல்லா வீடுகளிலும் என் நேரமும் வந்து போய்க் கொண்டு தான் இருக்கிறது. இது இல்லாத வாழ்க்கை எங்கேயும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபம்  வராதவர்கள் மிகவும் அரிது. எதிர்பார்த்து ஏமாறுவதாலும், ஆற்றாமையாலும் கோபங்கள் வருவது இயல்பு. 

கோபத்திற்கான தருணங்களை கவிதையில் அழகாகக் கொண்டுவந்த நிலாமதி அக்காவுக்குப் பாராட்டுக்கள்.

நல்ல அனிமேசன்களை இணைத்த தமிழ் சிறி அண்ணாவுக்கும் நன்றி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபம்

எனக்கும்  கோபம்

யாழில்  நீங்கள் எழுதாதது  கோபம்

எங்களை  விட்டு தள்ளிஇருப்பது   கோபம்

பாட்டி ஆனதால் வந்த கோபமிது

நன்றி பாட்டி

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விசுகு said:

கோபம்

எனக்கும்  கோபம்

யாழில்  நீங்கள் எழுதாதது  கோபம்

எங்களை  விட்டு தள்ளிஇருப்பது   கோபம்

பாட்டி ஆனதால் வந்த கோபமிது

நன்றி பாட்டி

தொடருங்கள்

 

 

நான் (சு )வாசிக்கும்  யாழை விட்டு எங்கே  தள்ளிபோவேன் .. ஒரு வேளை உங்கள்கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம் . நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் பதிவுகள் வரும்.  

https://www.youtube.com/watch?v=PiL5UTTTrxk

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபக்காற சுண்டெலி

கொட்டடி மாவைக் கிண்டடி

புட்டை அவித்து கொட்டடி

கடகடன்று தின்னடி.

சிறு வயதில் இப்படி கோபக்காரரை பார்த்து பகிடி பண்ணிய ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 விருப்பு  வாக்குகள்  இடடவர்களுக்கும் என் பதிவை வாசித்தவர்களுக்கும்
 என் ந ன்றிகள் . விசேடமாக தமிழ் சிறீக்கு அவரது படங்களுக்கும் நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு தமிழ் புடவைக்கடைக்கு சென்றிருந்தேன் வியாபார நிலையத்தில் வேலைசெய்பவர்,வாடிக்கையாளராகிய என்னுடன் பேசியவிதம் என்னை கோபமடையவைத்துவிட்டது...நான் முதலாளியிடம் முறையிட தொழிலாளி என்னை முறைத்துப்பார்க்க‌ ,திரும்பி நான் அவரை முறைத்து பார்க்க .....

கோபம் எப்ப வரும் எங்க வரும் என்று சொல்ல முடியாது...கோப கவிதைக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

நேற்று ஒரு தமிழ் புடவைக்கடைக்கு சென்றிருந்தேன் வியாபார நிலையத்தில் வேலைசெய்பவர்,வாடிக்கையாளராகிய என்னுடன் பேசியவிதம் என்னை கோபமடையவைத்துவிட்டது...நான் முதலாளியிடம் முறையிட தொழிலாளி என்னை முறைத்துப்பார்க்க‌ ,திரும்பி நான் அவரை முறைத்து பார்க்க .....

கோபம் எப்ப வரும் எங்க வரும் என்று சொல்ல முடியாது...கோப கவிதைக்கு வாழ்த்துக்கள்.

வயது போனால் கோபம் குயிக்கா அதான் திடிரென வருமாம்  அண்ணtw_blush:

அக்கா தொடரட்டும் யாழ்கள பாட்டி ஆகிட்டீங்க் வாழ்த்துக்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருத்தான கவிதை சகோதரி....!

கோபம் பாவத்தைத் தேடும் என்று அம்மா அடிக்கடி சொல்லுவா...... அவ அடிக்கும்போது நானும் உதைச் சொல்லியே தப்பி ஓடி விடுவேன்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் கோபத்தைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது நிலா அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


அழகுவரிகளால் கோபத்தைப் பின்னிய நிலாமதியவர்களுக்குப் பாராட்டுகள்!

கோபம் என்ற உணர்வு அப்பப்பா அடக்குதல் காட்டுதல் இடம் என்று எங்கெங்கோ நிலைத்தும் கலைந்தும் போகிறது. அடக்கப்படவேண்டியது. ஆனால் போலிகளைக் காணும்போது .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.