Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

17883823_10155197244671950_7121940480000

ஈஸ்டர் கவிதை

பாரஞ்சுமந்தவரை பக்கமழைத்து - இன்ப
பரலோக ராச்சியத்தைக் காட்டு மன்பனாய்
ஈரமனத்தினொடு பாவிகட்கெல்லாம் - தன்றன்
இரட்சிப்பை ஈந்தவரை ஏற்கும் சுதனாய்

நானே வழி எனது சத்தியத்திலே - நின்றால்
நமது பிதாவினை நீர் சென்றடைகுவீர்
வீணே வழிதவறிச் சென்றிடாமலே - எந்தன்
வௌ்ளாட்டு மந்தைக்குள்ளே வந்திணைகுவீர்

செய்திட்ட பாவெமெ்ல்லாம் கொண்டுவருவீர் - எந்தன்
சேவடி தன்னிலதை ஒப்புக் கொடுப்பீர்
உய்ய மனந்திரும்பி வாருமன்பரே - நான்
உங்களுக்காக என்றன் உயிர்கொடுப்பேன்

பாவத்தின் சம்பளமே மரணமதாம் - அந்தப்
பாவத்தை ஏற்கிறேன் பயமொழிவீர்
தேவன் எமது பிதா சன்னதியிலே - நித்ய
ஜீவன் உமக்குண்டு நீள் புவியிலே

ஆக்கினையை உங்களுக்காய் அனுபவிப்பேன் - செய்யும்
ஆட்களுக்கும் மன்னிப்பைப் பெற்றுக் கொடுப்பேன்
தூக்கிச் சிலுவையிலே தொங்க வைத்தாலும் - அந்தத்
துயர் பொறுப்பேன் உமக்காய் உயிர் துறப்பேன்

தட்டத் திறக்குமந்த அருட்கதவு - அங்கு
தாழ்பணிந்து கேட்பவர்க்கு இல்லை மறுப்பு
எட்டுத் திசையும் தேடும் இன்னலங்கில்லை - எங்கள்
இதயத்துள் உள்ள அதற் கீடிணையில்லை.

என்றுரைத்த இயேசு சுதன் ஆக்கினையினால் - ஏலே
ஏலே லாமாசபக் தானி எனவே
தன்துயரம் தாங்காமல் பரிதவித்தான் - அவன்
தவிப்பினில் பங்கெடுத்துத் துயர் பகிர்வோம்

இன்று சுதன் பட்டதுயர் நினைவில் வைத்தே - அதை
ஈஸ்டர் என இவ்வுலகம் அனுஷ்டிக்குதாம்
அன்று மனிதர் புரிந்த பாவமனைத்தும் - தாங்கி
அற்புதனின் அன்புலகில் நிலைநிற்குதாம்.

(ஏலே
ஏலே லாமாசபக் தானி - இறைவா இறைவா என்னையேன் படைத்தாய்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் அழக்கான வரிகள் தொடரட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்ட்டர் திருநாளில் அற்புதமான கவிதை கரு ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for images easter eggsஈஸ்டர் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für easter gif

ஈஸ்டர் கவிதை ஆக்கத்தினை... எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு, நன்றி கரு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை விரும்பிக் கருத்தெழுதிய அனைவருக்கும் நன்றி.  கவிதைக்கான எனது அடிக்குறிப்பில் ஒரு சிறு திருத்தம் -(ஏலே
ஏலே லாமாசபக் தானி - இறைவா இறைவா என்னையேன் கைவிட்டாய்).

Link to comment
Share on other sites

கவிதையும் காலமறிந்து எழுதினால் புவியில் வாழும்.

சுதன் பட்டதுயரை இவ்வுலகம் அனுட்டிக்கும் நாளில் அற்புதமான கவிதை, கருவே.... ! :100_pray:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.