Jump to content

'சிவி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்'


Recommended Posts


'சிவி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்'
 
 

article_1492506802-cv-new.jpgகத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் இயேசு கிறிஸ்துவை, 9 சிறுமிகளை கற்பழித்த  குற்றச்சாட்டில் பாலியல் வழக்கு தொடரப்பட்ட  பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு, ஊடகம் ஒன்றுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ப. அன்டன் புனிதநாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டது என்றும் அவரை  கத்தோலிக்க மக்கள் வழிபடுகின்றார்கள் என்றால், 9 சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியையும் மக்கள் வழிபடுவதில் தவறில்லை என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

இது முற்றிலும் பிழையான விடயம் என்பதுடன் வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளக்கூடாது என்பதனையும் அவருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

வட மாகாண முதலமைச்சர் பதவியானது சகல மதத்துக்கும் பொதுவானதொரு பதவியாகும். அவ்வாறு இருக்கின்ற போது, வடமாகாண முதலமைச்சர் அனைத்து செயற்பாடுகளையும் இனம், மதத்திற்கு அப்பால் செய்வதே சால சிறந்த விடயம் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எனவே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இயேசுக் கிறிஸ்துவை விமர்சித்து பேசியதற்கு கத்தோலிக்க திருச்சபையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/194970/-ச-வ-பக-ரங-க-மன-ன-ப-ப-க-ர-வ-ண-ட-ம-#sthash.Oa49DuqH.dpuf
Link to comment
Share on other sites

தான் ஒரு முட்டாள் என அவர் மீண்டும் மீண்டும் வலிந்து நிரூபித்தாலும் பலர் நம்பத் தயாரில்லை. அவர் எப்படித்தான்நம்பவைப்பது.

Link to comment
Share on other sites

சமகால அரசியல் தொடர்பாக முதலமைச்சர் CV விக்னேஸ்வரன் தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்-அமைச்சரவை ஊழல்மோசடி விசாரிக்கப்படவேண்டும், இதில் பாரபட்சம் காட்ட முடியாது

April 14, 2017 3,553 Views

 

சமகால அரசியல் தொடர்பாக முதலமைச்சர் CV விக்னேஸ்வரன் தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் – அமைச்சரவை ஊழல்மோசடி விசாரிக்கப்படவேண்டும் இதில் பாரபட்சம் காட்ட முடியாது.

 

 

வவுனியா பொருளாதார மத்திய மையம் தொடர்பாக நான் தவறு இழைக்கவில்லை அதற்காக அமைச்சர் சத்தியலிங்கத்தின் மூன்று அமைச்சுப்பதவிகளையும் பறிக்கவும் இல்லை சமகால அரசியல் தொடர்பாக முதலமைச்சர் CV விக்னேஸ்வரன் தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்  -வவுனியா பொருளாதார மத்திய மையம் தொடர்பாக நான் தவறு இழைக்கவில்லை. அதற்காக அமைச்சர் சத்தியலிங்கத்தின் மூன்று அமைச்சுப்பதவிகளையும் பறிக்கவும் இல்லை. சரியான திட்டமிடல் இன்றி அரசியல் வாதிகள் தமது சொந்த இடத்தில் சொந்த காணிக்கு அருகாமையில் அமைக்க முனைந்ததன் விளைவே இவ்வாறு ஓமந்தையிலும், தாண்டிக்குளத்திலும் பொருளாதார மத்திய மையம் அமையமுடியாமல் போனது

வடமாகாண சபைக்கு வருகின்ற அபிவிருத்திகளை நீங்கள் வேண்டும் என்றே தடுத்து நிறுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளுகிறீர்களா? இல்லை தவறான குற்றச்சாட்டு – முதலமைச்சர் CV விக்னேஸ்வரன் தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.

ஆயுதகட்சிகளுடன் இணைந்து நான் அரசியலில் பயனிக்க முடியாது என கூறிய நீங்கள் இன்று தமிழ்மக்கள் பேரவையில் இருக்கக்கூடிய ஆயுதக்கட்சிகளுடன் இணைந்து தமிழரசு கட்சிக்கு எதிராக செயல் வடிவம் கொடுக்கிறீர்களே அது ஏன் ?நீங்கள் சிங்களப்பேரினவாதிகளுடன் இரண்டறக் கலந்தவர் என்று கூறியவர்களும் இவர்கள் தான் நினைவிருக்கிறதா? அது …

வடமாகாணசபையின் அமைச்சர்கள் ஊழல்மோசடி செய்தார்கள் என்றார்ல் பிரதி முதலமைச்சர் பதவியை ஏன் அமைச்சர் ஜங்கரனேசநிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு சென்றீர்கள் நீங்கள் அவரை மாத்திரம் காப்பாற்ற ஏன் முனைந்தீர்கள்? நேர்காணலில் அதிர்ச்சி தகல்களை வெளியிட்டார்  முதலமைச்சர் CV விக்னேஸ்வரன்.

தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.

 

2000 வருடங்ளுக்கு முன் இயேசு கிறீஸ்து ஒரு குற்றவாளி, பாவி. அவருக்கு மரணதன்டனை வழங்கப்பட்டது. அதேபோல் பாலியல் கொலை வழக்கில் ஒன்பது சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியும் அவரை கடவுளாக மனிதர்கள் வணங்குவதில் தவறு இல்லை – வடமாகாண முதலமைச்சர் தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய பரபப்பு பேட்டி.

புனித இயேசு நாதரை பாலியல் பிறேமானந்தாவுடன் இறைவன் என ஒப்பிட்டுப்பேசிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

 

 

http://www.thinappuyalnews.com/archives/113419

Link to comment
Share on other sites

9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்தாவுடன் இயேசுவை ஒப்பிட்டு பேசிய முதலமைச்சருக்கு கடும் எதிர்ப்புகள்

 

 

கத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் ஆண்டவர் இயேசுவை பாலியல் வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு ஊடகம் ஒன்றுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழங்கிய கருத்திற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

குறித்த கருத்து தொடர்பாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ப.அன்ரன் புனிதநாயகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிறித்தவ சமய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைக்கு செவிமடுத்து அவரைப் பின்பற்றியோர் ஒரு குழுவாக அமைந்த போது அக்குழு திருச்சபை என்னும் பெயர் பெற்றது.

இன்று பெரும்பான்மை கத்தோலிக்கர்கள் வாழ்ந்து வரும் நிலையில் ஒட்டு மொத்த கத்தோலிக்க சமூகமும் இணைந்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அவர்களின் கருத்திற்கு வலுவான கண்டனத்தினை தெரிவித்து நிற்கின்றது.

அதேவேளை ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழ், சிங்கள கத்தோலிக்க மக்களும் வடமாகாண முதல்வர் அவர்களின் மதவாதத்தை தூண்டும் கருத்திற்கு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டு நிற்கின்றது.

கடந்த வாரம் வடமாகாண முதலமைச்சர் ஆண்டவர் யேசுநாதரை, ஒன்பது சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு இணையத்தளங்களில் வெளியிட்ட கருத்திற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் வன்மையான கண்டனத்தை தெரிவித்து நிற்கின்றோம்.

ஆண்டவர் யேசு உலகத்திலே அவதரித்து மக்களின் பாவங்களை போக்க கல்வாரி சிலுவையில் பாடுப்பட்டு மக்களுக்காக உயிர் விட்ட ஆண்டவர் யேசு கிறிஸ்துவை பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டுப் பேசியதை கத்தோலிக்க இறைமக்களும், கத்தோலிக்க திருச்சபையும் வன்மையாக எதிர்த்து நிற்கின்றோம்.

“ஆண்டவர் யேசு 2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது என்றும் இவரை கத்தோலிக்க மக்கள் வழிபடுகின்றார்கள் என்றால் பாலியல் கொலை வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியையும் மக்கள் வழிபடுவதில் தவறில்லை” என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஊடகம் ஒன்றிற்கு பரபரப்பான பேட்டி அளித்துள்ளமை மிகவும் கண்டனத்திற்குரிய விடயம் என மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தெரிவித்து நிற்கின்றது.

முதலமைச்சர் அவர்கள் வடமாகாண முதலமைச்சராக இருந்து கொண்டு 14.04.2017 அன்று ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் ஆண்டவர் யேசுவை விமர்சித்துள்ளார்.

இது முற்றிலும் பிழையான விடயம் என்பதுடன் வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதனையும் அவருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

வட மாகாண முதலமைச்சர் பதவியானது சகல மதத்திற்கும் ஒரு பொதுவானதொரு பதவி.

அவ்வாறு இருக்கின்ற போது வடமாகாண முதலமைச்சர் அனைத்து செயற்பாடுகளையும் இனம், மதத்திற்கு அப்பால் செய்வதே சால சிறந்த விடயம் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இன்று வடமாகாணத்தை பொறுத்த மட்டில் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை முன்வைத்து இரவும் பகலும் வீதிகளில் போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இவற்றை எல்லாம்

புறந்தள்ளிவிட்டு அவரின் மதம் சார்ந்த விடயத்தில் அக்கறை கொண்டு கத்தோலிக்க திருச்சபைக்கும் இந்து மதத்திற்கும் இடையில் இவ்வாறான பிரிவினைவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளமை ஒரு முதலமைச்சருக்குரிய பண்பும், தகுதியும் இல்லை என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இன்று இலங்கை நாட்டில் கத்தோலிக்க தமிழ் சிங்கள மக்கள் பரவலாக வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலையில் வடமாகாண முதலமைச்சர் அவர்கள் வட மாகாணத்தில் சகல மத மக்களாலும் வாக்குகள் அளிக்கப்பட்டு தான் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு கதிரையில் அமர்ந்துள்ளார் என்பதனை நினைவூட்ட விரும்புகின்றோம்.

வட மாகாண முதலமைச்சர் அவர்கள் வடமாகாணத்தில் சகல மத மக்களுக்கும் பொதுவானதொரு மனிதனாக இருந்து கொண்டு மதங்களுக்கிடையில் பிரிவினைகளையும், மதவாத

கருத்துக்களையும் வெளியிடுவதாக இருந்தால் அவர் வடமாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேறி ஒரு பொதுவான தலைவர்களுக்கு இடம் விட்டுக்கொடுப்பதே பொருத்தமான விடயம் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இவ்வாறு எமது கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு பற்றி வடமாகாண முதலமைச்சர் சரியான விடயங்களை அறிய வேண்டும் என்று சொன்னால் கத்தோலிக்க திருச்சபையின்

மேற்றாசனத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என்பதனையும் முதலமைச்சர் அவர்களுக்கு கூறிக்கொள்ளுகின்றோம்.

எனவே வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உடனடியாக ஆண்டவர் யேசுக்கிறிஸ்துவை விமர்சித்து பேசியதற்கு கத்தோலிக்க திருச்சபையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் .

இல்லையெனில் இலங்கை முழுவதும் உள்ள தமிழ், சிங்கள கத்தோலிக்க மக்கள் அனைவருடைய கேள்விகளுக்கும், போராட்டத்திற்கும் முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகும் என்பதனை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும், மன்னார், யாழ் மறைமாவட்ட சட்ட ஆலோசகருமான சிரேஸ்ட சட்டத்தரணி ப.அன்ரன் புனிதநாயகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/statements/01/143016?ref=lankasri-home-dekstop

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, hasan said:

தான் ஒரு முட்டாள் என அவர் மீண்டும் மீண்டும் வலிந்து நிரூபித்தாலும் பலர் நம்பத் தயாரில்லை. அவர் எப்படித்தான்நம்பவைப்பது.

cv இறை நம்பிக்கையில் முட்டாளாக இருக்கலாம் தமிழரின் உரிமைகள் தொடர்பாக அங்கு தாங்கள்தான்தமிழர் தலைமை என்று சொல்லிகொண்டுசிங்கள அரசியல்வாதிகளுக்கு முதுகு சொறியும் கூட்டத்தை விட cv எவ்வளவோ மேல் .

Link to comment
Share on other sites

சிங்கள தலைவர்கள் தம் செயற்திறன் குறைந்து மக்களால் அது உணரப்படும் வேளைகளில் இனவாதக் கருத்துகளை வெளிவிட ஆரம்பிப்பார்கள். சிங்கள மக்களும் தம் தலைவர்களின் இயலாமையை கணக்கெடுக்காது இனவாதத்தினை ஆதரிப்பார்கள்.

தன் சக அமைச்சர்கள் செய்யும் ஊழல்களை தடுக்க முடியாத அல்லது அவர்களை வெளியேற்ற துணிச்சல் இல்லாத, செயற்திறன் அற்ற சி.வி.யும் சிங்கள தலைவர்கள் போல் இனவாதம்/ மதவாதம் கதைத்து மக்களிடம் ஆதரவை எதிர்பார்க்கின்றார் போலிருக்கு.

Link to comment
Share on other sites

அன்று சாமியார் தரப்பு நீதிபதி! இன்று அமைச்சர் சார்பு முதல்வர்?!

குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 என்றால் பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிய வேண்டுமானால் திருச்சி விராலி மலையில் ஆசிரமம் நடத்தி, அங்கு நடந்த கொலை மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டில் கைதாகிய, செக்ஸ் சாமியார் என அறியப்பட்ட, பிரேமானந்தா அவர்களின் வழக்கு பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். இலங்கையின் மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட அவர், ஆரம்பத்தில் கிளிநொச்சி திருநகரில் ரவி சாமி என்ற பெயரில் சில சித்து விளையாட்டுகள் காட்டினார். மாணவபருவத்து நண்பர்கள் சிலர் ஒன்றுகூடி அவரை அங்கிருந்து இடம்பெயர செய்ததால், அவர் இன்று நிலத்தடி நீர் மாசுபட்ட சுன்னாகத்தை அன்றே மாசுபடுத்த அங்கு சென்று ஆசிரமம் அமைத்தார். அப்போது மல்லாகம் நீதிமன்றில் நீதிவானாக இருந்த சி வி விக்னேஸ்வரன் அவரின் பக்தரானார்.

1983 கலவரத்தின் பின் திருச்சி சென்று விராலிமலை எனும் இடத்தில் ஆசிரமம் அமைத்து, பிரேமானந்தா சுவாமி என்ற புது அவதாரம் எடுத்தவர், அங்கு அகதிகளாக வந்த வறிய குடும்பத்து தமிழ் சிறுமிகளை ஆசிரமத்தில் தங்கவைத்து கல்விகற்பிப்தாக கூறி, அவர்களை தனது சுயஇச்சை  தேவைகளுக்கு பயன் படுத்தியதை எதிர்த்த ஒருவாரை கொன்று, ஆசிரம வளாகத்தில் புதைத்தது உட்பட தன் போன்ற சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்த விடயங்களை, அங்கிருந்து தப்பிசென்ற சிறுமி பகிரங்கப்படுத்த பிரேமானந்தா கைதானார். மிகவும் பரபரப்பான அந்த வழக்கில் பிரேமானந்தா நல்லவர் அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டு திட்டமிட்டு சிலரால் முன்வைக்கபட்டுள்ளது என, அவருக்கு சார்பாக சாட்சி சொல்ல இந்திய நீதிமன்றம் சென்ற, அந்த வழக்கின் குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 , சாட்சாத் இன்றைய வடமாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன் அவர்களே. அன்று அவர் நீதிபதி.

வெளிநாட்டு பக்தர்களின் பல லட்சம் பணம் செலவிடப்பட்டு மிக பிரபலமான இந்திய வழக்கறிஞர்கள் வாதாடியும், இலங்கை நீதிபதியும் குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13ம் ஆன சி வி விக்னேஸ்வரன்  அவர்கள், பிரேமானந்தா நல்லவர் குற்றமிளைதிருக்கமாட்டார் என சாட்சி சொல்லியும், தகுந்த ஆதாரங்களுடன் அவர் செய்த லீலைகள் அம்பலபடுத்தபட்டு, மூன்று மேன்முறையீட்டு விசாரணை  நடந்த பின்பு, பிரேமானந்தா குற்றவாளி என இந்திய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீண்ட சிறை வாசத்தின் பின் செய்த பாவங்கள் எல்லாம் உடல் நோயாக மாறி, பிரேமானந்தா சிறையிலேயே இறந்தார். நீதிபதி என்ற தன் கௌரவத்தை கைவிட்டு கொலை, தமிழ் சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஒருவருக்காக, குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 அவதாரம் எடுத்த சி வி விக்னேஸ்வரன் உயர் நீதிமன்ற நீதியரசராக ஒய்வு பெற்றார். 

பிரபாகரனை நம்பியும் பலவந்தமாகவும் வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்று, முள்ளிவாய்க்காலில் பேரவலத்தை சந்தித்த மக்கள் இராணுவ பிடியில் இருந்து தாமக்கும், தமது வாழ்விடங்களும் விடியல் வரும் என்ற நம்பிக்கையில், வட மாகாண சபை தேர்தலில் வாக்களித்ததால் முதல்வர் ஆனா சி வி விக்னேஸ்வரன், தனது முதலாவது தமிழ் நாட்டுக்கான விஜயத்தின் போது திருச்சி விராலிமலை சென்று, கொலை மற்றும் தன் பராமரிப்பில் இருந்த தமிழ் சிறுமிகள் மீது பாலியல் குற்றம் புரிந்தவர் என, இந்திய நீதி தண்டித்த ஒருவரின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தி, வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு வாய்க்கரிசி போட்டார். யுத்த அத்துமீறல் செய்த ராணுவத்தின் செயலை போன்ற செயலை செய்தவருக்கு அஞ்சலி செய்தவரா, தேர்தல் காலத்தில் எம் பிரதேசத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவேன் என கூறியதை செயல்படுத்துவார், என மக்கள் நம்பிக்கை இழந்தனர். இன்றுவரை அதுதான் நிலைமை.

இதில் வினோதமான விடயம் ஒன்றும் உள்ளது. முதல்வரின் தமிழக விஜயம் தனிப்பட்ட விஜயமாக இருந்த போதும், அதனை ஒழுங்குசெய்து சகல பயண செலவினம் உட்பட அனைத்தையும் ஏற்பாடு செய்தவர்கள், மறைந்த இந்தியாவின் பிரபல மனித உரிமைகள் வக்கீலான கண்ணபிரான் அவர்களின் நினைவு பேருரை ஆற்றவே, சி வி விக்னேஸ்வரனை அழைத்திருந்தனர். அந்த பயணத்தின் போது தனக்கு கிடைத்த கால அவகாசத்தை பயன்படுத்தி திருச்சி விராலிமலை சென்று, இந்திய நீதிமன்றால் தண்டிக்கப்பட்ட கொலைகாரன், செக்ஸ் சாமியார் என அனைவராலும் அறியப்பட்ட, மூன்று மேன் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டு தண்டனை பெற்று, இறுதிவரை சிறையில் இருந்து மரணித்த பிரேமானந்தாவின் சமாதிக்கு அஞ்சலி செய்தார். எந்த மனித உரிமை வக்கீல் கண்ணபிரான் அவர்களின் நினைவு பேருரை நிகழ்த்த சென்றாரோ, அதே மனித உரிமை வக்கீலான கண்ணபிரான் தான் அந்த வறிய தமிழ் சிறுமிகள் சார்பில் வாதாடி, அவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பிரேமானந்தாவுக்கு தண்டனை வாங்கி கொடுத்தவர் என்பது பலர் அறியாத வினோதம். 

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது என்ற பொது விதியின்படி, மாற்று ஆள் சார்முறை [ Adversarial  system ] அடிப்படையில், சி வி விக்னேஸ்வரன் குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 அவதாரம் எடுத்த செயலை தவறென கொள்ளாவிட்டாலும், இந்திய நீதிமன்றில் மூன்று மேன்முறையீட்டின் பின்பும் குற்றவாளி என தீர்ப்பளிக்கபட்டவருக்கு அஞ்சலி செய்தது, அவரது சுய முடிவு என கொண்டாலும், அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் சிறுமிகளுக்காக ஆஜராகிய, இந்தியாவின் பிரபல மனித உரிமை வக்கீல் அவர்களின் நினைவு பேருரை நிகழ்த்த என அழைக்கப்பட்டவர், ஆதாரங்களின் அடிப்படையில் குற்றசாட்டுககள் நிரூபிக்கப்பட்டு,    கொலை மற்றும் தமிழ் சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் செய்தவர் என தண்டிக்கப்பட்ட  பின்பும், அஞ்சலி செய்தது அந்த வழக்கில் வாதாடிய அமரர் கண்ணபிரான் அவர்களை, அகௌரவ படுத்தியதாகவே விமர்சிக்கப்பட்டது. 

  

அன்று நீதிபதியாக இருந்தபோது பிரேமானந்தா விசாரணைக்கு 13 வது சாட்சியாக செயல்பட்டவர், இன்று முதல்வராக விசாரணை இன்றியே அமைச்சருக்கு சார்பாக தீர்ப்பு சொல்ல முயல்கிறார். அமைச்சர் ஐந்கரநேசனுக்கு எதிராக ஊழல் மற்றும் நிதி துஸ்பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டை வைப்பவர் இலங்கையின் முதல்தர செயல்ப்பாடு கொண்ட நகரசபை என, வவுனியா நகரசபை பாராட்டு பெறும் வண்ணம் நகரசபையை நடத்திய, அதன் தலைவராக இருந்த ஜி ரி லிங்கநாதன். முதல்வர் கூறுவது போல வெறும் சேறுபூசும் செயல் என்றால் ஏன் தான் வைக்கும் குற்றசாட்டுகள் தவறு என்றால், பதவி விலகுகிறேன் என உறுப்பினர் சபையில் கூறவேண்டும். தனது அமைச்சர் பற்றிய பதிலை சபையில் கூறாமல் ஏன் முதல்வர் முழங்காவிலில் நடந்த பொது கூட்டத்தில், பனங்காட்டு நரி என அமைச்சரை பாராட்ட வேண்டும். அன்று நீண்ட நீதிபரிபாலன அனுபவம் கொண்டவர் வடக்கின் முதல்வர் ஆகிறார் என்றவுடன், முன்நாள் ஜனாதிபதி மகிந்தவே சற்று கலக்கம் அடைந்தார். ஆனால் இன்று?

மிகுந்த எதிர்பார்க்கையுடன் தான் வடபகுதி மக்கள் முதல்வரை வரவேற்றனர். நந்தவனத்து ஆண்டிபோல அந்த நம்பிக்கைக்கு நடந்தது என்ன? குற்றவாளிக்கு விராலிமலை வரை சென்று அஞ்சலி செய்தவர், முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூர மரம் நட்ட இடம் அமைச்சர் குருகுலராஜா அவர்களின் உத்தியோக வாசஸ்த்தல பின்புறம். அதனை தேர்ந்தெடுத்தவர் அமைச்சர் ஐங்கரநேசன் என்பது உள்வீட்டு செய்தி. ஆரம்பத்தில் இருந்தே முதல்வர் தன் செயல்ப்பாட்டின் மூலம் வாக்களித்த மக்களின் நம்பிக்கையை நோகடிக்க தொடங்கிவிட்டார். பிரபாகரனை மாவீரன் என வெறும் வாக்கு பெறும் நோக்கிலேயே சொன்னார் என்பது, போக போக அவர் செயல் மூலம் தெரியவந்தது. ஆயுதம் எந்தியவர்களுடன் ஒவ்வாமை கொண்டார். அரசியலுக்கு அழைத்து வந்தவர்களை விடுத்து மாற்று கட்சியின் வெற்றிக்கு மறைமுகமாக அறிக்கைவிட்டு, வாக்காளரை குழப்பமடைய செய்தார். கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக முதல்வராக இருந்து எதனை சாதித்தார் என தேடவைத்தார்.

பிரதம செயலாளர், இராணுவ பின்புல ஆளுநர் மாற்றம் நிகழ்ந்தபின்பும் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. தனக்கு வேண்டியவரின் நியமனத்துக்காக முன்னாள் ஜனாதிபதி உட்பட, ஐநா அதிகாரி வரை சிபார்சு செய்தவர் தன்னை தெரிவுசெய்த மக்களுக்காக என்ன செய்தார் என்ற கேள்வியை  எதிர்கட்சி முன்வைக்கும் போதெல்லாம் அவருக்கு ஆதரவாக சபையில் பேச ஒரு அணியை வைத்திருந்தார். இன்று அவர்களே எதிர்க்கும் நிலை வந்தபோது அமைச்சரை காக்க வாதாடுகிறார். சுன்னாக நீர் மாசு விடயத்தில் முதல்வர் அமைத்த நிபுணர் குழு பற்றிய விடயத்தை, மல்லாகம் நீதிவான் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். இரணைமடு நீர், கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் எல்லாம் பலத்த கண்டனம், மற்றும் விமர்சனத்துக்கு உட்பட்டன. மாகாண சபைக்கான நியதிசட்டங்களை உருவாக்கும் திறனற்ற அதே வேளை, தமிழ் மக்கள் பேரவை தயாரித்த அரசியல் தீர்வு வரைவை பெற்று பெருமிதம் கொண்டார். சுமந்திரனும் மாணவன் புவிதரனும் மாணவன். ஒருவர் துரோகி மற்றவர் அனுதாபி என்ற மாறுகண் பார்வை கொண்டார்.

அன்று அமைச்சு பதவிக்காக முரண்பட்டவர், இன்று அமைச்சர் ஐங்கரநேசன் விடயத்தில் தன்பக்கம் பேசுவதால் அவருக்கு நல்வரவு கூறுகிறார். முதல்வர் கூற்றுப்படி அமைச்சர் பனங்காட்டு நரி என்றால் அவர்மீது குற்றசாட்டு வைப்பவர் என்ன வளையில் மறையும் எலிகளா? அறிவும் அனுபவமும் கொண்ட ஒருவர் இவ்வாறு செயல்பட முடியுமானால், சாதாரண பின்புலம் கொண்டவர்கள் முன்பு அதிகாரத்தில் இருந்தபோதுவிட்ட தவறுகளை சுட்டிக்காட்டி, முன்பு நடந்தது போல் நாட்டாண்மை அரசியல் நிர்வாகத்துக்கு இனி இடமில்லை என, ஏன் முன்னாள் அமைச்சரை சாடினார்? இன்று முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகளை விசாரிக்காமலே தட்டிக்களித்து தீர்ப்பு சொல்ல முற்படுவது நாட்டாமைதனம் இல்லையா. மத்திய அரசுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் செயல்பட்டதை விமர்சித்தவர், இன்று வட மாகாண அரசின் முதல்வராக இருந்து செய்யும் செயல் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதா? சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள் என்பது மாகாண அமைச்சருக்கும் பொருந்துமா?

ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் நிறைந்து காணப்பட்ட வட மாகாணத்தின் நிர்வாகத்தை, மாற்றுவார் என நம்பியே மக்கள் முன்னாள் நீதி அரசரை முதல்வராக தெரிவு செய்தனர். இராணுவம், அரச சார்பு அரசியல்வாதிகள், அவர்கள் ஆசிபெற்ற அதிகாரிகள், உயர்கல்வி நிலைய கல்வியாளர், பிரதேசசபை ஊழியர் என அனைத்து மட்டத்திலும், மணல் தொடங்கி யாழ் பல்கலைகழக நிர்வாகம்  வரை எங்கும் எதிலும் மறைகரங்களின் இறுக்கமான பிடி இருந்த வேளையில்தான், வட மாகாண சபை தேர்தல் வந்தது. மாற்றம் வேண்டியே மக்கள் பேராதரவை கொடுத்தனர். தனது தனிப்பட்ட தவறால் பதவி இழந்த முதலாவது எதிர்கட்சி தலைவர் இருக்கும்வரை, முதல்வரின் செயலாமை வெளிவரவில்லை. ஆனால் புதிய எதிர்கட்சி தலைவரின் வருகையின் பின் மாகாண சபைபற்றிய சலசலப்பு தொடங்கியது. தூங்கி வழிந்த முதல்வரை தன் கேள்விக்கணைகளால் துயில் எழுப்பினார் இன்றைய எதிர்கட்சி தலைவர். அதுவரை தீர்மானங்களை நிறைவேற்றி பத்திரிகைக்கு தீனிபோட்ட சபை திணற தொடங்கியது. 

முதல்வர் மீது நேரடி கணைகளை, அவர் நியமிக்க விரும்பிய அவுஸ்ரேலிய பிரஜை பற்றிய விபரம் கேட்டு எதிர்கட்சி தலைவர் எய்தபோது முதல்வர் தடுமாறினார். அடுத்தடுத்து அவர் எழுப்பிய கேள்விகளால் அதுவரை மெத்தனமாக இருந்த ஆளும்தரப்பு உறுப்பினர்கள், வினைத்திறன் உள்ள மாகாண சபை முறைமை வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் முன்வைத்தனர். அவர்கள் கேள்விகளால் வேள்வி செய்ய ஊழல் அதிகார துஸ்பிரயோகம் வெளிப்பட்ட வேளையில், அதில் முதலில் வெளிச்சத்துக்கு வந்தவர் அமைச்சர் ஐங்கரநேசன். ஜி ரி லிங்கநாதன் முன்மொழிந்த பிரேரணையை விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டிய முதல்வரே, பிரேமானந்தாவின் கொலை, தமிழ் சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 ஆக ஆஜராகி, அவர் நல்லவர் போற்றுதலுக்கு உரியவர் என கூறியது போல, அமைச்சருக்கு விசாரணை இன்றியே நற்சான்றிதழ் வழங்குகிறார். பிரேமானந்தா வழக்கு விசாரிக்கப்பட்டபோது நீதிபதியாக இருந்தவர் குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 ஆக முன்வைத்தவர், தனது அமைச்சர் மீதான குற்றசாட்டை விசாரிக்கவே விரும்பாது, தீர்ப்பை முதல்வராக இருந்து முன்வைப்பது விநோதமானது. 

  

அமைச்சர் ஊழல் மற்றும் நிதி துஸ்பிரயோகம் செய்தாரா என்பது, அவருக்கும் அவர் மீது குற்றம் சுமத்துபவர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். அதை மக்கள் அறிய நியாயமான விசாரணை தேவை. வீணடிக்கப்பட்ட தாக கூறப்படும் நிதி மக்களின் வரிப்பணம். அவர்களின் மீள் எழுச்சிக்கு என ஒதுக்கப்பட்ட பணம். எனவே குற்றம் இடம்பெற்றதா என அறியும் உரிமை அவர்களுக்கு உண்டு. அமைச்சர் ஐந்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சு, பெரும்பாலான விவசாயம் மற்றும் அதனோடு சம்மந்தபட்ட துறை சார்ந்தது என்பதால், அது வடக்கின் பொருளாதாரத்தோடு பின்னிப்பிணைந்தது. நிலத்தடி நீர் மாசு, அதிக இரசாயன உர பாவனை மற்றும் சீரற்ற கால நிலை மட்டுமல்ல வளமான பயிர் நிலங்கள் இராணுவ பிடியில் இருப்பதால், அதனை நம்பி ஜீவனோபாயம் செய்யும் சாதாரண மக்களின் கண்ணீரோடு சம்மந்தபட்ட விடயம் என்பதால், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி என இதனை எடுக்காது, பொது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி முக்கியத்துவம் கொடுத்து, முதல்வர் திறந்த மனதுடன் இந்த விடயத்தை கையாண்டு, உண்மையை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்.

கடந்த காலத்தில் ஆடிய ஆட்டம், பேசிய வார்த்தை, தேடிய செல்வம் காரணமாக விசாரணை கமிசனுக்கு செல்லும், முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலர், நீதிமன்ற படியேறி விளக்க மறியல் விஜயம் செய்தவர், இன்றும் விளக்க மறியலில் இருப்பவர் என முன்னாள் அமைச்சர், கடல்படை அதிகாரி, முன்னாள் கிழக்கு முதல்வர் அவரின் சகபாடிகள், பரணகம அறிக்கையில் அடையாளம் காட்டப்பட்டதால், நாளை என்ன நடக்கும் என பயந்து முந்திக்கொண்டு, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என கூச்சல் இடுபவர் எல்லாம், விசாரணைக்கு முகம் கொடுக்கும் புதிய சூழல் நாட்டில் உருவாகி, மாற்றம் ஒன்றே மாறாதது என்ற விதிப்படி சுழலும் பூமியில், முதல்வர் மட்டும் விசாரணை தேவையில்லை என அமைச்சருக்கு புனித நீர் தெளித்து, திருநிலை படுத்தும் செயல் மக்களை, எம்மோடு வந்ததும் அது, எம்முடன் இருந்ததும் அது, எமக்காக சம்மந்தர் கூட்டி வந்ததும் அது, என்று வருந்தச்செய்யும்.       

– ராம் –

தினக்கதிர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்  மனுசன்

பென்சனை  எடுத்துக்கொண்டு

இன்னொரு வாழ்வை வாழ்வோம் என்று நினைத்திருக்கும்

இப்ப பென்சனில்  நினைத்திருந்த வாழ்வையும் பேசமுடியல..

வேலையும் செய்ய முடியல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

சிங்கள தலைவர்கள் தம் செயற்திறன் குறைந்து மக்களால் அது உணரப்படும் வேளைகளில் இனவாதக் கருத்துகளை வெளிவிட ஆரம்பிப்பார்கள். சிங்கள மக்களும் தம் தலைவர்களின் இயலாமையை கணக்கெடுக்காது இனவாதத்தினை ஆதரிப்பார்கள்.

தன் சக அமைச்சர்கள் செய்யும் ஊழல்களை தடுக்க முடியாத அல்லது அவர்களை வெளியேற்ற துணிச்சல் இல்லாத, செயற்திறன் அற்ற சி.வி.யும் சிங்கள தலைவர்கள் போல் இனவாதம்/ மதவாதம் கதைத்து மக்களிடம் ஆதரவை எதிர்பார்க்கின்றார் போலிருக்கு.

யாரோ ஒரு அமைச்சரின் ..கை  ஒரு கடிதத்துக்கு ஒரு பெண்ணை கூப்பிட்ட  கைபேசியின் சாட்சியும்  வந்ததே  இதுவும் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, முனிவர் ஜீ said:

யாரோ ஒரு அமைச்சரின் ..கை  ஒரு கடிதத்துக்கு ஒரு பெண்ணை கூப்பிட்ட  கைபேசியின் சாட்சியும்  வந்ததே  இதுவும் இருக்கு 

நாம  இப்ப செய்வது   இந்தியஅரசியல்

அவர்களே  எல்லாமே...

அப்போ  இதெல்லாம்  இல்லாமலா???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே செல்லும் இந்த பாதை,
யாரோ யாரோ அறிவார்?

மண் கேட்டா அந்த மழை பொழியும்,
மேகம் பொழியாமல் போவதுண்டா?
கரை கேட்டா அந்த அலைகள் வரும்,
அலைகள் தழுவாமல் போவதுண்டா?
கண்ணீர் மழையில் உந்தன் முன்னே முன்னே,

காலம் காலம் சொல்ல வேண்டும்,
யாரோ உண்மை அறிவார்?

தமிழ் ஈழத்துக்கான பாதை ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலத்தில்  குற்றவாளிகளென்று அப்பாவிகளைத் தண்டிப்பது சர்வசாதாரணமாகிவிட்டது.  ராஜீவ் கொலையில் சம்பந்தப்படுத்தி எத்தனைபேர் சிறையில் வாடுகிறார்கள். அப்படிப் பிரேமானந்த சுவாமியின் கேசும் இருக்கக்கூடும்.   முதலமைச்சர் சிவி அவரை நிரபராதியென்கிறார்.  அவர் ஒரு பழைய சுப்பிரீம் கோட் நீதிபதி.  அரசியல் ஆதாயம் பதவியென்று எதையும் அவர் பொருட்படுத்தாமல் ஒரு விடயத்தில் உறுதியாக நிற்கிறாரென்றால் அதையிட்டுச் சற்று யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.  கண்ணால் காண்பதுவும் பொய் காதால் கேட்பதுவும் பொய், தீரவிசாரித்தறிவதே மெய்.  அதை இந்திய நீதிமன்றம் செய்ததா என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, karu said:

இந்தக் காலத்தில்  குற்றவாளிகளென்று அப்பாவிகளைத் தண்டிப்பது சர்வசாதாரணமாகிவிட்டது.  ராஜீவ் கொலையில் சம்பந்தப்படுத்தி எத்தனைபேர் சிறையில் வாடுகிறார்கள். அப்படிப் பிரேமானந்த சுவாமியின் கேசும் இருக்கக்கூடும்.   முதலமைச்சர் சிவி அவரை நிரபராதியென்கிறார்.  அவர் ஒரு பழைய சுப்பிரீம் கோட் நீதிபதி.  அரசியல் ஆதாயம் பதவியென்று எதையும் அவர் பொருட்படுத்தாமல் ஒரு விடயத்தில் உறுதியாக நிற்கிறாரென்றால் அதையிட்டுச் சற்று யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.  கண்ணால் காண்பதுவும் பொய் காதால் கேட்பதுவும் பொய், தீரவிசாரித்தறிவதே மெய்.  அதை இந்திய நீதிமன்றம் செய்ததா என்று தெரியவில்லை.

வக்காலத்து வாங்கவில்லை.

ஆனாலும், அவர் இறந்த போது வந்த கட்டுரை ஒன்றை ஆனந்த விகடனில் வாசித்தேன். 

அவரது வீழ்ச்சிக்கு பெரிய இடத்தின் பொல்லாப்பே காரணம் என்று சொல்லியிருந்தார்கள்.

இந்தியாவில், 'குமாரசாமிக் கணக்குகள்' மூலம் தப்பவும் முடியும், மாட்டவும் முடியும்.

ஜெயலலிதா தப்பினார்.... சசிகலா மாட்டினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது ஜெயலலிதாவையும் மாட்டிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, karu said:

தற்போது ஜெயலலிதாவையும் மாட்டிவிட்டார்கள்.

ஆனாலும், அது உண்மையானால், அந்தப் பொல்லாப்புக்கு உரியவர்கள், பின்னர் வினையினை அறுத்துக் கொண்டார்கள்.

தோழியை தன்னுடன் வைத்துக் கொண்டதால், தோழியின் கணவர், 'நடந்து' போய், ஜனனி என்ற இளம் பெண்ணை வைத்துக் கொள்ள, 'கஞ்சா' வைத்திருந்தார் என அந்த அப்பாவிப் பெண்ணை உள்ளே நீண்ட நாள் வைத்திருந்த புண்ணியவதிகள், அறுத்த வினை தான் தெரிந்ததே.

Link to comment
Share on other sites

கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி இருந்தால் மனவருந்துகிறேன் – சி.வி.

wikky.jpg
கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன். ஆனால் மன வருத்தம் அடைய வேண்டிய விதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார்.
 
முதலமைச்சரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,
 
நான் தினப்புயல் என்ற பத்திரிகைக்குக் கொடுத்த செவ்வி சம்பந்தமாகச் சில தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன. நான் இயேசு கிறிஸ்து நாதரை அவமதிக்கும் விதத்தில் கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.
 
முதலில் இணையத் தளத்தில் வந்த செய்தியை யாரும் பார்த்தார்களானால் அதில் வரும் கடைசி சட்டம் (frame) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும். செவ்வி எடுத்தவர் முதல் சட்டங்களில் பேசியவாறு கடைசி சட்டத்தில் பேசவில்லை. அவர் தெளிவாகப் பேச முடியாதவர்.
 
மிகவும் பதிவான குரலில்த்தான் முன்னைய சட்டங்களில் கேள்வி கேட்டு வந்தார். என்னிடம் கடைசி சட்டத்தின் நிகழ்வின் போதும் அவ்வாறே பேசினார். ஆனால் வெளிவந்த இணையத்தளச் சட்டத்தில் அவர் மிகத் தெளிவாகப் பேசியுள்ளார். என் முன்னிலையில் அவர் அவ்வாறு பேசவில்லை. அத்துடன் அவர் கேட்டதாக ஒளிபரப்பாகியிருக்கும் கேள்விக்கு நான் தந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் என் பதில்கள் வேண்டுமென்றே ஒலியைக் குறைய வைத்து நேயர்களுக்குக் கேட்காத வகையில் தரப்பட்டிருக்கின்றன. அவரின் கேள்வி மட்டும் மிகத் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. சிறுபிள்ளைத்தனம் என்று அவர் கூறியதாக எனக்கு ஞாபகமில்லை. எது எவ்வாறு இருப்பினும் நடந்தது இதுதான்.
 
செவ்வி எடுத்தவர், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை நீங்கள் எப்படி உங்கள் குருவாக ஏற்கலாம். நீங்கள் ஒரு நீதியரசர் தற்போது முதலமைச்சர். இது தவறானதல்லவா என்று கேட்டார். அதற்கு நான் குற்றவாளி எனக் காணப்பட்டு சிலுவையில் அறைந்த ஒருவரை 2000 வருடமாக மக்கள் தெய்வமாகக் கொண்டாடுகின்றார்கள் அல்லவா என்றேன்.அதைத்தான் இயேசுவையும் பிரேமானந்த சுவாமியையும் முதலமைச்சர் ஒப்பிட்டு விட்டார் என்று சிலர் கூறி எனக்கெதிராக கிறீஸ்தவ சகோதரர்களை ஏற்றி விட எத்தனித்துள்ளார்கள்.
 
இயேசு கிறிஸ்து நாதரின் பரம அபிமானி காலஞ்சென்ற பிரேமானந்த சுவாமி. பல பேச்சுக்களில் இயேசு நாதரின் வாழ்க்கையில் இருந்து மேற்கோள்களை எடுத்துரைப்பார். அன்னை வேளாங்கன்னியைப் போய் தரிசித்து வாருங்கள் என்று எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அறிவுரை வழங்கியவரே அவர்தான். இன்று பல்லாயிரக்கணக்கான மேலைநாட்டு கிறிஸ்தவ அன்பர்கள் அவரின் அபிமானிகளாக உள்ளார்கள்.
 
அது போக 1958ம் ஆண்டிலேயே நான் றோயல் கல்லூரியில் சமய ஒப்பீட்டு பரிசு  (Comparative Religion) பெற்றவன். பைபிளில் இருந்து Gospel according to St. Mathew என்பதே கிறீஸ்தவம் சம்பந்தமான பாடம். இதே போல் இஸ்லாம், பௌத்தம் இந்து மதம் போன்ற எல்லா மதங்களிலிருந்தும் பாட விதானம் தரப்பட்டு அவற்றில் முதல் இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையிலேயே பரிசு பெற்றவன். அன்று தொடக்கம் இன்று வரை எல்லா மதங்களையும் அனுசரித்துப் போற்றி வருபவன்.
 
கிறீஸ்தவ நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்டவன். இயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்து வருபவன். வருடா வருடம் St. Antony Feast காலத்தில் சென்று வணங்கி வருபவன். நான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் சுவாமி பிரேமாநந்தரின் வாழ்க்கையும் எந்த விதத்திலும் ஒப்பிட்டு பேசவில்லை.
 
குற்றவாளியொருவரை எவ்வாறு குருவாக ஏற்கலாம் என்பதற்கு யேசு கிறீஸ்துவை உதாரணமாகக் கூறினேன். இயேசு நாதரின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, சுவாமியின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, எவ்வாறு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று பலதைப் பற்றியும் பலர் எழுதியுள்ளார்கள். இருவரையும் ஒப்பிட முனைந்தவர்கள் அவர்களே.
 
நான் என்னிடம் கேட்ட கேள்விக்கு ஒரு முன்னுதாரணம் கூறினேன்; அவ்வளவு தான். அது கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன். ஆனால் மன வருத்தம் அடைய வேண்டிய விதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். இதில் அரசியல் கலந்திருப்பதாகவே நான் உணர்கின்றேன். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

http://globaltamilnews.net/archives/24424

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

சிங்கள தலைவர்கள் தம் செயற்திறன் குறைந்து மக்களால் அது உணரப்படும் வேளைகளில் இனவாதக் கருத்துகளை வெளிவிட ஆரம்பிப்பார்கள். சிங்கள மக்களும் தம் தலைவர்களின் இயலாமையை கணக்கெடுக்காது இனவாதத்தினை ஆதரிப்பார்கள்.

தன் சக அமைச்சர்கள் செய்யும் ஊழல்களை தடுக்க முடியாத அல்லது அவர்களை வெளியேற்ற துணிச்சல் இல்லாத, செயற்திறன் அற்ற சி.வி.யும் சிங்கள தலைவர்கள் போல் இனவாதம்/ மதவாதம் கதைத்து மக்களிடம் ஆதரவை எதிர்பார்க்கின்றார் போலிருக்கு.

இயேசு தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து : முதல்வரின் பகிரங்கமான பதில்

6 hours ago

இயேசு கிறிஸ்துவை நான் ஒருபோதும் அவமதித்து கூறவில்லை, அந்த செவ்வியை வேண்டும் என்றே மாற்றி வடிவமைத்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்தாவுடன் இயேசுவை ஒப்பிட்டு பேசிய முதலமைச்சருக்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகியிருந்தது.

குறித்த செய்தி தொடர்பில் முதலமைச்சரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நான் பத்திரிகை ஒன்றிக்கு கொடுத்த செவ்வி சம்பந்தமாகச் சில தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன. நான் இயேசு கிறிஸ்து நாதரை அவமதிக்கும் விதத்தில் கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

முதலில் இணையத் தளத்தில் வந்த செய்தியை யாரும் பார்த்தார்களானால் அதில் வரும் கடைசி சட்டம் (frame) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.

செவ்வி எடுத்தவர் முதல் சட்டங்களில் பேசியவாறு கடைசி சட்டத்தில் பேசவில்லை. அவர் தெளிவாகப் பேச முடியாதவர். மிகவும் பதிவான குரலில்த்தான் முன்னைய சட்டங்களில் கேள்வி கேட்டு வந்தார். என்னிடம் கடைசி சட்டத்தின் நிகழ்வின் போதும் அவ்வாறே பேசினார்.

ஆனால் வெளிவந்த இணையத்தளச் சட்டத்தில் அவர் மிகத் தெளிவாகப் பேசியுள்ளார். என் முன்னிலையில் அவர் அவ்வாறு பேசவில்லை. அத்துடன் அவர் கேட்டதாக ஒளிபரப்பாகியிருக்கும் கேள்விக்கு நான் தந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் என் பதில்கள் வேண்டுமென்றே ஒலியைக் குறைய வைத்து நேயர்களுக்குக் கேட்காத வகையில் தரப்பட்டிருக்கின்றன.

அவரின் கேள்வி மட்டும் மிகத் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. சிறுபிள்ளைத்தனம் என்று அவர் கூறியதாக எனக்கு ஞாபகமில்லை. எது எவ்வாறு இருப்பினும் நடந்தது இதுதான்.

செவ்வி எடுத்தவர், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை நீங்கள் எப்படி உங்கள் குருவாக ஏற்கலாம். நீங்கள் ஒரு நீதியரசர் தற்போது முதலமைச்சர். இது தவறானதல்லவா என்று கேட்டார். அதற்கு நான் குற்றவாளி எனக் காணப்பட்டு சிலுவையில் அறைந்த ஒருவரை 2000 வருடமாக மக்கள் தெய்வமாகக் கொண்டாடுகின்றார்கள் அல்லவா என்றேன்.

அதைத்தான் இயேசுவையும் பிரேமானந்த சுவாமியையும் முதலமைச்சர் ஒப்பிட்டு விட்டார் என்று சிலர் கூறி எனக்கெதிராக கிறீஸ்தவ சகோதரர்களை ஏற்றி விட எத்தனித்துள்ளார்கள்.

இயேசு கிறிஸ்து நாதரின் பரம அபிமானி காலஞ்சென்ற பிரேமானந்த சுவாமி. பல பேச்சுக்களில் இயேசு நாதரின் வாழ்க்கையில் இருந்து மேற்கோள்களை எடுத்துரைப்பார்.

அன்னை வேளாங்கன்னியைப் போய் தரிசித்து வாருங்கள் என்று எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அறிவுரை வழங்கியவரே அவர்தான். இன்று பல்லாயிரக்கணக்கான மேலைநாட்டு கிறிஸ்தவ அன்பர்கள் அவரின் அபிமானிகளாக உள்ளார்கள்.

அது போக 1958ம் ஆண்டிலேயே நான் றோயல் கல்லூரியில் சமய ஒப்பீட்டு பரிசு (Comparative Religion) பெற்றவன். பைபிளில் இருந்து Gospel according to St. Mathew என்பதே கிறீஸ்தவம் சம்பந்தமான பாடம். இதே போல் இஸ்லாம், பௌத்தம் இந்து மதம் போன்ற எல்லா மதங்களிலிருந்தும் பாட விதானம் தரப்பட்டு அவற்றில் முதல் இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையிலேயே பரிசு பெற்றவன்.

அன்று தொடக்கம் இன்று வரை எல்லா மதங்களையும் அனுசரித்துப் போற்றி வருபவன். கிறீஸ்தவ நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்டவன்.

இயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்து வருபவன். வருடா வருடம் St. Antony Feast காலத்தில் சென்று வணங்கி வருபவன்.

நான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் சுவாமி பிரேமாநந்தரின் வாழ்க்கையும் எந்த விதத்திலும் ஒப்பிட்டு பேசவில்லை. குற்றவாளியொருவரை எவ்வாறு குருவாக ஏற்கலாம் என்பதற்கு யேசு கிறீஸ்துவை உதாரணமாகக் கூறினேன்.

இயேசு நாதரின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, சுவாமியின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, எவ்வாறு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று பலதைப் பற்றியும் பலர் எழுதியுள்ளார்கள்.

இருவரையும் ஒப்பிட முனைந்தவர்கள் அவர்களே. நான் என்னிடம் கேட்ட கேள்விக்கு ஒரு முன்னுதாரணம் கூறினேன். அவ்வளவு தான். அது கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன்.

ஆனால் மன வருத்தம் அடைய வேண்டிய விதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். இதில் அரசியல் கலந்திருப்பதாகவே நான் உணர்கின்றேன்.

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

இயேசு தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து : முதல்வரின் பகிரங்கமான பதில்

6 hours ago

இயேசு கிறிஸ்துவை நான் ஒருபோதும் அவமதித்து கூறவில்லை, அந்த செவ்வியை வேண்டும் என்றே மாற்றி வடிவமைத்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்தாவுடன் இயேசுவை ஒப்பிட்டு பேசிய முதலமைச்சருக்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகியிருந்தது.

குறித்த செய்தி தொடர்பில் முதலமைச்சரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நான் பத்திரிகை ஒன்றிக்கு கொடுத்த செவ்வி சம்பந்தமாகச் சில தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன. நான் இயேசு கிறிஸ்து நாதரை அவமதிக்கும் விதத்தில் கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

முதலில் இணையத் தளத்தில் வந்த செய்தியை யாரும் பார்த்தார்களானால் அதில் வரும் கடைசி சட்டம் (frame) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.

செவ்வி எடுத்தவர் முதல் சட்டங்களில் பேசியவாறு கடைசி சட்டத்தில் பேசவில்லை. அவர் தெளிவாகப் பேச முடியாதவர். மிகவும் பதிவான குரலில்த்தான் முன்னைய சட்டங்களில் கேள்வி கேட்டு வந்தார். என்னிடம் கடைசி சட்டத்தின் நிகழ்வின் போதும் அவ்வாறே பேசினார்.

ஆனால் வெளிவந்த இணையத்தளச் சட்டத்தில் அவர் மிகத் தெளிவாகப் பேசியுள்ளார். என் முன்னிலையில் அவர் அவ்வாறு பேசவில்லை. அத்துடன் அவர் கேட்டதாக ஒளிபரப்பாகியிருக்கும் கேள்விக்கு நான் தந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் என் பதில்கள் வேண்டுமென்றே ஒலியைக் குறைய வைத்து நேயர்களுக்குக் கேட்காத வகையில் தரப்பட்டிருக்கின்றன.

அவரின் கேள்வி மட்டும் மிகத் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. சிறுபிள்ளைத்தனம் என்று அவர் கூறியதாக எனக்கு ஞாபகமில்லை. எது எவ்வாறு இருப்பினும் நடந்தது இதுதான்.

செவ்வி எடுத்தவர், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை நீங்கள் எப்படி உங்கள் குருவாக ஏற்கலாம். நீங்கள் ஒரு நீதியரசர் தற்போது முதலமைச்சர். இது தவறானதல்லவா என்று கேட்டார். அதற்கு நான் குற்றவாளி எனக் காணப்பட்டு சிலுவையில் அறைந்த ஒருவரை 2000 வருடமாக மக்கள் தெய்வமாகக் கொண்டாடுகின்றார்கள் அல்லவா என்றேன்.

அதைத்தான் இயேசுவையும் பிரேமானந்த சுவாமியையும் முதலமைச்சர் ஒப்பிட்டு விட்டார் என்று சிலர் கூறி எனக்கெதிராக கிறீஸ்தவ சகோதரர்களை ஏற்றி விட எத்தனித்துள்ளார்கள்.

இயேசு கிறிஸ்து நாதரின் பரம அபிமானி காலஞ்சென்ற பிரேமானந்த சுவாமி. பல பேச்சுக்களில் இயேசு நாதரின் வாழ்க்கையில் இருந்து மேற்கோள்களை எடுத்துரைப்பார்.

அன்னை வேளாங்கன்னியைப் போய் தரிசித்து வாருங்கள் என்று எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அறிவுரை வழங்கியவரே அவர்தான். இன்று பல்லாயிரக்கணக்கான மேலைநாட்டு கிறிஸ்தவ அன்பர்கள் அவரின் அபிமானிகளாக உள்ளார்கள்.

அது போக 1958ம் ஆண்டிலேயே நான் றோயல் கல்லூரியில் சமய ஒப்பீட்டு பரிசு (Comparative Religion) பெற்றவன். பைபிளில் இருந்து Gospel according to St. Mathew என்பதே கிறீஸ்தவம் சம்பந்தமான பாடம். இதே போல் இஸ்லாம், பௌத்தம் இந்து மதம் போன்ற எல்லா மதங்களிலிருந்தும் பாட விதானம் தரப்பட்டு அவற்றில் முதல் இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையிலேயே பரிசு பெற்றவன்.

அன்று தொடக்கம் இன்று வரை எல்லா மதங்களையும் அனுசரித்துப் போற்றி வருபவன். கிறீஸ்தவ நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்டவன்.

இயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்து வருபவன். வருடா வருடம் St. Antony Feast காலத்தில் சென்று வணங்கி வருபவன்.

நான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் சுவாமி பிரேமாநந்தரின் வாழ்க்கையும் எந்த விதத்திலும் ஒப்பிட்டு பேசவில்லை. குற்றவாளியொருவரை எவ்வாறு குருவாக ஏற்கலாம் என்பதற்கு யேசு கிறீஸ்துவை உதாரணமாகக் கூறினேன்.

இயேசு நாதரின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, சுவாமியின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, எவ்வாறு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று பலதைப் பற்றியும் பலர் எழுதியுள்ளார்கள்.

இருவரையும் ஒப்பிட முனைந்தவர்கள் அவர்களே. நான் என்னிடம் கேட்ட கேள்விக்கு ஒரு முன்னுதாரணம் கூறினேன். அவ்வளவு தான். அது கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன்.

ஆனால் மன வருத்தம் அடைய வேண்டிய விதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். இதில் அரசியல் கலந்திருப்பதாகவே நான் உணர்கின்றேன்.

ஹஹஹா... கடைசியில் ஒரு பாலியல் குற்றவாளியை கிறிஸ்தவர்களின் கடவுளுடன் ஒப்பிட்டதை ஒப்புக்கொண்டு இருக்கின்றார். அவர் ஒரு நீதியரசர் என்பதால் அதை சுற்றி வளைச்சு ஒப்புக் கொள்கின்றார்.

தான் கூறியதை திரித்து கூறி வெளியிட்டமைக்காகவும், மூலப் பிரதியில் திருத்தம் செய்து இடைச்செருகலாக இன்னொரு வீடியோவை இணைத்தமைக்காகவும் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க போகின்றாரா அல்லது தன் ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதை போல செயல்திறன் அற்று சும்மா இருக்க போகின்றாரா என பொறுத்து இருந்து பார்ப்போம். :rolleyes:

Link to comment
Share on other sites

மக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதில் குறியாகவுள்ள மதவெறியர்கள் மீண்டும் இந்துவாக உள்ள வடமாகாண முதலமைச்சர் மீது தங்கள் வசைமாரிகளி பொழிந்து வருகின்றனர்.

கல்லை கும்பிடுகிறார்கள், அது இது என்று இந்து மக்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் மதவெறியர்கள் விக்னேஸ்வரன் அவர்கள் கூறிய உண்மையை சகிக்க முடியாமல் ஓலமிடுகின்றனர்.

 

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கு நல்லது செய்ய எவர் வந்தாலும் அவர்களை அழித்துவிடுவதே தமிழர் என்று கூறிக்கொள்ளும் சிலரின் தலையாய கடமையாக உள்ளது.

தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை அழித்துவிட்டு இன்று அழுது புலம்புவதுபோல், முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களையும் அழித்துவிட்டு அழுது புலம்பும் நாள் வெகுதூரம் இல்லை. :unsure:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Rajesh said:

மக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதில் குறியாகவுள்ள மதவெறியர்கள் மீண்டும் இந்துவாக உள்ள வடமாகாண முதலமைச்சர் மீது தங்கள் வசைமாரிகளி பொழிந்து வருகின்றனர்.

கல்லை கும்பிடுகிறார்கள், அது இது என்று இந்து மக்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் மதவெறியர்கள் விக்னேஸ்வரன் அவர்கள் கூறிய உண்மையை சகிக்க முடியாமல் ஓலமிடுகின்றனர்.

 ஒரு பாலியல் குற்றவாளியை

கிறிஸ்தவர்களின் கடவுளுடன் ஒப்பிட்டது சரியா  என்பதே கேள்வி??

 இது பற்றி  உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

4 hours ago, விசுகு said:

 ஒரு பாலியல் குற்றவாளியை

கிறிஸ்தவர்களின் கடவுளுடன் ஒப்பிட்டது சரியா  என்பதே கேள்வி??

 இது பற்றி  உங்கள் கருத்து என்ன?

கிறித்துவர்களாகட்டும், இந்துக்கள் ஆகட்டும் இவர்கள் தங்களது கடவுள்களை பாலியல் செயற்பாட்டுகளில் ஈடுபடுத்திச் சித்தாந்தங்களை உருவாக்கியுள்ளதை மறைத்துவிட முடியாது.

பாலியல் வன்முறையைக் குற்றமாகக் கொள்ளலாம்.

பாலியல் குற்றமென்றால் கடவுள்களும் குற்றவாளிகளே! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

கிறித்துவர்களாகட்டும், இந்துக்கள் ஆகட்டும் இவர்கள் தங்களது கடவுள்களை பாலியல் செயற்பாட்டுகளில் ஈடுபடுத்திச் சித்தாந்தங்களை உருவாக்கியுள்ளதை மறைத்துவிட முடியாது.

பாலியல் வன்முறையைக் குற்றமாகக் கொள்ளலாம்.

பாலியல் குற்றமென்றால் கடவுள்களும் குற்றவாளிகளே! 
 

மிகவும் ஆளமாக பேசவேண்டிய  விடயமிது  அண்ணா

பேசலாமே...

Link to comment
Share on other sites

21 hours ago, விசுகு said:

மிகவும் ஆளமாக பேசவேண்டிய  விடயமிது  அண்ணா

பேசலாமே...

என்னையும் ஒரு புலவனாக யாழில் உலவ ஏற்றுக்கொண்டீர்கள் ஆனாலும் நான் ஒரு தருமிதான் ஐயா. கேள்விமட்டும்தான் கேட்கமுடியும். கடவுள் விடயத்தில் என்னையே நான் கடக்க முடியவில்லை. பாலியல் விடயத்தில் அதி உச்சமாகத் தண்டிக்கப்பட்டு மேனிமுழுவதும் ஆயிரம் கண்கள் (பெண்குறிகள்) உடைய இந்திரனையும் தேவனாகக் கருதுவதிலிருந்து என்னால் மீள முடியவில்லை..... இதில் ஆழங்கள்....!! அந்த விட்ணு கடவுளாலும் காண முடியவில்லையே. :(
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 4/20/2017 at 4:46 PM, விசுகு said:

 ஒரு பாலியல் குற்றவாளியை

கிறிஸ்தவர்களின் கடவுளுடன் ஒப்பிட்டது சரியா  என்பதே கேள்வி??

 இது பற்றி  உங்கள் கருத்து என்ன?

விசுகு அண்ணை!
கிறிஸ்தவர்களின் கடவுள் யார்? கிறிஸ்தவர்களின் தூதுவர் யார்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.