Jump to content

யேர்மனியில் உயிரணை நாவல் ,நாங்கள் சஞ்சிகை அறிமுக விழா


Recommended Posts

கடந்த ஞாயிற்றுக் கிழமை (09.04.2017) அன்று யேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள தமிழர் அரங்கத்தில் அறிவியல் எழுத்தாளர் ராஜ்சிவா அவர்களுடனான கலந்துரையாடல், சாந்தி நேசக்கரம் அவர்களின் 'உயிரணை' நாவல் அறிமுகம், என்னுடைய 'நாங்கள்' சிற்றிதழ் அறிமுகம் ஆகிய மூன்று நிகழ்வுகளும் சிறப்பாக நடந்தன.

50இற்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

sivasabesanshanthy%20nesakkaram1_zpsze9z

ராஜ்சிவா அவர்களுடைய அறிவியல் விளக்கங்களை சபையோர் கவனமாக செவிமடுத்தனர். இப்படி ஒரு கலந்துரையாடல் எமது சூழலுக்கு புதிது என்பதனால், இந்த முயற்சிக்கு ஆதரவு இருக்குமா என்கின்ற சந்தேகத்தில் நான் அவருக்கு ஒரு மணித்தியாலமே ஒதுக்கியிருந்தேன். சபையோரின் ஆர்வத்தினால் நிகழ்வு மேலும் அரை மணித்தியாலம் நீண்டது.

ராஜ்சிவா அவர்கள் பல அறிவியல் விடயங்களைப் பேசினார். ராஜ்சிவா அவர்களுக்கு மட்டும் ஒரு நாளை ஒதுக்கி தனியாக ஒரு நிகழ்வை 3, 4 மணித்தியாலங்கள் செய்ய வேண்டும் எனப் பலர் என்னிடம் வலியுறுத்தினார்கள். இது ஒரு நல்ல நிகழ்ச்சி, அடுத்த முறை நான் என் மனைவியையும், மகனையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வருவேன் என ஒருவர் என்னிடம் கூறினார்.

ஓரிரு மாதங்களில் ராஜ்சிவா அவர்களுடனான அறிவியற் கலந்துரையாடல் நிகழ்வை மீண்டும் நடத்துவேன் என்று அனைவருக்கும் நான் உறுதி கூறியிருக்கிறேன்.

அதன் பின்னர் சாந்தி நேசக்கரம் அவர்களின் 'உயிரணை' நாவல் அறிமுக நிகழ்வு நடந்தது. நூல் அறிமுகத்தை போராளிக்கலைஞர் துளசிச்செல்வன் அவர்கள் நிகழ்த்தினார். துளசிச்செல்வன் அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை அதில் நான் கவனித்தேன். துளசிச்செல்வனின் உரை முடிந்ததும் கொண்டு வந்திருந்த புத்தகங்கள் அனைத்தும் உடனடியாகவே விற்பனையாகி விட்டன.

thulasi%20shanthy_zpsiaoynybn.jpg

நான் ஒன்றை மீண்டும் இதில் சொல்ல வேண்டும். இதுவரை நான் நடத்திய எந்த ஒரு புத்தகம் சம்பந்தமான நிகழ்விலும், புத்தகங்கள் வாங்குவதற்கு என்று யாரையும் ஒழுங்கு செய்தது இல்லை. முதற் பிரதி பெறுபவர், இரண்டாவது பிரதி பெறுபவர் என்று எந்த ஏற்பாடும் இருந்தது இல்லை. அறிமுக உரை, விமர்சன உரை என்பன முடிந்த பின்னர் தாமாகவே எல்லோரும் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்று விடுவார்கள். இது பற்றி எனக்கு பெருமிதம் கலந்த மகிழ்ச்சி உண்டு.

shanthy%20nesakkaram_zpsf01odcty.jpg

அதன் பின்னர் என்னுடைய 'நாங்கள்' சிற்றிதழ் அறிமுகம் நடந்தது. என்னை வாழ்த்திப் பேசிய பெரும்பாலானவர்கள் மறக்காமல் ஒரு விடயத்தை குறிப்பிட்டனர். 'எனக்கு சபேசனுடைய சில கருத்துக்களோடு முரண்பாடு உண்டு' என்பதே அது.

கருத்தியல் முரண்பாடுகள் இருந்த போதிலும், எங்கள் எல்லோராலும் அன்போடும், நட்போடும் பழக முடிகிறது என்பதே இதில் முக்கியமான செய்தி.

நாங்கள் இங்கே அறிவியற் கலந்துரையாடல் ஒன்றினை ஆரம்பித்திருக்கின்ற அதே நாளில் பிரான்ஸில் தோழர் கோமகன் 'கதைப்போம்' என்கின்ற இலக்கிய உரையாடல் நிகழ்வை ஆரம்பித்திருக்கிறார். புலம்பெயர் இலக்கியம் ஆரோக்கியமான பாதையிலேயே பயணிக்கின்றது.

17904197_1296396270408866_55201918503616

 

மேற்படி செய்தியை சபேசன் அவர்கள் எழுதியிருந்தார்.

சபேசனின் ஏற்பாட்டில் பல இலக்கிய கலந்துரையாடல்கள் ,நூல் அறிமுகம் ,மற்றும் தமிழ்மொழி ,யேர்மன் மொழி கற்பித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தமிழர் அரங்க மண்டபத்தில் நடந்து வருகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.