Jump to content

இளமை என்னும் பூங்காற்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

" உயர்தர பரீட்சை எடுத்தவுடன் ண்பர்களுடன் ஊர் சுற்றி  திறியும் பொழுது , இப்ப இருப்பது போல் கையடக்க தொலைபேசி ஒன்றுமில்லைதானே ஆனபடியால் நாலுக்கும் நாலரை மணிக்குமிடையில் எல்லோரும் பாடசாலை முன்றலில் ஒன்றுகூடுவோம் ,குறைந்தது ஐந்து சைக்கிளில் நண்பர்களுடன் ஊர் உலாத்தலுக்கு வெளிக்கிடுவோம் முதலில் போவது மருதடிக்கு .சைக்கிளை எம் மீது சாய்த்துக்கொண்டு மருதடியானை வணங்குவோம் உள் சென்று தரிசிப்பதை தவிர்த்து கொள்வோம் ,வேறு  தரிசனங்கள் செய்வதற்காக.,.சந்தனம்,விபூதி மறக்காமல் பூசிகொள்வோம் காரணம் வீட்டை போகும் பொழுது அம்மா கேட்டால் பள்ளிகூடத்தில விளையாடிவிட்டு, கோவிலுக்கு  போயிற்று வாறோம் என்று சொல்லி நல்ல பிள்ளைகள் என்று பெயர் எடுப்பதற்காக  அந்த திருவிளையாடலை செய்வோம்..

நாலு திசையும் தரிசனம் செல்வோம் .சில நாட்களில் இரண்டு திசைகள் தான் சாத்தியப்படும் தரிசிக்க வேண்டிய ஆட்கள் அதிகமாக இருப்பதால்.தரிசிக்க வேண்டிய ஆட்களின் இயற்பெயர்களை சொல்லி தரிசிக்க செல்வதில்லை பட்ட பெயர்களை சொல்லி தான் செல்வது வழக்கம்.இயற்பெயர் சொல்லாமைக்கு முக்கிய காரணம் காலாச்சார காவலர்களின் இருட்டடிக்கு ஆளாக வேண்டும் என்ற பயம். முடி கட்டையாக வெட்டியிருந்தால் "கிப்பி",முடியை அவிட்டு விட்டிருந்தால் "சடைச்சி",முடி  சுருளாக இருந்தால் "சுருளி",ஆள் வெள்ளையாக்விருந்தால் "கோதுமை", முகத்தில் புள்ளியிருந்தால் "புள்ளி", கட்டையாகவும் கொஞ்சம் மொத்தமாகவும் இருந்தால்" வாத்து "அல்லது "தாரா" , நாங்கள் கிண்டல் பண்ண அவர்கள் முறைத்து பார்த்தால் "காளி", எதிர்த்து கதைத்தால் "வாயாடி"அல்லது "கறிக்காரி"இப்படி அழகாக பட்டங்களை சூட்டி..  கெளரவித்து... மகிழ்வது எங்களது வழக்கம்.

அப்படி ஊர் சுற்றிதிருந்தவர்கள் அநேகர் சொந்தநாட்டிலேயே பட்டங்கள் பெற்று புலம் பெயர்ந்து விட்டார்கள் .இன்னும் சிலர் புலர் பெயர்ந்த பின்பு பட்டங்கள பெற்றார்கள்...சிலர் பட்டங்கள் பெறாமலே வாழ்க்கையை கொண்டு போகிறார்கள். இப்பொழுது அவ‌ர்களில்  அநேகர் ஐம்பது வயதை தாண்டிவிட்டார்கள்.

வட்ஸப்பில்...குறுந்தகவல் வந்துள்ளது என கைத்தொலைபேசி மின்னிமின்னி அறிவித்தது. செய்தியை படித்தான்.

"மீட் அட் த ரெஸ்டொரன்ட்  அட் சிக்ஸ்"

 லண்டனிலிருந்து வந்திருக்கும் நண்பனை சந்திப்பது என்று ஏற்கனவே முடிசெய்திருந்தார்கள் ஆனால் இடம் தெரிவு செய்வில்லை தற்பொழுது தெரிவு செய்துவிட்டு குகன் குறுந்தகவல் அனுப்பியிருக்கிறான். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு குறுந்தகவல் வந்தது.ரெஸ்டொரன்டில் கார் பார்க் வசதி குறைவாக இருக்கும் தன்னையும் வந்து அழைத்து செல்லுமாறு கேட்டிருந்தான் குகன்.

காரை பார்க் பண்ணிவிட்டு லண்டன் நண்பனை ஒடி போய்கட்டிபிடித்து நீண்ட நாட்களின் பின்பு சந்தித்தது மகழ்ச்சி என்று ரஜனி ஸ்டைலில் அன்பை தெரிவித்தேன்.

"இத்தாலியன்,இந்தியன் ,தாய்,சைணிஸ் எந்த ரெஸ்ரோர‌ன்ட்டிற்கு போகப்போறீயள்"

"மலேசியனுக்கு புக் பண்ணிபோட்டேன் அதை கான்சல் பண்ணுவோமா".

எல்லோருமாக‌ மலேசியனுக்கு போவதாக முடிவெடுத்தோம்.

 மலேசியன் பணிப்பெண் வரவேற்றாள்.

 "எத்தனை பேர்"

"ஐந்து பேர் "

மேசையை காட்டியவள் மெணுப்புத்தகத்தையும் தந்து சென்றாள்.

கலர் கலராக படங்கள் ஒவ்வோரு சாப்பாட்டுக்கும் ஓவ்வோரு பெயர்கள்,சாப்பாட்டை தெரிவு செய்வதே ஒரு குழப்பமாக இருந்தது.

 

ஆல் இன் ஆல் கந்தர்.

 கந்தையா கடையில் கந்தர் அரைக்கை பெனியனுடன் சார்த்தை மடிச்சு கட்டிக்கொண்டு டி மாஸ்டர்,கசியர்,சேவர் மூன்று வேலையும் பாரத்துகொள்வார் ஆல் இன் ஆல் கந்தர். அவரின்ட கடைக்குள் போனால் மூன்று வடை இரண்டு போன்டா ஒவ்வொரு தடவையும் இதை தான் கொண்டு வந்து வைப்பார்.பத்து பேர் போனாலும் அதே அளவுதான் ஐந்து பேர் போனாலும் அதுதான் அவரின் கணக்கு. அண்ணே டீ என்று மேசையிலிருந்து கத்துவோம் ஐந்து பேர் போனால் மூன்று பேருக்கு போட்டுமேலதிகமாக‌ இரண்டு கிளாஸும் கொண்டுவந்து வைப்பார். அவருக்கு தெரியும் எங்களது பொருளாதார நிலமை.

IMG_1462.jpg

படம் காப்புரிமை ஜீவன் சிவா

கடைக்கு முன்னால் கண்ணாடி அலுமாரியுண்டு அதில் இடியப்பம்,புட்டு,இரண்டுவிதமான வடை உழுந்து வடை ,கடலை வடை  ,போன்டா,சூசியம் இதுதான் அவரின் ஒவ்வொரு நாளைய மெணு.இவற்றுடன் சிகரட்டும் சுருட்டும் கல்லாவிற்கு பக்கத்தில் வைத்திருப்பார். பழைய செய்திதாளை வெட்டி கத்தையாக கட்டி தொங்கவிட்டிருப்பார்.அதுதான் செவியட்.

 கடைக்குள்ளிருந்து சிகரட்டும் தேனீரும் அருந்தும் ஐயா மாரை பார்த்தவுடன் நண்பர்களுக்கும் அந்த எண்ணம் வந்து ,தம் அடிக்க சுத்தந்திரம் கிடைக்கவில்லையே என்று புறு புறுத்தபடி ஒதுக்குப்புறம் தேடுவார்கள்...ஆரம்பகாலங்களில் திருட்டு தம் அடிக்க கல்லுண்டை வெளிவரை சென்றிருக்கிறோம்.சிகரட் வாங்குவதில் எங்களுக்கு கொஞ்சம் தயக்கம் யாராவது பெரிசுகள் வீட்டாருக்கு சொல்லி போடுவார்கள் என்ற பயம். ,தம் அடிக்க வேணும் என்று ஒரு சிலருக்கு ஆசை ஆனால் பல‌ உத்தம புத்திரர்களுக்கு விருப்பமிருக்காது.தம் அடிக்கிற கோஸ்டிகள் ஒசியில் பிளேன் டி குடிச்சு போட்டு அந்த காசுக்கு சிகரட் ஒன்று இரண்டை  வாங்கி பொக்கற்றில் வைத்து கொண்டு மறைவிடம் தேடி ஒதுங்குவார்கள். உந்த சிகரட்டிலும் தராதரம் இருந்தது கண்டியளோ மிகவும் மலிவானது வோர் எசஸ்,பிறகு திரி ரோசஸ்,பிரிஸ்டல், விலை உயர்ந்தது கொல்ட்லீவ். மால்பரொ என்ற ஒரு பிராண்ட்டிருந்தது அதை கொழும்புக்கோஸ்டிகள் தான் அதிகம் பாவிப்பினம்.25 சதத்திற்கு   இரண்டு வொர் எசஸ் சிகரட் வாங்கலாம். இப்படிதான் நானும் தம் அடிச்சு பார்ப்போம் என்று ஒன்றை வாயில வைச்சு இழுத்தேன் பிரக்கடிச்சு கண்னிலிருருந்து கண்ணீர் வரத்தொடங்கி விட்டது.வாயும் ஒரு கச்சலாக இருந்தது .அதன்பின்பு சிகரட்டை கைவிட்டு கள்ளை தழுவிகொண்டேன்.

"நண்பர்களை கண்ட சந்தோசம் பழைய கந்தர் கடை என நினைத்து "அண்ணே ஒடர் ரெடி"

என்று கத்த வாய் வந்தது இருந்தும் சுதாகரித்துகொண்டேன் .

மேசைக்கு அருகிலிருந்த மணியை அடிக்க நவீன கருவியுடன் வந்தவள்

"ஒர்டெர் பிளிஸ்" என்றாள்

ஐந்து பேரும் ஐந்து விதமான உணவு வகைகளை ஒடர் கொடுத்தோம்.

prawn mee, prawn noodles

ஒரு நண்பன் சொன்னான் ஐந்து பிளேட் எடுத்து ஐந்து விதமான சாப்பாடுகளையும் எல்லொரும் பகிர்ந்து உண்போம் என்று, அவன் விருப்பபடி பகிர்ந்துண்டோம்.

 சலாட்டுக்குள்ளிருந்த தக்காளி துண்டை முள்ளுக்கரண்டியால் கூத்தி எடுத்தபடியே

"எங்களோட படிச்ச தக்காளி இப்ப எங்கயடாப்பா"

"அவள் இப்ப கனடாவில் இருக்கிறாள்,இரண்டு  மகள் மெடிசின் செய்யினம்"

"மனிசிமார் பக்கத்தில இல்லை என்ற துணிவில பழைய காய்களை பற்றி கதைக்கிறீயள் "

"மனிசிக்கு நான் எல்லா கதையும் சொல்லி போட்டன்,"

"நீ என்ன தக்காளியை காதலிச்சனீயோ"

"நான் காதலிச்சனான் அவள் காதலிக்கவில்லை இரண்டு மூன்று லவ் லெட்டர் கொடுத்தனான் அவள் வாசிக்காமல் கிழிச்சுபோட்டாள்"

"பிறகு ஏன்டா அவளின்ட சரித்திரத்தை இப்பவும் அறிஞ்சு வைச்சிருக்கிறாய்"

"I don't know....I think that's also a kind of love"

தக்காளி,முருங்கை ,வாத்து,கிப்பி,காளி எல்லோரினதும் அப்டெட் வந்து போயின.

பில் கொண்டு வந்தாள் எல்லோரும் போட்டி போட்டு கொண்டு கொடுக்க போனோம் ,எதை எடுப்பது என்பது காசாளருக்கு பெரிய தலையிடியாக இருந்திருக்கும்.கடைசியில் ஒருத்தர் வெற்றி பெற்றார்.

வெளியே சிகரட் பிடித்துக்கொண்டு இருவர் நின்றனர்.மூக்கை மற்ற பக்கம் திருப்பிகொண்டு எல்லோரும் சென்றோம்.பப்ளிகா சிகரட் பிடிக்கிறதை தடை செய்ய வேணும் எண்டு பேசிய படி நடந்து செல்லும் பொழுது பப்புக்கு வெளியே மது கிண்ணத்துடன் ஆண்கள் பெண்கள் வயது வித்தியாசமின்றி இயற்கையை ரசித்தபடி இருந்தனர்.

நாம் அதையும் தாண்டி எமது காரை நோக்கி சென்றோம்...

 

இளமை எனும் பூங்காற்று....என்ற பாடாலை விசிலடித்த படி வீட்டு கதைவை திறந்தேன்

 

"என்னப்பா 30 வயது குறைந்த மாதிரி துள்ளி கொண்டு வாறீயள்"

அந்த நாள் ஞாபகங்கள் வந்ததே வந்ததே  கண்மணி கண்மணி..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலாயன் கஃபே வடையையும் வாழை இலையையும் கண்ட உடனே பழைய ஞ<பகங்கள் வந்திட்டுதாக்கும் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய காய் கனிகளை மறக்கால் வைத்து இருக்குறியளே  அதுவும் அந்த பட்டங்கள் சூப்பர் புத்தன்  எங்களின் பங்குக்கு நாங்கள் வைத்தது அப்பம்,  பின்னல் , வண்டு ,  இன்னும் பல இருக்கு எல்லாம் அடுத்தவன் தோட்டத்து மலராக tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

 "நான் காதலிச்சனான் அவள் காதலிக்கவில்லை இரண்டு மூன்று லவ் லெட்டர் கொடுத்தனான் அவள் வாசிக்காமல் கிழிச்சுபோட்டாள்"

உங்கை கனபேர் கவனிக்க வேண்டிய வசனம் .:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

இயற்பெயர் சொல்லாமைக்கு முக்கிய காரணம் காலாச்சார காவலர்களின் இருட்டடிக்கு ஆளாக வேண்டும் என்ற பயம். முடி கட்டையாக வெட்டியிருந்தால் "கிப்பி",முடியை அவிட்டு விட்டிருந்தால் "சடைச்சி",முடி  சுருளாக இருந்தால் "சுருளி",ஆள் வெள்ளையாக்விருந்தால் "கோதுமை", முகத்தில் புள்ளியிருந்தால் "புள்ளி", கட்டையாகவும் கொஞ்சம் மொத்தமாகவும் இருந்தால்" வாத்து "அல்லது "தாரா" , நாங்கள் கிண்டல் பண்ண அவர்கள் முறைத்து பார்த்தால் "காளி", எதிர்த்து கதைத்தால் "வாயாடி"அல்லது "கறிக்காரி"இப்படி அழகாக பட்டங்களை சூட்டி..  கெளரவித்து... மகிழ்வது எங்களது வழக்கம்.-----

 கந்தையா கடையில் கந்தர் அரைக்கை பெனியனுடன் சார்த்தை மடிச்சு கட்டிக்கொண்டு டி மாஸ்டர்,கசியர்,சேவர் மூன்று வேலையும் பாரத்துகொள்வார் ஆல் இன் ஆல் கந்தர். அவரின்ட கடைக்குள் போனால் மூன்று வடை இரண்டு போன்டா ஒவ்வொரு தடவையும் இதை தான் கொண்டு வந்து வைப்பார்.பத்து பேர் போனாலும் அதே அளவுதான் ஐந்து பேர் போனாலும் அதுதான் அவரின் கணக்கு. அண்ணே டீ என்று மேசையிலிருந்து கத்துவோம் ஐந்து பேர் போனால் மூன்று பேருக்கு போட்டுமேலதிகமாக‌ இரண்டு கிளாஸும் கொண்டுவந்து வைப்பார். அவருக்கு தெரியும் எங்களது பொருளாதார நிலமை.

கடைக்கு முன்னால் கண்ணாடி அலுமாரியுண்டு அதில் இடியப்பம்,புட்டு,இரண்டுவிதமான வடை உழுந்து வடை ,கடலை வடை  ,போன்டா,சூசியம் இதுதான் அவரின் ஒவ்வொரு நாளைய மெணு.இவற்றுடன் சிகரட்டும் சுருட்டும் கல்லாவிற்கு பக்கத்தில் வைத்திருப்பார். பழைய செய்திதாளை வெட்டி கத்தையாக கட்டி தொங்கவிட்டிருப்பார்.அதுதான் செவியட்.----

ஊரில்... பட்டப் பெயர் வைப்பது வழமை என்றாலும், இவ்வளவு காலமும்  அதனை மறக்காமல் நினைவு வைத்துள்ளது ஆச்சரியமாக மாக உள்ளது.
ஊரில் உள்ள தேனீர் கடையை... மீண்டும் கண் முன்னே கொண்டு வந்த காட்சிகள் மிக அழகு புத்தன்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

மலாயன் கஃபே வடையையும் வாழை இலையையும் கண்ட உடனே பழைய ஞ<பகங்கள் வந்திட்டுதாக்கும் .....!  tw_blush:

அதே: அத்துடன் எனது நண்பன் லண்டனிலிருந்து வந்திருந்தார் இரண்டையும் சேர்த்து ஒரு சிறு கற்பனை

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்....ஒரு படைப்பாளியின் ஊக்கசத்து  பச்சைகளும் பாராட்டுக்களும் :10_wink:

7 hours ago, முனிவர் ஜீ said:

பழைய காய் கனிகளை மறக்கால் வைத்து இருக்குறியளே  அதுவும் அந்த பட்டங்கள் சூப்பர் புத்தன்  எங்களின் பங்குக்கு நாங்கள் வைத்தது அப்பம்,  பின்னல் , வண்டு ,  இன்னும் பல இருக்கு எல்லாம் அடுத்தவன் தோட்டத்து மலராக tw_blush:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ...எல்லா தோட்டத்து மலரும் பூத்து குழுங்கட்டும்:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜி.சி.இ, ஓ/எல் படிக்கும்போது மகேந்திரா மாஸ்டரின் (எலியர்)  வகுப்பு. நான் புத்தகத்துள் "காதம்பரி" என்றொரு புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். அவர் கண்டுட்டார். அப்படியே என் காதில பிடித்து முறுக்கி இஞ்ச வா காதம்பரி என்று இழுத்துக் கொண்டு போய் பிளாக் போட்டுக்கு முன்னால் புத்தகத்தை தலையில வைத்துக் கொண்டு நிக்க விட்டார். அன்றில் இருந்து நான் போகும் இடமெங்கும் அசரீரியாக காதம்பரி என்ற பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஒரு பயலும் கண்ணில தென்பட மாட்டான்.....!  :rolleyes:  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

நான் ஜி.சி.இ, ஓ/எல் படிக்கும்போது மகேந்திரா மாஸ்டரின் (எலியர்)  வகுப்பு. நான் புத்தகத்துள் "காதம்பரி" என்றொரு புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். அவர் கண்டுட்டார். அப்படியே என் காதில பிடித்து முறுக்கி இஞ்ச வா காதம்பரி என்று இழுத்துக் கொண்டு போய் பிளாக் போட்டுக்கு முன்னால் புத்தகத்தை தலையில வைத்துக் கொண்டு நிக்க விட்டார். அன்றில் இருந்து நான் போகும் இடமெங்கும் அசரீரியாக காதம்பரி என்ற பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஒரு பயலும் கண்ணில தென்பட மாட்டான்.....!  :rolleyes:  tw_blush:

இனி சுவியை நாம் காதம்பரி என்று யாழில் .................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இளமை  காலத்தை ஆசை போட்டுப் பார்ப்பதும் ஒரு வகை சுகம்.  பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஞாபகம் புத்தனையம் விட்டுவைக்கவில்லை... ஆமா புத்தன் உங்களுக்கு பெண்கள் பக்கம் இருந்து என்ன பட்டம் வைத்திருந்தார்கள் அதையும் எழுதினாத்தானே சுவார்சியமாக இருக்கும்.....தெரியாது என்றால் உங்களுடைய விடலைப் பருவப்புகைப்படம் ஒன்றை இங்கு இணைத்து விடுங்கள் நாங்கள் கெஸ்ப் பண்ணிக் கொள்கிறோம். :):cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

இளமைக்கால இனிமையான நினைவுகளை எடுத்துவந்து அனைவரையும் கனவுகளில் மிதக்கவைத்த புத்தனின் ஆக்கம் மிக அருமை. மீண்டும் வராத அந்த வசந்தகால நினைவுகளில் வசமாகா இதயமேது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/23/2017 at 9:01 AM, putthan said:

முடி கட்டையாக வெட்டியிருந்தால் "கிப்பி",முடியை அவிட்டு விட்டிருந்தால் "சடைச்சி",முடி  சுருளாக இருந்தால் "சுருளி",ஆள் வெள்ளையாக்விருந்தால் "கோதுமை", முகத்தில் புள்ளியிருந்தால் "புள்ளி", கட்டையாகவும் கொஞ்சம் மொத்தமாகவும் இருந்தால்" வாத்து "அல்லது "தாரா" , நாங்கள் கிண்டல் பண்ண அவர்கள் முறைத்து பார்த்தால் "காளி", எதிர்த்து கதைத்தால் "வாயாடி"அல்லது "கறிக்காரி"இப்படி அழகாக பட்டங்களை சூட்டி..  கெளரவித்து... மகிழ்வது எங்களது வழக்கம்.

புத்தன் பாடசாலை வாழ்வு என்பது ஆணோ பெண்ணோ எவராக இருந்தாலும் எந்த ஒரு காலமும் மறக்கமாட்டார்கள்.அந்த அளவுக்கு நெஞ்சிலே பதியும் அளவுக்கு ஒவ்வொருவருக்கும் பல சம்பவங்கள் நடந்திருக்கும்.

இன்னும் முக்கியமாக ஆசிரியர்களில் இருந்து மாணவர்கள் வரை பலருக்கும் பட்டப் பெயர்கள் இருக்கும்.சிலருக்கு அதுவே நிரந்தரமாகி உண்மையான பெயரைச் சொன்னால் பலருக்கு ஆளைத் தெரியாது.

சரி உங்களது பட்டப் பெயர் என்னவோ?

நான் முதன் முதல் புகைக்க தொடங்கியது பத்மா கபேயில் (யாழ் இந்து) மற்றகோன்.9ம் வகுப்பு அந்தநேரம் பிறெப் என்று சொல்வது இப்ப அந்த வகுப்பு இருக்கோ தெரியாது.இப்ப தொடங்கியது நாள் போக பிறிஸ்டலில் நிரந்தரமாகி 40 வயதில் நெஞ்சுக்குள் இரும்பு வலை வைக்கும் வரை தொடர்ந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நனவிடை தோய்தல் மத்திய வயதைத் தாண்டும்போது எல்லோருக்கும் சம்பவிக்கின்றதா??

இளமை கால நினைவுகள் பசுமையாக இருக்கும் என்பதை இப்போதைய  வாட்ஸ் குறூப்களின் சாற்றிங்களில் இருந்து நானும் கண்டுகொண்டேன். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகள் எல்லாருக்கும் நினைவு தடுமாறும்வரை வந்துபோகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/04/2017 at 11:40 AM, குமாரசாமி said:

உங்கை கனபேர் கவனிக்க வேண்டிய வசனம் .:cool:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

On 24/04/2017 at 1:01 PM, தமிழ் சிறி said:

ஊரில்... பட்டப் பெயர் வைப்பது வழமை என்றாலும், இவ்வளவு காலமும்  அதனை மறக்காமல் நினைவு வைத்துள்ளது ஆச்சரியமாக மாக உள்ளது.
ஊரில் உள்ள தேனீர் கடையை... மீண்டும் கண் முன்னே கொண்டு வந்த காட்சிகள் மிக அழகு புத்தன்.:)

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள் தமிழ்சிறி .அந்த தேனீர்கடையை இந்ததடவை தேடினேன் கிடைக்கவில்லை

On 25/04/2017 at 5:06 AM, நிலாமதி said:

 இளமை  காலத்தை ஆசை போட்டுப் பார்ப்பதும் ஒரு வகை சுகம்.  பகிர்வுக்கு நன்றி

இளமை காலம் ஒரு அற்புதம் ...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள் நிலாமதி

On 25/04/2017 at 7:15 AM, வல்வை சகாறா said:

பழைய ஞாபகம் புத்தனையம் விட்டுவைக்கவில்லை... ஆமா புத்தன் உங்களுக்கு பெண்கள் பக்கம் இருந்து என்ன பட்டம் வைத்திருந்தார்கள் அதையும் எழுதினாத்தானே சுவார்சியமாக இருக்கும்.....தெரியாது என்றால் உங்களுடைய விடலைப் பருவப்புகைப்படம் ஒன்றை இங்கு இணைத்து விடுங்கள் நாங்கள் கெஸ்ப் பண்ணிக் கொள்கிறோம். :):cool:

பெண்கள் எனக்கு பட்டம் வைப்பதற்கு ஏற்ற கீரோவாக இருக்கவில்லை ...ஆனால் "கோசப்பங்கள்" என்று சொல்லுவார்கள்....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள் வல்வை.....

On 25/04/2017 at 9:19 AM, Kavallur Kanmani said:

இளமைக்கால இனிமையான நினைவுகளை எடுத்துவந்து அனைவரையும் கனவுகளில் மிதக்கவைத்த புத்தனின் ஆக்கம் மிக அருமை. மீண்டும் வராத அந்த வசந்தகால நினைவுகளில் வசமாகா இதயமேது?

உண்மையிலயே இளமைக்காலம் ஒரு வசந்தகாலம் தான்...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/04/2017 at 10:56 AM, ஈழப்பிரியன் said:

 

சரி உங்களது பட்டப் பெயர் என்னவோ?

 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள் ஈழப்பிரியன்...பாடசாலை காலத்திலும் எனது பட்டப்பெயர் புத்தன் தான்.....:10_wink:

On 26/04/2017 at 4:29 PM, கிருபன் said:

நனவிடை தோய்தல் மத்திய வயதைத் தாண்டும்போது எல்லோருக்கும் சம்பவிக்கின்றதா??

 ?

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள்.....கிருபன் ...மத்திய வயதினர் முதுமைக்கு போகமல் இருப்பதற்காக இளமையை திரும்பி பார்க்கின்றனர்.:10_wink:

12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பழைய நினைவுகள் எல்லாருக்கும் நினைவு தடுமாறும்வரை வந்துபோகும்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள்...சுமே..உண்மை பழைய நினைவுகள் எல்லாருக்கும் நினைவு தடுமாறும்வரை வந்துபோகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

  1. மெசொபொத்தேமியா சுமேரியர்

  2. Sabesh

  3. கிருபன்

  4. தமிழினி

  5. Athavan CH

  6. தமிழ் சிறி

  7. ஈழப்பிரியன்

  8. Kavallur Kanmani

  9. வல்வை சகாறா

  10. Paanch

    பெருமாள்
  11. நவீனன்

  12. நந்தன்

  13. குமாரசாமி

  14. புங்கையூரன்

    பச்சை புள்ளிகள் வழங்கியும் கருத்து எழுதி ஊக்கபடுத்தும்,சகலருக்கும் நன்றிகள்

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்...இண்டைக்குத் தான் உங்கட கதையை ஆறுதலாக வாசித்துச் சீரணிக்கக் கூடியதாக இருந்தது!

அந்தக் காலத்தில பெரிய ..பிரளிக் காரராய் இருந்திருப்பீங்கள் போல கிடக்கு!:113_tongue:

எங்களுக்கு...விடுதிகளில் இருந்த படியால இப்படியான சுதந்திரங்கள் வலு குறைவு!

 

இருந்தாலும் நல்லூர்த் திருவிழா காலத்திலை எங்கடை விளையாட்டுக்களைக் காட்டத் தவறுவதில்லை!

இந்து மகளிர் கல்லூரி பக்கம் அவ்வளவாக வாலாட்டுவதில்லை! 

ஒரே காரணம்...சபாலிங்கத்தார் வீடு... கல்லூரிக்கு முன்னாலை இருந்தது தான்! வேற ஒரு விஷேச காரணமும் இல்லை!

 

எங்கட காலத்தில....ராசையா என்று ஒரு இஞ்சுப்பெக்ரர் இருந்ததாக நினைவு! ஆள் வட்டுக்கோட்டைப் பக்கம்!

சைக்கிளுகளுக்குக் காத்துத் திறந்து விடுகிறது....பெட்டையள் பக்கம் திருவிழாவிலை போனால்...எங்களைக் கூப்பிட்டு முழங்காலில விடுகிறது போன்ற வேலைகளைச் செய்வதில் இவருக்கு வலு சந்தோசம்!

ஆனால்...ஒரு நாள்...மோட்டர் சைக்கிளில் இருந்து..கள்ளமாய் (போலிஸ் ஸ்டேசனில் அடித்த பெற்றோலை) விக்கிற நேரம் எங்களின்ர குறுப்பிட்டை, எக்கச் சக்கமாய்ப் பிடி பட்டுப் போனார்! (தமிழன் தானே...இந்தக் கள்ளக் குணமும் இல்லாவிட்டால்..எப்படி ஸ்டேட்டஸை மெயின்ரைன் பண்ணுறதாம்)

எங்கை ...எப்பிடிப் பிடிபட்டார் என்ற கேள்விகள் கேட்கக் கூடாது!

மொத்தத்தில்...இன்னுமொரு புத்தனின் அனுபவக் கதை...!

வாழ்த்துக்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24.4.2017 at 11:15 PM, வல்வை சகாறா said:

பழைய ஞாபகம் புத்தனையம் விட்டுவைக்கவில்லை... ஆமா புத்தன் உங்களுக்கு பெண்கள் பக்கம் இருந்து என்ன பட்டம் வைத்திருந்தார்கள் அதையும் எழுதினாத்தானே சுவார்சியமாக இருக்கும்.....தெரியாது என்றால் உங்களுடைய விடலைப் பருவப்புகைப்படம் ஒன்றை இங்கு இணைத்து விடுங்கள் நாங்கள் கெஸ்ப் பண்ணிக் கொள்கிறோம். :):cool:

ஆகா.... அருமையான கேள்வி...  வல்வை சகாறா.
இந்தக் கோணத்தில், நாங்கள் சிந்திக்கவேயில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.4.2017 at 2:56 AM, ஈழப்பிரியன் said:

நான் முதன் முதல் புகைக்க தொடங்கியது பத்மா கபேயில் (யாழ் இந்து) மற்றகோன்.9ம் வகுப்பு அந்தநேரம் பிறெப் என்று சொல்வது இப்ப அந்த வகுப்பு இருக்கோ தெரியாது.இப்ப தொடங்கியது நாள் போக பிறிஸ்டலில் நிரந்தரமாகி 40 வயதில் நெஞ்சுக்குள் இரும்பு வலை வைக்கும் வரை தொடர்ந்தேன்.

அட.... ஈழப்பிரியன், கிட்ட நெருங்கி விட்டார் போலுள்ளது.
"பத்மா கபே"  மனோகரா தியேட்டர்  சந்தியில் இருந்தது தானே.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

அட.... ஈழப்பிரியன், கிட்ட நெருங்கி விட்டார் போலுள்ளது.
"பத்மா கபே"  மனோகரா தியேட்டர்  சந்தியில் இருந்தது தானே.  

இல்லையே சிறி கல்லூரிக்கு அருகாமையில் இருந்தது.கே கே எஸ் வீதியைக் கடந்தால் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

இல்லையே சிறி கல்லூரிக்கு அருகாமையில் இருந்தது.கே கே எஸ் வீதியைக் கடந்தால் சரி.

ஓமோம்..... ஈழப் பிரியன்.  கல்லூரியின், பிரார்த்தனை மண்டபத்துக்கு, எதிரில்  இருக்கும் கடை.
இடைக்கிடை.... அங்கு,  மதிய  சாப்பாட்டு  இடைவேளையின் போது....  
சக  நண்பர்களை... "காய் வெட்டி விட்டு,"  :D:
வெள்ளை இடியப்பமும், சொதியும், சம்பலும்  சாப்பிடப் போவேன்.

கையில் பணம் புழங்கினால்...  
மனோகரா சந்தியில் உள்ள கடையில் (பெயர் நினைவு வரவில்லை), நண்பர்களுடன்... சாப்பிட்டு,  சிகரெட்  பத்துவோம். :)

இன்னுமொரு கடை... விளையாட்டு  மைதானத்தில் உள்ள, வைரவர் கோவிலுக்கு அருகில், 
கஸ்தூரியார் வீதியில், இருந்தது. அதில் விற்கும்...  (25 சதம்.)  கீரை வடை மிகவும், பெரியது ருசியானது.

பாடசாலைக்  காலங்களில், அம்மா.... எவ்வளவு மினக்கெட்டு, சமைத்து.. சமையல் செய்து தந்தாலும்,
கடை  சாப்பாடுகளையும், சாப்பிட எப்படி மனம் வந்ததோ... என்று. இப்ப... நினைக்க கவலையாக உள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:


கஸ்தூரியார் வீதியில், இருந்தது. அதில் விற்கும்...  (25 சதம்.)  கீரை வடை மிகவும், பெரியது ருசியானது.

சிறி இதே வடை 10 சதத்திற்கு வாங்கி சாப்பிட்டதாகவே ஞாபகம்.

உங்கள் கல்லூரி எதுவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இதே வடை 10 சதத்திற்கு வாங்கி சாப்பிட்டதாகவே ஞாபகம்.

உங்கள் கல்லூரி எதுவோ?

ஈழப் பிரியன்ஸ்.... :)
எனது கல்லூரி,  "வாழிய.... யாழ் நகர், இந்துக் கல்லூரி"  தான். :18_kissing_heart: tw_heart:
நீங்கள்... பத்து சதத்துக்கு, கீரை வடையை  வாங்கியிருந்தால், எனக்கு, "சீனியர்"  ஆன ஆள். :119_busts_in_silhouette: :24_stuck_out_tongue:
அல்லது... கடைக்காரன், என்னை சின்னப் பெடியன் என்று நினைத்து... tw_warning:
கீரை வடையின் விலையை... உயர்த்தி, என்னை பேய்க் காட்டிப் போட்டார் என்று, நினைக்கின்றேன். :grin:

எதுக்கும்... இந்த வடையை பற்றி, முன்பு... புங்கையூரான்,  சுவியர் ஆகியோரிடம்   உரையாடியதாக நினைவு உள்ளது. :)
அவர்கள்... அந்த நேரம்... கீரை வடை,  என்ன விலை விற்றது என்று, விரல்  நுனியில் கணக்கு வைத்திருப்பார்கள். :grin: :D: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

###### இருந்தாலும் நல்லூர்த் திருவிழா காலத்திலை எங்கடை விளையாட்டுக்களைக் காட்டத் தவறுவதில்லை!

இந்து மகளிர் கல்லூரி பக்கம் அவ்வளவாக வாலாட்டுவதில்லை! 

ஒரே காரணம்...சபாலிங்கத்தார் வீடு... கல்லூரிக்கு முன்னாலை இருந்தது தான்! வேற ஒரு விஷேச காரணமும் இல்லை!

 

எங்கட காலத்தில....ராசையா என்று ஒரு இஞ்சுப்பெக்ரர் இருந்ததாக நினைவு! ஆள் வட்டுக்கோட்டைப் பக்கம்!

சைக்கிளுகளுக்குக் காத்துத் திறந்து விடுகிறது....பெட்டையள் பக்கம் திருவிழாவிலை போனால்...எங்களைக் கூப்பிட்டு முழங்காலில விடுகிறது போன்ற வேலைகளைச் செய்வதில் இவருக்கு வலு சந்தோசம்!

ஆனால்...ஒரு நாள்...மோட்டர் சைக்கிளில் இருந்து..கள்ளமாய் (போலிஸ் ஸ்டேசனில் அடித்த பெற்றோலை) விக்கிற நேரம் எங்களின்ர குறுப்பிட்டை, எக்கச் சக்கமாய்ப் பிடி பட்டுப் போனார்! (தமிழன் தானே...இந்தக் கள்ளக் குணமும் இல்லாவிட்டால்..எப்படி ஸ்டேட்டஸை மெயின்ரைன் பண்ணுறதாம்)

எங்கை ...எப்பிடிப் பிடிபட்டார் என்ற கேள்விகள் கேட்கக் கூடாது!

மொத்தத்தில்...இன்னுமொரு புத்தனின் அனுபவக் கதை...!

வாழ்த்துக்கள்!

 

புங்கை......  :)  tw_heart:
சபாலிங்கத்தாரின் வீடு, யாழ். இந்து மகளிர் கல்லூரியின் முன்பாக,  அரசடி  வீதியில் இருந்தது.  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.