Jump to content

எதிர் அழகியல் - தமிழ்நதியின் சிறுகதையை பின் மற்றும் முன் தொடர்ந்து...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுகதையொன்றைப் படிக்க நேர்ந்தது.

http://tamilnathy.blogspot.com/2007/02/blog-post_05.html

இரண்டுகாரணங்களால் அந்தக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.

1. மய்யப்படுத்தப்பட்ட இலக்கியம், மய்யப்படுத்தப்பட்ட வரலாறு, மய்யப்படுத்தப்பட்ட அரசியல் ஆகியவற்றால் புறக்கணிக்கப்படும் விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளைப் பேசுகிறது.

2. ஈழத்தமிழர் ஒருவர் விளிம்புகளின் வாழ்க்கையை விளிம்புகளின் மொழியிலேயே நேர்த்தியாகக் கையாண்டிருப்பது.

சமீபத்தில் சாருநிவேதிதாவின் நாவல் 'ராசலீலா'வைப் படித்து முடித்திருக்கிறேன். (உயிர்மை வெளியீடு). இதில் கால்வாசி நாவல் மலம், மலச்சிக்கல், மலங்கழிப்பதிலுள்ள பிரச்சினை ஆகியவற்றைப் பேசுகிறது.

நாவலின் முக்கியக் கதாபாத்திரமான எழுத்தாளன் கண்ணாயிரம்பெருமாள் ஒரு தபால் அலுவலகத்தில் ஸ்டெனோவாகப் பணிபுரிபவன். 9.30 அலுவலகத்திற்கு காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து இரண்டு பேருந்துகள், ஒரு டிரெயின் ஆகியவற்றில் பயணித்து அலுவலகம் செல்பவன். இதனால் அவனால் சரிவரக் காலைக்கடன்களை முடிக்கமுடியாமல் போகிறது. இந்த அவஸ்தையைப் பலபக்கங்களில் பேசுகிறார் சாரு.

மலச்சிக்கல் என்பது வெறுமனே உடலியல் பிரச்சினையோ, மருத்துவப்பிரச்சினையோ அல்ல. உடலைக் காவுவாங்கும் மூலதனப்பசியினால் பாதிக்கப்படும் வர்க்கங்களின் பிரசினை. மேலும் இயற்கை உணவிலிருந்து நம்மைத் துண்டித்து இன்று உலகமயமாக்கல் நமது குடலுக்குள் திணிக்கும் மேற்கத்திய உணவுமுறைகள், நமது நிலங்களைச் சுரண்டும் பூச்சிக்கொல்லி மருந்துகள், பசுமைப்புரட்சிப் பம்மாத்துகள் ஆகியவற்றோடும் தொடர்புடையது. குறிப்பாக இன்று கால்சென்டர்களில் பணிபுரிபவர்களின் நிலையை பொருத்திப்பார்க்கலாம்..

அதேபோல க.பெருமாள் மலமள்ளும் சாதியைச் சேர்ந்தவன். சிறுவயதில் மலமும் அள்ளியிருக்கிறான். வளர்ந்து அரசு ஊழியனாகிவிட்ட பெருமாளுக்கு அடிக்கடி ஒரு கனவு வரும்.ஊர்த்தெருக்களிலுள்ள பீயையெல்லாம் அள்ளிவாரிக் கூடையில் போட்டுவருகிறான். ஒரு பீச்சந்தில் முனிசிபாலிட்டி லாரி தயாராக நிற்கும் . அதில் கொண்டுபோய்க்கொட்டவேண்டும். அப்போது திடிரென்று லாரியின் கதவுகள் திறந்துகொள்கின்றன. ஒருலாரி லோடு மலமும் பெருமாளின் மீது சரிகிறது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட பெருமாள் அலறுகிறான்.

இத்தகய சித்தரிப்புகள் சாரு போன்றவர்களின் எழுத்துகளிலேயே இடம்பெறும். சுந்தரராமசாமி, ஜெயமோகன் போன்ற உன்னத தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளில் மறந்தும் இடம்பெறாது. இன்னும் சொல்லப்போனால் அவர்களின் நாயகர்கள் மலமே கழிக்கமாட்டார்கள். அவர்கள் இறப்பும் பிணியுமற்ற மேன்மக்கள்.

பெருமாள்முருகனின் பீ சிறுகதை (வேறுவேறு இதழில் வெளிவந்தது. பிறகு அடையாளம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 'பீக்கதைகள்' தொகுப்பில் இடம்பெற்றது)யும் குறிப்பிடத்தக்கது .நான்கு இளைஞர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார்கள். கம்யூனிசம் பேசிக்கழிக்கிறார்கள். உலக இலக்கியம், உலக சினிமாவை அலசுகிறார்கள். அவர்களிடத்தில் அழகான பூப்போட்ட கண்ணாடித்தம்ளர் ஒன்று இருக்கிறது. குடிக்கும்போது யார் அந்த டம்ளரைக் கைப்பற்றுவது என்று அவர்களிடத்தில் போட்டியே நடக்கும்.

இந்நிலையில் அவர்கள் வீட்டு செப்டிங்டேங்கில் ஒரு விரிசல் விழுந்து மலம் கசிய ஆரம்பிக்கிறது. அதைச் சரிசெய்யத் துப்புரவுத் தொழிலாளி வருகிறார். இடையில் அந்த பூப்போட்ட கண்ணாடித்தம்ளர் அந்த தொழிலாளியால் பயன்படுத்தப்படுகிறது. அதற்குப்பிறகு அந்த கண்ணாடித்தம்ளரை யாரும் தொடுவதே இல்லை. அந்த டம்ளரே அவர்களுக்கு மலமாகத் தெரிகிறது.

பெருங்கதையாடல்களின் சப்பாத்துகளினடியில் நசிபடும் விளிம்புகள்

மலம், பீ, குசு போன்ற இடக்கரடக்கல் அமங்கல வார்த்தைகள் தமிழ்ச்செவ்விலக்கியங்களில் தடை செய்யப்பட்டிருந்தன. 1992இல் பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழாவையொட்டி இங்கு தலித் இலக்கியம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குமுன் இங்கு இருந்த தீவிர இலக்கிய இதழ்களான மணிக்கொடி, எழுத்து போன்ற இதழ்களில் பார்ப்பன, வெள்ளாள, மற்றும் உயர்சாதி எழுத்தாளர்களே எழுதிவந்தனர்.

தலித் எழுத்துக்களை நிறப்பிரிகை, மேலும், ஆகிய இதழ்கள் வெளியிட்டன. பிறகு கேப்பியார், கவிதாசரண், தலித் ஆகிய இதழ்கள் தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தன. இதை ஆதிக்க எழுத்தாளர்களின் பெருங்கதையாடல் மனங்கள் அசூயையுடனே எதிர்கொண்டன.சுந்தரராமசாமி தலித் இலக்கியத்தைச் 'சவடால் இலக்கியம்' என்றார். இன்றளவும் அசோகமித்திரன் (குமுதம் தீராநதி ஜனவரி 2007) தலித் இலக்கியம் பற்றிப் பேசும்போது "ஏதோ இப்போதுதான் தலித்துகள் படித்து என்னவோ எழுதிகொண்டிருக்கிறார்கள்" என்கிற ரீதியிலேயே பேசுகிறார்.

பெருங்கதையாடல்களைப் பொறுத்தவரை அவை மூன்றுபடிநிலைகளில் சிறுகதையாடல்களை ஒடுக்க முயல்கின்றன.

1. அவை இலக்கியமே அல்ல என்று நிராகரிப்பது.

2. அவை இலக்கியம்தான் ஆனால் அவற்றில் அழகியல் இல்லை என்று ஒதுக்குவது

3. இது புதிய சிந்தனையில்லை, இதை நாங்கள் ஏற்கனவே யோசித்துவிட்டோம்(அ) எழுதிவிட்டோம் என்று ஊத்திமூடுவது.

இதற்கு நல்ல உதாரணம் சுந்தரராமசாமி. அவர் அசோகமித்திரனைப் போல அப்பாவிப் பார்ப்பனர் அல்ல. தந்திரமான பார்ப்பனர் தமிழ் இலக்கியத்தில் பெருங்கதையாடல்களின் பிரம்மாண்டம்.

முதலில் தலித் இலக்கியத்தைச் சவடால் இலக்கியம் என்று ஒதுக்கிய சு.ரா. வே பிறகு 'தோட்டியின் மகன்' நாவலை நான் முதலிலேயே மொழிபெயர்த்துவிட்டேன்,. அது தலித் நாவல்தான் என்றார். ஒரு கேரளத்து வெள்ளாளரால் எழுதப்பட்டு பார்ப்பனரால் மொழிபெயர்க்கப்பட்ட பிரதி எப்படித் தலித்நாவல் ஆகும் என்று நாம் கேள்விகேட்டால் சு.ரா பதிலளிக்காமல் நழுவுவார்.

விளிம்பின் காலம்

அழகியல் என்பதே இயற்கையானதில்லை. அது கொடுக்கப்பட்டது (given). கட்டமைக்கப்படட்து(constructed). ஆதிக்க வர்க்கங்களே அழகியலைத் தீர்மானிக்கின்றன. இந்திய சாதியச் சூழலில் சுத்தம் x அசுத்தம் என்னும் எதிர்வுகளின் அடிப்படையிலேயே தீண்டாமை வரையறுக்கப்பட்டது. சுத்தமாக இருக்கும் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்றும் மலம், சளி, வியர்வை ஆகியவற்றோடு தொடர்புடையவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கப்பட்டார்கள்.

இந்தவகையிலேயே அழகியலையும் புரிந்துகொள்ளமுடியும். தலித் இலக்கியப் பிரதிகள், நிலவும் அழகியலுக்கு மாற்றாக எதிர் அழகியலை முன்வைக்கின்றன. பீ, குசு, இன்னும் சில கெட்டவார்த்தைகள் என அழகியலுக்கு எதிரான சொல்லாடல்களைத் தங்கள் பிரதிகளில் தாரளமாய்ப் பிரயோகிக்கின்றன.

என்.டி.ராஜ்குமார், மதிவண்ணன், தய்.கந்தசாமி ஆகிய தலித்கவிஞர்களின் மொழி இப்படியே அமைகிறது. என்.டி.ராஜ்குமார் தனது தெறி, ஒடக்கு ஆகியக் கவிதை நூல்களில் இத்தகைய மொழிநடையையே கையாள்கிறார்.மதிவண்ணனின் நெறிந்து, இருட்டைப்புதைத்த வெளிச்சங்கள் ஆகிய பிரதிகளும் இதே மொழியையே பின்பற்றுகின்றன. உதாரணத்திற்கு மதியின் கவிதை ஒன்று..

"ஒரு ராஜ ரகசியத்தைக்

கேட்கும் பாவனையில்

பம்மிக்குழைந்து

பின் நேரடியாகவே

கேட்பாயென் சாதியை.

பிறகு நானிருந்த இடத்தில்

நாய்மோண்ட கல்லொன்றிருக்கும்"

மாதவிடாயால் பெண்கள் கோவிலுக்கு வரகூடாது என்னும் பார்ப்பனிய,இந்து,ஆண்தன்னிலைக

Link to comment
Share on other sites

இங்கே டிசேயின் பதிவுலும்

http://padamkadal.blogspot.com/2007/02/blog-post_17.html

பாலபாரதியின் பதிவிலும் இருக்கும் பின் நவீனத்துவம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

இது சம்பந்தமாக் எனக்கு இருக்கும் சில புரிதல்கள் சரியா?

விளிம்பி நிலை என்பதுவும் மையம் என்பதுவும் எல்லா விடயத்திலும் இருக்கும் ஒரு விடயம்,இதனை ஒரு விசேடமான கோட்பாடக எப்படிப் பார்க்கமுடியும்?

பின் நவீனத்துவம் மாக்சியத்தின் ஒரு உயர் வடிவம் என்று கூறுவது எவ்வாறு?'பின் நவீனத்துவம் வைக்கும் தீர்வு தான் என்ன?

அது விளம்பி மையமாகும் ,மையமாக இருக்கிறது விளிம்பு ஆகும் என்று கூறுகிறதே தவிர , வேறு ஒன்றையும் புதிதகக் கூறவில்லையே? அது எவ்வாறு ஆகும்,அதனை எவ்வாறு ஆக்குவது என்பதைப் பற்றியோ, கூறவில்லையே?

இவை வெறும் அறிவு ஜீவித்தனமான கதையாடல்களாகவே எனக்குப் படுகிறது.இதில் எதாவது விசயம் இருக்கா எண்டு யாராவது தெரின்ச்சவங்க சொல்லுங்க பாப்பம்,இல்லை யாரவது சொல்லி இருந்தா இங்க இணைப்புக் கொடுங்க இல்ல ஒட்டுங்க.

அண்மையில் பாலபாரதி ஒரு பின்-நவீனத்துவக் கட்டுரையை அம்மா இதழிலிருந்து எடுத்துப் பதிவு செய்திருந்தார். விமர்சனம் என்பது வேறு, ஆனால் அதில் பின் நவீனத்துவம் குறித்த அதீத காழ்ப்பு இருப்பது போலத் தோன்றியது. தத்துவங்களை மட்டும் எப்போதும் கட்டி அழுபவர்களுக்கு நேரும் அவலம் தான் இது. புது விதமான கட்டுடைப்புக்களையோ, புது வகையிலான தத்துவங்களையோ ஏற்றுக்கொள்வது என்பது -இது மட்டுந்ததான் நமக்கான தத்துவம் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.