Jump to content

கவிப்புயல் இனியவன் கவிதைகள்


Recommended Posts

காதல்..............
உலகில் அன்பு .............
நிலைபெற, ...............
இறைவன் எழுதிட்ட ...........
எழுத்து...............!!!

காதல் 
வந்துவிட்டால்.... 
காட்சிகள் தெரிவதில்லை! 
உறங்காத விழிகள் 
எரிகின்ற போதும்.... 
வலிகள் ஏதுமில்லை.........!!!

$$$$$
கவிப்புயல் இனியவன் 
 

Link to comment
Share on other sites

  • Replies 233
  • Created
  • Last Reply

நான் ...............
இருக்கும் வரை என் ...............
மனதோடு இதயத்தோடும் ...........
உன் நினைவுகள் இருக்கும் ............
இறந்த பின்னும் இருக்கும் ............
என் கல்லறையோடு.. ............
என் கல்வெட்டோடும் .........!!!
&
கவிப்புயல் இனியவன்  

Link to comment
Share on other sites

காலங்கள் மாறினாலும் 
உன் மீது நான் கொண்ட 
காதல் மாறாது.. 
உன்னில் நான் மோகம் ....
கொள்ளவில்லை ......
உயிர் கொண்ட காதல் .....
கொண்டேன் ........
என் மூச்சில் கலந்திருக்கும் 
ஒரு பகுதி உன் மூச்சு...........!!!

&
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

ஆங்கில புத்தாண்டே என்.....
காதல் சொன்ன தினம்.....
அதுவே என் காதலர் தினம்.....!!!

அவள் சொன்ன வார்தையே.....
ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்.....
இன்று பல ஆண்டுகள் ஆயினும்......
அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!!

என்ன வேண்டும் உனகென்றேன் .......
உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் .......
பாக்கியம் வேண்டுமென்றாள்...........
கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்.......
வெளியூரில் வேலை செய்வதால்.....!!!

^
கவி நாட்டியரசர். கவிப்புயல் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
++++++யாழ்ப்பாணம்+++++++ 

Link to comment
Share on other sites

ஒவ்வொரு பிறந்த நாள் .....
கொண்டாட்டமும் .....
இறக்கும் நாளின் ....
திறப்பு விழா ..............!!!

நீ 
அடையாளப்படும் ....
போதுபிரச்சனையை ......
எதிர் கொள்கிறாய் ......!!!

மெழுகு திரி .....
தொழிற்சாலையில் ......
உழைப்பாளிகள் ....
உயிருள்ள மெழுகுதிரி .......!!!

&
சமுதாய கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

தொழிலாளியை .....

சுரண்டுவதற்கு  அவர்களிடம் ......

சதையில்லை .....

எலும்புகள் தான் மீதியாய் ......

இருக்கின்றன ...........!!!

 

குடிகாரர் மட்டுமல்ல .....

அரசியல் வாதிகளும் ....

உளறுகிறார் ................!!!

 

நீ 

தீக்குச்சி தலைக்கனம் ....

உன்னை சாம்பலாக்கும் ....!!!

 

&

சமுதாய கஸல் கவிதை 

கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

கோபமான
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது

உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!

&
கவிப்புயல் இனியவன் 

நீ .................
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
 
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
 
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
 
&
கவிப்புயல் இனியவன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தூய்மையானது உலகில் நட்பு ஒன்றுதான். எங்களை தாங்கிக் கொள்ளும் தோழும் ஏணியும் நட்பு.

Link to comment
Share on other sites

இனிய பொங்கல் வாழ்த்துகள்
இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்
இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்
இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்
இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!!

இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....
இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...
இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......
இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து......
இல்லறம் நல்லறமாக செழித்திட.......
இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!!

இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு......
இல்லத்தாரோடும் உறவுகலோடும்.....
இன்முகத்தோடு பொங்கலை உண்டு.....
இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......
இனிய உறவுகளுக்கு  இனியவனின்......
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......!!!

இரவு பகலாய் வயலில் புரண்டு......
இதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....
இன் முகத்தோடு அறுவடை செய்து.....
இவுலகுக்கே உணவு படைக்கும்.....
இறைவனுக்கு ஒப்பான உழவர்களுக்கு.....
இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! 
 

Link to comment
Share on other sites

--------------

ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!

நீ 
வரும் பாதையை....
ஒழுங்கை ஒன்றில்...
ஒட்டி நின்று...
ஓரக்கண்ணால்...
பார்க்கிறேன் ....!!!

சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

----------

நீ .................
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
 
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
 
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
 
&
கவிப்புயல் இனியவன்
On 1/3/2017 at 8:56 PM, கவிப்புயல் இனியவன் said:

கோபமான
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது

உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!

&
கவிப்புயல் இனியவன் 

நீ .................
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
 
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
 
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
 
&
கவிப்புயல் இனியவன்

 

Link to comment
Share on other sites

ஆங்கில புத்தாண்டே என்.....
காதல் சொன்ன தினம்.....
அதுவே என் காதலர் தினம்.....!!!

அவள் சொன்ன வார்தையே.....
ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்.....
இன்று பல ஆண்டுகள் ஆயினும்......
அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!!

என்ன வேண்டும் உனகென்றேன் .......
உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் .......
பாக்கியம் வேண்டுமென்றாள்...........
கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்.......
வெளியூரில் வேலை செய்வதால்.....!!!

^
கவி நாட்டியரசர். கவிப்புயல் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
++++++யாழ்ப்பாணம்+++++++ 

நீ 
நட்புக்காக..... 
பழகுகிறாயா ...?
காதலுக்கு ....
பழகுகிறாயா ...?
கண்டுபிடிக்க முன்.... 
படாத பாடு படும் 
மனம் ...!!!

பூ பறிக்கப்படுவது......
இரண்டு சந்தர்பத்தில்..
ஒன்று இறைவனுக்கு....
மற்றையது காதலுக்கு...
இரண்டுமே ஏக்கம்....
தந்து வரம்கிடைக்கும் ...!!!

&
இனிக்கும் 
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

தமிழன் ஜல்லி கட்டுக்காக .......
மட்டும் இங்கு போராடவில்லை ......
தமிழனை ஒரு சில்லியாய் .....
நினைக்காதே என்பதற்கு ........
சல்லி சல்லியாய் குவிக்கிறான் ......!!!

ஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......
காளைகள் கூட அடங்காமல் ......
சீறிப்பாய்ந்தன  காளையை .....
அடக்குபவன் சீறிப்பாய் வான் ....
எனபதை மறந்து விடீர்களே .......???

போதும் உங்கள் அடக்குமுறை ......
இதற்கு மேல் அடக்கினால் ......
அடங்கிவிடும் எல்லாம் கவனம் .......!!!
தூபமிடாதீர்கள் இளைஞரின் ......
உணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....
தாங்கவே மாட்டீர்கள் ...............!!!

&
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம் 

 

Link to comment
Share on other sites

அடுக்கு  மொழி பேசி .......
கவிதை எழுதும் நேரம் .....
இதுவல்ல -என்றாலும் .....
அடக்க நினைப்பவனை ....
அடுக்கு மொழியால் .....
சாட்டை அடி அடிக்கவே .....
அடுக்கு மொழியை ......
பயன்படுத்துகிறேன் ......!!!

ஜல்லியாய் பாயும் காளையை ......
கில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......
தமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....
என்று தப்பு கணக்கு போடும் .....
சில்லறைகளே - நாம் கல்லறை ....
என்றாலும் நிறைவேறாது .....
உங்கள் எண்ணம் ..............!!!

பாய்ந்து வரும் காளைகள் ......
எங்கள் நெஞ்சின் மேல் .....
பாய் வதில்லை நாங்கள் .....
நெஞ்சுசோடு அணைக்கவே .....
பாய் கின்றான் - அடக்காதீர் ....
அடக்கினால் உங்கள் நெஞ்சின் .....
பாய் வதற்கு வெகு தூரமில்லை .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம் 
 

Link to comment
Share on other sites

உணர்வின் வழி
தெரியுமா.....?
பீட்டவுக்கு......!!!

உணர்வின் வலி
தெரியுமா....?
பீட்டவுக்கு......!!! 

உணர்வின் மொழி
தெரியுமா.....?
பீட்டவுக்கு......!!! 

வழி, வலி, மொழி.....
தெரிந்தான்
இளைஞன்......
திரண்டான்.........
புறப்படான்.......
போராடுகிறான்.....
தமிழன்.................!!!

&
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

Link to comment
Share on other sites

கை பேசியில் .....
அரட்டை அடித்த ....
இளைஞன்......
கைபேசி வெளிச்சத்தில் ....
மிரட்டி வருகிறான் 
அடக்கு முறையினரை .....!!!

&
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அதிகம் படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை தேடுவதில் உள்ள சிக்கல்கள், புறோக்கர் கூறுவது என்ன? என்கிற தலைப்பில் நாம் பிரசுரித்த பிற்பாடு அன்பர் ஒருவர் அனுப்பி வைத்த கவிதை இது.

 

யாழில் அதிகம் படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை தேடுவதில் உள்ள சிக்கல்கள், புறோக்கர் கூறுவது என்ன? என்கிற தலைப்பில் நாம் பிரசுரித்த பிற்பாடு அன்பர் ஒருவர் அனுப்பி வைத்த கவிதை இது.

புரோக்கரும், யாழ்ப்பாண மாப்பிள்ளையும் உரையாடுவதாக இக்கவிதை அமைந்து உள்ளது.

யாழ்ப்பாண மாப்பிள்ளையின் கொழுப்பையும், எதிர்பார்ப்புகளையும் நக்கலாகவும், கிண்டலாகவும் வெளிப்படுத்தி உள்ளது.

வாரும் அண்ண வாரும் வாரும்

வார்த்தை ஜாலம் நூறும் கூறும்

ஆருக் கிந்த கிழடும் வேணும்

ஆட்டக் காரி போலும் போலும்

தென்ம ராட்சி பெண்கள் என்ன

தெய்வம் என்றோ எண்ணு கின்றீர்

என்னை பார்த்து வேணாம் எண்ட

எந்த பொண்ணு அண்ண உண்டு

பொண்ணும் கொஞ்சம் கற்ற தால

பொட்டி பாம்போ என்றும் ஐயம்

பண்ணும் கற்றாள் என்றே சொன்னீர்

பட்டம் கிட்டம் உண்டோ அண்ண

இந்த கால பெண்க ளுக்குள்

இன்னும் காதல் இல்லை என்றால்

சிந்திக் கத்தான் வேணும்அண்ண

செக்ஸில் ஏதும் வீக்கும் உண்டோ

அண்ணா பொண்ண பார்த்து டாக்டர்

அச்சா என்று கூற வேண்டும்

நண்பர் பொண்ண பார்த்து அண்ண

நக்மா என்று ஏங்க வேண்டும்

ஊருக் குள்ள கூட அண்ண

நூறு இலட்சம் தேறும் தேறும்

நீரும் கொஞ்சம் கூட்டி போடும்

நீட்டி போட்டா நல்லம் ஆகும்.

http://newtamils.com/

 

Link to comment
Share on other sites

ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!

நீ 
வரும் பாதையை....
ஒழுங்கை ஒன்றில்...
ஒட்டி நின்று...
ஓரக்கண்ணால்...
பார்க்கிறேன் ....!!!

சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

சிறகு இல்லாமல் பறக்க முடியும் காதல் செய் 
********
தனிமையிலும் இனிப்பது காதல்
*********
நினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது காதல் 
********
கண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்காதல் 
********
தொட்டது நீ மனத்தால்  கெட்டது நான் ...!!!
*******
&
ஒரு வரியில் கவிதை 
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொப்புக்குள் வண்ண வண்ண முத்துக்கள் கொட்டியிருப்பது போல் கவிதைகள் ஒவ்வொன்றும்  முத்து முத்தாய் இருக்கு....! tw_blush:

Link to comment
Share on other sites

யாருக்கு யார்....
என்பதை இறைவன்....
சொல்லியிருந்தால்...
உன்னை நான்.....
விலக்கிஇருப்பேன் ....!!!

*****
அழகை.... 
நேசித்தவன் அறிவை... 
இழக்கிறான்......
பணத்தை .....
நேசித்தவன் பாசத்தை ....
இழக்கிறான்.....
குணத்தை 
நேசித்தவன் கோபுரமாகிறான்.....!!!

******

சின்ன சின்ன கவிதைகள் 
கவிப்புயல் இனியவன் 

8 minutes ago, suvy said:

சொப்புக்குள் வண்ண வண்ண முத்துக்கள் கொட்டியிருப்பது போல் கவிதைகள் ஒவ்வொன்றும்  முத்து முத்தாய் இருக்கு....! tw_blush:

மிக்க நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

இறைவனுக்கு என் எதிர்காலம் தெரியும்
வாழ்க்கைக்கு என் இறத்தகாலம் தெரியும்
இன்பத்தில் வாழஎன் நிகழ்காலத்துக்கு தெரியும் ....!!!

*******

எவ்வளவு பெரிய அலையாக இருந்தாலும்.....
கடல் கரைக்கு தெரியும் அலையின்.....
அன்பும் அரவணைப்பும் .....!!!

*******

சிந்திக்க சில வரிகள் 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

தமிழனுக்குக் கொம்பு முளைத்துவிட்டது!

கவிப்பேரரசு வைரமுத்து, படம்: ப.சரவணகுமார்

 

p34aa.jpgவாடிவாசல் திறந்துவிடும்
    வாழ்த்துகிறேன் தம்பி – இனி
கோடிவாசல் திறக்கும்உன்
    கொள்கைகளை நம்பி

தலைவர்களே இல்லாத
    கட்சியொன்று காட்டி – ஒரு
தலைமுறைக்கே வழிசொன்னீர்
     தமிழினத்தைக் கூட்டி

அடையாளம் தொன்மங்கள்
     அழிக்குமொரு கூட்டம் – உங்கள்
படையாழம் பார்த்தவுடன்
    பயந்தெடுத்த தோட்டம்

பீசாவும் பெப்சியுமே
     இளைஞர்கள் என்று – வாய்
கூசாமல் சொன்னவரைக்
     கொன்றுவிட்டீர் கொன்று

சொல்வாங்கி எல்லாரும்
    சூளுரைத்த பாட்டு - கடல்
உள்வாங்கிப் போனதடா
    உங்கள்குரல் கேட்டு

p34.jpg

ஒருகொம்பு ஆணென்றால்
    மறுகொம்பு பெண்தான் – அந்த
இருகொம்பின் மத்தியிலே
    இடுங்கியது மண்தான்

தண்பனியால் சுடுகதிரால்
    தமிழினமா சாகும்? – அட
தண்ணீரில் வீழ்வதனால்
     வெயில்நனைந்தா போகும்?

தெருவிருந்து போராடத்
    திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்
கருவிருந்து பெற்றாரின்
     கால்களுக்கும் வணக்கம்

p6aa7.jpgசதுராடிக் களம்கண்ட
     சகோதரிகாள் வணக்கம் – உங்கள்
எதிர்காலக் கருப்பைகள்
     நெருப்பைத்தான் சுமக்கும்

காளைகளை மீட்டெடுக்கக்
    களம்கண்ட கூட்டம் – இனி
நாளைகளை மீட்டெடுக்க
     நாணில்அம்பு பூட்டும்

வரம்புகளை யார்விதித்தார்
    வரட்டுமொரு யுத்தம் – எங்கள்
நரம்புகளில் ஓடுதடா
    ராஜ ராஜ ரத்தம்

போராடிச் சாதித்துப்
     புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்
சாராயம் குறித்தும்நீர்
    ஆராய வேண்டும்

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: aeroplane and sky

பொழுது மங்கும் வேளையதில்

நீண்ட பறப்பில் இருந்த வான்பறவை

இலக்கில் இறங்கி ஓய்வெடுக்க..

நானும் காலாற இறங்கி அமர முதல்...

நீண்ட கியூவில் காத்துக்கிடப்பு.

 

உலகமெல்லாம்.. சுத்தி அடிச்ச போதும்

கண்டிராத கோலம்..

அந்த மண்ணில் மட்டும்

காக்கிகளும் பச்சைகளும் நீலங்களும்

சிவிலியன்கள் மத்தியில்

நல்லாட்சி என்றாங்கள்

இருந்தும்..

இன்னும் போர் ஓயவில்லை...?!

 

பண்பாட்டுக் குறைவோ

அதிகாரத் திமிரோ

தமிழன் என்ற முத்திரையோ..

இன்னும் அங்கு கெடுபிடிதான்..

மிரட்டல்களுக்கும் தட்டிப்பறிப்புகளுக்கும்

குறைச்சலில்லை. 

 

தெரிந்த சிங்களத்தைப் பேசி 

நானும்

சிங்களவனாகிக் காட்ட...

என் கொச்சைச் சிங்களம்

ராக்சி ரைவர்.. நீ தமிழா.. முஸ்லிமா

கேட்க வைச்சதில் வியப்புமில்லை.

Image may contain: sky, tree, outdoor, nature and water

 

எல்லாம் கடந்து

ஏசிக்கு மயங்கி இன்ரசிர்ரி ஏறி

இடிமுழக்க இழுவைகளோடு போய்

வடக்கே என்

ஊரை அடைகையில்..

யார் வரவேற்பாரோ

என்றிருக்க..

என் நேரம்

அங்கும் காக்கிகளும் பச்சைகளும் நீலங்களும்...

அவர் தம் கண்கள்

ஊருடுவிய பார்வைகளில்..

உலகோடு சேர்ந்தடிச்ச

வெற்றியின் வெறித்தனம் குறையவில்லை.

 

எல்லாம் போக

ஆட்டோவில் ஏறி

ஒரு உல்லாச உலா வருவம் என்றால்...

நாலு சந்திக்கொரு அலங்காரம்.

என்னடா சங்கதி என்று

எட்டிப்பார்த்தால்..

தமிழனை வெட்டி விழுத்தி கண்ட

வெற்றிப்பிரதாபங்கள் பிரதிபலித்தன.

யாரை நோவது தெரியவில்லை.!

 

ஊர் உள்ள போய்

வீட்டை காணியை பார்த்தால்..

அண்டை அயல் எல்லாம் மாறிக் கிடக்கு.

ஏட்டிக்குப் போட்டியாய் வாழ்ந்த அயல்வீடு

தரை மட்டமாய்க்கிடக்கு.

எல்லைக்கும் கதியாலுக்கும் சண்டை போட

அங்க எதுவும் இல்லை.

Image may contain: bird, plant, outdoor and nature

 

இரைக்கு ஏங்கும் நாரைகளும் கொக்குகளும் 

இப்ப குளம் குட்டை தேடுவதில்லை

வெற்றுக் காணிகளுக்குள்

இரை தேடுகின்றன.

அவைக்கும் இசைவாக்கத்தில்

குறைவில்லை...

தமிழர்களைப் போல

ஒட்டாத போதும் ஒட்டி வாழினம். 

எங்கும் ஒரு ஏக்கம்

மண்ணோடு கலந்து விட்டது

மக்கள் மனங்களில் பட்டு

கண்களில் தெறிப்பதில் குறைவேயில்லை. 

 

Image may contain: plant, flower, outdoor and nature

இருந்தாலும்..

தெற்கில் இல்லா வசதிகளோடு

தொடரூந்து நிலைகள் வடக்கில்..

மேற்குக்கு இணையாக

வசதிகளோடு வடக்கு..

இப்படி கண்டதில்

மனங்களில் ஒரு மாற்றம்.

அன்றாட தேவைகளுக்காக ஓடும் நிலையில்...

அரசியல் தேவைகள்

அருகிவிட்ட சிந்தனைகள்.

அடக்க வந்தவர்கள் கச்சிதமாய்

செய்து வரும் காரியங்கள்

மக்கள் தம் இசைவாக்கத்தில் பிரதிபலிக்க

தவறவேயில்லை. 

 

வாய்கள் மூடினாலும்

மனதுகள் மூடவில்லை.

கோலங்கள் மாறினாலும்

ஏக்கங்கள் மாறவில்லை. 

உள்ளே அடங்கிக் கிடக்கும் வேட்கைகளோடு

மக்கள்..

உச்ச இசைவாக்கம் தேடி.

நல்லிணக்கம்.. நல்லெண்ணம்.. சக வாழ்வு

கட்டாயக் கொட்டிலுக்குள்

மக்கள்..!

ஏக்கங்கங்களின் உறைவிடமாய்

என் சொந்த மண்..!

இன்று.!!

மக்கள் அரசியல் ஆசைகளில்

தேனும் பாலும் ஓடுவதாய்

மட்டும் தெரியவேயில்லை..!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 படங்களுக்கும் உள்ளதைச்சொல்லும் அழகான கவி வரிகளுக்கும் பாராட்ட்டுக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

 படங்களுக்கும் உள்ளதைச்சொல்லும் அழகான கவி வரிகளுக்கும் பாராட்ட்டுக்கள் !

ஊர் வந்து போயிருக்கு போல் குருவி 

நல்லது அப்பப்ப வந்து போங்க ஏங்கி நிற்கும் வரிகளில் தெரிகிறது   வலிகள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

 

இருந்தாலும்..

தெற்கில் இல்லா வசதிகளோடு

தொடரூந்து நிலைகள் வடக்கில்..

மேற்குக்கு இணையாக

வசதிகளோடு வடக்கு..

இப்படி கண்டதில்

மனங்களில் ஒரு மாற்றம்.

அன்றாட தேவைகளுக்காக ஓடும் நிலையில்...

அரசியல் தேவைகள்

அருகிவிட்ட சிந்தனைகள்.

அடக்க வந்தவர்கள் கச்சிதமாய்

செய்து வரும் காரியங்கள்

மக்கள் தம் இசைவாக்கத்தில் பிரதிபலிக்க

தவறவேயில்லை. 

------

ஏக்கங்கங்களின் உறைவிடமாய்

என் சொந்த மண்..!

இன்று.!!

ஏக்கங்களை.... பகிர்ந்த விதம் அழகு, நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.