Jump to content

கவிப்புயல் இனியவன் கவிதைகள்


Recommended Posts

தேன் நாவுக்கு இனிப்பு......
உடலுக்கு கசப்பு சுவை.......!

போலி ஆன்மீக வாதிகள்.....
நாவிலே இனிமையான பேச்சு......
செயல்களோ கசப்பானவை....!

&
கவிப்புயல் இனியவன்

தேன் நாவுக்கு இனிப்பு......
உடலுக்கு கசப்பு சுவை.......!

போலி ஆன்மீக வாதிகள்.....
நாவிலே இனிமையான பேச்சு......
செயல்களோ கசப்பானவை....!

இறைவா......
உன் நினைவோடு தூங்கி.....
உன் நினைவோடு எழும்.....
அற்புத சக்தியை தா........!

உன்னை நினைக்காத.....
நொடிப்பொழுதெல்லாம்.....
என் உடலை முள்ளினால்......
தைக்கும்  உணர்வை தா......! 

&
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • Replies 233
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை
மறக்க மறதியின் ...
உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
தயவு செய்து அந்த இடத்தை ....
நீ தான் காட்டி விடு ....!

காட்டி விட்டால் அப்புறம் அவளை மறக்கவே முடியாது போய்விடும் ....., அனுபவம் சொல்கிறது...அப்புறம் உங்கள் இஷ்டம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

தமிழ் முதல் மொழி ....
சீனத்திலும் உண்டு ....
சீமையெல்லாம் உண்டு.....
உன் விழிகள் பேசும் ....
வார்த்தை மட்டும் ......
என்னிடம்  தான் உண்டு ...!

போதும் போதும் .......
நீ விழியால் பேசியது.....
வலிமேல் வலி தந்து......
விளையாடுவது போதும்....!

நீ ஒன்றுமே .....
செய்ய வேண்டாம்...
காதலிக்கிறேன் என்று.....
மட்டும்சொல்..........
அந்த வார்த்தையை......
வைத்துக்கொண்டே..........
அகராதி எழுதிவிடுகிறேன்...!

&
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
 

Link to comment
Share on other sites

நீ
கலைந்தே போனாலும்
கலையவில்லை....
உன் கனவுகள். . !

நீ 
பிரிந்தே போனாலும்
விலகவில்லை 
உன் நினைவுகள்...!

நீ
மறந்தே போனாலும்.....
மறக்க வைக்கவில்லை.....
உன் நினைவு பரிசுகள்....!

நீ
சேர்ந்தே போனாலும்....
சேதமாகவில்லை....
என் காதல்.......!

&
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

கடவுளும் காதலும்....
ஒன்றுதான் ......
இரண்டையும் உணரலாம்....
அடைய முடியாது........!

என் இறப்புக்கு முன்.....
இறப்பிடத்தை.......
காதலால் காட்டுகிறாய்.......!

உன்னை நினைத்து........
பூக்களை பார்க்கிறேன்.......
பூக்களே வாடி விழுகிறது....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
               இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Link to comment
Share on other sites

இறைவா.....
நீயும் அவளைபோல்.....
கனவில் மட்டும்.....
வந்து போகிறாய்......!

என்  கவிதைகள்.....
சிவப்பு நிறமாய்.....
இருக்க காரணம் நீ.....!

மறதியின் இடத்துக்கு.....
மறந்து போய் போய்விட்டேன்
மறந்து போய் உன்னை.....
மறுபடியும்நினைத்து விட்டேன்........!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 

Link to comment
Share on other sites

இறைவனை உணரவும்.....
காதலில் வெல்லவும்......
காத்திருப்பு அவசியம்.......!

உன் அழகுதான்.....
என் மனதை அழுக்காக்கி......
அலையவைக்கிறது..............!

காதலிக்க தயாராகுபவர்......
இதயத்தை கல்லாக்கவும்.....
கற்றுக்கொள்ள வேண்டும்......!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 

Link to comment
Share on other sites

பிரபஞ்சத்தின் உச்சம்.....
இருண்டிருக்கும் என்கிறார்கள்....
என் காதலைபோல்........!

உன்னை 
காதலித்த நாள் முதல்......
என் ஆயுள் ரேகை.....
தேய்கிறது..................!

நீ எங்கே கனவில்.......
வரப்போகிறாய்........
நான் தூங்கினால் தானே.....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 

Link to comment
Share on other sites

பொல்லாதவன்.....
ஆக்கியவளே.............
உன் ஒவ்வொரு அசைவையும்......
திருட மனசை தூண்டியவளே......
உன் கொலுசைகூட........
திருடவைத்துவிட்டாய்.........
இத்தனை தவறுகளையும்......
செய்யவைத்துவிட்டு.......
எதுவுமே செய்யாதவள்........
போல் உன்னால் எப்படி.......
இருக்க முடிகிறது....................?

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 

Link to comment
Share on other sites

என் கவிதையை.......
ஒவ்வொன்றாக படித்துபார்.....
காதலின் மறுபக்கம்.......
உனக்கு தெரியும்.........
படித்தவுடன் உன் கண்ணில்......
ஒரு துளி கண்ணீர் நிச்சயம்.......
வடியும்.................
அது போதும் என் காதலை.......
நீ புரிந்ததற்கு..................!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 

எனக்கு ஒரே ஒரு வலி......
உன் மீது அளவில்லாத.......
காதலை என்னைவிட.......
உன்னை விரும்புபவர்கள்.......
யாரும் இருக்க போவதில்லை....!

என்னை விட்டு உன்னால்......
காதலோடு யாருடனும்.....
வாழவும் முடியாது.........
காதலோடு வாழவேண்டும்.....
காதலாய் வாழவேண்டும்.....
உயிரே வந்துவிடு.......!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 

Link to comment
Share on other sites

 தத்துவ கவிதைகள்
----------------------------------

இறப்பு வீட்டுக்கு சென்ற........
பல அனுபவங்களை..........
பார்த்தபோதுகேட்ட போது.....
ஒரு உண்மை புலப்பட்டது......
இறந்த பின் எல்லோரும்........
புனிதராகிவிடுகிறார்கள்.......
இப்போதுதான் எனக்கும்......
இறப்பில் ஒரு ஈர்ப்பு வருகிறது.......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்

Link to comment
Share on other sites

மறதி வாழ்க்கையில்......
ஒரு இன்பம்........
மரணம் வாழ்க்கையில்......
பேரின்பம்............
மரணத்துக்காக ஏங்கும்.....
ஆத்தாவுக்கு புரியும்......
மரணத்தின் இன்பம்........!
&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனையாள் தரும் பொருட்பட்டியலில் 

 மறந்து ரெண்டை விட்டு  வீடேகினால் 

மறதியின் இன்பத்தை கர்ணம் கிழிய 

பரிபூரணமாய் பெற்றிடலாம் ......!  tw_blush:

 

கவிதைகள் சூப்பர் புயல்.....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

முயற்சி என்பது.....
வெற்றியல்ல........
வெற்றி பெறவைப்பது........
பயிற்சியில்லாத முயற்சி......
தோற்றுப்போகும்........
முயற்சியும் பயிற்சியும்.....
இரட்டை குழந்தைகள்....!
&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்
 

Link to comment
Share on other sites

வலிகளையும்......
துன்பங்களையும்......
மறக்க உதவும் மருந்து......
புன்னகை........
இறப்புக்கு நிகரான.......
பிரசவவலியை  அனுபவித்த.....
தாயின் வலி.......
குழந்தையை பார்த்து.....
புன்னகைத்ததும்......
மறைந்து போகிறது......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன் 

Link to comment
Share on other sites

ஒருவனது மரணத்தில்.....
இத்தனை குதூகலமா..?
பாடைக்கு முன்னால்.....
குத்தாட்டமும் ......
பட்டாசுகளும்.........!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன் 

Link to comment
Share on other sites

கவிதை 
வெறும் கருத்தல்ல.....
காயத்தின் வடுவுமல்ல....
மறந்த நினைவை.......
மீட்கும் வீணையுமில்லை.....
நிகழ்கால நிகழ்வின்......
புல்லாங்குழலூமல்ல......
ஆத்தாமாவுக்கு யாரால்...?
விளக்கம் கூறமுடியும்...?
கவிதையும் அதேபோல்.......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன் 
 

Link to comment
Share on other sites

On 9/23/2017 at 7:47 PM, suvy said:

மனையாள் தரும் பொருட்பட்டியலில் 

 மறந்து ரெண்டை விட்டு  வீடேகினால் 

மறதியின் இன்பத்தை கர்ணம் கிழிய 

பரிபூரணமாய் பெற்றிடலாம் ......!  tw_blush:

 

கவிதைகள் சூப்பர் புயல்.....!  tw_blush:

 

நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

நீ 
எனக்காக அழுகிறாய்
என்றால் என்னை நீ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்...!

நீ 
உனக்காக  அழுகிறாய்
என்றால் உன் தப்பை
உணர்ந்து அழுகிறாய்
என்று அர்த்தம் ...! 

நிச்சயம்.........
என்னைவிட உன்னை.....
விரும்பும் உறவு உன்னில்....
இல்லவே இல்லை என்பேன்....!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 11
 

Link to comment
Share on other sites

நீ
இதயத்தில் இருந்த .....
காலத்தில்  என்....
தலையெழுத்து.....
மாறிவிட்டது.......!

யார் சொன்னது.....?
கண்ணீர் வருகிறது.....
என்று.......
இதயத்தில் இருந்த-நீ
வெளியேறுகிறாய்.....!

என் 
ஆயுள்ரேகையை.....
ஆண்டவன் எழுதவில்லை.....
காதல் எழுதிவிட்டது.....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன் -06
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Link to comment
Share on other sites

இதயத்தில் இருந்து.....
எதற்காக முள் வேலி.....
போடுகிறாய்.....?

தீ மிதிப்பு......
இறைவனுக்காக.......
செய்யவேண்டும்......
காதலுக்காக .....
செய்பவன் - நான் ....!

மயானத்தின்.......
பாதையால் சென்றால்.....
உன்னை அடைய முடியும்....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன் -07
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Link to comment
Share on other sites

உன் அருகில் நானிருந்து ..
என் மூச்சை நீ வாங்கி ...
என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!

@@@@@

உன்னை தவிர எதையும் 
நினைக்காத ஞான நிலையை 
என் இதயம் பெறவேண்டும் ....!!!


@@@@@


என்னில் இருக்கும் கண்ணீர் 
உனக்கே உரியது -நீயே வலியை
தந்து நீயே எடுத்து விடு .....!!!

@@@@@

நானும் ஒரு இயந்திர மனிதன் 
உன் நினைவுகளாலும் -உன் 
இயக்கத்தாலும் இயங்குகிறேன் ...!!!

@@@@@

காற்றில்லாமல் வாழ முயற்சிப்பேன் 
உன் காதல் இல்லாமல் ஓர் நொடி 
கூட வாழ விரும்பமாடேன் ...!!!

@@@@@

கவிப்புயல்  இனியவன் 
எஸ் ம் எஸ் கவிதைகள்

Link to comment
Share on other sites

உன் அருகில் நானிருந்து ..
என் மூச்சை நீ வாங்கி ...
என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!

@@@@@

உன்னை தவிர எதையும் 
நினைக்காத ஞான நிலையை 
என் இதயம் பெறவேண்டும் ....!!!


@@@@@


என்னில் இருக்கும் கண்ணீர் 
உனக்கே உரியது -நீயே வலியை
தந்து நீயே எடுத்து விடு .....!!!

@@@@@

நானும் ஒரு இயந்திர மனிதன் 
உன் நினைவுகளாலும் -உன் 
இயக்கத்தாலும் இயங்குகிறேன் ...!!!

@@@@@

காற்றில்லாமல் வாழ முயற்சிப்பேன் 
உன் காதல் இல்லாமல் ஓர் நொடி 
கூட வாழ விரும்பமாடேன் ...!!!

@@@@@

கவிப்புயல்  இனியவன் 
எஸ் ம் எஸ் கவிதைகள்

ஆயிரம் காதல்.....
கவிதைகளை .....
எழுதிவிட்டேன்.....
எனக்குள் 
காதல் ஆலமரமாய்.....
விழுதுவிட்டு 
படர்ந்திருக்கிறது.....!

என் மூச்சு 
காற்று நிற்பதற்குள்......
என் காதலியை 
கண்டுவிடவேண்டும்.....
அவள் விரும்பும் காதல்......
கவிதையொன்றை.......
அவளுக்காக எழுத வேண்டும்.....!

&
கவிப்புயல் இனியவன்
கவி நாட்டியரசர் இனியவன்

Link to comment
Share on other sites

ஆயிரம் காதல்.....
கவிதைகளை .....
எழுதிவிட்டேன்.....
எனக்குள் 
காதல் ஆலமரமாய்.....
விழுதுவிட்டு 
படர்ந்திருக்கிறது.....!

என் மூச்சு 
காற்று நிற்பதற்குள்......
என் காதலியை 
கண்டுவிடவேண்டும்.....
அவள் விரும்பும் காதல்......
கவிதையொன்றை.......
அவளுக்காக எழுத வேண்டும்.....!

&
கவிப்புயல் இனியவன்
கவி நாட்டியரசர் இனியவன்

கையசைத்தேன் கண்ணசைத்தாள்......
கைவிலங்கிட்ட கைதியானேன்........
கைகோர்த்து பேசக்கேட்டேன்........!

கையோடு கை இணையக்கேட்டேன்.....
கை சாத்திட்டு என் கையைப்பிடி.......
கைதியாகிறேன் உனக்காகவென்றாள்.....!

கைநழுவி போகாமல் இருக்க........
கைசாத்திட சம்மதித்தேன்........
கைப்பிடி விழாவும் முடிந்தது.........!

கைவழி இசைபோல் அவள்பேச.......
கைஞ்ஞானமாகியது என் புத்தி.......
கையோடு கைசேர்த்தாள் என்னவள்.....!

&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று .......!

கை கவிதை  மனசோடு பேசுது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.