Jump to content

Recommended Posts

'ஜெனரிக்' யுத்தம்!

generic_3160774f.jpg
 
 
 

இந்திய மருந்துத் துறையின் வர்த்தகம் 2015-16ல் சுமார் 36.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. வருடத்துக்குச் சுமார் 17 % மேலாக இது வளர்ந்துகொண்டிருக்கிறது. எல்லாத் துறைகளையும்விட மருந்துகளில் லாப விகிதம் அதிகம் என்பதால், இதனை விட்டுக்கொடுக்க எவரும் தயாராக இல்லை. இதில் பாதிக்கப்படுவது யார்?

அரசு ஊழியர்கள் எல்லாரும் ஒரு விதத்தில் அரசு மருத்துவ வசதிகளைப் பெறுகின்றனர். தனியார் துறை ஊழியர்களில் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே மருத்துவக் காப்பீடு வசதி பெறுகின்றனர். இவர்கள் தவிர்த்த அனைவரும் மருந்துகளுக்குத் தங்களது வருமானத்தை மட்டுமே செலவிடுகின்றனர். ஆதலால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள்தான்.

வியாபாரத் தந்திரம்

ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது சுலபமான காரியம் இல்லை. ஆராய்ச்சிக்கு மட்டுமே பல கோடி ரூபாய் செலவிட வேண்டும். பிறகு, பரிசோதனைகளுக்கு உள்ளாக்க வேண்டும். இதெல்லாம் முடிந்து அரசின் அனுமதி பெற்று விற்பனைக்கு வருவதற்குள் சில வருடங்கள்கூட ஆகலாம். இவ்வளவு செலவுசெய்து மருந்து கண்டுபிடிப்பவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் காப்புரிமை. இந்தியாவில் புதிய மருந்து ஒன்றுக்குக் காப்புரிமை வழங்கப்பட்டால், அது 20 வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். காப்புரிமை முடிந்த பிறகு, அவற்றைப் பிற நிறுவனங்கள் தயாரித்து விற்பதையே ஜெனரிக் மருந்துகள் என்பார்கள்.

இந்தியாவின் மொத்த மருந்து வர்த்தகத்தில் சுமார் 70% ஜெனரிக் மருந்துகள்தான். அப்படியென்றால், ஏன் ஜெனரிக் மருந்துகளுக்கு மறைமுக எதிர்ப்பு எழ வேண்டும் என்ற கேள்வி எழலாம். அங்கேதான் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் வியாபார சாமர்த்தியம் தலையெடுக்கிறது. இதில் வெளிநாட்டு நிறுவனம் உள்நாட்டு நிறுவனம் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது.

ஒவ்வொரு நிறுவனமும் தனது தயாரிப்பை மக்களிடையே கொண்டுசெல்வதற்கு நம்பிக் கொண்டிருப்பது மருத்துவர்களைத்தான். மருந்து கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதிகள் மருத்துவர்களைப் பார்த்துத் தங்களது தயாரிப்புகளே சிறந்தவை என்றும் அதனையே பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொள்கிறார்கள். அதிக விலையுள்ள மருந்துகள் விற்பனையானால் மட்டுமே அதிக லாபம் கிடைக்கும் என்பதால், அவற்றை மட்டுமே முன்னிலைப்படுத்த ஒரு பன்முக யுத்தம் இங்கே நடந்துகொண்டிருக்கிறது.

ரோச் என்ற சுவிட்சர்லாந்து நிறுவனம் ட்ராட்ஸுமாப் என்ற மருந்தினைக் கண்டுபிடித்துக் காப்புரிமை பெற்றது. இது பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றக்கூடிய மருந்து. உலக அளவில் இந்த மருந்தின் வர்த்தகம் மட்டுமே சுமார் $ 6.7 பில்லியன். இந்தியாவில் தற்போது பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் என்பது அதிக அளவில் ஏற்படக்கூடிய ஒன்றாக இருக்கும் வேளையில், இதன் ஜெனரிக் மருந்துகளை அவ்வளவு சீக்கிரம் அனுமதித்து விடுமா? இதே மருந்தினை 25% குறைந்த விலையில் தயாரித்து விற்கும் பயோகான் நிறுவனமும் அதன் கூட்டு நிறுவனமான மைலான் என்ற அமெரிக்க நிறுவனமும் காம்பெடிஷன் கமிஷன் ஆஃப் இந்தியாவில் ஒரு புகாரை அளித்துள்ளன. அதன்படி, ரோச் நிறுவனம், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு பயோகான் நிறுவனத்தின் மருந்தின் தரம் மற்றும் உபயோகம் பற்றி சந்தேகம் எழுப்பிக் கடிதம் அனுப்பியிருப்பதாகக் கூறியிருக்கின்றன.

குறைந்த விலையால் தரம் குறையாது

மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கென்று சில தரக் கட்டுப்பாடுகள் உள்ளன. பல கட்டப் பரிசோதனைகள் உள்ளன. அரசு நிறுவனங்களின் திடீர் சோதனைகள் உள்ளன. இவை எதுவுமே இல்லாமல் ஒரு நிறுவனத்தின் மருந்து, அது விலை குறைவாக உள்ளது என்பதாலேயே அதனைத் தரமற்றது அல்லது தரம் குறைந்தது என்று கூற முடியுமா? விலை அதிகமாக இருப்பதாலேயே ஒரு மருந்தைத் தரம் அதிகமானது என்று கூற முடியுமா? ஆனால் துரதிர்ஷ்டவசமாக, விலை அதிகமான மருந்து மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் விலை குறைந்த மருந்து சக்தி குறைந்தது என்று நம்பும் மனநிலையில்தான் நமது மக்கள் இருக்கின்றனர்.

சென்ற வருடம் பூனாவில் ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் ஜெனரிக் பெயர்களையே எழுதிக்கொடுக்கிறார்கள் என்பதால் ஆத்திரம் அடைந்த மருந்துக் கடைக்காரர்கள், கூட்டமாகத் திரண்டு அரசு மருத்துவமனை மருத்துவர்களை மிரட்டியதாகவும், அதிலே ஒரு கடைக்காரர் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தியதாகவும் அரசு மருத்துவர்கள் புகார் கொடுத்து திடீர் வேலை நிறுத்தம் செய்தனர்.

2013-ம் வருடத்தில் மருத்துவர்களது நெறிமுறைகள் குறித்து இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட திருத்தத்தில் ‘முடிந்தவரையில்’ ஜெனரிக் பெயர்களையே எழுதிக் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால், இது நடைமுறையில் வரவே இல்லை. முடியவில்லை என்பதே மருத்துவ உலகத்தின் பதிலாக இருந்தது. ஆனால் 21.09.2016-ல் இந்திய மருத்துவக் கழகம் இது குறித்த பத்தி 1.5 திருத்தி வெளியிட்டது. இதன் மூலம் ஜெனரிக் பெயர்களைக் கட்டாயமாக எழுத வேண்டும் என்று மாற்றப்பட்டது. இது இந்திய அரசின் அரசிதழில் 08.10.2016 வெளியிடப்பட்டது. சமீபத்தில் 21.04.2017 அன்று இந்திய மருத்துவக் கழகம் இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ஜெனரிக் பெயர்களை எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் இதனை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாமானியனின் உரிமைக்குக் கிடைத்த வெற்றி என்பதே பொருத்தமாகும்.

இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன? மருத்துவர்களிடம் செல்லும்போது பிராண்ட் பெயர்களில் மருந்து எழுதிக்கொடுத்தால், உடனே அவரிடம் ஜெனரிக் பெயரில் எழுதிக் கொடுக்குமாறு கூறுங்கள். மத்திய அரசாங்கமும் ஜன் ஔஷதி என்ற பெயரில் ஜெனரிக் மருந்து விற்பனைக் கடைகளைத் திறந்துகொண்டிருக்கிறது. இணையதளத்திலேயே ஜெனரிக் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தைப் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அதிக விலைக்கு விற்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் நன்கு அறியப்பட்ட பெரிய நிறுவனங்களாகவே இருக்கும். அதுபோலவே நன்கு அறியப்பட்ட ஆனால், அவ்வளவு பெரியதாக இல்லாத இந்திய நிறுவனங்களும் குறைந்த விலையில் இதனைத் தயாரிக்கின்றன. இதனைக் கொண்டு நீங்கள் தரம் என்ற அம்சத்திலும் பயமின்றி மருந்துகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

இது ஏதோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கையோ அல்லது இந்திய முதலாளிகளுக்கு எதிரான நடவடிக்கையோ கிடையாது. மருத்துவ வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும், மருந்துகளின் அதிக விலையால் குடும்பப் பொருளாதாரம் பாதிக்கப் படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கான ஒரு மக்கள் இயக்கம். விழிப்புணர்வு பெற்ற மக்களால் மட்டுமே மாற்றம் சாத்தியம்.

-ஸ்ரீ அருண்குமார்,

தொடர்புக்கு: arunkumarvs@outlook.com

http://tamil.thehindu.com/opinion/columns/ஜெனரிக்-யுத்தம்/article9679730.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.