Jump to content

தமிழ்மொழியை புறக்கணிக்கிறதா பா.ஜ.க? தி.மு.க கிளப்பும் திடீர் பிரசாரம்


Recommended Posts


தமிழ்மொழியை புறக்கணிக்கிறதா பா.ஜ.க? தி.மு.க கிளப்பும் திடீர் பிரசாரம்
 

article_1494232356-article_1480303869-kaமொழிப்போருக்கான களம் மீண்டும் தமிழகத்தில் அமைந்து விடுமோ என்ற அச்ச உணர்வு அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது.   

ஹிந்தி திணிப்பு என்ற காரணத்தையும் ‘நீட்’ தேர்வு எழுதுவதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவில்லை என்ற அடிப்படையிலும் ‘தமிழ் மொழி காப்போம்’ என்று மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம், விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது. ஹிந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் 1967 இல் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது என்பது வரலாற்று உண்மை.   

ஆனால், அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் இருந்தது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி. இந்த முறை மத்தியில் இருப்பது பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கம். அதேநேரத்தில் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி.  

ஆட்சியிலிருக்கும் திராவிடக் கட்சி மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவில்லை என்று எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் திராவிடக் கட்சியான தி.மு.க குற்றம் சாட்டியிருக்கிறது.   

தங்கள் மீது நடத்தப்படும் வருமான வரித்துறை பரிசோதனைகளுக்குப் பயந்து, மத்திய அரசின் இந்த முயற்சியைத் தட்டிக் கேட்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சிகள் முன் வைக்கும் ஹிந்தி திணிப்பு நடவடிக்கை பற்றி இதுவரை கருத்துச் சொல்லவில்லை.   

ஆனால், அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய அவர், “மத்திய அரசை அ.தி.மு.க அமைச்சர்கள் யாரும் பொது மேடைகளில் விமர்சிக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தியிருக்கிறார். எந்த அமைச்சராவது பழைய நினைப்பில் ஹிந்தித் திணிப்பு பற்றி பேசிவிடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் முதலமைச்சர் அப்படி அறிவுறுத்தியிருக்கலாம் என்றே இந்த நேரத்தில் கருதப்படுகிறது.   

இது மட்டுமல்ல, ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டிய தமிழக அரசின் சட்டமூலத்தைக் குடியரசுத் தலைவருக்கே மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பவில்லை என்ற தகவல் வெளிவந்தும் கூட, இதுவரை முதலமைச்சர் அது பற்றி கருத்துக் கூறவில்லை.   

ஆகவே, மாணவர்களை நேரடியாக ஈர்த்து எடுக்கும் ‘ஹிந்தி’, ‘நீட்’ ஆகிய இரு விடயங்களை தி.மு.க கையில் எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்றாலும், மாணவர்கள் மத்தியில் 1965 இல் இருந்தது போன்ற “ஹிந்தி எதிர்ப்பு உணர்வு இப்போது இருப்பது போல் தெரியவில்லை.   

ஆனாலும், ஹிந்தித் திணிப்பு என்பதை ஏன் தி.மு.க கையிலெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.  
தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ‘ஆட்சி’ என்பதே நடக்கவில்லை என்ற எண்ணம் அடித்தட்டு மக்களிடமும் இருக்கிறது.

அது ஓ. பன்னீர்செல்வமோ, இப்போது இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியோ இருவரும் முதலமைச்சர்களாக ஒன்றும் சாதனை புரிந்து விடவில்லை என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டதோடு மட்டுமின்றி, தமிழகத்தில் ஒரு பலவீனமான மாநில அரசு இருக்கிறது என்ற ‘இமேஜ்’ மக்கள் மத்தியில் உருவாகி விட்டது.   

இந்தச் சூழ்நிலையில் மாநிலத்தின் நலன் கருதி, மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தி.மு.க கருதுகிறது. 

அதிலும் ‘ஓ.பி.எஸ்’ என்றாலும் ‘இ.பி.எஸ்’ என்றாலும் அவர்களை ஆதரித்து தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதே பா.ஜ.கவின் எண்ணவோட்டமாக இருக்கிறது என்ற கருத்து தி.மு.க தலைவர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டது.   

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை இரத்து செய்ததும், என்னதான் அடித்துக் கொண்டாலும் அ.தி.மு.க அரசு தொடரட்டும் என்று இருப்பதும் பா.ஜ.க தலைவர்கள் மத்தியில் உள்ள தி.மு.க எதிர்ப்பு என்று நினைக்கிறார்கள்.   

அதனால்தான், தி.மு.க எதிர்ப்பில் இருக்கும் பா.ஜ.கவுடன் நமக்கு என்ன உறவு தேவைப்படுகிறது என்ற ரீதியில் களத்தில் மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துச் சென்று மக்கள் மத்தியில் போராட விரும்புகிறது.   

அதன் முதல் கட்டமாகத்தான் 6.5.2017 அன்று வேலூரில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு குறித்த கண்டன கருத்தரங்கம் நடைபெற்றது.  

அக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “ஹிந்தியை எதிர்க்கவில்லை. ஹிந்தி திணிப்பை மட்டுமே எதிர்க்கிறோம்” என்று கூறினாலும், அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களின் சிக்கலான கேள்விகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் தி.மு.க ராஜ்ய சபை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் இலாவகமாக பதிலளித்ததைப் பார்க்க முடிந்தது.   

அது மட்டுமல்ல, “ஹிந்தி கற்றுக் கொள்ள விடாமல் இளைஞர்களை தி.மு.க தடுத்து விட்டது” என்ற பிரசாரத்துக்கும் அந்தக் கருத்தரங்கில் பதில் கொடுத்தனர். இந்தக் கருத்தரங்கம் தமிழகமெங்கும் நடக்கப் போகிறது. தி.மு.க இதை முன்னின்று நடத்திச் செல்கிறது.   

அதில் வித்தியாசமான ஒரு வியூகம் என்பது, ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு என்று மட்டுமில்லாமல், “தமிழ் மொழியை மத்திய அரசு புறக்கணிக்கிறது” என்ற வாதத்தையும் சேர்த்தே தி.மு.க முன் வைக்கிறது.  

2011 சட்டமன்ற தேர்தலிலும் சரி, 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் சரி, தமிழகத்தில் உள்ள கட்சிகள் “காங்கிரஸுடன் கூட்டணி சேர” முடியாத அளவுக்கு தமிழகத்தில் ஒரு காங்கிரஸ் எதிர்ப்பை மாநிலத்தில் உள்ள கட்சிகள் ஏற்படுத்தின.   

அதில் முன்நின்றது அ.தி.மு.க; குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ‘காங்கிரஸ் எதிர்ப்பு’ என்பதைக் கையிலெடுத்து, மற்ற எந்தக் கட்சியும் தி.மு.கவுடனோ, காங்கிரஸுடனோ கூட்டணி வைத்து விடாமல் பார்த்துக் கொண்டார்.   

2011 சட்டமன்ற தேர்தலில் இருந்து அ.தி.மு.கவின் தொடர் வெற்றிக்கு இந்தப் பிரித்தாளும் வியூகம் பெரிதும் கை கொடுத்தது. ஆனால், இன்றைக்கு ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க, பா.ஜ.க பற்றி வாய் திறக்க மறுக்கிறது. அதனால்தான் தி.மு.க இந்த ஹிந்தித் திணிப்பு என்ற வடிவத்தில் பா.ஜ.க எதிர்ப்பை கடுமையாகத் தமிழகத்தில் விதைக்கிறது.  

இன்றைக்கு தி.மு.க- காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் தலைமையில் ஒரு ‘பா.ஜ.க எதிர்ப்பு அணி’ உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அ.தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, போன்ற கட்சிகள் ‘பா.ஜ.க தலைமையில்’ ஓர் அணியை 2014 நாடாளுமன்ற தேர்தலில் உருவாக்கியது போல் உருவாக்க முயற்சிக்கலாம் என்று தி.மு.க கருதுகிறது.   

ஆகவே, காங்கிரஸ் எதிர்ப்பு, என்பதை கையிலெடுத்து அன்றைக்கு தி.மு.கவின் கூட்டணி வாய்ப்பை முறியடித்த ஜெயலலிதாவின் வியூகத்தை இப்போது, பா.ஜ.க எதிர்ப்பு என்ற போர்வையில் தி.மு.க கையிலெடுக்கிறது.   

நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், ஹிந்தி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.கவை தனிமைப்படுத்தும் முயற்சியாகவே இன்றைக்கு தி.மு.க மட்டுமல்ல - பா.ஜ.க எதிர்ப்பில் உள்ள மற்ற கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.  

இந்த பா.ஜ.க எதிர்ப்பு உருவானால் அக்கட்சியுடன் வேறு கட்சிகள் கூட்டணி வைக்க முன் வராது என்பது கணிப்பு. இதை பா.ஜ.க தலைமையும் உணர்ந்து இருப்பது போல்தான் தெரிகிறது.  

 ஹிந்தி திணிப்பை எதிர்த்துக் கருத்தரங்கம் என்று தி.மு.க அறிவித்தவுடன், “ஹிந்தியில் பேசலாம் என்று அமைச்சர்களுக்கு வேண்டுகோள் மட்டுமே விடப்பட்டுள்ளது. அது கட்டாயமான உத்தரவு அல்ல” என்று உள்துறை அமைச்சகத்தின் சார்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.   

“தமிழ் மொழியில் அனைத்து வளங்களும் இருக்கிறது. அந்த மொழியை படியுங்கள்” என்று பிரதமே ஒரு நிகழ்ச்சியில் பேசி, அந்த பேச்சுக்கு தமிழக பத்திரிக்கைகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது இலங்கையில் நடக்கும் ‘வெசாக்’ விழாவில் பங்கேற்க வரும் இந்தியப் பிரதமர் இலங்கை தமிழர் பிரச்சினையிலோ அல்லது சிறை பிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களின் படகுகள் பிரச்சினையிலோ ஒரு தீர்வு காண முற்பட்டு, “பிரதமர் தமிழர் நலன் காக்க விரும்புவர்” என்ற பிரசாரம் தமிழகத்தில் முடுக்கி விடப்படலாம்.   

ஆகவே, பா.ஜ.க எதிர்ப்பை தமிழகத்தில் முகட்டுக்குக் கொண்டு போய் விட வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், அதை எப்படியும் முறியடிப்போம் என்று பா.ஜ.க தலைவர்களும் பந்தயம் கட்டிக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் நிற்கிறார்கள்.  

ஆனால், பா.ஜ.க எதிர்ப்பைக் கொண்டு சேர்க்கும் கட்சிகளுக்கு உள்ள உட்கட்டமைப்பு வசதி கட்சி ரீதியாக பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் இல்லை. அதேபோல் பா.ஜ.கவுக்கு தமிழக மக்களை வசீகரப்படுத்தும் தலைவரும் தமிழகத்தில் இல்லை.  

 பிரதமர் நரேந்திரமோடிக்கு ஓர் இமேஜ் தமிழகத்தில் இருக்கிறது என்றாலும், தமிழகம் சார்ந்த காவிரிப் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை போன்றவற்றில் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசால் தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு செயல்பட முடியவில்லை என்பது பெருத்த பலவீனமாக இருக்கிறது.  

அதைச் சமாளிக்க ‘தமிழ், மத்திய ஆட்சி மொழி’, அப்படியில்லையென்றால் ‘தமிழ் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழி’ என்று ஏதாவது ஒரு விடயத்தில் மத்திய அரசு தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் முடிவு எடுக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.   

“தமிழ் மொழியை புறக்கணிக்கிறது பா.ஜ.க” என்ற தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் பிரசாரத்தை எப்படி சமாளிக்கப் போகிறது பா.ஜ.க என்பதை வைத்தே அந்தக் கட்சிக்கு தமிழகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எப்படிப்பட்ட எதிர்காலம் இருக்கிறது என்பது முடிவு செய்யப்படும்.  

- See more at: http://www.tamilmirror.lk/196247/தம-ழ-ம-ழ-ய-ப-றக-கண-க-க-றத-ப-ஜ-க-த-ம-க-க-ளப-ப-ம-த-ட-ர-ப-ரச-ரம-#sthash.0Z9dWeiT.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.